Select Page

சித்தர் பாடல்கள் (அகர வரிசையில்)

1 அகத்தியர் ஞானம்


** ஞானம் – 1
#1
*1-1
சத்தியே பராபரமே ஒன்றே தெய்வம் சகல உயிர் சீவனுக்கும் அதுதான் ஆச்சு
பத்தியினால் அறிந்தவர்கள் புண்ணியோர்கள் பூதலத்தில் கோடியிலே ஒருவர் உண்டு
பத்தியினால் மனம் அடங்கி நிலையில் நிற்பார் பாழிலே மனத்தை விடார் பரம ஞானி
சுத்தியே அலைவதில்லை சூட்சம் சூட்சம் சுழியிலே நிலை அறிந்தால் மோட்சம்தானே

#2
*1-2
மோட்சமது பெறுவதற்குச் சூட்சம் சொன்னேன் மோகமுடன் பொய் களவு கொலை செய்யாதே
காய்ச்சலுடன் கோபத்தைத் தள்ளிப்போடு காசினியில் புண்ணியத்தைக் கருதிக் கொள்ளு
பாய்ச்சலது பாயாதே பாழ் போகாதே பல வேத சாத்திரமும் பாரு பாரு
ஏச்சல் இல்லாதவர் பிழைக்கச் செய்த மார்க்கம் என் மக்காள் எண்ணியெண்ணிப் பாரீர் நீரே

#3
*1-3
பாரப்பா நால் வேதம் நாலும் பாரு பற்றாசை வைப்பதற்கோ பிணையோ கோடி
வீரப்பா ஒன்றொன்றுக்கு ஒன்றை மாறி வீணிலே அவர் பிழைக்கச்செய்த மார்க்கம்
தேரப்பா தெருத்தெருவே புலம்புவார்கள் தெய்வ நிலை ஒருவருமே காணார் காணார்
ஆரப்பா நிலைநிற்கப் போறார் ஐயோ ஆச்சரியம் கோடியிலே ஒருவன்தானே

#4
*1-4
ஒருவன் என்றே தெய்வத்தை வணங்க வேணும் உத்தமனாய்ப் பூமி-தனில் இருக்க வேணும்
பருவமதில் சேறு பயிர் செய்ய வேணும் பாழிலே மனத்தை விடான் பரம ஞானி
திரிவார்கள் திருடரப்பா கோடாகோடி தேசத்தில் கள்ளரப்பா கோடாகோடி
வருவார்கள் அப்பனே அனேகம் கோடி வார்த்தையினால் பசப்புவார் திருடர்தானே

#5
*1-5
தான் என்ற தானேதான் ஒன்றே தெய்வம் தகப்பனும் தாயும் அங்கே புணரும்போது
நான் என்று கருப்பிடித்துக்கொண்டு வந்த நாதனை நீ எந்நாளும் வணங்கி நில்லு
கோன் என்ற திருடனுக்கும் தெரியுமப்பா கோடானுகோடியிலே ஒருவன் உண்டு
ஏன் என்றே மனத்தாலே அறிய வேணும் என் மக்காள் நிலைநிற்க மோட்சம்தானே

#6
*1-6
மோட்சமது பெறுவதற்குச் சூட்சம் கேளு முன் செய்தபேர்களுடன் குறியைக் கேளு
ஏய்ச்சலது குருக்களது குலங்கள் கேளு எல்லாரும் கூடு அழிந்தது எங்கே கேளு
பேச்சலது மாய்கையப்பா ஒன்றும் இல்லை பிதற்றுவார் அவரவரும் நிலையும் காணார்
கூச்சலது பாளையம்தான் போகும்போது கூட்டோடே போச்சுதப்பா மூச்சுத்தானே

#7
*1-7
மூச்சு ஒடுங்கிப் போன இடம் ஆரும் காணார் மோட்சத்தின் நரகாதி இருப்பும் காணார்
வாச்சென்றே வந்த வழி ஏற்றம் காணார் வளி மாறி நிற்கும் மணி வழியும் காணார்
வீச்சப்பா வெட்டவெளி நன்றாய்ப் பாரு வேதங்கள் சாத்திரங்கள் வெளியாய்ப் போச்சே
ஆச்சப்பா கருவு-தனில் அமைத்தால் போலாம் அவனுக்கே தெரியும் அல்லால் அறிவாய்ப் பாரே

#8
*1-8
பாரப்பா உலகு-தனில் பிறவி கோடி படைப்புகளோ பலவிதமாய்க் கோடாகோடி
வீரப்பா அண்டத்தில் பிறவி கோடி வெளியிலே ஆடுதப்பா உற்றுப் பாரு
ஆரப்பா அணு வெளியில் உள்ள நீதான் ஆச்சரியம் புழுக்கூடு வலை மோதப்பா
கூரப்பா அண்டத்தில் பிண்டமாகும் குணவியவான் ஆனக்கால் சத்தியம் ஆமே

#9
*1-9
சத்தியமே வேணுமடா மனிதனானால் சண்டாளம் செய்யாதே தவறிடாதே
நித்திய கர்மம் விடாதே நேமம் விட்டு நிட்டையுடன் சமாதி விட்டு நிலைபேராதே
புத்திகெட்டுத் திரியாதே பொய் சொல்லாதே புண்ணியத்தை மறவாதே பூசல் கொண்டு
கத்தியதோர் சள்ளியிட்டுத் தர்க்கியாதே கர்மி என்று நடவாதே கதிர்தான் முற்றே

** ஞானம் – 2
#10
*2-1
மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா
மனமது செம்மையானால் மந்திரம் செம்மை ஆமே
** உயர் ஞானம்

#11
*2-2
உண்ணும்போது உயிரெழுத்தை உயர வாங்கி உறங்குகின்றபோதெல்லாம் அதுவே ஆகும்
பெண்ணின்-பால் இந்திரியம் விடும்போதெல்லாம் பேணி வலம் மேல் நோக்கி அவத்தில் நில்லு
திண்ணும் காய் இலை மருந்தும் அதுவே ஆகும் தினந்தோறும் அப்படியே செலுத்த வல்லார்
மண்ணூழி காலம்மட்டும் வாழ்வார் பாரு மறலி கையில் அகப்படவும் மாட்டார் தாமே
** தனிஞானம்

#12
*2-3
ஒண்ணான உச்சி வெளி தாண்டி நின்று உமையவளும் கணபதியும் உந்தி ஆகி
விண் ஒளியாம் அம்பரம் ஓம் அவ்வும் உவ்வும் விதித்த பரம் ஒருவருக்கும் எட்டாதப்பா
பண்ணான உன் உயிர்தான் சிவமது ஆச்சு பாற்கடலில் பள்ளிகொண்டோன் விண்டு ஆச்சு
கண்ணான கணபதியைக் கண்ணில் கண்டால் கலந்து உருகி ஆடுமடா ஞானம் முற்றே

#13
*2-4
விந்து நிலை-தனை அறிந்து விந்தைக் கண்டால் விதமான நாதமது குருவாய்ப் போகும்
அந்தமுள்ள நாதமது குருவாய்ப் போனால் ஆதி அந்தமான குரு நீயே ஆவாய்
சந்தேகம் இல்லையடா புலத்தியன்னே சகல கலை ஞானம் எல்லாம் இதற்கு ஒவ்வாவே
முந்தாநாள் இருவருமே கூடிச் சேர்ந்த மூலமதை அறியாட்டால் மூலம் பாரே

#14
*2-5
மூலமதை அறிந்தக்கால் யோகம் ஆச்சு முறைமையுடன் கண்டக்கால் வாதம் ஆச்சு
சாலமுடன் கண்டவர் முன் வசமாய் நிற்பார் சாத்திரத்தைச் சுட்டு எறிந்தால் அவனே சித்தன்
சீலமுள்ள புலத்தியனே பரம யோகி செப்பு மொழி தவறாமல் உப்பைக் கண்டால்
ஞாலமுள்ள எந்திரமாம் சோதி-தன்னை நாட்டினால் சகல சித்தும் நல்கும் முற்றே

** ஞானம் – 3
#15
*3-1
பாரப்பா சீவன் விட்டுப் போகும்போது பாழ்த்த பிணம் கிடக்குது என்பார் உயிர் போச்சு என்பார்
ஆரப்பா அறிந்தவர்கள் ஆரும் இல்லை ஆகாய சிவத்துடனே சேரும் என்பார்
காரப்பா தீயுடன் தீச் சேரும் என்பார் கரு அறியா மானிடர்கள் கூட்டமப்பா
சீரப்பா காமிகள்தாம் ஒன்றாய்ச் சேர்ந்து தீய வழி-தனைத் தேடிப் போவார் மாடே

#16
*3-2
மாடுதான் ஆனாலும் ஒரு போக்கு உண்டு மனிதனுக்கோ அவ்வளவும் தெரியாதப்பா
நாடு மெத்த நரகம் என்பார் சொர்க்கம் என்பார் நல்வினையோ தீவினையோ எண்ணமாட்டார்
ஆடுகின்ற தேவதைகளப்பா கேளு அரிய தந்தை இனம் சேரும் என்றும் தோணார்
சாடு மெத்த பெண்களைத்தான் குறிப்பாய் எண்ணித் தளமான தீயில் விழத் தயங்கினாரே

#17
*3-3
தயங்காமல் பிழைப்பதற்கே இந்த ஞானம் சார்வாகப் பாராட்டும் ஞானம் வேறே
மயங்குதற்கு ஞானம் பார் முன்னோர் கூடி மாட்டினார் கதை காவ்ய புராணம் என்றும்
இயலான ரசம்-தனில் ஈப் புகுந்தால் போலும் இசைத்திட்டார் சாத்திரங்கள் ஆறு என்றேதான்
வயலான பயன் பெறவே வியாசர்தாமும் மாட்டினார் சிவனார் உத்தரவினாலே

#18
*3-4
உத்தாரம் இப்படியே புராணம் காட்டி உலகத்தில் பாரதம் போல கதை உண்டாக்கிக்
கர்த்தாவைத் தான் என்று தோணவொட்டாக் கபட நாடகமாக மேதம் சேர்த்துச்
சத்தாக வழியாகச் சேர்ந்தோர்க்கு எல்லாம் சதியுடனே வெகு தர்க்கம் பொருள் போல் பாடிப்
பத்தாகச் சைவர்க்கு ஒப்பனையும் செய்து பாடினார் சாத்திரத்தைப் பாடினாரே

#19
*3-5
பாடினதோர் வகை ஏது சொல்லக் கேளு பாரத புராணம் என்ற சோதியப்பா
நீடியதோர் ராவணன்தான் பிறக்க என்றும் நிலையான தசரதன் கை வெல்ல என்றும்
நீடியவோர் அரசன் என்றும் முனிவர் என்றும் நிறை அருள் பெற்றவர் என்றும் தேவர் என்றும்
ஆடியதோர் அரக்கர் என்றும் மனிதர் என்றும் பாடினார் நாள்-தோறும் பகையாய்த்தானே

#20
*3-6
கழிந்திடுவார் பாவத்தால் என்று சொல்லும் கட்டிய நால் வேதம் அறு சாத்திரங்கள்
அழிந்திடவே சொன்னது அல்லால் வேறொன்றில்லை அதர்மம் என்றும் தர்மம் என்றும் இரண்டு உண்டாக்கி
ஒழிந்திடுவார் என்று சொல்லிப் பிறப்பு உண்டு என்றும் உத்தமனாய்ப் பிறப்பன் என்றும் உலகத்தோர்கள்
தெளிந்திடுவோர் குருக்கள் என்றும் சீடர் என்றும் சீவனத்துக்கு அங்கு அல்லோ தெளிந்து காணே

** ஞானம் – 4
#21
*4-1
பூரணமே தெய்வம் என உரைத்தார் ஐயா பூரணத்தை இன்னது என்று புகல வேண்டும்
காரணத்தைச் சொல்லுகிறேன் நினைவாய்க் கேளு கலையான பதினாறும் பூரணமே ஆகும்
மாரணமாம் உலகத்தில் மதி மயங்கி மதிகெட்டுப் பூரணத்தை இகழ்ந்தார் ஐயா
வாரணத்தை மனம்வைத்துப் பூரணத்தைக் காத்தால் வாசி என்ற சிவயோக வாழ்க்கை ஆச்சே

#22
*4-2
ஆச்சப்பா இந்த முறை பதினெண்பேரும் அயன் மாலும் அரனோடும் தேவர் எல்லாம்
மூச்சப்பா தெய்வம் என்றே அறியச் சொன்னார் முனிவோர்கள் இருடியர் இப்படியே சொன்னார்
பேச்சப்பா பேசாமல் நூலைப் பார்த்துப் பேரான பூரணத்தை நினைவாய்க் காரு
வாச்சப்பா பூரணத்தைக் காக்கும்பேர்கள் வாசி நடு மையத்துள் வாழ்வார்தானே

#23
*4-3
தான் என்ற பெரியோர்கள் உலகத்துள்ளே தாயான பூரணத்தை அறிந்த பின்பு
தேன் என்ற அமுதமதைப் பானம்செய்து தெவிட்டாத மவுன சிவயோகம் செய்தார்
ஊன் என்ற உடலை நம்பியிருந்தபேர்க்கே ஒரு நான்கு வேதம் என்றும் நூல் ஆறு என்றும்
நான் என்றும் நீ என்றும் சாதி என்றும் நாட்டினார் உலகத்தோர் பிழைக்கத்தானே

#24
*4-4
பிழைப்பதற்கு நூல் பலவும் சொல்லாவிட்டால் பூரணத்தை அறியாமல் இறப்பார் என்றும்
உழைப்பதற்கு நூல் கட்டிப்போடாவிட்டால் உலகத்தில் புத்திகெட்டே அலைவார் என்றும்
தழைப்பதற்குச் சாதி என்றும் விந்து என்றும் தந்தை தாய் பிள்ளை என்றும் பாரி என்றும்
உழைப்பதற்குச் சொன்னது அல்லால் கதி வேறு இல்லை உத்தமனே அறிந்தோர்கள் பாடினாரே

#25
*4-5
பாடினார் இப்படியே சொல்லாவிட்டால் பரிபாடை அறியார்கள் உலக மூடர்
சாடுவார் சிலபேர்கள் பல நூல் பார்த்துத் தமை மறந்து படுகுழியில் விழுவார் சாவார்
வாடுவார் நாமம் என்றும் ரூபம் என்றும் வையகத்தில் கல் செம்பைத் தெய்வம் என்றும்
நாடுவார் பூரணத்தை அறியார் மூடர் நாய் போலே குரைத்து அல்லோ ஒழிவார் காணே

#26
*4-6
காணாமல் அலைந்தோர்கள் கோடாகோடி காரணத்தை அறிந்தோர்கள் கோடாகோடி
வீணாகப் புலம்பினதால் அறியப்போமோ விஞ்ஞானம் பேசுவதும் ஏதுக்காகும்
கோணாமல் சுழுமுனையில் மனத்தை வைத்துக் குரு பாதம் இருநான்கில் நாலைச் சேர்த்து
நாணாமல் ஒரு நினைவாய்க் காக்கும்போது நாலும் எட்டும் ஒன்றாகும் நாட்டி ஊதே

#27
*4-7
ஊதியதோர் ஊது அறிந்தால் அவனே சித்தன் உத்தமனே பதினாறும் பதியே ஆகும்
வாதிகளே இருநான்கும் பதியின் பாதம் வகை நான்கும் உயிர் ஆகும் மார்க்கம் கண்டு
சோதி பரிபூரணமும் இலை மூன்றும்தான் தூங்காமல் தூங்கி அங்கே காக்கும்போது
ஆதி என்ற பராபரையும் அரனும் ஒன்றாய் அண்ணாக்கின் வட்டத்துள் ஆகும் பாரே

#28
*4-8
பாரப்பா உதயத்தில் எழுந்திருந்து பதறாமல் சுழுமுனையில் மனத்தை வைத்துக்
காரப்பா பரிதி மதி இரண்டும் மாறிக் கருவான சுழுமுனையில் உதிக்கும்போது
தேரப்பா அண்ணாக்குள் நின்றுகொண்டு தியங்காமல் சுழுமுனைக்குள் அடங்கும் பாரு
சீரப்பா பதினாறில் எட்டும் நான்கும் சிதறாமல் மூன்றும் ஒன்றாய்ச் சேர்ந்து போமே

#29
*4-9
ஒன்றான பூரணமே இதுவே ஆச்சு உதித்த கலைதான் என்றும் இதுவே ஆச்சு
நன்றாகத் தெளிந்தவர்க்கு ஞானம் சித்தி நாட்டாமல் சொன்னதனால் ஞானம் ஆமோ
பன்றான ஆதி குரு சொன்ன ஞானம் பரப்பிலே விடுக்காதே பாவம் ஆகும்
திண்டாடும் மனத்தோர்க்குக் காணப் போகா தெளிந்தவர்க்குத் தெரிவித்த உகமைதானே

#30
*4-10
உகமை இன்னம் சொல்லுகிறேன் உலகத்துள்ளே உவமையுள்ள பரிகாசம் நனி பேசாதே
பகைமைபண்ணிக் கொள்ளாதே வீண் பேசாதே பரப்பிலே திரியாதே மலை ஏறாதே
நகையாதே சினங்காதே உறங்கிடாதே நழுகாதே சுழுமுனையில் பின்வாங்காதே
செகம் முழுதும் பரிபூரணம் அறிந்து வென்று தெளிந்தது பின்பு உலகத்தோடு ஒத்து வாழே

#31
*4-11
வாழாமல் உலகம் விட்டு வேடம் பூண்டு வயிற்றுக்கா வாய்ஞானம் பேசிப்பேசித்
தாழ்வான குடி-தோறும் இரப்பான் மட்டை தமை அறியாச் சண்டாளர் முழு மாடப்பா
பாழாகப் பாவிகளின் சொல் கேளாதே பதறாதே வயிற்றுக்கா மயங்கிடாதே
கேளாதே பேச்சு எல்லாம் கேட்டுக்கேட்டுக் கலங்காதே உடல் உயிர் என்று உரைத்திடாதே

#32
*4-12
உடல் உயிரும் பூரணமும் மூன்றும் ஒன்றே உலகத்தில் சிறிது சனம் வெவ்வேறு என்பார்
உடல் உயிரும் பூரணமும் ஏது என்றக்கால் உத்தமனே பதினாறும் ஒரு நான்கு எட்டும்
உடல் உயிரும் பூரணமும் அயன் மால் ஈசன் உலகத்தோர் அறியாமல் மயங்கிப்போனார்
உடல் உயிரும் பூரண அடி முடியும் ஆச்சே உதித்த கலை நிலை அறிந்து பதியில் நில்லே

#33
*4-13
பதி இன்ன இடம் என்ற குருவைச் சொல்லும் பரப்பிலே விள்ளாதே தலை ரண்டு ஆகும்
விதி இன்ன இடம் என்று சொல்லக் கேளு விண்ணான விண்ணுக்குள் அண்ணாக்கப்பா
மதி ரவியும் பூரணமும் கண் வாய் மூக்கும் மகத்தான செவியோடு பரிசம் எட்டும்
பதிய இடம் சுழுமுனை என்று அதற்குப் பேராம் பகருவார் சொர்க்கமும் கைலாசம் என்றே

#34
*4-14
கைலாசம் வைகுந்தம் தெய்வலோகம் காசி கன்யாகுமரி என்றும் சேது என்றும்
மயில் ஆடும் மேகம் என்றும் நாகம் என்றும் மாய்கை என்றும் மின்னல் என்றும் மவுனம் என்றும்
துயிலான வாடை என்றும் சூட்சம் என்றும் சொல் அற்ற இடம் என்றும் ஒடுக்கம் என்றும்
தயிலான பாதம் என்றும் அடி முடி என்றும் தாயான வத்து என்றும் பதியின் பேரே

#35
*4-15
பேரு சொன்னேன் ஊர் சொன்னேன் இடமும் சொன்னேன் பின் கலையும் முன் கலையும் ஒடுக்கம் சொன்னேன்
பார் உலகில் பல நூலின் மார்க்கம் சொன்னேன் பலபேர்கள் நடத்துகின்ற தொழிலும் சொன்னேன்
சீர் உலகம் இன்னது என்று தெருட்டிச் சொன்னேன் சித்தான சித்து எல்லாம் சுருக்கிச் சொன்னேன்
நேரு சொன்னேன் வழி சொன்னேன் நிலையும் சொன்னேன் நின் உடம்பை இன்னது என்று பிரித்துச் சொன்னேன்

#36
*4-16
பிரித்து உரைத்தேன் சூத்திரம் ஈரெட்டுக்குள்ளே பித்தர்களே நன்றாகத் தெரிந்து பார்க்கில்
விரித்து உரைத்த நூலினது மார்க்கம் சொன்னேன் விள்ளாதே இந்த நன்னூல் இருக்குது என்று
கருத்துடனே அறிந்து கொண்டு கலை மாறாதே காரியத்தை நினைவாலே கருத்தில்கொள்ளு
சுருதி சொன்ன செய்தி எல்லாம் சுருக்கிச் சொன்னேன் சூத்திரம் போல் பதினாறும் தொடுத்தேன் முற்றே

** ஞானம் – 5
#37
*5-1
கற்பம் என்ன வெகுதூரம் போக வேண்டா கன்மலையில் குவடுகளில் அலைய வேண்டா
சர்ப்பம் என்ன நாகமதோர் தலையில் நின்று சாகாத கால் கண்டு முனையில் ஏறி
நிற்பம் என்று மனமுறுத்து மனத்தில் நின்று நிசமான கருநெல்லிச் சாற்றைக் காணு
சொற்பம் என்று விட்டுவிட்டால் அலைந்துபோவாய் துரியம் என்ற பராபரத்தில் சென்று கூடே

#38
*5-2
கூடப்பா துரியம் என்ற வாலை வீடு கூற அரிய நாதர் மகேச்சுரியே என்பார்
நாடப்பா அவள்-தனையே பூசைபண்ணு நந்தி சொல்லும் சிங்காரம் தோன்றும் தோன்றும்
ஊடப்பா சிகார வரை எல்லாம் தோன்றும் ஊமை என்ற அமிர்த வெள்ளம் ஊறலாகும்
தேடப்பா இது தேடு காரியம் ஆகும் செகத்திலே இது அல்லோ சித்தி ஆமே

#39
*5-3
ஆம் என்ற பூர்ணம் சுழுமுனையில் பாராய் அழகான விந்து நிலை சந்திரனில் பார்
ஓம் என்ற ரீங்காரம் புருவ மையம் உத்தமனே வில் என்ற வீட்டில் காணும்
வாம் என்ற அவள் பாதம் பூசைபண்ணு மற்றொன்றும் பூசை அல்ல மகனே சொன்னேன்
நாம் என்ற பரமன் அல்லோ முதலெழுத்தாம் பாடினேன் வேதாந்தம் பாடினேனே

#40
*5-4
பாடுகின்ற பொருள் எல்லாம் பதியே ஆகும் பதியில் நிற்கும் அட்சரம்தான் அகாரம் ஆகும்
நாடுகின்ற பரமனது ஓங்காரம் ஆகும் நலம் பெரிய பசுதானே உகாரம் ஆகும்
நீடுகின்ற சுழுமுனையே தாரை ஆகும் நின்றதோர் இடைகலையே நாதவிந்தாம்
ஊடுகின்ற ஓங்கார வித்தை ஆகும் ஒளியான அரியெழுத்தை ஊணிப் பாரே

#41
*5-5
ஊணியதோர் ஓங்காரம் மேலும் உண்டே உத்தமனே சீருண்ட ஊணிப் பாரே
ஆணியாம் நடு நாடி நடுவே மூட்டும் ஆச்சரிய எழுத்து எல்லாம் அடங்கி நிற்கும்
ஏணியாய் இருக்குமடா அஞ்சு வீடே ஏகாந்தமாகிய அவ் எழுத்தைப் பாரு
தோணி போல் காணுமடா அந்த வீடு சொல்லாதே ஒருவருக்கும் துறந்திட்டேனே

#42
*5-6
துறந்திட்டேன் மேல்மூலம் கீழ்மூலம் பார் துயரமாய் நடுநிலையை ஊணிப் பாராய்
அறைந்திட்டேன் நடுமூலம் நடு நாடிப்பார் அப்ப அல்லோ வரை தாக்கும் தாரை காணும்
உறைந்திட்ட ஐவரும்தான் நடனம் காணும் ஒளி வெளியும் சிலம்பொலியும் ஒன்றாய்க் காணும்
நிறைந்திட்ட பூரணமும் இதுதானப்பா நிசமான பேரொளிதான் நிலைத்துப் பாரே

#43
*5-7
சும்மா நீ பார்க்கையிலே மனத்தையப்பா சுழுமுனையில் ஓட்டி அங்கே காலைப் பாராய்
அம்மா நீ தேவி என்று அடங்கிப் பாராய் அப்ப அல்லோ காயசித்தி யோகசித்தி
உம்மாவும் அம்மாவும் அதிலே காணும் ஒருமனமாய்ச் சுழுமுனையில் மனத்தை ஊன்று
நம்மாலே ஆனது எல்லாம் சொன்னோமப்பா நாதர்களில் இதை யாரும் பாடார் காணே

#44
*5-8
காணுகின்ற ஓங்கார வட்டம் சற்றுக் கனல் எழும்பிக் கண்ணினிலே கடுப்புத் தோன்றும்
பூணுகின்ற இடைகலையில் பரம் போல் ஆடும் பொல்லாத தேகம் என்றால் உருகிப் போகும்
ஆணவங்களான எல்லாம் அழிந்து போகும் அத்துவிதத் துரியாட்டம் ஆடி நிற்கும்
ஊணியதோர் எழுத்து எல்லாம் தேவி ஆகும் ஓங்காரக் கம்பம் என்ற உணர்வுதானே

#45
*5-9
உணர்வு என்றால் சந்திரனில் ஏறிப் பாவி ஓடி அங்கே தலை என்ற எழுத்தில் நில்லே
அணு என்றால் மனை ஆகும் சிவனே உச்சி அகாரம் என்ன பதியும் என்ன சூட்சம் ஆகும்
கணு என்ன வில் புருவம் அகண்ட வீதி கயிலாயம் என்றது என்ன பரத்தின் வீடு
துணு என்ற சூரியன்-தன் நெருப்பைக் கண்டு தூண் என்ற பிடரியிலே தூங்கு தூங்கே

#46
*5-10
மூவெழுத்தும் ஈரெழுத்தும் ஆகி நின்ற மூலமதை அறிந்து உரைப்போன் குருவும் ஆகும்
ஊவெழுத்துக்கு உள்ளேதான் இருக்குதப்பா உணர்வதுவே கண்டறிந்தோன் அவனே ஆசான்
யாவருக்கும் தெரியாதே அறிந்தோம் என்றே அவரவர்கள் சொல்வார்கள் அறியா மூடர்
தேவரோடு மால் அயனும் தேடிக் காணார் திருநடனம் காண முத்தி சித்தி ஆமே

#47
*5-11
ஈரெழுத்தும் ஓரெழுத்தும் ஆகி ஆங்கே இயங்கி நிற்கும் அசபையப்பா மூலத்துள்ளே
வேரெழுத்தும் வித்தெழுத்தும் இரண்டும் கொண்டு வித்திலே முளைத்து எழுந்து விளங்கி நிற்கும்
சீரெழுத்தை ஊணி நல்ல வாசி ஏறித் தெரு வீதி கடந்த மணிமண்டபத்துச்
சாரெழுத்தின் உட்பொருளாம் பரத்தை நோக்கிச் சார்ந்தவர்க்குச் சித்தி முத்தி தருமேதானே

#48
*5-12
ஏகம் எனும் ஓரெழுத்தின் பயனைப் பார்த்தே எடுத்து உரைத்தும் இவ் உலகில் எவரும் இல்லை
ஆகமங்கள் நூல்கள் பல கற்றுக்கொண்டே அறிந்தம் என்பார் மவுனத்தை அவனை நீயும்
வேகாச் சாகாத் தலை கால் விரைந்து கேளாய் விடுத்ததனை உரைப்பவனே ஆசான் ஆகும்
தேகமதில் ஓரெழுத்தைக் காண்போன் ஞானி திருநடனம் காண முத்தி சித்தி ஆமே

#49
*5-13
குருவாக உமைபாகன் எனக்குத் தந்த கூற அரிய ஞானமது பத்தின் மூன்று
பொருளாகச் சொல்லிவிட்டேனப்பா நீதான் பொருள் அறிந்தால் பூரணமும் பொருந்திக் காணே
அருளாகாது இ நூலைப் பழித்தபேர்கள் அரு நரகில் பிசாசு எனவே அடைந்து வாழ்வார்
அருளாக ஆராய்ந்து பார்க்கும்பேர்கள் ஆகாயம் நின்ற நிலை அறியலாமே
**

2 அகப்பேய்ச் சித்தர் பாடல்


#1
நஞ்சு உண்ண வேண்டாவே அகப்பேய்
நாயகன் தாள் பெறவே
நெஞ்சு மலையாதே அகப்பேய்
நீ ஒன்றும் சொல்லாதே

#2
பராபரமானதடி அகப்பேய்
பரவையாய் வந்ததடி
தராதலம் ஏழ் புவியும் அகப்பேய்
தானே படைத்ததடி

#3
நாத வேதமடி அகப்பேய்
நல் நடம் கண்டாயோ
பாதம் சத்தியடி அகப்பேய்
பர விந்துநாதமடி

#4
விந்துநாதமடி அகப்பேய்
மெய்யாக வந்ததடி
ஐந்து பெரும் பூதம் அகப்பேய்
அதனிடமானதடி

#5
நாலு பாதமடி அகப்பேய்
நன்னெறி கண்டாயே
மூலமானது அல்லால் அகப்பேய்
முத்தி அல்லவடி

#6
வாக்கு ஆதி ஐந்தடியோ அகப்பேய்
வந்த வகை கேளாய்
ஒக்கமதானதடி அகப்பேய்
உண்மையது அல்லவடி

#7
சத்து ஆதி ஐந்தடியோ அகப்பேய்
சாத்திரமானதடி
மித்தையும் ஆகுமடி அகப்பேய்
மெய்யது சொன்னேனே

#8
வசனாதி ஐந்தடியோ அகப்பேய்
வண்மையாய் வந்ததடி
தெசநாடி பத்தேடி அகப்பேய்
திடன் இது கண்டாயே

#9
காரணமானது எல்லாம் அகப்பேய்
கண்டது சொன்னேனே
மாரணம் கண்டாயே அகப்பேய்
வந்தவிதங்கள் எல்லாம்

#10
ஆறு தத்துவமும் அகப்பேய்
ஆகமம் சொன்னதடி
மாறாத மண்டலமும் அகப்பேய்
வந்தது மூன்றடியே

#11
பிருதிவி பொன் நிறமே அகப்பேய்
பேதைமை அல்லவடி
உருவது நீரடியோ அகப்பேய்
உள்ளது வெள்ளையடி

#12
தேயு செம்மையடி அகப்பேய்
திடனது கண்டாயே
வாயு நீலமடி அகப்பேய்
வான் பொருள் சொல்வேனே

#13
வானம் அஞ்சடியோ அகப்பேய்
வந்தது நீ கேளாய்
ஊனமது ஆகாதே அகப்பேய்
உள்ளது சொன்னேனே

#14
அகாரம் இத்தனையும் அகப்பேய்
அங்கென்று எழுந்ததடி
உகாரம் கூடியடி அகப்பேய்
உருவாகி வந்ததடி

#15
மகார மாயையடி அகப்பேய்
மலமது சொன்னேனே
சிகார மூலமடி அகப்பேய்
சிந்தித்துக் கொள்வாயே

#16
வன்னம் புவனமடி அகப்பேய்
மந்திர தந்திரமும்
இன்னமும் சொல்வேனே அகப்பேய்
இம்மென்று கேட்பாயே

#17
அத்தி வரை வாடி அகப்பேய்
ஐம்பத்தோர் அட்சரமும்
மித்தையாம் கண்டாயே அகப்பேய்
மெய் என்று நம்பாதே

#18
தத்துவமானதடி அகப்பேய்
சகலமாய் வந்ததடி
புத்தியும் சொன்னேனே அகப்பேய்
பூத வடிவு அலவோ

#19
இந்த விதங்கள் எல்லாம் அகப்பேய்
எம் இறை அல்லவடி
அந்த விதம் வேறே அகப்பேய்
ஆராய்ந்து காணாயோ

#20
பாவம் தீர என்றால் அகப்பேய்
பாவிக்கலாகாதே
சாவதும் இல்லையடி அகப்பேய்
சற்குரு பாதமடி

#21
எத்தனை சொன்னாலும் அகப்பேய்
என் மனம் தேறாதே
சித்து மசித்தும்விட்டே அகப்பேய்
சேர்த்து நீ காண்பாயே

#22
சமயம் ஆறு படி அகப்பேய்
தம்மாலே வந்தவடி
அமைய நின்ற இடம் அகப்பேய்
ஆராய்ந்து சொல்வாயே

#23
ஆறாறும் ஆகுமடி அகப்பேய்
ஆகாது சொன்னேனே
வேறே உண்டானால் அகப்பேய்
மெய்யது சொல்வாயே

#24
உன்னை அறிந்தக்கால் அகப்பேய்
ஒன்றையும் சேராயே
உன்னை அறியும் வகை அகப்பேய்
உள்ளது சொல்வேனே

#25
சரியை ஆகாதே அகப்பேய்
சாலோகம் கண்டாயே
கிரியை செய்தாலும் அகப்பேய்
கிட்டுவது ஒன்றுமில்லை

#26
யோகம் ஆகாதே அகப்பேய்
உள்ளது கண்டக்கால்
தேக ஞானமடி அகப்பேய்
தேடாது சொன்னேனே

#27
ஐந்து தலை நாகமடி அகப்பேய்
ஆதாயம் கொஞ்சமடி
இந்த விஷந் தீர்க்கும் அகப்பேய்
எம் இறை கண்டாயே

#28
இறைவன் என்றது எல்லாம் அகப்பேய்
எந்த விதம் ஆகும்
அறை நீ கேளாய் அகப்பேய்
ஆனந்தமானதடி

#29
கண்டுகொண்டேனே அகப்பேய்
காதல் விண்டேனே
உண்டுகொண்டேனே அகப்பேய்
உள்ளது சொன்னாயே

#30
உள்ளது சொன்னாலும் அகப்பேய்
உன்னாலே காண்பாயே
கள்ளமும் தீராதே அகப்பேய்
கண்டர்க்குக் காமமடி

#31
அறிந்து நின்றாலும் அகப்பேய்
அஞ்சார்கள் சொன்னேனே
புரிந்த வல்வினையும் அகப்பேய்
போகாதே உன்னை விட்டு

#32
ஈசன் பாசமடி அகப்பேய்
இவ் வண்ணம் கண்டது எல்லாம்
பாசம் பயின்றதடி அகப்பேய்
பாரமது கண்டாயே

#33
சாத்திர சூத்திரமும் அகப்பேய்
சங்கற்பமானது எல்லாம்
பார்த்திடலாகாதே அகப்பேய்
பாழ்பலம் கண்டாயே

#34
ஆறு கண்டாயோ அகப்பேய்
அந்த வினை தீர
தேறித் தெளிவதற்கே அகப்பேய்
தீர்த்தமும் ஆடாயே

#35
எத்தனை காலமும்தான் அகப்பேய்
யோகம் இருந்தால் என்
மூத்தனும் ஆவாயோ அகப்பேய்
மோட்சமும் உண்டாமோ

#36
நாசமாவதற்கே அகப்பேய்
நாடாதே சொன்னேனே
பாசம் போனாலும் அகப்பேய்
பசுக்களும் போகாவே

#37
நாணம் ஏதுக்கடி அகப்பேய்
நல்வினை தீர்ந்தக்கால்
காண வேணும் என்றால் அகப்பேய்
காணக் கிடையாதே

#38
சும்மா இருந்துவிடாய் அகப்பேய்
சூத்திரம் சொன்னேனே
சும்மா இருந்த இடம் அகப்பேய்
சுட்டது கண்டாயே

#39
உன்றனைக் காணாதே அகப்பேய்
ஊனுள் நுழைந்தாயே
என்றனைக் காணாதே அகப்பேய்
இடத்தில் வந்தாயே

#40
வானம் ஓடிவரில் அகப்பேய்
வந்தும் பிறப்பாயே
தேனை உண்ணாமல் அகப்பேய்
தெருவோடு அலைந்தாயே

#41
சைவம் ஆனதடி அகப்பேய்
தானாய் நின்றதடி
சைவம் இல்லையாகில் அகப்பேய்
சலம் வரும் கண்டாயே

#42
ஆசை அற்ற இடம் அகப்பேய்
அசாரம் கண்டாயே
ஈசன் பாசமடி அகப்பேய்
எங்ஙனம் சென்றாலும்

#43
ஆணவ மூலமடி அகப்பேய்
அகாரமாய் வந்ததடி
கோணும் உகாரமடி அகப்பேய்
கூடப் பிறந்ததுவே

#44
ஒன்றும் இல்லையடி அகப்பேய்
உள்ளபடி ஆச்சே
நன்று இல்லை தீது இலையே அகப்பேய்
நாணமும் இல்லையடி

#45
சும்மா இருந்த இடம் அகப்பேய்
சுட்டது சொன்னேனே
எ மாயம் ஈது அறியேன் அகப்பேய்
என்னையும் காணேனே

#46
கலைகள் ஏதுக்கடி அகப்பேய்
கண்டார் நகையாரோ
நிலைகள் ஏதுக்கடி அகப்பேய்
நீ யார் சொல்வாயே

#47
இந்த அமிர்தமடி அகப்பேய்
இரவி விஷமோடி
இந்து வெள்ளையடி அகப்பேய்
இரவி சிவப்பாமே

#48
ஆண் அல பெண் அலவே அகப்பேய்
அக்கினி கண்டாயே
தாணுவும் இப்படியே அகப்பேய்
சற்குரு கண்டாயே

#49
என்ன படித்தாலும் அகப்பேய்
எம் உரை ஆகாதே
சொன்னது கேட்டாயே அகப்பேய்
சும்மா இருந்துவிடு

#50
காடு மலையுமடி அகப்பேய்
கடும் தவம் ஆனால் என்
வீடும் வெளியாமோ அகப்பேய்
மெய்யாக வேண்டாமோ

#51
பரத்தில் சென்றாலும் அகப்பேய்
பாரிலே மீளுமடி
பரத்துக்கு அடுத்த இடம் அகப்பேய்
பாழது கண்டாயே

#52
பஞ்ச முகம் ஏது அகப்பேய்
பஞ்சு படுத்தாலே
குஞ்சித பாதமடி அகப்பேய்
குரு பாதம் கண்டாயே

#53
பங்கம் இல்லையடி அகப்பேய்
பாதம் இருந்த இடம்
கங்கையில் வந்தது எல்லாம் அகப்பேய்
கண்டு தெளிவாயே

#54
தானது நின்ற இடம் அகப்பேய்
சைவம் கண்டாயே
ஊன் அற நின்றவர்க்கே அகப்பேய்
ஊனம் ஒன்று இல்லையடி

#55
சைவம் ஆருக்கடி அகப்பேய்
தன்னை அறிந்தவர்க்கே
சைவமான இடம் அகப்பேய்
சற்குரு பாதமடி

#56
பிறவி தீர என்றால் அகப்பேய்
பேதகம்பண்ணாதே
துறவியானவர்கள் அகப்பேய்
சும்மா இருப்பார்கள்

#57
ஆர் அலைந்தாலும் அகப்பேய்
நீ அலையாதேயடி
ஊர் அலைந்தாலும் அகப்பேய்
ஒன்றையும் நாடாதே

#58
தேனாறு பாயுமடி அகப்பேய்
திருவடி கண்டவர்க்கே
ஊனாறும் இல்லையடி அகப்பேய்
ஒன்றையும் நாடாதே

#59
வெள்ளை கறுப்பு ஆமோ அகப்பேய்
வெள்ளியும் செம்பு ஆமோ
உள்ளது உண்டோடி அகப்பேய்
உன் ஆணை கண்டாயே

#60
அறிவுள் மன்னுமடி அகப்பேய்
ஆதாரம் இல்லையடி
அறிவு பாசமடி அகப்பேய்
அருளது கண்டாயே

#61
வாசியில் ஏறியபடி அகப்பேய்
வான் பொருள் தேடாயோ
வாசியில் ஏறினாலும் அகப்பேய்
வாராது சொன்னேனே

#62
தூராதி தூரமடி அகப்பேய்
தூரமும் இல்லையடி
பாராமல் பாரடியோ அகப்பேய்
பாழ்வினை தீர என்றால்

#63
உண்டாக்கிக்கொண்டது அல்ல அகப்பேய்
உள்ளது சொன்னேனே
கண்டார்கள் சொல்வாரோ அகப்பேய்
கற்பனையற்றதடி

#64
நாலுமறை காணா அகப்பேய்
நாதனை யார் காண்பார்
நாலுமறை முடிவில் அகப்பேய்
நற்குரு பாதமடி

#65
மூலம் இல்லையடி அகப்பேய்
முப்பொருள் இல்லையடி
மூலம் உண்டானால் அகப்பேய்
முத்தியும் உண்டாமே

#66
இந்திரசாலமடி அகப்பேய்
எண்பத்தொரு பதமும்
மந்திரம் அப்படியே அகப்பேய்
வாயைத் திறவாதே

#67
பாழாகவேணும் என்றால் அகப்பேய்
பார்த்ததை நம்பாதே
கேளாமல் சொன்னேனே அகப்பேய்
கேள்வியும் இல்லையடி

#68
சாதி பேதம் இல்லை அகப்பேய்
தானாகி நின்றவர்க்கே
ஓதி உணர்ந்தாலும் அகப்பேய்
ஒன்றும்தான் இல்லையடி

#69
சூழ வானமடி அகப்பேய்
சுற்றி மரக் காவில்
வேழம் உண்ட கனி அகப்பேய்
மெய்யது கண்டாயே

#70
நானும் இல்லையடி அகப்பேய்
நாதனும் இல்லையடி
தானும் இல்லையடி அகப்பேய்
சற்குரு இல்லையடி

#71
மந்திரம் இல்லையடி அகப்பேய்
வாதனை இல்லையடி
தந்திரம் இல்லையடி அகப்பேய்
சமயம் அழிந்ததடி

#72
பூசை பாசமடி அகப்பேய்
போதமே கொட்டமடி
ஈசன் மாயையடி அகப்பேய்
எல்லாமும் இப்படியே

#73
சொல்லலாகாதோ அகப்பேய்
சொன்னாலும் தோஷமடி
இல்லை இல்லையடி அகப்பேய்
ஏகாந்தம் கண்டாயே

#74
தத்துவத் தெய்வமடி அகப்பேய்
சதாசிவம் ஆனதடி
மற்றுள்ள தெய்வம் எல்லாம் அகப்பேய்
மாயை வடிவாமே

#75
வார்தையல்லவடி அகப்பேய்
வாச மகோசரத்தே
ஏற்றதல்லவடி அகப்பேய்
என்னுடன் வந்ததல்ல

#76
சாத்திரம் இல்லையடி அகப்பேய்
சலனம் கடந்ததடி
பார்த்திடலாகாதே அகப்பேய்
பாவனைக்கு எட்டாதே

#77
என்ன படித்தால் என் அகப்பேய்
ஏதுதான் செய்தால் என்
சொன்ன விதங்கள் எல்லாம் அகப்பேய்
சுட்டது கண்டாயே

#78
தன்னை அறிய வேணும் அகப்பேய்
சாராமல் சார வேணும்
பின்னை அறிவது எல்லாம் அகப்பேய்
பேயறிவாகுமடி

#79
பிச்சையெடுத்தாலும் அகப்பேய்
பிறவி தொலையாதே
இச்சையற்ற இடம் அகப்பேய்
எம் இறை கண்டாயே

#80
கோலம் ஆகாதே அகப்பேய்
குதர்க்கம் ஆகாதே
சாலம் ஆகாதே அகப்பேய்
சஞ்சலம் ஆகாதே

#81
ஒப்பனையல்லவடி அகப்பேய்
உன் ஆணை சொன்னேனே
அப்புடன் உப்பு எனவே அகப்பேய்
ஆராய்ந்திருப்பாயே

#82
மோட்சம் வேண்டார்கள் அகப்பேய்
முத்தியும் வேண்டார்கள்
தீட்சை வேண்டார்கள் அகப்பேய்
சின்மயம் ஆனவர்கள்

#83
பாலன் பிசாசமடி அகப்பேய்
பார்த்தால் பித்தனடி
காலம் மூன்றும் அல்ல அகப்பேய்
காரியம் அல்லவடி

#84
கண்டதும் இல்லையடி அகப்பேய்
கண்டவர் உண்டானால்
உண்டது வேண்டடியோ அகப்பேய்
உன் ஆணை சொன்னேனே

#85
அஞ்சையும் உண்ணாதே அகப்பேய்
ஆசையும் வேண்டாதே
நெஞ்சையும் விட்டுவிடு அகப்பேய்
நிஷ்டையில் சாராதே

#86
நாதாந்த உண்மையிலே அகப்பேய்
நாடாதே சொன்னேனே
மீதான சூதானம் அகப்பேய்
மெய் என்று நம்பாதே

#87
ஒன்றோடொன்று கூடில் அகப்பேய்
ஒன்றும் கெடும் காணே
நின்ற பரசிவமும் அகப்பேய்
நில்லாது கண்டாயே

#88
தோன்றும் வினைகள் எல்லாம் அகப்பேய்
சூனியம் கண்டாயே
தோன்றாமல் தோன்றிடும் அகப்பேய்
சுத்த வெளி-தனிலே

#89
பொய் என்று சொல்லாதே அகப்பேய்
போக்குவரத்துதானே
மெய் என்று சொன்னவர்கள் அகப்பேய்
வீடு பெறலாமே

#90
வேதம் ஓதாதே அகப்பேய்
மெய் கண்டோம் என்னாதே
பாதம் நம்பாதே அகப்பேய்
பாவித்துப் பாராதே
**

3 அழுகணிச் சித்தர் பாடல்

** கலித்தாழிசை

#1
மூலப்பதியடியோ மூவிரண்டு வீடதிலே
கோலாப்பதியடியோ குதர்க்கத் தெரு நடுவே
சாலப்பதி-தனிலே தணலாய் வளர்த்த கம்பம்
மேலப்பதி-தனிலே என் கண்ணம்மா
விளையாட்டைப் பாரேனோ

#2
எண் சாண் உடம்படியோ ஏழிரண்டு வாயிலடி
பஞ்சாயக்காரர் ஐவர் பட்டணமும்தான் இரண்டு
அஞ்சாமல் பேசுகிறாய் ஆக்கினைக்குத்தான் பயந்து
நெஞ்சார நில்லாமல் என் கண்ணம்மா
நிலைகடந்து வாடுறண்டி

#3
முத்து முகப்படியோ முச்சந்தி வீதியிலே
பத்தாம் இதழ் பரப்பிப் பஞ்சணையின் மேல் இருத்தி
அத்தை அடக்கி நிலை ஆரும் இல்லா வேளையிலே
குத்துவிளக்கு ஏற்றி என் கண்ணம்மா
கோலமிட்டுப் பாரேனோ

#4
சம்பா அரிசியடி சாதம் சமைத்திருக்க
உண்பாய் நீ என்று சொல்லி உழக்குழக்கு நெய் வார்த்து
முத்து போல் அன்னமிட்டு முப்பழமும் சர்க்கரையும்
தித்திக்கும் தேன் அமிர்தம் என் கண்ணம்மா
தின்று களைப்பாறேனோ

#5
பைம்பொன் சிலம்பு அணிந்து பாடகக் கால் மேல் தூக்கி
செம்பொன் கலை உடுத்தி சேல் விழிக்கு மை எழுதி
அம் பொன் பணி பூண்டு அறுகோண வீதியிலே
கம்பத்தின் மேல் இருந்தே என் கண்ணம்மா
கண் குளிரப் பாரேனோ

#6
எட்டாப் புரவியடி ஈராறு காலடியோ
விட்டாலும் பாரமடி வீதியிலேதான் மறித்துக்
கட்டக் கயிறு எடுத்துக் கால் நாலும் சேர்த்து இறுக்கி
அட்டாள தேசம் எல்லாம் என் கண்ணம்மா
ஆண்டிருந்தால் ஆகாதோ

#7
கொல்லன் உலை போலக் கொதிக்குதடி என் வயிறு
நில் என்று சொன்னால் நிலைநிறுத்தக் கூடுவதில்லை
நில் என்று சொல்லி அல்லோ நிலைநிறுத்த வல்லார்க்குக்
கொல் என்று வந்த நமன் என் கண்ணம்மா
குடியோடிப் போகானோ

#8
ஊற்றைச் சடலமடி உப்பு இருந்த பாண்டமடி
மாற்றிப் பிறக்க மருந்து எனக்குக் கிட்டுதில்லை
மாற்றிப் பிறக்க மருந்து எனக்குக் கிட்டும் என்றால்
ஊற்றைச் சடலம் விட்டே என் கண்ணம்மா
உன் பாதம் சேரேனோ

#9
வாழைப்பழம் தின்றால் வாய் நோகும் என்று சொல்லித்
தாழைப்பழம் தின்று சாவு எனக்கு வந்ததடி
தாழைப்பழத்தை விட்டுச் சாகாமல் சாக அல்லோ
வாழைப்பழம் தின்றால் என் கண்ணம்மா
வாழ்வு எனக்கு வாராதோ

#10
பையூரிலே இருந்து பாழூரிலே பிறந்து
மெய்யூரில் போவதற்கு வேதாந்த வீடு அறியேன்
மெய்யூரில் போவதற்கு வேதாந்த வீடு அறிந்தால்
பையூரும் மெய்யூரும் என் கண்ணம்மா
பாழாய் முடியாவோ

#11
மாமன் மகளடியோ மச்சினியோ நான் அறியேன்
காமன் கணை எனக்கு கனலாக வேகுதடி
மாமன் மகளாகி மச்சினியும் நீயானால்
காமன் கணைகள் எல்லாம் என் கண்ணம்மா
கண் விழிக்க வேகாவோ

#12
அந்தரத்தை வில்லாக்கி ஐந்தெழுத்தை அம்பாக்கி
மந்திரத் தேர் ஏறி அல்லோ மான் வேட்டை ஆடுதற்குச்
சந்திரரும் சூரியரும் தாம் போந்த கா வனத்தே
வந்து விளையாடி அல்லோ என் கண்ணம்மா
மனம் மகிழ்ந்து பார்ப்பது என்றோ

#13
காட்டு ஆனை மேல் ஏறிக் கடைத்தெருவே போகையிலே
நாட்டார் நமை மறித்து நகைபுரியப் பார்ப்பது என்றோ
நாட்டார் நமை மறித்து நகைபுரியப் பார்த்தாலும்
காட்டு ஆனை மேல் ஏறி என் கண்ணம்மா
கண் குளிரக் காண்பேனோ

#14
உச்சிக்குக் கீழடியோ ஊசிமுனை வாசலுக்குள்
மச்சுக்கு மேல் ஏறி வான் உதிரம்தான் எடுத்துக்
கச்சை வடம்புரியக் காயலூர்ப் பாதையிலே
வச்சு மறந்து அல்லோ என் கண்ணம்மா
வகை மோசமானேண்டி

#15
மூக்கால் அரும்பு எடுத்து மூவிரண்டாய்த் தான் தூக்கி
நாக்கால் வளை பரப்பி நாற்சதுர வீடு கட்டி
நாக்கால் வளை பரப்பி நாற்சதுர வீட்டினுள்ளே
மூக்காலைக் காணாமல் என் கண்ணம்மா
முழுதும் தவிக்கிறண்டி

#16
காம மலர் தூவக் கருத்து எனக்கு வந்ததடி
பாம வலி தொலைக்கப் பாச வலி கிட்டுதில்லை
பாம வலி தொலைக்கப் பாச வலி நிற்கும் என்றால்
காம மலர் மூன்றும் என் கண்ணம்மா
கண் எதிரே நில்லாவோ

#17
தன் காயம் தோன்றாமல் சாண் அகலக் கொல்லை கட்டி
வெங்காய நாற்றுவிட்டு வெகுநாளாய்க் காத்திருந்தேன்
வெங்காயம் தின்னாமல் மேல் தோலைத் தின்று அலவோ
தன் காயம் தோணாமல் என் கண்ணம்மா
சாகிறண்டி சாகாமல்

#18
பற்றற்ற நீரதிலே பாசி படர்ந்தது போல்
உற்றுற்றுப் பார்த்தாலும் உன் மயக்கம் தீரவில்லை
உற்றுற்றுப் பார்த்தாலும் உன் மயக்கந் தீர்ந்தக்கால்
பற்றற்ற நீர் ஆகும் என் கண்ணம்மா
பாசியது வேறாமோ

#19
கற்றாரும் மற்றாரும் தொண்ணூற்றோடு ஆறதிலே
உற்றாரும் பெற்றாரும் ஒன்று என்றே யான் இருந்தேன்
உற்றாரும் பெற்றாரும் ஊரைவிட்டுப் போகையிலே
சுற்றாரும் இல்லாமல் என் கண்ணம்மா
துணை இழந்து நின்றது என்ன

#20
கண்ணுக்கு மூக்கடியோ காதோர மத்திமத்தில்
உள்நாக்கு மேல் ஏறி உன் புதுமை மெத்த உண்டு
உள்நாக்கு மேல் ஏறி உன் புதுமை கண்டவர்க்கும்
கண்ணுக்கு மூக்கடியோ என் கண்ணம்மா
காரணங்கள் மெத்த உண்டே

#21
சாயச் சரக்கு எடுத்தே சாதிலிங்கம்தான் சேர்த்து
மாயப் பொடி கலந்து வால் உழுவை நெய் ஊற்றிப்
பொட்டென்று பொட்டுமிட்டாள் புருவத்திடை நடுவே
இட்ட மருந்தாலே என் கண்ணம்மா
இவ் வேடம் ஆனேண்டி

#22
பாதாள மூலியடி பாஷாணம்தான் சேர்த்து
வேதாளம் கூட்டி அல்லோ வெண்சாரை நெய் ஊற்றிச்
செந்தூர மையடியோ செகம் எல்லாம் தான் மிரட்டித்
தந்த மருந்தாலே என் கண்ணம்மா
தணலாக வேகுறண்டி

#23
கள்ளர் பயம் எனக்குக் கால் தூக்கவொட்டாமல்
பிள்ளை அழுதுநின்றால் பெற்றவட்குப் பாரமடி
பிள்ளை அழுவாமல் பெற்ற மனம் நோகாமல்
கள்ளர் பயம் எனக்கே என் கண்ணம்மா
கடுகளவு காணாதோ

#24
பட்டணத்தை ஆளுகின்ற பஞ்சவர்கள் ராசாக்கள்
விட்டுப் பிரியாமல் வீரியங்கள் தாம் பேசி
விட்டுப் பிரிந்தவரே வேறுபடும் காலம்
பட்டணமும் தான் பறிபோய் என் கண்ணம்மா
படை மன்னர் மாண்டது என்ன

#25
ஆகாப் புலையனடி அஞ்ஞானம் தான் பேசிச்
சாகாத் தலை அறியேன் தன்னறிவு தான் அறியேன்
வேகாத கால் அறியேன் விதி மோசம் ஆனேண்டி
நோகாமல் நொந்து அல்லோ என் கண்ணம்மா
நொடியில் மெழுகு ஆனேண்டி

#26
தாயைச் சதம் என்றே தந்தையரை ஒப்பு என்றே
மாயக் கலவி வந்து மதிமயக்கமானேனடி
மாயக்கலவி விட்டு மதிமயக்கம் தீர்ந்தக்கால்
தாயும் சதம் ஆமோ என் கண்ணம்மா
தந்தையரும் ஒப்பு ஆமோ

#27
அஞ்சாத கள்ளனடி ஆரும் அற்ற பாவியடி
நெஞ்சாரப் பொய் சொல்லும் நேயமில்லா நிட்டூரன்
கஞ்சா வெறியனடி கை சேதம் ஆகும் முன்னே
அஞ்சாதே என்று சொல்லி என் கண்ணம்மா
ஆண்டிருந்தால் ஆகாதோ

#28
உன்னை மறந்து அல்லோ உளுத்தமரம் ஆனேன்
தன்னை மறந்தார்க்குத் தாய்தந்தை இல்லையடி
தன்னை மறக்காமல் தாயாரும் உண்டானால்
உன்னை மறக்காமல் என் கண்ணம்மா
ஒத்திருந்து வாழேனோ

#29
காயப்பதி-தனிலே கந்தமூலம் வாங்கி
மாயப் பணி பூண்டு வாழும் சரக்கு எடுத்தே
ஆயத் துறை-தனிலே ஆராய்ந்து பார்க்கும் முன்னே
மாயச் சுருளோலை என் கண்ணம்மா
மடி மேல் விழுந்தது என்ன

#30
சித்திரத்தைக் குத்தி அல்லோ சிலையை எழுதிவைத்து
உத்திரத்தைக் காட்டாமல் ஊர் அம்பலம் ஆனேன்
உத்திரத்தைக் காட்டி அல்லோ ஊர் அம்பலம் ஆனால்
சித்திரமும் வேறு ஆமோ என் கண்ணம்மா
சிலையும் குலையாதோ

#31
புல்லரிடத்தில் போய்ப் பொருள்-தனக்குக் கையேந்திப்
பல்லை மிகக் காட்டிப் பரக்க விழிக்கிறண்டி
பல்லை மிகக் காட்டாமல் பரக்க விழிக்காமல்
புல்லரிடம் போகமல் என் கண்ணம்மா
பொருள் எனக்குத் தாராயோ

#32
வெட்டுண்ட சக்கரத்தால் வேண தனம் அளித்துக்
குட்டுண்டு நின்றேண்டி கோடி மனு முன்னாலே
குட்டுண்டு நில்லாமல் கோடி மனு முன்னாக
வெட்டுண்டு பிணி நீங்கி என் கண்ணம்மா
விழித்து வெளி காட்டாயோ

#33
என்னோடு உடன்பிறந்தார் எல்லோரும் பட்டார்கள்
தன்னந்தனியனுமாய்த் தனித்திருக்கல் ஆச்சுதடி
முன்னம் இது தெரிந்தால் முழுமோசம் போகேனே
இன்னவிதம் என்று என் கண்ணம்மா
எடுத்துரைக்கலாகாதோ

#34
எல்லாரும் பட்டார்கள் இன்ன இடம் என்று அறியேன்
பொல்லாங்கும் போச்சுதடி புலனும் மறந்ததடி
கல்லான என் மனது கரைந்திருக்குமேயாகில்
எல்லாரும் வந்து என் கண்ணம்மா
எனக்கு ஏவல்செய்யாரோ

#35
என்னை எனக்கு அறிய இரு வினையும் ஈடழித்துத்
தன்னை அறியுமிடம் தான் அறிந்துகொண்டேண்டி
தன்னை அறியுமிடம் தான் அறிந்துகொண்ட பின்பு
என்னை அறியாமல் என் கண்ணம்மா
இருந்தேன் ஒருவழியாய்

#36
ஆதாரம் ஆறினையும் ஐம்பத்தோர் அட்சரமும்
சூதானக் கோட்டை எல்லாம் சுட்டுத் தொலைத்தார்கள்
சூதானக் கோட்டை எல்லாம் சுட்டுவிட நாள் ஆனால்
பாதாள வத்து எல்லாம் என் கண்ணம்மா
பக்கத்து இருக்காதோ

#37
கடல்நீரின் ஆழமதைக் கண்டு கரை ஏறி வந்து
உடலும் உயிரும் போல ஒத்தே இருந்தோமடி
உடலும் உயிரும் போல ஒத்தே இருக்கையிலே
திடமா மயக்கம் வந்து என் கண்ணம்மா
சேர்ந்தது என் சொல்லாயோ

#38
கல்லுள் இருந்த கனல் ஒளியைக் காரணமாய்ப்
புல்லுள் இருந்து வந்த பொருள் அறியக் காணேண்டி
புல்லுள் இருந்த பொருள் அறியக் காணாட்டால்
வல்லபங்கள் தோணாமல் என் கண்ணம்மா
மயங்கித் தவிக்கிறண்டி

#39
பொற்பூவும் வாசனையும் போதம் அறிந்தோர்க்குக்
கற்பூவும் வாசனையும் காணும் கயவருக்கும்
கற்பூவும் வாசனையும் கண்டது உண்டேயாமானால்
பொற்பூவும் வாசனையின் என் கண்ணம்மா
புலன்கள் தெரிவேண்டி

#40
ஆதிமதி என்னும் அதின் விடாய் தான் அடங்கிச்
சோதி விந்து நாதம் எனச் சுக்கிலமாய் நின்றதடி
சோதி விந்து நாதம் எனச் சுக்கிலமாய் நின்றக்கால்
நீதியுடன் பூர்வபட்சம் என் கண்ணம்மா
நிலை தெரியமாட்டேனோ

#41
ஞானம் இது நாற்பதையும் நலமாகவே தெரிய
மோன மயக்கத்தில் முழுதுமே கொட்டிவிட்டேன்;
மோன மயக்கத்தை முழுதும் அறிந்தோர்கள்
ஞானம் அடைவார்கள் என் கண்ணம்மா
நன்மை பெற்று வாழ்வார்கள்
** வாத கற்பம்

#42
மூலம் நடு வீதி ஆத்தாளே
மும்மண்டலத்து அமர்ந்த
நீலகண்டத்து வைத்தான் ஆத்தாளே
நின்மலனைப் போற்றுவனே

#43
மேகத்தான் விந்தாச்சு ஆத்தாளே
விசயரவிச் சுண்ணாம்பாம்
ஆகச் சிவநீரால் ஆத்தாளே
அட்டசித்தி அவள் சத்தி

#44
இரவி முகத்தாலே ஆத்தாளே
ஈசன் என்ற உப்பாச்சு
வருகங்கை தன்னாலே ஆத்தாளே
மயமாகச் சுத்தம்செய்தே

#45
முந்தின உப்பு இரண்டும் ஆத்தாளே
முழுக் கல்லுப் பொன்னாகத்
தொந்திக்க இவ்விடைக்க ஆத்தாளே
சூழ் சீனம் கால் சேர்த்து

#46
ஆறுதலச் செயநீர் ஆத்தாளே
அதிலே கல் சுண்ணாம்பாம்
மீறும் இமிந்தச் சுண்ணாம்பில் ஆத்தாளே
வீரமுடன் கற்பூரம்

#47
சாரநீரால் அரைத்து ஆத்தாளே
தனிக் கவசமே பூசி
ஆறு வகைச் செயநீரால் ஆத்தாளே
அதன் மேலே சுத்திவைக்க

#48
உப்பு என்று அறியாரே ஆத்தாளே
உலகத்திலுள்ளோர்கள்
உப்பு அல்லோ சுண்ணாம்பாம் ஆத்தாளே
ஊர்க்குள் விலைகூறுதடி

#49
சவ்வீரம் உப்புச் சுண்ணம் ஆத்தாளே
தனிப் பூரம் மேல் பூசி
ஒவ்வாத பால் முகத்தில் ஆத்தாளே
ஊடுருவச் சுண்ணாம்பாம்

#50
காரமதில் ஏற்றலடி ஆத்தாளே
கரு அறியார் தண்ணீரைச்
சீருடனே குத்தியடி ஆத்தாளே
தீமுகத்தில் வாட்டிவிடு

#51
கற்பூரச் சுண்ணமடி ஆத்தாளே
கடும் காரச் சுண்ணமடி
வெற்பாக வைத்தானே ஆத்தாளே
வேதை கவர் கோடியடி

#52
எண்ணெண் சரக்குமடி ஆத்தாளே
இப் பூரச் சுண்ணமடி
சுண்ணத்தில் வீரர் ஆத்தாளே
கசதில் சுண்ணாம்பாம்

#53
அக்காரச் சுண்ணாம்பாம் ஆத்தாளே
ஆக ரெண்டு சுண்ணமதை
உக்காரம் மேல் பூசி ஆத்தாளே
உலையிலே வைத்து ஊத

#54
எண்ணெய் எல்லாம் போக்குமடி
இருக்கும் சவுக்காரம்
சுண்ணமடி மேல் கவசம் ஆத்தாளே
சொல்லுகிறேன் அப்புச் சுண்ணம்

#55
கற்பூரச் சுண்ணாம்பாம் ஆத்தாளே
கலந்திருந்த இண்டுமடி
செப்பமுள்ள செயநீரால் ஆத்தாளே
சேர்த்தாட்டி வீரமிட்டு

#56
வழமலைக்கு ஆத்தாளே
வளமாய்ப் பொதிந்த பின்பு
தழலிலே தான் ஆட்டி ஆத்தாளே
சற்குருவாம் உப்பாலே

#57
உப்புச் சுண்ணம் கற்பூரம் ஆத்தாளே
உண்மை சவுக்காரம்
செப்பமுடன் மூன்று சுண்ணம் ஆத்தாளே
சேர்த்து ரவியில் இட்டு

#58
இக்குருவில் மஞ்சாடி ஆத்தாளே
எடுத்துத் துருசில் இட்டு
முக்கியமுடன் மேல் கவசம் ஆத்தாளே
முன் பூசி வெயிலில் வைக்க

#59
சுண்ணாம்பு தங்கி இது ஆத்தாளே
துடிதாளகம் வெளுக்கும்
சுண்ணாம்பு வங்கமடி ஆத்தாளே
துடிலிங்கம் கைமாட்டும்

#60
சாதிலிங்கச் சுண்ணாம்பு ஆத்தாளே
தனிலோகச் சுண்ணாம்பாம்
நாதாந்தச் சுண்ணாம்பாம் ஆத்தாளே
நாகமிதில் சுண்ணாம்பாம்

#61
சுண்ணந்தானாக வடி ஆத்தாளே
துடி கெந்தகம் வெளுப்பாம்
சுண்ணாம்பாம் கெந்தகந்தான் ஆத்தாளே
துடியானை பட்டுவிடும்

#62
சூதனடி பட்டாண்டி ஆத்தாளே
சூழ்ந்து அங்கம் தான் சேர்க்க
வேதை சவ்வீரனடி ஆத்தாளே
மீறும் வகை மூன்றும் ஒன்றாய்

#63
சேர்ந்திருக்கவே மணியாம் ஆத்தாளே
செம்பு வெள்ளி சேர்ந்தேதான்
நூத்துக்கொரு மா இடவே ஆத்தாளே
நூத்தெட்டு மாத்தாகும்

#64
இத் தங்கம் செந்தூரம் ஆத்தாளே
இந்த மணியாலே
சத்த பேதியாகுமடி ஆத்தாளே
தான் பரிச பேதி இதாம்

#65
மண்டலம் பேதிக்குமடி ஆத்தாளே
மலையும் பழுக்குமடி
அண்டத்தை தொட்டு ஆட்ட ஆத்தாளே
அடங்காப் பொருள் ஆகும்

#66
மண் ஏது கல் ஏது ஆத்தாளே
மரம் ஏது இவ் ஏதை
ஒண்ணாது ஒண்ணாது ஆத்தாளே
ஒடுங்கும் பொருளைப் பேண்

#67
தாளகம் வெள்ளியிலே ஆத்தாளே
தப்பாது பத்தரையும்
பாளித்த லோகச் சுண்ணம் ஆத்தாளே
பத்தரையாம் வங்கமதில்

#68
வீரச் சுண்ணம் வெள்ளியதாம் ஆத்தாளே
வெள்ளி பதினெட்டாகும்
பூரச் சுண்ணம் சேர்க்கவடி ஆத்தாளே
பொன் வயதோ எண்ணான்காம்

#69
சிலபற்பம் செம்பினிலே ஆத்தாளே
சேர்க்கவய எட்டரையாம்
துலையாக் கவர் கோடி ஆத்தாளே
சொன்னார் திருமூலர்

#70
பார்த்தேனடி கண்டேனடி ஆத்தாளே
பாசம் குரு பாதம்
காத்தேனடி கண்டேனடி ஆத்தாளே
கைமுறையாம் என் நூல்தான்

#71
கருவை ஒளியாமல் ஆத்தாளே
காசினியில் உள்ளோர்க்குக்
குருவை நாம் காண்பித்தோம் ஆத்தாளே
குணமான வாத வித்தை

#72
உண்டு என்ற பேர்க்குமடி ஆத்தாளே
உண்டாய் இருக்குமடி
சண்டாளன் ஆனாக்கால் ஆத்தாளே
தான் லபிக்கமாட்டாதே

#73
லபிக்க வழி சொல்லுகிறேன் ஆத்தாளே
நந்தி திருமூலரையும்
லபிக்கக் காலாங்கியையும் ஆத்தாளே
நாதாந்தப் போகரையும்

#74
சத்தி சிதம்பரமும் ஆத்தாளே
சட்டைமுனி பூசைசெய்வாய்
உத்தமக் கொங்கணரை ஆத்தாளே
உசிதமாய்ப் பூசைசெய்வாய்

#75
கருவூரான் ஆனந்தர் ஆத்தாளே
கண்டு வழி தெரிந்தோர்
ஒரு நெறியாய் இவர்களையும் ஆத்தாளே
உண்மையுடன் பூசைசெய்

#76
சண்டாளன் ஆனாலும் ஆத்தாளே
தான் வேதை காண்பானே
கண்ட செய்தி சொன்னேன் நான் ஆத்தாளே
கற்ப வகை சொல்லுவனே

#77
சொல்லுகிறேன் கரிப்பான் ஆத்தாளே
சுத்த இலை பறித்துச்
செல்லும் பழச்சாற்றில் ஆத்தாளே
செம்பழத்து அளவு அரைத்து

#78
அரைத்து ஆவின் நெய்யதனில் ஆத்தாளே
அது சிவக்கக் காய்ந்த
திரமாய் ஓர் பீங்கானில் ஆத்தாளே
செப்பமுடன் வைத்தேதான்

#79
பதனமாய் வண்டுகட்டி ஆத்தாளே
பரம் என்று நம்பியேதான்
திதி பூருவம்-தனிலே ஆத்தாளே
செயல் பொருந்தும் நாள் பார்த்தும்

#80
அமுத யோகம் பார்த்து ஆத்தாளே
ஆனதொரு கற்பமதைக்
குமுத ஒலி உள்நாக்கில் ஆத்தாளே
குலாவுகின்ற வாசலிலே

#81
பெருவிரலால் அதைத் தொட்டு ஆத்தாளே
பேதை மனம் எண்ணாமல்
ஒரு நெறியாய் நாலு தரம் ஆத்தாளே
உயர வலம் சுற்றிடவே

#82
நாலு தரம் சுத்திசெய்தால் ஆத்தாளே
நன்றாய் அகக் கதவில்
ஆலமுண்டோன்-தன் ஆணை ஆத்தாளே
அஞ்சு கதவும் திறக்க

#83
நாற்பது நாள் கொள்வாரேல் ஆத்தாளே
நற்கதவு ஐஞ்சும் திறக்கும்
தீர்க்கமதாய் சித்தியுண்டாம் ஆத்தாளே
தேகம் வச்ரகாயமதாம்

#84
மறவாமல் கற்ப வகை ஆத்தாளே
மனசாரத் தின்றுவிட்டால்
இறவாமல் அட்டசித்தி ஆத்தாளே
இக் கற்பம் கொண்ட பின்பு

#85
உற்றதொரு கற்பமதை ஆத்தாளே
உணவாகத் தின்றுவிட்டால்
செத்து இறந்துபோவதில்லை ஆத்தாளே
திடமாய் இருக்குமடி

#86
கெதிபெற வேணும் என்றால் ஆத்தாளே
கேளாமலே கேட்டு
மதியமுதம் கொண்ட பின்பு ஆத்தாளே
மறு கற்பம் கொண்டிடுவாய்

#87
வேதாள கற்பமதை ஆத்தாளே
விது வளரும் அட்டமி நாள்
மாதா இம் மூலிகைக்கு ஆத்தாளே
மாயமாய் நெய்வேத்யமிட்டு

#88
நமக்கரித்துத் தரம் நோக்கி ஆத்தாளே
நயமாக வாங்கிவந்த
நமக்கார சித்தியுடன் ஆத்தாளே
நன்றாய் நிழல் உலர்த்தி

#89
சூரணம் செய்தேதான் ஆத்தாளே
சுயமான நாள் பார்த்து
மீரும் வெருகடியாய் ஆத்தாளே
வேண்டும் தேன் நெய் சேர்த்து

#90
கொள்ளவே மண்டலம்தான் ஆத்தாளே
கூறும் அட்டசித்தி உண்டாம்
தெள்ளும் அவர்களுக்கு ஆத்தாளே
தேவ வருடமதில்

#91
பதினாயிர வருடம் ஆத்தாளே
பண்பாய் இருப்பனடி
ரதி வேதப் பெண் முதலாய் ஆத்தாளே
நன்மையுடன் மேவுவர் பார்

#92
பூலோக மாதர்களை ஆத்தாளே
புகலவே ஆகாது
மேலோகப் பெண்கள் சித்தி ஆத்தாளே
மேவுதற்கும் தான் ஆகும்

#93
கையான் சங்காய் அளவு ஆத்தாளே
கறி மிளகு அதில் பாதி
செய் ஆதிமண்டலமே ஆத்தாளே
தின்றால் நரைகள் இல்லை

#94
திரை இல்லை அட்டசித்தி ஆத்தாளே
தேகமது எவ்வர்ணமாய்
வரை வச்ரகாயமதாம் ஆத்தாளே
வயது முந்நூறு இருப்பன்

#95
கொடுப்பை இலை லேசாக ஆத்தாளே
கொள்வாய் ஓர் மண்டலமே
நடுக்கம் இல்லை தான் பகலில் ஆத்தாளே
நட்சத்திரம் தோன்றும்

#96
பத்தியம் பச்சரிசி ஆத்தாளே
பால் இட்ட சோறாகும்
மத்தொன்றும் ஆகாதே ஆத்தாளே
வண்மையுடன் இக் கொடுப்பை

#97
சமூலம் கழுவி நன்றாய் ஆத்தாளே
தயவாய் நிழல் உலர்த்தி
சமூலம் இடித்து நன்றாய் ஆத்தாளே
சதிராகச் சூரணம் செய்

