Select Page

காங்கேயர் செய்த உரிச்சொல் நிகண்டு சொற்கள் – எண்ணிக்கை

வீ. ஆறுமுகஞ்சேர்வை அவர்களால் பார்வையிடப்பெற்றது — 1914

தலைப்பு நூற்பாக்கள் அடிகள் சொற்கள்
0. கடவுள் வாழ்த்து 2 8 42
1. தேவப்பெயர்த் தொகுதி 42 168 700
2. மக்கள் பெயர்த் தொகுதி 21 84 395
3. விலங்கின் பெயர்த் தொகுதி 26 104 466
4. மரப் பெயர்த் தொகுதி 22 88 449
5. இடப் பெயர்த் தொகுதி 22 88 414
6. பல் பொருள் பெயர்த் தொகுதி 7 28 128
7. செயற்கை வடிவின் பெயர்த் தொகுதி 11 44 223
8. பண்புப் பெயர்த் தொகுதி 23 92 447
9. செயல் பற்றிய பெயர்த் தொகுதி 15 60 262
10. ஒலி பற்றிய பெயர்த் தொகுதி 23 92 425
11. ஒரு சொல் பல் பொருள் பெயர்த் தொகுதி 36 144 777
12. பல் பெயர்க்கு ஒரு பெயர்த் தொகுதி 37 148 701
மொத்தம் 285+2 1148 5429

மொத்தம் தனிச்சொற்கள் 3759

விளக்கம்

1. வழக்காறு-1

ஒவ்வொரு சொல்லுக்குமுரிய நிகழ்விடங்களின் எண்ணிக்கை அச் சொல்லை அடுத்து
அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் கீழ், அச் சொல்லுக்குரிய நிகழ்விடங்கள் வரிசையாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அச் சொல் வரும் அடி முழுமையாகக் கொடுக்கப்படும். அதனை அடுத்து அந்த அடி இடம்பெறும் நூலின் பெயரும் கொடுக்கப்படும். அதனை அடுத்து அச் சொல் இடம்பெறும் பகுதியின் எண் கொடுக்கப்படும். அதனை அடுத்து அந்தப் பகுதியில் அச் சொல் இடம்பெறும் நூற்பாவின் எண்ணும், அந் நூற்பாவில் அச் சொல் இடம்பெறும் அடியின் எண்ணும் கொடுக்கப்படும்.

2. வழக்காறு-2

ஒரு சொல் ஓர் அடியின் இறுதியில் அமைந்தால், அதன் நிகழ்விடத்துடன் அடுத்த அடியும் கொடுக்கப்படும்.
ஆனால், அச்சொல், ஒரு அதிகாரத்தின் இறுதி அடியில் இருந்தாலோ அல்லது அச்சொல்லின் பொருள்
அதே அடியில் முடிவடைந்தாலோ அடுத்த அடி கொடுக்கப்படமாட்டாது.

எ.காட்டு

ஆகுலம் (3)
அயர்வே ஆகுலம் அணங்கு கசிவே – 8.பண்பு:8 164/2
வறுமை பருவரல் புன்கண் நோ ஆகுலம்
உறுவல் கவ்வை பனி வெய்துறல் மம்மர் – 8.பண்பு:8 175/7,8
ஆகுலம் புலம்பல் கோடணை அரவம் – 10.ஒலிப்பெயர்:10 174/2

3. வழக்காறு-3

ஓர் அடியில் ஒரே சொல் ஒன்றுக்கு மேற்பட்ட முறை வந்தால், அந்த அடி அத்தனை முறை கொடுக்கப்பெறும்.