அடிகள் | சொற்கள் | பிரிசொற்கள் | கட்டுருபன்கள் | அடைவுச்சொற்கள் |
---|---|---|---|---|
736 | 1056 | 4 | 5 | 1065 |
தனிச்சொற்கள் : 618
விளக்கம்
சொற்கள் :- words between spaces
பிரிசொற்கள்:- words with underscores ; taken as separate words (அம்_சில்_ஓதி)
கட்டுருபன்கள்:- words with hyphen – செல்-மின்
அடைவுச்சொற்கள்:- words for concordance – இந்த மூன்றனின் கூட்டுத்தொகை
சொல் = நேர்_இழை (1) சொல் = செல்-மின் (1)
பிரிசொற்கள் = நேர், இழை (2) கட்டுருபன் = -மின் (1)
அடைவுச்சொற்கள் = 3 அடைவுச்சொற்கள் = 2
1. பிரிசொற்கள்
பிரிசொற்கள் என்பன கூட்டுச்சொல்லின் பகுதிகள். அணி_இழை, மதி_நுட்பம், பொருள்_பெண்டிர் போன்றன
கூட்டுப்பொருளால் ஒரே சொல் ஆகின்றன. இங்கு, சொல்லின் பகுதிகள் அடிக்கோட்டால் இணைக்கப்பெறும். முழுச்சொல்லும், அவற்றின் பகுதிகளும் தனித்தனியே கணக்கிடப்படும். காட்டாக, ஈரிரண்டு என்ற சொல் எட்டு என்ற எண்ணைக் குறிக்கிறது. ஆனால் இது ஈர், இரண்டு என்ற சொற்களின் இணைப்பு.
எனவே இச் சொல் ஈர்_இரண்டு எனக்கொள்ளப்படுகிறது. இங்கு ஈர், இரண்டு ஈர்_இரண்டு ஆகிய மூன்று சொற்களாக இது கணக்கிடப்படும். ஈர்_இரண்டு என்பது தனிச் சொல்லாகவும், ஈர், இரண்டு ஆகியவை பிரிசொற்களாகவும் கணக்கிடப்படும்.
எனவே ஈர்_இரண்டு என்ற சொல்லுக்குரிய நிகழ்விடங்கள், இரண்டு, ஈர், ஈர்_இரண்டு என்ற மூன்று சொற்களுக்கும் உரிய நிகழ்விடங்களிலும் இடம்பெறும்.
எ.காட்டு
இரண்டு (10)
இரண்டு என மொழிமனார் இயல்பு உணர்ந்தோரே – காக்கை:1-2-5/2
இயற்சீர் இரண்டு தலைப்பெயல் தம்முள் – காக்கை:1-4-16/1
இயற்சீர் இரண்டு தலைப்பெயல் தம்முள் – காக்கை:1-4-17/1
தன் சீர் இரண்டு தலைப்பெயல் தம்முள் ஒத்து – காக்கை:1-4-20/1
இரண்டு முதலா எட்டு ஈறாக – காக்கை:1-5-24/1
ய ர ல ழ என்னும் ஈர்_இரண்டு ஒற்றும் – காக்கை:1 6 34/1
தொடை ஒன்று அடி இரண்டு ஆகி வருமேல் – காக்கை:2-1-48/1
தொடை இரண்டு அடி மூன்று ஆகில் சிந்தாம் – காக்கை:2-1-49/1
இரண்டு துணியாய் இடை நனி போழ்ந்தும் – காக்கை:2-1-50/3
ஈர்_இரண்டு ஆகி இயன்றவை யாவும் – காக்கை:2 3 79/2
ஈர் (5)
ஓரோ அகையினால் ஆகிய ஈர் அசை – காக்கை:1-3-8/1
ஈர் ஒன்றிணைதலும் ஏனுழி ஒன்றுசென்று – காக்கை:1-3-15/2
ஒரு தொடை ஈர் அடி வெண்பா சிறுமை – காக்கை:1-5-29/1
ய ர ல ழ என்னும் ஈர்_இரண்டு ஒற்றும் – காக்கை:1 6 34/1
ஈர்_இரண்டு ஆகி இயன்றவை யாவும் – காக்கை:2 3 79/2
ஈர்_இரண்டு (2)
ய ர ல ழ என்னும் ஈர்_இரண்டு ஒற்றும் – காக்கை:1-6-34/1
ஈர்_இரண்டு ஆகி இயன்றவை யாவும் – காக்கை:2-3-79/2
2. கட்டுருபன்
கட்டுருபன் என்பது ஒட்டுச்சொல் போன்றது. அதே பொருளில் தனித்து வர இயலாதது.