#98
பாலில் வெருகடியாய் ஆத்தாளே
பதி மண்டலம் கொளவே
மேலும் வச்ரகாயமடி ஆத்தாளே
வேதையுமி நீராலே

#99
பழுக்கும் நவலோகம் ஆத்தாளே
பரமட்ட சித்தி உண்டாம்
அழுக்கெடுத்து வெள்ளீயம் ஆத்தாளே
அதில் ஈய நீர் வாங்கும்

#100
சித்திபெற்ற கற்பமடி ஆத்தாளே
தேவ வருடமதில்
அத்தியின் தன்பிலமாய் ஆத்தாளே
ஆயிரம் வயது இருப்பாய்

#101
உத்தமர்க்குச் சொன்னேன் நான் ஆத்தாளே
உயர வெளி கண்டதெல்லாம்
பத்தி உள்ள பத்தர்கட்கு ஆத்தாளே
பலிக்கும் பார் கண்டாயே

#102
பத்தியுடன் செய்து வந்தால் ஆத்தாளே
பரம்பொருளும் தோன்றுமடி
சித்தி அடைந்தவர்க்கு ஆத்தாளே
தெரியுமே சோதியும்தான்

#103
மாணிக்கத்து உள்ளொளி போல் ஆத்தாளே
மருவிய சோதி-தனைப்
பேணித் தொழும் அடியார் ஆத்தாளே
பேசாப் பிரமமடி

#104
அன்று முதல் இன்றளவும் ஆத்தாளே
அறியாப் பருவமதில்
என்றும் பொதுவாக ஆத்தாளே
இருந்த ரகசியம்தான்

#105
ஓங்காரம் கொண்டு ஆத்தாளே
உள் மூலம் தான் தெரிந்து
ஆங்காரம் விட்டு ஆத்தாளே
ஐம்புலனும் கண்ணுதடி

#106
உள்ளுணர்வாய் நின்றிருக்கும் ஆத்தாளே
ஓங்காரம்-தன்னையுமே
எள்ளளவாகிலும்தான் ஆத்தாளே
ஏத்தித் துதிப்பாயே

#107
பாவிகள்-தங்களுக்கு ஆத்தாளே
பரிவாக இ நூலைத்
தாவிக் கொடுக்காதே ஆத்தாளே
சண்டாளர்-தங்களுக்கே

#108
அனுபோக கற்பசித்தி ஆத்தாளே
ஆகும் இதைப் படித்தோர்
மனு விக்யானம் தெரிந்து ஆத்தாளே
வாழ்வார் வெகு கோடி
** ஆறாதாரம்

#109
ஞானநூல் கற்றால் என் தன் துறவுபூண்டால் என்
மோன சமாதி முயன்றால் என் தான் ஆகி
எல்லாக் கவலையும் அற்று இன்புற்று இருப்பதுவே
சொல்லாரும் முத்தி சுகம்

#110
மேலத் தெரு ஆகி விந்து உதித்த வீடு ஆகிக்
கோலத்தினாலேயடி கூறும் அறுகோணம்
சீலத்தில் முக்கோணம் சேர்ந்து அப்பு வீடு ஆகி
மூலத்தில் மண் ஆகி என் ஆத்தாளே
முதலெழுத்தைப் போற்றி செய்தேன்

#111
ஆதி எனும் மூலமடி அவ்வோடே உவ்வாகி
நீதி எனும் நாளமடி நின்று விசை எழுப்பி
சாதி மதம் என்னும் தாகவிடாய் தான் அடங்கிச்
சோதி விந்து நாதம் என்ன என் ஆத்தாளே
சுக்கிலமாய் நின்றதடி

#112
துய்ய வெள்ளை ஆனதடி துலங்கும் வட்டத்து ஓரெழுத்து
மெய்யில் நடு நாளமடி விளங்கும் விந்து தான் இறங்கிப்
பை அரவு யோனியிலே பராபத்திலே விழுந்து
செய்ய வட்டம் ஆகியடி என் ஆத்தாளே
சீமூலம் ஆச்சுதடி

#113
நவ்வோடே மவ்வாகி நால் இதழின் மேல் படர்ந்து
உவ்வோடே சவ்வாகி உயர்வு உன்னி ஊடு எழுந்து
நவ்வோடே மவ்வாகி நாடுகின்ற கால் ஆகி
இவ்வோடு உதித்தாண்டி என் ஆத்தாளே
இலங்குகின்ற திங்களடி

#114
கதிர் அங்கி ஆகியடி கருணையினில் விந்து இறங்கி
உதிரம் திரட்டியடி ஓம் என்று அதனில் உன்னி
சதுரமது மண் ஆகிச் சதுர்முகனார் வீடு ஆகி
மதுரம் பிறந்ததடி என் ஆத்தாளே
வையகனாய் வந்தாண்டி

#115
மெப்பாகச் சதுரமடி மெய்யாய் அதில் பரந்து
ஒப்பாய் நடுநாளாம் ஓங்கி அதில் முளைத்துச்
செப்பார் இளமுலையார் சீருடனேதான் இருந்து
அப்பாலே மால் ஆகி என் ஆத்தாளே
ஆனந்தமானதடி

#116
உன்னி அப்பு மேலேயடி ஓங்கிக் கதிர் பரந்து
மின்னி அதில்தான் முளைத்து மேவுகின்ற சீயாகிப்
பன்னிவரு முக்கோணப் பதியதனிலே முளைத்து
வன்னி என்னும் பேர் ஆகி என் ஆத்தாளே
மருவுகின்ற ருத்ரனடி

#117
வீரான வன்னியதன் மேல் நாளம்தான் முளைத்து
ஓர் ஆறு கோணமதாய் உள்ளே ஓர் கால் ஆகிப்
பேர் ஆகி நின்றதடி பெரும் கிளையாம் கூட்டமதில்
மாறாமல் மாறியடி என் ஆத்தாளே
வையத்து உதித்தாண்டி

#118
உதையாமல் என்னை இப்போது உதைத்தவனும் கீழ் இறங்கி
மதியான மூலமதில் வந்து இருந்துகொண்டாண்டி
நிதியாம் இரண்டு எலும்பு நீள் எலும்பு இரண்டு ஆகி
முதியாத மாங்கிசமும் என் ஆத்தாளே
மூடி அதிலிருந்து

#119
மாத வளைக்குள்ளேயடி வந்த அது கீழ்ப் படர்ந்து
போதத்தின் முட்டியடி புகழ் நரம்பை உண்டுபண்ணி
நீதமதாக இந்த நீள் நிலத்திலே திரியப்
பாதமாய் உன்னியடி என் ஆத்தாளே
பதியாய் வளர்ந்ததடி

#120
இரு கண்ணின் மேலேயடி இருந்த நரம்பு ஊடுசென்று
பெரு நரம்பாய் விம்மிப் பெருக்க முளைத்ததடி
தரி நரம்பும் ஈர் எலும்பாய்த் தான் ஒன்பது எலும்பாய்
விரி நரம்பு போலாக என் ஆத்தாளே
மேலாய் நுழைந்ததடி

#121
இட்ட எழுத்து இரண்டில் ஏங்கி அதில் மேல் படர்ந்து
எட்டமதி போல் எலும்பு வளர்ந்து கவிந்ததடி
எட்டிரண்டும் ஒன்று இருந்தவர்க்கு வீடாச்சு
வெட்டவெளி ஆனதடி என் ஆத்தாளே
மெய்யாய் இருந்ததடி

#122
அகார உகாரத்தில் ஆசூனியம் பிறந்து
அகாரம்-தனில் இரங்கி அரி மூலம்-தன்னில் வந்து
உகாரத்துள் ஆ ஏறி ஓடி உலாவுவதற்கு
நிகரற்ற நாதனடி என் ஆத்தாளே
லிங்கமாய் வந்தாண்டி

#123
கரு ஆகி வந்தானோ கரு அழிக்க வந்தானோ
உரு ஆகி வந்தானோ உரு அழிக்க வந்தானோ
குரு ஆகி வந்தானோ குலம் அறுக்க வந்தானோ
திரு ஆகி வந்தானோ என் ஆத்தாளே
சீர்திருத்த வந்தானோ
** மெய்ஞ்ஞானம்

#124
ஐங்கரனைத் தெண்டனிட்டு அருளடைய வேணும் என்று
தங்காமல் வந்து ஒருவன் என் ஆத்தாளே
தற்சொரூபம் கொண்டாண்டி

#125
உள்ளது ஒளியாக ஓங்காரத்து உள்ளிருந்து
கள்ளப் புலன் அறுக்க என் ஆத்தாளே
காரணமாய் வந்தாண்டி

#126
ஆதாரம் ஆறினையும் ஐம்பத்தோர் அட்சரமும்
சூதானக் கேட்டை எல்லாம் என் ஆத்தாளே
சுட்டான் துருசாலே

#127
என்னோடு உடன்பிறந்தார் எல்லோரும் பட்டார்கள்
தன்னந்தனித்தேனே என் ஆத்தாளே
தான் இருக்க மாட்டேண்டி

#128
கல்லில் ஒளியானைக் கருத்தில் விளியானைச்
சொல்லி அழுதாலொழிய என் ஆத்தாளே
துயரம் எனக்கு ஆறாதே

#129
மண் முதலாய் ஐம்பூதம் மாண்டுவிடக் கண்டேண்டி
விண் முதலாய் ஐம்பொறியும் என் ஆத்தாளே
வெந்துவிடக் கண்டேண்டி

#130
ஆங்காரந்தான் கெடவே ஆறடுக்கு மாளிகையும்
நீங்காப் புலன்கள் ஐந்தும் என் ஆத்தாளே
நீறாக வெந்ததடி

#131
போற்றும் வகை எப்படியோ பொறி பேதகம் பிறந்தால்
ஆத்தும தத்துவங்கள் என் ஆத்தாளே
அடுக்கழிய வெந்ததடி

#132
வித்தியா தத்துவங்கள் விதம்விதமாய் வெந்ததடி
சுத்துவித்தை அத்தனையும் என் ஆத்தாளே
சுட்டான் துருசு அறவே

#133
கேடு வரும் என்று அறியேன் கெடுமதி கண் தோற்றாமல்
பாடு வரும் என்று அறியேன் என் ஆத்தாளே
பதியில் இருந்தாண்டி

#134
எல்லோரும் போன வழி இன்ன இடம் என்று அறியேன்
பொல்லாங்கு தீரவடி என் ஆத்தாளே
பொறி அழியக் காணேண்டி

#135
உட்கோட்டைக்கு உள்ளிருந்தோர் ஒக்க மடிந்தார்கள்
இக் கோட்டைக்கு உள்ளாக என் ஆத்தாளே
எல்லோரும் பட்டார்கள்

#136
உட்கோட்டை தானும் ஊடுருவ வெந்தக்கால்
கற்கோட்டை எல்லாம் என் ஆத்தாளே
கரிக்கோட்டை ஆச்சுதடி

#137
தொண்ணூற்று அறுவரையும் சுட்டேன் துருசு அறவே
கண்ணேறு வாராமல் என் ஆத்தாளே
கருவறுக்க வந்தாண்டி

#138
ஓங்காரம் கேட்குதடி உள்ளம் எல்லாம் ஒக்குதடி
ஆங்காரம் பட்டு விழ என் ஆத்தாளே
அடியோடு அறுத்தாண்டி

#139
முன்னை வினை எல்லாம் முழுதும் அறுத்தாண்டி
தன்னை அறிந்து என் ஆத்தாளே
தான் ஒருத்தியானேண்டி

#140
என்னை எனக்கு அறிய இருவினையும் ஊடறுத்தான்
தன்னை அறியவடி என் ஆத்தாளே
தனித்திருக்கலானேண்டி

#141
இன்னம் தனியே நான் இங்கு இருக்க மாட்டேண்டி
சொன்ன சொல் திற வடிவு என் ஆத்தாளே
சுட்டான் துருசு அறவே

#142
வீட்டில் ஒருவர் இல்லை வெட்டவெளி ஆச்சுதடி
காட்டுக்குள் எரித்த நிலா என் ஆத்தாளே
கனாவாச்சு கண்டது எல்லாம்

#143
நகையாரோ கண்டவர்கள் நாட்டுக்குப் பட்டு அலவோ
பகையாரோ விண்டவர்கள் என் ஆத்தாளே
பாசம் பகையாச்சே

#144
என்னை இவன் சுட்டாண்டி எங்கே இருந்தாண்டி
கன்னி அழித்தாண்டி என் ஆத்தாளே
கற்பைக் குலைத்தாண்டி

#145
உள்ளுரையில் கள்ளனடி உபாயம் பல பேசிக்
கள்ளக் கண் கட்டியடி என் ஆத்தாளே
காலைப் பிடித்தாண்டி

#146
பற்றத்தான் பற்றுவரோ பதியில் இருந்தாண்டி
எற்றத்தான் என்றவரோ என் ஆத்தாளே
என்னை அறிந்தாண்டி

#147
கண்டாருக்கு ஒக்குமடி கசடு வித்தை அத்தனையும்
பெண்டாக வைப்பன் என்று என் ஆத்தாளே
பேசாது அளித்தாண்டி

#148
மால் கோட்டை இட்டும் என்னை வசை இலாக் காவல்வைத்து
தோல்கோட்டை இட்டடியோ என் ஆத்தாளே
தடுமாறச் சொன்னாண்டி

#149
எந்தவிதமோ அறியேன் இ மாயம் செய்தாண்டி
சந்தைக்கடைத் தெருவே என் ஆத்தாளே
தடுமாறச் சொன்னாண்டி

#150
சூலத்துக்கு ஆதியடி துன்பமுற வந்து ஊடே
பாலத்தில் ஏறியடி என் ஆத்தாளே
பங்கம் அளித்தாண்டி

#151
பண்டு இவனை நான் அறியேன் பலகாலம் வந்தாண்டி
அண்டி இருந்தாண்டி என் ஆத்தாளே
ஆகத்தில் வைத்தாண்டி

#152
பத்தினியாய் எந்நாளும் பாடறிந்து சூடாமல்
மத்தியானத்தில் என்னை என் ஆத்தாளே
வாய் சிரிக்கச் சொன்னாண்டி

#153
வாடை-தனைக் காட்டியபடி மஞ்சள் இஞ்சி வையாமல்
ஆடை குலைத்து எமையும் என் ஆத்தாளே
அலங்கோலம் செய்தாண்டி

#154
கற்புக்கரசி என்ற காரப் பேர் விட்டு அகலப்
பொற்புக் குலைத்து எமையும் என் ஆத்தாளே
போதம் இழந்தேண்டி

#155
என்ன வினை வருமோ இன்னது எனக்கு என்று அறியேன்
சொன்ன சொல் எல்லாம் என் ஆத்தாளே
சொல் அறவே வெந்ததடி

#156
கங்குல் பகல் அற்றிடத்தே காட்டிக்கொடுத்தாண்டி
பங்கம் அழித்தாண்டி என் ஆத்தாளே
பாதகனைப் பார்த்திருந்தேன்

#157
ஓதி உணர்ந்து எல்லாம் உள்ளபடி ஆச்சுதடி
சாதியில் கூட்டுவரோ என் ஆத்தாளே
சமையத்தாற்கு உள்ளாமோ

#158
என்ன குற்றம் செய்தேனோ எல்லவரும் காணாமல்
அன்னை சுற்றம் எல்லாம் என் ஆத்தாளே
அறியாரோ அம் புவியில்

#159
பொய்யான வாழ்வு எனக்குப் போதம் எனக் கண்டேண்டி
மெய்யான வாழ்வு எனக்கு என் ஆத்தாளே
வெறும் பாழாய் விட்டதடி

#160
சொல்லானைச் சொல்லுதற்குச் சொல்ல வாய் இல்லை என்று
எல்லாரும் கண்டிருந்தும் என் ஆத்தாளே
இப்போது அறியார்கள்

#161
கன்மாயம் விட்டதடி கருத்தும் அழிந்தேண்டி
உன் மாயம் இட்டவனை என் ஆத்தாளே
உரு அழியக் கண்டேண்டி

#162
என்ன செய்யப்போறேன் நான் இருந்த அதிசயத்தைக்
கன்னி இளங்கமுகு என் ஆத்தாளே
காரணமாய்க் காய்த்ததடி

#163
அந்த இடம் அத்தனையும் அருளாய் இருந்ததடி
சொந்தம் இடம் எல்லாம் என் ஆத்தாளே
சுகமாய் மணக்குதடி

#164
இந்த மணம் எங்கும் இயற்கை மணம் என்று அறிந்து
அந்தச் சுகாதீதம் என் ஆத்தாளே
அருட்கடலில் மூழ்கினேண்டி

#165
அத்தி மதி சூடும் ஆனந்தப் பேரொளிதான்
சத்தி சிவம் என்று அறிந்தே என் ஆத்தாளே
மெச்சு பலம் கொண்டேண்டி

#166
உள்ளத்து ஒளியாகவடி ஓங்காரத்து உள் இருக்கும்
கள்ளப் புலன் அறுக்க என் ஆத்தாளே
காரணமாய் வந்தாண்டி

#167
கணக்கனார் வாசலது கதவுதான் தாள் திறந்து
பிணக்காத பிள்ளை என்று என் ஆத்தாளே
பீடமிடம் பெற்றேண்டி

#168
மூன்று சுழி வழியே முன்னங்கால் தான் மடித்து
ஈன்று சுழி வழியே என் ஆத்தாளே
இசைந்திருந்த மந்திரமும்

#169
தோன்றாது தோன்றுமடி சுகதுக்கம் அற்றிடத்தே
மூன்று வழி போகவடி என் ஆத்தாளே
முதிய மனம் ஆச்சுதடி

#170
சுத்தம் அசுத்தம் அற்றே தொண்டராய்த் தொண்டருடன்
அத்தி வித்தின் போலே என் ஆத்தாளே
அதிகம் அளித்தேண்டி

#171
வித்து உருவத்தோடே விநாயகனைத் தாள் தொழுது
அத் துருவம் நீக்கியடி என் ஆத்தாளே
அறிய அளித்தேண்டி

#172
மின்னார் விளக்கொளி போல் மேவும் இதே யாம் ஆகில்
என்னாலே சொல்ல என்றால் என் ஆத்தாளே
எழும்புதில்லை என் நாவு

#173
அரூபமாய் நின்றானை அகண்ட பரிபூரணத்தைச்
சொரூபமாய் நின்றிடத்தே என் ஆத்தாளே
தோன்றிற்றுத் தோன்றுமடி

#174
அட்சரங்கள் ஆனதுவும் அகங்காரம் ஆனதுவும்
சட்சமையம் ஆனதுவும் என் ஆத்தாளே
தணலாக வெந்ததடி

#175
சமையம் சமையம் என்பார் தன்னை அறியாதார்
நிமைக்குள் உபாயம் என்பார் என் ஆத்தாளே
நிலமை அறியாதார்

#176
கோத்திரம் கோத்திரம் என்பார் குருவை அறியாதார்
தோத்திரம் செய்வோம் என்பார் என் ஆத்தாளே
சொரூபம் அறியாதார்

#177
உற்றார் நகைக்குமடி உறவர் பகைக்குமடி
பெற்றார் இணக்கமடி என் ஆத்தாளே
பேரில் பிணக்கமடி

#178
தேய்ந்த இடத்து இருக்கச் சிந்தை அறியும் மனம்
ஆய்ந்த இடம் எல்லாம் என் ஆத்தாளே
அவச மனம் வீசுதடி

#179
பேதிச்சு வாழ்ந்தது எல்லாம் பேச்சுக்கு இடமாச்சுதடி
சாதி இவன் அன்று எனவே என் ஆத்தாளே
சமையத்தார் ஏசுவரே

#180
நல்லோருடன் கூடி நாடறிய வந்தது எல்லாம்
சொல்ல வாய் உள்ளவர்கள் என் ஆத்தாளே
சொல்லி நகைப்பாரோ

#181
இன்பமுற்று வாழ்ந்ததடி என் மாயம் ஆச்சுதடி
தம்பு அறத் தள்ளிவிடில் என் ஆத்தாளே
தனம் போன மாயமடி

#182
வல்லான் வகுத்த வழி வகை அறியமாட்டாமல்
இல்லான் இருந்த வழி என் ஆத்தாளே
இடம் அறியாது ஆனேண்டி

#183
கல்லாலே வேலி கட்டி கனமேல் ஒளிவு கட்டி
மல்லால் வெளி புகட்டி என் ஆத்தாளே
மலவாசல் மாண்டதடி

#184
ஆசாபாசம் அறியாது அன்பு பொருந்தின பேர்
ஏசாரோ கண்டவர்கள் என் ஆத்தாளே
எவரும் நகையாரோ

#185
இன்பமுற்ற பேர் கடனை எல்லோரும் பேசுவரோ
துன்பமுற்ற பேர் கடனை என் ஆத்தாளே
சொல்லி நகையாரோ

#186
விண்ணை எட்டிப்பாராமல் விதத்தை உற்றுப்பாராமல்
மண்ணை எட்டிப்பார்த்து ஒருவர் என் ஆத்தாளே
வலுப் பேசி ஏசுவரோ

#187
என்னை இவன் கொண்டாண்டி இருவினையும் கண்டாண்டி
சன்னை சொல்ல விண்டாண்டி என் ஆத்தாளே
சமையம் பிணக்கு ஆனேண்டி

#188
இ நிலத்தில் கண் காண ஏகாத மானிடத்தே
கன்னி அழித்தாண்டி என் ஆத்தாளே
கற்பைக் குலைத்தாண்டி

#189
சுத்தத்தார் பார்த்திருக்கச் சூது பல பேசிப்
பத்தாவாய் வந்திருந்தான் என் ஆத்தாளே
பாசமதைத் தந்தாண்டி

#190
அண்டத்தைக் கட்டியடி ஆசை அறுத்தாண்டி
தொண்டராய்த் தொண்டருக்கு என் ஆத்தாளே
தோற்றம் ஒடுக்கமடி

#191
கற்பனையும் மூன்று விதம் காரமாய்க் கொண்டேண்டி
ஒப்பனையும் அல்லவடி என் ஆத்தாளே
ஒடுக்கம் அறியேண்டி

#192
பாருக்குள் மாயையடி பார்க்க வெள்ளை பூத்ததடி
மோருக்குள் வெண்ணெய்யைப் போல் என் ஆத்தாளே
முழங்கிக் கலந்திடவே

#193
உண்மைப் பொருளடியோ ஓடுகின்ற பேர்களுக்கு
விண்ணிலே போச்சுதடி என் ஆத்தாளே
வெகுபேரைப் பார்த்திருந்தேன்

#194
இரும்பில் உறை நீர் போல் எனை விழுங்கிக்கொண்டாண்டி
அரும்பில் உறை வாசமும் போல் என் ஆத்தாளே
அன்றே இருந்தாண்டி

#195
அக்கினி கற்பூரத்தை அற விழுங்கிக்கொண்டது போல்
மக்கனப்பட்டு உள்ளே என் ஆத்தாளே
மருவி இருந்தாண்டி

#196
கங்குகரை இல்லாண்டி கரை காணாக் கப்பலடி
எங்கும் அளவில்லாண்டி என் ஆத்தாளே
ஏகமாய் நின்றாண்டி

#197
தீவகம் போல் என்னைச் சேர்ந்த பர சின்மயம் காண்
பாவகம் ஒன்று இல்லாண்டி என் ஆத்தாளே
பார்த்திட எல்லாம் பரம் காண்

#198
உள்ளுக்குள் உள்ளாண்டி ஊரும் இல்லான் பேரும் இல்லான்
கள்ளப் புலன் அறுக்க என் ஆத்தாளே
காரணமாய் வந்தாண்டி

#199
அப் பிறப்புக்கு எல்லாம் அருளாய் அமர்ந்தான் காண்
மெய்ப்பொருட்கு மெய்ப்பொருளாய் என் ஆத்தாளே
மேவி இருந்தாண்டி

#200
நீர் ஒளி போல் எங்கும் நிறைந்த நிராமயம் காண்
பார் ஒளி போல் எங்கும் என் ஆத்தாளே
பரந்த பராபரன் காண்

#201
நூலால் உணர்வு அறியேன் நுண் இமையை யான் அறியேன்
பாலாறு சர்க்கரை தேன் என் ஆத்தாளே
பார்த்து அறிந்த பூரணன் காண்
**

4 ஆதிநாதர் என்ற வேதாந்தச் சித்தர் பாடல்

** கண்ணிகள்

#1
ஆதி மத்யாந்தமதைக் கிளியே
அன்பாய் அறிவதற்குச்
சோதிச் சுடர் ஒளியைக் கிளியே
தோத்திரம்செய்துகொள்ளே

#2
வாசாம கோசரத்தின் கிளியே
மார்க்கம் அறிந்துகொண்டு
நேசாவனுபவத்தில் கிளியே
நின்று தெளிவாயே

#3
அசல மூலமதில் கிளியே
அந்தம் அறிவாயோ
விசனம் அற்ற இடம் கிளியே
மேவித் தெளிந்துகொள்ளே

#4
சுத்த பிரமத்தில் ஏகில் கிளியே
தோன்றிய சத்தி-தன்னில்
வித்தாரம் உண்டான கிளியே
விபரம் அறிந்துகொள்ளே கிளியே

#5
சத்தாதி வாக்காதி கிளியே
தனுகரணங்கட்கு எல்லாம்
வித்தான மூலமதைக் கிளியே
மேவித் தெளிந்துகொள்ளே

#6
சத்தியில் உண்டான கிளியே
சதாசிவமானது என்று
நித்தியம் நீ அறிந்து கிளியே
நின்று தெளிவாயே

#7
அச் சிவமானதிலே கிளியே
அண்ட பிண்டங்கள் எல்லாம்
உச்சிதமாய் உதித்தே கிளியே
உண்மை அறிந்துகொள்ளே

#8
நாலு வகை யோனி கிளியே
ஏழு வகைத் தோற்றத்
தாலும் மகரசரம் கிளியே
தத்துவம் உற்றதடி

#9
அகாரம் உகாரம் ரெண்டும் கிளியே
யகாரம் உருவாச்சு
சிகாரம் வந்தவிதம் கிளியே
தேறித் தெளிவாயே

#10
சத்துச் சித்தானந்தம் கிளியே
தத்துவம் சொல்லுகிறேன்
நித்தியானந்தமதை கிளியே
வித்தாரம்செய்யுகிறேன்

#11
சாமி அருள் வேணும் கிளியே
சாதனை நால் வேணும்
வாமி தயை வேணும் கிளியே
வத்தவனாக வேணும்

#12
அஞ்சு புஞ்சகோசம் கிளியே
ஆராய்ந்து பார்க்க வேணும்
நெஞ்சம் தெளிய வேணும் கிளியே
நீயே நான் ஆக வேணும்

#13
ஆசாபாசங்களையே கிளியே
லேசமும் எண்ணாதே
வாசனை மூன்றினாலே கிளியே
மோசமும் போகாதே

#14
மானாபிமானம் அற்று கிளியே
தான் என்று அகமும் அற்று
நானப் பிரபஞ்சம் அற்று கிளியே
நாதமயத்தைப் பற்று

#15
பத்தரைமாற்றுத் தங்கம் கிளியே
சுத்த வெளி ஆகும்
எத்திசை பார்த்தாலும் கிளியே
தத்துவமாய் இருக்கும்

#16
மூலாதாரம் உண்டு கிளியே
முக்கோண வட்டம் உண்டு
வாலை கணேசன் உண்டு கிளியே
வல்லபை சத்தி உண்டு

#17
சுவாதிட்டானம் உண்டு கிளியே
சுத்த பிரமாவும் உண்டு
உவாதினி வாதிக்கு எல்லாம் கிளியே
உற்றவர் கண்டுகொள்ளே

#18
மேலே மணிபூரகம் கிளியே
விட்டுணுக்கு உற்ற இடம்
காலாதீதத்துக்கும் கிளியே
கருத்தர் அவர்தாமே

#19
பாரு மனாகிதத்தில் கிளியே
பார்வதி நாதர் அங்கே
சேரும் தலம் இது என்று கிளியே
தெரிசித்துக்கொள்வாயே

#20
கண்டம் விசுத்தி அல்லோ
கஞ்சம் பதினாறு கிளியே
அண்ட பிண்டங்கள் எல்லாம் கிளியே
ஆஞ்ஞை மகேசனுக்கு

#21
இரண்டு கண் நடுவே கிளியே
இருக்கும் மயேசுரனை
திரண்ட சிந்தையினால் கிளியே
தேறித் தெளிந்துகொள்ளே

#22
ஆயிரத்தெட்டு இதழில் கிளியே
அமர்ந்த சதாசிவத்தை
நேயமதாகவேதான் கிளியே
நிதம் பணிந்து ஏற்றிக்கொள்ளே

#23
ஈதோர் குணம் ஆச்சு கிளியே
இரண்டாம் குணம்-தனையும்
மூதோர் மொழி எனவே கிளியே
முற்றிலும் எண்ணுவையே

#24
சாதனம் நாலு வகை கிளியே
சற்று நிதானமாய்
போத மிகுதியினால் கிளியே
புத்தி என்றே உணர்வாய்

#25
சமாதி ஆறு குணம் கிளியே
சாமா வகையாம் அலவே
உமாமகேசனுக்கே கிளியே
உற்றது என்றே தெளிவாய்

#26
உற்ற சமம்தானும் கிளியே
ஒன்றவைக்கும் பின்னும்
மற்று உள தம குணத்தை கிளியே
மாற்றல் அரிது அலவே

#27
விடல் சகித்தல்-தனை கிளியே
மேன்மையதாகக்கொண்டு
தொடர் சமாதானம் கிளியே
தொந்தம் நமக்காமே

#28
சிரத்தை எப்பொருட்டும் கிளியே
தீவிரம் ஆகுமதே
பரத்தைதான் அடைய கிளியே
பற்றொன்றும் இல்லை கண்டாய்

#29
பத்தியை விட்டுவிட்டுக் கிளியே
பாவனையைக் கடந்து
அத்துவிதானத்தைக் கிளியே
அனுபவித்து உய்வாயே

#30
பெண்ணாசை பொன்னாசை கிளியே
பூமியின் மீது ஆசை
மண்ணாசை எண்ணாதே கிளியே
வாசி என்னால் அறியே

#31
தேகம் தேகி ரெண்டு கிளியே
தேகம் பொய் தேகி மெய்யே
மோகாந்தம் விட்டாக்கால் கிளியே
முத்தியடைவாயே

#32
பாவ அபானம் அற்று கிளியே
பரத்தினுடன் பொருந்திச்
சுவானுபவம்-தனிலே கிளியே
சொக்கி நீ வாழ்வாயே
**

5 இடைக்காட்டுச் சித்தர் பாடல்

** காப்பு

#0
ஆதி அந்தம் இல்லாதவன் ஆதியைத்
தீதுறும் பவம் தீப்படு பஞ்சு போல்
மோதுறும்படி முப்பொறி ஒத்துறக்
காதலாகக் கருத்தில் கருதுவோம்
** தாண்டவராயக்கோனார் கூற்று

#1
எல்லா உலகமும் எல்லா உயிர்களும் எல்லாப் பொருள்களும் எண்ணரிய
வல்லாளன் ஆதி பரமசிவனது சொல்லால் ஆகுமே கோனாரே

#2
வான் இயல் போல் வயங்கும் பிரமமே சூனியம் என்று அறிந்து ஏத்தாக்கால்
ஊன் இயல் ஆவிக்கு ஒரு கதி இல்லை என்று ஓர்ந்துகொள்ளுவீர் நீர் கோனாரே

#3
முத்திக்கு வித்தான மூர்த்தியைத் தொழுது முத்திக்கு உறுதிகள் செய்யாக்கால்
சித்தியும் பத்தியும் சத்தியும் முத்தியும் சேரா ஆகுமே கோனாரே

#4
தொல்லைப் பிறவியின் தொந்தமுற்று அறவே சோம்பல் அற்றுத் தவம்செய்யாக்கால்
எல்லை_இல் கடவுள் எய்தும் பதம் உமக்கு இல்லை என்று எண்ணுவீர் கோனாரே

#5
ஆரண மூலத்தை அன்புடனே பரமானந்தக் கோலத்தைப் பண்புடனே
பூரணமாகவே சிந்தித்து மெய்ஞ்ஞானப் போதத்தைச் சார்ந்திரும் கோனாரே

#6
காலாகாலம் கடந்திடும் சோதியைக் கற்பனை கடந்த அற்புதத்தை
நூலால் பெரியவர் சொன்ன நுண்பொருளை நோக்கத்தில் காண்பது கோனாரே

#7
சொல்ல அரும் சகல நிட்களம் ஆனதைச் சொல்லினால் சொல்லாமல் கோனாரே
அல்லும் பகலும் அகத்தில் இருத்திடில் அந்தகன் கிட்டுமோ கோனாரே

#8
சூரியன் வாள் பட்ட துய்ய பனி கெடும் தோற்றம் போல் வெவ்வினை தூள்படவே
நாரி இடப்பாகன் தாள் நெஞ்சில் போற்றியே நற்கதி சேர்ந்திடும் கோனாரே

#9
மும்மலம் நீக்கிட முப்பொறிக்கு எட்டாத முப்பாழ் கிடந்ததாம் அப் பாழைச்
செம்மறி ஓட்டிய வேலை அமைத்தும் சிந்தையில் வைப்பீரே கோனாரே

#10
பஞ்ச விதமாய்ச் சஞ்சலம் பறக்கப் பற்றற்ற நின்றதைப் பற்றி அன்பாய்
நெஞ்சத்து இருத்தி இரவு பகலுமே நேசித்துக் கொள்ளுவீர் கோனாரே
** நாராயணக்கோனார் கூற்று

#11
சீர் ஆர் சிவக்கொழுந்தைத் தெள்ளமுதைச் செந்தேனைப்
பார் ஆதி வான் பொருளைப் பஞ்ச உருவான ஒன்றை
பேரான விண் ஒளியைப் பேரின்ப வாரிதியை
நேராக எந்நாளும் நெஞ்சு இருத்தி வாழ்வேனே

#12
கண்ணுள் கருமணியைக் கற்பகத்தைக் காஞ்சனத்தைப்
பெண் உருவப் பாதியனைப் பேச அரிய முப்பொருளை
விண்ணின் அமுதை விளக்கு ஒளியை வெம் கதிரைத்
தண் அளியை உள்ளில் வைத்து சாரூபம் சாருவனே

#13
மனம் என்னும் மாடு அடங்கில் தாண்டவக்கோனே முத்தி
வாய்த்தது என்று எண்ணேடா தாண்டவக்கோனே

#14
சினம் என்னும் பாம்பு இறந்தால் தாண்டவக்கோனே யாவும்
சித்தி என்றே நினையேடா தாண்டவக்கோனே

#15
ஆசை எனும் பசு மாளின் தாண்டவக்கோனே இந்த
அண்டம் எல்லாம் கண்டு அறிவாய் தாண்டவக்கோனே

#16
ஓசையுள் அடங்கும் முன்னம் தாண்டவக்கோனே மூல
ஓங்காரம் கண்டு அறி நீ தாண்டவக்கோனே

#17
மூலப் பகுதி அறத் தாண்டவக்கோனே உள்ளம்
மூளைத்த வேர் பிடுங்கேடா தாண்டவக்கோனே

#18
சாலக் கடத்து இயல்பு தாண்டவக்கோனே மலச்
சால் என்றே தேர்ந்து அறி நீ தாண்டவக்கோனே

#19
பற்றே பிறப்பு உண்டாக்கும் தாண்டவக்கோனே அதைப்
பற்றாது அறுத்துவிடு தாண்டவக்கோனே

#20
சற்றே பிரமத்து இச்சை தாண்டவக்கோனே உன்னுள்
சலியாமல் வைக்க வேண்டும் தாண்டவக்கோனே

#21
அவித்த வித்து முளையாதே தாண்டவக்கோனே பத்தி
அற்றவர் கதியடையார் தாண்டவக்கோனே

#22
செவி-தனில் கேளாத மறை தாண்டவக்கோனே குரு
செப்பில் வெளியாம் அல்லவோ தாண்டவக்கோனே

#23
மாடும் மனைகளும் மக்களும் சுற்றமும் வான் பொருளும்
வீடும் மணிகளும் வெண்பொன்னும் செம்பொன்னும் வெண்கலமும்
காடும் கரைகளும் கல்லாம் பணியும் கரி பரியும்
தேடும் பல பண்டம் நில்லா சிவகதி சேர்-மின்களே

#24
போகம் போம் போக்கியம் போம் போசனம் போம் புன்மை போம்
மோகம் போம் மூர்க்கம் போம் மோசம் போம் தாகம் போம்
வேத முதல் ஆகமங்கள் மேலானது என்று பல்கால்
ஓது பிரமத்து உற்றக்கால்
** தாண்டவராயக்கோனார் கூற்று

#250
தாந்திமித்திமி தந்தக் கோனாரே
தீந்திமித்திமி திந்தக் கோனாரே
ஆநந்தக் கோனாரே அருள்
ஆநந்தக் கோனாரே

#25
ஆயிரத்தெட்டு வட்டமும் கண்டேன் அந்த வட்டத்துள்ளே நின்றதும் கண்டேன்
மா இரு ஞாலத்து நூற்றெட்டும் பார்த்தேன் மந்த மனத்துறும் சந்தேகம் தீர்ந்தேன்

#26
அந்தக்கரணம் எனச் சொன்னால் ஆட்டையும் அஞ்ஞானம் என்னும் அடர்ந்தவன் காட்டையும்
சந்தத் தவம் என்னும் வாளினால் வெட்டினேன் சாவாது இருந்திடக் கோட்டையும் கட்டினேன்

#27
மெய் வாய் கண் மூக்குச் செவி எனும் ஐந்து ஆட்டை வீறும் சுவை ஒளி ஊறு ஓசையாம் காட்டை
எய்யாமல் ஓட்டினேன் வாட்டினேன் ஆட்டினேன் ஏக வெளிக்குள்ளே யோக வெளிக்குள்ளே

#28
பற்று இரண்டும் அறப் பண்புற்றேன் நண்புற்றேன் பாலையும் உட்கொண்டேன் மேலை ஆங்கண் கண்டேன்
சிற்றின்பம் நீக்கினேன் மற்ற இன்பம் நோக்கினேன் சிற்பரம் சேர்ந்திட்டேன் தற்பரம் சார்ந்திட்டேன்

#29
அண்ணாக்கை ஊடே அடைத்தே அமுது உண்ணேன் அந்தரத் தரத்தை அப்பொழுதே எண்ணேன்
விண் ஆளும் மொழியை மேவிப் பூசைபண்ணேன் மெய்ஞ்ஞானம் ஒன்று அன்றி வேறே ஒன்றை நண்ணேன்

#30
மண்ணாகி பூதங்கள் ஐந்தையும் கண்டேனே மாயா விகாரங்கள் யாவையும் விண்டேனே
விண் ஆளி மொழியை மெய்யினுள் கொண்டேனே மேதினி வாழ்வினை மேலாக வேண்டேனே

#31
வாக்காதி ஐந்தையும் வாகாய்த் தெரிந்தேனே மாயை சம்பந்தங்கள் ஐந்தும் பிரிந்தேனே
நோக்க அரு யோகங்கள் ஐந்தும் புரிந்தேனே நுவலும் மற்று ஐந்து யோக நோக்கம் பரிந்தேனே

#32
ஆறு ஆதாரத் தெய்வங்களை நாடு அவர்க்கும் மேலான ஆதியைத் தேடு
கூறான வட்ட ஆனந்தத்தில் கூடு கோசம் ஐந்தும் கண்டு குன்று ஏறி ஆடு
** நாராயணக் கோனார் கூற்று

#33
ஆதி பகவனையே பசுவே அன்பாய் நினைப்பாயேல்
சோதி பரகதிதான் பசுவே சொந்தமது ஆகாதோ

#34
எங்கும் நிறை பொருளைப் பசுவே எண்ணிப் பணிவாயேல் பசுவே
தங்கும் பரகதியில் சந்ததம் சாருவையே

#35
அல்லும் பகலும் நிதம் பசுவே ஆதி பதம் தேடில்
புல்லும் மோட்ச நிலை பூரணம் காண்பாயே பசுவே

#36
ஒன்றைப் பிடித்தோர்க்கே பசுவே உண்மை வசப்படுமே
நின்ற நிலை-தனிலே பசுவே நேர்மை அறிவாயே

#37
எல்லாம் இருந்தாலும் பசுவே ஈசர் அருள் இலையேல்
இல்லாத தன்மை என்றே பசுவே எண்ணிப் பணிவாயே

#38
தேவன் உதவி இன்றிப் பசுவே தேர்ந்திடில் வேறொன்று இல்லை
ஆவிக்கும் ஆவியதாம் பசுவே அத்தன் திருவடியே

#39
தாயினும் அன்பன் அன்றோ பசுவே சத்திக்குள்ளானவன்தான்
நேயம் உடையவர்-பால் பசுவே நீங்காது இருப்பானே

#40
முத்திக்கு வித்தானோன் பசுவே மூலப் பொருளானோன்
சத்திக்கு உறவானோன் பசுவே தன்னைத் துதிப்பாயே

#41
ஐயன் திருப்பாதம் பசுவே அன்புற்று நீ பணிந்தால்
வெய்ய வினைகள் எல்லாம் பசுவே விட்டோடும் கண்டாயே

#42
சந்திரசேகரன் தாள் பசுவே தாழ்ந்து பணிவாயேல்
இந்திரன் மால் முதலோர் பசுவே ஏவல் புரிவாரே

#43
கட்புலன் காணவொண்ணாப் பசுவே கர்த்தன் அடி இணையை
உட்புலன் கொண்டு ஏத்திப் பசுவே உன்னதம் எய்வாயே

#44
சுட்டியும் காணவொண்ணாப் பசுவே சூனியமான வத்தை
ஒட்டிப் பிடிப்பாயேல் பசுவே உன்னை நிகர்ப்பவர் யார்

#45
தன் மனம்-தன்னாலே பசுவே தாணுவைச் சாராதார்
வன் மரம் ஒப்பாக பசுவே வையத்து உறைவாரே

#46
சொல் என்னும் நற்பொருளாம் பசுவே சோதியைப் போற்றாக்கால்
இல் என்று முத்தி நிலை பசுவே எப்பொருளும் சொலுமே
** பலரொடு கிளத்தல்

#47
கண்ணுள் மணியைக் கருதிய பேரொளியை
விண்ணின் மணியை விளக்கு ஒளியைப் போற்றீரே

#48
மனம் வாக்குக் காயம் எனும் வாய்த்த பொறிக்கு எட்டாத
தினகரனை நெஞ்சமதில் சேவித்துப் போற்றீரே

#49
காலம் மூன்றும் கடந்த கதிர் ஒளியை உள்ளத்தால்
சாலம் இன்றிப் பற்றிச் சலிப்பு அறவே போற்றீரே

#50
பாலில் சுவை போலும் பழத்தில் மதுப் போலும்
நூலில் பொருள் போலும் நுண்பொருளைப் போற்றீரே

#51
மூவர் முதலை முக்கனியைச் சர்க்கரையைத்
தேவர் பொருளைத் தெள்ளமுதைப் போற்றீரே

#52
தூய மறைப்பொருளைச் சுக வாரிதி அமிர்தை
நேயமுடன் அருள் நிலை பெறவே போற்றீரே

#53
சராசரத்தைத் தந்த தனிவான மூலம் என்னும்
பராபரத்தைப் பற்றிப் பவம் அறவே போற்றீரே

#54
மண் ஆதி பூதம் முதல் வகுத்ததொரு வான் பொருளைக்
கண்ணாரக் காண்க கருத்து இசைந்து போற்றீரே

#55
பொய்ப்பொருளை விட்டுப் புலம் அறியவொண்ணாத
மெய்ப்பொருளை நாளும் விருப்புற்றுப் போற்றீரே

#56
எள்ளில் தைலம் போல எங்கும் நிறை பொருளை
உள்ளில் துதித்தே உணர்வடைந்து போற்றீரே
** நெஞ்சொடு கிளத்தல்

#57
பூமி எல்லாம் ஓர் குடைக் கீழ்ப் பொருந்த அரசாளுதற்குக்
காமியம் வைத்தால் உனக்குக் கதி உளதோ கல்மனமே

#58
பெண்ணாசையைக் கொண்டு பேணித் திரிந்தக்கால்
விண்ணாசை வைக்க விதி இலையே கல்மனமே

#59
மேயும் பொறி கடமை மேலிடவொட்டார்க்கு வினை
தேயும் என்றே நல்வழியில் செல்லு நீ கல்மனமே

#60
பொன்னிச்சை கொண்டு பூமி முற்றும் திரிந்தால்
மன் இச்சை நோக்கம் வாய்க்குமோ கல்மனமே

#61
பொய்யான கல்வி கற்றுப் பொருள் மயக்கம் கொள்ளாமல்
மெய்யான ஞானக் கல்வி விரும்புவாய் கல்மனமே

#62
பேய்க் குரங்கு போலப் பேருலகில் இச்சைவைத்து
நாய் நரிகள் போல் அலைந்தால் நன்மை உண்டோ கல்மனமே

#63
இரும்பை இழுக்கும் காந்தத்து இயற்கை போல் பல் பொருளை
விரும்பினதால் அவை நிலையோ விளம்புவாய் கல்மனமே

#64
கற்ப நிலையால் அலவோ கற்பகாலம் கடத்தல்
சொற்ப நிலை மற்ற நிலை சூட்சம் காண் கல்மனமே

#65
தேகம் இழப்பதற்குச் செபம்செய்து என் தவம்செய்து என்
யோகம்மட்டும் செய்தால் என் யோசிப்பாய் கல்மனமே

#66
சாகாது இருப்பதற்குத் தான் கற்ற கல்வி அன்றோ
வாகான மெய்க் கல்வி வகுத்து அறி நீ கல்மனமே
** அறிவொடு கிளத்தல்

#67
எல்லாப் பொருள்களையும் எண்ணப்படி படைத்த
வல்லாளன்-தன்னை வகுத்து அறி நீ புல்லறிவே

#68
கட்புலனுக்கு எவ்வளவும் காணாது இருந்து எங்கும்
உட்புலனாய் நின்ற ஒன்றை உய்த்து அறி நீ புல்லறிவே

#69
விழித்திருக்கும் வேளையிலே விரைந்து உறக்கம் உண்டாகும்
செழித்து இலங்கும் ஆன்மாவைத் தேர்ந்து அறி நீ புல்லறிவே

#70
மெய்யில் ஒரு மெய்யாகி மேலாகிக் காலாகிப்
பொய்யில் ஒரு பொய்யாகும் புலம் அறி நீ புல்லறிவே

#71
ஆத்துமத்தின் கூறான அவயவப் பேய் உன்னுடனே
கூத்துப் புரிகின்ற கோள் அறிவாய் புல்லறிவே

#72
இருட்டறைக்கும் நல் விளக்காய் இருக்கும் உன்றன் வல்லமையை
அருள் துறையில் நிறுத்தி விளக்கு ஆகு நீ புல்லறிவே

#73
நல்ல வழியில் சென்று நல் பதவி எய்தாமல்
கொல் வழியில் சென்று குறுகுவது ஏன் புல்லறிவே

#74
கைவிளக்குக் கொண்டு கடலில் வீழ்வார் போல
மெய்விளக்கு உன்னுள் இருக்க வீழ்குவது ஏன் புல்லறிவே

#75
வாசிக்கு மேலான வான் கதி உன்னுள் இருக்க
யோசிக்கும் மேல்கதிதான் உனக்கு அரிதோ புல்லறிவே

#76
அன்னையைப் போல் எவ்வுயிரும் அன்புடனே காத்துவரும்
முன்னவனைக் கண்டு முத்தியடை புல்லறிவே
** சித்தத்தொடு கிளத்தல்

#77
அஞ்ஞானம் போயிற்று என்று தும்பீ பற பரமானந்தம் கண்டோம் என்று தும்பீ பற
மெய்ஞ்ஞானம் வாய்த்தது என்று தும்பீ பற மலை மேல் ஏறிக்கொண்டோம் என்று தும்பீ பற

#78
அல்லல் வலை இல்லை என்றே தும்பீ பற நிறை ஆணவங்கள் அற்றோம் என்றே தும்பீ பற
தொல்லை வினை நீங்கிற்று என்றே தும்பீ பற பரஞ்சோதியைக் கண்டோம் எனத் தும்பீ பற

#79
ஐம்பொறி அடங்கினவே தும்பீ பற நிறை அருவே பொருளாம் எனத் தும்பீ பற
செம்பொருள்கள் வாய்த்தனவே தும்பீ பற ஒரு தெய்வீகம் கண்டோம் என்றே தும்பீ பற

#80
மூவாசை விட்டோம் என்றே தும்பீ பற பர முத்தி நிலை சித்தி என்றே தும்பீ பற
தேவாசை வைத்தோம் என்று தும்பீ பற இந்தச் செகத்தை ஒழித்தோம் என்று தும்பீ பற

#81
பாழ்வெளியை நோக்கியே தும்பீ பற மாயைப் பற்றற்றோம் என்றே நீ தும்பீ பற
வாழ்விடம் என்று எய்தோம் தும்பீ பற நிறை வள்ளல் நிலை சார்ந்தோமே தும்பீ பற

#82
எப்பொருளும் கனவு என்றே தும்பீ பற உலகு எல்லாம் அழியும் என்றே தும்பீ பற
அப்பில் எழுத்து உடல் என்றே தும்பீ பற என்றும் அழிவில்லாதது ஆதி என்று தும்பீ பற
** குயிலொடு கிளத்தல்

#83
கரணங்கள் ஒரு நான்கும் அடங்கினவே கெட்ட காமம் முதல் ஓர் ஆறும் ஒடுங்கினவே
சரணங்கள் ஒரு நான்கும் கண்டனம் என்றே நிறை சந்தோஷமாகவே கூவு குயிலே

#84
உலகம் ஒக்காளமாம் என்று ஓது குயிலே எங்கள் உத்தமனைக் காண்ப அரிது என்று ஓது குயிலே
பல மதம் பொய்மையே என்று ஓது குயிலே எழு பவம் அகன்றிட்டோம் நாம் என்று ஓது குயிலே

#85
சாதனங்கள் செய்தவர்கள் சாவார் குயிலே எல்லாத் தத்துவங்கள் தேர்ந்தவர்கள் வேவார் குயிலே
மா தவங்கள் போலும் பலன் வாயா குயிலே மூல மந்திரங்கள்தான் மகிமை வாய்க்கும் குயிலே

#86
எட்டிரண்டு அறிந்தோர்க்கு இடர் இல்லை குயிலே மனம் ஏகமாய் நிற்கில் கதி எய்தும் குயிலே
நட்டணையைச் சார்ந்து அறிந்துகொள்ளு குயிலே ஆதி நாயகனை நினைவில் வைத்து ஓது குயிலே
** மயிலொடு கிளத்தல்

#87
ஆடு மயிலே நடம் ஆடு மயிலே எங்கள் ஆதி அணிசேடனைக் கண்டு ஆடு மயிலே
கூடு போகும் முன்னம் கதி கொள்ளு மயிலே என்றும் குறையாமல் மோன நெறி கொள்ளு மயிலே

#88
இல்லறமே அல்லலாம் என்று ஆடு மயிலே பத்தி இல்லவர்க்கு முத்தி சித்தி இல்லை மயிலே
நல்லறமே துறவறம் காணு மயிலே சுத்த நாதாந்த வெட்டவெளி நாடு மயிலே

#89
கல் தூணைப் போல் மனத்தைக் காட்டு மயிலே வரும் காலனையும் தூரத்தில் ஓட்டு மயிலே
பற்று ஊடுருவவே பாயு மயிலே அகப் பற்றுச் சற்றும் இல்லாமல்பண்ணு மயிலே
** அன்னத்தொடு கிளத்தல்

#90
சிறு தவளை தான் கலக்கில் சித்திரத்தின் நிழல் மறையும்
மறு வானைத்தான் கலக்கின் மதி மயங்கும் மட அனமே

#91
காற்றின் மரம் முறியும் காட்சியைப் போல் நல் அறிவு
தூற்றிவிடில் அஞ்ஞானம் தூரப்போம் மட அனமே

#92
அக்கினியால் பஞ்சு பொதி அழிந்திட்டவாறே போல்
பக்குவ நல் அறிவாலே பாவம் போம் மட அனமே

#93
குளவி புழுவைக் கொணர்ந்து கூட்டில் உருப்படுத்தல் போல்
வளமுடைய வன்மனத்தை வசப்படுத்து மட அனமே

#94
அப்புடனே உப்புச் சேர்ந்து அளவு சரியானது போல்
ஒப்புறவே பிரமமுடன் ஒன்றி நில்லு மட அனமே

#95
காய்ந்த இரும்பு நிறம் காட்டுதல் போல் ஆத்துமத்தை
வாய்ந்து இலங்கச்செய்து வளம் பெறு நீ மட அனமே
** புல்லாங்குழலூதல்

#96
தொல்லைப் பிறவி தொலைக்கார்க்கு முத்திதான்
இல்லை என்று ஊது குழல் கோனே
இல்லை என்று ஊது குழல்

#97
இந்திரபோகங்கள் எய்தினும் தொல்லை என்று
அந்தமாய் ஊது குழல் கோனே
அந்தமாய் ஊது குழல்

#98
மோன நிலையினில் முத்தி உண்டாம் என்றே
கானமாய் ஊது குழல் கோனே
கானமாய் ஊது குழல்

#99
நாய் போல் பொறிகளை நாநாவிதம் விட்டோர்
பேயர் என்று ஊது குழல் கோனே
பேயர் என்று ஊது குழல்

#100
ஓடித் திரிவோர்க்கு உணர்வு கிட்டும்படி
சாடியே ஊது குழல் கோனே
சாடியே ஊது குழல்

#101
ஆட்டுக் கூட்டங்களை அண்டும் புலிகளை
ஓட்டியே ஊது குழல் கோனே
ஓட்டியே ஊது குழல்

#102
மட்டிக் குணமுள்ள மாரீச நாய்களைச்
கட்டிவைத்து ஊது குழல் கோனே
கட்டிவைத்து ஊது குழல்

#103
கட்டாத நாய் எல்லாம் காவலுக்கு எப்போதும்
கிட்டா என்று ஊது குழல் கோனே
கிட்டா என்று ஊது குழல்

#104
பெட்டியில் பாம்பு எனப் பேய் மனம் அடங்க
ஒட்டியே ஊது குழல் கோனே
ஒட்டியே ஊது குழல்

#105
எனது என்றும் யான் என்றும் இல்லாது இருக்கவே
தனதாக ஊது குழல் கோனே
தனதாக ஊது குழல்

#106
அற்ற இடம் ஒன்றே அற்றதோடு உற்றதைக்
கற்றது என்று ஊது குழல் கோனே
கற்றது என்று ஊது குழல்
** பால் கறத்தல்

#107
சாவாது இருந்திடப் பால் கற சிரம்-தன்னில் இருந்திடும் பால் கற
வேவாது இருந்திடப் பால் கற வெறு வெட்டவெளிக்குள்ளே பால் கற

#108
தோயாது இருந்திடும் பால் கற முனைத் தொல்லை வினை அறப் பால் கற
வாயால் உமிழ்ந்திடும் பால் கற வெறு வயிறார உண்டிடப் பால் கற

#109
நாறாது இருந்திடும் பால் கற நெடுநாளும் இருந்திடப் பால் கற
மாறாது ஒழுகிடும் பால் கற தலை மண்டையில் வளரும் பால் கற

#110
உலகம் வெறுத்திடும் பால் கற மிக ஒக்காளம் ஆகிய பால் கற
கலசத்தினுள் விழப் பால் கற நிறை கண்டத்தின் உள் விழப் பால் கற

#111
ஏப்பம் விடாமலே பால் கற வரும் ஏமன் விலக்கவே பால் கற
தீப்பொறி ஓய்ந்திடப் பால் கற பரசிவத்துடன் சாரவே பால் கற

#112
அண்ணாவின் மேல் வரும் பால் கற பேரண்டத்தில் ஊறிடும் பால் கற
விண் நாட்டில் இல்லாத பால் கற தொல்லை வேதனை கெடவே பால் கற
** கிடை கட்டுதல்

#113
இருவினையாம் மாடுகளை ஏகவிடு கோனே உன்
அடங்கும் மன மாடு ஒன்றை அடக்கிவிடு கோனே

#114
சாற்ற அரிய நைட்டிகரே தற்பரத்தைச் சார்வார் நாளும்
தவம் அவமாக் கழிப்பவரே சலனமதில் வருவார்

#115
அகங்கார மாடுகள் மூன்று அகற்றிவிடு கோனே நாளும்
அவத்தை எனும் மாடதை நீ அடக்கிவிடு கோனே

#116
ஒருமலத்தன் எனும் மாட்டை ஒதுக்கிக் கட்டு கோனே உடன்
உறையும் இருமலம்-தனையும் ஒட்டிக் கட்டு கோனே

#117
மும்மலத்தன் எனும் மாட்டை முறுக்கிக்கட்டுக் கோனே மிக
முக்கால நேர்மை எல்லாம் முன்பு அறிவாய் கோனே

#118
இந்திரியத் திரயங்களை இறுக்கிவிடு கோனே என்றும்
இல்லை என்றே மரணம் குழல் எடுத்து ஊது கோனே

#119
உபாதி எனும் மூன்று ஆட்டை ஓட்டிவிடு கோனே உனக்கு
உள் இருக்குங் கள்ளம் எல்லாம் ஓடிப்போம் கோனே

#120
முக்காய மாடுகளை முன்னம் கட்டு கோனே இனி
மோசம் இல்லை நாசம் இல்லை முத்தி உண்டாம் கோனே

#121
கன்ம பல மாடுகளைக் கடைக் கட்டு கோனே மற்றக்
கன்மத் திரயப் பசுவைக் கடையில் கட்டு கோனே

#122
காரணக் கோ மூன்றனையும் கால் பிணிப்பாய் கோனே நல்ல
கைவசமாம் சாதனங்கள் கடைப்பிடிப்பாய் கோனே

#123
பிரமாந்தரத்தில் பேரொளி காண் எங்கள் கோனே வாய்
பேசாது இருந்து பெருநிட்டை சார் எங்கள் கோனே

#124
சிரமதில் கமலச் சேவை தெரிந்து எங்கள் கோனே முத்தி
சித்திக்கும் தந்திரம் சித்தத்து அறி எங்கள் கோனே

#125
விண் நாடி வத்துவை மெய்யறிவில் காணும் கோனே என்றும்
மெய்யே மெய்யில் கொண்டு மெய்யறிவில் செல்லும் கோனே

#126
கண்ணாடியின் உள்ளே கண்டு பார்த்துக் கொள்ளு கோனே ஞானக்
கண் அன்றிக் கண்ணாடி காணவொண்ணாது எங்கள் கோனே

#127
சூனியமானதைச் சுட்டுவார் எங்கு உண்டு கோனே புத்தி
சூக்குமமே அதைச் சுட்டும் என்று எண்ணம்கொள் கோனே

#128
நித்தியமானது நேர்ப்படிலே நிலை கோனே என்றும்
நிற்கும் என்றே கண்டு நிச்சயம் காண் எங்கள் கோனே

#129
சத்தியும் பரமும் தன்னுள் கலந்தே கோனே நிட்டை
சாதிக்கில் இரண்டும் தன்னுள்ளே காணலாம் கோனே

#130
மூகை போல் இருந்து மோனத்தைச் சாதி எம் கோனே பர
மூல நிலை கண்டு முட்டுப் பிறப்பு அறு கோனே
**

6. இராமதேவர் – பூசாவிதி


#1
ஆதி என்ற மணிவிளக்கை அறிய வேணும் அகண்ட பரிபூரணத்தைக் காண வேணும்
சோதி என்ற துய்ய வெளி மார்க்கம் எல்லாம் சுகம் பெறவே மனோன்மணி என் ஆத்தாள்-தன்னை
நீதி என்ற பரஞ்சோதி ஆயி பாதம் நிற்குணத்தில் நின்ற நிலை யாரும் காணார்
வேதி என்ற வேதாந்தத்துள்ளே நின்று விளங்கவும் பூசை இது வீண்போகாதே

#2
போகாமல் நின்ற தேர் ஐயா நீதான் பூரணத்தின் ஆன கலை ஐந்தும் பெற்றே
ஆகாமல் ஆனந்தவல்லியாலே அடி முடியில் நடு வாசி ஆறுக்குள்ளே
வாகாமல் வாலையுடை மூலத்தாலே வழி தோன்றும் மூன்றெழுத்தை உரைக்க வேணும்
சாகாமல் சாகுமடா இந்த மூலம் சசிவட்டம் நடுக்கோண முக்கோணம் ஆமே

#3
முக்கோண முச்சுழி-தன் கோணமாகி முதலான மூல மணி வாலை-தன்னில்
நாற்கோண நாலு வரை நயந்து காக்க நாயகியாள் பரஞ்சோதி நாட்டமுற்றுத்
தீக்கோணத் திக்கு திசை இருந்த மாயம் தெரிந்திடவே உரைத்திட்டேன் விவரமாக
தாக்கோண விட்டகுறை வந்தது என்றால் தனி இருந்து பார்த்தவனே சித்தன் ஆமே

#4
சித்தான மூன்றெழுத்துச் செயலாம் சோதி சீரிய ஐயும் கிலியும் சவ்வுமாகி
முத்தான லட்ச உரு செபிக்கச் சித்தி முற்றிடுமே எதிரி என்ற பேய்கட்கும்தான்
வித்தான வித்தையடா முட்டும் பாரு விரிவான முகக் கருவு மூன்று கேளு
சத்தான அதன் கருவும் சிலையில் வைத்துச் சதுரான விதி விவரம் அறியக் கேளே

#5
கேளப்பா பலிகொடுத்துப் பூசைசெய்து கிருபையுள்ள உருவேற்றித் திட்டமாக
வாளப்பா சுடுகாட்டின் சாம்பல்-தன்னில் வளமாகப் புதைத்துவிடு நடுச்சாமத்தில்
ஆளப்பா அடியற்று மரணமாகி ஆண்டிருந்த தவசு நிலை தான் குலைந்து
காணப்பா கண்மணியே வீழ்வான் பாவி கதை தெரியச் சொல்லுகிறேன் இன்னம் பாரே

#6
இன்னம் இன்னம் கண் முன் சோதனையுமாகும் ஈடேற வேணும் என்றால் இதனில் சூட்சம்
அன்னமின்னா அகில் கட்டை தேவதாரம் அறிவுடைய முளைச் சீவிச் சிங்கை ஓதி
வன்னமின்னார் பேர் சொல்லி நசி என்றேதான் வலுவான நூற்றெட்டு உருவம் போடு
சன்னமின்னா மரத்தடியில் இருந்துகொண்டு சதிராக ஆணிகொண்டு அடித்திடாயே

#7
அடித்த முளை பிடுங்கிவைத்து இறுக்கிப்போடு ஆனந்த உருக் குலைந்து பட்டுப்போகும்
தொடுத்த முதல் நாலாநாள் கண்டு தானும் தொகை முடிந்து ஆச்சுதடா இந்தப் போக்கு
விடுத்த பின்பு விடம் ஏறிக் கருகிப்போகும் விரிந்து உரைத்தேன் பூட்டு இதுவே வீண்போகாது
தடுத்துவிடு நகரத்தில் அடித்துப் பாரு தட்டழிந்து உயிர் முதலாய்ச் சேதம் ஆமே

#8
ஆமப்பா அடிதரிசிங்களத்திலானால் அதிசயம் காண் கண்டவர்க்கே அடைக்கலம் போம்
வீமப்பா வெளி திறந்து சொன்னேன் பாரு விளையாட்டே இல்லையடா இந்தப் போக்கு
சோமப்பா சுத்தியுடன் தலையும் மூழ்கிச் சுருக்கெனவே தியானிப்பாய் ஆத்தாள் மூலம்
தாமப்பா சத்தியமே சொன்னேன் பாரு தவறாது ராமனுடை வாக்யம்தானே

#9
தான் என்ற மூலமுடன் சித்திபண்ணு தனதான நூற்றெட்டுக்குள்ளே சித்தி
ஆன் என்ற அண்டர் பதி எட்டும் ஆடும் அறுபத்துநால் மூலி எல்லாம் ஆடும்
கோன் என்ற கோடு சித்துக் கணத்தில் ஆடும் குணமாக ரேவதி நாள் செய்ய நன்று
வான் என்ற அட்டமியில் செய்ய நன்று வளர்பிறையில் செய்தவனே யோகியாமே

#10
யோகியாய் ஆவதற்கு ஈது உனக்குச் சொன்னேன் ஓகோகோ முன் உரைத்த மூலத்தாலே
யோகிகளாய் ஏகாந்தவல்லியாட்கு இங்கு ஏட்டிலே எழுதினதால் எல்லாம் ஆச்சு
தாகிகளாயத் தாயுடைய கிருபையாலே தவம் ஆகும் அவம் ஆகும் சுபம் உண்டாகும்
மோகிகளால் மூல பூசாவிதி பத்தாலே முத்திபெறச் சித்தி விளை பத்து முற்றே
**

7 உரோம ரிஷி ஞானம்


#1
மூலவட்டமான குரு பாதம் காப்பு முத்திக்கு வித்தான முதலே காப்பு
மேலவட்டமான பரப்பிரமம் காப்பு வேதாந்தம் கடந்து நின்ற மெய்யே காப்பு
காலவட்டம் தங்கி மதி அமுதப் பாலைக் கண்டு பசியாற்றி மனக் கவடு நீக்கி
ஞாலவட்டம் சித்தாடும் பெரியோர் பாதம் நம்பினதால் உரோமன் என் பேர் நாயன்தானே

#2
கண்ணாடி சில மூடித் தனுப்பினாலே கருவதனை அறியாமல் மாண்டுபோனான்
விண் நாடிப் பாராத குற்றம் குற்றம் வெறும் மண்ணாய்ப் போச்சுது அவன் வித்தை எல்லாம்
ஒண்ணான மவுனம் என்றே யோகம் விட்டால் ஒருபோதும் சித்தி இல்லை வாதம்தானும்
பெண்ணார்-தம் ஆசை-தன்னை விட்டு வந்தால் பேரின்ப முத்தி வழி பேசுவேனே

#3
பேசுவேன் இடைகலையே சந்த்ரகாந்தம் பிங்கலைதான் ஆதித்தன் ஆதி ஆச்சு
நேசமதாய் நடு இருந்த சுடர்தான் நீங்கி நீங்காமல் ஒன்று ஆனால் அதுதான் முத்தி
காதலாய்ப் பார்த்தோர்க்கு இங்கு இதுதான் மோட்சம் காணாதபேர்க்கு என்ன காம தேகம்
சோதனையாய் இடைகலையில் ஏற வாங்கிச் சுழுமுனையில் கும்பித்துச் சொக்குவீரே

#4
வாங்கி அந்தப் பன்னிரண்டின் உள்ளே ரேசி வன்னி நின்ற இடம் அல்லோ சூர்யன் வாழ்க்கை
ஓங்கி இந்த இரண்டு இடமும் அறிந்தோன் யோகி உற்ற பரமடிதானே பதினாறு ஆகும்
தாங்கி நின்ற காலடிதான் பன்னிரண்டு சார்வான பதினாறில் மெள்ள வாங்கி
ஏங்கினதைப் பன்னிரண்டில் நிறுத்தி ஊதி எழுந்த புரியட்டம் அடங்கிற்றுப் பாரே

#5
பாரையா குதிரை மட்டம் பாய்ச்சல் போச்சு பரப்பிலே விடுக்காதே சத்தம்-தன்னை
நேரையா இரண்டு இதழின் நடுவே வைத்து நிறைந்த சதாசிவனாரைத் தியானம்பண்ணு
கூரையா அங்குலம்தான் ஆனாலும் சென்றால் குறிக்குள்ளேதான் அடக்கிக்கொண்டது ஐயா
ஆர் ஐயா உனக்கு ஈடு சொல்லப்போறேன் அருமையுள்ள என் மகன் என்று அழைக்கலாமே

#6
அழைப்பதுவும் நல்லபிள்ளையானால் நன்றே ஆகாத சீடர்களைச் சேர்த்தல் தோடம்
பிழைப்பதற்கு வழி சொன்னால் பார்க்க மாட்டான் பெண்டாட்டி மனம் குளிரப் பேசும் மாடு
உழைப்பதற்குச் செனனமெடுத்தானே அல்லால் உதவி தனக்கு எவ்வளவும் உண்டோ இல்லை
இளப்பம் இவன் பேச்சை அடிக்கடி தானாகும் ஏதுக்குச் சொல்லுகிறோம் இனிமேல்தானே

#7
மேல் என்ன இருக்கையிலும் நடக்கும்போதும் வேறு உரையால் சாரங்கள் விடாமல் ஏற்று
நாலு என்ன எட்டு என்ன எல்லாம் ஒன்று நவமான அட்டாங்கம் அப்பிய சித்துக்
கால் என்னப் பிராணாயம் முன்னே செய்யில் கணக்காகப் பூரகம் கும்பகமே நாலு
கோல் என்ன ரேசகம்தான் ஒன்று மூன்று குறையாமல் சரபீசம் கூட்டித் தீரே

#8
கூட்டியே பழகின பின் சரபீசத்தில் குறையாமல் சாதித்தால் பிரம ரந்த்ரம்
காட்டுவிக்கும் அல்லால் விழிக் குறியினாலே கண் மூக்கு மத்தியிலே கண்டு பாரு
மூட்டுவிக்கும் ஆதாரம் ஆறும்தானே மூலவட்டக் கணபதி நான்முகத்தோன் மாயன்
தாட்டிகமா மணிப்பூரம் கையன் வட்டம் தணலான ருத்திரனும் தணலுமாமே

#9
தணலாகும் விசுத்தி அறுகோண வட்டம் சதாசிவனார் வட்டம் அல்லோ குருபீடம்தான்
மனையான பதியினிலே குறித்துப் பார்க்க மத்யம் முதல் கரி கொண்டு தூங்கும் தூங்கும்
கனல் ஏறிக்கொண்டிருந்தால் எல்லாம் உண்டு காற்றை வெளிவிட்டக்கால் கருமம் தீதான்
புனல் ஊறும் வழிப் பாதை இந்த மார்க்கம் பொல்லாத துரோகிக்குப் பொய்யாம் அன்றே

#10
செலுத்துவதும் உள்நாக்கில் அண்ணாக்கு ஐயா சென்று ஏறிப் பிடரி வழித் தியானம் தோன்றும்
வலுத்ததடா நாலும் உனக்கு அமுதம் ஆச்சு மவுனம் என்ற நிருவிகற்ப வாழ்க்கை ஆச்சு
சொலித்திருக்கும் பன்னிரண்டில் இருத்தி ஊது சோடசமாம் சந்த்ரகலை தேய்ந்து போச்சு
பலித்ததடா யோக சித்தி ஞான சித்தி பருவமாய் நாடிவைத்துப் பழக்கம்பண்ணே

#11
மூடாமல் சிறிது மனப்பாடம்பண்ணி முழுதும் அவன் வந்தது போல் பிரசங்கித்து
வீடு ஏது இங்கு உடல் ஏது யோகம் ஏது வீண்பேச்சாச் சொல்லி அல்லோ மாண்டுபோனார்
காடு ஏறி மலை ஏறி நதிகள் ஆடிக் காய் கிழங்கு சருகு தின்று காமத் தீயால்
சூடேறி மாண்டவர்கள் கோடாகோடி சொருப முத்தி பெற்றவர்கள் சுருக்கம் ஆச்சே

#12
சொருப முத்திக்கு அடையாளம் ஏது என்றக்கால் சுடர் போலக் காணுமடா தூல தேகம்
அருப முத்தியிடம் அல்லோ பிரம ஞானம் அபராட்சம் என்று சொல்லும் சிரவணம்தான்
பருபதத்தை அசைப்பன் எனச் சிற்றெறும்பின் பழங்கதை போல் ஆச்சுது இந்த யோகம் விட்டால்
வெறும் கடத்தில் ஈப் புகுந்தவாறு போல வேதாந்தம் அறியாத மிலேச்சர்தாமே

#13
ஓம் என்ற கெட்டபுத்தி மாணா கேளே உலகத்தில் மானிடர்க்காம் ஆண்டு நூறே
ஆம் என்றே இருபத்தோராயிரத்தோடு அறுநூறு சுவாசம் அல்லோ ஒரு நாளைக்குப்
போம் என்று போனதனால் நாள் குறைந்துபோச்சுது போகாவிட்டால் போவது இல்லை
தாம் ஒன்று நினைக்கையிலே தெய்வம் ஒன்று தான் நினைந்த தன்மை அல்லோ விதிகள்தாமே
**

8 ஏகநாதர் என்ற பிரம்மானந்தச் சித்தர் பாடல்


#1
காரணமான கணபதி சற்குரு கர்த்தனும் காப்பாமே
நாரணன் நான்முகன் நல்ல குறுமுனி நாதனும் காப்பாமே

#2
முன்கலையான முடிவான சோதியின் முற்றிலும்தான் அறிந்தே
பின்கலையான பிரமாண்ட சோதியைப் பேணித் துதிப்பேனே

#3
புத்தியும் வித்தையும் தந்து அருள் பாதனைப் போத மயமாக்கி
சித்தியும் பத்தியும் கண்டு அந்த நாதனைத் தேக லயத்துள் வைத்து

#4
சித்தம்பலத்தில் அச் சிதம்பர வித்தையைத் தேறித் தெளிந்தேதான்
சத்தம் பிறந்திட வாசி அறிந்துதானும் நடந்தேனே

#5
நத்தும் உலகத்தோர் சித்தை அறிந்திட நல்ல கதி எனவே
தத்துவமான எழுத்து அஞ்சுனாலேதான் வரை கீறினனே

#6
அங்கி பொருந்தின வீட்டுக்கோர் அஞ்சு அஞ்சுக்கும் அஞ்சாக
தங்கி இருந்திடும் மந்திர விஞ்சையைத்தான் கண்டு பேறும் பெற்றேன்

#7
அங்கங்கே மாறினால் அட்ட கர்மத் தொழில் ஆடும் இதுதானும்
சங்கையுடனே துகையைப் பெருக்கித்தான் வரை கீறிடுவாய்

#8
தானாய் இருக்கும் பிரமத்தின் தன் செயல்-தன்னை அறிந்தாக்கால்
வானாகி நின்று மறைபொருள் ஆனதை வாய்கொண்டு சொல்லுவாரோ

#9
அருவும் உருவும் திருவும் பலவுமாய் ஆதி சிதம்பரத்தைக்
கருவும் குருவும் கண்டு அறிந்தோர்கள் கையால் எழுதுவரோ

#10
தான் அந்தமான தத்துவம் கண்டோர்கள் தானேதான் எவ்வுயிர்க்கும்
ஆனந்தமாகி அறிவை அறிந்தவர் அட்சரம்தான் அறிவார்

#11
ஏக வெளியில் இருக்கின்ற சக்கரம் ஏதும் அறியார்கள்
சாகாக்கால் என்றும் வேகாத்தலையை என்றும் தானே அறிவாரோ

#12
வாதங்கள் செய்வது வேறொன்றும் இல்லை வாசி அறிந்தோர்க்கு
நாதம் பிறந்திடக் கண்டு அறிந்தோர்கள் நான் என்று சொல்லுவரோ

#13
யோகமும் ஞானம் உகந்து அறிந்தோர்கள் உண்மை அறிவார்கள்
தாகமும் பசியும் கோபமும் வந்தவர் தாமும் அறிவாரோ

#14
தான் என்ற தத்துவ மாயை அறுத்தவர் தன்னை அறிந்தோர்கள்
ஊன் என்ற ஊமை எழுத்தை அறிந்தவர் உற்பனம்தான் அறிவார்

#15
சூட்சாதி சூட்சங்கள் என்று மௌனத்தின் சொல்லும் பொருள் அறிந்தால்
பேச்சோடே பேச்சாகப் பேசி இருப்பரைப் பெரியோர்தாம் அறிவார்

#16
பேசாது இருந்த மௌனங்கள் என்பது பேசத் தெரிந்தோர்கள்
ஆசான் உரைத்த உபதேசம் என்று அறிவுள்ளோர்தான் அறிவார்

#17
வாதமும் ஞானமும் ஒன்று என்று சொல்வதும் வையகத்தோர் அறிய
சூதகம் கெத்தியும் தாளகம் வங்கமும் சொல்லும் நாதங்கள் அல்லோ

#18
ஆடும் சரக்கு அறுபத்தினாலும் அவரவர்தாம் அறிவார்
காடு மலையும் செடியும் சரக்கு என்பர் காணாதார் காணுவரோ

#19
தானே அறிவது சித்தி இது என தத்துவம்தான் அறிந்தோர்
வீணே அலைந்து திரிந்து நால் வேதத்தை விரும்பித் தேடுவரோ

#20
தங்களிடத்தில் இருக்கும் பொருள்-தனைத் தாங்களேதான் அறிந்தால்
எங்கே இருக்குது எனச் சொல்லித் தேடி ஏங்கி அலைவாரோ

#21
பண்டு பழுத்த கனியைப் பொசிக்கப் பறிக்கப் பொருள் அறிந்தால்
உண்டு சுகித்து உடம்பை வளர்த்து உறங்கித் திரிவாரோ

#22
இத்தனை சித்தையும் கண்டு தெளிந்தவர் ஏதும் அறியார் போல்
பித்தனைப் போலவே வத்துவைத் தேடிப் பேசாது இருப்பாரோ

#23
தாங்காமல் விட்டகுறையாளர்க்கு எய்திடும் தத்துவத்தை நினைக்க
பாங்கான ஐவரும் கட்டின வீட்டில் பரம சுகம் பெறுவார்

#24
ஓங்காமல் ஓங்கும் பிரம சொரூபத்தின் உண்மை-தனை அறிந்தால்
நீங்காத செல்வம் நிலைபெற்ற மா தவம் நின்ற பொருள் அறிவார்

#25
எங்கெங்கு பார்த்தாலும் எங்கும் குருநாதன் இருப்பிடம்தான் அறிந்தோர்
பங்கமாய் உள்ள பரம சுகத்தையே பார்த்துத் திரிவாரோ

#26
அற்பமாய் எண்ணியே கற்பங்கள் தேடி அலைவர் வெகு கோடி
சொற்பங்கள் அல்ல சுருதி முடிவு அல்லோ சொன்னது கற்பங்கள்தான்

#27
வாசம் பொருந்தும் சதுரகிரியின் மகத்துவம் கண்டோர்கள்
தேசங்கள்-தோறும் கற்பங்கள் தேடித் திரிவரோ தான் அறிந்தோர்

#28
கண்டதை விண்டிலர் அண்டர்களானாலும் கருத்தைச் சொல்லார்கள்
விண்டிலர் கண்டிலர் வேணது சொல்லுவர் வேத முடிவு அறியார்

#29
பாசம் பொருந்தும் கருநெல்லி வெண்சாரை பார்த்தோர்க்குத்தான் தெரியும்
பேசப்படாது என்று சித்தர்கள் சொல்லுவர் பேசத்தெரியார் போல்

#30
நீந்தின செந்தூரம் நேரான பூரணம் நின்ற நிலை அறிந்தால்
சாத்திரம் ஏதுக்குத்தான் அறியாருக்குச் சகலமும் வேணும் என்பார்

#31
வீட்டுக்குள் வாசலின் பூட்டுக்குள் பூட்டது வேணது உண்டு இங்கே
பூட்டுக்கும் இன்னது எனத் தெரிந்தோர் சாவிபோட்டுத் திறந்திடுவார்

#32
கண்டபேர் கொண்டதை விண்டுதான் பேசுவர் காரியா காரியமாய்
கண்டும் அறிந்தும் அறியாதார் போலவே காணாதார் போல் இருப்பர்

#33
நித்திய பூசையும் நேமாநுட்டானமும் நேரான பூரணத்தைப்
புத்தியுடன் அறிந்தே அனுபோகமாய் பூசைகள்செய்திடலாம்

#34
காலையும் மாலையும் கண்டது கொண்டு கற்பூர தீபமுடன்
மாலை மனோன்மணி தாய் பதம் போற்றி வணங்கியே வாழ்ந்திடலாம்
**

9 கஞ்சமலைச் சித்தர் பாடல்


#0
பரிபூரணானந்த போதம் சிவ
பரப்பிர்மமான சதானந்த பாதம்

#1
உரிதாம் பரம்பொருளை உள்ளு மாயம்
உற்ற பிரபஞ்ச மயக்கத்தைத் தள்ளு
அரிதான சிவநாமம் விள்ளு சிவன்
அடியார்கள் பணிவிடை அன்பாகக் கொள்ளு

#2
துச்சம் உசார விசாரம் அற்பச்
சுகமது துக்கமதாம் வெகு கோரம்
நிச்சயமான விசாரம் ஞான
நிர்மல வேதாந்த சாரமே சாரம்

#3
கற்பனையாகிய ஞாலம் அந்தக்
கரணங்களாலே விளைந்த விசாலம்
சொற்பனமாம் இந்த்ரசாலம் அன்று
தோன்றிவிட்டால் அது சூட்சானுகூலம்

#4
அற்பமதானப் பிரபஞ்சம் அது
அனுசரித்தாலே உனக்கு இது கொஞ்சம்
நிற்பது அருள் மேவி நெஞ்சம் அன்று
நிகர் இல்லை நிகர் இல்லை மெய்ஞ்ஞானம் பொஞ்சம்

#5
ஆங்காரத்தால் வந்த கேடு முதல்
ஆசையைக் கட்டோடே அப்பாலே போடு
தாங்காமல் ஆனந்த வீடு அன்று
தாக்கு மனோலயம் தானாகக் கூடு

#6
தத்துவக் குப்பைகள் ஏது சித்தி
சாத்திரமான சடங்குகள் ஏது
பத்தியுடன் மறவாது குரு
பாதத்தைக் கண்டால் தெரியும் அப்போது

#7
தூராதி தூரங்கள் இல்லை அத்தைத்
தொட்டுப் பிடிக்க என்றால் வெகு தொல்லை,
காரண தேசிகன் சொல்லை நம்பிக்
கருத்தில் நிறுத்தியும் காணலாம் எல்லை

#8
ஆணவத்தால் வந்த காயம் அதில்
ஐவர் இருந்து தொழில்செய்யும் ஞாயம்
காண அவமாம் போகும் மாயம் நன்றாய்க்
கைகண்ட சூத்திரம் சொன்னேன் உபாயம்

#9
மூடர் உறவு பிடியாதே நாரி
மோக விகாரத்தால் நீ மடியாதே
ஆடம்பரம் படியாதே ஞான
அமுதம் இருக்க விஷம் குடியாதே

#10
தான் என்று வாது கூறாதே பேசி
தர்க்கங்கள் இட்டுச் சள் என்று சீறாதே
ஊன் என்ற பாசம் மாறாதே போனால்
உன் ஆணை உன் மனம் செத்தும் தீராதே

#11
வந்த பொருளைத் தள்ளாதே நீயும்
வாராததற்கு வீண் ஆசைகொள்ளாதே
சிந்தை வசமாய்த் துள்ளாதே சும்மா
சித்திரம் போல் இருந்து ஒன்றும் விள்ளாதே

#12
தேக பாச பவ பந்தம் அப் பொருள்
சிற்றின்பமானது சிச்சீர்க் கந்தம்
பாகமது ஆன வேதாந்தம் பொருள்
பாவித்துப் பார்க்கில் உனக்கு இது சொந்தம்

#13
வஞ்சியர் ஆசை ஆகாதே அந்த
மயக்கமானால் கொஞ்சமட்டில் போகாதே
அஞ்சி யமன் கைச் சாகாதே கெட்ட
ஆசாபாசமாம் நெருப்பில் வேகாதே

#14
கல்வி மயக்கம் கடந்து எல்லாம்
கற்றோம் என்று எண்ணும் கசட்டைத் தொலைத்து
சொல் வெப்பினாலே கிடந்து இரு
சூட்சாதி சூட்சத்தில் ஆசை படர்ந்து

#15
ஓடித் திரியும் கருத்து அதை
ஓடாமல் கூட்டிப் பிடித்துத் திருத்து
நாடிக் கொண்டு அம்பைப் பொருத்து அந்த
நாதாந்த வெட்டவெளிக்குள் இருத்து

#16
சாண் வயிற்றால் அலையாதே நிதம்
சஞ்சலப்பட்டுக்கொண்டே மலையாதே
ஆணவத்தால் உலையாதே உனக்கு
ஆனந்த முத்தியது நிலையாதே

#17
அபிமானியாகிய சீவன் அவன்
அஞ்ஞானத்தாலே அழிவுண்டு போவான்
தபம் நினைந்தால் போதம் சார்வான் நிலை
சார்ந்துகொண்டால் சத்தி ரூபமும் ஆவான்

#18
நல் குரு சொன்னதே சொல்லு தம்பம்
நாட்டம் என்றால் வன்னி நிலையிலே நில்லு
தற்சமயங்களை விள்ளு உண்டு
தன்மயமாகவே தானே நீ கொள்ளு

#19
துன்ப இன்பங்களைத் தொட்டு அந்தத்
தொந்தங்கள் எல்லாம் துருசு அறச் சுட்டு
பின்பு பாசத்தைக் கைவிட்டு ஒன்றும்
பேசாமல் அந்தப் பெருமையை விட்டு

#20
பேச்சினால் என்னென்ன தோணும் சும்மா
பேசப்பேசப் பிழை அல்லோ காணும்
வாச்சுதலால் அம்பு பூணும் நல்ல
மாசற்ற ஞான விசாரணை வேணும்

#21
அநித்தியமானது தேகம் அதில்
ஆசையும் ஒன்றால் அடங்காது மோகம்
தனித்திருந்தால் அந்த போகம் ஒன்று
தானாகி நிற்பதுவே சிவயோகம்

#22
விரும்பு ஆசைக்கு இடங்கள் கொடாதே காய
வேதனைக்குள்ளே நீ கட்டுப்படாதே
திரும்பச் செனனம் எடாதே குரு
தேசிகர் பாதத்தில் அன்பு விடாதே

#23
கோடானகோடி தவங்கள் அந்தக்
கோவிலைச் சுற்றிச் செபிக்கும் செபங்கள்
பாடானது அல்லோ பவங்கள் இது
பண்ணும் முன் நண்ணும் துன்ப அவலங்கள்

#24
அந்தக்கரண விலாசம் அதை
யாராலும் தள்ளக்கூடாது பிரயாசம்
தொந்தித்து நிற்பதே பாசம் அதில்
தோன்றாமல் தோன்றும் சுயம்பிரகாசம்

#25
நாம சொரூபமே சித்தி அதை
நாடித் தெளிந்துகொண்டால் அல்லோ முத்தி
நேம சொரூபமே வித்து எங்கும்
நிச்சயமாகும் நிரந்தர வத்து
**

10 கடுவெளிச் சித்தர் பாடல்

** ஆனந்தக் களிப்பு

#1
பாபம் செய்யாதிரு மனமே நாளைக்
கோபம் செய்தே யமன்
கொண்டோடிப் போவான்
பாபம் செய்யாதிரு மனமே

#2
சாபம் கொடுத்திடலாமோ விதி-
தன்னை நம்மாலே தடுத்திடலாமோ
கோபம் தொடுத்திடலாமோ இச்சை
கொள்ளக் கருத்தைக் கொடுத்திடலாமோ

#3
சொல்லரும் சூது பொய் மோசம்செய்தால்
சுற்றத்தை முற்றாய்த் துடைத்திடும் நாசம்
நல்ல பத்தி விசுவாசம் எந்த
நாளும் மனிதர்க்கு நன்மையாம் நேசம்

#4
நீர் மேல் குமிழி இக் காயம் இது
நில்லாது போய்விடும் நீ அறி மாயம்
பார் மீதில் மெத்தவும் நேயம் சற்றும்
பற்றாது இருந்திடப்பண்ணும் உபாயம்

#5
நந்தவனத்தில் ஓர் ஆண்டி அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டுவந்தான் ஒரு தோண்டி மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டு உடைத்தாண்டி

#6
தூடணமாகச் சொல்லாதே தேடும்
சொத்துக்களில் ஒரு தூசும் நில்லாதே
ஏடணை மூன்றும் பொல்லாதே சிவத்து
இச்சைவைத்தால் எமலோகம் பொல்லாதே

#7
நல்ல வழி-தனை நாடு எந்த
நாளும் பரமனை நத்தியே தேடு
வல்லவர் கூட்டத்தில் கூடு அந்த
வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக் கொண்டாடு

#8
நல்லவர்-தம்மைத் தள்ளாதே அறம்
நாலெட்டில் ஒன்றேனும் நாடித் தள்ளாதே
பொல்லாங்கில் ஒன்றும் கொள்ளாதே கெட்ட
பொய்ம்மொழிக் கோள்கள் பொருந்த விள்ளாதே

#9
வேத விதிப்படி நில்லு நல்லோர்
மேவும் வழியினை வேண்டியே செல்லு
சாதக நிலைமையே சொல்லு பொல்லாச்
சண்டாளக் கோபத்தைச் சாதித்துக் கொல்லு

#10
பிச்சை என்று ஒன்றும் கேளாதே எழில்
பெண்ணாசை கொண்டு பெருக்கம் ஆளாதே
இச்சையது உன்னை ஆளாதே சிவன்
இச்சைகொண்டு அவ் வழி ஏறி மீளாதே

#11
மெய்ஞ்ஞானப் பாதையில் ஏறு சுத்த
வேதாந்த வெட்டவெளியினைத் தேறு
அஞ்ஞான மார்க்கத்தைத் தூறு உன்னை
அண்டினோர்க்கு ஆனந்தமாம் வழி கூறு

#12
மெய்க் குரு சொல் கடவாதே நன்மை
மென்மேலும் செய்கை மிக அடக்காதே
பொய்க் கலையால் நடவாதே நல்ல
புத்தியைப் பொய்வழி-தனில் நடத்தாதே

#13
கூட வருவது ஒன்று இல்லை புழுக்
கூடு எடுத்துத் திங்கள் உலவுவதே தொல்லை
தேடரு மோட்சமது எல்லை அதைத்
தேடும் வழியைத் தெளிவோரும் இல்லை

#14
ஐந்து பேர் சூழ்ந்திடும் காடு இந்த
ஐவர்க்கும் ஐவர் அடைந்திடும் நாடு
முந்தி வருந்தி நீ தேடு அந்த
மூலம் அறிந்திட வா முத்தி வீடு

#15
உள்ளாக நால் வகைக் கோட்டை பகை
ஓடப் பிடித்திட்டால் ஆளலாம் நாட்டை
கள்ளப் புலன் என்னும் காட்டை வெட்டிக்
கனலிட்டு எரித்திட்டால் காணலாம் வீட்டை

#16
காசிக்கு ஓடில் வினை போமோ அந்தக்
கங்கை ஆடில் கதிதானும் உண்டாமோ
பேச முன் கன்மங்கள் சாமோ பல
பேதம் பிறப்பது போற்றினும் போமோ

#17
பொய்யாகப் பாராட்டும் கோலம் எல்லாம்
போகவே வாய்த்திடும் யாவர்க்கும் போம் காலம்
மெய்யாகவே சுத்த சாலம் பாரில்
மேவப் புரிந்திடில் என் அனுகூலம்

#18
சந்தேகம் இல்லாத தங்கம் அதைச்
சார்ந்துகொண்டாலுமே தாழ்வில்லா பொங்கம்
அந்தம் இல்லாத ஓர் துங்கம் எங்கும்
ஆனந்தமாக நிரம்பிய புங்கம்

#19
பாரில் உயர்ந்தது பத்தி அதைப்
பற்றின பேர்க்கு உண்டு மேவரு முத்தி
சீரில் உயர் அட்டசித்தி யார்க்கும்
சித்திக்குமே சிவன் செயலினால் பத்தி

#20
அன்பு எனும் நன் மலர் தூவிப் பர
மானந்தத் தேவின் அடியினை மேவி
இன்பொடும் உன் உடல் ஆவி நாளும்
ஈடேற்றத் தேடாய் நீ இங்கே குலாவி

#21
ஆற்றறும் வீடேற்றம் கண்டு அதற்
கான வழியை அறிந்து நீ கொண்டு
சீற்றம் இல்லாமலே தொண்டு ஆதி
சிவனுக்குச் செய்திடில் சேர்ந்திடும் கொண்டு

#22
ஆன்மாவால் ஆடிடும் ஆட்டம் தேகத்து
ஆன்மா அற்ற போதே யாம் உடல் வாட்டம்
வான்கதி மீதிலே நாட்டம் நாளும்
வையில் உனக்கு வருமே கொண்டாட்டம்

#23
எட்டும் இரண்டையும் ஓர்ந்து மறை
எல்லாம் உனக்குள்ளே ஏகமாய்த் தேர்ந்து
வெட்டவெளியினைச் சார்ந்து ஆனந்த
வெள்ளத்தின் மூழ்கி மிகு களி கூர்ந்து

#24
இந்த உலகமும் உள்ளும் சற்றும்
இச்சை வையாமலே எந்நாளும் தள்ளு
செந்தேன் வெள்ளமதை மொள்ளு உன்றன்
சிந்தை தித்திக்கத் தெவிட்ட உட்கொள்ளு

#25
பொய் வேதம்-தன்னைப் பாராதே அந்தப்
போதகர் சொற்புத்தி போத ஓராதே
மைவிழியாரைச் சாராதே துன்
மார்க்கர்கள் கூட்டத்தில் மகிழ்ந்து சேராதே

#26
வைதோரைக் கூட வையாதே இந்த
வையம் முழுதும் பொய்த்தாலும் பொய்யாதே
வெய்ய வினைகள் செய்யாதே கல்லை
வீணில் பறவைகள் மீதில் எய்யாதே

#27
சிவம் அன்றி வேறே வேண்டாதே யார்க்கும்
தீங்கான சண்டையைச் சிறக்கத் தூண்டாதே
தவநிலை விட்டுத் தாண்டாதே நல்ல
சன்மார்க்கம் இல்லாத நூலை வேண்டாதே

#28
பாம்பினைப் பற்றி ஆட்டாதே உன்றன்
பத்தினிமார்களைப் பழித்துக்காட்டாதே
வேம்பினை உலகில் ஊட்டாதே உன்றன்
வீறாப்பு-தன்னை விளங்க நாட்டாதே

#29
போற்றும் சடங்கை நண்ணாதே உன்னைப்
புகழ்ந்து பலரில் புகலவொண்ணாதே
சாற்றும் முன் வாழ்வை எண்ணாதே பிறர்
தாழும்படிக்கு நீ தாழ்வைப்பண்ணாதே

#30
கஞ்சாப்புகை பிடியாதே வெறி
காட்டி மயங்கியே கள் குடியாதே
அஞ்ச உயிர் மடியாதே புத்தி
அற்ற அஞ்ஞானத்தின் நூல் படியாதே

#31
பத்தி எனும் மேனி நாட்டித் தொந்த
பந்தம் அற்ற இடம் பார்த்ததை நீட்டி
சத்தியம் என்றதை ஈட்டி நாளும்
தன்வசமாக்கிக்கொள் சமயங்கள் ஓட்டி

#32
செப்பரும் பலவித மோகம் எல்லாம்
சீயென்று ஒறுத்துத் திடங்கொள் விவேகம்
ஒப்பரும் அட்டாங்க யோகம் நன்றாய்
ஓர்ந்து அறிவாய் அவற்று உண்மை சம்போகம்

#33
எவ்வகையாக நல் நீதி அவை
எல்லாம் அறிந்தே எடுத்து நீ போதி
ஒவ்வா என்ற பல சாதி யாவும்
ஒன்று என்று அறிந்தே உணர்ந்துற ஓதி

#34
கள்ளவேடம் புனையாதே பல
கங்கையிலே உன் கடம் நனையாதே
கொள்ளைகொள்ள நினையாதே நட்புக்
கொண்டு பிரிந்து நீ கோள் முனையாதே

#35
எங்கும் சயப்பிரகாசன் அன்பர்
இன்ப இருதயத்து இருந்திடும் வாசன்
துங்க அடியவர் தாசன் தன்னைத்
துதிக்கிற் பதவி அருளுவன் ஈசன்
**

11 கடேந்திர நாதர் என்ற விளையாட்டுச் சித்தர் பாடல்

**கண்ணிகள்

#1
ஆதிசிவமான குரு விளையாட்டை யான் அறிந்து உரைக்க வல்லவனோ விளையாட்டை
சோதி மயமான சத்தி என் ஆத்தாள் சுயசொரூபத்து அடங்கி நின்ற விளையாட்டை

#2
பார்-தனில் உள்ளவர்க்கு விளையாட்டாய் ஞானம் பற்றும் வழி இன்னது எனச் சொன்னதினால்
சீர் பெறும் சித்தர்களும் என்னை விளையாட்டுச் சித்தன் என்றே அழைத்தார்கள் இவ் உலகில்

#3
இக பரம் இரண்டுக்கும் சரியாகும் இதை இன்பமுடன் சொல்லுகிறேன் தெம்புடனே
சகலமும் விளையாட்டாய் பிரமமுனி முன்பு சாற்றினார் எந்தனுக்கு ஈது உண்மையுடன்

#4
நான் என்று சொல்வதும் விளையாட்டே இந்த நானிலத்து இருப்பதுவும் விளையாட்டே
தான் என்று அறிவதுவும் விளையாட்டே பெற்ற தாய் என்று உரைப்பதுவும் விளையாட்டே

#5
தாய் தந்தை கூடுவதும் விளையாட்டே பூவில் தநயனாய் வந்ததுவும் விளையாட்டே
மாயையாய் வளர்ந்ததும் விளையாட்டே பத்து வயது தெரிந்ததுவும் விளையாட்டே

#6
பெற்ற பிள்ளை என்றதுவும் விளையாட்டே தந்தை பேரிட்டு அழைத்ததுவும் விளையாட்டே
மற்றதை உணர்வதுவும் விளையாட்டே இந்த வையகத்து இருப்பதுவும் விளையாட்டே

#7
பெண்டு பிள்ளை என்பதுவும் விளையாட்டே எங்கும் பேர் ஓங்க வாழ்வதும் விளையாட்டே
கண்டு பொருள் தேடுவதும் விளையாட்டே பணம் காசு வட்டி போடுவதும் விளையாட்டே

#8
மாடி மனை வீடு வாசல் விளையாட்டே என்றன் மனைவி மக்கள் என்பதுவும் விளையாட்டே
தேடிவைத்த பொருள் எல்லாம் விளையாட்டே இச் செகத்தில் திரிவதுவும் விளையாட்டே

#9
ஆடு மாடு தேடுவதும் விளையாட்டே சதுர்வேதாகம நூல் ஆய்வதுவும் விளையாட்டே
கூடுவிட்டுப் போகும் உயிர் விளையாட்டே உற்றார் கூடி மகிழப் பேசுவதும் விளையாட்டே

#10
பிணமாய் இருப்பதுவும் விளையாட்டே அதைப் பெற்றோர் கண்டு அழுவதும் விளையாட்டே
குணமாய்க் கழுவியதும் விளையாட்டே ஈமம் கொண்டுபோய்ச் சுட்டதுவும் விளையாட்டே

#11
செத்தோர்க்கு அழுவதுவும் விளையாட்டே சுடலை சேரும் வரை அழுவதும் விளையாட்டே
மெத்த ஞானம் பேசுவதுவும் விளையாட்டே குளித்து வீடு வந்து மறப்பதும் விளையாட்டே

#12
வீணாள் கழிவதுவும் விளையாட்டே சுடலை சேரும் வரை அழுவதும் விளையாட்டே
மெத்த ஞானம் பேசுவதும் விளையாட்டே குளித்து வீடு வந்து மறப்பதுவும் விளையாட்டே

#13
கனவு நினைவு என்பதுவும் விளையாட்டே இக் காசினியோர் உழல்வதும் விளையாட்டே
நினவாய்ச் செய் வஞ்சகமும் விளையாட்டே மிக்க நிதி நிலம் பெண் என்பதும் விளையாட்டே

#14
பெண்ணாசை என்பதுவும் விளையாட்டே அவர் பின்னால் திரிவதுவும் விளையாட்டே
மண்ணாசை என்பதுவும் விளையாட்டே நல்ல வயல் தோட்டம் புஞ்சை எல்லாம் விளையாட்டே

#15
சீராக வாழ்வதுவும் விளையாட்டே செம்பொன் சேகரித்து வைப்பதுவும் விளையாட்டே
நேராய்ப் பொய் சொல்வதுவும் விளையாட்டே நெஞ்சில் நினைக்காமல் செய்வதுவும் விளையாட்டே

#16
பந்து சனம் என்பது எல்லாம் விளையாட்டே லோகப் பற்றுடனே வாழ்வதுவும் விளையாட்டே
சொந்த நிதி தேடுவதும் விளையாட்டே இதைச் சொற்பனம் போல் எண்ணாததும் விளையாட்டே

#17
யோகம் வந்து மகிழ்வதும் விளையாட்டே அதன் உண்மை தெரியாததுவும் விளையாட்டே
சாகசம் செய்வதுவும் விளையாட்டே ஒருவர் தஞ்சம் என்று நினைப்பதுவும் விளையாட்டே

#18
கோடி பணம் தேடுவதும் விளையாட்டே அதைக் குழி வெட்டிப் புதைப்பதுவும் விளையாட்டே
தேடி அலைவதும் விளையாட்டே மனம் தேறுதலாய் திரிவதும் விளையாட்டே

#19
கற்பனையும் கபடமும் விளையாட்டே அதைக் காணாமல் மறைப்பதுவும் விளையாட்டே
சற்பங்கள் ஆட்டுவதும் விளையாட்டே ஒரே சாதனையாய்ப் பேசுவதும் விளையாட்டே

#20
நம்பினோருக்கு ஆசை சொல்லல் விளையாட்டே பின்பு நட்டாற்றில் போக விடுதல் விளையாட்டே
கும்பிக்கு இறை தேடுதல் விளையாட்டே கடன் கொடுத்தாரைக் கெடுத்தலும் விளையாட்டே

#21
இச்சையால் மயங்குவதும் விளையாட்டே அதை இயல்பாய் மதிப்பதுவும் விளையாட்டே
பிச்சையெடுத்து உண்பதுவும் விளையாட்டே பொல்லாப் பேய் போல் அலைவதுவும் விளையாட்டே

#22
முத்தி அறியாததும் விளையாட்டே மேலாம் மோட்சம் கருதாததும் விளையாட்டே
பத்தி கொள்ளாததுவும் விளையாட்டே மனம் பாழில் செலுத்தினதும் விளையாட்டே

#23
கேடு வருவதுவும் விளையாட்டே எதற்கும் கெம்பீரம் பேசுவதும் விளையாட்டே
பாடு வருவதுவும் விளையாட்டே மனப் பற்றுதலாய் நிற்காததும் விளையாட்டே

#24
பாச வினை போக்காததும் விளையாட்டே பெண் பாவாய் என்று அழைப்பதும் விளையாட்டே
நேசமாய்த் தேடுவதுவும் விளையாட்டே காணாமல் நிமிட நேரம் என்பதுவும் விளையாட்டே

#25
நித்திரையில் சொக்குவதும் விளையாட்டே அதில் நினைவு தடுமாறுவதுவும் விளையாட்டே
சித்தியடையாததுவும் விளையாட்டே ஞானம் சிந்தியாது இருப்பதுவும் விளையாட்டே

#26
சொற்பனம் உண்டாவதுவும் விளையாட்டே மனம் சொக்காது இருப்பதுவும் விளையாட்டே
விற்பனம் கண்டு அறிவதும் விளையாட்டே வந்த விதம் அறியாததுவும் விளையாட்டே

#27
பகல் இரவு என்பதுவும் விளையாட்டே இகப் பயன் அடைந்து இருத்தலும் விளையாட்டே
சக வாழ்வில் சிக்குவதும் விளையாட்டே யோக சாதனம் அறியாததும் விளையாட்டே

#28
புத்திமான் என்பதுவும் விளையாட்டே இப் பூதலத்தோர் ஏத்துவதும் விளையாட்டே
வெற்றியடைவதுவும் விளையாட்டே நான் வீரன் என்று சொல்வதுவும் விளையாட்டே

#29
தவ நிலை தோணாததும் விளையாட்டே ஞான தத்துவம் தெரியாததும் விளையாட்டே
பவமது போக்காததும் விளையாட்டே ஏக பரவெளி காணாததும் விளையாட்டே

#30
யோகம் தெரியாததும் விளையாட்டே அதன் உண்மை-தனைக் காணாததும் விளையாட்டே
பாகம் அறியாததும் விளையாட்டே இகப் பற்று அறுக்காது இருப்பதுவும் விளையாட்டே

#31
பெரியோரைக் காணாததும் விளையாட்டே கண்டு பேரின்பம் சாராததும் விளையாட்டே
தெரியாது இருந்ததுவும் விளையாட்டே சிவ தேக நிலை பாராததும் விளையாட்டே

#32
அஞ்ஞானம் உட்கொண்டதுவும் விளையாட்டே பேரறிவால் தெரியாததும் விளையாட்டே
மெய்ஞ்ஞானம் காணாததும் விளையாட்டே இந்த மேதினியே போதும் எனல் விளையாட்டே
** வேறு வகைக் கண்ணிகள்

#33
ஆதியான மூலத்தில் அமர்ந்திருந்த சோதிதான்
வாதியானோன் கண்டு அறிய வாய்க்கும் இது மந்திரம்

#34
சுக்குச்சுக்கு வெள்ளைக்கல் சுண்ணாம்பு வெள்ளைக்கல்
காசுக்கு இரண்டு கல் கருணைக்கிழங்கடா கருணைக்கிழங்கடா

#35
குடுகுடு ஆனைக்கல் கோமான்கும் ஆனைக்கல்
தேசதேச வாசக்கல் தெக்கு நல்ல சீமைக்கல்

#36
பக்குவமாகா முன் பார்த்து எடுத்துக்கொண்ட பின்
சுக்குச் சுண்ணாம்புக்கல் சோதிக்கல் சோதிக்கல்

#37
வாகட தோகட மதுரக்கல் வைப்புச் சுண்ணாம்புக்கல்
பாகுடன் செய்தால் பசுமைக்கல் பசுமைக்கல்

#38
மேலாம் சாதி பாரடா வெட்டவெளியைத் தேரடா
நாலாம் சாதி ஆகாது நமக்குப் பருப்பு வேகாது

#39
தாய் போலும் ஆகுமே தங்கை போலும் ஆகுமே
சேய் போலும் ஆகுமே திரும்பப் பெண்டீர் ஆகுமே

#40
வாலையான சிறுபெண்ணாம் வயதுவந்ததோர் பெண்ணாம்
பாலை மங்கைதானடா பருவம்வந்த வழலைதான்

#41
வழலை வாங்கிக்கொள்ளடா மருந்து சூடன் போடடா
குழவியர்க்கு உணர்வதாகக் கொடுத்ததை நீ வாங்கடா

#42
வாங்கின மூலத்தையே மருந்துபோட்டு வைப்பையே
தூங்கிடாமல் சேநீர் கொண்டு சுருக்கினில் உப்பு ஆக்கடா

#43
நீறு நீர் எடுத்துமே இரண்டையும் ஒன்று ஆக்கியே
சீறுடனே காய்ச்சியே செய்ததொரு உப்படா

#44
கோவானூர்-தன்னிலே கொழுந்து போல் முளைத்ததை
ஏகாலிகள் போகும் முன் எடுத்துவந்து காய்ச்சடா

#45
காய்ச்சியும் பெருத்து நீ கஞ்சி உப்பு சேர்த்து நீ
மாட்சிமையாய் மல்லிகை மலர்ந்தது போல் ஆமடா

#46
ஆதி உப்பும் அந்த உப்பும் இந்து உப்பும் எடுத்து நீ
சோதி உப்பும் ஆச்சடா சுருக்கம் இதுதானடா

#47
கண்டு அறிந்துகொள்ளடா கணக்கு அறிந்து விள்ளடா
கொண்டு அறிந்து தள்ளடா குரு அறிந்துகொள்ளடா

#48
சூதம் கட்டலாகுமே சொர்ண உப்பும் ஆகுமே
வாதம் வாதம் என்று அறிந்த வாதியே நீ பாரடா

#49
விட்டகுறையானவன் மேதினியில் வந்தவன்
தொட்டகுறைக்காரனுக்குத் தோற்றமே மெய்ஞ்ஞானமே
** வேறு

#50
ஏகாந்தம் பழம் பழம் எழுத்தில்லாதவன் தலைச்சுமை
பெண்டில்லாதவன் பெருவழி பிள்ளையில்லாதவன் கைவீச்சு

#51
காய்த்த வாழை பூப்பூக்கும் காயாத வாழைதானும் இல்லை
பாய்ச்சின பயறு தலையெடுக்கும் பாய்ச்சாத பயறுதானும் இல்லை

#52
இறைத்த கிணறுதான் ஊறும் இறையாக் கிணறுதானும் இல்லை
விதை விதைத்தால் முளை தேறும் விதையா நிலத்தில் ஒன்றும் இல்லை

#53
அழுத பிள்ளை பால் குடிக்கும் அழுகாத பிள்ளைக்கு ஏதும் இல்லை
உழுத நிலம்தான் பயிர் ஏறும் உழுகாத நிலத்தில் ஒன்றும் இல்லை

#54
ஆசையுளானுக்கு ரோசம் இல்லை ஆசையிலானுக்கு ஒன்றும் இல்லை
**

12 கருவூரார் – பூஜாவிதி

** எண்சீர் விருத்தம்
** காப்பு

#0
தெளிவு-தனில் தெளிவு தரும் அருளும் காணும் செணத்திலே சிவமயமும் சேரத் தோணும்
வழியதனில் நல்ல வழி ஞானம் கூடும் மகத்தான வேதாந்தம் சித்தி காட்டும்
ஒளிவு-தனில் ஒளிவு தரும் உறுதி சொல்வார் உற்பனத்தில் உற்பனமாய் உறுதி தோணும்
வெளியதனில் வெளியாகி நாதத்துள்ளே விளங்கி நின்ற வாலைப்பெண் ஆதி காப்பே
**நூல்

#1
ஆதி அந்தம் வாலை அவள் இருந்த வீடே ஆச்சரியம் மெத்த மெத்த அதுதான் பாரு
சோதி அந்த நடு வீடு பீடமாகிச் சொகுசு பெற வீற்றிருந்தாள் துரைப்பெண் ஆத்தாள்
வீதி அந்த ஆறு தெரு அமர்ந்த வீதி விளையாடி நின்ற திருமாளிகை கண்டாய்
பாதிமதி சூடியே இருந்த சாமி பத்து வயது ஆகும் இந்த வாமிதானே

#2
வாமி இவள் மர்மம் வைத்துப் பூசைபண்ண மதி உனக்கு வேணுமடா அதிகமாக
காமி வெகு சாமி சிவகாமி ரூபி காண அரிது சிறுபிள்ளை கன்னி கன்னி
ஆமி வளை அறிந்தவர்கள் சித்தர் சித்தர் அறிந்தாலும் மனம் அடக்கம் அறிய வேணும்
நாம் இவளைப் பூசைபண்ண நினைத்தவாறு நாட்டிலே சொல்ல என்றால் நகைப்பார் காணே

#3
காணப்பா இவளுடைய கற்பு மெத்த கண்டவர்க்குப் பெண்ணரசு நானே என்பாள்
ஊணப்பா அமிர்தம் இவள் ஊட்டிவைப்பாள் உள்வீட்டுக்குள்ளிருந்து மேலே ஏறப்
பூணப்பா மனம் உறைந்து வாவா என்பாள் புத்திரனே என் மகனே என்று சொல்லி
வேணப்பா வேணதெல்லாம் தருவேன் என்பாள் வேதாந்த சூட்சம் எலாம் விளங்கும்தானே

#4
தான் என்ற வாலை இவள் ரூபம் காணச் சமர்த்து உண்டோ ஆண்பிள்ளைதானும் உண்டோ
பான் என்ற வாமத்துக்குள்ளேயப்பா பராபரையாள் பல கோடி விதமும் ஆடிக்
தேன் என்ற மொழிச்சி இவள் சித்தர்க்கு எல்லாம் சிறுபிள்ளை பத்து வயது உள்ள தேவி
ஊன் என்ற உடலுக்குள் நடுவும் ஆகி உத்தமியாள் வீற்றிருந்த உண்மைதானே

#5
உண்மை இவள் நாணம் இல்லாது இருந்த வீடே ஊருக்குள் நடுவீடே உற்றுப் பாரு
செம்மையாய்க் கண்டவர்கள் உண்டோ அப்பா செகசால வித்தை இவள் ஆடும் வித்தை
உண்மையடா பஞ்சவண்ணமாகி நின்ற உலகதனில் அலைந்தவர்கள் கோடாகோடி
நின்மலமாய்க் கண்டவர்கள் சொல்லாரப்பா நேசமுடன் எனக்கு உரைத்த நிசம் கண்டேனே

#6
கண்டதொரு பூரணத்தின் மகிமை கேளு கால் மேலும் தலை கீழும் நடுவுமாகி
அண்டரொடு முனிவர்களும் கண்டு போற்ற ஆதவனும் அம்புலியும் அதிலே நின்று
தொண்டுபண்ணும் அவர்களிலே நாலுபேர்கள் சுகம் பெறலாம் என்று சொன்ன வாசல் நாலு
கொண்டவர்கள் கண்டு வந்த தொண்ணூற்றாறு கொள்கை எனக் காத்திருந்த குறிப்பைப் பாரே

#7
பார்த்தவர்கள் செய் தொழிலும் மனமும் வேறாய்ப் பல நூலைப் படித்துப் படுகுழியில் வீழ்வார்
ஏற்றபடி மனம் போனால் புத்தி போச்சே ஏழை மதி போகாதே என் தாய் பாதம்
போற்றுதற்கே ஐவரையும் மனத்தில் ஒன்றாய்ப் புத்தி சித்தம் ஓர்நிலையில் நிறுத்தி வாசம்
பூத்த மலர் எடுத்து திருப்பாதம் போற்றப் பொறி ஐந்து கருவி கரணாதி போமே

#8
போச்சுதடா மனம் மாய்கை வீறு போச்சு பொறி ஐந்து கருவி கரணாதி போச்சு
ஏச்சுதடா என்று மனம் இறக்கலாச்சு எனக்கு ஒருவர் இணையில்லை என்ற பேச்சு
வாய்ச்சுதடா மனம் அடங்க அங்கு என்றோர் சொல் வாய் பேசா மவுனத்தை அதிலே சேர்க்கக்
காய்ச்சுதடா பூத்த மலர் கருத்தை ஊன்று கனியாகும் அக் கனியைக் கண்டுகொள்ளே

#9
கொள்ளுதற்கு இங்கு இன்னம் ஒரு குறிப்பைக் கேளு கோடி இடி மின் முழங்கும் கண்ணை மூடு
விள்ளுதற்கு மனம் அடங்காப் பூதம் காணும் விள்ளாதே உள்ளபடி சிங் என்று ஓர் சொல்
விள்ளவுமே உபாயமதால் நடுவே நில்லு வேகம் எல்லாம் ஒடுங்குமடா சத்தம் போச்சு
கள்ளரைப் போல் மயங்காதே மவுனத்து ஊன்று கண்ணினையும் திறக்காதே கருதிப் பாரே

#10
பார் ஏது புனல் ஏது அனலும் ஏது பாங்கான கால் ஏது வெளியும் ஆகும்
நார் ஏது பூ ஏது வாசம் ஏது நல்ல புட்பம்தான் ஏது பூசை ஏது
ஊர் ஏது பேர் ஏது சினமும் ஏது ஓகோகோ அதிசயம்தான் என்ன சொல்வேன்
ஆறு ஏது குளம் ஏது கோயில் ஏது ஆதி வத்தை அறிவதனால் அறியலாமே

#11
ஆம் எனவும் ஊம் எனவும் இரண்டும் கூட்டி அப்பனே ஓம் என்ற மூன்றும் ஒன்றாய்
நாம் எனவும் தாம் எனவும் ஒன்றேயாகும் நல்லவர்கள் அறிவார்கள் காமி காணான்
வாமம் வைத்துப் பூசைபண்ண இந்த மார்க்கம் வந்தவர்க்குச் சத்தி சிறுபிள்ளை வாலை
சோம நதி அமுதம் உண்ண வாவா என்பாள் சுகம் உனக்குப் பரமசுகம் அருள்செய்வாளே

#12
செய்குவாய் பூசையது செய்யும்போது செய்குறிகள் தவறாமல் நடக்க வேண்டும்
உய்குவாய் பெண்ணரவம் கடியா வண்ணம் ஊமை என்ற நடுத் தீயை அதிகம் கொண்டால்
பைகு வாய் அரவு விடம் பொசுங்கிப்போகும் பங்கம் உனக்கு இல்லையடா அங்கம் மீதில்
ஐகுவாய் உள் அடங்கிப் பேச்சை விட்டே அழைத்திடவே அஞ்சும் அது கொஞ்சும் காணே

#13
காணாத காட்சி எல்லாம் கண்ணில் காணும் கலங்காதே மெய் மயக்கம் மெத்த ஆகும்
பூணாத பணி பூண்டு சிறுபெண்ணாகப் போதம் எனும் பொருள் பறிக்க வருவாள் கண்டாய்
வாழ்நாளை மடக்கி இவள் ரூபம் கண்டு மயங்காதே மவுனத்தில் நில்லு நில்லு
கோணாத முக்கோணக் குறியைப் பாரு கூசாதே கண் கூசும் கூசும் காணே

#14
கூச்சம் அற்றுப் பார்க்கையிலே இருள் போல் மூடும் கொள்ளி கொண்டு கொளுத்தியதை வெளிச்சம்போடு
வாய்ச்சமர்த்துப் பேசாதே மவுனத்து ஊன்று வாவா என்றே நீயும் வருந்திக் கூவச்
சூட்சமது இருந்த இடம் சொல்லலாமோ சொல்லுதற்கு வாய்விட்டுச் சொல்லலாமோ
தாய்ச் சமர்த்துப் பாராதே தாயைப் போற்று சற்குரு போல் உற்பனத்தைத் தாய் சொல்வாளே

#15
சொல்வதற்கு இங்கு இவளை அலால் சுகம் வேறு உண்டோ சூட்சம் எல்லாம் இவளைவிடச் சூட்சம் உண்டோ
நல்லவர்க்கு நடுவில் விளையாடும் வல்லி நாதவிந்து ஓங்கார நிலையும் காட்டி
வல்லவர்க்கும் வல்லவளும் நானே என்பாள் வரம் அவர்க்கு வேணதெல்லாம் வழங்கும் ரூபி
புல்லருக்கு இங்கு ஆயுதமும் புல்லே ஆகும் புத்திகெட்ட லோபிகட்குப் புகலொணாதே

#16
புகலுவார் வேதம் எல்லாம் வந்தது என்று பொய் பேசிச் சாத்திரங்கள் மிகவும் கற்றே
அகலுவார் பெண்ணாசை விட்டோம் என்றே அறிவுகெட்டே ஊர்-தோறும் சுற்றிச்சுற்றிச்
சகலமுமே வந்தவர் போல் வேடம் பூண்டு சடை முடியும் காசாயம்-தன்னைச் சாற்றி
இகலும் மனம் அடங்காமல் நினைவு வேறாய் எண்ணம் எலாம் பெண்ணாசை பூசைதானே

#17
பூசையது செய்வம் என்று கூட்டம் கூடிப் புத்திகெட்டுக் கைம்முறையின் போக்கை விட்டுப்
பாசையது மிகப் பேசிப் பாட்டும் பாடிப் படிப்பார்கள் மந்திரத்தின் பயனைக் காணார்
ஆசையிலே பெண்ணாசை மயக்கத்தாலே அங்கு இருந்த வாமத்தைப் பங்குபோட்டுப்
பேசையிலே மனம் வேறாய் நினைப்பான் பாவி புரட்டுருட்டாய் நினைவுதப்பிப் பேசுவானே

#18
பேச்சு என்றால் வாய்ச்சமர்த்தாய்ப் பேசிப்பேசிப் பின்னும் முன்னும் பாராமல் மதமே மீறி
நீச்சென்றும் நினைப்பு என்றும் ஏதும் காணார் நிர்மூடர் அனேக வித சாலம் கற்றே
ஆச்சென்றால் அதனாலே வருவது ஏது ஆத்தாளைப் பூசித்தோன் அவனே சித்தன்
மூச்சு என்ன செய்யுமடா நரகில் தள்ளும் மோசமது போகாதே முக்கால் பாரே

#19
முக்காலும் பொருந்தும் என்று சொன்னபோதே மோசம் இல்லை சூட்சமது மொழிந்து கூடும்
தக்காமல்போனபேர் அனேகர் உண்டு சமர்த்து அறிந்தால் அவன் சாமி அவனே சித்தன்
எக்காலும் நடந்திரு நீ காலும் உன்னி இருந்து அடங்கி உள்ளிருந்து வெளியில் போன
அக் காலைக் காணாமல் அலைந்தே ஓடி அழிந்து கெட்டுப்போனவர்கள் அறிந்துகொள்ளே

#20
அறிந்த குறி அடையாளம் காண வேண்டும் அக் குறியில் சொக்கி மனம் தேற வேண்டும்
அறிந்தவன் போல் அடங்கி மனம் இறக்க வேண்டும் அலகையது வழி பாதை அறிய வேண்டும்
மறைந்தவரை நிறைந்தவரை நீதான் காண மயக்கத்தைக் கண்டு உனையும் மதிக்க வேண்டும்
நிறைந்த மதி குறைந்த வகை அறிய வேண்டும் நிச்சயத்தை அறிவார்க்கு முத்திதானே

#21
முத்தி தரும் என்று மனம் புத்தியற்று மோசமது போகாதே பாசம் கையில்
சித்தமதில் சந்திரனை நிறுத்திக்கொண்டு செந்தீயில் உன் தீயை நடுவில் வாங்கிச்
சுத்தியுடன் ஆதி அந்தம் மனத்தில் வைத்துச் சொல்லாத மந்திரத்தின் தீயை மூட்டி
நித்ய மலர் அர்ச்சனைசெய் பாதம் போற்றி நீயும் மதி மதியும் அதில் அதிகமாமே

#22
மதி பெருகும் கதி பெருகும் வாதம் வாதம் வருந்தாதே அந்த முறை ஆகாதப்பா
நிதி பெருகும் இவள் குறியே வாதம் ஆகும் நிர்மூடர் அறியாமல் வகாரம் பேசி
நதிகள்-தனை அறியாமல் சலத்தில் மூழ்கி நானேநான் என்று வாய்மதங்கள் பேசி
உரிய பொருள் உள்ளது எல்லாம் சுட்டுச்சுட்டே உட்பொருளைப் பாராமல் அழிந்திட்டாரே

#23
இட்ட குறி நாதவிந்து ரூபம் காண இயல் அறியாச் சண்டாளர் சுட்டு மாய்வார்
விட்டகுறை வந்தது என்றால் தானே எய்தும் விதியில்லார்க்கு எத்தனைதான் வருந்தினாலும்
பட்டு மனம் மாய்தல் அல்லால் வேறொன்று இல்லை பத்தியிலார்க்கு உரைத்து மனம் பாழ்போக்காதே
திட்டமதாய்ப் பாணம்வைத்துத் தேவி பூசை சீர் பெற்றார் பதினெட்டுச் சித்தர்தாமே

#24
எட்டிரண்டும் ஒன்றும் அது வாலை என்பார் இதுதானே பரிதி மதி சுழுனை என்பார்
ஒட்டி முறிந்து எழுந்தது முக்கோணம் என்பார் உதித்து எழுந்த மூன்றெழுத்தை அறியார் ஐயோ
கொட்டும் ஒரு தேள் உருவாய் நிற்கும் பாரு கூட்டமிட்டுப் பாராதே குறிகள் தோன்றும்
சுட்ட சுடுகாடும் அது வெளியும் ஆகும் சொல்லுதற்கு வாய் விளங்காச் சூட்சம்தானே

#25
சூட்சம் இவள் வாசமது நிலைத்த வீடு சொல்லுதற்கே எங்குமாய் நிறைந்த வீடு
தேசமதில் போய் விளங்கும் இந்த வீடு சித்தாந்த சித்தரவர் தேடு வீடு
ஓசை மணிப் பூரமதில் உதிக்கும் வீடு ஒகோகோ அதிசயங்கள் உள்ள வீடு
ஆசுகவி மதுரமது பொழியும் வீடு அவன் அருளும் கூடி விளையாடும் வீடே

#26
வீடும் அது தலைவாசல் அது மேல்வாசல் வெளியான சுழிக்கதவு அடைக்கும் வாசல்
தேடுகிற மூவருமே வணங்கும் வாசல் திறமையான பன்னிருவர் காக்கும் வாசல்
ஆடுகிற புலியாகி நின்ற வாசல் அரகர சிவசிவா வாசி வாசல்
கூடுகிற முக்கோணப் பரங்களாகிக் குறுகு மதி பெருகு மதி கூறொண்ணாதே

#27
ஒண்ணாகி இரண்டாகி விளைவுமாகி உத்தமியாள் உட்கருத்தை அறியப்போமோ
தின்னாத விடக்கு எடுத்துத் தின்னச் சொன்னாள் செத்த சவம் போல் இருந்து செபிக்கச் சொன்னாள்
பண்ணாத பணக் கோடிப் பண்ணி வைத்தாள் பார்த்திருந்து கழுத்தறுக்கப்பார்த்தாள் பாவி
எண்ணாதும் எண்ணி மனம் ஏங்கி நாளும் எனக்கு அபயம் ஏது எனவே எழுந்திட்டேனே

#28
எழுந்திட்டது இவள் பார்த்துத் தொடர்ந்து கூடி என்னையுமே இழுத்து மடி பிடித்துக்கொண்டு
கொழுந்துவிட்டு வளர்ந்து எரியும் அனலை மூட்டிக் குடிகேடி சத்துருப் போல் கூச்சலிட்டாள்
அழுதேனே முந்தி இனி அந்த ஊரில் அரகரா துணை எனக்கே யாரும் இல்லை
எழுந்திட்டார் எல்லோரும் ஓடிப்போனார் என்ன செய்வேன் தனித்திருந்தே ஏங்கினேனே

#29
ஏங்கினேன் ஈடழிந்தேன் வீடும் அற்றேன் என்னைத்தான் கண்டவர்கள் சீசீயென்னத்
தூங்கினேன் கால் அறிந்து மடக்க மாட்டேன் துணை எனக்கு யாரும் இல்லை சூழ்ச்சியாக
வாங்கினேன் கால் அறிந்து மடக்க வேண்டும் வகையான எனக்கு ஒருத்தி உறுதி சொன்னாள்
தேங்கினேன் முன்னும் அவள் பின்னுமாகத் திடம் எனக்குச் சொன்னது இந்தத் தெளிவுதானே

#30
தெளிவதற்குச் சூட்சம் இது தெளிவாய்ப் பாரு சிவன் இருந்து விளையாடும் தெருவைப் பாரு
மொழிவதற்கு இ நூலைவிட வேறொன்று இல்லை முன் ஆதி அந்தமொடு நடுவும் சொன்னோம்
சுழியதற்குள் சுழி இருந்த சூட்சம் சொன்னோம் சொல்லாத மவுனம் முதல் கருவும் சொன்னோம்
ஒளி பிறக்கும் உறுதி இந்த உறுதி சொன்னோம் உற்பனமாய்ப் பார்த்தவர்கள் சித்தர்தாமே
**

13 கல்லுளிச் சித்தர் பாடல்


#0
பிர்ம சொரூபத்தை நாடு உன்
கர்மவினை ஓட வழி-தனைத் தேடு

#1
எட்டி பழுத்தாலும் என்ன காசு
ஈயாத லோபிகள் வாழ்ந்தாலும் என்ன
கட்டி வராகன் இருந்து என்ன அதைக்
காவல்கள் போட்டு நீ காத்திருந்து என்ன

#2
நீர் இலாக் கிணறு இருந்து என்ன மனம்
நேராய் நடவாத பிள்ளை இருந்து என்ன
ஊர் இலா ஆறு இருந்து என்ன நமக்கு
உதவி இல்லாது மனிதர் உறவு இருந்து என்ன

#3
தவமது செய்தாலும் என்ன நீ
சமத்தன் என்றே பேரெடுத்தாலும் என்ன
சிவபூசை செய்தாலும் என்ன அரன்
சேவடியை மறவாமல் இருந்தாலும் என்ன

#4
காசி போய்வந்தாலும் என்ன பெரிய
கனக தண்டிகை ஏறித் திரிந்தாலும் என்ன
வாசியைத் தெரிந்தாலும் என்ன நாளும்
மகராசன் என்று பேர் பெற்றாலும் என்ன

#5
புராணம் படித்தாலும் என்ன இந்தப்
பூலோகம்-தன்னில் மறைந்திருந்து என்ன
திராசு நிலையாய் இருந்து என்ன தினம்
சிவசிவா என்றே செபித்தாலும் என்ன

#6
வித்தைகள் பல படித்து என்ன நீ
மென்மேலும் சாத்திரம் கற்றாலும் என்ன
சித்துகள் தெரிந்தாலும் என்ன நாளும்
சிறப்பாக வார்த்தை உரைத்தாலும் என்ன

#7
பெண்டாட்டி பிள்ளை இருந்து என்ன முதிர்ந்த
பெரியோர்கள் பாதத்தைப் பூசித்தும் என்ன
துண்டாகப்போய் இருந்து என்ன நீ
துலையாத கற்கோட்டை கட்டியிருந்து என்ன

#8
மாடி மேல் வீடு இருந்து என்ன இந்த
வையகத்தோர் மெய்க்க வாழ்ந்தாலும் என்ன
கூடிக் குலாவி இருந்தது என்ன கையெடுத்துக்
கும்பிட்டுக் கூத்தாடித் திரிந்தாலும் என்ன

#9
தாய் தந்தை துணை இருந்து என்ன உற்ற
சனங்களும் உபகாரமாய் இருந்து என்ன
நாய் போல் அலைந்தாலும் என்ன வரும்
நமனுக்குத் தப்பி ஒழிந்தாலும் என்ன

#10
சரியை கடந்திடவும் வேணும் இந்தச்
சகத்தினுட மாயை ஒழித்திடவும் வேணும்
கிரியையைப் பார்த்து அறிய வேணும் மன வாக்குக்கு
எட்டாத சொரூபத்தைத் தெரிந்திட வேணும்

#11
யோகம் தெரிந்திட வேணும், உனக்கு
உண்டி முதல் ஆனதைச் சுருக்கிட வேணும்,
பாகமது தெரியவே வேணும் குரு
பாதமதை மறவாமல் இருந்திட வேணும்

#12
கொலை களவு நீக்கிவிட வேணும் உலகில்
கொடியோன் எனும் பேரைப் போக்கிட வேணும்
புலைகளைத் தொலைத்து விட வேணும் இன்று
பொல்லாத மாயையை விலக்கிட வேணும்

#13
சோதியைக் கண்டு அறிய வேணும் வேதச்
சுடர் எனும் தீபத்தைப் பார்த்து அறிய வேணும்
ஆதிப் பிர்மம் தெரிய வேணும் அதை
அன்புடன் சாத்திரத்தால் தெரிய வேணும்

#14
ஞான நிலை தெரியவே வேணும் இதில்
நால்வேத உண்மை தெரிந்திட வேணும்
மோன நிலை தெரியவே வேணும் யோக
முடிவான வத்துவை முன் தெரிய வேணும்

#15
அட்ட கருமம் தெரிய வேணும் அதற்கு
ஆதாரமான ஆலை தெரிய வேணும்
திட்டமாய் வாசி நிலை வேணும் இதைத்
தெரிந்துகொண்டால் சித்தன் ஆகவே வேணும்

#16
பந்தம் கடந்தவனே சித்தன் பாரில்
பஞ்சமாபாதகத்தை விட்டோனே பத்தன்
இந்தவிதம் தெரிந்தவனே சித்தன் அதில்
என் நிலைமை கண்டவனே சீவ முத்தன்
** ஆனந்தக் களிப்பு

#17
*1
பிர்ம சொரூபத்தை நாடு உன்
கர்மவினையோட வழி-தனைத் தேடு
மர்மம் தெரிவிக்கும் வீடு கண்டு
தர்ம நெறிமுறை-தன்னில் நீ கூடு

#18
*2
ஆதி பரம்பொருளைப் போற்றி என்றன்
ஆத்தாளின் பாதத்தை மனதினில் ஏற்றி
சோதிச் சுடர் ஒளியை நோக்கி எங்கள்
தூய குரு பத மலரைச் சிரம் மீது தாக்கி

#19
*3
முத்தர்கள்-தன்னைத் துதித்து மேலாம்
மோனத்தின் நிலையை மனத்தினில் ஏற்றி
சுத்த நிராமயம் கண்டு வேதச்
சுடர் எனும் பொருளை உன் இதயத்துள் கொண்டு

#20
*4
ஞான நிலை அறிய வேண்டி இந்த
ஞாலத்தில் ஆபாச வழி-தனைத் தாண்டி
மோன நிலையினில் சேர்த்து ஆதி
முச்சுடர் ஆகிய தீபத்தைப் பார்த்து

#21
*5
நித்தியானந்தம் எனத் தேர்ந்து சதா
நிர்மலமானதோர் பரவெளி சார்ந்து
பத்தியாய் வாழ்ந்திட வேணும் ஆசா
பாசத்தை நீக்கில் மெய்ஞ்ஞானமது தோணும்

#22
*6
தன்னையே தான் அறிந்தோன் சித்தன் வாசி
தனித்திருந்தே பழக்கமுற்றோனே முத்தன்
உன்னை உன்னால் அறிவோன் சத்தன் ஞான
யோகநிலை-தன்னையும் அறிந்தோனே முத்தன்

#23
*7
பவுரணை நாளதனிலேதான் வாசிப்
பழக்கமது செய்ய ஆரம்பிக்கவேதான்
நவநாதர் செய்முறைகள் இதுதான் கண்டு
நாட்டத்தைக் கொண்டு வழி பார்ப்பர் இதுதான்

#24
*8
வாசிப் பழக்கத்தை நாட்டு தீட்சை
மார்க்கப்படியே வழி கண்டு தீட்டு
பாசிப்பயறு அன்னம் ஊட்டு தினம்
பத்தியமாகவே காலத்தை ஓட்டு

#25
*9
பெண் போகத்து ஆசைவையாதே நல்ல
பிரணவ சொரூபத்தை நழுவவிடாதே
மண் பொன் மேல் இச்சைகொள்ளாதே பொல்லா
மாயையில் அகப்பட்டு நீ உழலாதே

#26
*10
அட்டாங்க யோகமது செய்வாய் அதி
அனந்த நிலை கண்டு மோனத்தில் உய்வாய்
கட்டாக ஓர் நிலையில் நில்லு அந்தக்
கரணம் அடக்கியே மேல் ஏறிச் செல்லு

#27
*11
நந்தி-தன் கொலுவை விடாதே அந்த
நாட்டத்தை விட்டு நீ அலைந்து கெடாதே
அந்தணன் பீடத்தில் நீயே நின்று
ஆத்தாளைக் கண்டு பணிந்திடுவாயே

#28
*12
தானாக மேலே ஓர் வீடு கதவு
தான் சாத்தி இருக்கின்ற வழி திறந்து ஓடு
மேனாட்டுக் கப்பலை ஓட்டு பாயை
விரித்து நீ மேல் தூக்கிச் சுக்கானைப் பூட்டு

#29
*13
ஆதாரம் ஆறையும் பார்த்து உன்றன்
அறிவினுக்கு எட்டிய நங்கூரம் கோர்த்து
மாதா தெரிசனை அறிந்து அந்த
வழியிலே திட்டியின் வாசல் திறந்து

#30
*14
ஆறுதல வீட்டையும் கண்டு அங்கே
அவரவர் வாசம்செய் அருமையை விண்டு
தேறுவதை நீ வெளிவிடாதே நல்ல
திருவான மேல்வாசல் கண்டு பின்னிடாதே

#31
*15
பாதை வழி ஏறியே செல்லு மயிர்ப்
பாலத்தின் வழியே போய்ப் பட்சமாய் நில்லு
தாதை இருப்பிடம் பாரு யாரும்
சஞ்சாரம் இல்லாத தனித்திடம் சேரு

#32
*16
மூலாதாரத்தையும் பார்த்து நல்ல
முச்சந்தி வீதியின் வாசியைச் சேர்ந்து
நாலாவிதங்களும் தெரிந்து அங்கே
நவகோண சக்கரத்து உண்மை அறிந்து

#33
*17
சங்குத் தொனி கேட்கில் ஆகும்
சத்தமும் கேட்கப் பயம் விலகிப் போகும்
எங்கும் நிராமயமாய்த் தோணும் மேலும்
இயல்பாக நாதத் தொனி அங்கே காணும்

#34
*18
சதுரகிரி உச்சி மீது ஏறி அதைத்
தான் அங்கே பார்த்து பிரமானந்தம் மீறி
இது கயிலாசகிரி என்று போற்றி
இனிமையாய் வழி தெரிந்து அவ்விடம் சென்று

#35
*19
கருநெல்லிக் காட்டுக்குள் சென்றே உட்
கருவான தாமரைத் தடாகத்துள் நின்றே
பெருவாரித் தீர்த்தங்கள் ஆடி வாய்
பேசாமல் ஊமை போல் மோனத்தை நாடி

#36
*20
கருஞ்சாரை வெண்சாரை ஓட
அதைக் கண்டு ஒடுங்கி வழி-தனைத் தேடப்
பெரும்பாலும் அருவி செறிந்து வரப்
பிறங்கும் பிரமானந்தம் இது என்று அறிந்து

#37
*21
மூலக் கணேசனைக் கண்டு அவர்
முன் நின்று போற்றியே தெரிசித்துக்கொண்டு
கோலத்துடன் அங்கு இருந்தும் செல்லக்
குணமாகும் ஆனந்தப் பரவெளி பொருந்தும்

#38
*22
சோதி சொரூபத்தைப் பார்த்து அதில்
சொக்கியே நின்றிடத் தேகமும் வேர்த்து
ஆதி மகாலிங்கம் கண்டு அதில்
ஐம்புலன் ஒடுங்கியே ஆனந்தம் கொண்டு

#39
*23
சுந்தர தெரிசனம் செய்து சிற்
சொரூப நிலையதனில் நின்று நான் உய்து
அந்தரத்தோர்களைப் போற்றி இது
ஆச்சரியம் என்றேதான் வாசியை ஏற்றி

#40
*24
கண்டுகொண்டேன் சிற்பரத்தை ஞானக்
கண் கொண்டு பார்த்து அறிந்தேன் அட்சரத்தை
விண்டு யான் சொல்ல முடியாது இந்த
மேதினியோர்க்கு லெகுவில் கிடை யாது

#41
*25
மனமானது அடங்கியே போச்சு இந்த
மாயையை விட்டுக் கரையேறல் ஆச்சு
சினம் என்னும் கோபம் அறுத்தாச்சு யோகம்
சித்தியதாகவே முத்தியும் ஆச்சு

#42
*26
ஆசையை ஒருநாளும் வேண்டேன் மேல்
ஆறு தலத்திலும் கண்டதைப் பூண்டேன்
ஓசை ஒளிக்குளே நின்றேன் அதை
உற்றுற்றுப் பார்த்துப் பின் அங்கங்குச் சென்றேன்

#43
*27
ஆயிரத்தெட்டு இதழும் கண்டேன் கண்டு
அந்தந்த நிலையையும் மனத்தினில் கொண்டேன்
தாயின் சொரூபத்துள் ஆச்சு இன்னும்
சகல புவனங்களும் பிண்டத்தில் ஆச்சு

#44
*28
அஞ்ஞானம் என்பதும் போச்சு பர
மானந்தம் என்பது அது நிசப் பேச்சு
மெய்ஞ்ஞானம் என்பது பொய்யோ இந்த
மேதினியோர்கள் அறியார்கள் ஐயோ

#45
*29
இல்லறம் உள்ளதும் நாமே அதி
ஏற்கையாய் இருந்தோர்க்குச் சாதனம் ஆமே
நல்லறம் தேடி அலையாதே மேலாம்
நாதாந்த வெட்டவெளியாய் இருக்கும்போதே

#46
*30
மோன நிலை கண்டு தேறு பர
முத்திக்கு வித்தான கருத்தில் நின்று ஏறு
ஞான நிலையதுவும் கிட்டும் பூவில்
நாடி இருக்கலாம் வெகுகாலம்மட்டும்

#47
*31
சுழிமுனை திறக்கும் வழி பாரு அந்தச்
சூட்சாதி சூட்சத்தைக் கண்டு அதின் சீரு
வழியுடன் சுந்தரர் நூறே சொல்லும்
மார்க்கத்தின் வழியாகச் சென்று நீ தேறே

#48
*32
மச்சரும் எண்ணூறில் சதமாய்க் கொஞ்சம்
வாய் விண்டு சொல்லினர் தெரியவே பதமாய்
இச்சை ஒழித்து நீ பாரு அதனால்
இக பரம் இரண்டையும் காண வெகு சீரு

#49
*33
தீட்சையின் மார்க்கமும் தெரிய குரு
தேசிகன் இருநூறில் வழி துறை அரிய
மாட்சிமையாக உரைத்தார் அதை
வாங்கித் திருமூலர் குகைக்குள் மறைந்தார்

#50
*34
சட்டமுனி கற்பவிதி நூறு அதனைத்
தான் பார்த்து நல்ல வழியினில் தேறு
வெட்டவெளியாகவே தோணும் ரோமர்
விரித்துச் சொன்னார் அந்த ஐஞ்ஞூறில் காணும்

#51
*35
செய் பாகமானதுவும் முன்னே கருவைத்
தெரிந்து குரு முறையாகச் செய்வாய் நீ பின்னே
கைபாகத்துடன் செய்தால் ஞானம் கிட்டும்
கடைத்தேறல் ஆம் இந்தத் திடத்துடன் மோனம்

#52
*36
பத்திய பாகங்கள் ஆக முறையாய்ப்
பாங்குடன்தான் உண்பாய் நரை திரை போக
முத்தி வழியைத் திறந்து பார்த்து
மோசங்கள் வாராமல் செய்வாய் சிறந்து

#53
*37
பூலோக ஆசையைத் தள்ளு ஞானம்
போதிக்கும் குரு கண்டு அடுத்து நீ கொள்ளு
சாலோக பதவியது கிட்டும் வேறே
சம்பத்து வேண்டுமோ இது வந்தமட்டும்

#54
*38
யோக முறை கைவிடாதே விட்டுவிட்டு
ஒன்றும் தெரியாமல் நீயும் கெடாதே
பாகமதாகவே செய்வாய் பய
பத்தியாய் எப்போதும் சரத்தினில் உய்வாய்

#55
*39
ஞான வழி கண்டு கூடு வரும்
நலமான முத்தி வழி-தனைத் தேடு
மோன நிலையிலே நில்லு குரு
முத்திக்கு இடமான வழியிலே செல்லு

#56
*40
வாழ்நாளை வீணில் விடாதே கெட்ட
மாயவலை அகப்பட்டு உழலாதே
பாழ்போகில் எதுவும் வாராதே பரி
பக்குவம் ஆகிடில் நீ பின்னிடாதே

#57
*41
தூக்கத்தில் ஆசைவையாதே இது
சுகம் எனக் காண்பித்து மயக்கும் அப்போதே
ஊக்கத்துடன் இருப்பாயே தூங்கி
உலகோர் சிரிக்க உடம்பெடுப்பாயே

#58
*42
மீறித் திரிவதும் வீணே பரியாச
மேசெயும் வார்த்தைக்கு இடமது காணே
தேறித் தெளிவது பாரம் உன்றன்
சித்தம் அடக்கித் திரிவது சாரம்

#59
*43
ஆணவத்தால் வரும் கேடு அதை
அறியாமல் நடப்பது சுணைகெட்ட மாடு
தாணுவின் பாதத்தை நாடு என்றும்
தன் தேகம் போகாமல் கற்பங்கள் தேடு

#60
*44
ஆசை மயக்கில் செல்லாதே நீ
அன்புடன் தெரிந்ததை வெளியில் சொல்லாதே
பாசத்து அகப்படாது நீயே ஞான
பரிபூரணானந்த பதம் அடை வாயே

#61
*45
பார்த்துத் தெரிந்துகொள் என்றே எனக்குப்
பட்சமாய்ப் போகரும் சொல்லினார் என்றே
ஆத்தும சத்தியாய் நானே அவரை
அன்புடன் போற்றிப் பணிந்துகொண்டேனே

#62
*46
குருநாதன் என்னை மதித்துப் பேர்
கொடுத்தாரே கல்லுளி என்றே விதித்து
திருநாமம் பெற்ற பின் நானே அவரைத்
தெரிசித்து யோகத்தின் சித்தி பெற்றேனே

#63
*47
கல்லுளிச் சித்தன் என்றேதான்
கனிந்துமே கூப்பிட்டார் சித்தர்களேதான்
சொல்லியபடி என்னைத்தானே எவரும்
சுட்டி அழைத்திடில் நேரில் வருவேனே

#64
*48
என் நூலும் அறுபதோடு ஆறு நானும்
இயம்பினேன் சக்கரத்து இயல்பு அதின் கூறு
முன் நூலும் பின் நூலும் ஆய்ந்தே நீ
முக்கியம் இன்னது என மனதுக்குள் வாய்ந்தே

#65
*49
சாத்திரம் எத்தனையோ கோடி சித்தர்
தான் சொன்ன வாத வயித்தியம் தேடி
சூத்திரம் பத்தொன்பதாக யானும்
சொல்லிய நூல்-தனை வழி துறையாக

#66
*50
பார்த்துத் தெளிந்தவனே சித்தன் பரி
பக்குவமாக அறிந்தோனே பத்தன்
நேர்த்தியாய் என் நூல் கற்றோனே அவன்
நீடூழி காலம் வரை யோகம் பெற்றோனே
**

14 காகபுசுண்டர்

**1 காகபுசுண்டர் ஞானம்

#1
சிறந்த பராபரமாகி எங்கும் தானாய்த் தீர்க்கமுடன் ரவி மதியும் சுடர் மூன்றாகிப்
பரந்து அருளும் ஐம்பூத மாயை தோன்றிப் பல்லாயிரம் கோடி அண்டம் படைத்த போதம்
வரம் பெருகி அனந்தனந்தம் உயிருமாகி மதபேதமாகவும்தான் வடிவைக் காட்டிச்
சரம் பெருக அண்டத்தில் எழுந்தே நின்ற சச்சிதானந்தமதைப் பணிகுவோமே

#2
ஓம் என்ற சுழுனையடா அண்ட உச்சி ஓம் முடிந்த பட்டணத்துக்கு அப்பால் சென்று
நாம் என்று சொல் அற்று யோக ஞானம் நாட்டுகிறேன் அஞ்சனமும் திலதப் போக்கும்
வாம் என்ற வயித்தியமும் அட்ட கர்மம் வாதம் என்ற வித்தை எல்லாம் தெளிவதாகக்
காம் என்ற வீடமதில் கண்டு தேறிக் காட்டுகிறேன் மெய்ஞ்ஞானக் கருவைப் பாரே

#3
பாரே நீ யோகம் என்ற வழியைச் சொல்வேன் பத்தடா ஐம்புலனைப் பரத்தினூடே
சீர் ஒருவர் தெரியாமல் மதங்கள் பேசித் திருவான உச்சியிலே சேராமல்தான்
ஆர் ஒருவன் ஆதாரம் வெவ்வேறு என்றே அடுக்கடுக்காய்ப் பன்னிரண்டு தலங்கள் என்று
வீரேதான் பேசியே மெலிந்துபோவான் விடம் உண்ட அண்டமதை விரும்பிக் காணே

#4
காணப்பா தலம் எல்லாம் அண்ட உச்சி கமலமடா பதினெட்டாம் கோட்டில் சென்று
பூணப்பா மனத்தையும்தான் பிசகு ஒட்டாமல் பூட்டடா பிரமத்தில் புகுந்து எந்நாளும்
வீணப்பா மந்திரங்கள் ஒன்றுமில்லை விதி இல்லை மதி இல்லை கெதியும் இல்லை
தோணப்பா தோணுமடா மனம் ஒன்றான சுத்தமுடன் நீ இருந்து தவம்செய்வாயே