கொல், மன், மின், கண்(ஏழன் உருபு) போன்வை கட்டுருபன்கள். அவன்-கண், அணங்கு-கொல், அரியர்-மன், இரவன்-மின் போன்றவற்றில் வரும் ஒட்டுச்சொற்கள் இடைக்கோட்டால் இணைக்கப்பெறும். இவை முழுச்சொல்லாகவும், ஒட்டுச்சொல்லாகவும் எடுத்துக்கொள்ளப்படும்.
எ.காட்டு
இடம்தொறும் என்ற சொல் இடம்-தொறும் எனக் குறிக்கப்படுகிறது. இதில், இடம்-தொறும் என்பது தனிச்சொல்லாகவும், -தொறும் என்பது கட்டுருபனாகவும் கணக்கிடப்பட்டும்.
இடம்-தொறும் என்ற சொல்லுக்குரிய நிகழ்விடங்கள், இடம்-தொறும், -தொறும் என்ற இரு சொற்களுக்கும் உரிய நிகழ்விடங்களிலும் இடம்பெறும்.
அடி-தொறும் (1)
அசையினும் சீரினும் அடி-தொறும் இறுதியை – காக்கை:1-6-43/1
-தொறும் (1)
அசையினும் சீரினும் அடி-தொறும் இறுதியை – காக்கை:1-6-43/1
3. வழக்காறு-1
ஒவ்வொரு சொல்லுக்குமுரிய நிகழ்விடங்களின் எண்ணிக்கை அச் சொல்லை அடுத்து அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
அதன் கீழ், அச் சொல்லுக்குரிய நிகழ்விடங்கள் வரிசையாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அச் சொல் வரும் அடி முழுமையாகக் கொடுக்கப்படும்.
அதனை அடுத்து அந்த அடி இடம்பெறும் அதிகாரத்தின் பெயர் குறுகிய அளவில் கொடுக்கப்படும். அதனை அடுத்து அந்த அதிகாரத்தில் அச் சொல் இடம்பெறும் இயலின் எண் கொடுக்கப்படும். அடுத்து அந்த இயலில் அச் சொல் இடம்பெறும் அடி எண் கொடுக்கப்படும்.
4. வழக்காறு-2
ஒரு சொல் ஓர் அடியின் இறுதியில் அமைந்தால், அதன் நிகழ்விடத்துடன் அடுத்த அடியும் கொடுக்கப்படும்.
ஆனால், அச்சொல், ஒரு நூற்பாவின் இறுதி அடியில் இருந்தால் அடுத்த அடி கொடுக்கப்படமாட்டாது.
எ.காட்டு
அன்றி (6)
உரிச்சீரதனுள் உரைத்ததை அன்றி
கலக்கும் தளை என கண்டிசினோரே – காக்கை:1 4 18/1,2
உரைப்போர் குறிப்பினை அன்றி பெருமை – காக்கை:1-5-31/1
உடையதை அன்றி உறுப்பு அழிவில்லா – காக்கை:2-1-52/2
உரைப்போர் குறிப்பின் உணர் வகை அன்றி
இடைப்பான் முதல் ஈறு என்று இவை தம்முள் – காக்கை:2 2 62/1,2
முறை தடுமாற மொழிந்தவை அன்றி
இடையிடை வெண்பா சிலபல சேர்ந்தும் – காக்கை:2 3 78/11,12
வகுத்து உரை பெற்றியும் அன்றி பிறவும் – காக்கை:3-2-89/2
5. வழக்காறு-3
ஓர் அடியில் ஒரே சொல் பன் முறை வந்தால், அந்த அடி அத்தனை முறை கொடுக்கப்பெறும்.