#5
செய்யப்பா வாசிமுனி மகனே கேளு தீர்க்கமுடன் முன் உரைத்த ஆயிரத்தில்
மெய்யப்பா சரக்கு நீத்து உவகை எல்லாம் மேன்மையுடன் கட்டினங்கள் உருக்கினங்கள்
பொய்யப்பா சொல்லவில்லை ரத்னப் போக்குப் புனிதமுடன் சரியாகச் சொல்லிப்போட்டேன்
வையப்பா இ நூலில் மவுனம் எல்லாம் வகையாகச் சொல்லுகிறேன் பணிந்து கேளே

#6
கேளப்பா கேசரமே அண்ட உச்சி கெட்டியாய்க் கண்டவர்க்கே மவுனமாகும்
ஆளப்பா பரப்பிரம யோகம் என்றே அடுக்கையிலே போதமும்தான் உயரத் தூக்கும்
வாளப்பா கெவுனமணி விந்து நாதம் வலுத்ததடா கெட்டியாய்த் திரண்டு போகும்
நாளப்பா அண்டம் எல்லாம் சத்தியோடு நடனமிடும் சிலம்பொலியும் காணலாமே

#7
காணலாம் பிரமத்தில் நிர்ணயம்தான் காட்டுகிறேன் வாசிமுனி கருவாய்க் கேளு
பூணலாம் அண்ட உச்சி-தன்னில் நின்று பொறிகளையும் உண்டாக்கிப் புவனம்-தன்னில்
தோணலாம் உயிர்ப் பயிரைப் படைத்து எந்நாளும் தொந்தம் என்னும் ஏழு வகைத் தோற்றமாகி
ஆணலாம் நாலு வகை யோனியாகி அண்டமடா அனந்தனந்தம் ஆனவாறே

#8
வாறான பிரமத்தில் நடுவே மைந்தா வந்ததடா ரவி மதியும் சுடர் மூன்றாகிக்
கூறாகப் பின்னியடா கீழே பாயும் கூறுகிறேன் இரு கண்ணில் ஒளிவைக் கேளு
வீறான அண்ட உச்சி முனைக்கு அப்பாலே வெற்றியுடன் நரம்பதுதான் விழுது போலே
நேராக இரு கண்ணில் பின்னலாகி நிச்சயமாய் ஒளிவாகி நிறைந்தார் பாரே

#9
பாரப்பா பரப்பிரமம் ஒளிவினாலே பத்திலே நரம்பு வழி பாயும்போது
ஆரப்பா இரு கண்ணில் ஒளிவதாகி அண்டம் எல்லாம் ஏகமாய்த் தெரியலாச்சு
காரப்பா நரம்பு என்ற விழுது வட்டம் கபாலத்தில் முக்கூறாய்ச் சுழுனை ஆச்சு
வீரப்பா காதுக்கும் நாக்குக்கும்தான் வெற்றிபெற இன்னமும்தான் உரைக்கக் கேளே

#10
கேளப்பா மூலமடா லிங்கம்-தன்னில் கிருபையுடன் தண்டுக்கும் கீழ்மேலாக
நாளப்பா தமர் போலே பிடர் மார்க்கம் நன்றாக ஓடுமடா நரம்பினூடே
வாளப்பா அண்டம் முட்டி உயர மைந்தா வலுவாக முன் சொன்ன நரம்பினூடே
தேளப்பா சேர்ந்து மிகப் பின்னலாகிச் சிறந்திடவே புருவ மத்தி ஆகும் பாரே

#11
பாரடா புருவ மத்தி ஏது என்றக்கால் பரப்பிரமம் ஆனதோர் அண்ட உச்சி
நேரடா முன் சொன்ன நரம்பு மத்தி நிலைத்ததடா சுழுனை என்று நினைவாய்ப் பாரு
வீரடா அண்ணாக்கில் நேரே மைந்தா மேவடா மனம்-தனையும் செலுத்தும்போது
காரடா சுழுனையிலே மனம்தான் பாய்ந்து கலந்து ஐந்து பூதமும்தான் ஒன்றாய்ப் போமே

#12
போமடா முன் சொன்ன நரம்பினூடே பூரித்து ரவி மதியும் சுடர்தாம் மூன்றும்
ஆமடா பின்னியும் கீழே பாயும் அந்தரங்கம்-தனைப் பார்க்க அடங்கிப்போகும்
நாமடா வெளி திறந்து சொல்லிவிட்டோம் நாதாந்த பரப்பிரம நாட்டம்-தன்னை
ஓமடா விந்துவும்தான் அண்ட உச்சி உறுதியுடன் சித்தமதை ஊன்றிப்பாரே

#13
பாரான சாகரமே அண்ட உச்சி பதினாலு லோகம் எல்லாம் பரத்தினூடே
சீராகத் தெரியுமடா மவுன மார்க்கம் சித்தான சித்து விளையாடி நிற்கும்
வீரான மந்திரங்கள் பிறந்தது எப்போ விஷ்ணு என்றும் பிரமன் என்றும் வந்தது எப்போ
கூரான முக்குணங்கள் உதித்தது எப்போ கூறாத அட்சரத்தின் குறியைக் காணே

#14
காணார்கள் பிரமமும்தான் உதிக்கும் முன்னே கருணையுள்ள மந்திரங்கள் பிறந்தது உண்டோ
தோணாமல் மந்திரங்கள் அனந்தம் கற்றுச் சுழுனை என்ற மூக்குநுனி-தன்னைப் பார்த்து
வீணாகத் திரிந்து மிகப் பித்தர் போலே வேரோடே கெட்டு உழல்வான் விருதா மாடு
கோணாமல் அண்ணாக்கின் நேரே மைந்தா குறிப்பறிந்து பார்த்தவர்க்கே முத்திதானே

#15
முத்தியடா மந்திரத்தை நினைக்கும் போது மோசமடா மனம்தானும் இரண்டாய்ப் போகும்
சத்தியடா மனம்தானே ஏகமாகத் தனித்திருந்து நித்திரையைத் தள்ளி மைந்தா
புத்தியடா பிரமத்தில் புகுந்துகொண்டால் பூலோகம் எல்லாம்தான் பணியும் உன்னை
எத்தியே திரியாமல் பிடரி மார்க்கம் ஏறுகின்ற வாசியும்தான் கற்பம்தானே

#16
தான் என்ற கற்பமடா மது உண்டக்கால் சஞ்சார சமாதி என்பது அதற்குப் பேரு
ஊன் என்ற பசி தீரும் கோபம் போகும் உதயகிரி-தனில் சென்று ஊடுருவிப் பார்க்கத்
தேன் என்ற திரை ஏழும் தீய்ந்துபோகும் திரிவாரே உச்சி நடுச் சென்றபோது
கோன் என்ற கருவி எல்லாம் ஒடுங்கிப்போகும் கூற்றுவனார் ஆட்டமதைப் பார்க்கலாமே

#17
பார்க்கலாம் ஒரு காலை உயரத் தூக்கிப் பாடுவான் ஒரு காலைத் தாழவிட்டே
ஏர்க்கையிலே மேல் நோக்கும் காலைக் கேளாய் என் மகனே மதி என்பது அதற்குப் பேரு
கார்க்கையிலே கீழ் நோக்கும் காலை மைந்தா கண்டு பார் ரவி என்று கருதலாகும்
மார்க்கமுடன் அண்ட உச்சி மேலே தானும் மகத்தான வன்னி இருப்பிடம்தான் பாரே

#18
பாரப்பா இதை அறியார் சித்தர் கூடிப் பார்-தனிலே அறுபத்துநாலு யோகம்
ஆரப்பா இருக்கும் என்று வெவ்வேறாக அலைந்தலைந்து கெட்டவர்கள் அனந்தம் கோடி
நேரப்பா ராசாங்க யோகம் பார்த்து நிலை அறிந்து கண்டவனே கோடிக்கு ஒன்று
வீரப்பா பேசாமல் மனக்கண்ணாலே விந்துவடா பாய்ந்த தலம் வெளியைக் காணே

#19
காணாத காட்சி எல்லாம் கண்ணில் கண்டு காகமடா புசுண்டர் என்று பேரும் பெற்றேன்
தோணாமல் நான் அலைந்து சிறிது காலம் துருவம் என்ற பிரமத்தை அடுத்துக் கேட்க
நாணாமல் அண்ட உச்சி-தன்னிலேதான் நாடியே மனத்தாலே நாட்டமாகக்
கோணாமல் பாரும் என்றே எனக்குச் சொல்லக் கூசாமல் மனம் ஒன்றாய் இருத்தினேனே

#20
இருத்தியே இருதயத்தில் மனம் ஒன்றாக சுக பரமாம் பொருளை இருத்தி ஒன்றாய்
நிருத்தியே வெகு கோடி காலம்மட்டும் நிருவிகற்பச் சமாதியிலே நிறைந்து எந்நாளும்
பொருத்தியே லலாடக்கண் திறந்து பார்க்கப் பூலோகம் எங்கும் ஒன்றாய் நிறைந்து என் மைந்தா
கருத்து ஒன்றாய் நிறுத்தியடா கபாடம் நீக்கிக் காரணத்தைக் கண்டு விளையாடுவாயே

#21
விளையாடிப் போது உதயமாகவும்தான் வெட்டாத சக்கரத்தின் வெளிச்சம் பார்த்து
நிலையான அண்டமதில் நெற்றிக்கண்ணை நீ அறிந்தே அரவு விடம்-தன்னைப் போக்கி
அலையாமல் ஆரொருவர் உறவும் அற்றே ஆயிழையாள் மோகமதை அதட்டித் தள்ளி
மலையாமல் பிரமமே துணை என்று எண்ணி மவுனம் என்று மந்தனையும் அடக்கி நில்லே

#22
நில் என்றால் லோகத்தில் மனிதர்தாமும் நிட்டையுடன் சமாதியுமே பொருந்தாமல்தான்
வல்லவர் போல் வேத புராணம் காவ்யங்கள் மந்திரங்கள் கோடானுகோடி என்றும்
சொல்லுவார் கோவில் என்றும் தீர்த்தம் என்றும் திருடர்கள்தான் அலைந்தலைந்து திரிவார் மட்டை
வெல்வதொரு பிரமநிலை அறியாமல்தான் வேரற்ற மரம் போலே விழுவார் பாரே

#23
பாரப்பா மலர் எடுத்து லிங்கம் வைத்துப் பார்த்தீப லிங்கத்தைப் பணியாமல்தான்
வீரப்பா நீராட்டிப் பூசைசெய்து வீணர்கள்தாம் கத்தபம் போல் கதறுவார்கள்
தேரப்பா மலரதனைக் கிள்ளும் போது செத்த சனம் போல் ஆச்சுத் தெளிந்து பாரு
காரப்பா மனம்கொண்டு பரத்தினூடே கண்டவரே கயிலாசத் தேகம்தானே

#24
தான் என்ற பிரமத்தை அடுத்திடாமல் தாரணியில் தெய்வமடா அனந்தம் என்றும்
ஊன் என்ற குரு என்றும் சீடன் என்றும் உதயகிரி பாராத உலுத்த மாடு
வேனென்ற பொய் களவு கொலைகள் செய்து வேசையர் மேல் ஆசைவைத்து வீணனாகிக்
கோன் என்ற குரு பாதம் அடையமாட்டான் கூடுவான் நரகமதில் வீழ்வான் பாரே

#25
பாரப்பா நாக்கையும்தான் அண்ணாக்கு ஏத்திப் பார்-தனிலே பார்த்தவர்க்குப் பலிதம் இல்லை
ஆரப்பா கண் வெடிக்கும் தேகம் போகும் அடயோகம் என்பார்கள் ஆகாதப்பா
சாரப்பா மனம்-தனை அண்ணாக்கில் நேரே சார்ந்து மிகப் பார்க்கையிலே வாசிதானும்
வீரப்பா மேல் அடங்கும் கீழ் நோக்காது வெட்டாத சக்கரத்தை அறியலாமே

#26
அறியலாம் மனம்தானே உயிர்தான் ஆகும் அண்டத்தில் சேர்ந்திடவே ஆகும் முத்தி
பரி ஏறிச் சவாரியுமே நடத்தலாகும் பஞ்சமாபாதகங்கள் பறந்தே போகும்
விரிவான மனம்-தனையும் அணுவது ஆக்கி விட்டகுறை தொட்டகுறை விதியைப் பார்த்துக்
குறியான குண்டலியாம் அண்ட உச்சி கூறுகிறேன் முக்கோண நிலையதாமே

#27
தாம் என்ற உலகத்தில் மனிதரோடே சஞ்சாரம்செய்யாமல் தனித்து நில்லே
ஓம் என்ற ஊண் மிகுந்து உண்டிடாதே ஓரமாய் வழக்கதனை உரைத்திடாதே
ஆம் என்ற அட்சரத்தை மறந்திடாதே ஆயாசமாகவும்தான் திரிந்திடாதே
காமப்பேய் கொண்டவனோடு இணங்கிடாதே காரணத்தைக் கண்டு விளையாடுவாயே

#28
விளையாடிக் கருநெல்லி பறித்தே உண்ணு வேகாத தலை ஆகும் விரும்பிப் பாரு
மலையாமல் வெண்சாரை பிடித்தே உண்ணு மைந்தனே சாகாக்கால் அதுவே ஆகும்
அலையாமல் சோதியதன் பாலை உண்ணே அக்கினியாம் கம்பமடா சுழுனை ஆச்சுக்
கலை நாலு போகிறதை எட்டில் சேரு கபடம் அற்ற தேகமடா கண்டு பாரே

#29
கண்டுகண்டு மனம்தானே அண்டம் செல்லக் கலை நாலும் எட்டு இலையும் சேர்ந்து போகும்
தண்டுமுண்டு செய்யாதே மனம் வேறானால் தற்பரத்தை எப்போதும் அறியமாட்டாய்
தொண்டுசெய்து பெரியோரை அடுத்து மைந்தா தொழுது நீ என் நூலை அன்பாய்க் கேளு
விண்டுமவர் சொலாவிட்டால் இ நூல் சொல்லும் வெற்றிபெற மனவடக்கம் வைத்துப்பாரே

#30
பாரப்பா விஞ்சை மந்த்ரம் என்பார் வீணர் பாயடா விஞ்சை கிரி-தன்னில் மைந்தா
ஆரப்பா சென்று ஏறிப் பார்க்கும் போது அதீதம் உள்ள விஞ்சை மந்த்ரம் அனந்தம் காட்டும்
நேரப்பா சிருட்டிப்புச் சங்காரங்கள் நிமிடத்தில் செய்திடுவாய் நிலையைக் கண்டால்
வீரப்பா அமிர்தமும்தான் குமிழிபாயும் வேறில்லாக் கனி-தனையும் உண்கலாமே

#31
உண்கலாம் பிரமத்தில் அடங்கும் போதே உறுதியுள்ள அண்டத்தில் உருகிப் பாயும்
திங்கலாம் தோணுமடா அமிர்தச் சீனி தித்திப்புப் பாலுடனே திடமாய் மைந்தா
தங்கலாம் தேகமது அறியாமல்தான் சட்டையுமே கழன்று மிகத் தங்கம் போலே
பொங்கலாம் மெய்ஞ்ஞானத் தீபத்தாலே பூரித்துப் பார்த்திடவே புவனம் ஒன்றே

#32
ஒன்றான பிரமமே வெவ்வேறாக உலகத்தில் அனந்தமடா கூத்தும் ஆச்சு
நன்று ஆச்சுத் தீது ஆச்சு நாலும் ஆச்சு ஞாயிறு திங்கள் என்ற பேர் உண்டாச்சு
குன்று ஆச்சு ஊர்வனகள் அனந்தம் ஆச்சு குருக்கள் என்றும் சீடன் என்றும் குறிகள் ஆச்சு
நன்று ஆச்சு நாத விந்தும் அடங்கி நின்ற நாதனையும் ஒருமனமாய் நாட்டுவாயே

#33
நாட்டுவார் சித்தர் எல்லாம் பேதமாக நலம் போலே சாத்திரங்கள் கட்டினார்கள்
பூட்டியே மனிதர் எல்லாம் நூலைப் பார்த்துப் பூரணமாய் அண்டமதைப் பாராமல்தான்
காட்டிலே திரிந்து அலைந்த மானைப் போலே கபடமாய் வாய் ஞானம் பேசுவார்கள்
கூட்டிலே அடைந்திருக்கும் குயிலைப் பாரார் கூறாத மந்திரத்தின் குறியைப் பாரே

#34
குறி என்ற உலகத்தில் குருக்கள்தானும் கொடிய மறை வேதம் எல்லாம் கூர்ந்து பார்த்தே
அறியாமல் பிரமத்தைப் பாராமல்தான் அகந்தையாய்ப் பெரியோரை அழும்புபேசி
விரிவான வேடமிட்டுக் காவி பூண்டு வெறும் பிலுக்காய் அலைந்திடுவான் நாயைப் போலே
பரியாசமாகவும்தான் தண்டும் ஏந்திப் பார்-தனிலே குறட்டிட்டு நடப்பான் பாரே

#35
பாரப்பா சீடர்களை அழைப்பான் பாவி பணம் பறிக்க உபதேசம் பகர்வோம் என்பான்
ஆரப்பா பிரம நிலை காட்டாமல்தான் ஆகாசப்பொய்களையும் அவன்தான் சொல்வான்
நேரப்பா சீடனுக்குப் பாவம் ஆச்சு நிட்டை சொல்லும் குருக்களுக்குத் தோடம் ஆச்சு
வீரப்பா அடங்குகின்ற இடத்தைப் பாரான் விதியாலே முடிந்தது என்று விளம்புவானே

#36
வான் என்ற அண்டமதில் சென்று புக்கு வடவரையில் உச்சி நடுத் தீபம் கண்டு
தேன் என்ற சுத்த சிவகங்கை-தன்னில் தீர்த்தங்கள் ஆடித் திரு நாமம் இட்டுக்
கோன் என்ற மனம் அன்பாய் மலராய்ச் சார்த்திக் கொடிய மறை வேதமும்தான் அடக்கம் கண்டு
தேன் என்ற சித்தமே புத்தியாகத் தெளிந்தவரே மெய்ஞ்ஞானி ஆவர் பாரே

#37
பார் அண்டமதை ஒன்றாய்ப் பார்க்கும் போது பல பேத மாயை எல்லாம் மருண்டே ஓடும்
சீர் அண்டம் அகிலாண்ட பிரமாண்டங்கள் செனித்த வகை உயிர்-தோறும் நீயாய் நிற்பாய்
கார் அண்ட லலாடக்கண் திறந்த போது கண்கொள்ளாக் காட்சி எல்லாம் கலந்தே காட்டும்
வீர் அண்ட மேல் வட்டம் விரிந்த சக்கரம் மெய்ஞ்ஞான வெளியதனில் தொடர்ந்து கூடே

#38
கூடுவதென் குணம் அறிந்து மனம் ஒன்றாகக் கூத்தாடித் திரியாமல் கவனமாகப்
பாடுவது பல நூலைப் படித்திடாமல் பராபரத்தின் உச்சி நடு வெளியே சென்றே
ஆடுவது தொந்தோம் என்று ஆட்டைப் பார்த்தே அடுக்கடுக்காய் ஆயிரத்தெட்டு இதழும் கண்டு
வாடுகிற பயிர்களுக்கு மழை பெய்தால் போல் வாடாத தீபத்தை அறிந்து பாரே

#39
பார் என்று மெய்ஞ்ஞானம் பகர்ந்து சொன்னீர் பராபரத்து நிலையினுடைப் பாதம் சொன்னீர்
வீர் என்ற அண்டம் எல்லாம் பாழதாகி விராட பிரமம் ஒன்றியாய் இருக்கும்போது
சீர் என்ற உயிர்கள் எல்லாம் இருப்பது எங்கே சித்தருடன் திரிமூர்த்தி இருப்பது எங்கே
கூர் என்று நீர் தங்கும் இடம்தான் எங்கே குருபரனே இந்த வகை கூறுவீரே

#40
கூறுகிறேன் என் மகனே வாசிநாதா குணமான ஈச்சுரனார் சபையில் கூடித்
தேறுகின்ற பிரளயமாம் காலம்-தன்னில் சீவசெந்து சித்தருடன் முனிவர்தாமும்
வீருடனே எங்கேதான் இருப்பார் என்று விமலரும்தான் விஷ்ணுவையும் விவரம் கேட்கக்
கார்மேக மேனியன் அங்கு அவரை நோக்கிக் கண்டு மிகப் பணிந்தும் இனிக் கருதுவானே

#41
கருதுவான் ஆலிலை மேல் துயில்வேன் யானும் கனமான சீவசெந்தும் அனந்த சித்தர்
உறுதியாய் என்றனுடைக் கமலம்-தன்னில் ஒடுங்குவார் ஆதரித்து மிகவே நிற்பேன்
வருதியாய்ப் புசுண்டரும்தான் வருவார் என்று வலவனுடன் மாலானும் உரைக்கும்போது
சுருதியாய் எனை அழைத்தே சிவன்தான் கேட்கச் சூத்திரமாய் நல் வசனம் மொழிந்தேன் பாரே

#42
பார் என்று சிவனுடைய முகத்தைப் பார்த்துப் பல்லாயிரம் கோடி அண்ட உயிர்கள் எல்லாம்
சீர் என்ற சித்தருடன் முனிவர்தாமும் திருமாலும் ஆலிலை மேல் துயிலும்போது
கூர் என்ற உந்தியிடக் கமலம்-தன்னில் கூடியே அடைந்திருப்பார் குணமதாக
வீர் என்ற ஐவரையும் தாண்டி அப்பால் வெகு சுருக்காய் வீதி வழி வந்தேன் பாரே

#43
பாரப்பா ஆகாயம் செல்லும்போது பாலகனே சக்கரம்தான் சுற்றி ஆட
ஆரப்பா சக்கரத்தைப் பிசகொட்டாமல் அதன் மேல் ஏறியும்தான் அப்பால் சென்றேன்
நேரப்பா நெடுந்தூரம் போகும்போது நிச்சயமாய்க் கம்பத்தின் நிலையைக் கண்டேன்
வீரப்பா அக்கினி போல் படர்ந்து நிற்கும் வெளி ஒன்றும் தெரியாமல் இருக்கும்தானே

#44
இருக்குமடா எங்கும் ஒன்றாய் அக்கினிக் கம்பம் என் மகனே கம்பத்தின் நடுவே மைந்தா
உருக்கமுடன் பெண்ணரசி ஒன்றி நிற்பாள் ஓகோகோ அவள் முகத்தைப் பார்க்கும்போது
பெருக்கமுடன் முன் பார்த்தால் புருட ரூபம் புத்திரனே பின் பார்த்தால் பெண் போல் ரூபம்
மருக்கமுடன் யான்தானும் கம்பத்தூடே வத்தோடே வத்தாக இருந்தேன் பாரே

#45
பாரப்பா இப்படியே அனந்த காலம் பராபரத்தினூடேதான் இருந்து வாழ்ந்தேன்
ஆரப்பா பிரமமும்தான் மனம் இரங்கி அகண்டமதைப் படைப்பதற்கே அருளும்போதும்
வீரப்பா கம்பத்தில் இருந்த பெண்ணும் விமலர் என்றும் உமை என்றும் மிகவே தோன்றிச்
சீரப்பா சக்கரத்தில் இருந்துகொண்டு திருமாலைத்தான் அழைக்கத் தீர்க்கம் பாரே

#46
பாரப்பா திருமாலும் கமலம்-தன்னில் பல்லாயிரம் கோடி அண்ட உயிர்கள் எல்லாம்
நேரப்பா அழைத்து முக்குணத்தைக் காட்டி நிலையான சமுத்திரங்கள் பூமிதானும்
சேரப்பா ரவியோடு திங்கள்தானும் சிறந்து எழுந்த மலை காடு சீவசெந்து
வீரப்பா நவக்கிரகம் நட்சத்ரங்கள் வெற்றியுடன் நால்வேதம் வகுத்தவாறே

#47
வாறான தெய்வம் என்றும் பூதம் என்றும் வையகத்தில் வானம் என்றும் பூமி என்றும்
கூறான மா மேரு கிரிகள் என்றும் கோவில் என்றும் தீர்த்தம் என்றும் குளம் உண்டாக்கி
நேராகப் பிரமமே சாட்சியாக நிலைத்து எங்கும் உயிர்-தோறும் நிறைந்தார் ஐயா
வீராகத் திரியாமல் மவுனம் பார்த்து வெற்றிபெற இன்னமும்தான் உரைக்கக் கேளே

#48
கேளப்பா இப்படியே பிரளயம்தான் கிருபையுடன் ஏழு லட்சம் கோடியானால்
ஆளப்பா அரி அயனும் சீவசெந்தும் அகண்டம் என்ற பிரமத்தில் அடங்குவார்கள்
நாளப்பா நானும் அந்தப்படியே செல்வேன் நலமாக இன்னமும்தான் அகண்டம் ஆனால்
வாளப்பா காகம் என்ற ரூபம் ஆனேன் வடவரையின் கூடு தொத்தி இருந்தேன் பாரே

#49
பாரடா இப்படியே யுகங்கள்-தோறும் பார்-தனில் நான் இருந்தேன் எத்தனையோ கோடி
ஆரடா என்னைப் போல் அறிவார் உண்டோ ஆதி என்ற சித்திக்கும் ஆதி ஆனேன்
வீரடா விமலரிடம் செல்லும்போது வெற்றியுடன் எனை எடுத்து முத்தமிட்டார்
காரடா கைலையின் மேல் இருக்கச் சொன்னார் காகம் என்ற ரூபமாய் இருந்தேன் பாரே

#50
காகம் என்ற ரூபமாய் இருந்துகொண்டு காரணங்கள் அத்தனையும் கருவாய்ப் பார்த்து
வேகமுடன் வெளியோட்ட நிலையாய்ப் பார்க்க வெகுதூரம் சுற்றி இன்னம் விவரம் காணேன்
மோகமுடன் பரந்த மனம் அணுவது ஆக்கி மூர்க்கமுடன் பரவெளியை மனவெளி தாக்க
நாகரீகமாகவும்தான் அண்டம் மேவி நடுவணைய உச்சி நடு மத்திதானே

#51
மத்தியமாம் வானதிலே வளர்ந்த லிங்கம் மகா மேரு உச்சியிலே வளர்ந்த லிங்கம்
சக்தியும் ஆவி உடையுமான லிங்கம் சஞ்சாரச் சமாதியிலே நிறைந்த லிங்கம்
புத்தியால் மனம் ஒன்றாய்ப் புகழ்ந்த லிங்கம் பூவரும்-தன்னில் தான் முளைத்த லிங்கம்
எத்திசையும் புகழ்ந்திடவே வந்த லிங்கம் ஏக பரமானதொரு லிங்கம்தானே

#52
தான் என்ற சிறுவீட்டுக்குள்ளே சென்று தலைமாறிப்போனதொரு வாசியைத்தான்
கோன் என்ற பிரமத்தில் அடக்கமாகக் குறித்திடுவாய் மனம் அடங்கிக் கூர்ந்து பார்க்க
வான் ஒன்றிப்போகுமடா பாணம் பாணம் மைந்தனே உண்டிடவே பசிதான் தீரும்
தேன் என்ற சட்டைகளும் கழன்றுபோகும் தேனுக்கும் தேவனாய் இருக்கலாமே

#53
இருக்கலாம் எந்தெந்த யுகங்களுக்கும் ஏகாந்தமானதொரு பிரமம்-தன்னில்
பெருக்கவே மனம் அடங்கி மவுனம் பெற்றும் பேராசையாகவும்தான் பிரமத்துள்ளே
குருக்களைப் போல் அரசனைப் போல் இந்திரனைப் போல் குணமான மூவரைப் போல் பிரமத்தூடே
திருக்கெடுத்தே எந்தெந்த அவதாரங்கள் செய்திடலாம் நிலை அறிந்த பெரியோர்தானே

#54
தானவனே என் குருவே புசுண்டநாதா தாரணியிலே சீவசெந்தாம் அகண்டம் எல்லாம்
தோணவே மும்மூர்த்தி இவர்கள்தாமும் துடியாகப் பிரமத்தில் அடங்கும் என்றீர்
கோனவனே பின்னும்தான் அகண்டம் எல்லாம் குறிப்புடனே படைக்கும் வகைக் குறியும் சொன்னீர்
தானவனே மது உண்ணச் சொன்னீர் ஐயா சத்தியமாய் அதன் விவரம் சாற்றுவீரே

#55
சாற்றுகிறேன் என் மகனே வாசிநாதா சத்தியமாய் அண்டத்தில் செல்லும்போது
போற்றுகிற அக்கினியும் பிரவேசித்துப் புலன்கள் ஐந்தும் சேர்ந்ததனால் போதம் ஆகும்
மாற்றிலையும் அதிகமடா உன்றன் தேகம் மைந்தனே அவரூபம் ஆகுமப்பா
வாற்றியே நிழல் சாய்கையற்றுப்போனால் வலுத்ததடா காயசித்தி ஆச்சுப் பாரே

#56
ஆச்சென்ற அவரூபமானபோதே அட்டமாசித்தி வகை எட்டும் ஆடும்
மூச்சு ஒன்றி அடங்கிப்போம் பிரமத்தூடே முன்னணியும் பின்னணியும் ஒன்றாய்ப் போகும்
காச்சென்று காச்சிவிடு மவுனம் கண்டு கலை மாறி நின்றிடமே கனக பீடம்
நீச்சு என்றும் இல்லையடா உன்னைக் கண்டால் நிலைத்ததடா சமாதி என்ற மார்க்கம்தானே

#57
மார்க்கமுடன் தவசு நிலை அறியாமல்தான் மனம்தளர்ந்து திரிவார்கள் லோகத்துள்ளே
ஏக்கமுடன் முப்பதுக்குள் மவுனம் கண்டே இளவயசாய் இருப்பார்கள் பெரியோர் மைந்தா
காக்கவே சற்குருவின் பாதம் கண்டு கருணையுடன் அவர் பதத்தை வணங்கிப் போற்றித்
தீர்க்கமுடன் பிரமத்தில் மனம்தான் செல்லச் சீவனுக்குச் சீவனாய் இருக்கலாமே

#58
இருக்கலாம் செடி பூடு கற்பம் இல்லை ஏகாந்தமானதொரு பிரமம்-தன்னில்
உருக்கியே மனம் அடங்கிப் பார்க்கும்போதே உத்தமனே காயமது உறுதியாச்சு
மருக்கியே திரியாமல் மதம் பேசாமல் வண்டரோடு இணங்கியடா மருவிடாமல்
குருக்கியே கோளரிடம் சேர்ந்திடாமல் குரு பாதம் கண்டு மிகப் பணிந்து பாரே

#59
பார் என்று சொல்லிய மெய்ஞ்ஞான மூர்த்தி பரத்தினுடை அடி முடியும் பகுந்து சொல்லும்
சீர் என்று சொப்பனங்கள் அதிகமாகத் திடப்படவே காணுமிடம் தீர்க்கம் சொல்லும்
கார் என்று மணம் பிறந்த இடம்தான் சொல்லும் கதிர் மதியும் சுற்றிவரும் மார்க்கம் சொல்லும்
வீர் என்றே உயிர் பிறந்த இடம்தான் சொல்லும் வெற்றிபெற இந்த வகை விளம்புவாயே

#60
வாயாலே சொல்லுகிறேன் மகனே கேளு மகத்தான பிரமத்தின் பாதம்-தன்னில்
ஓயாமல் முன் சொன்ன நரம்பு பின்னி உத்தமனே ரவி மதியும் சுற்றி ஆடும்
மாயாமல் வாசியும்தான் நடுவே நின்று மார்க்கமுடன் சுழுத்தியிடம் மனம்தான் சென்றால்
காயான சுழுத்தி என்று இதற்கு நாமம் கண்டு பார் கண்டுகொள்ளப் போதம்தானே

#61
தான் என்ற பல ரூபம் அதிகம் காணும் தன்னுடைய தேவதை போல் பின்னும் காட்டும்
ஊன் என்ற பெண்ணைப் போல் உன்னைக் கூடி உத்தமனே சையோகம் செய்தால் போலே
தேன் என்று மயக்கிவைக்கும் சுழுத்தியாலே தித்திப்புப் போலேதான் ருசியைக் காட்டும்
கோன் என்ற குரு அருளைப் பணிந்துகொண்டு குறிப்பறிந்து பூரணத்தின் நிலையைப் பாரே

#62
நிலையாத சமுத்திரமே சுழுத்தி ஆச்சு நின்று இலங்கும் வாசியைத்தான் வெளியில் சேரு
தலையான அக்கினி அப்படியே சேரு சத்தியமாய் ரவி மதியைக் கூடச் சேர்த்து
மலையாமல் ஏக பராபரனே என்று மனம் அடங்கி அண்ட உச்சி-தன்னைப் பார்க்க
அலையாது மனம்தானும் பரத்தில் சென்று ஆகாய வீதி வழி ஆட்டும் பாரே

#63
ஆட்டுமடா ஆசை அற்று ரோசம் அற்றே அன்னை சுற்றம்-தன்னை மறந்தே அகண்டம் மேவும்
பூட்டுமடா நவத்துவாரங்கள்-தம்மைப் பொறிகள் ஐந்தும் சேருமடா புனிதமாகக்
காட்டில் என்ன நாட்டில் என்ன மவுனம் கண்டால் காமதேனு கற்பகமும் உனக்கே சித்தி
வீட்டிலே தீபம் வைத்தால் பிரகாசிக்கும் வெளியேறினால் தீபம் விழலாய்ப் போமே

#64
போமடா புத்தி சித்தம் ஒன்றது ஆகிப் புசுண்டன் என்று பேரெடுத்துப் புவனம்-தன்னில்
ஆமடா வடசாளி மைந்தன் என்றும் அருமையாம் கன்னியுடை மைந்தன் என்றும்
நாமடா ஐந்துபேர் தம்மிலேதான் நாட்டமுடன் முன் பிறந்தேன் நான்தான் மைந்தா
வாமடா சாண் முழத்தில் காட்சி பார்க்க வத்துவும்தான் ஈச்சரனார் என்பார் பாரே

#65
பாரப்பா என் குலம்தான் சொல்லக் கேளு பார்-தனிலே பிரமனுடை விந்துவாலே
ஆரப்பா பிறந்துவிட்டோம் ஐந்துபேரும் ஆகாய அண்டமதை அடுத்தே சென்றேன்
நேரப்பா வெகு கோடி காலம் வாழ்ந்தேன் நிட்டையிலே மனம் தவறாது இருந்துகொண்டேன்
வீரப்பா பேசுவோர் லோகத்தோர்கள் விட்ட இடம் தொட்ட இடம் விரும்பிக் காணே

#66
காணப்பா சாதி குலம் எங்கட்கு இல்லை கருத்துடனே என் குலம் சுக்குலம்தான் மைந்தா
தோணப்பா தோணாமல் சாதிபேதம் சொல்லுவான் சுருக்கமாய் சுருண்டு போவான்
வீணப்பா பிரமத்தில் ஆதி காலம் வீரமுடன் பிறந்ததடா உயிர்கள் எல்லாம்
நானப்பா அப்படியே உதித்தேன் முன்னே நன்றாக உதித்த இடம் நாடினேனே

#67
நாடியே உதித்த இடம் அறியாத் தோஷம் நடுவாக வந்த இடம் பாரத் தோஷம்
கூடியே பிறந்த இடம் காணாத் தோஷம் குரு பரனை நிந்தனைகள் செய்த தோஷம்
வாடியே வத்தோடே சேராத் தோஷம் வம்பரோடு இணங்கியே திரிந்த தோஷம்
கூடியே உறவு அற்றே இருந்த தோஷம் கும்பியும் கற்சிப்பியையும் அறியான் பாவி

#68
அறியாத பாவிக்கு ஞானம் ஏது ஆறுமுகன் சொன்னதொரு நூலைப் பாரு
பரிபாஷையாகவும்தான் சொல்லவில்லை பராக்கிரமம் என்னுடைய நூலைப் பாரு
விரிவாகச் சித்தர் சொன்ன நூலை எல்லாம் வீணாக மறைப்பாகச் சொன்னார் ஐயா
குறியான அண்டமதை ஒளித்தேவிட்டார் கூறினார் வெவ்வேறாய்க் குற்றம்தானே

#69
குற்றமது வையாமல் அண்டத்து ஏகிக் கூறாத மந்திரத்தின் குறியைப் பார்த்துச்
சித்தம் ஒன்றாய் அந்தி சந்தி உச்சிக் காலம் தேவனுக்குப் பூசைசெய்து தெளிவு பெற்றுக்
குற்றமது வையாமல் மனம் அன்பாலே குரு பரனை நோக்கியடா தவமேசெய்து
பற்று ஆசை வைத்து மிகப் பார்க்கும்போது பராபரையும் கைவசமே ஆகுவாளே

#70
ஆகுவாள் அந்தி சந்தி உச்சி என்றால் அப்பனே ரவி மதியும் சுடர் மூன்றாகும்
ஏகுவாய் மூன்றும் ஒன்றாய்ப் பின்னலாகி இருந்திடமே பிரமாண்ட நிலையது ஆகும்
போகுமே நீ செய்த கர்மம் எல்லாம் புவனை திரிசூலிகையுடைக் கிருபையாலே
வாகுமே வழியோடே சேர்த்தாயானால் வாணியும்தான் நாவில் நடம்செய்வாள் பாரே

#71
பாரடா வாணியும்தான் இருந்த வீடு பாலகனே சொல்லுகிறேன் பண்பாய்க் கேளாய்
ஆரடா அண்ணாக்கின் கொடியினூடே அண்டத்தைப் பற்றியடா விழுது போலே
நேரடா நரம்பதுதான் பொருந்தி நிற்கும் நிலையான அக்கினியின் மத்தி-தன்னில்
வீரடா அது வழியே அருள்தான் பாய்ந்து விண்ணுலகில் வேண தமிழ் சொல்லுவாளே

#72
சொல்லுவாள் அனந்த மறை வேதம் எல்லாம் சுருதியடா முடிந்து எழுந்த பிரமத்தாலே
வெல்லுவார்-தனை அறிந்த பெரியோர் எல்லாம் வீறாண்மை பேசார்கள் மவுனமாகி
அல்லு பகல் அற்றதொரு பிரமம்-தன்னை ஆர் அறிவார் உலகத்தில் ஐயா பாரு
சொல் அடங்கும் இடம்-தனையும் கண்டு தேறிச் சூத்திரமாய்க் கல்லுப்பு வாங்கு வாங்கு

#73
வாங்கியே அண்டத்தில் மூளை சேர்த்து வளமாக வேப்பிலையும் பிசறு மைந்தா
தாங்கியே திருகு கள்ளிக்கு உள்ளே வைத்துத் தமர் வாயைத் தான் மூடிச் சாபம் தீர்த்தே
ஓங்கியே திங்களும்தான் மூன்று சென்றால் உத்தமனே கள்ளியைத்தான் தரித்துக்கொண்டு
சாங்கம் இனிச் செய்யாமல் சீலை மண்ணும் சத்தியமாய்ச் செய்த பின்னே உலர்த்திப் பாரே

#74
பாரப்பா உலர்ந்ததன் பின் எடுத்து மைந்தா பக்தியுடன் கசபுடத்தில் போட்டுப் பாராய்
ஆரப்பா ஆறவைத்தே எடுக்கும்போதில் அருணன் நிறம் போல் இருக்கும் செந்தூரம்தான்
நேரப்பா அணுப் போலே சரக்குக்கு எல்லாம் நிச்சயமாய்ப் பூசியும்தான் புடத்தில் போடு
வீரப்பா நீருமடா நவலோகம்தான் வேதை என்ற வித்தை எல்லாம் கைக்குள் ஆச்சே

#75
ஆச்சடா உடம்பில் உள்ள வியாதி எல்லாம் அணுப் போல உண்டிடவே பறந்து போகும்
வாச்சடா தேக சித்தி அதிகம் ஆச்சு வத்துடனே கூடியும்தான் வாழலாச்சு
மூச்சடா தலைப் பிண்டம் கொடியும் மாவும் முத்தியடா வாங்கிய பின் தயிலம் வாங்கி
ஏச்சடா தரியாமல் சூடன் சேர்த்தே இன்பமுடன் வத்துவையும் பூசைசெய்யே

#76
பூசையடா செய்து மிகப் பதனம் பண்ணு புத்திரனே பேய்ப்பீர்க்குத் தயிலம் வாங்கி
ஆசை புல் ஆமணக்கதுவும் அது போல் வாங்கி அப்பனே கேசரியின் நெய்யும் சேர்த்தே
ஓசையுடன் தேவாங்கு பித்தும் சேர்த்தே உத்தமனே தலைப் பிண்டம் தயிலம் சேர்த்துப்
பாசையடா பேசாமல் அரைத்து மைந்தா பாலகனே சவாதோடு புனுகு சேரே

#77
சேரடா அணுப் போலே புருவத்து இட்டுத் தீர்க்கமுடன் நீதானும் செல்லும்போதில்
ஆரடா உன்னைத்தான் ஆர்தான் காண்பார் அண்டம் எனும் பிரமத்தின் அருளினாலே
நேரடா திகைப் பூண்டு கொண்டுவந்து நிச்சயமாய் முன் சொன்ன தயிலம் விட்டு
வீரடா அரைத்த பின்பு புருவத்து இட்டால் வேசையர்கள் வெகுபேர்கள் மயங்குவாரே

#78
வாரான தில்லைப்பால் கருந்துளசியும் வவ்வாலின் பித்துடனே மந்திப்பித்தும்
சீராக முன் சொன்ன கருவை விட்டுத் திடமாக அரைத்திடுவாய் சாமம் ஒன்று
நேராக அரைத்ததையும் எடுத்து மைந்தா நிச்சயமாய்ப் புருவத்தில் இட்டுப் பார்க்க
வீராகப் பாதாளம் பிளந்தே ஓடும் வேதாந்த சாரணையை விரும்பிப் பாரே

#79
பாரடா பரப்பிரமத்து ஊடே சென்று பரிதி மதி அக்கினியும் மூன்றும் ஒன்றாய்
நேரடா ஆதியும்தான் எதிரி-தன்னை நிச்சயமாய்ப் பார்த்திடவே நீறிப் போவான்
கூரடா கோடானுகோடி சித்துக் குறித்திடவே ஆகுமடா பிரமத்தாலே
வீரடா இ நூலைக் கொடுத்திடாதே வெற்றியுடன் எண்பதுமே விளங்க முற்றே
**2 காகபுசுண்டர் உபநிடதம்
** காப்பு

#80
*0
ஆதி எனை ஈன்ற குரு பாதம் காப்பு அத்துவிதம் பிரணவத்தின் அருளே காப்பு
நீதியாம் ஆரூட ஞானம் பெற்ற நிர்மலமாம் சித்தருடைப் பாதம் காப்பு
சோதி எனப் பாடிவைத்தேன் முப்பத்தொன்றில் துரியாதீதப் பொருளைத் துலக்கமாகத்
தீது இல்லாக் குணமுடைய பிள்ளை ஆனார் சீவேச ஐக்யமது தெரியும்தானே
** நூல்

#81
*1
தான் என்ற குருவின் உபதேசத்தாலே தனுகரண அவித்தை எல்லாம் தவறுண்டேபோம்
வான் என்ற சுவானுபவ ஞானம் உண்டாம் மவுனாதி யோகத்தின் வாழ்க்கை எய்தும்
நான் என்ற பிரபஞ்ச உற்பத்திக்கு நாதா நீ தக்யானம் நன்றாய் எய்தும்
கோன் என்ற கொங்கணவர்-தமக்குச் சொன்ன குறிப்பான யோகம் இதைக் கூர்ந்து பாரே

#82
*2
பாரு நீ பிரம நிலை யார்தான் சொல்வார் பதம் இல்லை யாதெனினும் பவ்யம் இல்லை
சேரும் இந்தப் பிரமாணம்தான் உணர்ந்து தெரிவிக்கப்படாது அருளில் சிவ சொரூபம்
ஊருகின்ற கால த்ரயங்களாலே உபாதிக்கப் பரதத்வம் உற்பத்திக்கும்
சாரும் இந்த உபாதான காரணத்தின் சம்பந்தம் இல்லாத சாட்சிதானே

#83
*3
சாட்சி சத்தாய் அதீத குணாதீதம் ஆகிச் சட்சு மனத்தால் அறியத் தகாது யாதும்
சாட்சியதே ஏது சாதனமும் தள்ளிச் சகல அந்தர்யாமித்வ சர்வ பூத
சாட்சியினை இவ்வளவு அவ்வளவாம் என்று தனைக் குணித்து நிர்ணயிக்கத் தகாது யோகம்
சாட்சியதே ஞாதுர் ஞான ஞேய ரூபம் சத்தாதி பிரமாதிதானே சொல்வாம்

#84
*4
சொல்லும் எனக் கேட்டு உகந்த மாணாக்கா உன் தூல காரணப் பிரமம் துரியாதீதம்
அல்லும் அல்ல பகலும் அல்ல நிட்களங்கம் அம்சோகம் அசபா மந்திரத் தியானம்
செல்லும் அவனே நான் என்று அபிமானிக்குச் சித்தவிர்த்தி நிரோதகமாம் யோகத்தாலே
வெல் அறிஞர் பல போக விர்த்தி யோகி விவேக தியானாதிகளே மேலாம் பிர்மம்

#85
*5
பிர்ம சுரோத்ராதி ஞானேந்திரியம் ஐந்தும் பேசு தர்க்க வாக்காதி இந்திரியம் ஐந்தும்
கர்மம் எனும் சத்தாதி விடயம் ஐந்தும் கரணாதி நான்கு பிராணாதி ஐந்தும்
வர்மம் இவை இருபத்துநான்கும் கூடி வரும் தூல சரீர விராட்டு எனவே சொல்லும்
தர்மவத்தைச் சாக்கிரபிமானி விசுவன் தனக்கு உவமையாம் கிரியாசத்திதானே

#86
*6
சத்தியுடன் ரசோகுணம்தான் நேத்ரத் தானம் தனிப் போகம் இதனோடே சார்ந்த ஆன்மா
வெற்றிபெறும் சீவாத்மா அகாரம் ஆச்சு விவகார சீவன் இதை விராட்டு என்பார்கள்
வித்தை எனும் அவித்தையிலே பிரதி விம்பம் விலாசம் இந்தத் தூல சூக்க விருத்தி ஆச்சு
தத்வமசி வாக்குச் சோதனையினாலே தான் கடந்து சூட்சுமத்தில் சார்ந்துகொள்ளே

#87
*7
கொள்ளடா ஞானேந்திரியங்கள் ஐந்து கூடினவை கர்மேந்திரியங்கள் ஐந்து
தள்ளடா பிராணாதி வாயு ஐந்து சார்வான மனம் புத்திதான் இரண்டு
விள்ளடா பதினேழு தத்துவங்கள் விர்த்தி எனும் சூட்சுமமாம் இரண்ய கர்ப்பத்து
உள்ளடா அபிமானி சைதன்யன் ஆகும் சொப்பனாவத்தை எனச் சொல்லும் நூலே

#88
*8
நூலான சாத்மிகமாம் அகங்காரத்துள் நுழைந்த இச்சாசக்தி அல்லோ நுணுக்கம் ஆச்சு
காலான கண்டம் எனும் தானத்துள்ளே கலந்திருக்கும் போகம் அல்லோ இச்சாபோகம்
நாலான ஆன்மாவே அந்தரான்மா ஞானம் இந்தப்படி அறிந்தால் உகாரம் ஆச்சு
தூலம் எனும் சூட்சுமத்தைக் கடந்து நின்று சொல்லுகிறேன் காரணத்தின் சுயம்புதானே

#89
*9
தான் நல் யாகக் கிருதம் எனும் சரீரத்துக்குத் தானமதே இதய மா ஞான சத்தி
வானமதே அகங்காரம் வித்தையாகில் வரும் சுழுத்தி அபிமானி பிராக்ஞன் ஆகும்
கோன் இதற்கே ஆனந்த போகம் ஆகும் கூடுகின்ற ஆன்மாவே பரமான்மாவாம்
கான் இதற்குப் பரமான்மா சீவன் இந்தக் காரணமே மகாரம் எனக் கண்டுகொள்ளே

#90
*10
கொள்ளும் அந்தப் பொருள்தானே சத்தும் அல்ல கூறான அசத்தும் அல்ல கூர்மை அல்ல
உள்ளு நிராமயம் அல்ல சர்வமயம் அல்ல உற்றுப்பார் மூன்றெழுத்தும் ஏகம் ஆச்சு
தள்ளுகின்ற பொருள் அல்ல தள்ளாது அல்ல தான் பிரம ரகசியம் சந்தான முத்தி
விள்ளும் அந்தப்படிதானே வேத பாடம் விசாரணையால் சமாதிசெய்ய விட்டுப்போமே

#91
*11
விட்டுப்போம் சமுசார வியாபாரங்கள் விடய சுக இச்சைவைத்தால் விவேகம் போச்சு
தொட்டுவிடலாகாது ஞான மார்க்கம் துரிய நிலை நன்றாகத் தோன்றுமட்டும்
எட்டுகின்ற பரியந்தம் சுருதி வாக்கியத்து எண்ணம் எனும் தியானத்தால் எய்தும் முத்தி
தட்டுகின்ற சீவத்வம் தனக்கு இல்லாமல் சமாதியுற்றால் நாம் அதுவே சாட்சாத்காரம்

#92
*12
சாட்சாதி பிரமத்தால் பூர்வ கர்மம் தத்வாதி வாசனைகள் தாமே போகும்
சூட்சாதி பிராந்தி எனும் மாயா சத்தி தொடராமல் சேர்வதுவே சொரூப ஞானம்
தீட்சையினால் பிரமாண்டம் பிண்டாண்டங்கள் சிருட்டி முதல் யாவற்றும் தெரியும் நன்றாய்
காட்சி என்ன ஏக வத்து ஒன்று அல்லாமல் காண்பது எல்லாம் வியர்த்தம் எனக் கண்டுகொள்ளே

#93
*13
கண்டு பார் மூடம் எனும் அஞ்ஞானிக்குக் காணாது சீவான்மா பரமான்மாவும்
தொண்டுபட்டுக் குரு முகத்தில் விசேடமாகச் சுருதி எனும் வேதாந்தம் அப்பிய சித்தே
உண்டும் அனுபவ ஞானம் கிர்த்யாகிர்த்யம் யோகி-தனக்கு ஏதேனும் தேவையில்லை
விண்டு சொல்வோம் நதி கடக்க ஓடம் அல்லால் விடயத்தால் சாதனங்கள் வீணாம் என்றே

#94
*14
வீண் அல்லோ சாதன ப்ரயோசனங்கள் மெய்ஞ்ஞான அபரோட்சம் வந்தபோது
வீண் அல்லோ வேத பாடத்தின் இச்சை வியோம பரிபூரணத்தில் மேவி நின்றால்
வீண் அல்லோ இருட்டறையில் பொருளைக் காண விளக்கதனை மறந்தவன் கைவிடுதல் போலும்
வீண் அல்லோ தியான தாரணைகள் எல்லாம் மெய் பிரகாசிக்கும் வரை வேணும்தானே

#95
*15
வேணும் என்றால் எள்ளுக்குள் எண்ணெய் போலும் வித்தினிடத்து அடங்கி நின்ற விருட்சம் போலும்
காணுகின்ற பூவில் உறை வாசம் போலும் கன்றாவின் பாலில் உள்ள நெய்யைப் போலும்
தோணு மயில் முட்டையின் மேல் வன்னம் போலும் தூலமதில் சூட்சும்தான் துலங்கி நிற்கும்
ஆணவத்தால் சாதனத்தை மறந்தாயானால் அபரோட்ச ஞான முத்தி அரிதுதானே

#96
*16
அரிதில்லை பிரம வியாகிருத சீவன் ஐக்கியம் எனும் சந்த்யானம் அப்யசித்துச்
சுருதிக் கயிற்றால் மனமாம் யானை-தன்னை சுருக்கிட்டுச் சிக்கெனவே துறையில் கட்டிக்
குரு உரைத்த சிரவணத்தின்படியே நின்றால் குதியாகும் பிரபஞ்சம் கோட்டில்தானும்
திரிவதில்லை திரிந்தாலும் மதம் இராது சீவ வைராக்யம் எனும் திறம் இது தானே

#97
*17
திரம் என்ன ஹம்சோகம் மந்த்ராதீதம் திருகிய சூன்யாதிகளே தியானம் ஆகும்
சரம் என்ன சாக்ரசத்தாம் வித்தை சூன்யம் சாதனையே சமாதி எனத் தானே போகும்
வரம் என்ன விபரீத விர்த்தி மார்க்கம் வாசனையே சாதனமாய் வகுத்துக் காட்டும்
அரம் என்ன இதை அறிந்தால் யோகி ஆவான் அஞ்ஞானம் அவனிடத்தில் அணுகாது என்னே

#98
*18
என்னவே அஞ்ஞானி உலகாசாரத்து இச்சையினால் தர்மாத்த வியாபாரங்கள்
முன்னமே செய்ததன் பின் மரணமானால் மோட்சமதற்கு அனுபவத்தின் மொழி கேட்பீரேல்
வின்னமதாய் ஆங்கார பஞ்சபூத விடய உபாதிகளாலே மேவிக்கொண்டு
தன்னிமைய இலிங்க சரீரத்தோடு ஒத்துச் சதாகாலம் போக்குவரத்து ஆகும்தானே

#99
*19
தான் இந்தப்படியாகச் சீவர் எல்லாம் சகச பிராரத்வ வசத்து ஆகினார்கள்
ஏன் இந்தக் கூரபிமானத்து ஆதினாலே இத்தியாதி குணங்கள் எல்லாம் வியாபிக்கும் பார்
வான் இந்து போல் மெலிந்து வளர்ந்து போகும் வர்த்திக்கும் அஞ்ஞானம் மாற்ற வேண்டி
நான் இந்தப் பிரம உபாசனையைப் பற்றி நாட்டம்வைத்தே வித்தை எல்லாம் நாசம் ஆச்சே

#100
*20
ஆச்சப்பா எத்தனையோ கோடி காலம் அந்தந்தப் பிரளயத்துக்கு அதுவாய் நின்றேன்
மூச்சப்பா ஓடவில்லை பிரமாதீத முத்திபெற்றேன் பிரமாண்ட முடிவில் சென்றேன்
கூச்சப் பாவற்ற பிர்ம சாட்சாத்காரம் குழி பாதம் ஆகிய கோசரமாய் நின்றேன்
பேச்சப்பா சராசரங்கள் உதிக்கும்போது பின்னும் அந்தப் புசுண்டன் எனப் பேர் கொண்டேனே

#101
*21
பேர் கொண்டேன் சொரூப சித்தி அனேகம் பெற்றேன் பெரியோர்கள்-தங்களுக்குப் பிரியன் ஆனேன்
வேர் கண்டேன் ஆயிரத்தெட்டு அண்டகூட வீதி எல்லாம் ஓர் நொடிக்குள் விரைந்து சென்றேன்
தார் கண்டேன் பிருதிவியின் கூறு கண்டேன் சாத்திர வேதங்கள் வெகு சாயும் கண்டேன்
ஊர் கண்டேன் மூவர் பிறப்பு ஏழும் கண்டேன் ஓகோகோ இவை எல்லாம் யோகத்து ஆட்டே

#102
*22
யோகத்தின் சாலம்பம் நிராலம்பம்தான் உரைத்தாரே பெரியோர்கள் இரண்டாம் என்றே
ஆகமத்தின்படியாலே சாலம்பம்தான் அநித்யம் அல்ல நித்யம் என்று அறையலாகும்
சோகத்தைப் போக்கிவிடும் நிராலம்பம்தான் சூன்ய அபிப்ராயமதே சொரூப முத்தி
மோக சித்த விருத்திகளைச் சுத்தம்பண்ணி மம்மூட்சு பிரமைக்ய மோட்சம் என்னே

#103
*23
மோட்ச சாம்ராச்யத்தில் மனம் செல்லாத மூடர்களுக்கு அபரோட்சம் மொழியலாகா
சூட்சம் அறிந்தால் அவனுக்கு அனுசந்தானம் சொரூப லட்சணம் தெரியச் சொல்லலாகும்
தாட்சி இல்லை சாதனைத் துட்டயத்தில் சட்சேந்த்ரியா நாதாதீதம் ஆகும்
மூச்சு லயப்படுவது அல்லோ பிரம நிட்டை மூல விந்துகள் ஆதீதம் மொழியலாமே

#104
*24
மொழிவதிலே அகாரம் எனும் பிரணவத்தின் மோன பிராணாதியதே நாதம் ஆச்சு
தெளியும் இந்த ஓங்காரத் தொனி விடாமல் சிற்ககனத்தே லயமாய்ச் சேர்க்க வேணும்
ஒளிதானே நிராலம்பம் நிர்விசேடம் உத்கிருட்ட பரமபத உபகாரத்தான்
வெளியோடே வெளி சேர்ந்தால் வத்தும் ஆச்சு விரோத சத்ராதி எல்லாம் விருத்தம் ஆச்சே

#105
*25
விருத்தமாம் அனாதி பிராரத்வ கர்மம் விடயாதி ப்ரபஞ்ச வீட்டுமங்கள் எல்லாம்
ஒறுத்தவனே யோகி என்பான் அவன் ஆரூடன் உலகம் எலாம் தான் அவன் அது உண்மையாகும்
நிறுத்த என்றால் நாசிகாக் கிரக ஆன்மா நிலை புருவ மத்தியிலே நிட்டன் ஆகிக்
கருத்து அழிந்து நின்ற இடம் சாட்சாத்காரம் கண் மூக்கு மத்தியிலே கண்டு பாரே

#106
*26
பார்ப்பதற்கு நீண்டதுவாம் குறுகி வட்டம் பரிதி மதி உதயம் எனப் பளிங்காகாசம்
தாப்பதற்கு மூன்று சுழி பின்னாய் நிற்கும் சாக்கிரத்தின் அடையாளம் தாக்கிப் பாரு
சேர்ப்பதற்குச் சுழுமுனை என்று இதற்கு நாமம் திரிகோணக் குண்டலியே சிவ சொரூபம்
காப்பதற்கு நடு நாடி ஊடே சென்று கால் நிறுத்திப் பிடரி வழிக் கண்ணைப் பாரே

#107
*27
கண்ணான பிடரி முதுகோடு ரந்த்ரம் கால் கூட்டிப்பார்த்தாலே தலை மேல் ஆகும்
விண்ணான பெருவெளிக்குள் ஈனமானால் விமோசனமாம் நிராலம்பம் எனத்தான் சொல்லும்
ஒண்ணான யோகம் அல்லோ இந்த நிட்டை உபதேசம் பெற்றவர்க்கே உண்மையாகும்
அண்ணாந்து பார்த்திருந்தால் வருமோ ஞானம் அசபா மந்திர தியானம் அறைகின்றேனே

#108
*28
அறைகின்றேன் அசபை எனும் பிராணான்மாவை அகண்ட பராபரத்தின் உள்ளே ஐக்யம்செய்யக்
குறைவு இல்லை ஓங்கார மூலவட்டக் குண்டலியாய் நின்றிடத்தில் குணாதீதம்தான்
நிறைகின்றேன் நாசி காரந்த்ர வாயு நீக்காமல் ஏகமாய் நிர்ணயித்துப்
பறைகின்றேன் அட்சர சாதனமும் தள்ளிப் பந்தம் அற்ற மா மோட்சப் பதி பெற்றேனே

#109
*29
புதி புருவத்து அடி முனைக் கீழ் அண்ணாக்கு என்னும் பவள நிறம் போன்று இருக்கும் திரிகோணம்தான்
துதிபெறு சிங்குவை உபத்த சுகந்தியாகச் சுபாவ சாதனையினால் மவுனம் ஆச்சு
விதி விகிதப் பிராரத்வ கர்மம் போச்சு விடய போகத்தின் இச்சை விட்டுப்போச்சு
மதி எனும் ஓர் வாயுவது அமிர்தம் ஆச்சு வத்து அதே காரணமா மகிமை ஆச்சே

#110
*30
மகிமை என்று யோக சாதனையினாலே மகாகாச நிருவிகற்ப வாழ்க்கை ஆச்சே
அகம் அகம் என்று ஆணவத்தை நீக்கலாச்சே அத்துவிதப் பிரம சித்தானந்தகாரம்
சகளாதீதம் கடந்து களாதீதத்தில் சாதித்தேன் தன் மனமாய்ச் சார்ந்து போச்சு
பகல் இருள் இல்லாத வெளிக்கு அப்பால் ஆச்சு பந்தம் அற்ற மா மோட்சப் பதம் பெற்றேனே

#111
*31
பெற்றதனைச் சொல்லிவிட்டேன் வடநூல் பாடை பிரிந்து முப்பத்தொன்றினிலே பிரம ஞானம்
தத்துவத்தைச் சொல்லிவைத்தேன் யோகியானால் சாதனைசெய்வான் அறிவான் சைதன்யத்தில்
முத்தி அடைவான் அதிலே நிருத்தம்செய்வான் மும்மூட்சுத்துவம் அறிந்த மூர்த்தி ஆவான்
நித்யம் எனும் உபநிடதப் பொருள்தான் சொல்லும் நிலவரத்தால் யோகநிட்டை நிறைந்து முற்றே
**3 காகபுசுண்டர் காவியம்
** காப்பு

#112
*0
கணபதியே அடியாகி அகிலமாகிக் காரணத்தின் குருவாகிக் காட்சியாகிக்
குணபதியே கொங்கை மின்னாள் வெள்ளை ஞானக் குருநிலையாய் அருள் விளங்கும் கொம்பே ஞானக்
கனவினிலும் நினைவினிலும் ஒளியாய் நின்ற காரணத்தின் வடிவாகிக் கருத்துள்ளாகிப்
பணி அரவம் பூண்ட சிவ வாசி நேர்மை பாடுகின்றேன் காவியம்தான் எண்ணிப்பாரே
** நூல்

#113
*1
எண்ணியெண்ணிக் காவியத்தை எடுத்துப் பாராய் எந்நேரம் காம சிந்தை இதுவே நோக்கும்
பண்ணி பன்றி பல குட்டி போட்டால் என்ன பதி யானைக்குட்டி ஒரு குட்டி ஆமோ
சண்ணியுண்ணி இ நூலை நன்றாய்ப் பாரு சக்கரமும் அக்கரமும் நன்றாய்த் தோணும்
தண்ணி தண்ணி என்று அலைந்தால் தாகம் போமோ சாத்திரத்திலே புகட்டித் தள்ளி ஏறே

#114
*2
புகட்டினாள் தச தீட்சை மகிமை-தன்னைப் பூரிப்பால் எனக்கு அளித்தே அகண்டம்-தோறும்
சகட்டினாள் சகல சித்தும் ஆடச் சொன்னாள் சந்திர புட்கரணி-தனில் தானம் சொன்னாள்
பகட்டினாள் உலகம் எல்லாம் முக்கோணத்தில் பர ஞான சிவபோதம் பண்பாய்ச் சொன்னான்
அகட்டினாள் ஐவர்களை ஈன்றாள் அம்மன் அந்த அருமை சொல்ல இனி அடியாள் கேளே

#115
*3
கேளப்பா ஈசன் ஒரு காலம்-தன்னில் கிருபையுடன் சபை கூடியிருக்கும்போது
வாளப்பா மால் அயர்-தம் முகத்தை நோக்கி வந்தவாறு எவ்வகையோ சென்றது ஏதோ
கோளப்பா செயகால லயம்தான் எங்கே குரு நமசிவாயம் எங்கே நீங்கள் எங்கே
ஆளப்பா ஐவர்களும் ஒடுக்கம் எங்கே அறுத்து எனக்கு இன்ன வகை உரைசெய்வீரே

#116
*4
இன்ன வகை ஈசரவர் கேட்கும்போதில் எல்லோரும் வாய் மூடி இருந்தார் அப்போ
சொன்ன வகை-தனை அறிந்து மார்க்கண்டேயன் சொல்லுவான் குழந்தையவன் கலகலென்ன
அன்னை-தனை முகம் பார்த்து மாலை நோக்கி அரிகரி ஈசர் மொழிக்கு உரை நீர் சொல்வீர்
பின்னை வகை யார் உரைப்பார் மாயை மூர்த்தி பேசாமல் இருந்துவிட்டால் மொழிவார் எங்கே

#117
*$
எங்கு என்று மார்க்கண்டன் எடுத்துச் சொல்ல என்ன சொல்வார் ஏகவெளிச் சிவனை நோக்கிக்
கங்கை-தனைப் பூண்டானே கடவுளோனே காரணமே பூரணமே கண்ணே மின்னே
சங்கை இனி ஏது அறிவேன் மகுடச் சோதி சந்திரனைப் பூண்டிருந்து தவம் பெற்றோனே
மங்கை இடப் பாகம் வைத்த மகுடத்தோனே மா முனிகள் ரிஷி சித்தர் அறிவார் காணே

#118
*6
அறிவார்கள் ரிஷி சித்தர் முனிவோர் ஐயா அரகரா அதுக்குக் கோளாறு என்றக்கால்
பொறியாகப் புசுண்டமுனி சொல்வார் ஐயா போய் அழைக்கக் கோளாறி வசிட்டராகும்
நெறியாக இவ் வகை நான் அறிவேன் ஐயா நிலைத்த மொழி புசுண்டர் அலால் மற்றோர் சொல்லார்
புரிவாரும் இவ்வளவு என்று உரைத்தார் மாயர் பொருள் ஞானக் கடவுளப்பா மகிழ்ச்சி பூண்டார்

#119
*7
மகிழ்ச்சியுடன் மார்க்கண்டா வாராய் கண்ணே வரலாறு நீ எவ்வாறு அறிவாய் சொல்வாய்
சுகட்சியுடன் கருதிப் பார் யுகங்கள்-தோறும் சூட்சம் இந்த மாலோன்-தன் வயிற்றில் சேர்வான்
அகட்சியுடன் ஆலிலை மேல் இருப்பார் ஐயா அப்போதே இவரிடத்தில் எல்லா ஞானம்
இகழ்ச்சியுடன் இவற்குப் பின் எவரோ காணேன் இவ் வார்த்தை நான் அறியேன் அவரைக் கேளீர்

#120
*8
கேளும் என்றான் மார்க்கண்டன் சிவன்தான் அப்போ கிருபையுடன் இவ்வளவும் அறிவாயோடா
ஆளுகின்ற ஈசனும் நாம் அறியோம் இந்த அருமை-தனை நீ அறிந்தாய் அருமைப் பிள்ளாய்
காளகண்டர் மாயோனைச் சொல்வீர் என்றார் கரு ஏது நீ அறிந்தவாறும் ஏது
பாளுகின்ற முப்பாழும் தாண்டி நின்ற பர ஞான சின்மயமும் பகர்ந்திடீரே

#121
*9
பரமான பரம கயிலாச வாசா பார்த்திருப்போம் ஆலிலை மேல் பள்ளியாகித்
தரமான புசுண்டமுனி அந்த வேளை சக்கரத்தைப் புரளவொட்டார் தவத்தினாலே
தூரமாக எவ்வாறோ திரும்பப் போவார் சூட்சமதை நாம் அறிவோம் பின் ஏதோதான்
வரமான வரம் அளித்த சூரன் வாழ்வே வசிட்டர் போய் அழைத்துவரத் தகும் என்றாரே

#122
*10
தகும் என்ற வார்த்தை-தனை அறிந்தே ஈசர் தவமான வசிட்டரே புசுண்டர் சாகை
அகம் மகிழ அங்கு ஏகி அவர்க்கு உரைத்தே அவரை இங்குச் சபைக்கு அழைத்து வருவாய் என்ன
செகமான செகம் முழுதும் ஆண்ட சோதி திருவடிக்கே நமஸ்கரித்துத் திரும்பினார் பின்
உகமானம்-தனை அறிந்தும் அரனார் சொன்ன உளவு கண்டார் புசுண்டர் எனும் காகம்தானே

#123
*11
காகம் என்ற வேடமதாய் விருட்சம் மீதில் காத்திருந்தார் வசிட்டரவர் கண்டார் நாதர்
ஏகமதாய் எட்டான வசிட்டரே நீர் எங்கு வந்தீர் வாரும் என்றே இடமும் ஈயத்
தாகமுடன் ஈசர் உம்மை அழைக்கச் சொன்னார் சங்கதியைத் தங்களிடம் சாற்ற வந்தேன்
பாகமுடன் எட்டான விவரம்-தன்னைப் பத்து மெய்ஞ்ஞானப் பொருள் அருள்பெற்றோரே

#124
*12
பெற்றோரே என்று உரைத்தீர் வசிட்டரே நீர் பிறந்து இறந்தே எட்டாம் கால் பிறந்து வந்தீர்
சத்தான சத்துகளும் அடங்கும் காலம் சக்கரமும் திரும்பிவிட்டால் சமயம் வேறாம்
சித்தான பஞ்சவர்கள் ஒடுங்கும்போது சேரவே ரிஷி முனிவர் சித்தரோடு
முத்தாக அஞ்செழுத்தில் ஒடுக்கமாவார் முத்து மணிக் கொடி ஈன்றாள் முளைத்திட்டீரே

#125
*13
முளைத்திட்டீர் இத்தோடு எட்டு விசை வந்தீர் முறையிட்டீர் இவ் வண்ணம் பெருமை பெற்றீர்
களைத்திட்டுப் போகாதீர் சொல்லக் கேளும் கண்டமதில் விடம் பூண்டார்க்கு அலுவல் என்ன
கிளைத்திட்டுப் போனக்கால் மறந்து போவார் கிளர் நான்கு யுகம்-தோறும் இந்தச் செய்கை
பிழைத்திட்டுப் போவம் என்றால் அங்கே போவோம் பேய்பிடித்தோர் வார்த்தை சொல்ல நீர் வந்தீரே

#126
*14
வந்தீரே வசிட்டரே இன்னும் கேளும் வளமைதான் சொல்லி வந்தேன் வேடம் நீங்கி
இந்த மாமரக் கொம்பில் இருந்தேன் இப்போது இதுவேளை எவ்வளவோ சனமோ காணும்
அந்தமோ ஆதியோ இரண்டும் காணார் அவர்கள் எல்லாம் ரிஷி யோகி சித்தர் ஆனார்
சந்தேகம் உமக்கு உரைக்கப் போகாது ஐயா சாமிக்கே சொல்லும் ஐயா இதோ வந்தேனே

#127
*15
வந்தேனே என்று உரைத்தவாறு கொண்டு வசிட்டருமே வாய் உலர்ந்து காலும் பின்னி
இந்தேனே முனிநாதா சரணம் காப்பீர் என்று சிவன் சபை நாடி முனிவர் வந்தார்
மைந்தனையே ஈன்று அருளும் கடவுள் நாதா மா முனிவன் வாயெடுக்கப் புசுண்டர் சொல்வார்
சிந்தனைசெய் ஈச்சரனே வந்தேன் ஐயா சிவசிவா இன்னது என்று செப்பிடீரே

#128
*16
செப்பும் என்ற புசுண்டமுனி முகத்தை நோக்கிச் சிவன் மகிழ்ந்தே ஏதுமொழி செப்புவார் கேள்
கொப்பும் என்ற யுகம் மாறிப் பிறழும் காலம் குரு நமசிவாயம் எங்கே பரம்தான் எங்கே
அப்பும் எந்தப் பஞ்சகணத் தேவர் எங்கே அயன் மாலும் சிவன் மூவர் அடக்கம் எங்கே
ஒப்பும் இந்த யுகம் மாறிப் பிறந்தது எங்கே ஓகோகோ முனிநாதா உரைசெய்வீரே

#129
*17
உரை என்றீர் உம்-தமக்குப் புத்தி போச்சு உம்மோடே சேர்ந்தவர்க்கும் மதிகள் போச்சு
பரை என்றால் பரை நாடி நிலைக்கமாட்டீர் பரமசிவன் தான் என்னும் பேரும் பெற்றீர்
இரை என்றால் வாய் திறந்து பட்சி போல எல்லோரும் அப்படியே இறந்திட்டார்கள்
நிறை என்ற வார்த்தைகளைச் சொன்னேனானால் நிசம் கொள்ளத் தந்தரங்கள் நிசம் கொள்ளாதே

#130
*18
கொள்ளாமல் போவது உண்டோ மவுன யோகி கோடியிலே உனைப் போல ரிஷியோ காணேன்
உள்ளாக ரிஷி ஒருவர் இல்லாவிட்டால் யுக வார்த்தை யார் உரைப்பார் யானும் காணேன்
விள்ளாமல் தீராது முனிவனே கேள் மெய்ஞ்ஞான பரம் புகுந்த அருள் மெய்ஞ்ஞானி
தள்ளாமல் சபையிலுள்ளோர் எல்லார் கேட்கச் சாற்றிடாய் முனிநாதா சாற்றிடாயே

#131
*19
சாற்றுகிறேன் உள்ளபடி யுகங்கள்-தோறும் தமக்கு உவந்து சொல்லுவதே தவமாய்ப் போச்சு
மாற்றுகிறேன் கணத்தின் முன் உரைத்துப் போனேன் வாதாட்டம் எனது ஆச்சே இனி என் சொல்வேன்
சேற்றிலே நாட்டியதோர் கம்பம் போலத் திரும்பினது போல் ஆச்சு யுகங்கள்-தோறும்
ஆற்றுகிறான் அந்தமது ஆகும்போது அரகரா அந்நேரம் நடக்கை கேளே

#132
*20
கேளப்பா நடந்த கதை சிவமே உண்மை கொடியாகச் சக்கரங்கள் திரும்பும்போது
பாளப்பா தசநாதம் மவுனம் பாயும் பரமான மவுனமது பரத்தில் சாடும்
ஏளப்பா அடுக்குகளும் இடிந்து வீழும் இருந்த சதாசிவம் ஓடி மணியில் மீளும்
கேளப்பா இது கேளாய் எவரும் செல்வார் ஓகோகோ அண்டம் எல்லாம் கவிழ்ந்துபோமே

#133
*21
கவிழ்ந்துபோம் அப்போது அடியேன் அங்கே கருத்துவைத்துத் தியானம் ஒரு தியானம் உண்டு
தவழ்ந்துபோம் காலமப்போ நிறுத்துவேன் யான் சமையமதில் அக்கினி போல் தம்பம் காணும்
சிவந்த வண்ணம் நீல உருச் சுடர்விட்டு ஏகும் சிவசிவா அக்கினி போல் கொழுந்துவீசும்
நகர்ந்து அதன் அருகேதான் சென்று நிற்பேன் நகர முதல் அஞ்செழுத்தும் வரக் காண்பேனே

#134
*22
காண்பேனே நகரமது மகாரம் புக்கும் கருத்தான மகாரமது சிகாரம் புக்கும்
தேன்பேனே சிகாரமது வகாரம் புக்கும் சிவசிவா வகாரமது யகாரம் புக்கும்
கோன்பேனே யகாரமது சுடரில் புக்கும் குருவான சுடர் ஓடி மணியில் புக்கும்
நாண்பான மணி ஓடிப் பரத்தில் புக்கும் நற்பரந்தான் சிவம் புக்கும் சிவத்தைக் கேளே

#135
*23
கேளப்பா சிவம் ஓடி அண்டம் பாயும் கிருபையாய் அண்டமது திரும்பிப் பாயும்
கோளப்பா அண்டமது கம்பத் தூண்தான் குருவான தச தீட்சை ஒன்றும் ஆச்சு
மீளப்பா தம்பமது விளங்கும் செய்கை மேலும் இல்லை கீழும் இல்லை யாதும் காணேன்
ஆளப்பா நரைத்த மாடு ஏறுவோனே அன்றளவோ இன்றளவோ அறிந்திலேனே

#136
*24
அறிந்திலேன் என்று உரைத்த புசுண்டமூர்த்தி அரகரா உன் போல முனியார் காணேன்
தெரிந்திலேன் என்று உரைத்தார் மனம் கேளாது சிவன் நயந்து கேட்கவும் நீ ஒளிக்க வேண்டா
பொருந்திலேன் பூருவத்தில் நடந்த செய்கை பூரணத்தால் உள்ளபடி புகழ்ந்து சொல்லும்
பரிந்திலேன் மிகப் பரிந்து கேட்டேன் ஐயா பழ முனியே கிழ முனியே பயன் செய்வாயே

#137
*25
பழ முனிவன் என்று உரைத்தீர் கடவுளாரே பரும் தீபதம்பத்தைப் பலுக்கக் கேளும்
குழுவுடனே தம்பமதில் யானும் போவேன் கோகோகோ சக்கரமும் புரண்டு போகும்
தழும்பு அணியச் சாகரங்கள் எங்கும் தானாய்ச் சத்த சாகரம் புரண்டே எங்கும் பாழாய்
அழகுடைய மாது ஒருத்தி தம்பத்து உள்ளாள் அரகரா கண்ணாடி லீலைதானே

#138
*26
லீலை பொன் காணும் முகம் போலே காணும் நிலை பார்த்தால் புருடரைப் போல் திருப்பிக் காணும்
ஆலை போல் சுழன்று ஆடும் கம்பத்துள்ளே அரகரா சக்கரங்கள் ஆறும் காணும்
வாலை போல் காணும் ஐயா பின்னே பார்த்தால் மகத்தான அண்டமது கோவை காணும்
சோலையாய் அண்டமதில் சிவம்தான் வீசும் சிவத்திலே அரகரா பரமும் காணே

#139
*27
பரத்திலே மணி பிறக்கும் மணியின் உள்ளே பரம் நிற்கும் சுடர் வீசும் இப்பால் கேளும்
நிரத்திலே சடம்தனில் யகாரம் காணும் நிச்சயமாம் யகாரமதில் வகாரம் காணும்
வரத்திலே வகாரமதில் சிகாரம் காணும் வரும் போலே சிகாரத்தில் மகாரம் காணும்
நரத்திலே மகாரத்தில் நகாரம் காணும் நன்றாம் அப் பூமி அப்போ பிறந்தது அன்றே

#140
*28
பிறந்தது ஐயா இவ்வளவும் எங்கே என்றால் பெண் ஒருத்தி தூணதிலே நின்ற கோலம்
சுறந்தது ஐயா இவ்வளவும் அந்த மாது சூட்சமதே அல்லாது வேறொன்று இல்லை
கறந்தது ஐயா உலகம் எல்லாம் காமப் பாலைக் கால் அடியில் காக்கவைத்துச் சகல செந்தும்
இறந்தது ஐயா இவ்வளவும் செய்த மாது எங்கு என்றால் உன்னிடத்தில் இருந்தாள் கன்னி

#141
*29
இடப் பாகம் இருந்தவளும் இவளே மூலம் இருவருக்கும் நடுவானது இவளே மூலம்
தொடக்காக நின்றவளும் இவளே மூலம் சூட்சம் எல்லாம் கற்று உணர்ந்தது இவளே மூலம்
அடக்காக அடக்கத்துக்கு இவளே மூலம் ஐவருக்கும் குரு மூலம் ஆதி மூலம்
கடக் கோடி கற்பமதில் நின்ற மூலம் கன்னி இவள் சிறு வாலைக் கன்னிதானே

#142
*30
கன்னி இவள் என்று உரைத்தார் புசுண்டமூர்த்தி கர்த்தர் ப்ரபோ மனம் சற்றே கலங்கினார் பின்
மண்ணுள்ள தேவர்களும் பிறப்பித்து இந்த மார்க்கத்தில் இருப்பதுவோ மவுனப் பெண்ணே
உன்னிதமாய் உன் கருணை எங்கே காண்போம் ஓகோகோ ஐவரும்தான் வணங்கினார்கள்
கொன்னியவள் வாக்கு உரையாள் சிவமே கன்னி கொலு முகத்தில் நால்வரும் போய் வணங்கினாரே

#143
*31
வணங்கியவர் வாய் புதைந்து நின்றார் பின்னே மாது கலியாணி என வசனித்தார்கள்
வணங்கினார் தேவரொடு முனிவர்தாமும் மற்றும் உள்ள தேவர்களும் நவபாடாளும்
வணங்கினார் அட்ட கசம் திகிரி எட்டும் வாரிதியும் சேடனும் மால் அயனும் மூவர்
வணங்கினார் மிக வணங்கித் தொழுதார் அப்போ வாலையவள் மெய்ஞ்ஞானம் அருள் ஈவாளே

#144
*32
அருள் ஈவாள் திருமணியை மாலை பூண்டாள் அரகரா சின்மயத்தின் நீறு பூசிப்
பொருள் ஈவாள் அவரவர்க்கும் ஏவல் சொல்லிப் பொன்றாத பல்லுயிர்க்கைக்கு இடங்கள் வேறாய்த்
தெருள் ஈவாள் சிவயோகம் தெளிவதற்குச் செயல் உறுதியாக அல்லோ தெரியவேண்டித்
தெருள் ஈவாள் தாயான சிறிய வாலை சிவசிவா சூட்சம் பூரணமும் முற்றே

#145
*33
பூருவத்தில் நடந்த கதை இதுதான் என்று புகன்றுவிட்டுப் புசுண்டரும் தம் பதிக்குச் சென்றார்
காரணத்திலே வகுத்தேன் இந்த ஞானம் கம்பம் அணி வாலை கொலுக் கூட்டம் அப்பா
நாரணத்தில் நின்று இலங்கும் மவுன வாலை நாட்டினாள் சிவராச யோகம் கேளு
ஆரணத்தி பூரணத்தி அருள் மெய்ஞ்ஞானி ஆதி சத்தி வேத முத்தி அருள்செய்வாளே
**4 காகபுசுண்டர் குறள்

#146
*1
சின்மயத்தைப் போற்றிச் சிவராச யோகத்தில்
நன்மை பராபரத்தை நாடு

#147
*2
அண்ட முடி மீதில் அங்கி ரவி மதியைக்
கண்டு தரிசித்தல் கதி

#148
*3
வலம் இடமாய் நின்ற மதி ரவியை மாறி
விலகாது அடியில் நிற்பின் வீடு

#149
*4
அறுபத்துநால் யோகம் அவ்வளவும் தள்ளி
ஒருபொழுதும் உண்டு நிலை ஓர்

#150
*5
உலகமே மாயம் என உன் மனதில் கண்டு
நலமாக நாதன் அடி நம்பு

#151
*6
சித்தர் பதினெண்மர் செய்கையில் தோன்றாத
அத்தன் அருளும் புசுண்டன் யான்

#152
*7
சொன்னேன் அறிந்து சுகமாய் உலகோருக்கு
எந்நாளும் வாழ்க என்றே யான்

#153
*8
கண்ணுள் மணியாகிக் காரணமாய் நின்றான்
மண் முதிர் பதியுமாறு

#154
*9
விண்டனே ஞானம் வெளியாக முப்பத்தி
ரண்டில் அறிவீர் நலம்

#155
*10
நேத்திரத்தைக் காகம் போல் நிச்சயமாய் நிற்க
ஆத்துமத்தில் ஆனந்தமாம்

#156
*11
உலகில் அறிந்தோர் ஒருநாளும் மாளார்
பல நினைவை விட்டு நீ பார்

#157
*12
கண்டோரும் சொல்லார் கருத்தால் பெரியோரைத்
தொண்டுசெய்து பெற்ற சுகம்

#158
*13
ஆதியில் சொன்ன வியர் அண்டமதை எடுத்து
மாது சிவன் பூசைசெய்து வை

#159
*14
முப்பொருளைச் சுட்டு முழுது அழுது நீறு ஆக்கித்
தப்பாமல் உண்டு நிலை சார்

#160
*15
யோகமுடன் கற்பம் உரைத்தேன் ஈரெட்டினில்
வேகமுடன் கண்டு உணருவீர்

#161
*16
வாசிமுனி மைந்தா மருவு பிரமத்தில்
மோசம் வாரா குறள் முற்றும்
**

15 காயக் கப்பல்


#0
ஏலேலோ ஏக ரதம் சர்வ ரதம்
பிரம ரதம் ஏலேலோ ஏலேலோ

#1
பஞ்சபூதப் பலகை கப்பலாய்ச் சேர்த்து
பாங்கான ஓங்கு மரம் பாய்மரம் கட்டி
நெஞ்சு மனம் புத்தி ஆங்காரம் சித்தம்
மானாபிமானம் கயிறாகச் சேர்த்து
ஐந்தெழுத்தைக் கட்டி சாக்காக ஏற்றி
ஐம்புலன்-தன்னிலே சுக்கான் நிறுத்தி
நெஞ்சு கடாட்சத்தால் சீனிப்பாய் தூக்கி
சிவனுடைய திருப்பொருளை சிந்தையில் நினைந்து
தஞ்சலான வெள்ளத்தில் தானே
அகண்ட ரதம் போகுதடா
ஏலேலோ ஏலேலோ

#2
களவையும் கேள்வையும் தள்ளுடா தள்ளு.
கருணைக் கடலிலே தள்ளுடா கப்பல்
நிற்குணம்-தன்னிலே தள்ளுடா தள்ளு
நிறைந்த பரிபூரணத்தால் தள்ளுடா கப்பல்
மூக்கணை மூன்றையும் தள்ளுடா தள்ளு
முப்பாழுக்கு அப்பாலே தள்ளுடா கப்பல்
திக்கு திசை எங்கும் தள்ளுடா தள்ளு
திருமந்திரம் சொல்லி தள்ளுடா கப்பல்
பக்கமுடன் கீழ் மேலும் தள்ளுடா தள்ளு
பரவெளிக்கு அப்பாலே போகுதடா கப்பல்
ஏலேலோ ஏலேலோ

#3
தந்தை தாய் சுற்றமும் சகலமும் மறந்து
தாரம் சகோதரம் தானதும் மறந்து
பந்தமும் நேசமும் பாசமும் மறந்து
பதினாலு லோகமும் தனையும் மறந்து
இந்திரியர்கள் இரட்சித்த கப்பலில் ஏறி
ஏகாந்தமானதொரு கடலிலே தள்ளி
அந்திரமான வெளி அருளானந்த வெள்ளத்தில்
அழுந்துதையோ கப்பல்
ஏலேலோ ஏலேலோ
**

16 காரைச் சித்தர்

** கனக வைப்பு

#1
மாளாத சக்தியடா மனிதன் சக்தி மலிவாகக் கிடைக்குதடா மனத்துக்குள்ளே
மீளாத மார்க்கமடா மின் ஆத்தாளை மேவி உனக்கு உட்காணும் வேதை மார்க்கம்
ஆளாக என்றேனும் எப்போதேனும் அனைவர்க்கும் கிட்டுமடா ஞானப் பேறு
தூளாகக் காமத்தைத் துரத்திவிட்டே துணையாகக் கம்பத்தே தூங்குவாயே

#2
தூங்குவாய்ச் சாமத்தே விழித்துக்கொள்ளு தூங்காமல் தூங்கி வெறும் தூக்கம் தள்ளு
நீங்காமல் நியமித்தே நிறைந்து நில்லு நிலமான சர்மத்தைச் சுத்தம்செய்தே
ஆங்காரச் சாதி எலாம் அகற்றிப்போடு அன்பாக வாதித்தே விரட்டிப்போடு
பாங்காக ஆதித்தன் துணையாய் நிற்பான் பண்பாகப் போதித்தேன் சாதிப்பாயே

#3
குப்பையிலே பூத்திருப்பாள் மின்மினுக்கிக் கோலத்தே பொன் மேனி கொண்டு நிற்பாள்
தர்ப்பையிலே சிவப்பான தழலைப் போல்வாள் தனக்குள்ளே சர்ப்பம்தான் சரண் புக்கு ஆடும்
அர்ப்பையடா சகவாசம் அணைந்து தொட்டால் அனைத்தையுமே அரித்திடுவாள் சலித்துக்கொள்வாள்
கர்ப்பையிலே தான் பிரித்துக் கண்ணிவைத்தே கணவாதம் செய்திட்டார் சித்தர் பல்லோர்

#4
சித்தர் மனம் மலர்ந்திட்டால் அதுவே போதும் வெத்து வெறும் விளையாட்டும் சித்தியாகும்
துத்தி எனும் பணத் துத்தி இலையின் சாற்றில் துரிசு அறுத்துத் தவம்செய்வார் தவத்தின் போக்கில்
வித்து இது எனும் விந்துவுடன் நாதம் கூட்டி வேதம் முழங்கிட ஞான வீறுகொண்டே
துத்தம் அறத் தான் ஒடுங்கத் தூய்மை பெற்ற துப்புறவே சித்திக்காம் துறவு கோலே

#5
பயன் இல்லாச் சொல் அகற்றிப் பயனே கூறல் பயனதையும் இனிதான பழமாய்ச் செப்பல்
நயன் இல்லாக் கடுவழிகளவை விட்டு ஓடல் நாட்டம் எலாம் அருள் நாட்டமாகக் கொள்ளல்
அயன் இல்லாது எவையும் தானாகக் காணல் அத்துவிதத்தால் இன்பச் சித்தம் பேணல்
இவை எல்லாம் அரும் குணமாம் ஈசற்கு அன்பாம் இடர் நீக்கிச் சுடர் காட்டும் நியமம்தானே

#6
சித்தர் எலாம் உண்மை-தனை மறைத்தார் என்றே செப்பி மனப்பால் குடிக்க வேண்டாம் சொன்னேன்
சித்தர் மொழி நூலதனைத் தொட்டபோதே சித்தர் எலாம் ஒற்றர் எனச் சேர்ந்து நிற்பார்
சித்தமுறும் குண நிறைவில் நாட்டம்கொள்வார் சிறிது அழுக்கைக் கண்டாலும் விலகிப் போவார்
சித்த நிறைவு உள்ளவர்க்கே சித்தி தோன்றும் சித்தமிலார் வித்தை எலாம் சிரிப்பே கண்டீர்

#7
தேவாரம் வாசகம்தான் திகழக் கூட்டித் திருவாயின் மொழி எல்லாம் உருவாய்ச் சேர்த்து
போவாரைப் போகாரைப் புலம்பவைத்து போக்கற்றார்தமக்கும் ஒரு போக்குக்காட்டி
கோவாரம் பூவாரம் கொழிக்கவிட்டு கோலமுறச் செய்தாலும் குவலயத்தின்
பூபாரம் குறைத்திடுமோ குறைக்கொண்ணாது புகன்றிட்டேன் அவள் போக்கைப் புகன்றிட்டேனே

#8
ஊறு சுவை ஒளி நாற்றம் ஒளியே என்ன உலகத்திலே திரிந்து கடலில் புக்கு
வீறு திரை நுரை குமுழி விளையாட்டு ஆர்ந்து வினை விதிகள் வினை வெறிகள் வேகம் தேய்ந்து
ஆறு வரக் குரு அருளை அணைந்து பொங்கி அண்டாண்ட சாரத்தை அறிந்துகொண்டே
சாறு கொளச் சிந்தனையும் குவிந்து நிற்கும் சகஜ நிலையே யோகச் சமாதி கண்டீர்

#9
சிந்தித்தால் அது பாவம் சிணுங்கினாலோ சேருவது காமமடா தங்கித் தங்கிச்
சந்தித்தால் சங்கமடா சங்கமத்தில் சாருமடா சங்கடங்கள் சங்கிப் பங்கி
வந்தித்தால் வாதமடா வீண்விவாதம் வாகான மோகமடா மங்கிப் பொங்கி
நிந்தித்தால் நாசமடா நினைவுப் புந்தி நிலையமடா மாயையதன் மயக்குத்தானே

#10
வருத்தித்தான் சொல்வதில் என் வலு உண்டாமோ வழுத்துவதால் பலம் குறையும் மௌனம் போகும்
அருந்தித்தான் பருகிடுவான் ருசியைக் காணான் அமுதப்பால் குடித்தவனே அமரன் ஆவான்
துருந்தித்தான் பசி அறிவான் வாணியானை சோபையுறும் சேணியனை விலக்கி அப்பால்
பொருந்தித்தான் திருந்தினவன் பொருந்தி நிற்கும் பொக்கமதே ஆசனமாம் யோகம் கண்டீர்

#11
பார் உலகில் ஆன்மாவின் ஞானம் தேடப் பல நூல்கள் கற்று அறிந்தும் தெளிவு இல்லாமல்
நேர் இயலும் நதியதன் நீர் குளியார் தேத்து நெட்டிடு நீர் கடந்திடுவார் நெறியைக் காணார்
சீரியலும் பற்று அற்ற நீரைக் காணார் தேக்கி வந்து சிதறிய நீர்த் தேக்கம் உண்பார்
ஆர் அறிவார் அடடாடா அடடாடாடா அடயோகத்து அவல நிலை அதனைத்தானே

#12
இல்லறமே நல் அறமாம் என்று சொன்னால் இன்பம் எனப் பள்ளியறைக்கு உள்ளாகாதே
தொல் அறமே துறவறமே தனது வண்ணம் துறந்திடடா பற்று அறவே துறந்திடாமல்
சொல் அறமே உலகம் எல்லாம் கண்ணின் ரூபம் சொர்ண மயமாம் சொர்க்கம் சுக வைபோகம்
கல் அறமே கனக மணிப் பூஷணங்கள் கமலத்தைக் காத்திடுவான் பத்ம யோகி

#13
பெற்றவர்கள்-தம் கடனைத் தீர்க்க வேண்டும் உற்றவர்கள் உறு கதியைப் பார்க்க வேண்டும்
பற்றுவரவு அத்தனையும் முடிக்க வேண்டும் பற்று இல்லாப் பாமரரைக் காக்க வேண்டும்
செற்ற புலன் பொறி அடக்கிச் சேர வேண்டும் சித்தமுறச் சிவபூஜை செய்யத்தானே
கற்றவர்க்கே பல யோகம கனியும் பாரே கல்லாதவர் யோகம் எல்லாம் பொல்லா யோகம்

#14
யுகம் மாறிப்போச்சுதடா கலியுகத்தில் யோகியவன் நிலைமாறிப் புரண்டு போவான்
ஜகம் மாறிப்போச்சுதடா ஜகத்தில் உள்ளோர் தமை மறந்தார் பொருள் நினைத்தே தவிக்கலுற்றார்
அகம் மாறிப்போச்சுதடா காமம் கோபம் அறு வகையாம் பேய்க்குணங்கள் அதிகம் ஆச்சே
புகல் மாறிப் போச்சுதடா மனிதற்குள்ளே பூரணர்கள் மறைந்துள்ளர் அவரைக் காணே

#15
கால நெறி யாது உரைப்பேன் கேளாய் கேளாய் காண வரும் ஆயிரமா வருடத்துள்ளே
பாலமடா வானத்துக்கு ஏறப் பாதை பகன வெடி சுகன வெடி பண்ணுவார்கள்
சீலமுறும் வர்ணதர்மம் சிதைந்துபோகும் சீச்சீச்சீ வரன்முறைகள் மாறிப்போகும்
கோலமுறும் குவலயமே சட்டதிட்டம் கூறுமடா கொதிக்குமடா கோபம் தாபம்

#16
தீராத புயல்கள் எல்லாம் திடுக்கென்று ஆடும் தீக் கக்கு எரிமலைகள் சிரிப்புக் கூடும்
தேராத நோய்கள் எலாம் தினம் உண்டாகும் திசை கலங்கும் பூகம்பத் திறமே சாடும்
நேரான நெறி எல்லாம் நடுங்கி ஓடும் நெறி அல்லா நெறி எல்லாம் நிறைந்து ஊடாடும்
போராகக் குருதி கொப்பளித்துப் பொங்கும் புகையாகப் புவன வளம் புகைந்துபோகும்

#17
தெய்வம் எலாம் விண் ஓடிப்போகும் போகும் தீமை எலாம் மண்ணகத்தின் தெருக்கூத்து ஆகும்
உய்யும் உண்மை உளத்து உண்மை ஓடிப்போகும் உலக உண்மை விஞ்ஞானம் கூடி வேகும்
ஐய்யம் இல்லை என அகங்காரம்தான் துள்ளும் ஐய்யையோ அகிலம் எலாம் கள்ளம் கள்ளம்
துய்ய நெறி காட்டி நின்றார் சித்தர் சித்தர் தூல நெறி காட்டுகின்றார் எத்தர் எத்தர்

#18
விஞ்ஞான விதி எல்லாம் வேகம் வேகம் வேக மினல் தாமசத்தின் வித்தை வித்தை
அஞ்ஞான விதி எல்லாம் போகம் போகம் அடடாடா கயிறு அறுந்த பொம்மலாட்டம்
செய்ஞ்ஞானக் கதி எல்லாம் ஆணவத்தின் செயல் அன்றி வேறு இல்லை சென்மம் சென்மம்
மெய்ஞ்ஞான விளைவு எல்லாம் யோகம் யோகம் மின்னான சக்தியுடன் சாகம் சோகம்

#19
வித்து என்பான் முனை என்பான் மின் வீச்சு என்பான் வெப்பு என்பான் காந்தத்தின் கப்பே என்பான்
வித்தையடா விண் எல்லாம் சுழலும் மார்க்கம் விந்தையடா ஆகர்ஷண வியப்பே என்பான்
வெத்து அறிவாம் கனி அறியான் மேல்தோல் உண்பான் விஞ்ஞானி அவன் அறிவைப் பழிக்கவில்லை
சித். அறிவான் சத். அறிவான் சித்தன் சித்தன் சித்தத்திலே சிருட்டிச் சித்தம் காண்பான்

#20
அடடாடா விஞ்ஞானி அறையக் கேளாய் யாவைக்கும் காரணத்தை அறிவாயோ நீ
அடடாடா அகிலாண்டக் கவர்ச்சி ஏனோ அணுவுக்குள் மின்காந்தம் அமைந்தது ஏனோ
கெடடாடா நேர் நிரையான் வின்கள் ஏனோ குவிந்து இணைந்து பிரிந்த ரசாயனமும் ஏனோ
விடடாடா இவை எல்லாம் என்னே என்னே விளக்கிடுவாய்க் களக்கம் அறச் சொன்னேன் சொன்னேன்

#21
வெத்து உலக விதி எல்லாம் வெப்பம் தட்பம் விஞ்ஞான விதி எல்லாம் சேர்ப்பும் கூர்ப்பும்
செத்து உலக விதி எல்லாம் யாதம் கூதம் சீவன் உடல் விதி எல்லாம் காமம் கோபம்
சத்து உலக விதி எல்லாம் சகஜம் சாந்தம் தான்தானாத் தன் மயமாத் தழை வேதாந்தம்
சித்து உலக விதி சத்தினோடு சித்தாய்ச் சேர் அனந்தத்து ஆனந்தச் சீராம் வேராம்

#22
வேர் அறியா விளைவு அறியும் விஞ்ஞானம்தான் வேர் அறிந்தே விளையாடும் மெய்ஞ்ஞானம்தான்
சார்பு அறியும் செயல் அறியும் விஞ்ஞானம்தான் சார்ப்புதரும் சாரமதே மெய்ஞ்ஞானம்தான்
ஈர் அறியும் ஈர்மை எலாம் விஞ்ஞானம்தான் இருமை எலாம் ஒருமையுறல் மெய்ஞ்ஞானம்தான்
பார் அறியும் பேத நெறி விஞ்ஞானம்தான் பரம் அறியும் போத நெறி மெய்ஞ்ஞானம்தான்

#23
காமத்தை விட்டிடடா கலகத்தை வெட்டிடடா கருநொச்சிக் கவசத்தில் காமினியைக் கட்டிடடா
ஊமைக்கும் அத்தையடா உலகோர்க்கு நத்தையடா உரை எல்லாம் மித்தையடா உனக்கு அவளே வித்தையடா
சாமத்தைக் கண்டிடடா சர்மத்தை வென்றிடடா சகலத்தையும் தழுவும் சத்தியத்தில் நின்றிடடா
வாமத்தி அருளாலே வாதத்திலே வெற்றி மண் எல்லாம் பொன் ஆகும் மார்க்கத்தைக் கண்டிடடா

#24
மூலத்தின் கனலதனை மூட்டி மூட்டி மூதண்ட முப்பூவின் பாத்திரத்தில்
கீலத்தின் கீழ்நெல்லிச் சாற்றைக் காய்ச்சிக் கிறிகொண்ட சூதத்தில் நாதம் வாங்கிச்
சாலத்தான் நீர் மேலே நெருப்பைப் போட்டே சாரத்தான் மலைதாங்கிக்குள்ளே ஓட்டி
ஆலத்தான் அமுதைத்தான் விழுதை நாட்டி ஆறத்தான் அமரத்தான் அனைத்தும் ஆமே

#25
வெப்பு எல்லாம் தீர்ந்துவிடும் வித்தை கண்டாய் வினை எல்லாம் போக்கிவிடும் விறலே கண்டாய்
அப்பப்பா நவகோடி லிங்கம் தோன்றும் அவற்றின் மேல் ஆடுகின்றாள் அன்னை அன்னை
துப்பு எல்லாம் துரிசு எல்லாம் சுத்திசுத்தி சொக்குமடா கைலாசச் சொக்கலிங்கம்
கப்பு எல்லாம் நீங்குமடா காமதேனு கறக்குமடா காயத்ரிக் கனிவாம் க்ஷீரம்

#26
திருவான சேறையடா பஞ்சசாரம் திகழ் தெய்வமும் சாரம் தேவி சாரம்
உருவான க்ஷேத்திரமும் சாரம் சாரம் உற்றதொரு புஷ்கரணி அதுவும் சாரம்
கருவான மானமதும் சாரம் சாரம் கண்ணான சாரமதைக் கண்டேன் கண்டேன்
குருவான பல சாரக் கோப்பும் கண்டேன் கோக்கனகமாம் சாரக் கொதிப்பும் கண்டேன்

#27
சாரைக் கோட்டைக்குள்ளே சாரம் சாரம் சார்ந்த நவசாரக் கற்பூரம் பூரம்
கூரைக் கோட்டைக்குள்ளே கோரம் கோரம் கொள்ளாமல் சிவயோனிக்கு உள்ளாம் வீரம்
வீரைக் கோட்டைக்குள்ளே விந்துப் பூவை வேதாந்த முப்பூவாய் விண்ணாம் தீரம்
காரைக் கோட்டைக்குள்ளே வந்த சித்தன் கரையாட அண்டாண்டம் பூண்ட பக்தன்

#28
பக்தனடா சித்தனடா பரம யோகி பார் பிழைக்கவே இ நூல் பகருகிறேன்
பித்தனடா பித்தியவள் சித்தத்தாலே பேயன் யான் பேத்தல் இதைப் பேணிப் பார்ப்பீர்
வித்தனடா வேதனடா வேதாந்தத்தின் வித்தையுறும் வேதை எலாம் விரிவாச் சொன்னேன்
இத் தரையில் இ நூலைப் போலே இல்லை இது கண்டார் வாதமுடன் வேதை கண்டார்
**

17 குதம்பைச் சித்தர்

** கடவுள் வாழ்த்து

#0
உலகில் அஞ்ஞானம் ஒழிந்திட யார்க்கும்
இலகும் கடவுளை ஏத்தி நலம் ஆர்
குதம்பாய் மெய்ஞ்ஞானம் கூறவே நன்கு
இதம் பார்த்த நெஞ்சில் நினை

#1
பூரணம் கண்டோர் இப் பூமியிலே வரக்
காரணம் இல்லையடி குதம்பாய்
காரணம் இல்லையடி

#2
போங்காலம் நீங்க நல் பூரணம் கண்டோர்க்குச்
சாங்காலம் இல்லையடி குதம்பாய்
சாங்காலம் இல்லையடி

#3
செத்துப் பிறக்கின்ற தேவைத் துதிப்போர்க்கு
முத்திதான் இல்லையடி குதம்பாய்
முத்திதான் இல்லையடி

#4
வஸ்து தரிசன மாட்சியாய்க் கண்டோர்க்குக்
கஸ்தி சற்று இல்லையடி குதம்பாய்
கஸ்தி சற்று இல்லையடி

#5
பற்றற்ற வத்துவைப் பற்றறக் கண்டோர்க்குக்
குற்றங்கள் இல்லையடி குதம்பாய்
குற்றங்கள் இல்லையடி

#6
காட்சியாம் காட்சி கடந்த பிரமத்தைச்
சூட்சியாய்ப் பார்ப்பாயடி குதம்பாய்
சூட்சியாய்ப் பார்ப்பாயடி

#7
வெட்டவெளிக்குள் வெறும் பாழாய் நின்றதை
இட்டமாய்ப் பார்ப்பாயடி குதம்பாய்
இட்டமாய்ப் பார்ப்பாயடி

#8
எங்கும் நிறைந்தே இருக்கின்ற சோதியை
அங்கத்துள் பார்ப்பாயடி குதம்பாய்
அங்கத்துள் பார்ப்பாயடி

#9
அண்டத்துக்கு அப்பால் அகன்ற சுடரினைப்
பிண்டத்துள் பார்ப்பாயடி குதம்பாய்
பிண்டத்துள் பார்ப்பாயடி

#10
ஆவித் துணை ஆகும் ஆராவமுதத்தைச்
சேவித்துக் கொள்வாயடி குதம்பாய்
சேவித்துக் கொள்வாயடி

#11
தீண்டா விளக்கினைத் தெய்வக் கொழுந்தினை
மாண்டாலும் போற்றிடுவாய் குதம்பாய்
மாண்டாலும் போற்றிடுவாய்

#12
அண்டமும் பிண்டமும் ஆக்கிய தேவனைத்
தெண்டனிட்டு ஏத்தடியே குதம்பாய்
தெண்டனிட்டு ஏத்தடியே

#13
விந்தை பராபர வத்தின் இணையடி
சிந்தையில் கொள்வாயடி குதம்பாய்
சிந்தையில் கொள்வாயடி

#14
விண்ணொளியாக விளங்கும் பிரமமே
கண்ணொளி ஆகுமடி குதம்பாய்
கண்ணொளி ஆகுமடி

#15
பத்தி சற்று இல்லாத பாமர பாவிக்கு
முத்தி சற்று இல்லையடி குதம்பாய்
முத்தி சற்று இல்லையடி

#16
எல்லாப் பொருளுக்கும் மேலான என் தேவைச்
சொல்லாமல் சொல்வாயடி குதம்பாய்
சொல்லாமல் சொல்வாயடி

#17
எந்த உயிர்க்கும் இரை தரும் ஈசனைச்
சந்ததம் வாழ்த்தடியோ குதம்பாய்
சந்ததம் வாழ்த்தடியோ

#18
காணக்கிடையாத கற்பாந்த கல்பத்தை
நாணாமல் ஏத்தடியே குதம்பாய்
நாணாமல் ஏத்தடியே

#19
அணுவாய் பல் அண்டமாய் ஆன சிற்சோதியைத்
துணிவாய் நீ போற்றடியோ குதம்பாய்
துணிவாய் நீ போற்றடியோ

#20
மாணிக்கக் குன்றிற்கு மாசற்ற சோதிக்குக்
காணிக்கை நல் மனமே குதம்பாய்
காணிக்கை நல் மனமே

#21
தேவரும் சித்தரும் தேடும் முதல்வர்
மூவரும் ஆவாரடி குதம்பாய்
மூவரும் ஆவாரடி

#22
சத்தாகிச் சித்தாகித் தாபர சங்கமாய்
வித்தாகும் வத்துவடி குதம்பாய்
வித்தாகும் வத்துவடி

#23
உருவாகி அருவாகி ஒளியாகி வெளியாகித்
திருவாகி நின்றது காண் குதம்பாய்
திருவாகி நின்றது காண்

#24
நீரும் நெருப்பும் நெடும் காற்று வானமும்
பாருமாய் நின்றதைக் காண் குதம்பாய்
பாருமாய் நின்றதைக் காண்

#25
புவனம் எல்லாம் கணப்போதே அழித்திடச்
சிவனாலே ஆகுமடி குதம்பாய்
சிவனாலே ஆகுமடி

#26
அவன் அசையாவிடின் அணு அசையாது என்றல்
புவனத்தில் உண்மையடி குதம்பாய்
புவனத்தில் உண்மையடி

#27
காரணம் சித்தென்றும் காரியம் சத்தென்றும்
ஆரணம் சொல்லுமடி குதம்பாய்
ஆரணம் சொல்லுமடி

#28
காரணம் முன் என்றும் காரியம் பின் என்றும்
தாரணி சொல்லுமடி குதம்பாய்
தாரணி சொல்லுமடி

#29
ஆதி சகத்து என்று அநாதி மகத்தென்று
மேதினி கூறுமடி குதம்பாய்
மேதினி கூறுமடி

#30
ஐந்து தொழிற்கும் உரியோன் அநாதியை
மந்திரம் போற்றுமடி குதம்பாய்
மந்திரம் போற்றுமடி

#31
யானை தலையாய் எறும்பு கடையாய்ப் பல்
சேனையைத் தந்தானடி குதம்பாய்
சேனையைத் தந்தானடி

#32
மண்ணளவு இட்டாலும் வத்துப் பெருமைக்கே
எண்ணளவு இல்லையடி குதம்பாய்
எண்ணளவு இல்லையடி

#33
ஆதியும் அந்தமும் ஆன ஒருவனே
சோதியாய் நின்றானடி குதம்பாய்
சோதியாய் நின்றானடி

#34
சீவனும் புத்தியும் சித்தமும் தந்தவன்
தேவன் அவனாமடி குதம்பாய்
தேவன் அவனாமடி

#35
சத்தும் சுயம்பு சுகுணம் சம்பூரணம்
சத்தியம் உள்ளானடி குதம்பாய்
சத்தியம் உள்ளானடி

#36
எங்கும் வியாபகம் ஈகை விவேகங்கள்
பொங்கமாய் உள்ளானடி குதம்பாய்
பொங்கமாய் உள்ளானடி

#37
தீர்க்க ஆகாயம் தெரியாத தன்மை போல்
பார்க்கப்படாதானடி குதம்பாய்
பார்க்கப்படாதானடி

#38
ஆத்துமம்-தன்னை அரூபமாய் எண்ணினாய்
கூத்தன் அவ்வாறு அல்லவோ குதம்பாய்
கூத்தன் அவ்வாறு அல்லவோ

#39
அண்டத்தைத் தேவன் அளிக்க எண்ணும்போதே
அண்டம் உண்டாயிற்றடி குதம்பாய்
அண்டம் உண்டாயிற்றடி

#40
வானம் முற்றாக வளர்ந்திடு சின்னங்கள்
தான் அவர் செய்தாரடி குதம்பாய்
தான் அவர் செய்தாரடி

#41
ஒன்றும் இல்லா வெளிக்குள்ளே பல் அண்டத்தை
நின்றிடச் செய்தானடி குதம்பாய்
நின்றிடச் செய்தானடி

#42
கருவிகள் இல்லாமல் காணும் பல் அண்டங்கள்
உருவுறச் செய்தானடி குதம்பாய்
உருவுறச் செய்தானடி

#43
எல்லா உயிர்களும் எந்த உலகமும்
வல்லானைப் போற்றுமடி குதம்பாய்
வல்லானைப் போற்றுமடி

#44
என்றும் அழியாமை எங்கு நிறைவாகி
நின்றது பிரமமடி குதம்பாய்
நின்றது பிரமமடி

#45
கண்டத்தை ஆள்கின்ற காவலர் போல் சோதி
அண்டத்தை ஆள்கின்றதே குதம்பாய்
அண்டத்தை ஆள்கின்றதே

#46
அண்டம் உண்டாகும் முன் ஆக அநாதியாய்க்
கண்டது பிரமமடி குதம்பாய்
கண்டது பிரமமடி

#47
எந்த உயிர்கட்கும் எந்த உலகிற்கும்
அந்தமாய் நின்றானடி குதம்பாய்
அந்தமாய் நின்றானடி

#48
தணிவான புத்தியால் தாணு அறியாதோர்
அணுவேனும் இல்லையடி குதம்பாய்
அணுவேனும் இல்லையடி

#49
மூன்று தொழிலினை மூர்த்தி செய்யாவிடில்
தோன்றாது உலகமடி குதம்பாய்
தோன்றாது உலகமடி

#50
சீரான தேவன் சிறப்பினைச் சொல்லவே
யாராலே ஆகுமடி குதம்பாய்
யாராலே ஆகுமடி

#51
எல்லார்க்கும் மேலான ஏகனைப் பற்றிய
வல்லார்க்கு முத்தியடி குதம்பாய்
வல்லார்க்கு முத்தியடி

#52
பற்றற நின்றானைப் பற்றறப் பற்றிடக்
கற்றார்க்கு முத்தியடி குதம்பாய்
கற்றார்க்கு முத்தியடி

#53
பந்தத்தை விட்டு ஒளிர் பந்தத்தைப் பற்றினால்
சந்ததம் முத்தியடி குதம்பாய்
சந்ததம் முத்தியடி

#54
ஆமை போல் ஐந்தும் அடக்கித் திரிகின்ற
ஊமைக்கு முத்தியடி குதம்பாய்
ஊமைக்கு முத்தியடி

#55
மந்தி மனத்தை வயப்படுத்திட்டார்க்கு
வந்து எய்தும் முத்தியடி குதம்பாய்
வந்து எய்தும் முத்தியடி

#56
அந்தக் கரணம் அடங்க அடக்கினால்
சொந்தம் பிரமமடி குதம்பாய்
சொந்தம் பிரமமடி

#57
தாய்க்குச் சரியான தற்பரம் சார்ந்திடில்
வாய்க்கும் பதவியடி குதம்பாய்
வாய்க்கும் பதவியடி

#58
சுத்த பிரமத்தைத் தொந்தம் என்று ஓட்டினால்
சித்திக்கும் முத்தியடி குதம்பாய்
சித்திக்கும் முத்தியடி

#59
கன்றை விடாது செல் கற்றாவைப் போல் வத்தை
ஒன்றினால் முத்தியடி குதம்பாய்
ஒன்றினால் முத்தியடி

#60
கைக் கனி போலவே காசறு பிரமத்தில்
சொக்கினால் முத்தியடி குதம்பாய்
சொக்கினால் முத்தியடி

#61
நித்திய வத்துவை நீங்காது நாடினால்
முத்திதான் சித்திக்குமே குதம்பாய்
முத்திதான் சித்திகுமே

#62
பேசரு நாற்றம் பெருகும் உடலுக்கு
வாசனை ஏதுக்கடி குதம்பாய்
வாசனை ஏதுக்கடி

#63
துற்கந்தமாய் மலம் சோரும் உடலுக்கு
நற்கந்தம் ஏதுக்கடி குதம்பாய்
நற்கந்தம் ஏதுக்கடி

#64
நீச்சுக் கவுச்சது நீங்கா மெய்க்கு மஞ்சள்
பூச்சுத்தான் ஏதுக்கடி குதம்பாய்
பூச்சுத்தான் ஏதுக்கடி

#65
சேலை மினுக்கதும் செம்பொன் மினுக்கதும்
மேலை மினுக்காமடி குதம்பாய்
மேலை மினுக்காமடி

#66
பீவாசம் உள்ளவள் பீறல் உடம்புக்குப்
பூவாசம் ஏதுக்கடி குதம்பாய்
பூவாசம் ஏதுக்கடி

#67
போராட்டம் செய்து புழுத்த உடம்பிற்கு
நீராட்டம் ஏதுக்கடி குதம்பாய்
நீராட்டம் ஏதுக்கடி

#68
சீயும் நிணமும் திரண்ட உடம்பினை
ஆயுவது ஏதுக்கடி குதம்பாய்
ஆயுவது ஏதுக்கடி

#69
காகம் கழுகு களித்து உண்ணும் மேனிக்கு
வாகனம் ஏதுக்கடி குதம்பாய்
வாகனம் ஏதுக்கடி

#70
கோவணத்தோடே கொளுத்தும் உடலுக்குப்
பூவணை ஏதுக்கடி குதம்பாய்
பூவணை ஏதுக்கடி

#71
நெடு வரை போலவே நீண்ட கன தனம்
நடுவாக வந்ததடி குதம்பாய்
நடுவாக வந்ததடி

#72
கையால் அழைப்பது போல் உனது கண்
மையால் அழைப்பது என்ன குதம்பாய்
மையால் அழைப்பது என்ன

#73
முதிர்ந்த சுடுகாட்டில் முல்லையை ஒத்த பல்
உதிர்ந்து கிடக்குமடி குதம்பாய்
உதிர்ந்து கிடக்குமடி

#74
கழறும் கிளி மொழி காலம் சென்றால் அது
குளறி அழியுமடி குதம்பாய்
குளறி அழியுமடி

#75
வளர்ந்து முறுக்காய் வயதில் எழுந்த தனம்
தளர்ந்து விழுந்திடுமே குதம்பாய்
தளர்ந்து விழுந்திடுமே

#76
பொருக்கின்றி மேனியில் பூரித்து எழுந்த தோல்
சுருக்கம் விழுந்திடுமே குதம்பாய்
சுருக்கம் விழுந்திடுமே

#77
கொள்ளையாகக் கொழுத்தே எழுந்த கண்
நொள்ளையதாய்விடுமே குதம்பாய்
நொள்ளையதாய்விடுமே

#78
மஞ்சு போல் ஆகி வளர்ந்திடும் கூந்தலும்
பஞ்சு போல் ஆகிடுமே குதம்பாய்
பஞ்சு போல் ஆகிடுமே

#79
பொன்னாலே செய் ஆடி போன்ற உன் கன்னங்கள்
பின்னாலே ஒட்டிவிடும் குதம்பாய்
பின்னாலே ஒட்டிவிடும்

#80
நல்லாய் உன் அங்கமும் நன்கு நிமர்ந்தாலும்
வில்லாய்ப் பின் கூனிவிடும் குதம்பாய்
வில்லாய்ப் பின் கூனிவிடும்

#81
முந்தி நடக்கின்ற மொய்ம்பும் சில் நாளையில்
குந்தி இருக்கச் செய்யும் குதம்பாய்
குந்தி இருக்கச் செய்யும்

#82
பிறக்கும் போது உற்ற பெருமையைப் போலவே
இறக்கும் போது எய்துவிடும் குதம்பாய்
இறக்கும் போது எய்துவிடும்

#83
கோபம் பொறாமை கொடுஞ்சொல் வன் கோள் இவை
பாபத்துக்கு ஏதுவடி குதம்பாய்
பாபத்துக்கு ஏதுவடி

#84
கள்ளம் கள் காமம் கொலைகள் கபடங்கள்
பள்ளத்தில் தள்ளுமடி குதம்பாய்
பள்ளத்தில் தள்ளுமடி

#85
பொருளாசை உள்ள இப் பூமியில் உள்ளோருக்கு
இருளாம் நரகமடி குதம்பாய்
இருளாம் நரகமடி

#86
கற்புள்ள மாதைக் கலக்க நினைக்கினும்
வற்புள்ள பாவமடி குதம்பாய்
வற்புள்ள பாவமடி

#87
தாழாமல் உத்தமர்-தம்மை இகழ்வது
கீழாம் நரகமடி குதம்பாய்
கீழாம் நரகமடி

#88
சுத்த பிரமத்தைத் தோத்திரம் செய்யார்க்கு
நித்தம் நரகமடி குதம்பாய்
நித்தம் நரகமடி

#89
எப்பாரும் போற்றும் இறையை நினையார்க்குத்
தப்பா நரகமடி குதம்பாய்
தப்பா நரகமடி

#90
பாழாகப் பூசைகள் பண்ணும் மடையர்க்கே
ஏழாம் நரகமடி குதம்பாய்
ஏழாம் நரகமடி

#91
காயம் எடுத்து ஆதி கர்த்தரை எண்ணார்க்குத்
தீயாம் நரகமடி குதம்பாய்
தீயாம் நரகமடி

#92
அன்போடு நல் பத்தி ஆதி மேல் வையார்க்குத்
துன்பாம் நரகமடி குதம்பாய்
துன்பாம் நரகமடி

#93
செங்காவி பூண்டு தெருவில் அலைவோர்க்கு
எங்காகும் நல் வழியே குதம்பாய்
எங்காகும் நல் வழியே

#94
மாத்திரைக்கோல் கொண்டு மாரீசம் செய்வார்க்குச்
சாத்திரம் ஏதுக்கடி குதம்பாய்
சாத்திரம் ஏதுக்கடி

#95
வெண்ணீறு பூசியே வீதியில் வந்தோர்க்குப்
பெண்ணாசை ஏதுக்கடி குதம்பாய்
பெண்ணாசை ஏதுக்கடி

#96
ஒப்பிலாத் தேவனை உள்ளத்தில் வைத்தோர்க்குக்
கப்பறை ஏதுக்கடி குதம்பாய்
கப்பறை ஏதுக்கடி

#97
சான்றோர் எனச் சொல்லித் தத்துவம் தேர்ந்தோர்க்கு
மான் தோல் ஏதுக்கடி குதம்பாய்
மான் தோல் ஏதுக்கடி

#98
நாடி மனத்தினை நாதன்-பால் வைத்தோர்க்குத்
தாடி சடை ஏனோ குதம்பாய்
தாடி சடை ஏனோ

#99
நாதற்கு உறவாகி நல் தவம் சார்ந்தோர்க்குப்
பாதக்குறடும் உண்டோ குதம்பாய்
பாதக்குறடும் உண்டோ

#100
தபநிலை கண்டு ஆதி-தன் வழி பட்டோர்க்குச்
செபமாலை ஏதுக்கடி குதம்பாய்
செபமாலை ஏதுக்கடி

#101
பங்கொடு பங்கில்லாப் பாழ்வெளி கண்டோர்க்கு
லங்கோடு ஏதுக்கடி குதம்பாய்
லங்கோடு ஏதுக்கடி

#102
தேடிய செம்பொன்னும் செத்த போது உன்னோடும்
நாடி வருவதுண்டோ குதம்பாய்
நாடி வருவது உண்டோ

#103
போம்போது தேடும் பொருளில் அணுவேனும்
சாம்போது தான் வருமோ குதம்பாய்
சாம்போது தான் வருமோ

#104
காசினி முற்றாய் உன் கைவசம் ஆயினும்
தூசேனும் பின்வருமோ குதம்பாய்
தூசேனும் பின்வருமோ

#105
உற்றார் உறவினர் ஊரார் பிறந்தவர்
பெற்றார் துணை ஆவரோ குதம்பாய்
பெற்றார் துணை ஆவரோ

#106
மெய்ப்பணி கொள்ளாத மேதினி மாந்தர்க்குப்
பொய்ப்பணி ஏதுக்கடி குதம்பாய்
பொய்ப்பணி ஏதுக்கடி

#107
விண்ணாசை-தன்னை விரும்பாத மக்கட்கு
மண்ணாசை ஏதுக்கடி குதம்பாய்
மண்ணாசை ஏதுக்கடி

#108
சேனைகள் பூம் தேர் திரண்ட மனுத் திரள்
யானையும் நில்லாதடி குதம்பாய்
யானையும் நில்லாதடி

#109
செங்கோல் செலுத்திய செல்வமும் ஓர்காலம்
தங்காது அழியுமடி குதம்பாய்
தங்காது அழியுமடி

#110
கூடங்கள் மாடங்கள் கோபுர மா புரம்
கூடவே வாராதடி குதம்பாய்
கூடவே வாராதடி

#111
நல்வினை தீவினை நாடிப் புரிந்தோர்-பால்
செல்வன நிச்சயமே குதம்பாய்
செல்வன நிச்சயமே

#112
செய் தவம் செய் கொலை செய் தர்மம் தன்னொடும்
எய்த வருவனவே குதம்பாய்
எய்த வருவனவே

#113
முத்தி அளித்திடு மூர்த்தியைப் போற்றிசெய்
பத்தியும் பின்வருமே குதம்பாய்
பத்தியும் பின்வருமே

#114
இச்சைப் பிறப்பினை எய்விக்கும் என்றது
நிச்சயம் ஆகுமடி குதம்பாய்
நிச்சயம் ஆகுமடி

#115
வல்லமையாகவே வாஞ்சை ஒழித்திட்டால்
நல்ல துறவாமடி குதம்பாய்
நல்ல துறவாமடி

#116
ஆசை அறுத்தோர்க்கே ஆனந்தம் உண்டு என்ற
ஓசையைக் கேட்டிலையோ குதம்பாய்
ஓசையைக் கேட்டிலையோ

#117
தேக்கிய ஆசையைச் சீயென்று ஒறுத்தோரே
பாக்கியவான்களடி குதம்பாய்
பாக்கியவான்களடி

#118
இன்பங்கள் எய்திட இச்சையுறாதார்க்குத்
துன்பங்கள் உண்டாமடி குதம்பாய்
துன்பங்கள் உண்டாமடி

#119
துறவிகள் ஆளாசை துறந்துவிடுவரேல்
பிறவிகள் இல்லையடி குதம்பாய்
பிறவிகள் இல்லையடி

#120
கொல்லா விரதம் குளிர் பசி நீக்குதல்
நல்ல விரதமடி குதம்பாய்
நல்ல விரதமடி

#121
தவநிலை ஒன்றனைச் சாராத மாந்தர்கள்
அவநிலை ஆவாரடி குதம்பாய்
அவநிலை ஆவாரடி

#122
தவமதை எந்நாளும் சாதிக்க வல்லார்க்குச்
சிவமது கைவசமே குதம்பாய்
சிவமது கைவசமே

#123
காமனை வென்று கடும் தவம் செய்வோர்க்கு
ஏமன் பயப்படுவான் குதம்பாய்
ஏமன் பயப்படுவான்

#124
யோகம்தான்வேண்டி உறுதிகொள் யோகிக்கு
மோகம்தான் இல்லையடி குதம்பாய்
மோகம்தான் இல்லையடி

#125
காலங்கள் கண்டு கடிந்த துறவோர்க்குக்
கோலங்கள் உண்டாமடி குதம்பாய்
கோலங்கள் உண்டாமடி

#126
ஐம்புலன் வென்றே அனைத்தும் துறந்தோர்கள்
சம்புவைக் காண்பாரடி குதம்பாய்
சம்புவைக் காண்பாரடி

#127
பொய்மை வெறுத்திட்டு மெய்யை விரும்பினோர்
மெய்யவர் ஆவாரடி குதம்பாய்
மெய்யவர் ஆவாரடி

#128
யான் என்னது என்னும் இருவகைப் பற்றற்றோன்
வானவன் ஆவானடி குதம்பாய்
வானவன் ஆவானடி

#129
அகம் புறம் ஆன பற்றற்ற மெய்ஞ்ஞானிக்கு
நகு பிறப்பு இல்லையடி குதம்பாய்
நகு பிறப்பு இல்லையடி

#130
பற்றுறில் துன்பமும் பற்றறில் இன்பமும்
முற்றாக எய்துமடி குதம்பாய்
முற்றாக எய்துமடி

#131
பொய்ஞ்ஞானம் நீக்கியே பூரணம் சார்தற்கு
மெய்ஞ்ஞானம் வேண்டுமடி குதம்பாய்
மெய்ஞ்ஞானம் வேண்டுமடி

#132
பிறவியை நீக்கிடப் பேரின்பம் நோக்கிய
அறிவு பெரிதாமடி குதம்பாய்
அறிவு பெரிதாமடி

#133
தத்துவமாகவே சத்துப்பொருள் கண்டால்
தத்துவ ஞானமடி குதம்பாய்
தத்துவ ஞானமடி

#134
அண்டத்தைக் கண்டதை ஆக்கினோன் உண்டு என்று
கண்டது அறிவாமடி குதம்பாய்
கண்டது அறிவாமடி

#135
முக்குற்றம் நீக்க முயலும் மெய்ஞ்ஞானமே
தக்க மெய்ஞ்ஞானமடி குதம்பாய்
தக்க மெய்ஞ்ஞானமடி

#136
போதம் இது என்று மெய்ப் போத நிலை காணல்
போதமது ஆகுமடி குதம்பாய்
போதமது ஆகுமடி

#137
ஆண்சாதி பெண்சாதி ஆகும் இரு சாதி
வீண் சாதி மற்ற எல்லாம் குதம்பாய்
வீண் சாதி மற்ற எல்லாம்

#138
பார்ப்பார்கள் மேல் என்றும் பறையர்கள் கீழ் என்றும்
தீர்ப்பாகச் சொல்வது என்ன குதம்பாய்
தீர்ப்பாகச் சொல்வது என்ன

#139
பார்ப்பாரைக் கர்த்தர் பறையரைப் போலவே
தீர்ப்பாய்ப் படைத்தாரடி குதம்பாய்
தீர்ப்பாய்ப் படைத்தாரடி

#140
பற்பல சாதியாய்ப் பாரில் பகுத்தது
கற்பனை ஆகுமடி குதம்பாய்
கற்பனை ஆகுமடி

#141
சுட்டிடும் சாதிப் பேர் கட்டுச்சொல் அல்லாமல்
தொட்டிடும் வத்து அல்லவே குதம்பாய்
தொட்டிடும் வத்து அல்லவே

#142
ஆதி பரப்பிரமம் ஆக்கும் அக்காலையில்
சாதிகள் இல்லையடி குதம்பாய்
சாதிகள் இல்லையடி

#143
சாதி வேறு என்றே தரம் பிரிப்போருக்குச்
சோதி வேறு ஆகுமடி குதம்பாய்
சோதி வேறு ஆகுமடி

#144
நீதிமான் என்றே நெறியாய் இருப்பானே
சாதிமான் ஆவானடி குதம்பாய்
சாதிமான் ஆவானடி

#145
சாதி ஒன்று இல்லை சமயம் ஒன்று இல்லை என்று
ஓதி உணர்ந்து அறிவாய் குதம்பாய்
ஓதி உணர்ந்து அறிவாய்

#146
தன்புத்தி தெய்வமாய்ச் சாற்றிய சார்வாகம்
புன்புத்தி ஆகுமடி குதம்பாய்
புன்புத்தி ஆகுமடி

#147
கல்லினைச் செம்பினைக் கட்டையைக் கும்பிடல்
புல்லறிவு ஆகுமடி குதம்பாய்
புல்லறிவு ஆகுமடி

#148
அண்டத்தைக் கண்டு அநாதி இல் என்பவர்
கொண்ட கருத்து அவமே குதம்பாய்
கொண்ட கருத்து அவமே

#149
பெண்ணின்பம் முத்தியாய்ப் பேசும் பாடாண்மதம்
கண்ணின்மை ஆகுமடி குதம்பாய்
கண்ணின்மை ஆகுமடி

#150
சூரியன் தெய்வமாய்ச் சுட்டும் சமயம்தான்
காரியம் அல்லவடி குதம்பாய்
காரியம் அல்லவடி

#151
மனம் தெய்வம் என்று மகிழ்ந்து கொண்டாடிய
இனமதி ஈனமடி குதம்பாய்
இனமதி ஈனமடி

#152
பற்பல மார்க்கம் பகர்ந்திடும் வேதங்கள்
கற்பனை ஆகுமடி குதம்பாய்
கற்பனை ஆகுமடி

#153
நீண்ட குரங்கை நெடிய பருந்தினை
வேண்டப் பயன் வருமோ குதம்பாய்
வேண்டப் பயன் வருமோ

#154
மெய்த்தேவன் ஒன்று என்று வேண்டாத பல் மதம்
பொய்த்தேவைப் போற்றுமடி குதம்பாய்
பொய்த்தேவைப் போற்றுமடி

#155
நாற்பத்து முக்கோணம் நாடும் எழுத்து எல்லாம்
மேற்பற்றிக் கண்டறி நீ குதம்பாய்
மேற்பற்றிக் கண்டறி நீ

#156
சட்கோணத்து உள் அந்தச் சண்முக அக்கரம்
உட்கோணத்து உள் அறி நீ குதம்பாய்
உட்கோணத்து உள் அறி நீ

#157
ஐந்தெழுத்து ஐந்தறைக்கு ஆர்ந்திடும் அவ்வாறே
சிந்தையுள் கண்டு அறி நீ குதம்பாய்
சிந்தையுள் கண்டு அறி நீ

#158
ஆறாறு காரமும் நூறுமே சேர்ந்திடில்
வீறான முப்பாழடி குதம்பாய்
வீறான முப்பாழடி

#159
விந்தொடு நாதம் விளங்கத் துலங்கினால்
வந்தது வாதமடி குதம்பாய்
வந்தது வாதமடி

#160
அப்பினைக் கொண்டு அந்த உப்பினைக் கட்டினால்
முப்பூ ஆகுமடி குதம்பாய்
முப்பூ ஆகுமடி

#161
உள்ளக் கருவியே உண்மை வாதம் அன்றிக்
கொள்ளக் கிடையாதடி குதம்பாய்
கொள்ளக் கிடையாதடி

#162
பெண்ணாலே வாதம் பிறப்பதே அல்லாமல்
மண்ணாலே இல்லையடி குதம்பாய்
மண்ணாலே இல்லையடி

#163
ஐந்து சரக்கொடு விந்துநாதம் சேரில்
வெந்திடும் லோகமடி குதம்பாய்
வெந்திடும் லோகமடி

#164
முப்பிணி-தன்னை அறியாத மூடர்கள்
எப் பிணி தீர்ப்பாரடி குதம்பாய்
எப் பிணி தீர்ப்பாரடி

#165
எட்டெட்டும் கட்டி இருக்குமேல் தீயினில்
விட்டோடும் நோய்கள் எல்லாம் குதம்பாய்
விட்டோடும் நோய்கள் எல்லாம்

#166
நாடி ஒருபது நன்காய் அறிந்திடில்
ஓடிவிடும் பிணியே குதம்பாய்
ஓடிவிடும் பிணியே

#167
சத்த வகை தாது-தன்னை அறிந்தவன்
சுத்த வயித்தியனே குதம்பாய்
சுத்த வயித்தியனே

#168
வாயு ஒரு பத்தும் வாய்த்த நிலை கண்டோன்
ஆயுள் அறிவானடி குதம்பாய்
ஆயுள் அறிவானடி

#169
ஆயுள் வேதப்படி அவிழ்தம் முடித்திடில்
மாயும் வியாதியடி குதம்பாய்
மாயும் வியாதியடி

#170
பொற்பாந்த முப்பூவைப் போதம் பொசித்தவர்
கற்பாந்தம் வாழ்வாரடி குதம்பாய்
கற்பாந்தம் வாழ்வாரடி

#171
வேவாத முப்பூவை வேண்டி உண்டார் பாரில்
சாவாமல் வாழ்வாரடி குதம்பாய்
சாவாமல் வாழ்வாரடி

#172
விந்து விடார்களே வெடிய சுடலையில்
வெந்துவிடார்களடி குதம்பாய்
வெந்துவிடார்களடி

#173
தொல்லைச் சடம் விட்டுச் சுட்ட சடம் கொண்டோர்
எல்லையில் வாழ்வாரடி குதம்பாய்
எல்லையில் வாழ்வாரடி

#174
தோற்பையை நீக்கி நல் சோதிப்பை கொண்டவர்
மேற்பை நஞ்சு உண்பாரடி குதம்பாய்
மேற்பை நஞ்சு உண்பாரடி

#175
மாற்றினை ஏற்ற வயங்கும் நெடியோர்களே
கூற்றினை வெல்வாரடி குதம்பாய்
கூற்றினை வெல்வாரடி

#176
கோயில் பல தேடிக் கும்பிட்டதால் உனக்கு
ஏயும் பலன் வருமோ குதம்பாய்
ஏயும் பலன் வருமோ

#177
சித்தத் தலம் போலத் தெய்வம் இருக்கின்ற
சுத்தத் தலங்கள் உண்டோ குதம்பாய்
சுத்தத் தலங்கள் உண்டோ

#178
மெய்த் தலத்து இல்லாத மெய்ப்பொருள் ஆனவர்
பொய்த் தலத் தெய்வத்து உண்டோ குதம்பாய்
பொய்த் தலத் தெய்வத்து உண்டோ

#179
சிற்பர்கள் கட்டும் திருக்கோயில் உள்ளாகத்
தற்பரம் வாழ்வது உண்டோ குதம்பாய்
தற்பரம் வாழ்வது உண்டோ

#180
தன்னால் உண்டாம் சிட்டி-தன்னாலே சிட்டித்த
புன் கோயில் உள்ளவன் யார் குதம்பாய்
புன் கோயில் உள்ளவன் யார்

#181
அன்பான பத்தர் அகக் கோயில் கர்த்தற்கே
இன்பான கோயிலடி குதம்பாய்
இன்பான கோயிலடி

#182
தன்னுள் விளங்கிய சம்புவைக் காணாது
மன்னும் தலத்து எய்வது என் குதம்பாய்
மன்னும் தலத்து எய்வது என்

#183
இருந்த இடத்தில் இருந்தே அறியாமல்
வருந்தித் திரிவது என்னோ குதம்பாய்
வருந்தித் திரிவது என்னோ

#184
காசி ராமேச்சுரம் கால் நோவச் சென்றாலும்
ஈசனைக் காணுவையோ குதம்பாய்
ஈசனைக் காணுவையோ

#185
பூவதில் நாளும் பொருந்தித் திரியினும்
தேவனைக் காணுவையோ குதம்பாய்
தேவனைக் காணுவையோ

#186
உள்ளங்கால் வெள்ளெலும்பாக உலாவினும்
வள்ளலைக் காணுவையோ குதம்பாய்
வள்ளலைக் காணுவையோ

#187
போரினில் ஊசி பொறுக்கத் துணிதல் போல்
ஆரியன் தேடுதலே குதம்பாய்
ஆரியன் தேடுதலே

#188
சாதனையாலே தனிப் பதம் சேரார்க்கு
வேதனை ஆகுமடி குதம்பாய்
வேதனை ஆகுமடி

#189
வேதனை நீங்கி விடாது தொடர்ந்தோரே
நாதனைக் காணுவர் காண் குதம்பாய்
நாதனைக் காணுவர் காண்

#190
நாடில் வழக்கம் அறிந்து செறிந்தவர்
நீடொளி காணுவரே குதம்பாய்
நீடொளி காணுவரே

#191
மீளா வியாதியில் மேன்மேலும் நொந்தார்க்கு
நாள் ஏது கோள் ஏதடி குதம்பாய்
நாள் ஏது கோள் ஏதடி

#192
தீட்டால் உடம்பு திறம்கொண்டு இருக்கையில்
தீட்டு என்று சொல்வது என்னை குதம்பாய்
தீட்டு என்று சொல்வது என்னை

#193
செத்த பின் சாப்பறை செத்தார்க்குச் சேவித்தால்
சத்தம் அறிவாரடி குதம்பாய்
சத்தம் அறிவாரடி

#194
தந்தை தாய் செய் வினை சந்ததிக்கு ஆம் என்பார்
சிந்தை தெளிந்திலரே குதம்பாய்
சிந்தை தெளிந்திலரே

#195
பிள்ளைகள் செய் தன்மம் பெற்றோர்க்கு உறும் என்றால்
வெள்ளறிவு ஆகுமடி குதம்பாய்
வெள்ளறிவு ஆகுமடி

#196
பந்தவினைக்கு ஈடாடிப் பாரில் பிறந்தோர்க்குச்
சொந்தமது இல்லையடி குதம்பாய்
சொந்தமது இல்லையடி

#197
பார்ப்பார் சடங்கு பலன் இன்று பாரிலே
தீர்ப்பாக எண்ணிடுவாய் குதம்பாய்
தீர்ப்பாக எண்ணிடுவாய்

#198
அந்தணர்க்கு ஆவை அளித்தோர்கள் ஆவிக்குச்
சொந்தமோ முத்தியடி குதம்பாய்
சொந்தமோ முத்தியடி

#199
வேதியர் கட்டிய வீணான வேதத்தைச்
சோதித்துத் தள்ளடியோ குதம்பாய்
சோதித்துத் தள்ளடியோ

#200
தன் பாவம் நீக்காத தன்மயர் மற்றவர்
வன் பாவம் நீக்குவரோ குதம்பாய்
வன் பாவம் நீக்குவரோ

#201
வேள்வியில் ஆட்டினை வேவச்செய்து உண்போர்க்கு
மீள்வழி இல்லையடி குதம்பாய்
மீள்வழி இல்லையடி

#202
வேதம் புராணம் விளங்கிய சாத்திரம்
போதனை ஆகுமடி குதம்பாய்
போதனை ஆகுமடி

#203
யாகாதி கன்மங்கள் யாவும் சடங்குகள்
ஆகாத செய்கையடி குதம்பாய்
ஆகாத செய்கையடி

#204
சாற்றும் சகுனங்கள் சந்தியாவந்தனம்
போற்றும் அறிவீனமே குதம்பாய்
போற்றும் அறிவீனமே

#205
ஆனதோர் நாள் என்றல் ஆகாத நாள் என்றல்
ஞானம் இல்லாமையடி குதம்பாய்
ஞானம் இல்லாமையடி

#206
அஞ்சனம் என்றது அறியாமல் ஏய்க்குதல்
வஞ்சனை ஆகுமடி குதம்பாய்
வஞ்சனை ஆகுமடி

#207
மாய வித்தை பல மாநிலத்தில் செய்கை
தீய தொழிலாமடி குதம்பாய்
தீய தொழிலாமடி

#208
கருவை அழித்துக் கன்மத் தொழில் செய்குதல்
திருவை அழிக்குமடி குதம்பாய்
திருவை அழிக்குமடி

#209
மாரணம் செய்து பல் மாந்தரைக் கொல்வது
சூரணம் ஆக்குமடி குதம்பாய்
சூரணம் ஆக்குமடி

#210
பொய்யான சோதிடர் பொய்மொழி யாவுமே
வெய்ய மயக்கமடி குதம்பாய்
வெய்ய மயக்கமடி

#211
மெய்க்குறி கண்டு விளங்க அறியார்க்குப்
பொய்க்குறி ஏதுக்கடி குதம்பாய்
பொய்க்குறி ஏதுக்கடி

#212
நாயாட்டமாக நகைத்து உழல் மூடர்க்குப்
பேயாட்டம் ஏதுக்கடி குதம்பாய்
பேயாட்டம் ஏதுக்கடி

#213
மந்திர மூலம் வகுத்து அறியாதார்க்குத்
தந்திரம் ஏதுக்கடி குதம்பாய்
தந்திரம் ஏதுக்கடி

#214
வாதம் என்றே பொய்யை வாயில் புடைப்போர்க்குச்
சேதம் மிக வருமே குதம்பாய்
வேதம் மிக வருமே

#215
வெட்டவெளி-தன்னை மெய் என்று இருப்போர்க்கு
பட்டயம் ஏதுக்கடி குதம்பாய்
பட்டயம் ஏதுக்கடி

#216
மெய்ப்பொருள் கண்டு விளங்கும் மெய்ஞ்ஞானிக்கு
கற்பங்கள் ஏதுக்கடி குதம்பாய்
கற்பங்கள் ஏதுக்கடி

#217
காணாமல் கண்டு கருத்தோடு இருப்பார்க்கு
வீணாசை ஏதுக்கடி குதம்பாய்
வீணாசை ஏதுக்கடி

#218
வஞ்சகம் அற்று வழி-தனைக் கண்டோர்க்கு
சஞ்சலம் ஏதுக்கடி குதம்பாய்
சஞ்சலம் ஏதுக்கடி

#219
ஆதாரமான அடி முடி கண்டோர்க்கு
வாதாட்டம் ஏதுக்கடி குதம்பாய்
வாதாட்டம் ஏதுக்கடி

#220
நித்திரை கெட்டு நினைவோடு இருப்போர்க்கு
முத்திரை ஏதுக்கடி குதம்பாய்
முத்திரை ஏதுக்கடி

#221
தந்திரமான தலம்-தனில் நிற்போர்க்கு
மந்திரம் ஏதுக்கடி குதம்பாய்
மந்திரம் ஏதுக்கடி

#222
சத்தியமான தவத்தில் இருப்போர்க்கு
உத்தியம் ஏதுக்கடி குதம்பாய்
உத்தியம் ஏதுக்கடி

#223
நாட்டத்தைப் பற்றி நடுவணை சேர்வோர்க்கு
வாட்டங்கள் ஏதுக்கடி குதம்பாய்
வாட்டங்கள் ஏதுக்கடி

#224
முத்தமிழ் கற்று முயங்கும் மெய்ஞ்ஞானிக்கு
சத்தங்கள் ஏதுக்கடி குதம்பாய்
சத்தங்கள் ஏதுக்கடி

#225
உச்சிக்கு மேல் சென்று உயர் வெளி கண்டோருக்கு
இச்சிப்பு இங்கு ஏதுக்கடி குதம்பாய்
இச்சிப்பு இங்கு ஏதுக்கடி

#226
வேகாமல் வெந்து வெளி ஒளி கண்டோர்க்கு
மோகாந்தம் ஏதுக்கடி குதம்பாய்
மோகாந்தம் ஏதுக்கடி

#227
சாகாமல் தாண்டி தனி வழி போவார்க்கு
ஏகாந்தம் ஏதுக்கடி குதம்பாய்
ஏகாந்தம் ஏதுக்கடி

#228
அந்தரம்-தன்னில் அசைந்தாடும் முத்தர்க்குத்
தந்திரம் ஏதுக்கடி குதம்பாய்
தந்திரம் ஏதுக்கடி

#229
ஆனந்தம் பொங்கி அறிவோடு இருப்போர்க்கு
ஞானம்தான் ஏதுக்கடி குதம்பாய்
ஞானம்தான் ஏதுக்கடி

#230
சித்திரக் கூட்டத்தைத் தினம்தினம் காண்போர்க்குப்
பத்திரம் ஏதுக்கடி குதம்பாய்
பத்திரம் ஏதுக்கடி

#231
முக்கோணம்-தன்னில் முளைத்த மெய்ஞ்ஞானிக்குச்
சட்கோணம் ஏதுக்கடி குதம்பாய்
சட்கோணம் ஏதுக்கடி

#232
அட்ட திக்கு எல்லாம் அசைந்தாடும் நாதர்க்கு
நட்டணை ஏதுக்கடி குதம்பாய்
நட்டணை ஏதுக்கடி

#233
முத்திபெற்று உள்ளம் முயங்கும் மெய்ஞ்ஞானிக்குப்
பத்தியம் ஏதுக்கடி குதம்பாய்
பத்தியம் ஏதுக்கடி

#234
அல்லலை நீக்கி அறிவோடு இருப்பார்க்குப்
பல்லாக்கு ஏதுக்கடி குதம்பாய்
பல்லாக்கு ஏதுக்கடி

#235
அட்டாங்கயோகம் அறிந்த மெய்ஞ்ஞானிக்கு
முட்டாங்கம் ஏதுக்கடி குதம்பாய்
முட்டாங்கம் ஏதுக்கடி

#236
வேகம் அடக்கி விளங்கும் மெய்ஞ்ஞானிக்கு
யோகம்தான் ஏதுக்கடி குதம்பாய்
யோகம்தான் ஏதுக்கடி

#237
மாத்தானை வென்று மலை மேல் இருப்போர்க்குப்
பூத்தானம் ஏதுக்கடி குதம்பாய்
பூத்தானம் ஏதுக்கடி

#238
செத்தாமரைப் போலத் திரியும் மெய்ஞ்ஞானிக்குக்
கைத்தாளம் ஏதுக்கடி குதம்பாய்
கைத்தாளம் ஏதுக்கடி

#239
கண்டாரை நோக்கிக் கருத்தோடு இருப்போர்க்குக்
கொண்டாட்டம் ஏதுக்கடி குதம்பாய்
கொண்டாட்டம் ஏதுக்கடி

#240
காலனை வென்ற கருத்தறிவாளர்க்குக்
கோலங்கள் ஏதுக்கடி குதம்பாய்
கோலங்கள் ஏதுக்கடி

#241
வெண்காயம் உண்டு மிளகு உண்டு சுக்கு உண்டு
உண் காயம் ஏதுக்கடி குதம்பாய்
உண் காயம் ஏதுக்கடி

#242
மாங்காய்ப்பால் உண்டு மலை மேல் இருப்போர்க்குத்
தேங்காய்ப்பால் ஏதுக்கடி குதம்பாய்
தேங்காய்ப்பால் ஏதுக்கடி

#243
பட்டணம் சுற்றிப் பகலே திரிவார்க்கு
முட்டாக்கு ஏதுக்கடி குதம்பாய்
முட்டாக்கு ஏதுக்கடி

#244
தாவாரம் இல்லை தனக்கு ஒரு வீடு இல்லை
தேவாரம் ஏதுக்கடி குதம்பாய்
தேவாரம் ஏதுக்கடி

#245
தன்னை அறிந்து தலைவனைச் சேர்ந்தோர்க்கு
பின் ஆசை ஏதுக்கடி குதம்பாய்
பின் ஆசை ஏதுக்கடி

#246
பத்தாவும் தானும் பதியோடு இருப்போர்க்கு
உத்தாரம் ஏதுக்கடி குதம்பாய்
உத்தாரம் ஏதுக்கடி
**

18 கொங்கண சித்தர்

** வாலைக்கும்மி

#1
கல்வி நிறை வாலைப்பெண் காதலி என்று ஓதுகின்ற
செல்வியின் மேல் கும்மி-தனைச் செப்புதற்கே நல் விசய
நாதனின் சொல் வேதன் அஞ்சு போதன் மிஞ்சி மான கஞ்ச
பாதம் வஞ்ச நெஞ்சினில் வைப்போம்
** விநாயகர் துதி

#2
சத்தி சடாதரி வாலைப்பெண்ணாம் அந்த உத்தமி மேல் கும்மிப் பாட்டு உரைக்க
வித்தைக்கு உதவிய ஒற்றைக்கொம்பாம் வாலை சித்தி விநாயகன் காப்பாமே
**சரஸ்வதி துதி

#3
சித்தர்கள் போற்றிய வாலைப்பெண்ணாம் அந்த சத்தியின் மேல் கும்மிப் பாட்டு உரைக்கத்
தத்தமிதோம் என ஆடும் சரஸ்வதி பத்தினி பொன் பதம் காப்பாமே
** சிவபெருமான் துதி

#4
எங்கும் நிறைந்தவள் வாலைப்பெண்ணாம் மாலின் தங்கையின் மேல் கும்மி பாடுதற்குக்
கங்கை அணி சிவசம்புவாம் சற்குரு பங்கயப் பொன் பதம் காப்பாமே
** சுப்பிரமணியர் துதி

#5
ஞானப் பெண்ணாம் அருள் சோதிப் பெண்ணாம் ஆதி வாலைப்பெண் மேல் கும்மி பாடுதற்கு
மானைப் பெண் ஆக்கிய வள்ளிக்கு இசைந்திடும் மால் முருகேசனும் காப்பாமே
** விஷ்ணு துதி

#6
ஆண்டிப் பெண்ணாம் ராசபாண்டிப் பெண்ணாம் வாலை அம்பிகை மேல் கும்மி பாடுதற்குக்
காண்டீபனாம் பணி பூண்டவன் வைகுந்தம் ஆண்டவன் பொன் பதம் காப்பாமே
** நந்தீசர் துதி

#7
அந்தரி சுந்தரி வாலைப்பெண்ணாம் அந்த அம்பிகை மேல் கும்மி பாடுதற்குச்
சிந்தையில் முந்தி நல் விந்தையாய் வந்திடும் நந்தீசர் பொன் பதம் காப்பாமே
** நூல்

#8
தில்லையில் முல்லையில் எல்லையுள் ஆடிய வல்லவள் வாலைப்பெண் மீதினிலே
சல்லாபக் கும்மித் தமிழ் பாட வரும் தொல்லை வினை போக்கும் வாலைப்பெண்ணே

#9
மாதா பிதா கூட இல்லாமலே வெளி மண்ணும் விண்ணும் உண்டுபண்ண என்று
பேதைப் பெண்ணாம் முதல் வாலைப்பெண்ணாள் என்று புகுந்தாள் இந்தப் புவி அடக்கம்

#10
வேதமும் பூதம் உண்டானதுவும் வெளி விஞ்ஞான சாத்திரமானதுவும்
நாதமும் கீதம் உண்டானதுவும் வழி நான் சொல்லக் கேளடி வாலைப்பெண்ணே

#11
முந்தச் செகங்கள் உண்டானதுவும் முதல் தெய்வமும் தேவர் உண்டானதுவும்
விந்தையாய் வாலை உண்டானதுவும் ஞான விளக்கம் பாரடி வாலைப்பெண்ணே

#12
அரிக்கும் முந்தினது அவ் எழுத்தாம் பின்னும் அரிக்குள் நின்றதும் அஞ்செழுத்தாம்
தரிக்கும் முந்தினது அஞ்செழுத்தாம் வாசி பரிக்குள் நின்றதும் அஞ்செழுத்தாம்

#13
ஆதியில் ஐந்தெழுத்து ஆயினாள் வாலைப்பெண் ஐந்தெழுத்தும் என்று பேரானாள்
நாதியின் ஊமை எழுத்து இவள்தான் அல்ல ஞான வகை இவள்தான் ஆனாள்

#14
ஊமை எழுத்தே உடல் ஆச்சு மற்றும் ஓம் என்று எழுத்தே உயிர் ஆச்சு
ஆம் இந்த எழுத்தை அறிந்துகொண்டு விளையாடிக் கும்மி அடியுங்கடி

#15
செகம் படைத்ததும் அஞ்செழுத்தாம் பின்னும் சீவன் படைத்ததும் அஞ்செழுத்தாம்
உகம் முடிந்ததும் அஞ்செழுத்தாம் பின்னும் உற்பனமானதும் அஞ்செழுத்தாம்

#16
சாத்திரம் பார்த்தாலும்தானும் என்ன வேதம்தானுமே பார்த்திருந்தாலும் என்ன
சூத்திரம் பார்த்து அல்லோ ஆள வேணும் அஞ்சு சொல்லை அறிந்து அல்லோ காண வேணும்

#17
காணாது கிட்டாதே எட்டாதே அஞ்சில் காரியம் இல்லை என்றே நினைத்தால்
காணாதும் காணலாம் அஞ்செழுத்தால் அதில் காரியம் உண்டு தியானம்செய்தால்

#18
ஆயனும் ஐந்தாம் எழுத்துக்குள்ளே அறிவாயனும் ஐந்தாம் எழுத்துக்குள்ளே
வாயனும் ஐந்தாம் எழுத்துக்குள்ளே இந்த வாலையும் ஐந்தாம் எழுத்துக்குள்ளே

#19
அஞ்செழுத்தானதும் எட்டெழுத்தாம் பின்னும் ஐம்பத்தோர் அட்சரம்தான் ஆச்சு
நெஞ்செழுத்தாலே நினையாமல் அந்த நிசம் தெரியுமோ வாலைப்பெண்ணே

#20
ஏய்க்குது ஏய்க்குது அஞ்செழுத்து வகை எட்டிப் பிடித்துக்கொள் இரண்டெழுத்தை
நோக்கிக்கொள் வாசியை மேலாக வாசி நிலையைப் பாரடி வாலைப்பெண்ணே

#21
சிதம்பர சக்கரம்தான் அறிவார் இந்தச் சீமையில் உள்ள பெரியோர்கள்
சிதம்பர சக்கரம் என்றால் அதற்குள்ளே தெய்வத்தை அல்லோ அறிய வேணும்

#22
மனமும் மதியும் இல்லாவிடில் வழி மாறுதல் சொல்லியே என்ன செய்வாள்
மனம் உறுதியும் வைக்க வேணும் பின்னும் வாலை கிருபை உண்டாக வேணும்

#23
இனி வெளியினில் சொல்லாதே எழில் தீ மாட்டுது இந்த வரி விழிக்கே
கனிமொழிச்சியீர் வாருங்கடி கொஞ்சம் கருவைச் சொல்லுவேன் கேளுங்கடி

#24
ஊத்தைச் சடலம் என்று எண்ணாதே இதை உப்பிட்ட பாண்டம் என்று எண்ணாதே
பார்த்தபேருக்கே ஊத்தை இல்லை இதைப் பார்த்துக்கொள் உன்றன் உடலுக்குள்ளே

#25
உச்சிக்கு நேராய் உள்நாவுக்கு மேல் நிதம் வைத்த விளக்கும் எரியுதடி
அச்சுள்ள விளக்கு வாலையடி அவியாமல் எரியுது வாலைப்பெண்ணே

#26
எரியுதே அறு வீட்டினிலே அதில் எண்ணெய் இல்லை அமிழ் தண்ணீர் இல்லை
தெரியுது போக வழியும் இல்லை பாதை சிக்குது சிக்குது வாலைப்பெண்ணே

#27
சிலம்பொலி என்னக் கேட்டுமடி மெத்த சிக்குள்ள பாதை துடுக்கமடி
வலம்புரி அச் சங்கம் ஊதுமடி மேலே வாசியைப் பாரடி வாலைப்பெண்ணே

#28
வாசிப் பழக்கம் அறிய வேணும் மற்றும் மண்டல வீடுகள் கட்ட வேணும்
நாசி வழிக் கொண்டு யோகமும் வாசியும் நாட்டத்தைப் பாரடி வாலைப்பெண்ணே

#29
முச்சுடரான விளக்கினுள்ளே மூல மண்டல வாசி வழக்கத்திலே
எச் சுடராகி அந்தச் சுடர் வாலை இவள் விட வேறு இல்லை வாலைப்பெண்ணே

#30
சூடாமல் வாலை இருக்கிறதும் பரி சித்த சிவனுக்குள் ஆளானதால்
வீடாமல் வாசிப் பழக்கத்தைப் பாரு நாம் மேல்வீடு காணலாம் வாலைப்பெண்ணே

#31
மேல்வீடு கண்டவன் பாணியடி விண்ணில் விளக்கில் நின்றவன் வாணியடி
தாய்வீடு கண்டவன் ஞானியடி பரி தாண்டிக் கொண்டான் பட்டாணியடி

#32
அத்தியிலே கரம் பத்தியிலே மனம் புத்தியிலே நடு மத்தியிலே
நெற்றி சதாசிவம் என்று சொன்னேன் உன்றன் நிலைமையைப் பாரடி வாலைப்பெண்ணே

#33
அழுத்திலே சொல் அஞ்செழுத்திலே நானும் வழுத்தினேன் ஞானப் பழத்திலே
கழுத்திலே மயேஸ்வரனும் உண்டு கண் கண்டு பாரடி வாலைப்பெண்ணே

#34
அஞ்சிலே பிஞ்சிலே வஞ்சியரே நிதம் கொஞ்சி விளையாடும் வஞ்சியரே
நெஞ்சிலே ருத்திரன் சூழிருப்பான் அவன் நேருடனாமடி வாலைப்பெண்ணே

#35
தொந்தியிலே நடுப் பந்தியிலே திடச் சிந்தையிலே முந்தி உன்றனுடன்
உந்தியில் விண்ணுவும்தாம் இருப்பார் இதை உண்மையாய்ப் பாரடி வாலைப்பெண்ணே

#36
ஆலத்திலே இந்த ஞாலத்திலே வருங்காலத்திலே அனுகூலத்திலே
மூலத்திலே ப்ரமன் தான் இருந்து வாசி முடுக்கிறான் பிண்டம் பிடிக்கிறானே

#37
தேரும் உண்டு ஐந்நூறும் ஆணி உண்டே அதில் தேவரும் உண்டு சங்கீதம் உண்டே
ஆர் உண்டு பாரடி வாலைத் தெய்வம் அதில் அடக்கம்தானடி வாலைப்பெண்ணே

#38
ஒன்பது வாயில் கொள் கோட்டை உண்டே அதில் உள்ளே நிலைக்காரர் அஞ்சுபேராம்
அன்புடனே பரிகாரர்கள் ஆறுபேர் அடக்கம்தானடி வாலைப்பெண்ணே

#39
இந்த விதத்திலே தேகத்திலே தெய்வம் இருக்கையில் புத்திக் கறிக்கையினால்
சந்தோட வாலையைப் பாராமல் மனிதர் சாகிறது ஏதடி வாலைப்பெண்ணே

#40
நகார திட்டிப்பே ஆனதினால் வீடு வான வகார நயம் ஆச்சு
உகார முச்சி சிரசு ஆச்சே இதை உற்றுப் பாரடி வாலைப்பெண்ணே

#41
வகாரமானதே ஓசை ஆச்சே அந்த மகாரமானது கர்ப்பம் ஆச்சே
சிகாரமானது மாய்கை ஆச்சே இதைத் தெளிந்து பாரடி வாலைப்பெண்ணே

#42
ஓம் என்ற அட்சரம்தானும் உண்டு அதற்குள் ஊமையெழுத்தும் இருக்குதடி
நாம் இந்த எழுத்தை அறிந்துகொண்டோம் வினை நாடிப் பாரடி வாலைப்பெண்ணே

#43
கட்டாத காளையைக் கட்ட வேணும் ஆசை வெட்ட வேணும் வாசி ஒட்ட வேணும்
எட்டாத கொம்பை வளைக்க வேணும் காயம் என்றைக்கு இருக்குமோ வாலைப்பெண்ணே

#44
இருந்த மார்க்கமாய்த்தான் இருந்து வாசி ஏற்காமலேதான் அடக்க வேணும்
திரிந்தே ஓடி அலைந்து வெந்து தேகம் இறந்து போச்சுதே வாலைப்பெண்ணே

#45
பூத்த மலராலே பிஞ்சும் உண்டே அதில் பூ இல்லாப் பிஞ்சும் அனேகம் உண்டு
மூத்த மகனாலே வாழ்வும் உண்டு மற்ற மூன்றுபேராலே அழிவும் உண்டு

#46
கற்புள்ள மாதர் குலம் வாழ்க நின்ற கற்பை அளித்தவரே வாழ்க
சிற்பரனைப் போற்றிக் கும்மியடி குரு தற்பரனைப் போற்றிக் கும்மியடி

#47
அஞ்சினிலே ரண்டு அழிந்ததில்லை அஞ்சாறிலேயும் நாலு ஒழிந்ததில்லை
பிஞ்சிலே பூவிலே துஞ்சுவதாம் அது பேணிப் போடலாம் வாலைப்பெண்ணே

#48
கை இல்லாக் குட்டையன் கட்டிக்கிட்டான் இரு கால் இல்லா நெட்டையன் முட்டிக்கிட்டான்
ஈ இல்லாத் தேன் எடுத்து உண்டுவிட்டான் அது இனிக்குதில்லையே வாலைப்பெண்ணே

#49
மேலூரு கோட்டைக்கே ஆதரவாய் நன்றாய் விளங்கு கன்னனூர்ப் பாதையிலே
காலூரு அம்பலம் விட்டதனால் அது கடு நடையடி வாலைப்பெண்ணே

#50
தொண்டையுள் முக்கோணக் கோட்டையிலே இதில் தொத்திக் கொடிமரம் நாட்டையிலே
சண்டைசெய்து வந்தே ஓடிப்போனாள் கோட்டை வெந்து தணல் ஆச்சு வாலைப்பெண்ணே

#51
ஆசை வலைக்குள் அகப்பட்டதும் வீடு அப்போதே வெந்தே அழிந்திட்டதும்
பாச வலை வந்து மூடியதும் வாலை பாதத்தைப் போற்றடி வாலைப்பெண்ணே

#52
அன்னம் இருக்குது மண்டபத்தில் விளையாடித் திரிந்ததே ஆண் புலியும்
இன்னம் இருக்குமே அஞ்சு கிளி அவை எட்டிப் பிடிக்குமே மூன்று கிளி

#53
தோப்பிலே மாங்குயில் கூப்பிடுதே புது மாப்பிள்ளை தான் வந்து சாப்பிடவும்
ஏய்க்கும் இப்படி அஞ்சாறு ஆந்தை இருந்து விழிப்பது பாருங்கடி

#54
மீனும் இருக்குது தூரணியில் இதை மேய்ந்து திரியும் கல சாவல்
தேனும் இருக்குது போரையிலே உண்ணத் தெவிட்டுதில்லையே வாலைப்பெண்ணே

#55
காகம் இருக்குது கொம்பிலே தான் கத சாவல் இருக்குது தெம்பிலேதான்
பார்க்க வெகு தூரம் இல்லை இது ஞானம் பார்த்ததால் தெரியுமே வாலைப்பெண்ணே

#56
கும்பிக் குளத்திலே அம்பலமாம் அந்தக் குளக் கருவூரில் சேறும் மெத்த
தெம்பில் இடைக்காட்டுப் பாதைகளாய் வந்து சேர்ந்து ஆராய்ந்து பார் வாலைப்பெண்ணே

#57
பண்டுமே ஆழக் கிணற்றுக்குள்ளே ரண்டு கெண்டை இருந்து பகட்டுதடி
கண்டிருந்தும் அந்தக் காக்கையுமே அஞ்சி கழுகு கொன்றது பாருங்கடி

#58
ஆற்றிலே அஞ்சு முதலையடி அரும் புற்றிலே ரண்டு கரடியடி
கூற்றனும் மூன்று குருடனடி பாசம் கொண்டு பிடிக்கிறான் வாலைப்பெண்ணே

#59
முட்டையிடுகுது ஒரு பறவை முட்டை மோசம்பண்ணுது ஒரு பறவை
வட்டமிட்டு ஆரூர் கண்ணியில் இரண்டு மானும் தவிக்குது வாலைப்பெண்ணே

#60
அட்டமாவின் வட்டம் பொட்டலிலே ரண்டு அம்புலி நிற்குது தேர் மேலே
திட்டமாய் வந்து அடிக்குதில்லை தேகம் செந்தணல் ஆனதே வாலைப்பெண்ணே

#61
முக்கோண வட்டக் கிணற்றுக்குள்ளே மூல மண்டல வாசிப் பழக்கத்திலே
அக்கோண வட்டச் சக்கரத்தில் வாலை அமர்ந்திருக்கிறாள் வாலைப் பெண்ணே

#62
இரண்டு காலால் ஒரு கோபுரமாம் நெடுநாளாய் இருந்தே அமிழ்ந்துபோகும்
கண்டபோது கோபுரம் இருக்கும் வாலை காணவுமொட்டாள் நிலைக்கவொட்டாள்

#63
அஞ்சு பூதத்தை உண்டுபண்ணிக் கூட்டில் ஆறு ஆதாரத்தை உண்டுபண்ணிக்
கொஞ்சு பெண்ணாசை உண்டுபண்ணி வாலை கூட்டுகிறாள் காலனை மாட்டுகிறாள்

#64
காலனைக் காலால் உதைத்தவளாம் வாலை ஆலகால விடம் உண்டவளாம்
மாளாச் செகத்தைப் படைத்தவளாம் இந்த மானுடன் கோட்டை இடித்தவளாம்

#65
மாதாவாய் வந்தே அமுதம் தந்தாள் மனையாட்டியாய் வந்து சுகம்கொடுத்தாள்
ஆதரவாகிய தங்கை ஆனாள் நமக்கு ஆசைக் கொழுந்தியும் மாமி ஆனாள்

#66
சிரித்து மெல்லப் புரம் எரித்தாள் வாலை செங்காட்டுச் செட்டியைத் தான் உதைத்தாள்
ஒருத்தியாகவே சூரர்-தமை வென்றாள் ஒற்றையாய்க் கஞ்சனைக் கொன்றுவிட்டாள்

#67
இப்படி அல்லோ இவள் தொழிலாம் இந்த ஈனா மலடி கொடும் சூலி
மைப்படும் கண்ணியர் கேளுங்கடி அந்த வயசு வாலை திரிசூலி

#68
கத்தி பெரிதோ உறை பெரிதோ இவள் கண்ணு பெரிதோ முகம் பெரிதோ
சத்தி பெரிதோ சிவம் பெரிதோ நீதான் சற்றே சொல்லடி வாலைப்பெண்ணே

#69
அன்னம் பெரிதல்லால் தண்ணீர் பெரிதல்ல அப்படி வாலை பெரிதானால்
பொன்னு பெரிதல்லால் வெள்ளி பெரிதல்ல பொய்யாது சொல்கிறேன் கேளுங்கடி

#70
மாமிசமானால் எலும்பும் உண்டு சதை வாங்கி ஓடு கழன்றுவிடும்
ஆமிசம் இப்படிச் சத்தி என்றே விளையாடிக் கும்மியடியுங்கடி

#71
பண்டு முளைப்பது அரிசியேயானாலும் விண்டு உமி போனால் விளையாது என்று
கண்டுகொண்டு முன்னே அவ்வை சொன்னாள் அது உண்டோ இல்லையோ வாலைப்பெண்ணே

#72
மண்ணும் இல்லாமலே விண்ணும் இல்லை கொஞ்சம் வாசம் இல்லாமலே பூவும் இல்லை
பெண்ணும் இல்லாமலே ஆணும் இல்லை இது பேணிப் பாரடி வாலைப்பெண்ணே

#73
நந்தவனத்திலே சோதி உண்டு நிலம் நித்தியபேருக்கு நெல்லும் உண்டு
விந்தையாய் வாலையைப் பூசிக்க முன்னாளில் விட்டகுறை வேணும் வாலைப்பெண்ணே

#74
வாலையைப் பூசிக்கச் சித்தர் ஆனார் வாலைக்கு ஒத்தாசையாய்ச் சிவ கர்த்தர் ஆனார்
வேலையைப் பார்த்து அல்லோ கூலி வைத்தார் இந்த விதம் தெரியுமோ வாலைப்பெண்ணே

#75
வாலைக்கு மேலான தெய்வம் இல்லை மானம் காப்பது சேலைக்கு மேலும் இல்லை
பாலுக்கு மேலான பாக்கியம் இல்லை வாலைக் கும்மிக்கு மேலான பாடல் இல்லை

#76
நாட்டத்தை கண்டால் அறியலாகும் அந்த நாலாறு வாசல் கடக்கலாகும்
பூட்டைக் கதவைத் திறக்கலாகும் இது பொய் அல்ல மெய்யடி வாலைப்பெண்ணே

#77
ஆணும் பெண்ணும் கூடியானதனால் பிள்ளை ஆச்சுது என்றே நீரும் பேசுகின்றீர்
ஆணும் பெண்ணும் கூடியானது அல்லோ பேதம் அற்று ஒரு வித்து ஆச்சு வாலைப்பெண்ணே

#78
இன்றைக்கு இருப்பதும் பொய் அல்லவே வீடே என் வாழ்க்கை என்பதும் பொய் அல்லவே
அன்றைக்கு எழுத்தின்படி முடியும் வாலை ஆத்தாளைப் போற்றடி வாலைப்பெண்ணே

#79
வீணாசை கொண்டு திரியாதே இது மெய் அல்ல பொய் வாழ்வு பொய்க் கூடு
காணாத வாலையைக் கண்டுகொண்டால் காட்சி காணலாம் ஆகாயம் ஆளலாமே

#80
பெண்டாட்டி ஆவதும் பொய் அல்லவோ பெற்ற பிள்ளைகள் ஆவதும் பொய் அல்லவோ
கொண்டாட்டமான தகப்பன் பொய்யே முலைகொடுத்த தாயும் நிசம் ஆமோ

#81
தாயும் பெண்டாட்டியும் தான் சரியே தன்யம் தாமே இருவரும் தாம் கொடுத்தார்
காயும் பழமும் சரியாமோ உன்றன் கருத்தைப் பார்த்துக்கொள் வாலைப்பெண்ணே

#82
பெண்டாட்டி மந்தைமட்டும் வருவாள் பெற்ற பிள்ளை மசானக் கரையின்மட்டும்
தெண்டாட்டுத் தர்மம் நடுவினிலே வந்து சேர்ந்து பரகதி தான் கொடுக்கும்

#83
பாக்கியமும் மகள் போக்கியமும் ராச போக்கியமும் வந்ததானாக்கால்
சீக்கிரம் தருமம் செய்ய வேண்டும் கொஞ்சத் திருப்பணிகள் முடிக்க வேண்டும்

#84
திருப்பணிகளை முடித்தோரும் செத்தும் சாகாதபேரில் ஒருவர் என்றும்
அருள் பொலிந்திடும் வேதத்திலே அவை அறிந்து சொன்னாளே வாலைப்பெண்ணே

#85
மெத்தை-தனிலே படுத்திருந்து நாமும் மெல்லியரோடு சிரிக்கும்போது
யுத்த காலன் வந்து தான் பிடித்தால் நாமும் செத்த சவமடி வாலைப்பெண்ணே

#86
ஏழை பனாதிகள் இல்லை என்றால் அவர்க்கு இருந்தால் அன்னம் கொடுக்க வேண்டும்
நாளை என்று சொல்லலாகாதே என்று நான்மறை வேதம் முழங்குதடி

#87
பஞ்சை பனாதி அடியாதே அந்தப் பாவம் தொலைய முடியாதே
தஞ்சம் என்றோரைக் கெடுக்காதே யார்க்கும் வஞ்சனைசெய்ய நினையாதே

#88
கண்டதும் கேட்டதும் சொல்லாதே கண்ணில் காணாத உத்தரம் விள்ளாதே
பெண்டாட்டிக்கு உற்றது சொல்லாதே பெற்ற பிள்ளைக்கு இளப்பம் கொடுக்காதே

#89
சிவன்-தன் அடியாரை வேதியரைச் சில சீர் புல ஞானப் பெரியோரை
மவுனமாகவும் வையாதே அவர் மனத்தை நோகவும் செய்யாதே

#90
வழக்கு அழிவுகள் சொல்லாதே கற்பு மங்கையர் மேல் மனம்வையாதே
பழக்க வாசியைப் பார்த்துக்கொண்டு வாலை பாதத்தைப் போற்றடி வாலைப்பெண்ணே

#91
கூடிய பொய்களைச் சொல்லாதே பொல்லாக் கொலை களவுகள் செய்யாதே
ஆடிய பாம்பை அடியாதே இது அறிவுதானடி வாலைப்பெண்ணே

#92
காரியனாகினும் வீரியம் பேசவும் காணாது என்று அவ்வை சொன்னாளே
பாரினில் வம்புகள் செய்யாதே புளிப்பழம் போல் உதிர்ந்து விழுந்தானே

#93
காசார்கள் பகை செய்யாதே நடுக்காட்டுப் புலி முன்னே நில்லாதே
தேசாந்தரங்களும் செல்லாதே மாய்கைத் தேவடியாள் தனம் பண்ணாதே

#94
தன் வீடு இருக்க அசல் வீடு போகாதே தாயார் தகப்பனை வையாதே
உன் வீட்டுக்குள்ளேயே யூகம் இருக்கையில் ஓடித் திரிகிறாய் வாலைப்பெண்ணே

#95
சாதி பேதங்கள் சொல்லுகிறீர் தெய்வம் தான் என்று ஒரு உடல் பேதம் உண்டோ
ஓதிய பால் அதில் ஒன்றாகி அதிலே உற்பத்தி நெய் தயிர் மோர் ஆச்சு

#96
பாலோடும் உண்டிடு பூனையும் உண்டது மேலாக காணவும் காண்பதில்லை
மேல் அந்த ஆசையைத் தள்ளிவிட்டு உள்ளத்தில் வேண்டிப் பூசையைச் செய்திடுங்கள்

#97
கோழிக்கு ஆறு கால் உண்டு என்று சொன்னேன் கிழக் கூனிக்கு மூன்று கால் என்று சொன்னேன்
கூனிக்கு இரண்டு எழுத்து என்று சொன்னேன் முழுப் பானைக்கு வாய் இல்லை என்று சொன்னேன்

#98
ஆட்டுக்கு இரண்டு கால் என்று சொன்னேன் நம் ஆனைக்குப் பானைக்கு நிற்குமேல் சூல்
மாட்டுக்குக் கால் இல்லை என்று சொன்னேன் கதை வகையைச் சொல்லடி வாலைப்பெண்ணே

#99
கோயிலு மாடும் பறித்தவனும் கன்றிக் கூற்றுமே கற்றிருந்தவனும்
வாய் இல்லாக் குதிரை கண்டவனும் மாட்டு வகை தெரியுமோ வாலைப்பெண்ணே

#100
இத்தனை சாத்திரம் தாம் படித்தோர் செத்தார் என்றால் உலகத்தோர் தாம் சிரிப்பார்
செத்துப்போய்க் கூடக் கலக்க வேண்டும் அவன் தேவர்களுடனே சேர வேண்டும்

#101
உற்றது சொன்னக்கால் அற்றது பொருந்தும் உண்டோ உலகத்தில் அவ்வை சொன்னாள்
அற்றது பொருந்தும் உற்றது சொன்னவன் அவனே குருவடி வாலைப்பெண்ணே

#102
பூரண நிற்கும் நிலை அறியான் வெகு பொய் சொல்வான் கோடி மந்திரம் சொல்வான்
காரணகுரு அவனும் அல்ல இவன் காரியகுரு பொருள் பறிப்பான்

#103
எல்லாம் அறிந்தவர் என்று சொல்ல இந்தப் பூமியிலே முழு ஞானி என்று
உல்லாசமாக வயிறு பிழைக்கவே ஓடித் திரிகிறார் வாலைப்பெண்ணே

#104
ஆதி வாலை பெரிதானாலும் அவள் அக்காள் பெரிதோ சிவன் பெரிதோ
நாதி வாலை பெரிதானாலும் அவள் நாயகம் அல்ல சிவம் பெரிது

#105
ஆயுசு கொடுப்பாள் நீரிழிவு முதல் அண்டாது மற்ற வியாதி எல்லாம்
பேயும் பறந்திடும் பில்லி வினாடியில் பத்தினி வாலைப்பெண் பேரைச் சொன்னால்

#106
நித்திரை-தன்னிலும் வீற்றிருப்பாள் எந்த நேரத்திலும் வாலை முன் இருப்பாள்
சத்துரு வந்தாலும் தள்ளிவைப்பாள் வாலை உற்ற காலனையும் தான் உதைப்பாள்

#107
பல்லாயிரம் கோடி அண்டம் முதல் பதினான்கு புவனமும் மூர்த்தி முதல்
எல்லாம் தானாய்ப் படைத்தவளாம் வாலை எள்ளுக்குள் எண்ணெய் போல் நின்றவளாம்

#108
தேசம் புகழ்ந்திடும் வாலைக்கும் இத் தமிழ் செய்ய எனக்கு உபதேசம்செய்தாள்
நேசவான் வீரப் பெருமாள் குருசாமி நீள் பதம் போற்றிக் கொண்டாடுங்கடி

#109
ஆறு படைப்புகள் வீடு கடை சூத்ர அஞ்செழுத்துக்கும் வகை அறிந்து
கூறும் உயர் வல வேந்த்ரன் துரை வள்ளல் கொற்றவன் வாழக் கொண்டாடுங்கடி

#110
ஆடுங்கள் பெண்டுகள் எல்லோரும் அந்த அன்பான கொங்கணர் சொன்ன தமிழ்
பாடுங்கள் சித்தர்கள் எல்லோரும் வாலை பரத்தைப் போற்றிக் கொண்டாடுங்கடி

#111
சித்தர்கள் வாழி சிவன் வாழி முனி தேவர்கள் வாழி ரிஷி வாழி
பத்தர்கள் வாழி பதம் வாழி குரு பாரதி வாலைப்பெண் வாழியவே
**

19 கைலாயக் கம்பளிச் சட்டை முனி நாயனார்

** கைலாயக் கம்பளிச் சட்டை முனி நாயனார் முன் ஞானம்

#1
அகண்ட பரிபூரணமாம் உமையாள் பாதம் அப்புறத்தே நின்றதோர் ஐயர் பாதம்
புகன்று நின்ற கணேசனொடு நாதாள் பாதம் புகழ் பெரிய வாக்குடைய வாணி பாதம்
நிகன்றெனவே எனை ஆண்ட குருவின் பாதம் நிறைநிறையாய்ச் சொரூபத்தில் நின்றோர் பாதம்
முகன்று எனை ஈன்றெடுத்த சின்மயத்தின் பாதம் மூவுலகு மெச்சுதற்குக் காப்புத்தானே

#2
தாங்கி நின்ற சரியையிலே நின்று சடம் வீழில் தப்பாது கிரியையுள்ளே சாரப் பண்ணும்
வாங்கி நின்ற கிரியை விட்டு விழுந்ததானால் மகத்தான உடலெடுத்து யோகம் பண்ணும்
ஓங்கி நின்ற கிரியை விட்டு விழுந்ததானால் உத்தமனே உயர்ந்து நின்ற ஞானம் தோற்றும்
பாங்கில் நின்ற அச் சென்மம் மவுன முத்தி பரிவாக வாய்ந்தவர்கள் அறிந்துகொள்ளே

#3
அறிந்திருந்த நான்குக்கும் விக்கினம் உண்டாம் அப்பனே ஆகாயமியம் சித்தினோடே
மறிந்து நின்ற பிராரத்தம் தோயத்தோடு மகத்தான நாலுக்கும் விக்கினம் ஆச்சு
பிரிந்து நின்ற நாலினால் செய்வது என்ன பேரான வறுமையொடு கிலேசம் துக்கம்
செறிந்து நின்ற பெண் பொன்னால் மண்ணினாலே சேத்துமத்தில் ஈப் போலத் தியங்குவாரே

#4
தியங்கினால் கெர்ச்சித்துத் துரத்துச் சண்ணும் சீறியர் மிலேச்சரையே சகத்தினுள்ளே
மயங்கினார் நாலு பாதத்தினுள்ளும் மனம் செவ்வையாவது எப்போது அறிவது எப்போ
தயங்கினார் உலகத்தில் கோடிப்பேர்கள் சாவதும் பிறப்பதும் காவடி போல் ஆச்சு
துயங்கினார் துயரத்தால் ஞானம் போச்சு சுடுகாட்டில் அறிவது போல் சுத்தப் பாழே

#5
பாழான மாய்கை சென்று ஒழிவது எப்போ பரந்த மனம் செவ்வையாய் வருவது எப்போ
வாளான விழியுடைய பெண்ணைச் சேரும் மயக்கம் அற்று நிற்பது எப்போ மனமே ஐயோ
காழான உலகமதன் ஆசை எல்லாம் கருவறுத்து நிற்பது எப்போ கருதி நின்ற
கோளான கருவி விட்டு மேலே நோக்கிக் கூடுவதும் ஏது என்றால் மூலம் பாரே

#6
மூலமதில் ஆறு தலம் கீழே தள்ளி முதிர்ந்து நின்ற மேல் ஆறும் எடுத்து நோக்கிக்
கோலமுடன் உன் மனையைத் தாண்டி ஏறிக் கொடியதொரு ஞான சக்திக்குள்ளே மைந்தா
பாலம் என்ற கேசரியாம் மவுனத்து ஊன்றிப் பராபரமாம் மந்திரத்தில் ஞானம் முற்றிக்
காலமொடு பிறப்பு இறப்பும் கடந்து போகும் கைவிட்ட சூத்திரம் போல் சடமும் ஆங்கே

#7
ஓங்காரம் முதற்கொண்டு ஐந்தெழுத்தோடு ஆறும் உற்று நின்ற பஞ்சகர்த்தாள் இருந்திடு ஆறும்
ஆங்காரம் ஆணவம் நான் எனலும் போனால் அப்ப அலோ அகாரம் முதல் உகாரம் காணும்
பாங்கான மகாரமொடு விந்துநாதம் பரவியதன் மேல் நிற்கும் பராபரம்தான்
வாங்கான மவுனத்தைப் பற்றி ஏறு மருவி நின்று கிரியைத்தான் ஒத்துக் காணே

#8
ஒத்து நின்ற ஓங்காரம் மண்ணை உண்ணும் உருவி அந்த மண் சென்று சலத்தை உண்ணும்
பத்தி நின்ற சலமதுதான் தீயை உண்ணும் பாங்கான தீச் சென்று காலை உண்ணும்
வெத்தி நின்ற கால் சென்று விண்ணை உண்ணும் விழுந்ததப்பா சடம் என வேதாந்தப் பேச்சு
முத்தி கண்டு கூடுவதும் எந்தக் காலம் மூடரே மதுவை உண்டு மேல் பாரீரே

#9
பாரப்பா அகாரம் முதல் உகாரம் கொள்ளும் பாங்கான உகாரமது மகாரம் கொள்ளும்
நேரப்பா மகாரமது விந்து கொள்ளும் நேரான விந்துவது நாதம் கொள்ளும்
சேரப்பா நாதம் முற்றுச் சத்தி கொள்ளும் சேர்ந்து நின்ற சத்தி அல்லோ சிவத்தைக் கொள்ளும்
ஆரப்பா சிவம்-தன்னைப் பரந்தான் கொள்ளும் அப் பரத்தைக் கொண்ட இடம் அறிந்தே உன்னே

#10
உன்னி நின்ற மூல முதல் ஆறும் பார்த்தே உருகி நின்ற சுழுமுனையை அறிந்த பின்பு
மன்னி நின்ற மதி மேல் சாம்பவியைக் கண்டு மருவி நின்று மனம் உறைந்து தேர்ந்த பின்பு
பன்னி நின்ற இவ்வளவும் யோக மார்க்கம் பகல் இரவு மற்ற இடம் ஞான மார்க்கம்
கன்னி நின்ற இடம் கண்டால் அவனே ஞானி காட்டுவான் கேசரியைக் காட்டுவானே

#11
காட்டுவாள் கிரி உன்னை மேலே ஏற்றிக் கைவிட்டால் கிரியைத்தான் கீழே தள்ளுவாள்
மூட்டுவாள் குளிகை விட்டால் கணத்துக்குள்ளே மூதண்ட புவி கடந்து தெளிவும் காணும்
ஆட்டுவாள் அண்டரண்ட மாலை பூண்டாள் ஆதி வத்து அனாதி வத்து இரண்டும் ஒன்றே
ஊட்டுவாள் நிர்க்குணத்தின் அமிர்தவல்லி உயர்ந்து நின்ற ஞானசத்தி உறவுதானே

#12
உறவு என்னத் தாளைவிட உறவும் உண்டோ உலுத்தரையோ வாமத்தைத் தூடிப்பார்கள்
குறைவு என்ன திரோதாயி சமயம்-தோறும் கூடி அல்லோ மாய வலை கூட்டி ஆட்டி
மறவு என்ன ஞானம் என்ன மங்கித் தள்ளி மகத்தான சமுசார வலையில் போட்டாள்
நிறவு என்ன வாமத்தால் ஞானம் ஆச்சு நின்றவனே சிவயோகி வாசி பாரே

#13
வாசி என்றும் மவுனம் என்றும் இரண்டும் வித்தை மகத்தான சாம்பவி கேசரியும் ரண்டு
தேசி என்றால் யோகத்துக்கு ஆதி வித்தை திறமான மவுனம் என்றால் ஞான வித்தை
மாசி என்ற மனம் உடைத்தால் இரண்டும் ஆகா மருவி நின்றே அறிவி அறிந்தால் இரண்டும் ஆகும்
தூசி என்ற வெளி அல்லோ அண்ட வீதி சொக்காமல் கிரி கொண்டே ஆக்கி ஏறே

#14
ஆக்கி நின்ற பரிசத்தால் கொசு இறந்தது ஆச்சரியம் ரூபத்தில் வண்டு இறந்த
பாக்கி நின்ற மணி ஒலியால் மான் இறந்த பாழான உரிசையினால் மீன் இறந்த
தாக்கி நின்ற கெந்தியினால் எறும்பு சென்று சாதகமாய் மாண்டது இந்த ஐந்தும் பாரு
பாக்கி நின்ற இந்திரிய விடயத்துள்ளே பாழான மனம் சிக்கிப் படுகுவாரே

#15
வாரான உலகத்தில் மனிதர் கோடி மருவி நின்றே உண்டு உடுத்துச் சையோகித்துத்
தாரான கச துரக ரதங்கள் ஏறிச் சகல ரத்ன பூடணங்கள் தரித்து விம்மி
மாரான வாழ்வடைந்தோர் இறந்தார் ஐயா மாண்டவர்கள் வெகு கோடி மாய வாழ்க்கை
கூரான சிவபோக ஞானம் வந்தால் கூடு அழிந்துபோகாது கூடு கூடே

#16
கூடுவது அம்பரமோ கேசரமோ என்னில் கூர்மையுள்ள வானோவதீதமோ என்னில்
ஆடுவது ஆச்சரிய நின்மலமோ என்னில் அருமையுள்ள நிர்க்குணமோ நிரஞ்சனமோ என்னில்
பாடுவது பதம் கடந்த பூரணமோ என்னில் பகல் இரவு மற்றிடமோ பராபரமோ என்னில்
ஊடுவது எங்கே பின்னை எங்கும் இல்லை உம்மென்றால் ஊம வெள்ள மோகம் காணே

#17
மோகம் என்ற உரலுக்குள் மனம்தான் சிக்கி முசியாமல் இடிப்பதற்கு ஐம்பொறியும் கோல்தான்
பாகம் என்ற கோபம் வந்தே உருவாய் நின்று பதையாமல் சண்ணிச் சே உலகம் எல்லாம்
தாகம் என்ற ஞானம் வந்து என்ன செய்யும் சண்டாள இந்திரியச் சார்பினாலே
வேகம் என்ற மன லகரியைத் தான் கொண்டு விண்ணுக்குளே நிற்க வெளியாய்ப் போமே

#18
வெளி ஏது வெளிக்குள்ளே வெளி அங்கு ஏது வேதாந்த வெளி கடந்த ஒளி அங்கு ஏது
அளி ஏது அவ் அளி கடந்த அண்டம் ஏது அப்புறத்தே தோற்றுகின்ற சோதி ஏது
நெளி ஏது நினைவு ஏது நிர்க்குணம்தான் ஏது நேரான பூரணத்தின் நாதம் ஏது
சுழி ஏது சுழி அடக்கும் சூட்சம் ஏது தோற்றுமப்பா வானத்தை ஒத்துப்பாரே

#19
ஒத்து நின்ற சரியையொடு கிரியை ரண்டும் உறவாதி செய்த வம்பா நன்றாய்க் கேளு
பத்தி நின்ற யோகம் முதல் ஞானம் ரண்டும் பாங்காகச் சித்தருக்கே அடுத்தவாறே
அத்தி நின்ற ஆகாம்ய சஞ்சித பிராரத்வம் ஆருக்கும் அடுக்கும் என்றால் யோகம் எய்தி
முத்தி நின்ற ஞானத்தில் புகுந்தோர்க்கு ஐயா மூன்றும் இலை பிரபஞ்சம் முழுதும் போச்சே

#20
போச்சு என்பர் முக்காலம் பிறகே நின்று புரி முருக்குப் போல் ஏறிப் புணர்ந்து கொல்லும்
ஆச்சப்பா காலம் என்ன என்று சொல்லி அவரவர்கள் சபம்செய்வார் அறிந்தமட்டும்
நீச்சப்பா அகால வெள்ளம் கடப்பார் என்றால் நேரான ஞானி அல்லோ கடந்து நின்றார்
மூச்சப்பா அற்றிடத்தைப் பாரு பாரு மூட்டுவிக்கும் முடுகும்தான் ஞானத் தீயே

#21
தீக்குள்ளே வெந்து நின்ற பற்பம் போலச் செகசாலம் முதற்கொண்டு காலம் போகும்
தீக்குள்ளே விழுந்து எழுந்த நெய்யைப் போலச் சிறப்பான ஞானமது திரண்டே ஏறும்
தீக்குள்ளே காட்டமொடு கோலும் கூடித் திரண்டால் போல் கருவி எல்லாம் கணத்தில் மாளும்
தீக்குள்ளே பராபரம்தான் இருந்ததாயின் செகம் எல்லாம் வித்தை என்று தெளிந்துபோமே

#22
தெளிந்த இடம் கண்டார் ஆர் சித்தர் யோகி செகம் எல்லாம் நான் என்பார் திருட்டு ஞானம்
ஒளிந்துவிட முனைந்ததால் கேசரிக்குள் நிற்பாள் உற்றுப்பார் மகாரம் வைத்தே யூகி ஊதே
அளிந்த இடம் நிர்க்குணம்தான் அதிலே கேளு ஆச்சரிய மகாரம் என்ற உண்டது உண்டு
களிந்த இடம் நிராகாரம் ஒன்றும் இல்லை காட்டுந்தார் அறிவுகொண்டே உற்றுக் காணே

#23
உற்று நின்றே உலகத்தோர் ஞானம் பார்த்தே ஊணுக்குக் கிடையாமல் புரட்டுப் பேசிப்
பற்றுகின்ற மோகத்தால் பெண்ணைக் கூடிப் பரந்து நின்ற திரோதாயி தலையில் சிக்கிக்
கொத்துகின்ற இடம் காண்பார் கண்ணை மூடிக் கும்மென்றே இருளாகும் அறிவும் பொய்யாம்
மற்று நின்ற லகரியினால் கொண்டே ஏறமாட்டார்கள் அறு சமய மாடுதானே

#24
சமயம் எல்லாம் சக்தி உண்டு சிவமும் உண்டு சண்டாளர் பிரித்து அல்லோ தள்ளினார்கள்
சமயம் எல்லாம் வேதாந்த சித்தாந்தம் உண்டு சாதகத்தைப் பாராமல் தயங்கினார்கள்
சமயம் எல்லாம் நாதம் உண்டு விந்தும் உண்டு காக்காமல் கெட்டார்கள் உலகத்தோர்கள்
சமயம் எல்லாம் அம்பரமாம் ஞானம் உண்டு தாயை விட்ட பாவத்தால் தவறிப்போச்சே

#25
போச்சப்பா ஆறாறும் பானத்தாலே புத்தியுள்ளோர் பானத்தால் கண்டார் ஐயா
ஆச்சப்பா வாமம் என்ன நிசிதம் என்பார் அதன் குணமோ திரோதாயி அனுட்டானம்தான்
ஓச்சப்பா நாதாக்கள் ரிடிகள் சித்தர் உயர்ந்தவரைக் கண்டவர் பானத்தால் அன்றோ
காய்ச்சமரம் பட்டது என்ன வேர் அற்றால் போல் கசடர் என்ற அறு சமயம் கேட்டே பாங்கே

#26
பாங்கான குண்டலிக்குள் மூலம் ஒன்று பாரப்பா கண்டத்தில் மூலம் ஒன்று
போங்கான புருவ மைய மூலம் ஒன்று புகழான விந்துவிலே மூலம் ஒன்று
வாங்கான சத்தியிலே மூலம் ஒன்று மருவி நின்ற பராபரத்தில் மூலம் ஒன்று
தேங்காமல் இவை ஆறும் கண்ட ஞானி சேர்ந்து நின்ற மும்மூல யோகியாமே

#27
ஆமப்பா நகாரம் முதல் யகாரம் நிற்கும் அவ்வளவும் யோகத்தின் மூலம் ஆச்சு
தாமப்பா அகாரம் முதல் உகாரம்தொட்டுச் சாதகமாய் மகாரவரை ஞான மூலம்
ஓமப்பா திசை நாத மவுனத்தில் காணும் உற்றேற உற்றேற அகண்ட வீதி
காமப்பால் உண்டக்கால் யோக சித்தி கடும் கானல் பால் உண்ட ஞானம் ஆச்சே

#28
ஆச்சு இந்த வரிசை விட்டே உலக ஆசான் ஆதி அந்தம் ஒன்று ரவி மதிதான் என்பான்
மூச்சற்ற இடம் காட்டத் தெரியா நின்று முன் ஏது பின் ஏது சாங்கம் என்பான்
வாச்சு இந்த மயக்கத்தால் உலகோர் கேட்டார் மதுவை விட்டு ஏறி அல்லோ வையத்தோர் கேட்டார்
ஓச்சு இந்த விதம் அறிந்தோன் யோக ஞானி உம்மென்று ஆகும் என்ற நாதமாமே

#29
நாதமப்பா யோகத்தில் ஐந்து நாதம் நலமான மவுனத்தில் ஐந்து நாதம்
வேதமப்பா கடந்திடத்தே சுத்த நாதம் வெட்டவெளிக்குள்ளே ஒரு நாதம் உண்டு
போதமப்பா கடந்திடத்தே அந்த நாதம் புகழாகச் சேவித்து நிற்கும் என்றும்
காதமப்பா தூரம் அல்ல அந்தோ அந்தோ கண்ணிமைக்குள் விண்ணுக்குள் கலந்து காணே

#30
விண் ஏது வெளி ஏது ஒளி அங்கு ஏது விரைந்து இந்த மூன்றும் கேசரிதான் ஆச்சு
கண் ஏது காது ஏது மூக்கு அங்கு ஏது கண்டிப்பாய்க் கண்ட எல்லாம் அழிந்துபோச்சே
ஒண்ணு இரண்டு ஏது சமரசம்தான் ஏது உற்றுப்பார் வெட்டவெளி ஒன்றும் இல்லை
எண் ஏது நினைவு ஏது இங்கு அறிவும் ஏது ஏகமாய்க் கலந்து துத்தியிடத்தைக் காணே

#31
உத்திகொண்டு ஞானநூல் பார்த்துப்பார்த்தே உலகத்தோர் ஞானம் எல்லாம் வந்தது என்று
பத்திகொண்டே அலைவார்கள் விண்ணைப் பாரார் பாழான மனத்தை அங்கே நிறுத்தமாட்டார்
முத்தி கண்ட இடம் எங்கே என்று காணார் மூச்சற்று நின்றிடத்தை நோக்கிப் பாரார்
சித்தி கண்டால் சித்திகொண்டு செய்யமாட்டார் சேர்ந்தும் அதாய் இருக்க அறியார் திருடர்தானே

#32
தான் என்ற ஆணவத்தை நீக்கமாட்டார் சண்டாள கோபத்தைத் தள்ளமாட்டார்
ஊன் என்ற சுகபோகம் ஒழிக்கமாட்டார் உற்று நின்ற சையோகம் விடுக்கமாட்டார்
பான் என்ற ஞான வெள்ளம் உண்ணமாட்டார் பதறாமல் மவுனத்தே இருக்கமாட்டார்
வான் என்ற பொருள் என்ன எளிதோ மைந்தா மகத்தான மனம் அடங்க எய்யும் காணே

#33
காண் இந்த உலகத்தில் மாயக் கூத்தும் கண் மூக்குச் செவியோடு இந்திரியக் கூத்தும்
பூண் அந்த வாசியினால் வறுமைக் கூத்தும் புகழான செனனமொடு மானக் கூத்தும்
ஆண் இந்த அண்டம் எல்லாம் படைத்த கூத்தும் ஆங்காரம் மனம் புத்தியான கூத்தும்
தோண் இந்தப்படி படைத்த பரமே ஐயா சொல் பெரிய பூரணமே என்று கூவே

#34
கூவையிலே ஆத்தாளைத் தொழுது கூவக் குறையாத கருணையினால் திரும்பிப் பார்த்துத்
தாவையிலே மதலையைத்தான் தாய்தான் சென்று சார்வாக எடுத்துப்போ முன்னை மைந்தா
தேவையிலே எடுத்து அணைத்தே உயிரை வைப்பாள் செகசாலம் ஆடுகிற திருட்டுத் தாய்தான்
பாவையிலே மனம் சென்று பரவாவிட்டால் பாராது போல் இருப்பாள் பாரு பாரே

#35
பாரப்பா செகம் அனைத்தும் அண்டம் எல்லாம் பாங்கான சூழ்ச்சியில் வைத்திருந்த கன்னி
நேரப்பா இவளை விட்டு யோகம் பார்த்தேன் நேராக அண்டத்தில் ஞானம் பார்த்தேன்
சேரப்பா சுத்த விழல் மனமோ பேயாம் செகசாலக் கூத்தை விட்டுத் தெளியமாட்டார்
ஆரப்பா அவளை விட்டு ஞானம் கண்டோர் அலைக்கழிக்கும் ஆசை என்ற பாம்புதானே

#36
பாம்பை அல்லோ ஆபரணம் பூண்ட ஈசன் பரிவாக மதியோடு கொன்றை சூடிப்
பாம்பை அல்லோ முந்நூலாய்ப் போட்ட கூத்தன் பாங்கான கரி உரித்த பாணி பாணி
பாம்பை அல்லோ கங்கணமாய்த் தரித்துக்கொண்டு பரி உழுவைத் தோல் உடுத்துப் பாதம் தூக்கிப்
பாம்பை அல்லோ மனைக்கு மோதிரமாய்ப் போட்டு பார் என்றே அகண்டத்தில் ஆடினாரே

#37
ஆடினதோர் கூத்து எல்லாம் ஆத்தாள் மெச்சி அண்டையிலே அழைத்தானை இருத்திக்கொண்டாள்
நாடினதோர் அவள் அருகில் அரனும் எய்வான் நாம் அறியோம் அவன் அவளும் ஒன்றே என்றே
ஊடினதோர் இடம் எங்கே ஒலி கேட்பு எங்கே ஒன்றாகக் காணுகிற நடனம் எங்கே
கூடினதோர் அகண்டத்தின் சோதி எங்கே கூசாமல் மவுனத்தில் கூடிக் காணே

#38
காணப்பா மகார வரை நாத ஓசை கன்னிக்குப் பீடமடா மவுன ஞானம்
ஊணப்பா ஊணப்பா நாதத்தோடே ஒரு முனையாய் ஒரு வழியாய் ஒன்றாய் ஓடும்
தோணப்பா தோற்றுவது அங்கு ஒன்றும் இல்லை சுத்த வெளி ரவி கோடி சூழ வன்னி
ஆணப்பா மா கோடி கண் கொள்ளாதே ஆச்சரியம் அதிகம் என்ற மகாரம் காணே

#39
மகாரம் அல்லோ முந்தி ஆசான் சுட்டி வழிகாட்டும் முறைமை அது ஞான மார்க்கம்
மகாரம் அல்லோ அடங்கி அந்த நாதம் தாண்டி மருவி நின்ற இடம் அல்லோ கேசரி மைந்தா
மகாரம் என்ன மேல் எழுத்தே என்பார் மாண்பார் மாட்டுவதை மூன்றெழுத்தது என்று காணார்
மகாரம் என்ன மகார வித்தை அதீத வித்தை வாய் திறந்து பேசாதே மௌனமாமே

#40
மௌன வித்தை யாதெனில் மூன்றெழுத்தே என்பார் மாட்டுகிற இனம் காணார் மார்க்கம் காணார்
மௌன வித்தை யாவது என் வாய் மூடு என்பார் மாடு முதல் குதிரையினால் ஆவது என்ன
மௌன வித்தை கேட்டார் கூட்டுறவு காணார் வாய் மூடி வழியோடே நாதம் கேளார்
மௌன வித்தை ஆசான்தான் தூண்டிக் காட்டில் மணி முதலாய்த் திசை நாதம் கேட்கும்தானே

#41
கேட்கையிலே மதியினிடம் அமிர்தம் சிந்தும் கெடியான துவாதசமும் கடந்து தோன்றும்
வாழ்க்கையிலே ஆசை அறும் நினைவும் போகும் வாரிதி போல் அண்ணாக்கில் அமிர்தம் ஓடும்
தாக்கையிலே ரவி கோடி காந்தி காணும் சச்சிதானந்த ஒளி தானே தோன்றும்
மூட்கையிலே மேல் அமிர்த லகரி மீறும் மூன்று உகமும் கணம் ஆகும் மூட்டிப் பாரே

#42
மூட்டையிலே உலக கிரி கொண்டு மூட்டு முதிர்ந்த பின்பு விண்ணுள் கிரி வந்து காக்கும்
கூட்டையிலே மகாரத்தை அறிந்து கூட்டும் கும்மென்ற நாதத்தில் கூடி ஏறும்
மாட்டையிலே அறிவோடு மனத்தை மாட்டும் மறுகாலும் நாதத்தைக் கூர்ந்து கேளே
ஓட்டையிலே ஒரு வழியாய் ஓடிற்றானால் உத்தமனே அச் சின்ன முத்தி ஐயா

#43
ஐயனே குருவான அகண்ட மூர்த்தி அதிதம் என்ற ஞானம் எல்லாம் அருளிச் செய்தாய்
மெய்யனே ஏறுகிற சாதகம் சொல் வேதாந்த லட்சியத்தை விளங்கச் சொல்லு
துய்யனே நிலை-தோறும் எழுத்தைச் சொல்லு சொல் பெரிய பிராணாய சூட்சம் சொல்லு
தையனே தையம் என்ற நிர்த்தம் சொல்லு சாதகமாய் லட்சியத்தைச் சாற்றிடாயே

#44
சாற்றிடு என்று கேட்ட மாணாக்கனே கேள் சந்தோடம் ஆச்சுது இப்போ சார்பு சொல்வேன்
ஏற்றம் என்ற மூலத்தில் வாசி வைத்தே எளிதாகப் பிராணாயம் பண்ணித் தேறி
ஆற்றும் என்ற குண்டலிக்குள் நடனம் கண்டால் ஆதித்தன் கோடியைப் போல் காந்தி காணும்
மாற்றும் என்ற கண்டத்தில் அங்கென்று ஊணு வாய் திறக்கவொட்டாது வழிசெய்வாயே

#45
வழியோடே நின்று உரைத்துப் பழக்கமாகி மனோன்மணியாம் புருவ மையத்து ஊடே சென்றே
ஒளியோடே மவுனத்தை ஓட்டி ஊதாய் உத்தமனே சாம்பவியைக் கண்டு கொள்வாய்
நெளிவா போய் இவ்வளவும் யோக மார்க்கம் நின்றவனே சிவயோகி நினைவாய்க் கேளு
தெளிவோடே விந்து என்ற குரு பதத்தில் தேக்கப்பா மவுனத்தைத் தாரையாமே

#46
ஆமப்பா விந்து ரவி மதியோர் கூடி ஆச்சரியம் கண்கூசி மயக்கமாகி
ஓமப்பா நாதத்தில் செவிடுபட்டே ஊமை என்ற எழுத்துடைய உருவம் காணும்
தாமப்பா சத்தியிலே வன்னியோடு சத கோடி ரவி மதியும் ஒவ்வா ஒவ்வா
வாமப் பால் உண்டவர்க்கு இத்தனையும் காணும் வாய் பேசா ஞானிக்கு மாயம்தானே

#47
தான் என்ற சிவத்துக்குள் மௌனம் சென்றால் சத கோடி நவ கோடி வன்னி ரவி சோமன்
பான் என்ற பரத்தின் கீழ் முப்பாழ் உண்டு பார் மகனே அகாரம் ஒன்று உகாரம் ஒன்று
வான் என்ற மகாரம் ஒன்று முப்பாழாக வழங்கிற்றே அதன் ஒளியைச் சொல்லப் போகா
தேன் என்ற மொழியுடைய மனன் அந்தத்தைத் தேவி பதம் என்ற கேசரிதான் காணே

#48
காண் இந்தக் கேசரத்தின் தாயின் காந்தி கண் கொள்ளா விண் கொள்ளா கரையும் கொள்ளா
ஆண் இந்தப் பரை என்பார் அம்பரம்தான் என்பார் அவளுக்குள் மவுனம் உண்டு அறிவாய் பாராய்
ஊண் இந்த மௌனத்தை நிட்களமாய்ப் போவாய் ஓகோகோ அம்பரத்தில் ஏதோ ஏதோ
தோண் இந்தப்படி இருந்தால் லயத்தின் நேர்மை சொல்ல அரிதாம் அப்புறத்தே சோதிதானே

#49
சோதி என்று பராபத்தில் அறு வகை உண்டு சொல்லையிலே கேட்டிருப்போம் சொல்லிக் காணோம்
ஆதி என்ற மூல குரு பேரால் மைந்தா ஆண்பிள்ளைச் சிங்கம் என்ற கொங்கணர் கேள்
வாதி என்றால் அவர் வாதி ஞான வாதி மகத்தான குளிகையிட்ட சித்தன் வாதி
பேதி என்றால் மேருப் போலேயும் பண்ணும் பெரு வாதி ரச வாதி பேர் உள்ளோனே

#50
பேர் உள்ள கொங்கணர்தாம் குளிகை இட்டுப் பேரான பூரணத்தில் அறுவரை கண்டார்
ஆர் உள்ளார் உலகத்தில் வரை குரு சொல்ல ஆச்சரியம் சித்தருக்குக் கீர்த்தி வைத்தார்
நேர் உள்ள ரிடிகளொடு முனிவரையா நேராகச் சமாதியிலே கண்டோர் உண்டு
தார் உள்ள சலத்தோடும் சென்றார் இல்லை சமர்த்தான மனத்தினிடச் சத்திதானே

#51
சத்தியுள்ள வாசனையாம் குரங்கு கேளு தாண்டி அல்லோ இந்திரியக் கொம்புக்குள்ளே
பத்தியுள்ளே அலைத்து அடித்துப் பேய்க்கூத்து ஆக்கிப் பாங்கான மனத்தை அல்லோ சின்னம் பண்ணி
முத்தியுள்ள வாசலுக்கே ஏறொட்டாது முழு மோசச் சனியனப்பா ஞானத்துக்குக்
கொத்தியுள்ள வாசனையை அடக்கிப் பார்த்தால் குருடனுக்கும் ஞான வழி கூடும் காணே

#52
கூடுவதும் எப்படியோ ஞான மூர்த்தி குரங்கை விட்டே அகலுகிற வழியைச் சொல்க
நாடுவதும் உலகத்து வாதம் வந்தால் நல் மனம் உண்டானால் சாத்திரத்தில் சொல்வார்
ஊடுவது சாது சங்கம் வேதாந்தம் பார் உத்தமனே வாசனையாம் குரங்கு போகும்
ஆடுவது தொய்த வாசனையில் ஏற்றும் அப்படியே உலகத்தில் அனேகம் பேரே

#53
பேரான உலகத்தில் ஞானம் முற்றும் பேசாமல் அருகு இருந்த இடத்தில் மைந்தா
வாரான மோதத்தில் லிங்கம் ஆகும் வாதிக்கும் மேருவுக்கும் நடுவே கோடி
காரான காமத்தால் பாண்டி லிங்கம் கைவிட்ட சமாதியினால் சுந்தர லிங்கம்
தாரான மலை-தோறும் பூமி-தோறும் சாற்ற அரிது சாற்ற அரிது சார்ந்து பாரே

#54
பாரப்பா சுயம்பில் வந்து பிட்சை ஏற்றால் பலித்ததப்பா ஞான சித்தி மவுன சித்தி
நேரப்பா ஒன்பதுபேர் இவருள் ஆறு நிகராகப் பெலிகொண்டோர் நீடு மூவர்
காரப்பா விண்ணை என்றால் சாவார் கர்த்தர் காத்தாலே ஞான சித்தி கலந்து கூடும்
ஊரப்பா வாதியைப் போல் நீங்கள் கெட்ட உலுத்தர் என்பார் சித்தர்கள்தாம் உரைத்திடீரே

#55
உரைக்க அல்லோ ராசயோகம் வைத்தான் ஈசன் உண்டு உடுத்துத் திரிவதற்கோ சொன்னான் ஐயன்
மறைக்க வாசனை லகிரி கொள்ளும் என்றான் மகத்தான தெட்சணாமூர்த்தி ஆசான்
நிறைக்க அல்லோ யோகம் முதல் ஞானம் சொன்னான் நிற்க இடம் அற்ற நிர்மலமாம் சோதி
இறைக்க அல்லோ ஊறினதோர் கேணியைப் போல் எடுக்கெடுக்க எழும்பும் வாசனைதான் காணே

#56
எழும்பாமல் வாசனையைக் கொன்றோன் ஞானி ஏகாமல் வாசனையை அடித்தோன் சித்தன்
எழும்பாமல் கருவிகளை இருக்கச் சாடி இருத்தினவன் சிவயோகி வாதயோகி
எழும்பாமல் அடிப்பதற்குச் சூட்சம் சொல்வேன் என் மக்காள் மவுனத்தே இருந்தால் போகும்
எழும்பாமல் வாசனைதான் போச்சு தானால் ஏதும் இல்லை சுத்த வெளி இருளும் போச்சே

#57
போச்சு என்றே இருக்கிறதோர் ஞானத்துக்குப் புகழான வல்லமைதான் என்ன மைந்தா
வாச்சென்ற அகண்டத்துள் வரைகள் ஆறு மருவினால் சடத்தோடே அவனே சித்தன்
நீச்சென்ற வரைப் பார்த்து வாரேன் மக்காள் நில்லுங்கோள் குகையின் உள்ளே என்று சொல்லித்
தோச்சென்ற பூரணத்தில் சொக்கி நின்ற சுந்தரானந்தன் வந்து தொழுதிட்டானே

#58
தொழுதுகொண்டு பதம் பிடித்து அகண்டத்துள்ளே சொக்குகிறோம் என்று சொன்ன சுந்தரமே ஐயா
விழுதுகொண்ட ஆலைப் போல் நெட்டிட்டு ஏறி வெளி கடந்தே ஆறு கலம் கண்டு வாரேன்
முழுது கண்டான் என் பிள்ளை என்று கீர்த்தி மூட்டி வைப்பேன் சித்தத்தில் கோபம் வேண்டா
பழுது கொண்டு வருகிறேன் திரும்பாவிட்டால் பராபரத்தில் லயிச்சிடுவேன் பண்பு பாரே

#59
பாரப்பா அகண்ட வெளி சுத்தக் கானல் பார்ப்பதற்கோ அங்கு ஒன்றும் இடமே இல்லை
நேரப்பா ரவி கோடி வன்னி கோடி நேரான மதி கோடி கண்ணோ கூசும்
ஆரப்பா அளவிட்டோர் கண்டோர் வீதி அதற்குள்ளே செல்ல அரிது மைந்தா போபோ
காரப்பா குகை ஒன்று பட்டம்கட்டிக் கடும் குளிகைச் சோடிட்டுக் கலந்திட்டேனே

#60
கலந்திட்டேன் ஒரு வரையில் நாத ஓசை கண்கொள்ளா வெளிக்குள்ளே கலக்கம் ஆச்சு
சலந்திட்டேன் மறு வரையில் இடியோ கோடி கண் கெட்டேன் மதி கெட்டேன் காதும் கெட்டேன்
கலந்திட்டேன் மூவரையில் காந்திக்குள்ளே கடுக வந்தேன் கொங்கணரை அழைத்திட்டீரே

#61
அழையும் என்ற சொல் கேட்டுச் சுந்தரானந்தன் கணத்தில் கொங்கணரை அதிசீக்கிரத்தில்
விழைவுடனே ஓடி வந்து தெண்டனிட்டு விரைவுடனே கொங்கணர்தான் இக்கணத்தில்
அழையும் என்றார் எங்கள் ஐயர் உங்களைத்தான் ஆச்சரியம் சொல்லுதற்கே அடியேன் வந்தேன்
அழையும் என்ற சீடனுக்குப் பின்னே வந்தே அடியேன்தான் வந்தது என்று பணிந்திட்டாரே

#62
பணிந்திட்ட கொங்கணரை வாரி மோந்து பராபரமே நிர்க்குணமே பண்புள்ளோனே
அணிந்திட்ட அறு வரையில் சொக்கிச் சென்ற ஆதி என்ற பராபரமே ஐயா ஐயா
மணியிட்ட சிலம்பொலியைக் கேட்ட மூர்த்தி மார்க்கத்தை எப்படித்தான் ஏறினீரோ
கணியிட்ட நிர்மலா மனத்தினாலே கைலாய தேகம் என்ன தங்கம் ஆச்சு

#63
ஆச்சப்பா அப்படியே வரணும் என்றே ஆசைகொண்டே இருக்க அழைத்து அனுப்புவித்தீர்
வாச்சப்பா மனு ஒன்ற அடியேனுக்கு மைந்தன் மேல் கடாட்சத்தால் சொல்ல வேணும்
ஓச்சப்பா கொங்கணரே உபசாரம் என்ன ஓங்கினதை உரைக்கின்றேன் கேளு கேளு
காச்சப்பா உலகத்தில் எடுத்த தேகம் கைலாயச் சட்டையாம் கருவைச் சொல்லே

#64
கரு என்ன ஒன்றும் இல்லை மேரு நேரே காணப்பா ஈசானம் கைலாயம் ஆச்சே
உரு என்ன எடுத்து கைலாய தேகம் உத்தமனே நிராகார ஞான சித்தி
குரு என்ன நிர்க்குணத்தின் மவுனத்துள்ளே குவிந்து உரைத்த பெருமையின் கைலாயம் ஆச்சே
அரு என்ன மகார வித்தை முட்டிக்கொண்டு ஆதி வித்தை கற்பமது உண்டு பாரே

#65
பாரப்பா சூதம் உண்டு மவுனம் தாக்கப் பளிச்சென்ற ஏழு சட்டை பண்ணாய்ப் போதும்
நேரப்பா அச் சடம் கைலாய தேகம் நிமிடத்தே சித்தியா முன் நினைவுக்கு ஐயா
ஆரப்பா உனைப் போல நினைத்த அண்ணல் அரிதரிது கூடாகி மூடர் பேரால்
சேரப்பா சொல்லிவிட்டேன் என்ற பேச்சுச் செப்பும் முன்னே கைலாயம் உற்றுப் பாரே

#66
உற்று நின்ற பல நூலைப் பார்த்துப்பார்த்தே உரையா வேதாந்த சித்தாந்தம் என்று
பற்றி நின்ற பரவசத்தான் என்றே உன்னிப் பாராமல் அலைந்து கெட்டார் அனந்தம் கோடி
முற்றி நின்ற இடம் எங்கே ஞானம் எங்கே
கொற்றி நின்ற மேல் மூலத் துரியம் எங்கே கூடுவார் மெய்ஞ்ஞானக் குறைவு இதாமே

#67
குறைவு ஏது வாசனையாம் தொய்தத்தோடு கூட அல்லோ மெய்ஞ்ஞானம் புனைந்து நிற்கும்
மறைவு ஏது மறையதனின் அந்தம் ஏது மறைவு அற்று நின்றதொரு வெளி அங்கு ஏது
துறை ஏது துறைக்குள்ளே சோதி ஏது சூட்டியிருந்த விவரம் எல்லாம் ஞானம் தோற்றும்
அறை ஏது அல்ல என்று சமுசாரத்துள் அழுத்துமப்பா தொய்தத்தின் ஆண்மைதானே

#68
ஆண்மை என்றால் தொய்தத்தின் ஆண்மை அல்லோ அகண்டம் முதல் அண்டம் எலாம் ஞானம் தோற்றும்
மாண்மை என்றால் வாய்ப்பேச்சாம் ஞானி வாயில் மண்ணை அள்ளிக் கூறுகொண்டு மலங்கப் பார்த்துக்
கேண்மைகொண்டே உலகு எல்லாம் கெடுத்தே ஆட்டிக் கெடியான பெண்ணு பொன் ஆணினாலே
தான்மை என்ற பிறப்பு இறப்பை மீறப் பாய்ந்து சண்டாளக் கோபத்தைத் தள்ளு தள்ளு

#69
தள்ளுகின்ற உறுப்பு வந்தால் கருவைக் கேளு சாதகமாய்க் குண்டலிக்குள் வாசி வைத்துத்
தெள்ளுகிற பிராணாயம்பண்ணித் தீரும் திரண்டு ஒலியும் சிலம்பொலியும் காணும் காணும்
நள்ளுகின்ற கண்டத்தே அங்கு ஒன்று ஊணும் நலம் பெரிய புருவ மையம் திறந்து போகும்
அள்ளுகின்ற கனி போலே அமிர்தம் வீழும் அப்பொழுது காயசித்தி அறிந்துகொள்ளே

#70
அறிந்து இந்த மதியான விந்து விட்டும் அப்பனே யோகம் இதே அறிந்துகொள்ளு
பரிந்து இந்த விந்து முதல் நாதம் சித்தி பாங்கான சிவத்தோடு பரம்தான் கேளு
அறிந்து இந்தப் பராபரத்தோடு ஆறு கேளு அப்பனே மவுனத்தைத் தூக்கிக்கொண்டால்
செறிந்து நின்ற ஞானத்தின் யோகம் ஆச்சு செயல் தம்ப மவுனத்தைச் சென்று காணே

#71
காணப்பா பராபரத்தின் மேலே ஆறு கைவிட்ட அகண்டமும் நிர்க்குணத்தான் ஒன்று
பூணப்பா நிர்க்குணம்தான் நிராகாரம்தான் புகழான நிர்மலம்தான் போதத்து அந்தம்
தோணப்பா இவை ஆறும் காணப் போகச் சொல்லுகிற வார்த்தை என்றால் கேட்டிருப்போம்
ஊணப்பா சடம் விட்டே அறிவு விட்டே உற்று நின்ற அண்டத்தே அறித்துகொள்ளே

#72
அறிந்துகொள்ளு மதி அளவு பிண்டத்துள்ளே அப்பனே ஆறு தலம் அறிந்து காணும்
அறிந்துகொள்ளு விந்துவின் மேல் பரத்தின்மட்டும் அறிவுக்குள் சக்கரம்தானப்பா கேளு
அறிந்துகொள்ளு பரத்தின் மேல் போதம்மட்டும் ஆதார நிர்மலத்தின் வரைகள் ஆறும்
அறிந்துகொள்ளு மேல் ஆறும் காணப் போகா ஆச்சரியம் கொங்கணரை விட்டுக் காணே

#73
காணப்பா தச தீட்சை கடந்த பின்பு கைவிட்ட சூத்திரத்தை ஆசான் காட்ட
ஊணப்பா அது மவுனம் மற்றது எல்லாம் உர வார்த்தை அகாரம் முதல் உகாரம் என்பார்
வீணப்பா சிரம் மேல் வேதாந்தக் காட்சி விரைந்து அதிலேயும் என்றே ஊண் என்பார்கள்
பூணப்பா உம்மென்ற நாதம் ஆமோ போக்கறியான் சொல்லுகிற ஞானம்தானே

#74
தான் என்ற இடம் காட்டி நாதம் காட்டிச் சாற்றுகிற மவுனத்தின் சார்பு காட்டி
வான் என்ற வெளியோடு அறு தலமும் காட்டி வாய் மூடின் ஆதிக்க வகையும் காட்டி
ஊன் என்ற உடம்பை விட்டுக் கேசரியும் காட்டி ஊமை நின்ற இடம் காட்டி உரைக்கப்பண்ணிக்
கோன் என்ற குரு எனும் வாய் பேசலாமோ குறும்பரே குரு சொல்ல இரண்டும் ஆமே

#75
ஆம் இந்த உலகத்தோர் ஞான வீதி அறிந்து ஏறிக் கூடுவதும் அரிது மெத்த
ஓம் இந்தக் குண்டலியைத் தொட்டு அரற்ற ஊதுவது கடினம் மெத்த யோக மார்க்கம்
வாம் இந்த வாமத்தே நின்றுகொண்டு மகத்தான பானம் உண்ண வாய்க்கும் ரண்டும்
சோம் இந்து அச் சடை வைத்துச் சின்மயம் காட்டும் சொல் பெரிய பூரணம்தான் சொன்னவாறே

#76
வாறான குருவினுடை வாழ்க்கை கேளு மகத்தான சடையின் மேல் மதியும் சூட்டித்
தாறான நெற்றியிலே தீயை வைத்துச் சர்ப்பம் அல்லோ ஆபரணமாகப் பூண்டு
வீறான கரித் துகிலை மேலே போர்த்து விளக்கியதோர் புலித்தோலை இடையில் கட்டிக்
கூறான சுடுகாட்டில் குடியும் ஆகிக் கொள்கின்றார் பலியெடுக்கக் கொள்கின்றாரே

#77
பலியெடுத்த குருவினிட வாம பாகம் பகிர்ந்து நின்ற என் தாயின் பரிசு கேளு
பொலியெடுத்த அட்டமாசித்தி நிற்கப் புகழ் பெரிய ரத்ன வகை ஆரம் பூண்டு
நலிவு இல்லா யோகாப்பியாசம் செய்து நண்ணும் இரு பதச் சேவை காண்பதற்கே
ஒலியெடுத்த நவகோடி தேவர் சித்தர் ஒன்றாகக் கணநாதர் போற்றுவாரே

#78
அறிந்துகொள் என் தாயே துரைப் பெண்ணப்பா அப்பனோ எருது ஏறும் ஏழை ஏழை
அறிந்துகொள் இவளை முன்னே ஐயா வைத்தே ஆதரித்துக் கேட்டது எல்லாம் அருளிச் செய்வாள்
அறிந்துகொள் அகண்டத்தே ஞான சக்தி ஆத்தாளைப் பூசித்தால் அறுபது ஈவாள்
அறிந்துகொள் சடம் எல்லாம் அவளே ஆச்சே அப்பனுக்கும் எலும்போடு நரம்பு இரண்டே

#79
இரண்டான வாயுவினில் ஒன்று சத்தி ஈராகச் சிவம் ஏது பிராணவாயு
ஒன்றாக நாடி நின்றால் சுழுனை ஆச்சு யோகமுமாம் ஞானமுமாம் முற்றே ஏறு
தண்டான சுழுமுனைதான் நடுவில் நிற்கும் சாதகமாய் இதற்குள் முக்கிரந்தி உண்டு
நன்றான சுழுமுனையில் பிராணன் ஏறில் நாதாந்த யோகம் இது நாடிக் காணே

#80
காணப்பா நெஞ்சினுள்ளே பிராண யோகம் கண்டுகொள்ளு தாமரையில் நூல் போல் ஆடும்
ஊணப்பா அதில் இரட்டிய பானவாயு உற்று நின்று இரண்டையும் நீ கண்டாயானால்
பூணப்பா இதற்குள்ளே ஞான யோகம் புசுண்டருக்குச் சித்தி கைலாய தேகம்
தோணப்பா நவ கோடி மானா கண்டார் சுக யோகம் ஆவது இந்தத் துறையுமாமே

#81
ஆமப்பா ஆசை விடக் கருவைச் சொல்வேன் அறிந்துகொண்டே அறிவாலே நின்று பாரு
சேமப்பா திரோதாயி யார் என்றக்கால் செகம் எலாம் பெண்ணான உருத்தானப்பா
ஓமப்பா பொன் மண் வாசனையின் ஆசை ஒற்றி நின்ற இந்திரிய மயக்கத்து ஆசை
நாமப்பா என்று சொன்ன ஆண்மை ஆசை நல்வினைக்கும் தீவினைக்கும் வித்தும் ஆச்சே

#82
வித்துக்குள் பாவம் என்ன புண்யம் என்ன வெகு கோடி புண்ணியத்தால் புருட சன்மம்
புத்துக்குள் வெகு கோடி பாவ புண்யம் பாழான பெண் செனனமெடுத்தவாறு
கொத்துக்குள் இவை அறிந்து பாவமான குழிக்குள்ளே வீழ்ந்தாரே கோடி ஐயோ
எத்துக்குள் இவை அறிந்து வேறாய் நின்றே இகழ்ந்தவனே மெய்ஞ்ஞான ஈசனாமே

#83
பூரணமே அகண்டமே அகத்தின் அந்தம் பொங்கி நின்ற நிர்க்குணமே என்னை ஈன்ற
காரணமே உலகில் பெண்ணாசை போலக் கலந்து நின்ற சுகம் இல்லை கருதிக்கொண்டேன்
ஆரணமே ஆதீதத்தில் சுகந்தான் என்ன அப்பவே சொல்லுகிறேன் அறிந்துகொள்ளு
காரணமாம் குவி முலையாள் ஆசை விட்டால் மகத்தான மூவுலகும் விடுக்கும் நேரே

#84
நேரான பெண்ணாசை நீங்கிற்றானால் நிலையான திரோதாயி மாய்கை போச்சு
தூரான வேதாந்த வெளியில் சொல்வார் சும்மென்ற சகம் சொல்வார் யோகி அல்லர்
வாராய் நீ என் மகனே பெண்ணால் சிக்கி மகத்தான ரிடிகள் சித்தர் கோடி கெட்டார்
தாரான சித்தரோடு பஞ்ச கர்த்தாள் தயங்கி நின்று படும் பாடு சாற்றுவேனே

#85
சாற்றுவேன் வீதி படுகுழிதான் உண்டு தன் மேலே புல்லோடு செடியும் மூடி
மாற்றுவேன் வீதியிலே நடந்தோன் வீழ்ந்தவாறு ஒக்கும் பெண்ணான மாயக் கூபம்
ஆற்றுவேன் என்றாலும் ஆற்றப் போகா அரகரா பெண் அரவு கடித்ததானால்
போற்றுவேன் என்றாலும் பொல்லாக் காமம் பொறி விட்ட நெய் போலப் பொங்கும் பாரே

#86
பொங்குகின்ற காமம் என்ன சிவத்தின் கூறு பொல்லாத ஆசை என்ன மாலின் கூறு
மங்குகின்ற மோகம் என்ன மகேசன் கூறு மருவி அந்த மூன்றாலும் உலகம் பாழாய்த்
தங்குகின்ற யோகம் போய் ஞானம் பாழாய்ச் சமாதி எல்லாம் இந்திரியச் சாரம் மூடித்
தொங்குகின்ற மோட்சத்தின் தரை போல் ஆகச் சூனியமாய் ஞானம் எல்லாம் தோற்றுமாறே

#87
மாறான பெண்ணாசை விட்டேன் என்பார் மருவியவள் தனிப்பட்டால் சரணம்செய்வார்
தாறான சயனத்தில் பெண்தான் சொல்லில் சதாசிவனால் முடியாது மற்றோர் ஏது
கூறான விந்து விடக் கோப மோகம் குறி அழிக்கும் நினைவு அழிக்கும் கூட்டைக் கொல்லும்
வீறான விந்துவுக்கு மேலே நின்று விருது பெற்ற மௌனி அல்லோ வெட்டினாரே

#88
வெட்டினார் மௌனி அந்த விந்துப் பாம்பை வேதாந்தம் என்றதொரு வாளினாலே
தட்டினார் மாய்கையைத்தான் சண்ணிக் கீழே சச்சிதானந்த வெள்ளச் சார்பினாலே
ஒட்டினார் ஒட்டின நிர்க்குணத்தின்மட்டும் உத்தமனே அது அல்லோ ஞான வீதி
தெட்டினார் தெட்டினார் சகலர் எல்லாம் செகசால வித்தை என்று தெளிந்து பாரே

#89
தெளிவதுதான் எளிது அல்ல வாய்ப்பேச்சு அல்ல சிங்காரப் பெண் கண்டால் ஞானம் போச்சு
அழிவதுதான் சடலத்துக்கே அடுத்த கூறாம் அதரம் உண்டு கூடுது போகம் என்பார்
கழிவதுதான் கால் ஏது வாசி ஏது கைவிட்ட மைதுனத்தில் கலப்பது ஏது
ஒழிவதுதான் எந்நாளோ என்று லோகர் ஒரு கோடி மாண்டார்கள் ஊன்றிக் காணே

#90
காணப்பா பிறப்பு இறப்புப் பெண்ணால் ஆச்சு கைகடந்த மாயம் எல்லாம் பெண்ணால் ஆச்சு
பூணப்பா இந்திரியம் பெண்ணால் ஆச்சு புகழ் பெரிய வாசனையும் பெண்ணால் ஆச்சு
தோணப்பா மனம் புத்தி ஆங்காரத்தில் சொக்கிச்சுப் பெண்ணாலே சூட்டிப் பாரு
ஊணப்பா ஊணப்பா உரைக்கச் சொன்னேன் உலகத்தில் திரியாதே விண்ணில் ஆடே

#91
ஆடையிலே விண்ணுக்குள் சித்தர் கோடி அந்தந்த மலைகளினால் தாக்க ஓடி
ஊடையிலே அண்டத்தில் முனிவர் கோடி உற்று நின்ற பதமளவும் ரிடிகள் கோடி
தேடையிலே சதா நித்தம் வேதம் பாரு சேர்ந்து நின்ற ஓசையிலே தெளியச் சொல்வார்
நாடையிலே எந்நேரம் மவுனம் நாடு நரகமாம் வாசனைதான் நன்றாய்க் கேளு

#92
கேளப்பா இதை விட்டே உலக ஞானி கேட்டது எல்லாம் சொல்லுகிறேன் மக்காள் மக்காள்
நாளப்பா செகம் எல்லாம் சாங்கம் என்பான் நலமான நூல் பாரான் தீட்சையாவான்
காளப்பா மவுனம் என்பான் விண்ணைப் பார்ப்பான் காதகத்தை விட்டுச் சீவனத்தில் செல்வான்
நாளப்பா தினந்தோறும் தர்க்கம் பேசி நலமான பெண்ணோடு மயங்குவானே

#93
மயங்குவான் பொன் தேடப் புரட்டும் பேசி மகத்தான ஞானம் எல்லாம் வந்தது என்பான்
தயங்குவான் மண்ணாலே சார்வு காணான் சாதகமா யோகத்தில் சார்ந்தேன் என்பான்
தியங்குவான் நோய் வரின் பூரணமே என்பான் செகநாத திரோதாயி சிரிப்பாள் பார்த்து
முயங்குவான் சமாதி விட்டேன் ஐயோ என்பான் மூடம் ஒற்ற ஞானம் எல்லாம் உலகில் பாரே

#94
பாரப்பா சரீரம் இது சமாதிக்காக பாழான தூலம் இது என்பார் கோடி
நேரப்பா வாதம் வந்தால் ஞானம் என்று நேரப்பா அலைந்தவர்கள் கோடாகோடி
ஆரப்பா உலகத்தில் ஞானி உண்டோ ஆராய்ந்து நான் கண்டேன் என்பார் கோடி
ஏரப்பா அழுதலோ வெள்ளாமை ஆகும் ஏர் இல்லான் அறுத்து அடித்த கதையும் ஆச்சு

#95
கதையாச்சே உலகத்தில் ஞானம் வாதம் கைகண்டால் சொல்வாரே கல் போல் நெஞ்சே
அதையாச்சே இதையாச்சே என்று சொன்னால் அவன் கையில் ஒன்றும் இல்லை அறிந்துகொள்ளே
உதையாச்சே அரனுடனே தொழிலே நித்தம் உதுவானவன் வாதி உண்மை கேளு
சுதையாச்சே ஆனாலும் பொங்கி உள்ளம் சுடுவான் பார் ரசயோகி ஞானிதானே

#96
தான் என்ற வாதியிலே இருவர் உண்டு சண்டாளவாதி என்றால் உண்டு உடுத்து
வான் என்ற ஞானம் என்ன வேதை பின்பு மகத்தான பெண்ணோடே கூடி ஆடிக்
கான் என்ற ராக கேளிக்கை பார்த்துக் கண்ட பெண்ணைத் தாய் போலக் கருதிச் சென்றே
ஊன் என்ற உடம்பெடுத்துப் போக என்பான் உலுத்தனுக்குச் செனனம் என்ற நரகம்தானே

#97
நரகம் என்ற பெண் மேலே ஆசை விட்டு நாதாந்த வேதாந்த சிந்தாந்தம் பார்
நரகம் என்ன உலகம் எலாம் மனத்தில் வைத்து நலமான தேவி கிரியையிலே நின்று
நரகம் என்ன சடம் முதல் நாம் அல்ல என்று நாட்டினுள்ளே தச தீட்சை கடந்த பின்பு
நரகம் என்ற சிவ சொத்தை வறுமை தின்று நாம் அறியோம் வாதம் என்றே இருப்பார் காணே

#98
இருக்கையிலே சத கோடித் தொழிலைச் செய்வார் இத்தனைக்கும் பொருள் எது இவன் வறுமைக்கு என்பார்
இருக்கையிலே செயநீர் செந்தூரம் சுன்னம் எடுத்தெடுத்தே அடுக்கிவைப்பார் அநேகம் கோடி
இருக்கையிலே தொழில் எடுப்பார் ஆர்க்கும் காட்டார் இல்லை என்பார் உண்டு என்பார் அனேகம்பேர்கள்
இருக்கையிலே சதா நித்தம் அறிவால் ஊட்டி இருப்பார்கள் மவுன முத்த வாதியாமே

#99
வாதி என்றால் அவன் வாதி மவுன வாதி மகத்தான பிரபஞ்சத்து இருந்தால் என்ன
வாதி என்றால் ரச வாதி ஞான வாதி வாங்காமல் சமாதியிலே இருந்த வாதி
வாதி என்றால் நிச வாதி நிர்மல வாதி வாய் திறக்க அண்டத்தே வாழ்ந்த வாதி
வாதி என்றால் அவரிடத்தே சித்தர் செல்வார் மயக்குகின்ற செனனம் இல்லை முத்திதானே

#100
முத்தி இந்த வாதிக்கு வருகும் என்று மூச்சு முதல் சிவன் சொன்னார் என்று சொல்லிப்
பத்தி இந்த சிவ சொத்தைப் பெண்ணுக்கு ஈந்து பாழான விடயம் எல்லாம் பண்ணிப்பண்ணி
அத்தி என்ற பஞ்சகத்தைப் பண்ணிப் பாவி ஆங்காரத்தால் திரிந்தும் வேதை போட்டு
மற்று நின்றே அலைந்தவர்க்கு நரகம் எய்தி மாளுவார் கோடி சென்மம் அருளுவாரே

#101
மருளாமல் இருக்க அல்லோ வாதம் சொன்னார் மாண்டு இறந்து மாண்டு இறந்து பிறக்கை நன்றோ
வெருளாமல் மனம் பிடித்த வாதியானால் வெகு சுளுக்கே ஏறுதற்கு ஞான வீதி
அருளாமோ பொருளாமோ என்றே எண்ணி அலையாமல் நின்றவனே ஆதி யோகி
இருளாமோ வெளியாமோ என்றே எண்ணி ஏக வெளி சுத்த இருளாகிப் போமே

#102
ஆகவப்பா விருப்பத்தோடு அஞ்சு நூறும் அறைந்திட்டேன் வாதத்தை அறிந்துகொள்ளு
ஆகவப்பா இதற்குள்ளே ஞானம் நூறு அப்புறத்தே சொன்னதொரு ஞானம் நூறு
ஆகவப்பா இருபத்தோடு எழுநூறும்தான் அறிந்தமட்டும் சொல்லி வந்தேன் வல்லோர் உண்டோ
ஆகவப்பா பார்த்தே இக பரமும் சித்தி ஆதி என்ற குரு அருளால் சொன்ன முற்றே
** கைலாயக் கம்பளிச் சட்டை முனி நாயனார் பின் ஞானம்

#103
*1
கைலாயப் பரம்பரத்தில் என்னை ஆண்ட கடவுள் எனும் தெட்சணாமூர்த்தி பாதம்
கைலாயத்து எனை ஈன்ற ஆயி பாதம் கருணையுடன் போற்றி நித்தம் ஞானம் சொல்வேன்
கைலாய நிர்க்குண நிர்மலமே தேவர் காட்டுகின்றீர் கேசரியின் மயமாய்க் கையில்
கைலாய பரம்பரையாய் வந்தபேர்க்குக் கடைப்பிள்ளை ஞானத்தைப் பாடுவேனே

#104
*2
பாடுகின்றேன் சரியை என்ன தேவி தீட்சை பரிவாகக் கிரியை என்ன தேவி பூசை
பாடுகிறேன் யோகம் என் மாசற்ற அமுதம் பாங்கான ஞானம் என்ன மௌனத்து அந்தம்
பாடுகிறேன் திடத் திரனாய் ஈதோ கீதம் பாங்கான அஞ்சலிதான் மனமாம் தேகம்
பாடுகிறேன் பரன் முனிகளுக்கே என்றால் பரிவானால் ஞான வித்தை பலிக்கும்தானே

#105
*3
தான் என்ற ஞானத்தின் பூமி கேளு சாதகமாய் யோகம் என்ற அகர வீடு
வான் என்ற பூமியிலே வித்தை கேளு அறிவிற்கும் அறிவான உகார விந்து
வேன் என்ற வெளி எல்லாம் படைத்து நின்று வேதாந்த அண்டம் என்ற மகாரம் ஆச்சு
கோன் என்ற நாதம் அங்கே குமுறி ஆடும் கூப்பிட்டால் கேளாது கண்ணும் போச்சு

#106
*4
போச்சப்பா தத்துவங்கள் அனித்தியப்பட்டுப் புலன் கெட்டு நிலம் கெட்டுப் பொறியும் கெட்டே
ஆச்சப்பா மன அறையில் மயங்கி நின்றே ஆடுவதோர் படம் போல அசைந்து தள்ளு
நீச்சப்பா கட நீச்சுத் திரோதாயி வெள்ளம் நிலை ஏது கரை ஏது தவணை ஏது
மூச்சப்பா அடங்கும் முன்னே மாயை வந்து முற்றி முதிர்ந்து அறிவு தள்ளு மோசம் காணே

#107
*5
காணப்பா மன அறையை மாறுக்குள்ளே கடைத்தேறப் போகாது கறக்க மெத்த
ஊணப்பா என்று சொன்னால் மனம் ஊணாதே உற்று மெள்ளப் பிடித்தாலும் மாயை கட்டும்
வீணப்பா உலகத்தோர் ஞானம் எல்லாம் வேதாந்த சித்தாந்தம் என்பார் கோடி
தோணப்பா ஞானம் என்ன கண்டிப்பு இல்லைச் சுடர் கோடி ஒளி போலத் தோன்றும்தானே

#108
*6
தான் என்ற நிர்மலமா மனத்தின் வீதி தாண்ட அரிது தாண்டினால் அறிவு போற்றும்
கான் என்ற மனத்தின் சாதகத்தைக் கேளு கற்பம் உண்ண வந்து உண்ணால் வாசி-தோறும்
பான் என்ற பாணத்தின் பாதை நில்லு பகலாலும் கேசரத்தில் மனம்தான் எட்டும்
வான் என்ற வெட்டவெளி வடிவு காணும் மாச்சல் மெத்த மாச்சல் மெத்த மருவி கூடே

#109
*7
கூடுவது நிமைக்கு முன்னே குளிகை கூட்டும் கூப்பிட்டால் பூரணம்தான் கூடப் பேசும்
ஆடுவது மன அறையில் மாயம் போக்கும் அருவிலே சொக்கின்றி ஆட்டுவிக்கும்
நாடுவது பூரணத்தில் ஏற்றிக் காட்டும் நலமான சாணையார் கெவுனம் சூதம்
தேடுவது சித்தருக்குக் குளிகை கெட்டுச் செகத்தோர்க்கு வாதம் என்றே தேட்டுத்தானே

#110
*8
தேட்டான வரை கடந்து மனமும் தாண்டித் தெளிவான அறிவினுடை வரையும் தாண்டி
நீட்டான பூரணத்தின் வரை காண் என்று நேரான மூன்று வரை ஏறிச் சொக்கிப்
பூட்டான பூட்டு இறங்கி விட்டேன் மைந்தா புகழான வெறு வெளியில் ஏறப் போகா
ஆட்டான கைலாயப் பரம்பரை வந்த ஆச்சரிய மூல குரு வாக்கும் கேளே

#111
*9
கேளப்பா மூலர்க்கு காலாங்கி பிள்ளை கெடியான காலாங்கி மைந்தர் போகர்
நீளப்பா போகர்பிள்ளை கொங்கணர்தான் நேராக நான்கு முறை பேரனாகித்
தாளப்பா மேருவிலே தவசுபண்ணிச் சாதகமாய்க் கைலாய வர்க்கம் ஆனார்
ஆளப்பா பிள்ளை என்றால் அவரே பிள்ளை ஆச்சரியம் இன்னம் உண்டு சொல்லுவேனே

#112
*10
சொல்லுகிறேன் சிங்கு என்று முன்னே ஊன்றிச் சோதி கண்ட பின்பு அதிலே மனத்தை ஊன்றிச்
சொல்லுகிறேன் அங்கு என்று பின்னே ஊன்றிச் சோதியிலே அக்கரங்கள் தனமும் கண்டு
சொல்லுகிறேன் பின்பு அல்லோ மவுனம் உன்னித் தொடர்ந்து ஏறித் தளம் எல்லாம் பார்த்துக்கொண்டு
சொல்லுகிறேன் புருவ மையத்தில் கூடித் துரியம் என்ற அறிவினுள்ளே சொக்கினாரே

#113
*11
சொக்கி அல்லோ அறிவை விட்டே அகண்டம் ஏறித் துயர் அறவே சமாதியுள்ளே கற்பம் உண்டு
சொக்கி அல்லோ மூன்று வரை சடத்தோடு ஒக்கச் சுருப வரை காண என்று துணிந்து பொங்கிச்
சொக்கி அல்லோ ஏறுவதற்கு இவ்விதமாம் என்று சோதித்துக் குளிகை எல்லாம் பார்த்துப்பார்த்துச்
சொக்கி அல்லோ ஏற்றிவைக்கும் சுரூப மணி என்று சூட்சமாய் மூலருடை நூல் பார்த்தாரே

#114
*12
பார்த்து அறிந்தார் இந்த மணி வாதம் என்று பரிவான கயிலாய தெட்சணாமூர்த்தி
சேர்த்து அறிந்த தம்முடைய வர்க்கமான சீடரிலே திருமூலர் சண்டிகேசர்
மாத்து அறிஞ்ச சனகாதி நால்வரோடு மருவி நின்ற வியாக்ர பதஞ்சலியினோடு
போக்கு அறிந்த அடியெனொடு ஒன்பதுபேர் பிள்ளை புகழான பூரணத்தில் எழும்பு என்றாரே

#115
*13
எழும்பையிலே நிர்மலம் போல் சடமோ காணாது ஏனென்றால் பூரணம்தான் எதுக்குப் பேசும்
எழும்பையிலே குளிகை முதல் காண்டில் பத்தே ஏற்றியதோர் தீபத்தின் சுடர் போல் காணும்
எழும்பையிலே தேகம் இல்லை கோடாகோடி எடுத்த சடம் சூட்சுமமாய் இருந்ததென்றால்
எழும்பையிலே மேல் எழும்பி மௌன முற்றும் இருந்து உரைத்த சமாதியுடைப் பலம்தான் காணே

#116
*14
காணப்பா சொரூபம் ஒன்று கலிதான் ஒன்று கையடங்காது அட்டமாசித்தி ஒன்று
பூணப்பா கைகொடு சின்மயமாம் தேவர் பொருளோடே அருளான போக்குக் காட்டித்
தோணப்பா தோன்றி நிற்கும் சும்மா அம்மா சுபமாக இசைந்ததிலே சொக்கும் என்பார்
வீணப்பா மற்றது என் சின்மயத்தைக் காட்டி வேதாந்த மூலத்தை விளம்பு என்றாரே

#117
*15
விளம்பினார் சனகாதி வேதம் கோடி விதத்தாரே மவுனத்தைச் சண்டிகேசர்
விளம்பினார் பதஞ்சலியும் அனந்தம் கோடி விரித்து அல்லோ திருமூலர் அனேகம் சொன்னார்
விளம்பினார் ஆதாரம் என்று யானும் விரியாமல் இருநூறு ஞானம் சொன்னேன்
விளம்பினார் வெகுவாக என் நூல் கொஞ்சம் வேதாந்தம் இருநூறும் விரைந்து காணே

#118
*16
காணப்பா மும்மணி கைலாய வர்க்கம் கழியாமல் பிள்ளைகட்கே மற்றோர்க்கு இல்லை
தோணப்பா இவை மூன்றும் சித்தர் சொல்வார் சொல் பெரிய பூரணமே சொல்ல வேணும்
வீணப்பா ஆராலும் சொல்லக்கூடா வேதாந்த அந்தத்தில் வெளியில் கூட்டும்
ஆணப்பா அறுபத்துநால் மரபுக்குள்ளே ஆருமே இல்லை அதை அறியார் காணே

#119
*17
அறியாத குளிகையுடன் சாரணையில் குத்து அதன் பெருமை காணக் கொங்கணரைக் கேளு
அறியாத அண்ட முதல் புவனம் பார்த்து அருவியதோர் பதம் பார்த்துத் திரிந்தே ஆடிக்
குறியாகக் கற்பம் எல்லாம் ஏறிப் பார்த்துக் கூறாத பூரணத்தைக் காண்பேன் என்று
நெறியாக மனம் உரைக்கக் குளிகை கட்டி நேராக மன வரையில் ஏறினாரே

#120
*18
ஏறினார் அறு வரையின் இயல்பும் கண்டே இதமாக அறிவுடைய வரையில் சென்று
தேறினார் மனம் உரைத்தார் கண்டத்து ஏறச் சேர்ந்து ஏறச் சேர்ந்து ஏறி வரையில் தாண்டிக்
கூறினார் இவ்வளவும் ஒன்றோ என்றார் கூசாமல் மருவரையில் குதிரைப் போட்டார்
மாறினால் சென்று மணம் பிடித்துச் சென்றார் வரை மூன்றும் கடக்க ஒரு கற்பம் ஆச்சே

#121
*19
ஆச்சப்பா நாள் வரையில் ஏறும்போது அரகரா வெகு கோடி இடி போல் நாதம்
மூச்சப்பா ஓடாது முன்பின் தோணா முதிர்ந்த மன மாயையினால் பின்னும் சென்றார்
கூச்சப்பா ஐவரையில் போக்கி நின்று குருகுரென மொழிந்ததிலே மனமும் தேறிப்
போச்சப்பா சடம் ஒன்று நிராசையாகிப் புக்கினார் அறுவரையில் புக்கினாரே

#122
*20
புக்கி அல்லோ சுழல்காற்றின் துரும்பு போலே புலம்பினார் மூலருடைப் பேரன் பேரன்
மக்கி அல்லோ மனம் போச்சுக் குளிகை போச்சு மாறாத மௌனம் முன்னே மாண்டு போச்சு
ஒக்கி அல்லோ சிலம்பொலிதான் உள்ளே வாங்கி ஓகோகோ குளிகையது கீழே வாங்கு
சொக்கி அல்லோ என் செய்வேன் என்றே ஏங்கித் துரியத்தை விட்டு மெள்ளக் கீழ்க்கொண்டாரே

#123
*21
கீழ்க்கொண்டார் கீழ்க்கொண்ட கொடியாம் சித்தர் கேசரத்தை விட்டு மெள்ள அறிவில் நின்று
நாட்கொண்ட பாடு எல்லாம் நினைத்துக்கொண்டு நான் பிழைத்தேன் நான் பிழைத்தேன் என்று சொல்லி
ஆட்கொண்டா என் குரு பூரணத்தில் நின்றீர் ஆச்சரியம் எனை ஈன்றும் இவரை ஐயா
வேட்கொண்டாய் என் தவத்தை ஈந்தான் ஐயா வெறுவெளியாம் சிலம்பொலியை மேவு என்றாரே

#124
*22
மேவு என்று சொல்லும் முன் மேற்கண்ட போகர் வேதாந்த சிரோமணியைப் பெறுதி மைந்தா
கோன் என்ற குருவுக்கும் அவரே சீடர் கோடி லட்சத்து ஒரு சீடர் உண்டோ காணேன்
பான் என்ற வேதாந்தம் சித்தாந்தம் பார் பறக்கிறதோர் குளிகை முதல் வாதம் பார்த்துத்
தேன் என்ற கைலாய வர்க்கம் ஆகிச் சித்தருக்குச் சித்தராய் ரிஷி ஆனாரே

#125
*23
ரிஷி என்ன சிலம்பொலியைக் கண்டார் உண்டோ நேராவதற்குள்ளே சேர்ந்தார் உண்டோ
ரிஷி என்ன ரசவித்தை அறிந்தார் உண்டோ நிமிடத்தில் கவனமுற்றுத் திரிந்தார் உண்டோ
ரிஷி என்ன அண்டம் முதல் புவனம் தாண்டி நின்ற நிறையாய்க் கண்டு வந்தோர் உண்டோ
ரிஷி என்ன மவுனமுற்றுச் சுமாதிக்குள்ளே நின்றதனால் திகைமையாய் நினைவாய்க் காணே

#126
*24
காணப்பா ரிஷி ஆட்டும் சித்தர் ஆட்டும் காரணமாய் மவுனத்தே நின்றோர் ஆட்டும்
பூணப்பா பூரணத்தே நின்றோர் ஆட்டும் பொன்னாக மரம் முதலாய்ப் புகழ்ந்தோர் ஆட்டும்
ஓணப்பா வாசியுடைக் குதிரை ஆட்டும் ஒன்றும் அற்றுத் தன்மயமாய் நின்றோர் ஆட்டும்
தோணப்பா இவை எல்லாம் கொங்கணர்க்கே அல்லால் சூழ் உலகில் சித்தர் உண்டோ சொல்லிடீரே

#127
*25
சொல்லிடமாய் ஞானம் உண்டோ குளிகை உண்டோ சூட்சித்த கற்பம் உண்டோ வாசி உண்டோ
மல் சுட்ட வாதம் உண்டோ சுன்னம் உண்டோ மகத்தான சிக்கி உண்டோ செயநீர் உண்டோ
வெல்லிடீர் விடம் உண்டோ சாரணை உண்டோ வெவ்வேறே கூட்டுகிற குடோரி உண்டோ
அல்லிடீர் வேதை சகுவணம்தான் உண்டோ அப்பனே பதினேழும் அமைத்திட்டாரே

#128
*26
அமைத்தவர் முக்காண்டம் பாடியது ஓர் அங்கம் வந்தித்த பிள்ளைக்கும் அறிவு தோன்றும்
அமைத்தவர் பாடின பொன் கம்பி போல அறிவுகெட்ட மிலேச்சருக்கும் வாத சித்தி
அமைத்தவர் கரு வெட்டவெளியதாக அங்கங்கள் மறையாமல் சொன்னார் சொன்னார்
அமைத்தவர் பாட்டுக்கு நம்முடைய நூல்தான் அருகாக மறைப்பு என்றே அறைந்திட்டாரே

#129
*27
அறைந்திட்டார் ஐந்நூறு பிள்ளை வேண்டி அப்பப்பால் வெகு தெளிவு சாத்திரம்தான்
நிறைந்திட்ட ஆரணம் போல் வெளியதாக நீங்காமல் துறந்துவிட்டார் அருளொடு பொருளும்
குறைந்திட்ட புத்தி அல்ல நிட்களமாம் புத்தி கூறாத பொருளை எல்லாம் கூறிவிட்டார்
வரைந்திட்ட மவுனம் எல்லாம் வெளியதாக வாய் திறக்கா வித்தை எல்லாம் விளக்கினாரே

#130
*28
விளங்கியதோர் கொங்கணரால் மூலவர்க்க மகத்துவம்தான் உண்டாச்சு மக்காள் மக்காள்
விளங்கியதோர் கீர்த்தி உண்டோ உங்களாலே வெட்டவெளிக்கு அப்புறத்தே செல்லமாட்டீர்
முளங்கியதோர் குளிகை என்ன காயசித்தி மூச்சற்ற இடத்திலே நோக்கம் என்ன
விளங்கியதோர் சித்தருட வர்க்கம் என்ன பேய்மக்கள் மூவைந்து பேரில்தானே

#131
*29
தான் என்று சொன்னது என்ன என்னைப் பெற்ற சச்சிதானந்த வெள்ளத் தயவுள்ளாரே
கோன் என்ற முக்குளிகை நமக்கு உண்டு ஐயா கொடியதொரு மவுன வித்தை நமக்கு உண்டு ஐயா
பான் என்ற வாசி வித்தை நமக்கு உண்டு ஐயா பாங்கான காயசித்தி நமக்கு உண்டு ஐயா
வான் என்ற வெட்டவெளி ஏறி ஆடி வருகிறேன் விடைகொடுத்து வாழ்த்திடீரே

#132
*30
வாழ்த்தி உன்னை அனுப்பினால் பூரணம்தான் வரை கடந்தே ஆறு வரை ஏறுவாயோ
வாழ்த்தி உன்னை அனுப்பினால் நரகத்துள்ளே மயங்காமல் சொல்லுவையோ மைந்தா சொல்லு
வாழ்த்தி உன்னை அனுப்பினால் இடியிற்குள்ளே மயங்காமல் தியங்காமல் மருவுவாயே
வாழ்த்தி உன்னை அனுப்பினால் என்ன முன்னால் வாய்ப்பேச்சா வரை கடக்கும் மார்க்கம்தானே

#133
*31
மார்க்கம் என்ன எனை ஈன் கைலாய மூர்த்தி மகத்தான சமாதியுள்ளே கற்பம் வாழ்ந்தேன்
சேர்க்கம் என்ன சிவாலயங்கள் பலியேற்று உண்டேன் சிவம் ஏது நீர் அன்றி வேறு காணேன்
ஆர்க்கம் என்ன குளிகையிட்டுச் சென்று போறேன் அங்கங்கே மனம் தேறிப் போறேன் போறேன்
தீர்க்கம் என்ன சொக்கினால் சொக்கிப் போறேன் திரும்பினால் சடத்தோடே திரும்புவேனே

#134
*32
திரும்புவையோ என் மகனே திடம்தான் உண்டோ சிறுபிள்ளை புத்தி அல்லோ செப்புறாய் நீ
வளர்பிறையோ தேய்பிறையோ ரவியினுள்ளே வருவது போல் அல்ல அது மாட்டி வாங்கும்
பரும் பிறையோ யோகமது பிறவி கோடி பாங்கான ஒளிக்குள்ளே கண்ணோ கூசும்
அரும் பிறையோ மனம் தளும்புமே ஒட்டாதே அரகரா என் மகனே அறிவாய் நீயே

#135
*33
அறியாத வரை பார்க்க நான்தான் ஏறி அய்யனே மூன்று வரைக்குள்ளே சிக்கி
நெறியாக நால் வரையில் ஏறொட்டாமல் நிமிடத்தில் அறிவினிலே வந்து நின்றே
மறி வானம் படைத்த கொங்கணரே சித்தர் மற்றோரை யான் காணேன் மைந்தா சொல்லு
பொறியான வழி அடக்கிச் சூட்சமாகிப் போனவர் ஆர் போகருடைப் பிள்ளைதானே

#136
*34
பிள்ளை என்றால் அவர் அல்லோ போகருக்குப் புகழான ரிஷிகள் எல்லாம் சித்தர் என்பார்
தள்ளை என்றால் அவர்தாம் மூலரிடம் போன சச்சிதானந்த இன்பமான பிள்ளை
கொள்ளை என்றால் அவர் கொள்ளை ஞான வீதி கொடிதான சிலம்பொலியைக் கேட்டு மீண்டார்
பிள்ளை என்று வந்ததனால் கீர்த்தி ஆச்சு வேதாந்த அந்தம் எல்லாம் வெளியாய்ப் போச்சே

#137
*35
போச்சு என்று சொல்வது என்ன போவான் ஐயா புத்தி சொன்ன புத்தி எல்லாம் போட்டிட்டாயோ
வாச்சென்று நின் வயிற்றில் பிறந்த பிள்ளை வந்தால் என் கெட்டால் என் மகத்வம் உண்டோ
கோச்சென்ற நாவம் என்ன விடிந்தால் என்ன கோடி ரவி காந்தி என்ன பயம் உண்டாமோ
ஓச்சென்ற சிலம்பொலியைக் கண்டு வாரேன் ஒருமனமாய்ப் பூரணத்தில் உன்னிடீரே

#138
*36
உன்னிடீர் அண்டம் முதல் புவனம் தாண்டி ஒரு நொடிக்குள் பதம் தாண்டி முப்பாழ் தாண்டி
மன்னு திருவருள் மனையைக் கண்டு போற்றி மருவியதோர் புரணத்தில் சென்றே ஏறிப்
பன்னிடுவீர் தினந்தோறும் பழக்கம் ஐயா பாயுடனே அது நடந்து வரைகள் ஆறும்
தன்னிடிர் யோகு அறியேனும் அருளால் போறேன் தயாநிதியே கடாட்சித்தே அனுப்புவீரே

#139
*37
அனுப்புவது பிறகு உனை யான் சென்று வாரேன் அவ்வளவும் குகைக்குள் நீ பட்டமாய் நில்
தனுப் பிறந்த தளி போலச் சென்று தாண்டிச் சாதகமாய்ச் சொருபமணி மூன்றும் காட்டிச்
கணுப் பிறந்த கமலியது பூண்டும் காட்டிக் காட்டிலே அட்டமாசித்தியினால் காட்டி
உணுப் பிறந்தோர் தாண்டில் ஒரு வரையில் ஏறி உற்று மறு வரை-தனில் ஓடினேனே

#140
*38
ஓடினேன் மூவரையில் இடியோ கோடி ஓகோகோ ரவி கோடி வன்னி கோடி
வாடினேன் மனம் இளைத்தேன் மயக்கமானேன் வாயிட்ட குளிகை சென்றே ஏறிப் போறேன்
நாடினேன் கற்பம் ஒன்று மூவரையில் தாண்டி நலமாக நாலு வரைக்குள்ளே சென்றேன்
ஆடினேன் ஆடினேன் அறிவுகெட்டேன் அரகரா மோசம் என்றே இறங்கினேனே

#141
*39
இறங்கினேன் நால் வரைக்கு அப்புறமே போக என்னாலே முடியாதே ஏதோ அஞ்சில்
இறங்கினேன் என் மக்காளும் மால் ஆமோ ஏது சொன்னாய் பேய்ப்பிள்ளாய் என்ன பேச்சு
இறங்கினேன் இந்நாள் பின்னை யார் சொல்லார் ஏக வெளி திக்காடும் இடியோ கோடி
இறங்கினேன் என்னாலே முடிவு காணேன் ஏறினார் கொங்கணர்தாம் ஏறினாரே

#142
*40
ஏறியதோர் கொங்கணரைப் போலே இல்லை ஏக வெளி தீக் காட்டு எப்படியோ போனார்
மாறியதோர் மனம் பிடித்தார் யோகம் ஆனார் மாளுவது நிசம் என்று வாய்மை பூண்டார்
கூறினதோர் அறு வரையைக் கண்டு முட்டக் குமுறியதோர் சிலம்பொலியைக் கேட்டு மீண்டார்
ஆறியதோர் மனம் கண்டார் அவரே சித்தர் ஆச்சரியம் கொங்கணர் போல் ஆர் காணேனே

#143
*41
காண அரிது காண அரிது கோடாகோடி கண்டு நான் பாபருட்ச சித்தர்க்குள்ளே
பூண அரிது பூண அரிதே அகண்ட வீதி புக்கு அல்லோ சிலம்பொலியைக் கேட்கமாட்டார்
ஊண அரிது ஊண அரிது வெளியில் பார்த்து ஓடுவரோ வென்றீர்கள் மக்காள் நீங்கள்
தோண அரிது தோண அரிதாய் நின்ற ஞானம் சீடருக்குள் ஓடுறது துரியம்தானே

#144
*42
தான் என்ற பூரணத்தைச் சாங்கத்தோர்கள் சகம் எல்லாம் நிர்க்குணமாய் நின்றது என்பார்
வான் என்ற வெளி என்பார் இல்லை என்பார் வாய் பேசார் சொன்னக்கால் போமோ சொல்லு
கோன் என்ற குரு அருளால் சமாதி கூட்டிக் குவிந்து நின்று மவுனத்தின் நிலையைப் பற்றி
ஊன் என்ற உடம்பை விட்டே அறிவாய் நின்று உலாவுறதே சாங்கம் என்றே உரைத்திட்டாரே

#145
*43
உரைத்திட்ட காரம் என்ன பிருதிவி போக்கு ஓடுகிற வாசியினால் யோகம் பார்த்து
மறைத்திட்ட மவுனத்துடன் மவுனம் ஊட்டி மருவி அந்த அறிவோடே வாசமாகி
நிறைந்திட்ட அகண்ட முத்தி சென்றே ஆடி நேரான அண்டம் முதல் புவனம் பார்த்து
முறைத் திட்டம் தப்பாமல் சமாதி நின்றால் முழு யோகி முழு ஞான முமூட்சு ஆவாயே

#146
*44
ஆமப்பா இதற்கு முன் அப்பியாச மார்க்கம் அறைகுவேன் அட்டாங்கம் நன்றாய்க் கேளு
ஓமப்பா வகையாக விரித்துச் சொல்வேன் உத்தமனே சாட்சி நித்திரையைப் போக்கு
தாமப்பா சதா நித்தம் தாரகத்தே சார்ந்து நின்ற கேச நிலை சதா நித்தம் பார்
சோமப் பால் சுழித்து ஓடும் கேசரியைக் கண்டால் சொல்லாத முத்திரையைச் சொல்லுறேனே

#147
*45
சொல்லுறேன் ரவி மதியும் வன்னி கூடிச் சொலித்து நின்ற இடம் அல்லோ கேசரிதானப்பா
சொல்லுறேன் அதைப் பார் மனம் செயநீர் ஆகும் சுத்த வெளி அடியோடே தாக்கி ஏத்தும்
சொல்லுறேன் மனம் புத்தி சித்தம் என்பார் தொடர்ந்து நின்ற குரு பதத்தைச் சூட்டிக் கேளு
சொல்லுறேன் அறிந்தமட்டும் புருவ மையம் சூட்சம் தொட்டு ஏறி அட்டாங்கத்து உறை கேளே

#148
*46
கேளப்பா ஏமத்தைச் சொல்வேன் நானும் கெடியான நேமமுடன் ஆசம் கொண்டு
வாளப்பா பிராணாயம் பிரத்யா காரம் மகத்தான கியானமொடு தாரணை கேளு
தாளப்பா சமாதியுடை நிட்டை பங்கம் தனித்தனியே சொல்லுகிறேன் நன்றாய்ப் பாரு
வேளப்பா ஏமம் என்ற பத்தும் சொல்வேன் வேதாந்த பொறி அறிந்தோர் பெரியோர்தாமே

#149
*47
பெரியோர்கள் அண்டம் என்ற ஆன்மா நோக்கிப் பேரான பரிச்சின்ன மனமும் ஆகி
அறியோர்கள் சாதி என்ற ஆச்சிரம் விட்டே ஆசை என்ற விகற்பம் எல்லாம் மடித்துத் தள்ளிப்
பரியோங்கள் இங்கு இசையை நீக்கிப் போட்டுப் பராபரத்தை நோக்குவது அங்கிசமது ஆகும்
சரியோர் ஆவதும் சகல மதத்தினாலும் தனித்தனியே கண்டிக்கப்படாது என்பாரே

#150
*48
என்பார்கள் இங்கு இசையாய் இருக்கும் மாண்பர் எங்கெங்கும் நிறைந்திருந்த சுரூப மூர்த்தி
அன்பார்கள் இது அல்லோ சத்தியம்தான் ஆரதிக ஆன்ம சரீராதி சுபாவம்
வன்பார்கள் அபகரிப்பை விட்டுவிட்டு மனம் உரைத்தால் ஊர் அதிகம் என்று பேரு
தன்பார்கள் பிற சரீராதி சுபாவம் தான் என்றதற்கு லட்சணம்தான் பாரே

#151
*49
பாரப்பா பிரமமது சுபாவமாகப் பரவியது நிரந்தரமும் சரித்தால் அன்று
நேரப்பா பிரமசரியம் இதுவாம் கண்டால் நிரந்தரமும் தயவினுடை நினைவு கேளு
தாரப்பா சரீரத்தில் வருத்தம் நீங்கிச் சகல சனம் நம்மைப் போல் என்றே எண்ணி
ஆரப்பா சுபானுபவ போதம் செய்வார் அவர் அல்லோ தயவுடையோர் அறிந்து காணே

#152
*50
காணப்பா வேதாந்த சாத்திரம் செம்மை கரை கற்ற சமயம் பொய் என்று தள்ளி
ஆணப்பா திடப்பட்டு ஆட்சேபம் என்பார் வீட்சணமும் சீதளமும் சுக துக்கத்தால்
வீணப்பா மானாபிமானம் வந்து வெறும் வெளி போல் சொப்பனமாம் என்று தள்ளித்
தோணப்பா தாங்காமல் அகண்டத்துள்ளே சொக்குவது சமயம் என்று சொல்லலாமே

#153
*51
சொல்லலாம் வேதாந்தத்துள்ளே முத்தி தொடுகுறியாம் சாத்திரத்தின் முத்தி இல்லை
வெல்லலாம் அதனாலே சொன்ன எல்லாம் வேறு இல்லை நாம் அதுதான் எனலே முத்தி
அல்ல எலாம் சொப்பனம் போல் அவத்தை ஆண்டு அகில பிரபஞ்சம் எல்லாம் அடுத்து மூழ்கி
நில்லலாம் அற்புதமாய் நிற்பிடம் அற்று நிர்மலமாய் நிற்கிற பூரணம்தான் என்னே

#154
*52
தான் என்ற பூரணம்தான் நாம் என்று எண்ணிச் சதா நித்தம் மறவாமல் இருந்தானாகில்
வான் என்ற கலித கரி ஆச்சுதாச்சு மருவியதோர் சாத்திரத்தினாலே அப்பா
கோன் என்ற தன்னிடத்தே ஒன்றும் இல்லை கூடி நின்று போனது இல்லை என்றே எண்ணி
வேன் என்ற நிர்க்குணமும் வேறு ஒன்று இல்லை வேதாந்த சித்தாந்தம் என்றார் கௌசம் ஆச்சே

#155
*53
ஆச்சப்பா நேமத்தைச் சொல்லக் கேளு அறைகுவேன் நன்றாகப் பூரணம்தான்
வாச்சப்பா சத்யம் என்ன மித்தை என்ன மருவியதோர் நானேதான் என்றது ஆரு
வீச்சப்பா நமக்கு வந்த பந்தம் ஏது வேதாந்த சாத்திரத்தில் விளங்கப் பார்த்துக்
கூச்சப்பா திடப்பட்டார் தவசு என்பார்கள் குலாமரிட்ட இடம் எல்லாம் குருட்டு நோக்கே

#156
*54
நோக்கப்பா பிரமம் அதி லோகத்துள்ளே நுகர்ந்து நின்ற காமியத்தை நரகு என்று எண்ணி
வாக்கான வெறுப்பது சொப்பனம் போல் எண்ணி மசகம் இது என்று தள்ளி மனம் மீது ஏறித்
தாக்கான பொருள் அல்லோ சச்சிதானந்தம் தடைபெறவே தான் ஆனார் சந்தோடம் ஆச்சு
போக்கான வேதாந்தப் பிரமசாரம் புகட்டுகிற குருச் சொல் பூரணம் என்று எண்ணே

#157
*55
எண்ணியதோர் மூன்றையும்தான் உண்மை என்றே எண்ணியிருக்கிறது ஆர் என்று இயம்புவார்கள்
தண்ணியதோர் குரு உரைத்த உபதேசத்தைத் தான் அறிந்து பூரணமாய் முத்தன் ஆகிப்
பண்ணியதோர் அபராதம் குருவுக்கு ஈந்து பராபரத்தைத் தன் தேகம் போலே எண்ணி
அண்ணியதோர் சுகமுடனே துக்கம் எல்லாம் ஆர் செய்தும் தனக்கு வரம் போலும் காணே

#158
*56
காணப்பா இப்படியே தீர்த்தியானால் கைகடந்த சிவபூசை என்று சொல்வார்
வீணப்பா சகல நூல் என்று தள்ளி விரைந்து நின்ற விரத்தி எல்லாம் விட்டே ஓடி
ஊணப்பா குரு பிறகே நிழலைப் போலே உத்தமனே சச்சிதானந்தன் ஆனாய்
ஆணப்பா தேவிக்கு உபசரித்து வென்று அறிகிறதே சிரவணம் என்று அறிந்துகொள்ளே

#159
*57
அறிந்து இந்த வேத நிலை விட்டு நீயும் அப்பனே வாசனை ப்ரபஞ்சம் தாண்டி
மறிந்து இந்த புத்ராதி பாசத்தாலே மாயம் வந்து முட்டையிலே கலச்சையாக்கிச்
செறிந்த வதை அடிச்சக வேதாந்தம் பார்த்துச் சீராக நிற்கிறதே செம்மையாகும்
நெறிந்து நின்ற வேதாந்தப் பிரமம்-தன்னில் நினைவோடு வருகிறதே ஆசைதானே

#160
*58
ஆசை என்றும் மதி என்றும் அதற்கு நாமம் அப்பனே தாம் பிரமம் என்றே ஆசான்
நேசை என்ற உபதேசப்படியே என்றும் நேராக வேதாந்தப் பொருள் என்று எண்ணிப்
பூசை என்று மற்றது எல்லாம் தள்ளிவிட்டால் உத்தமனே சிவம் என்று சொல்லுவார்கள்
காசை என்றே என்னென்ன கார்யம் வந்தும் கைவிட்ட துக்கம் வந்தும் கலங்கிடாரே

#161
*59
கலங்காமல் தாம் பிரமம் என்றே எண்ணிக் கவடற்று நிரந்தரம் வேதாந்தம் பார்த்தே
மலங்காமல் நிற்கிறதே விரதமப்பா மகத்தான நேமம் என்ற பத்தும் ஆச்சே
இலங்காமல் இருப்பதையும் அனுட்டித்தக்கால் என் மகனே மனம் திடமாய் இல்லாவிட்டால்
துலங்காத சுவரில் சித்திரம் போல் ஆகும் சுழியதுதான் அடிப்படை மூன்று ஒன்றும்வாறே

#162
*60
வாறாகச் சுகாசனமாய் இருந்துகொண்டு மருவியதோர் மூலத்தில் வங்கென்று பூரி
கூறாகக் கும்பித்து மாத்திரையை ஏற்றிக் குறியோடே சிகாரத்தால் ரேசிரேசி
சாறாக இப்படி ஆங்கு என்று கும்பி சாதகமாய் இவை மூன்றும் தீர்ந்த பின்னே
ஆறாக அகாரம் முதல் உகாரம் காட்டி அப்பனே மவுனத்தால் கும்பித்து ஏறே

#163
*61
கும்பித்து மௌனம்தான் குவிந்த பின்பு கொள்கியதோர் மூலத்தை விட்டு நீயும்
தம்பித்துக் கண்டத்தே நின்றே ஊது தால் அடங்கி உரைத்த பின் மேல் மூலம் நின்று
சொம்பித்தே அறிவோடே மௌனம் பூரி சுகமாகப் பூரணத்தை அதற்குள் கும்பி
தம்பித்து மனத்தொடு ரேசகத்தைப் பண்ணு தலமான பிரமம் என்று பிராணன் ஆச்சே

#164
*62
ஆச்சப்பா இது அல்லோ பிராணாயாமம் அறிந்தவன் ஆர் சிவயோகி அறியார் மற்றோர்
ஓச்சப்பா பிரபஞ்ச ஆசை விட்டே ஒன்றையும்தான் மனத்தினுள்ளே சங்கியாமல்
வாச்சப்பா வந்தது என்ற காரணமாக மருவியதோர் ஞானம் என்ற மார்க்கத்து ஊடிக்
கூச்சப்பா காமியத்தை நரகு என்று எண்ணக் கூறான கர்மம் எல்லாம் விடுக்க நன்றே

#165
*63
நன்றாக வேதாந்த சாத்திரத்தால் நாம் சாட்சி என்று நித்தம் உரைத்து நின்று
பன்றான மற்றவை நாம் அல்ல என்று பரவி நின்றே உலகம் எல்லாம் மித்தை என்று
கன்றாக உரைப்பு நிரந்தரமும் நினைவாய்க் காரண காரியங்கள் எல்லாம் தவிர்ந்துபோட்டு
ஒன்றான ஒரு பொருளாய் நின்றாயானால் உத்தமனே பிரத்தியாகாரம் ஆச்சே

#166
*64
ஆச்சப்பா மாயையொடு மாய இன்பம் அப்பனே சுத்த சைதன்யம் மூன்றும்
போச்சப்பா ஆகாயம் போலே எங்கும் ஓடி எங்கும் மறைந்திருக்கும் கண்டாலும்தான்
ஆச்சப்பா அவர்களைத்தான் தீர்த்த மூர்த்தியாக நனி தோத்திரமாய்த் தியானம்பண்ண
வீச்சப்பா பிரமம் என்றே தியானம் ஆச்சு விளம்புகிறேன் ஐந்து வகைச் சமாதிதானே

#167
*65
தான் என்ற அதிட்டான சைதன்யத்தைத் தனை அளித்து நிலவறையில் தீபம் போல
ஆன் என்ற அலைவு அற்றுத் திட தாக அப்பனே அகண்டமதுதானாய் நின்று
வேன் என்ற தோற்றம் அற்றே இருந்தாயானால் விளங்கியதோர் தத்வலயச் சமாதி ஆச்சு
வான் என்ற சவ்விகற்பச் சமாதி கேளு மருவியதோர் தத்வலயச் சமாதிக்குள்ளே

#168
*66
உள்ளாக இருக்கையிலே பேசும் சுற்றம் உறவாகக் கேட்டாக்கால் தாணு வித்தை
தள்ளாகச் சவ்விகற்பச் சமாதி என்று தாம் உரையார் பெரியோர்கள் கேளு கேளு
விள்ளாகத் திரிசாணு வித்தை மார்க்கம் விரவி அந்தச் சமாதியிலே நிற்கும்போது
தள்ளாகத் தன்னை அனுசந்தானித்துத் தலமான சந்தானம் திரிசாணம் ஆச்சே

#169
*67
ஆச்சப்பா இதன் பேர் சவ்விகற்பம் என்பார் அருளியதோர் நிருவிகற்பச் சமாதி கேளு
ஓச்சப்பா தத்வலயச் சமாதி முத்தி உத்தமனே சாத்தனுத்து அங்கே மறந்த
ஆச்சப்பா துக்கமுற்று மிருகம் போல ஆச்சரியம் சத்தம் எல்லாம் கேளாவிட்டால்
கூச்சப்பா சித்தமது சொரூபத்துள்ளே கொண்டால் பூரணத்தில் நிருவிகற்பம் ஆமே

#170
*68
ஆமப்பா சமாதி விட்டுச் சரிக்கும்போதும் அப்பனே சாத்திரங்கள் பார்க்கும்போதும்
ஓமப்பா காலம் என்ற நிறையும் இல்லை உத்தமனே பிரபஞ்சம் இல்லை என்று
சோமப்பா விகாரம் தோற்றும் ப்ரபஞ்சம் சொப்பனம் போல் பாசம் என்ற மதி அடக்கில்
ஆமப்பா தீவிரமாம் பிறவி யார்க்கும் அகத்தான காரணனாம் என்றே எண்ணே

#171
*69
எண்ணி அல்லோ மனத்துள்ளே படாதே நீக்கி ஏக்கமாய் நிருவிகற்பமாகி நின்றே
அண்ணி அல்லோ பிரபஞ்ச விகற்பம் தள்ளி அனுபோக நிருவிகற்பச் சமாதி ஆச்சே
ஒண்ணி அல்லோ சொரூபத்தில் லயிச்சு நின்றே உற்றிருந்த அகண்ட விர்த்தி காற்றில் தீபம்
தண்ணி அல்லோ உப்பு உண்டால் போலே மைந்தா சாதகமாய் உன் உருவம் கெட்டுப்போச்சே

#172
*70
போச்சதுவும் கடிகை என்று தானாய் நின்றால் புகழான பெருமை சொல்ல என்றால் கூடா
ஆச்சதுவும் மவுனமுற்று வாயை மூடி ஆசை அற்றே இருந்து அல்லோ அகண்ட வீதி
வாச்சதும் ப்ரபஞ்சத்தில் கண்டது எல்லாம் வாலையுடன் உரை போலும் மலை போல் காணும்
கோச்சதுவும் சிலந்தியுடை நூலும் போலக் கூறுமதன் அங்கம் போல் குறியைக் காணே

#173
*71
குறியன விண் உதித்த மேகம் போலும் கோதியதோர் சொப்பன ப்ரபஞ்சம் போலும்
நெறியான அகண்டம் நம்மிடத்தே மைந்தா நேராக உண்டாகில் இற்றுப் போற்று
பறியான வெவ்வேறு நாமமாகிப் பாழ் உலகு நம்மிடத்தே தோன்றும்-தோறும்
மறியாக அழிந்துபோம் நாமே பிரமம் மற்றொன்றும் இல்லை என்று மயக்கம் தீரே

#174
*72
மயக்கம் அற்று நான் ஒருவன் எனக்குள் எல்லாம் மற்றொன்றும் இல்லை என்று தீரனாகித்
தியக்கம் அற்று எந்நேரமும் உள்ளிட்டுக்கொண்டு சேர்ந்து வரும் சந்தோடம் துக்கம் தள்ளி
முயக்கம் அற அருள் பெய்து முன்னே வந்து முன் நின்று விகற்பங்கள்பண்ணினாலும்
அயக்கம் அற்று மன திடமாய்ச் சதமாய்த் தள்ளி ஆராதி கொண்டு அகற்றித் தானாய் நில்லே

#175
*73
நில்லப்பா சஞ்சாரத் தாலத்துள்ளும் நேராகச் சமாதியிலே இருக்கும்போதே
அல்லப்பா தொய்தம் வந்தால் ஆதரவுபண்ணி அசையாத மலை போல இருக்க நன்று
சொல்லப்பா கற்பமது கண்டத்து எய்தும் சுட்டி நின்று திடப்படுதல் மெத்த நன்று
வெல்லப்பா வாசனையை விண்டாயானால் மேவியதோர் ஆரூடச் சமாதி ஆச்சே

#176
*74
ஆச்சப்பா மாயை யுத்தி சொல்ல என்றால் அனேகம் உண்டு சூட்சுமமாய்ச் சொல்லக் கேளு
வாச்சப்பா தேசத்தில் பேதாபேதம் மருவியதோர் கிராமத்தில் கிராம பேதம்
ஓச்சப்பா திறங்களிலே திறங்கள் பேதம் ஓகோகோ சனங்களிலே அனேக பேதம்
வீச்சப்பா புத்திகளில் பேதாபேதம் வெகு மோக மாயத்தால் தோன்றும் காணே

#177
*75
காணப்பா அன்னமயம் ஆகி நின்று கலந்து நின்ற புராணமய கோசம் ஆச்சே
ஊணப்பா விக்யானமயமும் ஆமாகி உத்தமனே மனோமயமாம் கோசம் ஆச்சு
பூணப்பா ஆனந்தமயமுமாகப் பொங்கிற்றே அஞ்சு திறை போதத்துக்குத்
தோணப்பா திறை அஞ்சு மாயை மாயை சொல்லுகிறேன் சூட்சத்தைப் பூட்டிப் பாரே

#178
*76
பூட்டியதோர் விசிட்டன் என்றும் விராடன் என்றும் புகழ் பெரிய ஏமகற்பப் போக்கு ஏது என்றும்
நீட்டியதோர் அண்டம் என்றும் புவனம் என்றும் நேரான பதங்கள் என்றும் மாயை ஆச்சே
ஆட்டியதோர் ஆட்டம் எல்லாம் மாயை ஆட்டே அறிந்துகொள்ளும் முன் மனமே மட்டை மாயை
மூட்டியதோர் மனமும் வந்தவரைக்கே நிற்கும் மூதண்ட மனம் கடக்க முடியாவாறே

#179
*77
வாறான உலகத்தில் சுத்த வீரன் மனத்தோடே போராடி அருவில் மாள்வான்
கூறான ஞானி என்றால் லிங்கம் புக்குக் குறியான அம்பலத்தில் சேர்வானப்பா
தாறான உலகத்தோர்க்கு அடுத்த ஞானம் சகத்திரமாம் கோடியிலே ஒருவர் சொல்வார்
வீறான சில பேய்கள் சாங்கம் பேசி விழித்து இறந்து விழித்து இறந்து திரிவர்தானே

#180
*78
தான் என்ற பிரமரும் ஓர் அறிவில் சென்றார் சாதகமாய் மால் என்றால் அறிவில் தோன்றும்
கோன் என்ற ருத்திரன் ஓர் அறிவில் அந்தம் கொள்கின்ற மகேச்சுரன் ஓர் அறிவில் தோன்றும்
வான் என்ற சதாசிவனோ மணியைக் காண்பான் மகத்தான ஐவரும்தான் ஆக்கிப் பீடம்
வேன் என்ற பஞ்சகர்த்தாள்மட்டும் சென்றால் வேதாந்தி எனமட்டும் சொல்வார் பாரே

#181
*79
பாரப்பா சித்தர் என்றார் குளிகை போட்டுப் பகுத்து அறிவாருள் மனையைப் பரிந்து போற்றி
நேரப்பா தம்மொடு பூரணத்தில் நின்று நேராக ஓடம் போல் நீஞ்சி ஆடிச்
சேரப்பா திரும்பிவந்து புகுதுவார்கள் செகத்தில் உள்ள சித்தருக்கே அடுத்தவாறு
கூறப்பா பூரணத்தில் நாதம் தாண்டிக் கொங்கணர்தாம் சிலம்பொலியைக் கூடினாரே

#182
*80
கூடினார் மூல குரு பேரன் என்று கோடானுகோடி சித்தர் ஆடிப் பார்த்தார்
ஆடினார் ஆடினார் ஏற மாட்டார் ஆச்சரியம் கொங்கணர்தாம் அகண்டில் சித்தர்
ஓடினார் ஓடினார் அனேகம் கோடி ஓங்கி நின்ற காகத்தில் ஒன்றிப் போட்டுத்
தேடினார் தேடினார் குளிகை-தன்னைச் சித்தருக்குச் சொருபன் இது கிட்டும் வாறே

#183
*81
வாறான சுருபமணியாரின் வர்க்கம் மகத்தான தெட்சிணாமூர்த்தி வர்க்கம்
கூறானது ஒன்றாய் நிட்களங்கமாகிக் குவிந்து நின்ற பொருளாகிக் கூறொணாத்
தாரான தற்பதமாய் அதுவும் அற்றுச் சச்சிதானந்தத்தில் நின்ற ஆசான்
பேரான பிள்ளைகட்கு மணியும் ஈந்து பெரும் பாதை மகாரம் என்று பேசினாரே

#184
*82
பேசிய துர்க்கந்தம் என்ன என்று கேட்டால் பெருவிரலே நீயாய் மெய் விரலே போத
மாசியது அற்றக்கால் கவிக்கு முன்னே மக்களே இந்தப் பார் என்று காட்டித்
தேசியது மகார வித்தை சென்று கூட்டித் செப்பாதே மகார வித்தை குளிர்ந்த ஞானம்
வாசியதுக்கு அருகாகும் கண்டுகொள்ளும் மக்களே சின்முகத்தில் நடுப்பால் ஆமோ

#185
*83
நடு என்ன வெட்டவெளி ஒன்றும் இல்லை நானும் இல்லை நீயும் இல்லை மகண்ட வீதி
கடு என்ன லகு என்ன மனம் செவ்வானால் கண்டுகொள்ளும் என்று சொல்லிக் கரத்தில் காட்டிச்
சுடு என்ன தாபம் என்ற முளையை முந்திச் சுடுகின்ற துத்தி என்ன மௌனத் தீதான்
விடு என்ன இந்திரியப் பாம்பை நீயும் விட்டு அகன்றே அறிவோடே மேவு மேவே

#186
*84
மேவும் என் கைலாய பரம்பரையா மாணா வெகு கோடி ரிஷிகளுக்கும் உபதேசித்தார்
மேவும் என்று சித்தரிலே அனேகம் கோடி மேருவிலே இருந்தார்க்கும் உபதேசித்தார்
மேவும் என்று என்னோடு பதினாறுபேர்க்கு விளங்கியவர் பதம் பிடிக்க உபதேசித்தார்
மேவும் என்றே எழுவருடன் திருமூலர்க்கு விளம்பினார் மெய்ஞ்ஞானம் விளம்பினாரே

#187
*85
விளம்பிய நாம் எல்லாம் கைலாய வர்க்கம் மேருவிலே எடுத்த உடல் எமக்கு மக்காள்
அளம்பினதோர் சனகாதி ஐயர் விட்டே அரைக் கணமும் பிரியார்கள் அடியை விட்டுத்
தளம்பினதோர் கொடிக்குக் கொழுகொம்பு போலே சதா நித்தம் காத்திருந்தோம் ஐயா கிட்டக்
கிளம்பினதோர் பந்து போல் அனேகம் பிள்ளை கெடியிட்டு மாட்டி அங்கே கிட்டினாரே

#188
*86
கிட்டினம் கைலாய பரம்பரையினாலே கேளும் ஆச்சரியம் கொங்கணர்தாம் சென்று
கிட்டினோம் என்று சொல்லி ஈசானத்தே கெடியான ரசம் உண்டு சட்டை போக்கிக்
கிட்டினோம் ஈசானம் துதித்தோம் என்று கெடியாகத் தவசிருந்து முத்தராகிக்
கிட்டினோம் என்று சொல்லித் தட்சிணாமூர்த்தி கெடியான பதம் பிடித்துப் பணித்திட்டாரே

#189
*87
பணிந்திட்ட கொங்கணரைப் பார்த்து நாதன் பார் உலகில் பிறந்தவன் இப்படி தான் ஆனால்
பணிந்திட்ட சடம் போக்கிக் கைலாயத் தேகமானதுதான் வெகு கடினம் அதிக மெத்தக்
கனிந்திட்ட கனிவாலே வீரத்தாலே கலங்காமல் சமாதியுற்றுக் கயிலாயத்திற்
தணிந்திட்ட புத்தி கொண்டு இங்கே வந்தாய் சாதகமாய் ஒருவரையும் கண்டிலேனே

#190
*88
கண்டிலேன் ஆச்சரியம் குமாரனே பார் கலந்த நல் சென்மம் இவர் கைலாயம் ஆனார்
ஒண்டிலே நாலதுக்கு மகத்வம் என்ன உற்ற சிவ விந்துவில் அப்படி தான் ஆச்சு
கண்டிலேன் இவரைப் போல் சித்தர் காணேன் காரணமாய் இவனுக்குத் தீட்சிப்பேன் நான்
பண்டிலேன் கொங்கணரே மயங்க வேண்டா பரம்பரமாய் வயது தந்த மௌனம்தானே

#191
*89
மௌன வித்தை மூலருக்கு முன்னே சொன்னேன் மருவியவர் காலாங்கிக்கு அதுவே சொன்னார்
மௌன வித்தை அகண்டாதி அறிந்துகொள்ளும் மகத்தான போகரும்தான் உமக்குச் சொன்னார்
மற்றொன்று மயக்கம் அற்று மௌனத்தார்க்கு மௌன வித்தை எய்தியக்கால் அவனே ஞானி
பற்று ஒன்றும் வையாதே பலரும் காண வாய் திறந்து பேசாதே மகாரம் நன்றே

#192
*90
நன்றான மௌனத்தில் கடிகை சேர நல்வினையும் தீவினையும் நாசம் ஆகும்
நன்றான மௌனம் என்று நினைக்க முத்தி நல்லோர்கள் நினைப்பார்கள் மற்றோர் காணார்
நன்றான மௌனம் அல்லோ ரிஷிகள் சித்தர் நாலு திக்கும் சொருபம் அல்லோ ஞானி ஆனார்
நன்றான மௌனத்தைக் கண்டார் முன்னே நலமாகக் கூப்பிடுதல் கண்டிலாரே

#193
*91
கண்டிலார் மோனத்தில் அனேக சித்தி காணுமப்பா சொல்லுகிறேன் நன்றாய்க் கேளே
அண்டிலார் மந்திரங்கள் செபிக்கும்போது அப்பனே மௌனம் என்றே தீட்சை கேளு
ஒண்டியாய் வாய் மூடிப் பேச்சு மற்றே ஒருசேரச் சமைத்து உண்ணு ஒரு போதப்பா
விண்டிலாது எந்நேரம் செபித்தாயானால் விளங்கியதோர் ஏழு லட்சம் மந்த்ரம் சித்தே

#194
*92
சித்தாகும் சித்தியுமாம் எட்டெட்டாகும் திறமாக நின்றவர்க்கு மந்த்ரம் சித்தி
சத்தாகும் வேத மந்திரத்தைப் பாவி சலசலெனப் பேசிச் சேவிப்பார் கோடி
கத்தாதும் நாய் போல கத்தி என்ன காசுக்கும் ஆகாது சித்தி இல்லை
முத்தான மௌனம் விட்டால் மனம் பாழாச்சு மோசம் இந்த வேதம் எல்லாம் பொய் என்பாரே

#195
*93
பொய் என்றே எண்ணியெண்ணி உலகம் கெட்டுப் போச்சு அதனாலே யுகத்தின் பேதம் ஆச்சு
கை என்று யோகத்தில் மௌனம் முட்டக் கடும் சித்தி அறிவுமட்டும் கலந்து தாக்கு
சையென்ற நிர்த்தமப்பா ஆறில் காணும் சாதகமாய் மேல் மூலம் தாண்டிக் காணும்
மெய் என்று பிடித்தக்கால் அவனே யோகி விரைந்து இதனை அறியாவிட்டால் விருதா மாடே

#196
*94
விருது அன்றோ உலகத்தில் ஆசான் என்று வேடமிட்டு வேடம் மிஞ்சி மோடி ஏற்றி
விருது அன்றோ பணம் பறித்துப் பிழைப்பார் ஐயோ வேதாந்தம் ஒன்றும் இல்லை சாங்கம் என்பார்
விருது அன்றோ கெடுத்துவிட்டார் உலகத்தோரை வேடம் என்று மயக்காலே மயங்கிப்போனார்
விருது அன்றோ சீடருடைப் பாவம் எல்லாம் விளையாட்டுப் போல் வாங்கி விழுந்திட்டாரே

#197
*95
விழுந்திட்டார் என்று அறிந்து கொங்கணரே நீர் வெகு பிள்ளை பெற்றீர் முந்நூறு பிள்ளை
நழுந்திட்ட பிள்ளை உண்டோ திறந்தான் உண்டோ நலமாக உமைப் போல் ஆனாரும் உண்டோ
அழுந்திட்ட சமாதி உண்டோ தியானம் உண்டோ ஆகாத பிள்ளை உண்டோ சொல்லும் சொல்லும்
கொழுந்திட்ட தேவரீர் கருணையாலே கொஞ்சம் அறப் பிள்ளையிலே கூடிலேனே

#198
*96
கூடாத நல்ல புத்தி சித்தர் வென்றார் கொள்கியே வரங்கள் பூமியிலே தட்டி
நீடாகத் தெண்டனிட்டே அழைத்துக்கொண்டு நிமிடத்தில் குகையினுள்ளே நேர்ந்து போனார்
ஆடு ஆனால் அது மாட்டு அன்றே சித்தர் ஆனந்த போகம் உண்ட ஆண்மை ஆண்மை
ஓடானால் ஓட்டு நிர்க்குணத்தின் விதி ஒருமனமாய் நின்று புத்தி உரைப்புத்தானே

#199
*97
தான் என்ற கொங்கணர் போல் பிள்ளை பெற்றால் தங்குமடா குட்டென் கைலாய மூர்த்தி
வான் என்ற சுந்தரானந்தன் விந்து வரவு அற்ற பூரணமே தாபம் என்னக்
கான் என்ற வெளி கடக்க அறிவோம் நாங்கள் கரை அற்ற போகத்தைப் பானம்செய்வோம்
கோன் என்ற கைலாய பூரணமே தேவர் கொள்கிறது ஓர் உற்பனமும் லயமும் சொல்லே

#200
*98
சொல்லுகிறேன் கேளுங்கள் மக்காள் நீங்கள் சுகமாக வாரிதியில் மேக நீர் போல்
அல்லுகிற துவலையைப் போல் பிறப்பு உண்டாச்சே அது ஓங்கும் விவரம் என்ன சொல்வீர் ஐயா
பல்லுகிற சந்திரனாம் நீரை வாங்கு பாங்கான ரவி அங்கே நன்றாய்ப் பாரு
சொல்லுகிற கெர்ப்பத்தில் விந்து உன்னிச் சிந்தூளி பரஞ்சத்தால் சின்னம் ஆச்சே

#201
*99
ஆச்சப்பா சனனம் இந்தப்படியேயாகில் அடங்கிறது அக் கனியும் ரவி மதியும் கூடி
வாச்சப்பா சந்திரனில் கலந்து போனால் மாளுகிற விதம் இதுதான் குளிர்ந்து போகும்
நீச்சப்பா சின்னமொடு பாணம் ரண்டும் நேராக மனோன்மணியைத் தொட்டு மீளும்
ஓச்சப்பா லக்கம் இல்லை எழு வகைத் தோற்றம் உத்தமனே நாலு வகை யோனி காணே

#202
*100
காண் இந்தப்படி எல்லாம் கண்டுகொண்டு கலங்காமல் இருக்காமல் யுகமே கோடி
வான் இந்த காயம்மட்டே சாலம் எல்லாம் மனம் தாண்டி அறிவில் வந்தது எல்லாம் போச்சே
ஆன் இந்தப்படி நீங்கள் சமாதி கொண்டே அரை விட்டால் குளிகையிட்டு ஓடிப் பாரு
தோண் இந்தப்படி சொன்னேன் முன்னைத் தூக்குச் சுழல்காற்றுத் துரும்பது போல் மவுனம் ஆமே

#203
*101
மௌனம் என்றீர் எனை ஆண்ட தட்சிணாமூர்த்தி மலர் பணிந்தே ஞானமது நூறும் சொன்னேன்
மௌனம் என்ற நாதாக்கள் பதத்தைப் போற்றி வகையோடே நிகண்டாக வாதம் சொன்னேன்
மௌனம் என்றீர் ஞானம் பொய் என்று சொல்லி வாகான செயம் மண்டிபோட்டே நூற்றில்
மௌனம் என்ற சமரசத்தால் மக்காள் மக்காள் வாகான ஞான முறை முற்றும் காணே
**

20 சங்கிலிச் சித்தர் பாடல்

** கும்மி

#1
மூலக் கணேசன் அடி போற்றி எங்கும்
முச்சுடராகிய சிற்பரத்தில்
வாலை திரிபுரை அம்பிகை பாதத்தை
மனத்தில் கொள்வாய் ஆனந்தப் பெண்ணே

#2
எங்கள் குருவாம் திருமூலர் பாதம்
எப்போதும் போற்றித் துதித்தோன்
சங்கைகள் அற்ற மா சித்தர் குழாங்களின்
தாளைப் பணிவாய் ஆனந்தப் பெண்ணே

#3
ஓங்கார வட்டம் உடல் ஆச்சு பின்னும்
ஊமை எழுத்தே உயிர் ஆச்சு
ரீங்காரம் ஸ்ரீங்காரமான வகையதை
நீதான் அறிவாய் ஆனந்தப் பெண்ணே

#4
அகாரம் உகாரத்துடன் பொருந்த அது
யகாரம் ஆனது அறிந்துகொண்டு
சிகாரமான தெளிவினிலே நின்று
தேர்ந்து கொள்வாய் ஆனந்தப் பெண்ணே

#5
பஞ்சபூதங்களைக் கண்டு அறிந்தோர் இகப்
பற்றினைச் சற்றும் நினைப்பாரோ
சஞ்சலம் இல்லாது யோக வழியதைத்
தான் அறிந்து உய்வாயா ஆனந்தப் பெண்ணே

#6
தவ நிலையை அறிந்தோர்க்கு ஞானம்
தன்னால் தெரியும் எனவேதான்
நவசித்தாதிகள் கண்டு தெளிந்ததை
நன்றாய் அறிவாய் ஆனந்தப் பெண்ணே

#7
வாசி நிலையை அறிந்துகொண்டால் தவம்
வாச்சுது என்றே மனது உகந்து
தேசி எனும் பரி மீது ஏறி நாட்டம்
செய்தது அறிவாய் ஆனந்தப் பெண்ணே

#8
நந்தி கொலுவைத் தெரிந்தோர்கள் வாசி
நாட்டம் விடார்கள் ஒருக்காலும்
உந்திக் கமலத்தில் அந்தணன் பீடத்தை
உற்று அறிந்து உய்வாய் ஆனந்தப் பெண்ணே

#9
மாலும் திருவும் வசித்திருக்கும் இடம்
வணங்கி இப்பால் செல்லும்போது
மேலும் உருத்திரன் ருத்திரி சேவையை
மேவியே காண்பாய் ஆனந்தப் பெண்ணே

#10
எந்தெந்தப் பூசை புரிந்தாலும் பரம்
ஏகம் என்றே கண்டு அறிந்தாலும்
சிந்தையும் அடங்கு உபாயம் சதாசிவன்
சீர் பாதம் அல்லவா ஆனந்தப் பெண்ணே

#11
தானே தானாக நிறைந்து நின்ற சிவ
தற்பரம் ஆகிய உற்பணத்தை
நானே நான் என்று அறிந்துகொண்டு பர
நாட்டம் அறிவாய் ஆனந்தப் பெண்ணே

#12
வஞ்சப் பிறப்பும் இறப்புக்கும் ஏகும் முன்
வாசனை என்றே அறிந்துகொண்டு
சஞ்சலம் அற்றுப் பிராணாயம் செய்திடில்
தற்பரம் ஆவாய் ஆனந்தப் பெண்ணே

#13
சரியை கிரியை கடந்தாலும் யோகம்
சாதித்து நின்று அருள் பெற்றாலும்
உரிய ஞான விசர்க்கம் இலாவிடில்
ஒன்றும் பயன் இன்று ஆனந்தப் பெண்ணே

#14
தன்னை இன்னான் எனத்தான் தெரிந்தால் பின்னும்
தற்பரனைப் பார்க்கவேணுமோதான்
அன்னையும் அப்பனும் போதித்த மந்திரம்
அறிந்தவன் ஞானி ஆனந்தப் பெண்ணே

#15
எண் சாண் உடம்பும் இதுதாண்டி எழில்
ஏற்கும் நவவாசல் உள்ளதடி
தண்மை அறிந்து நடப்போர்க்கு எட்டுத்
தலங்கள் தோணும் ஆனந்தப் பெண்ணே

#16
அஞ்சுபேர் கூடி அரசாள ஒரு
ஆனந்தக் கட்டடம் கட்டிவைத்த
செஞ்சிக் கோட்டையைக் கண்டு இதுதான் எனத்
தெரிந்துகொள்வாய் ஆனந்தப் பெண்ணே

#17
ஊத்தைச் சடலம் இதுதாண்டி நீ
உப்பிட்ட பாண்டம் இதுதாண்டி
பீத்தத் துருத்தி இதுதாண்டி நன்றாய்ப்
பேணித் தெளிவாய் ஆனந்தப் பெண்ணே

#18
ஆத்தாள் எந்தனைப் பெற்றுவிட்டாள் என்றன்
அப்பனும் என்னை வளர்த்துவிட்டார்
வேத்தாள் என்று நினையாமல் இதன்
விபரம் கேட்பாய் ஆனந்தப் பெண்ணே

#19
இந்தச் சடலம் பெரிது என எண்ணி யான்
இருந்து வீண்காலம்தான் கழித்துச்
சொந்தச் சடலம் எது எனப் பார்த்திடில்
சுத்தமாய்க் காணோம் ஆனந்தப் பெண்ணே

#20
மணக்கோலம் கண்டு மகிழ்ந்த பெண்ணோடு பின்
மக்களைப் பெற்று வளர்த்து எடுத்துப்
பிணக்கோலம் ஆவது அறியாமல் வீணே
பிதற்றுவது ஏதுக்கு ஆனந்தப் பெண்ணே

#21
எல்லாப் பொருள்களும் எங்கிருந்து வந்த
என்று நான் உற்று இதைப் பார்க்கையிலே
நல்லதோர் மண்ணினில் உற்பத்தி என்று பின்
நன்றாய்த் தோணுதே ஆனந்தப் பெண்ணே

#22
செத்த பின் கொண்டே சமாதிசெய்து அப்பால்
சில நாள்கள் கழித்து அந்த மண் எடுத்து
உய்த்தோர் பாண்டம் ஆகச் சுட்டுப் பின்
உலகோர்க்கு உதவு ஆனந்தப் பெண்ணே

#23
சகல பொருள்களும் மண்ணாய் இருப்பதைச்
சற்று நிதானித்துப் பார்க்கையிலே
பகவான் அங்கங்கு எள் எண்ணெய்யைப் போலவே
பற்றி இருப்பார் ஆனந்தப் பெண்ணே

#24
மண்ணில் பிறந்தது அழிந்துவிடும் பார்த்து
வைத்த பொருளும் அழிந்துவிடும்
கண்ணினில் காண்பது அழிந்துவிடும் என்று
கண்டு அறிந்துகொள் ஆனந்தப் பெண்ணே

#25
பெற்ற தாய் தந்தை சதம் ஆமோ உடல்
பிறப்புச் சுற்றம் சதம் ஆமோ
மற்று உள்ளோர்கள் சதம் ஆமோ கொண்ட
மனைவி சதம் ஆமோவாய் ஆனந்தப் பெண்ணே

#26
யாரார் இருந்தும் சதம் அலவே நம
ஆத்துமா கூடுவிட்டு போகும்போது
ஊரார் ஒருவர் சதம் இலை என்பதை
உற்று நீ காண்பாய் ஆனந்தப் பெண்ணே

#27
இந்த வழியைத் தெரிந்துகொண்டே இவ்
இகத்தும் பரத்துமாய் சித்தன் என்றே
சொந்தமதாக என் பாட்டன் போக ரிஷி
சொல்லை அறிவாய் ஆனந்தப் பெண்ணே

#28
வழி தெரியாது அலைந்தோர்கள் இந்த
மாநிலம்-தன்னில் கோடானகோடி
சுழிமுனை-தன்னைத் தெரிந்துகொண்டால் பின்
சுக வழி கண்டோர் ஆனந்தப் பெண்ணே

#29
ஆசை ஒழிந்து அருள் ஞானம் கண்டு வீண்
ஆண்மையைத்தான் சுட்டு அறுத்துத் தள்ளி
பாசத்தை விட்டு நீ யோகத்தைச் செய்து இந்தப்
பாரினில் வாழ்வாய் ஆனந்தப் பெண்ணே

#30
இரவைப் பகலாய் இருத்தித் தெரிந்து நீ
ஏக வெளியையும் கண்டு அறிந்த
விரைவாய் இந்த விதம் தெரிந்தால் இ
மேதினி போற்றும் ஆனந்தப் பெண்ணே

#31
பெற்ற தாய் தந்தை இருந்தால் என் கொண்ட
பெண்டிர் பிள்ளை இருந்தால் என்
நல் தவம்செய்யாது இருக்கில் நமனுக்கு
நாம் சொந்தம் காண்பாய் ஆனந்தப் பெண்ணே

#32
தீர்த்தம் ஆடிக் குளித்தாலும் பல
தேவாலயம் சுற்றி வந்தாலும்
மூர்த்தி தரிசனம்செய்தாலும் நாலாம்
மோனம் உண்டோ சொல் ஆனந்தப் பெண்ணே

#33
காடு மலைகள் அலைந்தாலும்
கன்மானுட்டானம் புரிந்தாலும்
ஓடும் சித்தத்தை நிறுத்தார்க்குப் பர
உற்பனம் வாய்க்காது ஆனந்தப் பெண்ணே

#34
மாயா உலக மயக்கத்தையும் நல்ல
வஞ்சியர் மீது உற்ற மோகத்தையும்
தீயா மாந்தர் ஒருக்காலும் வீடு
சேருவது இல்லை ஆனந்தப் பெண்ணே

#35
நாலாவகைக் கலைகள் அறிந்தாலும்
ஞான வழிகள் தெரிந்தாலும்
மேலான மோனம் அறிந்தவரே துஞ்சா
வீடுறுவார்கள் ஆனந்தப் பெண்ணே

#36
சங்கிலி கண்டத்து அணிந்துகொண்டு நல்
தவயோகம்செய்து அங்கு இருக்கையிலே
சங்கிலிச் சித்தன் என்று என் பாட்டன் வந்து
சாற்றைத் தெரியும் ஆனந்தப் பெண்ணே
**

21 சட்டை முனி ஞானம்

** எண்சீர் விருத்தம்

#1
காணப்பா பூசைசெய்யும் முறையைக் கேளாய் கைம்முறையாய்ச் சுவடி வைத்துப் பூசைசெய்வார்
பூணப்பா சிலபேர்தான் தீபம் வைத்துப் புகழாகப் பூசைசெய்வார் பெண்ணை வைத்தும்
நாளப்பா சக்கரத்தைப் பூசைசெய்வார் நம்முடைய பூசை என்ன மேருப் போலே
ஓதப்பா நாற்பத்து முக்கோணம் வைத்தே உத்தமனே பூசைசெய்வார் சித்தர்தானே

#2
தான் என்ற மேருவைத்தான் பூசைசெய்வார் சாபமிட்டால் அண்டரண்டம் தீயா வேகும்
தேன் என்ற மேருவுக்குத் தீட்சை வேண்டும் சிறுபிள்ளையாம் ஒருவன் தீண்டப் போகா
வான் என்ற மேருவைத்தான் பூசைசெய்தார் வாய் திறந்தே உபதேசம் சொன்னாராகில்
கோன் என்ற வாத சித்தி கவன சித்தி கொள்ளையிட்டான் அவன் சீடன் கூறினானே

#3
கூறியதோர் வாலையின் மூன்றெழுத்தைக் கேளாய் குறியறிந்து பூசைசெய்து பின்பு கேளாய்
மாறியதோர் திரிபுரை எட்டெழுத்தைக் கேளாய் மைந்தனே இவளை நீ பூசைபண்ணத்
தேறியதோர் புவனை-தனின் எழுத்தைக் கேளாய் திறமாகப் புவனையை நீ பூசைபண்ணு
ஆறியதோர் யாமளை ஆறெழுத்தைக் கேளாய் அவளுடைய பதம் போற்றிப் பூசைபண்ணே

#4
பண்ணிய பின் யாமளை ஐந்தெழுத்தைக் கேளாய் பண்பாகத் தீட்சை ஐந்தும் முடிந்த பின்பு
வண்ணியதோர் வாசி என்ற யோகத்துக்கு மைந்தனே வைத்து ப்ராணாயாமம் தீரும்
கண்ணியதோர் இத்தனையும் அறிந்திருத்தால் காயசித்தி விக்கினங்கள் இல்லை இல்லை
உண்ணியதோர் உலகம் என்ன சித்தர் என்ன உத்தமனே விட்டகுறை எடுக்கும் காணே

#5
தியங்கினால் கெர்சித்துத் துரத்துச் சண்ணும் சீரியர் மிலேச்சரையே சுகத்தினுள்ளே
மயங்கினார் நாலு பாதத்தினுள்ளும் மனம் செவ்வையாவது எப்போது அறிவது எப்போ
தயங்கினார் உலகத்தில் கோடிபேர்கள் சாவதும் பிறப்பதும் காவடி போல் ஆச்சு
துயங்கினார் துயரத்தால் ஞானம் போச்சு சுடுகாட்டில் அறிவது போல் சுத்தப் பாழே

#6
பாழான மாய்கை சென்று ஒழிவது எப்போ பரந்த மனம் செவ்வையாய் வருவது எப்போ
வாளான விழியுடைய பெண்ணைச் சேரும் மயக்கம் அற்று நிற்பது எப்போ மனமே ஐயோ
காழான உலகமதன் ஆசை எல்லாம் கருவறுத்து நிற்பது எப்போ கருதி நின்ற
கோளான கருவி விட்டு மேலே நோக்கிக் கூடுவதும் ஏதென்றால் மூலம் பாரே
**

22 சத்திய நாதர் என்ற ஞானச் சித்தர் பாடல்

** கண்ணிகள்

#1
ஆதி பராபரையே அம்பிகை மனோன்மணியே
சோதிச் சுடர் ஒளியே சுத்த நிராமயமே

#2
தாயே பகவதியே தற்பரையே அற்புதமே
நேயமுடன் ஞான நெறியை அறிவிப்பாயே

#3
முடி நடுவும் மூலமுமாய் முச்சுடராய் முப்பொருளாய்
மடிவு இல்லா மெய்ஞ்ஞான மார்க்கத்து அகோசரமாய்

#4
அஞ்ஞானக் காடு கடந்து ஆங்கு வழியே தொடர்ந்து
மெய்ஞ்ஞானம் காண நின்னை வேண்டி அலைகிறண்டி

#5
நிலையில்லாப் பொய்க்கூட்டை நிச்சயம் கொண்டு ஆசை
வலையில் அகப்பட்டு உழன்று வாடித் திரிகிறண்டி

#6
தன்னை அறியாமல் தலம் எட்டும் காணாமல்
அன்னை அன்னை என்று அலறித் திரிகிறண்டி

#7
தவநிலையில் தேறாமல் உன்னை உணராமல்
பவநிலையில் புக்கு அகப்பட்டு உழன்று வாடுறண்டி

#8
பொல்லாக் கொலையும் புலை அவா விட்டு உன்றன்
வல்ல பதம் காண மயங்கித் திரிகிறண்டி

#9
துன்பம் எல்லாம் போக்கிச் சுகானந்தமான நின் தாள்
இன்பம் அனுபவிக்க ஏங்கித் தவிக்கிறண்டி

#10
வஞ்சகம் பொய் சூது கொலை மானார் மயக்கம் எனும்
சஞ்சலத்தை நீங்கித் தனித்திருக்கத் தேடுறண்டி

#11
ஆசைப் பெருக்கு ஆறதில் வீழாது உன் பந்த
பூசைபுரியப் புலம்பித் தவிக்கிறண்டி

#12
ஊண் உறக்கம் இன்ப துன்பத்து உற்ற வினையை ஒழித்துக்
காணுதற்கு எட்டாப் பொருளைக் கண்டு மகிழ்ந்தனடி

#13
பஞ்சபூதாதிப் பகுப்புகள் பொய் என்று உணர்ந்து உன்
செஞ்சரணக் கஞ்சமதைத் தேடி அலைகிறண்டி

#14
ஆசை ஒழிந்தும் அருள் ஞானம் கண்டு அறிந்தும்
பேசத் தெரியாமல் பேய் போல் அலைகிறண்டி

#15
ஆங்காரம் விட்டு அருள் வெளியைக் கண்டு அடுத்து
நீங்காப் பேரின்ப நிலை அறியத் தேடுறண்டி

#16
சருவம் பிரமம் எனத் தான் தெரியும் தன்மை
மருமம் காணாமல் மயங்கித் திரிகிறண்டி

#17
ஐங்காயக் கோட்டை அது மெய் என்று உன் பாத
பங்கயம் போற்றாமல் பரிதவித்து நிற்குறண்டி

#18
பச்சைப்பாண்டத்தைப் போல நாள் இருக்கும் என
நிச்சயமாய் எண்ணி நிலை தவறி வாடுறண்டி

#19
நீரில் குமிழியைப் போல் நில்லா உடம்பினை வி
சாரிக்கப் பொய் என்றேதான் அறிந்து வாடுறண்டி

#20
நான் என்ற கர்வம் நசித்ததனைச் சுட்டறுத்துத்
தான் என்ற அமிர்தம்-தனை அறிய வேண்டுறண்டி

#21
யோகம் தெரிந்து அதன்றன் உண்மை அறிவதற்குப்
பாகம் உணராமல் பதறி அலைகிறண்டி

#22
மவுனத்தை உச்சரித்து மந்திரபீடத்து ஏறிக்
கெவுனம் அறிந்து கிலேசமதை விட்டேண்டி

#23
கல் பஞ்சாப் பிட்டே கனத்த தவம்செய்ததினால்
விற்பனன் என்று பேர் விதித்தார் பெரியோர்கள்

#24
காயசித்தி யோகசித்தி கண்டு அதனில் ஒண்டினதால்
மாயசித்தியாலே மயங்காது இருக்கிறண்டி

#25
ஓம் என்ற அக்கரத்தின் உட்பொருளைக் கண்டுவந்தும்
தாம் என்ற ஆணவத்தால் தன்னை மறந்தேண்டி

#26
பிரணவமும் தான் அறிந்து பேச்சு அடங்கி நின்ற
சொருபம் தெரிந்து அத் துலக்கத்தில் நிற்குறண்டி

#27
நந்தி கொலுவிருப்பை நான் அறிந்து கண்டுகொண்ட
சத்தி தெரிந்து தவியாது இருந்தண்டி

#28
அட்ட கருமம் தெரிந்தும் ஐவர் நிலை அறிந்தும்
இட்டமதில் சற்றும் இல்லாது இருக்குறண்டி

#29
நான் என்னும் ஆணவங்கள் அணுகாது நான் எனலும்
தான் எனலும் அற்றுத் தனியே திரிகுறண்டி

#30
எட்டாச் சுழிமுனையிலே இருந்து என் மனதுக்கு
எட்டாப் பொருளதனை எட்டிப் பிடித்தேண்டி

#31
சாகாக்கால் இன்னது எனத்தான் அறிந்துகொண்டதன் பின்
வேகாத்தலையும் விரைவில் அறிந்தேண்டி

#32
மோகாந்தகாரம் எனும் மோகம் தவிர்ந்தன் பின்
வேகாத்தலையும் விரைவில் அறிந்தேண்டி

#33
சரியை கிரியை யோகம் தாண்டிய பின் ஞான
புரிக் கோட்டைக்குள்ளே புகுந்து திரிகுறண்டி

#34
மந்திரமும் தந்திரமும் மாய விசர்க்கம் எலாம்
உந்திரம் என்று எண்ணி உறுதியது கொண்டேண்டி

#35
சத்தத்தின் உள்ளே சதாசிவத்தைத்தான் அறிய
உத்தமியே நின் உரு என்று ஓர்ந்து அறிந்துகொண்டேண்டி
**

23 சதோத நாதர் என்ற யோகச் சித்தர் பாடல்

** கண்ணிகள்

#1
அக்கரங்கள் தோன்ற அருள் கொடுக்கும் பூரணி என்
பக்கம் இருந்து பல கலையும் சொல்வாளே

#2
வாலை அபிராமி மாரி திரிசூலி அருள்
பாலை எனக்கு அருளும் பார்வதியின் தாள் போற்றி

#3
அம்பிகையால் சோதரி என் ஆத்தாள் திருப்பாதம்
கும்பிட்டு ஞானக் குயில் கண்ணி கூறுவனே

#4
ஓங்கார வட்டமதின் உட்பொருள்கள் ஓர்ந்ததன் பின்
நீங்காத ஆசை நிலைக்குமோ மாங்குயிலே

#5
இயம்பும் இடைகலைக்கும் இன்பம்தாம் பிங்கலைக்கும்
சுயமாம் சுழிமுனையும் தோற்றுமடி மாங்குயிலே

#6
ஆன்மா பரத்தோடு அமரும் திருக்கூத்தை
நான் வாயினாலே நவில்வனோ மாங்குயிலே

#7
அஞ்செழுத்தைக் கண்டு அதன் உண்மையும் தெரிந்து
வஞ்சகங்கள் அற்று மகிழ்ந்திருந்தேன் மாங்குயிலே

#8
சூரியனும் சந்திரனும் தோன்றும் இடை நின்றே
பூரித்து அனந்த போகமுற்றேன் மாங்குயிலே

#9
ஊமை எழுத்தாலேதான் ஓங்காரம் ஆகினதைச்
சீமையில் உள்ளோர்கள் தெரிவரோ மாங்குயிலே

#10
முப்பாழும் தாண்டி முடிவின் இடம் தாண்டி
அப் பாழும் தாண்டின் அறிவு உளதோ மாங்குயிலே

#11
அட்டாங்க யோகம் அறிந்து தெரிந்த பின்பு
வெட்டவெளி உண்மை விளங்குமே மாங்குயிலே

#12
ஆறு ஆதாரத்தில் அறிவை மிகச் செலுத்திச்
சீராய்த் தவசிருந்து சிக்கு அறுத்தோம் மாங்குயிலே

#13
துர்க்குணத்தைச் சுட்டு அறுத்துச் சூக்கும நிலை தெரிந்து
நற்குணத்தோடு எண் திசையும் நான் இருந்தேன் மாங்குயிலே

#14
அல்லல் எல்லாம் நீக்கி அறிவை அறிவால் அறிந்து
வல்ல சித்தன் என்றே மகிழ்வுற்றேன் மாங்குயிலே

#15
ஆனந்தம் பொங்கி அறிவே மயமான
ஞானம் அறிந்து நலமுற்றேன் மாங்குயிலே

#16
மெய்ப்பொருளைக் கண்டுடனே வேதாந்த வீடு அடைந்த
வைப்பதனில் ஒன்றி மகிழ்ந்திருந்தேன் மாங்குயிலே

#17
நாதாந்த உண்மை நடு அறியா மாந்தருக்கு
வேதாந்தப் பேச்சதுவும் வேண்டுமோ மாங்குயிலே

#18
நித்திரையும் விட்டு நினைவை அறிவில் செலுத்தி
சித்தி எலாம் பெற்றுத் தெளிவுற்றேன் மாங்குயிலே

#19
பேச்சு ஒடுங்கி நின்ற பிரம நிலையை அறிந்தோர்
ஏச்சுக்கு இடம் அற்று இருப்பார் காண் மாங்குயிலே

#20
காணாப் பொருளதனைக் கண்டு பிரமானந்தமுற்று
வீணாள் ஒழித்து முத்தி வீடு அடைந்தேன் மாங்குயிலே

#21
அருள் வெளியின் உட்பொருளை ஆராய மோனக்
குரு மொழியை அன்றி இல்லை கோதை எனும் மாங்குயிலே

#22
அத்துவிதம்-தன்னை அதுவதுவாய்க் காண்பதற்குத்
தத்பதத்தைக் காட்டித் தருவாயே மாங்குயிலே

#23
நம்பி உனைப் பணிந்து நாள்-தோறும் பூசிப்பதற்குத்
தொம்பத்தை என்று துலக்குவாய் மாங்குயிலே

#24
நிசி பகல் என்று எண்ணாது ஞேய ஞானத்தால்
அசி பதத்தை நீ என்று அருள்செய்வாய் மாங்குயிலே

#25
நித்தநித்தம் என் உளத்தில் நீ இருப்பது உண்மை எனில்
தத்துவம் சிற்பொருளைத் தந்து அருள்செய் மாங்குயிலே

#26
சுத்த நிராமயத்தின் தோற்றத்தினால் உதித்த
வத்து எலாம் சுத்தமயம் அன்றோ மாங்குயிலே

#27
தேறாப் பொருள் அனைத்தும் தேறித் தெளிவதற்கு
மாறா நின் இன்பமது வாய்க்குமோ மாங்குயிலே

#28
அசர சரத்தின் உற்ற அண்ட பிண்டம் பல் உயிரும்
நசிதம் எனக் கண்டு அறிந்து நின்றேன் நான் மாங்குயிலே

#29
பாசபந்தம் விட்டுப் பரகதி என்றே இருந்தால்
பேசவொண்ணாப் பிரமம் பிறக்குமே மாங்குயிலே

#30
அந்தக்கரணத்தை அடக்கிப் பரவெளியைச்
சொந்தம் என நம்பித் துதிப்பாய் நீ மாங்குயிலே

#31
சுத்தப் பிரமத்தின் தொடர்பு வழியே காணில்
முத்தியைத் தேட முழிப்பாயோ மாங்குயிலே

#32
எக்கனியையும் பறித்து ஏக்கம் அறச் சாப்பிடலாம்
கைக்கனியே பிரமம் எனக் கண்டு தேர் மாங்குயிலே

#33
துர்க்கந்தத்தால் எடுத்த தூலம் இது பொய் என நீ
நற்கந்தமான சுக ஞானம் அறி மாங்குயிலே

#34
வெட்டவெளியதனில் மெய்ப்பொருளைக் கண்ட பின்பு
பட்டப்பகல் தீபப் பார்வை ஏன் மாங்குயிலே

#35
எங்கும் நிறைத்து நின்ற ஏக பர வத்துவினை
அங்கை நெல்லிக்கனி போல் யான் அறிந்தேன் மாங்குயிலே

#36
சத் ஆகிச் சித் ஆகித் தாபரமும் தான் ஆகி
வித்து ஆகி வந்த விதம் தெரிவாய் மாங்குயிலே

#37
அருவாய் உருவாகி அண்டர் அண்டம்தானாய்க்
கருவாகி வந்த கணக்கு அறிவாய் மாங்குயிலே

#38
ஆதி சகத் என்றும் அனாதி மகத் என்றும்
சோதிச் சுயவடிவாய்த் தோன்றுமே மாங்குயிலே

#39
பார்க்குள் ஆகாயமதைப் பார்த்துப்பார்த்து எல்லை கண்டு
யார்க்கும் சொல் எளிதே ஆய்ந்திடுவாய் மாங்குயிலே

#40
அண்டத்துக்குள்ளே அனாதி பரவெளியைக்
கண்டு அறிந்துகொண்டேன் கவலை விட்டேன் மாங்குயிலே

#41
அணுவுக்கு அணுவாய் அருட்சோதி என்ற குரு
மணியாய் விளங்கும் மகிமை அறி மாங்குயிலே

#42
பற்றற்று நின்றே பரவெளியைக் கண்டேன் நான்
வற்றற்றல் ஆசை மறந்திருந்தேன் மாங்குயிலே
**

24 சிவவாக்கியர்


#1
அரியதோர் நமச்சிவாயம் ஆதி அந்தம் ஆனதும்
ஆறிரண்டு நூறு தேவர் அன்று உரைத்த மந்திரம்
கரியதோர் எழுத்தை உன்னிச் சொல்லுவேன் சிவவாக்கியம்
தோஷதோஷ பாவ மாயை தூரதூர ஓடவே

#2
கரியதோர் முகத்தை ஒத்த கற்பகத்தைக் கைதொழக்
கலைகள் நூல்கள் ஞானமும் கருத்தில் வந்து உதிக்கவே
பெரிய பேர்கள் சிறிய பேர்கள் கற்று உணர்ந்த பேர் எலாம்
பேயன் ஆகி ஓதிடும் பிழை பொறுக்க வேண்டுமே
** அட்சர நிலை

#3
ஆன அஞ்செழுத்துளே அண்டமும் அகண்டமும்
ஆன அஞ்செழுத்துளே ஆதியான மூவரும்
ஆன அஞ்செழுத்துளே அகாரமும் மகாரமும்
ஆன அஞ்செழுத்துளே அடங்கலாவது உற்றதே
** சரியை விலக்கல்

#4
ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த சோதியை
நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்துபோய்
வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்கள்
கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே
** யோக நிலை

#5
உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவை
கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்ற வல்லிரேல்
விருத்தரும் பாலர் ஆவர் மேனியும் சிவந்திடும்
அருள் தரித்த நாதர் பாதம் அம்மை பாதம் உண்மையே
** தேகநிலை

#6
வடிவு கண்டு கொண்ட பெண்ணை மற்றொருவன் நத்தினால்
விடுவனோ அவனை முன்னர் வெட்ட வேணும் என்பனே
நடுவன் வந்து அழைத்த போது நாறும் இந்த நல் உடல்
சுடலைமட்டும் கொண்டுபோய்த் தோட்டி கைக் கொடுப்பரே
** ஞான நிலை

#7
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்ததில்லையே
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்துகொண்ட பின்
என்னிலே இருந்த ஒன்றை யாவர் காண வல்லரோ
என்னிலே இருந்திருந்து யான் உணர்ந்துகொண்டெனே

#8
நினைப்பதொன்று கண்டிலேன் நீ அலாது வேறு இலை
நினைப்புமாய் மறப்புமாய் நின்ற மாயை மாயையோ
அனைத்துமாய் அகண்டமாய் அனாதி முன் அனாதியாய்
எனக்குள் நீ உனக்குள் நான் இருக்குமாறு அது எங்ஙனே

#9
மண்ணும் நீ விண்ணும் நீ மறி கடல்கள் ஏழும் நீ
எண்ணும் நீ எழுத்தும் நீ இசைந்த பண் எழுத்தும் நீ
கண்ணும் நீ மணியும் நீ கண்ணுள் ஆடும் பாவை நீ
நண்ணும் நீர்மை நின்ற பாதம் நண்ணுமாறு அருளிடாய்

#10
அரியும் அல்ல அயனும் அல்ல அப்புறத்தில் அப்புறம்
கருமை செம்மை வெண்மையைக் கடந்து நின்ற காரணம்
பெரியது அல்ல சிறியது அல்ல பற்று-மின்கள் பற்று-மின்கள்
துரியமும் கடந்து நின்ற தூரதூர தூரமே

#11
அந்தி மாலை உச்சி மூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
சந்தி தர்ப்பணங்களும் தபங்களும் செபங்களும்
சிந்தை மேவு ஞானமும் தினம் செபிக்கும் மந்திரம்
எந்தை ராம ராமராம ராம என்னும் நாமமே

#12
கதாவு பஞ்சபாதகங்களைத் துரந்த மந்திரம்
இதாம் இதாம் இதல்ல என்று வைத்து உழலும் ஏழைகாள்
சதா விடாமல் ஓதுவார்-தமக்கு நல்ல மந்திரம்
இதாம் இதாம் இராமராம ராம என்னும் நாமமே

#13
நானது ஏது நீயது ஏது நடுவில் நின்றது ஏதடா
கோனது ஏது குருவது ஏது கூறிடும் குலாமரே
ஆனது ஏது அழிவது ஏது அப்புறத்தில் அப்புறம்
ஈனது ஏது ராமராம ராம என்ற நாமமே

#14
சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாத பட்டரே
வேர்த்து இரைப்பு வந்த போது வேதம் வந்து உதவுமோ
மாத்திரைப் போதும் உளே மறிந்து நோக்க வல்லிரேல்
சாத்திரப்பை நோய்கள் ஏது சத்தி முத்தி சித்தியே

#15
தூரம் தூரம் தூரம் என்று சொல்லுவார்கள் சோம்பர்கள்
பாரும் விண்ணும் எங்குமாய்ப் பரந்த இப் பராபரம்
ஊரும் நாடும் காடும் தேடி உழன்று தேடும் ஊமைகாள்
நேரதாக உம்முளே அறிந்து உணர்ந்துகொள்ளுமே

#16
நாலு வேதம் ஓதுவீர் ஞானபாதம் அறிகிலீர்
பாலுள் நெய் கலந்தவாறு பாவிகாள் அறிகிலீர்
ஆலம் உண்ட கண்டனார் அகத்துளே இருக்கவே
காலன் என்று சொல்லுவீர் கனாவிலும் அது இல்லையே

#17
வித்து இல்லாத சம்பிரதாயம் மேலும் இல்லை கீழும் இல்லை
தச்சு இல்லாத மாளிகை சமைந்தவாறு அது எங்ஙனே
பெற்ற தாயை விற்று அடிமைகொள்ளுகின்ற பேதைகாள்
சித்து இல்லாத போது சீவன் இல்லை இல்லை இல்லையே

#18
அஞ்சும் மூணும் எட்டதாம் அநாதியான மந்திரம்
நெஞ்சிலே நினைந்துகொண்டு நூறு உருச் செபிப்பிரேல்
பஞ்சமான பாதகங்கள் நூறு கோடி செய்யினும்
பஞ்சு போல் பறக்கும் என்று நான்மறைகள் பன்னுமே

#19
அண்ட வாசல் ஆயிரம் பிரசண்ட வாசல் ஆயிரம்
ஆறிரண்டு நூறு கோடி ஆன வாசல் ஆயிரம்
இந்த வாசல் ஏழை வாசல் ஏகபோகமான வாசல்
எம்பிரான் இருக்கும் வாசல் யாவர் காண வல்லரே

#20
சாமம் நாலு வேதமும் சகல சாத்திரங்களும்
சேமமாக ஓதினும் சிவனை நீர் அறிகிலீர்
காமநோயை விட்டு நீர் கருத்துளே உணர்ந்த பின்
ஊமையான காயமாய் இருப்பன் எங்கள் ஈசனே

#21
சங்கு இரண்டு தாரை ஒன்று சன்னல் பின்னல் ஆகையால்
மங்கி மாளுதே உலகில் மானிடங்கள் எத்தனை
சங்கு இரண்டையும் தவிர்த்து தாரை ஊத வல்லிரேல்
கொங்கை மங்கை_பங்கரோடு கூடி வாழல் ஆகுமே

#22
தங்கம் ஒன்று ரூபம் வேறு தன்மையானவாறு போல்
செங்கண் மாலும் ஈசனும் சிறந்து இருந்தது எம்முளே
விங்களங்கள் பேசுவார் விளங்குகின்ற மாந்தரே
எங்கும் ஆகி நின்ற நாமம் நாமம் இந்த நாமமே

#23
அஞ்செழுத்திலே பிறந்து அஞ்செழுத்திலே வளர்ந்து
அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள்
அஞ்செழுத்தில் ஓர் எழுத்து அறிந்து கூற வல்லிரேல்
அஞ்சல் அஞ்சல் என்று நாதன் அம்பலத்தில் ஆடுமே

#24
அஞ்சும் அஞ்சும் அஞ்சுமே அனாதியான அஞ்சுமே
பிஞ்சு பிஞ்சது அல்லவோ பித்தர்காள் பிதற்றுறீர்
நெஞ்சில் அஞ்சு கொண்டு நீர் நின்று தொக்க வல்லிரேல்
அஞ்சும் இல்லை ஆறும் இல்லை அனாதியானது ஒன்றுமே

#25
நீள வீடு கட்டுறீர் நெடும் கதவு சாத்துறீர்
வாழ வேணும் என்று அலோ மகிழ்ந்திருந்த மாந்தரே
காலன் ஓலை வந்த போது கையகன்று நிற்பிரே
ஆலம் உண்ட கண்டர் பாதம் அம்மை பாதம் உண்மையே

#26
வீடு எடுத்து வேள்விசெய்து மெய்யினோடு பொய்யுமாய்
மாடு மக்கள் பெண்டிர் சுற்றம் என்று இருக்கும் மாந்தர்காள்
நாடு பெற்ற நடுவர் கையில் ஓலை வந்து அழைத்திடில்
ஓடு பெற்ற அவ் விலை பெறாது காண் இவ் உடலமே

#27
ஓடம் உள்ள போது எலாம் ஓடியே உலாவலாம்
ஓடம் உள்ள போது எலாம் உறுதிபண்ணிக்கொள்ளலாம்
ஓடம் உடைந்த போது ஒப்பிலாத வெளியிலே
ஆடும் இல்லை கோலும் இல்லை யாரும் இல்லையானதே

#28
அண்ணலே அனாதியே அனாதி முன் அனாதியே
பெண்ணும் ஆணும் ஒன்று அலோ பிறப்பதற்கு முன் எலாம்
கண்ணில் ஆணின் சுக்கிலம் கருவில் ஓங்கும் நாளிலே
மண்ணுளோரும் விண்ணுளோரும் வந்தவாறு எங்ஙனே

#29
பண்டு நான் பறித்து எறிந்த பல் மலர்கள் எத்தனை
பாழிலே செபித்துவிட்ட மந்திரங்கள் எத்தனை
மிண்டராய்த் திரிந்த போது இரைத்த நீர்கள் எத்தனை
மீளவும் சிவாலயங்கள் சூழ வந்தது எத்தனை

#30
அண்டர்கோன் இருப்பிடம் அறிந்து உணர்ந்த ஞானிகாள்
பண்டு அறிந்த பான்மை-தன்னை யார் அறிய வல்லரே
விண்ட வேத பொருளை அன்றி வேறு கூற வகை இலா
கண்ட கோயில் தெய்வம் என்று கையெடுப்பது இல்லையே

#31
நெருப்பை மூட்டி நெய்யை விட்டு நித்தம் நித்தம் நீரிலே
விருப்பமொடு நீர் குளிக்கும் வேத வாக்கியம் கேளு-மின்
நெருப்பும் நீரும் உம்முளே நினைத்துக் கூற வல்லிரேல்
சுருக்கம் அற்ற சோதியைத் தொடர்ந்து கூடல் ஆகுமே

#32
பாட்டிலாத பரமனைப் பரலோக நாதனை
நாட்டிலாத நாதனை நாரி பங்கர் பாகனை
கூட்டி மெள்ள வாய் புதைத்து குணுகுணுத்த மந்திரம்
வேட்டகாரர் குசுகுசுப்பை கூப்பிடாக முடிந்ததே

#33
செய்ய தெங்கிலே இளநீர் சேர்ந்த காரணங்கள் போல்
ஐயன் வந்து என் உளம் புகுந்து கோயில்கொண்டனன்
ஐயன் வந்து என் உளம் புகுந்து கோயில்கொண்ட பின்
வையகத்தில் மாந்தர் முன்னம் வாய்திறப்பது இல்லையே

#34
மாறுபட்ட மணி துலக்கி வண்டின் எச்சில் கொண்டுபோய்
ஊறுபட்ட கல்லின் மீதே ஊற்றுகின்ற மூடரே
மாறுபட்ட தேவரும் அறிந்து நோக்கும் என்னையும்
கூறுபட்டுத் தீர்க்கவோ குருக்கள் பாதம் வைத்ததே

#35
கோயிலாவது ஏதடா குளங்களாவது ஏதடா
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே
கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே
ஆவதும் அழிவதும் இல்லை இல்லை இல்லையே

#36
செங்கலும் கருங்கலும் சிவந்த சாதிலிங்கமும்
செம்பிலும் தராவிலுஞ் சிவன் இருப்பன் என்கிறீர்
உம் மதம் அறிந்து நீர் உம்மை நீர் அறிந்த பின்
அம்பலம் நிறைந்த நாதர் ஆடல் பாடல் ஆகுமே

#37
பூசை பூசை என்று நீர் பூசைசெய்யும் பேதைகாள்
பூசையுள்ள தன்னிலே பூசை கொண்டது எவ்விடம்
ஆதி பூசை கொண்டதோ அனாதி பூசை கொண்டதோ
ஏது பூசை கொண்டதோ இன்னது என்று இயம்புமே

#38
இருக்கு நாலு வேதமும் எழுத்தை அற ஓதிலும்
பெருக்க நீறு பூசினும் பிதற்றிலும் பிரான் இரான்
உருக்கி நெஞ்சை உட்கலந்து உண்மை கூற வல்லிரேல்
சுருக்கம் அற்ற சோதியைத் தொடர்ந்து கூடல் ஆகுமே

#39
கலத்தில் வார்த்துவைத்த நீர் கடுத்த தீ முடுக்கினால்
கலத்திலே கரந்ததோ கடுத்த தீக் குடித்ததோ
நிலத்திலே கரந்ததோ நீள் விசும்பு கொண்டதோ
மனத்தின் மாயை நீக்கியே மனத்துளே கரந்ததே

#40
பறைச்சியாவது ஏதடா பணத்தியாவது ஏதடா
இறைச்சி தோல் எலும்பினும் இலக்கம் இட்டிருக்குதோ
பறைச்சி போகம் வேறதோ பணத்தி போகம் வேறதோ
பறைச்சியும் பணத்தியும் பகுத்துப் பாரும் உம்முளே

#41
வாயிலே குடித்த நீரை எச்சில் என்று சொல்லுறீர்
வாயிலே குதப்பு வேதம் எனப்படக் கடவதோ
வாயில் எச்சில் போக என்று நீர்-தனைக் குடிப்பீர்காள்
வாயில் எச்சில் போன வண்ணம் வந்திருந்து சொல்லுமே

#42
ஓதுகின்ற வேதம் எச்சில் உள்ள மந்திரங்கள் எச்சில்
மோதகங்கள் ஆனது எச்சில் பூதலங்கள் ஏழும் எச்சில்
மாது இருந்த விந்தும் எச்சில் மதியும் எச்சில் ஒளியும் எச்சில்
ஏதில் எச்சில் இல்லது இல்லை இல்லை இல்லை இல்லையே

#43
பிறப்பதற்கு முன் எலாம் இருக்குமாறு அது எங்ஙனே
பிறந்து மண் இறந்து போய் இருக்குமாறு அது எங்ஙனே
குறித்து நீர் சொலாவிடில் குறிப்பில்லாத மாந்தரே
அறுப்பனே செவி இரண்டும் அஞ்செழுத்து வாளினால்

#44
அம்பலத்தை அம்பு கொண்டு அசங்கு என்றால் அசங்குமோ
கம்பம் அற்ற பாற்கடல் கலங்கு என்றால் கலங்குமோ
இன்பம் அற்ற யோகியை இருளும் வந்து அணுகுமோ
செம்பொன் அம்பலத்துளே தெளிந்ததே சிவாயமே

#45
சித்தம் ஏது சிந்தை ஏது சிவன் ஏது சித்தரே
சத்தி ஏது சம்பு ஏது சாதிபேதம் அற்றது
முத்தி ஏது மூலம் ஏது மூல மந்திரங்கள் ஏது
வித்து இலாத வித்திலே இன்னது என்று இயம்புமே

#46
சித்தம் அற்று சிந்தை அற்று சீவன் அற்று நின்றிடும்
சத்தி அற்று சம்பு அற்று சாதிபேதம் அற்று நல்
முத்தி அற்று மூலம் அற்று மூல மந்திரங்களும்
வித்தை இத்தை ஈன்ற வித்தில் விளைந்ததே சிவாயமே

#47
சாதியாவது ஏதடா சலம் திரண்ட நீர் அலோ
பூத வாசல் ஒன்று அலோ பூதம் ஐந்தும் ஒன்று அலோ
காதில் வாளி காரை கம்பி பாடகம் பொன் ஒன்று அலோ
சாதிபேதம் ஓதுகின்ற தன்மை என்ன தன்மையே

#48
கறந்த பால் முலைப் புகா கடைந்த வெண்ணை மோர் புகா
உடைந்துபோன சங்கின் ஓசை உயிர்களும் உடல் புகா
விரிந்த பூ உதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம் புகா
இறந்தவர் பிறப்பது இல்லை இல்லை இல்லை இல்லையே

#49
தறையினில் கிடந்த போது அன்று தூமை என்றிலீர்
துறை அறிந்து நீர் குளித்தது அன்று தூமை என்றிலீர்
பறையறைந்து நீர் பிறந்தது அன்று தூமை என்றிலீர்
புரை இலாத ஈசரோடு பொருந்துமாறு அது எங்ஙனே

#50
தூமை தூமை என்று உளே துவண்டு அலையும் ஏழைகாள்
தூமையான பெண் இருக்க தூமை போனது எவ்விடம்
ஆமை போல மூழ்கி வந்து அனேக வேதம் ஓதுறீர்
தூமையும் திரண்டு உருண்டு சொற்குருக்கள் ஆனதே

#51
சொற்குருக்கள் ஆனதும் சோதி மேனி ஆனதும்
மெய்க்குருக்கள் ஆனதும் வேண பூசைசெய்வதும்
சத்குருக்கள் ஆனதும் சாத்திரங்கள் சொல்வதும்
மெய்க்குருக்கள் ஆனதும் திரண்டு உருண்ட தூமையே

#52
கைவ்வடங்கள் கொண்டு நீர் கண்சிமிட்டி நிற்கிறீர்
எவ்விடங்கள் கண்டு நீர் எண்ணியெண்ணிப் பார்க்கிறீர்
பொய் உணர்ந்த சிந்தையைப் பொருந்தி நோக்க வல்லிரேல்
மெய் கடந்தது உம்முளே விரைந்து கூடல் ஆகுமே

#53
ஆடு காட்டி வேங்கையை அகப்படுத்துமாறு போல்
மாடு காட்டி என்னை நீ மதிமயக்கல் ஆகுமோ
கோடு காட்டி யானையைக் கொன்று உரித்த கொற்றவா
வீடு காட்டி என்னை நீ வெளிப்படுத்த வேணுமே

#54
இடது கண்கள் சந்திரன் வலது கண்கள் சூரியன்
இடக்கை சங்கு சக்கரம் வலக்கை சூல மான் மழு
எடுத்த பாதம் நீள் முடி எண் திசைக்கும் அப்புறம்
உடல் கடந்து நின்ற மாயம் யாவர் காண வல்லரோ

#55
நாழி அப்பும் நாழி உப்பும் நாழியானவாறு போல்
ஆழியோனும் ஈசனும் அமர்ந்து வாழ்ந்திருந்திடும்
ஏறில் ஏறும் ஈசனும் இயங்கு சக்ரதரனையும்
வேறு கூறு பேசுவார் வீழ்வர் வீண் நரகிலே

#56
தில்லை நாயகன் அவன் திருவரங்கனும் அவன்
எல்லையான புவனமும் ஏக முத்தியானவன்
பல்லும் நாவும் உள்ள பேர் பகுந்து கூறி மகிழுவார்
வல்லபங்கள் பேசுவார் வாய் புழுத்து மாய்வரே

#57
எத்திசைக்கும் எவ்வுயிர்க்கும் எங்கள் அப்பன் எம்பிரான்
முத்தியான வித்துளே முளைத்து எழும் தவச் சுடர்
சித்தமும் தெளிந்து வேத கோயிலும் திறந்த பின்
அத்தன் ஆடல் கண்ட பின் அடங்கல் ஆடல் காணுமே

#58
உற்ற நூல்கள் உம்முளே உணர்ந்துணர்ந்து பாடுவீர்
பற்றறுத்து நின்று நீர் பராபரங்கள் எய்துவீர்
செற்ற மாவை உள்ளரைச் செறுக்கறுத்து இருத்திடில்
சுற்றமாக உம்முளே சோதி என்றும் வாழுமே

#59
போதடா எழுந்ததும் புனலதாகி வந்ததும்
தாதடா புகுந்ததும் தானடா விளைந்ததும்
ஓதடா அஞ்சுமூன்றும் ஒன்றதான வக்கரம்
ஓதடா இராமராம ராம என்னும் நாமமே

#60
அகாரம் என்ற அக்கரத்துள் அவ்வு வந்து உதித்ததோ
உகாரம் என்ற அக்கரத்தில் உவ்வு வந்து உதித்ததோ
அகாரமும் உகாரமுஞ் சிகாரம் இன்றி நின்றதோ
விகாரம் அற்ற யோகிகாள் விரித்து உரைக்க வேணுமே

#61
அறத் திறங்களுக்கும் நீ அகண்டம் எண் திசைக்கும் நீ
திறத் திறங்களுக்கும் நீ தேடுவார்கள் சிந்தை நீ
உறக்கம் நீ உணர்வு நீ உட்கலந்த சோதி நீ
மறக்கொணாத நின் கழல் மறப்பினும் குடிகொளே

#62
அண்டம் நீ அகண்டம் நீ ஆதிமூலமான நீ
கண்டம் நீ கருத்தும் நீ காவியங்களான நீ
புண்டரீக மற்றுளே புணருகின்ற புண்ணியர்
கொண்ட கோலமான நேர்மை கூர்மை என்ன கூர்மையே

#63
மை அடர்ந்த கண்ணினார் மயங்கிடும் மயக்கிலே
ஐ இறந்துகொண்டு நீங்கள் அல்லலுற்று இருப்பிர்காள்
மெய் அடர்ந்த சிந்தையால் விளங்கு ஞானம் எய்தினால்
உய் அடர்ந்துகொண்டு நீங்கள் ஊழிகாலம் வாழ்விரே

#64
கரு இருந்து வாசலால் கலங்குகின்ற ஊமைகாள்
குரு இருந்த சொன்ன வார்த்தை குறித்து நோக்க வல்லிரேல்
உரு இலங்கு மேனி ஆகி உம்பர் ஆகி நின்று நீர்
திரு இலங்கு மேனி ஆகிச் சென்று கூடல் ஆகுமே

#65
தீர்த்தமாட வேணும் என்று தேடுகின்ற தீனர்காள்
தீர்த்தமாடல் எவ்விடம் தெளிந்த நீர் இயம்புவீர்
தீர்த்தமாக உம்முளே தெளிந்து நீர் இருந்த பின்
தீர்த்தமாக உள்ளதும் சிவாய அஞ்செழுத்துமே

#66
கழுத்தையும் நிமிர்த்தி நல்ல கண்ணையும் விழித்து நீர்
பழுத்தவாய் விழுந்துபோன பாவம் என்ன பாவமே
அழுத்தமான வித்திலே அனாதியாய் இருப்பது ஓர்
எழுத்திலா எழுத்திலே இருக்கலாம் இருந்துமே

#67
கண்டு நின்ற மாயையும் கலந்து நின்ற பூதமும்
உண்டு உறங்குமாறு நீர் உணர்ந்திருக்க வல்லிரேல்
பண்டை ஆறும் ஒன்றுமாய்ப் பயந்த வேத சுத்தராய்
அண்டமுத்தி ஆகி நின்ற ஆதிமூலம் ஆவிரே

#68
ஈன்ற வாசலுக்கு இரங்கி எண்ணிறந்து போவிர்காள்
கான்ற வாழை மொட்டு அலர்ந்த காரணம் அறிகிலீர்
நான்ற வாசலைத் திறந்து நாடி நோக்க வல்லிரேல்
தோன்றும் மாயை விட்டொழிந்து சோதி வந்து தோன்றுமே

#69
உழலும் வாசலுக்கு இரங்கி ஊசலாடும் ஊமைகாள்
உழலும் வாசலைத் துறந்து உண்மை சேர எண்ணிலிர்
உழலும் வாசலைத் துறந்து உண்மை நீர் உணர்ந்த பின்
உழலும் வாசல் உள் இருந்த உண்மைதானும் ஆவிரே

#70
மூலநாடி-தன்னிலே முளைத்து எழுந்த சோதியை
நாலு நாழி உம்முளே நாடியே இருந்த பின்
பாலன் ஆகி வாழலாம் பரப்பிரமம் ஆகலாம்
ஆலம் உண்ட கண்டர் ஆணை அம்மை ஆணை உண்மையே

#71
இருக்க வேணும் என்ற போது இருக்கலாய் இருக்குமோ
மரிக்க வேணும் என்று அலோ மண்ணுளே படைத்தனர்
சுருக்கம் அற்ற தம்பிரான் சொன்ன அஞ்செழுத்தையும்
மரிக்கும் முன் வணங்கிடீர் மருந்து என் பதம் கெடீர்

#72
அம்பத்தொன்றில் அக்கரம் அடங்கல் ஓர் எழுத்துமோ
விண் பரந்த மந்திரம் வேதம் நான்கும் ஒன்று அலோ
விண் பரந்த மூல அஞ்செழுத்து உளே முளைத்ததே
அங்க லிங்க பீடமாய் அமர்ந்ததே சிவாயமே

#73
சிவாயம் என்ற அட்சரம் சிவன் இருக்கும் அட்சரம்
உபாயம் என்று நம்புவதற்கு உண்மையான அட்சரம்
கபாடம் அற்ற வாசலைக் கடந்துபோன வாயுவை
உபாயமிட அழைக்குமே சிவாய அஞ்செழுத்துமே

#74
உருவும் அல்ல வெளியும் அல்ல ஒன்றை மேவி நின்றது அல்ல
மருவும் அல்ல சொந்தம் அல்ல மற்றது அல்ல அற்றது அல்ல
பெரியது அல்ல சிறியது அல்ல பேசலான தானும் அல்ல
உரியது ஆகி நின்ற நேர்மை யாவர் காண வல்லரே

#75
ஆத்துமா வனாதியோ ஆத்துமா அனாதியோ
மீத்திருந்த ஐம்பொறி புலன்களும் அனாதியோ
தாக்கம் மிக்க நூல்களும் சதாசிவமும் அனாதியோ
வீக்க வந்த யோகிகாள் விரைந்து உரைக்க வேணுமே

#76
அறிவிலே பிறந்திருந்த ஆகமங்கள் ஓதுறீர்
நெறியிலே மயங்குகின்ற நேர்மை ஒன்று அறிகிலீர்
உறியிலே தயிர் இருக்க ஊர் புகுந்து வெண்ணைய் தேடும்
அறிவிலாத மாந்தரோடு அணுகுமாறு அது எங்ஙனே

#77
இருவர் அங்கமும் பொருந்தி என்பு உருகி நோக்கிலீர்
உரு அரங்கம் ஆகி நின்ற உண்மை ஒன்றை ஓர்கிலீர்
கரு அரங்கம் ஆகி நின்ற கற்பனை கடந்த பின்
திருவரங்கம் என்று நீர் தெளிந்திருக்க வல்லிரே

#78
கருக்குழியில் ஆசையாய்க் காதலுற்று நிற்கிறீர்
குருக்கிடுக்கும் ஏழைகாள் குலாவுகின்ற பாவிகாள்
திருத் துருத்தி மெய்யினால் சிவந்த அஞ்செழுத்தையும்
உருக் கழிக்கும் உம்மையும் உணர்ந்துணர்ந்துகொள்ளுமே

#79
மண்ணிலே பிறக்கவும் வழக்கலாது உரைக்கவும்
எண்ணிலாத கோடி தேவர் என்னது உன்னது என்னவும்
கண்ணிலே கண்மணி இருக்கக் கண் மறைந்தவாறு போல்
எண்_இல் கோடி தேவரும் இதின்-கணால் விழிப்பதே

#80
மண்கலம் கவிழ்ந்த போது வைத்துவைத்து அடுக்குவார்
வெண்கலம் கவிழ்ந்த போது வேணும் என்று பேணுவார்
நண்_கலம் கவிழ்ந்த போது நாறும் என்று போடுவார்
எண் கலந்து நின்ற மாயம் என்ன மாயம் ஈசனே

#81
மிக்க செல்வம் நீர் படைத்த விறகு மேவிப் பாவிகாள்
விறகுடன் கொளுத்தி மேனி வெந்துபோவது அறிகிலீர்
மக்கள் பெண்டிர் சுற்றம் என்று மாயை காணும் இவை எல்லாம்
மறலி வந்து அழைத்த போது வந்து கூடல் ஆகுமோ

#82
ஒக்க வந்து மாதுடன் செறிந்து இடத்தில் ஒழுகியே
ஒருவர் ஆகி இருவர் ஆகி இளமை பெற்ற ஊரிலே
அக்கு அணிந்து கொன்றை சூடி அம்பலத்தில் ஆடுவார்
அஞ்செழுத்தை ஓதிடில் அனேக பாவம் அகலுமே

#83
மாடு கன்று செல்வமும் மனைவி மைந்தர் மகிழவே
மாடமாளிகைப் புறத்தில் வாழுகின்ற நாளிலே
ஓடிவந்து காலதூதர் சடுதியாக மோதவே
உடல் கிடந்து உயிர் கழன்ற உண்மை கண்டு உணர்கிலீர்

#84
பாடுகின்ற உம்பருக்கு ஆடு பாதம் உன்னியே
பழுதிலாத கன்ம கூட்டம் இட்ட எங்கள் பரமனே
நீடு செம்பொன் அம்பலத்துள் ஆடுகொண்ட அப்பனே
நீலகண்ட காளகண்ட நித்யகல்லியாணனே

#85
கானம் அற்ற காட்டகத்தில் வெந்து எழுந்த நீறு போல்
ஞானமுற்ற நெஞ்சகத்தில் வல்லது ஏதும் இல்லையே
ஊனம் அற்ற சோதியோடு உணர்வு சேர்ந்து அடக்கினால்
தேன் அகத்தின் ஊறல் போல் தெளிந்ததே சிவாயமே

#86
பருகி ஓடி உம்முளே பறந்து வந்த வெளி-தனை
நிரவியே நினைந்து பார்க்கில் நின்மலம் அது ஆகுமே
உருகி ஓடி எங்குமாய் ஓடும் சோதி தன் உளே
கருதடா உனக்கு நல்ல காரணம் அது ஆகுமே

#87
சோதி பாதி ஆகி நின்று சுத்தமும் பலித்து வந்து
போதியாத போதகத்தை ஓதுகின்ற பூரணா
வீதியாக ஓடிவந்து விண்ணடியின் ஊடுபோய்
ஆதிநாதன் நாதன் என்று அனந்த காலம் உள்ளதே

#88
இறைவனால் எடுத்த மாடத் தில்லை அம்பலத்திலே
அறிவினால் அடுத்த காயம் அஞ்சினால் அமர்ந்ததே
கருவில் நாதம் உண்டு போய் கழன்ற வாசல் ஒன்பதும்
ஒருவராய் ஒருவர் கோடி உள்ளுளே அமர்ந்ததே

#89
நெஞ்சிலே இருந்திருந்து நெருங்கி ஓடும் வாயுவை
அன்பினால் இருந்து நீர் அருகு இருத்த வல்லிரேல்
அன்பர் கோயில் காணலாம் அகலும் எண் திசைக்குளே
தும்பி ஓடி ஓடியே சொல்லடா சுவாமியே

#90
தில்லையை வணங்கி நின்ற தெண்டனிட்ட வாயுவே
எல்லையைக் கடந்து நின்ற ஏகபோக மாய்கையே
எல்லையைக் கடந்து நின்ற சொர்க்கலோக வெளியிலே
வெள்ளையும் சிவப்பும் ஆகி மெய் கலந்து நின்றதே

#91
உடம்பு உயிர் எடுத்ததோ உயிர் உடம்பு எடுத்ததோ
உடம்பு உயிர் எடுத்த போது உருவம் ஏது செப்புவீர்
உடம்பு உயிர் எடுத்த போது உயிர் இறப்பது இல்லையே
உடம்பு மெய்ம்மறந்து கண்டு உணர்ந்து ஞானம் ஓதுமே

#92
அ எனும் எழுத்தினால் அகண்டம் ஏழும் ஆகினாய்
உ எனும் எழுத்தினால் உருத்தரித்து நின்றனை
ம எனும் எழுத்தினால் மயங்கினார்கள் வையகம்
அவ்வும் உவ்வும் மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே

#93
மந்திரங்கள் உண்டு நீர் மயங்குகின்ற மானிடர்
மந்திரங்களாவது மறத்தில் ஊறல் அன்று காண்
மந்திரங்களாவது மதத்து எழுந்த வாயுவை
மந்திரத்தை உண்டவர்க்கு மானம் ஏதும் இல்லையே

#94
என்னவென்று சொல்லுவேன் இலக்கணம் இலாததை
பன்னுகின்ற செந்தமிழ் பதம் கடந்த பண்பு என
மின் அகத்தில் மின் ஒடுங்கி மின் அது ஆனவாறு போல்
என் அகத்துள் ஈசனும் யானும் அல்லது இல்லையே

#95
ஆல வித்தில் ஆல் ஒடுங்கி ஆலம் ஆனவாறு போல்
வேறு வித்தும் இன்றியே விளைந்து போகம் எய்திடீர்
ஆறு வித்தை ஓர்கிலீர் அறிவிலாத மாந்தரே
பாரும் இத்தை உம்முளே பரப்பிரம்மம் ஆவிரே

#96
அ உதித்த மந்திரம் அகாரமாய் உகாரமாய்
எவ்வெழுத்து அறிந்தவர்க்கு எழுபிறப்பு அது இங்கு இலை
ச உதித்த மந்திரத்தை தற்பரத்து இருத்தினால்
அவ்வும் உவ்வும் மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே

#97
ந இரண்டு காலதாய் நவின்ற ம வயிறதாய்
சி இரண்டு தோளதாய் சிறந்த வவ்வு வாயதாய்
ய இரண்டு கண்ணதாய் அமர்ந்து நின்ற நேர்மையில்
செவ்வை ஒத்து நின்றதே சிவாயம் அஞ்செழுத்துமே

#98
இரண்டும் ஒன்று மூலமாய் இயங்கு சக்கரத்துளே
சுருண்டு மூன்று வளையமாய்ச் சுணங்கு போல் கிடந்த தீ
முரண்டு எழுந்த சங்கின் ஓசை மூலநாடி ஊடுபோய்
அரங்கன் பட்டணத்திலே அமர்ந்ததே சிவாயமே

#99
கடலிலே திரியும் ஆமை கரையில் ஏறி முட்டையிட்டுக்
கடலிலே திரிந்த போது ரூபமானவாறு போல்
மடல் உளே இருக்கும் எங்கள் மணி அரங்க சோதியை
உடல் உளே நினைத்து நல்ல உண்மையானது உண்மையே

#100
மூன்று மண்டலத்தினும் முட்டி நின்ற தூணிலும்
நான்ற பாம்பின் வாயிலும் நவின்று எழுந்த அட்சரம்
ஈன்ற தாயும் அப்பனும் எடுத்துரைத்த மந்திரம்
தோன்றும் ஓர் எழுத்து உளே சொல்ல எங்கும் இல்லையே

#101
மூன்று மூன்று மூன்றுமே மூவர் தேவர் தேடிடும்
மூன்றும் அஞ்சும் எழுத்துமாய் முழங்கும் அவ் எழுத்து உளே
ஈன்ற தாயும் அப்பனும் இயங்குகின்ற நாதமும்
தோன்றும் மண்டத்திலே சொல்ல எங்கும் இல்லையே

#102
சோறுகின்ற பூதம் போல் சுணங்கு போல் கிடந்த நீர்
நாறுகின்ற கும்பியில் நவின்று எழுந்த மூடரே
சீறுகின்ற ஐவரைச் சிணுக்கறுக்க வல்லிரேல்
ஆறு கோடி வேணியார் ஆறில் ஒன்றில் ஆவிரே

#103
வட்டம் என்று உம்முளே மயக்கிவிட்டது இவ் வெளி
அட்ட அக்கரத்துளே அடக்கமும் ஒடுக்கமும்
எட்டும் எட்டும் எட்டுமாய் இயங்கு சக்கரத்துளே
எட்டலாம் உதித்தது எம்பிரானை நான் அறிந்த பின்

#104
பேசுவானும் ஈசனே பிரமஞானம் உம்முளே
ஆசையான ஐவரும் அலைத்து அலைகள் செய்கிறார்
ஆசையான ஐவரை அடக்கி ஓர் எழுத்திலே
பேசிடாது இருப்பிரேல் நாதன் வந்து ஒலிக்குமே

#105
நமசிவாய அஞ்செழுத்தும் நல்கும் மேல்நிலைகளும்
நமசிவாய அஞ்சில் அஞ்சும் புராணமான மாயையும்
நமசிவாய அஞ்செழுத்து நம்முளே இருக்கவே
நமசிவாய உண்மையை நன்கு உரைசெய் நாதனே

#106
பரம் உனக்கு எனக்கு வேறு பயம் இலை பராபரா
கரம் எடுத்து நித்தலும் குவித்திடக் கடவதும்
சிரம் உருகி ஆர்த்தலும் சிவபிரானே என்னலும்
உரம் எனக்கு நீ அளித்த ஓம் நமசிவாயமே

#107
பச்சை மண் பதுப்பிலே புழுப் பதிந்த வேட்டுவன்
நித்தமும் நினைந்திட நினைத்த வண்ணம் ஆயிடும்
பச்சை மண் இடிந்துபோய் பறந்த தும்பி ஆயிடும்
பித்தர்காள் அறிந்து கொள்க பிரான் இருந்த கோலமே

#108
ஒளியதான காசி மீது வந்து தங்குவோர்க்கு எலாம்
வெளியதான சோதி மேனி விசுவநாதனானவன்
தெளியும் மங்கை உடன் இருந்து செப்புகின்ற தாரகம்
எளியதோர் இராமராம ராம இந்த நாமமே

#109
விழியினோடு புனல் விளைந்த இல்ல அல்லி யோனியும்
வெளியிலே பிதற்றலாம் விளைவு நின்றது இல்லையே
வெளி பரந்த தேகமும் வெளிக்குள் மூலவித்தையும்
தெளியும் வல்ல ஞானிகள் தெளிந்திருத்தல் திண்ணமே

#110
ஓம் நமசிவாயமே உணர்ந்து மெய் உணர்ந்த பின்
ஓம் நமசிவாயமே உணர்ந்து மெய் தெளிந்த பின்
ஓம் நமசிவாயமே உணர்ந்து மெய் உணர்ந்த பின்
ஓம் நமசிவாயமே உட்கலந்து நிற்குமே

#111
அல்லல் வாசல் ஒன்பது மறுத்து அடைந்த வாசலும்
சொல்லு வாசல் ஓர் ஐந்தும் சொம்மி விம்மி நின்றதும்
நல்ல வாசலைத் திறந்து ஞான வாசல் ஊடுபோய்
எல்லை வாசல் கண்டவர் இனிப் பிறப்பது இல்லையே

#112
ஆதியானது ஒன்றுமே அனேகனேக ரூபமாய்
சாதிபேதமாய் எழுந்து சர்வ சீவன் ஆன பின்
ஆவியோடு ஆடுகின்ற மீண்டும் அந்த சென்மமாம்
சோதியான ஞானியர்க்குச் சுத்தமாய் இருப்பரே

#113
மலர்ந்த தாது மூலமாய் வையகம் மலர்ந்ததும்
மலர்ந்த பூ மயக்கம் வந்து அடுத்ததும் விடுத்ததும்
புலன்கள் ஐந்தும் பொறி கலங்கி பூமி மேல் விழுந்ததும்
இலம் கலங்கி நின்ற மாயம் என்ன மாயம் ஈசனே

#114
பார் அடங்க உள்ளதும் பரந்த வானம் உள்ளதும்
ஓர் இடமும் இன்றியே ஒன்றி நின்ற ஒண் சுடர்
ஆரிடமும் இன்றியே அகத்துளும் புறத்துளும்
சீரிடங்கள் கண்டவர் சிவன் தெரிந்த ஞானியே

#115
மண் கிடாரமே சுமந்து மலையுள் ஏறி மறுகுறீர்
எண்படாத காரியங்கள் இயலும் என்று கூறுகிறீர்
தம்பிரானை நாள்கள்-தோறும் தரையிலே தலைபடக்
கும்பிடாத மாந்தரோடு கூடி வாழ்வது எங்ஙனே

#116
நாவி தூள் அழிந்ததும் நலம் குலம் அழிந்ததும்
மேவு தேர் அழிந்ததும் விசாரமும் குறைந்ததும்
பாவிகாள் இது என்ன மாயம் வாமநாடு பூசலாய்
ஆவியார் அடங்கினால் ஐவரும் அடங்குவார்

#117
வீடெடுத்து வேள்விசெய்து மெய்யரோடு பொய்யுமால்
மாடு மக்கள் பெண்டிர் சுற்றம் என்று இருக்கும் மாந்தர்காள்
நாடு பெற்ற நண்பர் கையில் ஓலை வந்து அழைத்த போது
ஆடு பெற்றது அவ் விலைபெறாது காணும் இவ் உடல்

#118
இல்லை இல்லை இல்லை என்று இயம்புகின்ற ஏழைகாள்
இல்லை என்று நின்றது ஒன்றை இல்லை என்னல் ஆகுமோ
இல்லை அல்ல ஒன்றும் அல்ல இரண்டும் ஒன்றி நின்றதை
எல்லை கண்டுகொண்ட பேர் இனிப் பிறப்பது இல்லையே

#119
கார கார கார கார காவல் ஊழி காவலன்
போர போர போர போர போரில் நின்ற புண்ணியன்
மார மார மார மார மரங்கள் ஏழும் எய்த ஸ்ரீராம
ராம ராம ராம ராம என்னும் நாமமே

#120
நீடு பாரிலே பிறந்து நேயமான மாயந்தான்
வீடுபேறு இது என்ற போது வேண்டி இன்பம் வேண்டுமோ
பாடி நாலு வேதமும் பாரிலே படர்ந்ததோ
நாடு ராம ராம ராம ராம என்னும் நாமமே

#121
உயிரும் நன்மையால் உடலெடுத்து வந்து இருந்திடும்
உயிர் உடம்பு ஒழிந்த போது ரூபரூபம் ஆயிடும்
உயிர் சிவத்தின் மாய்கை ஆகி ஒன்றையொன்று கொன்றிடும்
உயிரும் சத்தி மாய்கை ஆகி ஒன்றையொன்று தின்னுமே

#122
நெட்டெழுத்து வட்டமோ நிறைந்த அல்லி யோனியும்
நெட்டெழுத்தில் வட்டம் ஒன்று நின்றது ஒன்றும் கண்டிலேன்
குற்றெழுத்தில் உற்றது என்று கொம்பு கால் குறித்திடில்
நெட்டெழுத்தில் வட்டம் ஒன்றில் நேர்படான் நம் ஈசனே

#123
விண்ணில் உள்ள தேவர்கள் அறியொணாத மெய்ப்பொருள்
கண்ணில் ஆணியாகவே கலந்து நின்றது எம்பிரான்
மண்ணிலாம் பிறப்பு அறுத்து மலர் அடிகள் வைத்த பின்
அண்ணலாரும் எம்முளே அமர்ந்து வாழ்வது உண்மையே

#124
விண் கடந்து நின்ற சோதி மேலை வாசலைத் திறந்து
கண் களிக்க உள்ளுளே கலந்து புக்கு இருந்த பின்
மண் பிறந்த மாயமும் மயக்கமும் மறந்துபோய்
எண் கலந்த ஈசனோடு இசைந்திருப்பது உண்மையே

#125
மூலமான மூச்சதில் மூச்சு அறிந்து விட்ட பின்
நாலு நாளு முன்னில் ஒரு நாட்டம் ஆகி நாட்டிடில்
பாலன் ஆகி நீடலாம் பரப்பிரம்மம் ஆகலாம்
ஆலம் உண்ட கண்டர் ஆணை அம்மை ஆணை உண்மையே

#126
மின் எழுந்து மின் பரந்து மின் ஒடுங்குமாறு போல்
என்னுள் நின்ற என்னுள் ஈசன் என்னுளே அடங்குமே
கண்ணுள் நின்ற கண்ணில் நேர்மை கண் அறிவிலாமையால்
என்னுள் நின்ற என்னை அன்றி யான் அறிந்தது இல்லையே

#127
இருக்கலாம் இருக்கலாம் அவனியில் இருக்கலாம்
அரிக்கு மால் பிரமனும் அகண்டம் ஏழ் அகற்றலாம்
கருக்கொளாத குழியிலே கால் இலாத கண்ணிலே
நெருப்பறை திறந்த பின்பு நீயும் நானும் ஈசனே

#128
ஏகபோகம் ஆகியே இருவரும் ஒருவராய்
போகமும் புணர்ச்சியும் பொருந்துமாறு அது எங்ஙனே
ஆகிலும் அழகிலும் அதன்-கண் நேயம் ஆன பின்
சாகிலும் பிறக்கிலும் இல்லை இல்லை இல்லையே

#129
வேதம் நாலும் பூதமாய் விரவும் அங்கி நீரதாய்
பாதமே இலிங்கமாய்ப் பரிந்து பூசைபண்ணினால்
காதில் நின்று கடை திறந்து கட்டறுத்த ஞானிகள்
ஆதி அந்தமும் கடந்தது அரிய வீடது ஆகுமே

#130
பருத்தி நூல் முறுக்கிவிட்டு பஞ்சி ஓதும் மாந்தரே
துருத்திநூல் முறுக்கிவிட்டு துன்பம் நீங்க வல்லிரேல்
கருத்தில் நூல் கலைபடும் கால நூல் கழிந்திடும்
திருத்தி நூல் கரவறும் சிவாய அஞ்செழுத்துமே

#131
சாவதான தத்துவச் சடங்குசெய்யும் ஊமைகாள்
தேவர் கல்லும் ஆவரோ சிரிப்பது அன்றி என் செய்வேன்
மூவராலும் அறியொணாத முக்கணன் முதல் கொழுந்து
காவலாக உம்முளே கலந்திருப்பன் காணுமே

#132
காலை மாலை நீரிலே முழுகும் மந்த மூடர்காள்
காலை மாலை நீரிலே கிடந்த தேரை என் பெறும்
காலமே எழுந்திருந்து கண்கள் மூன்றில் ஒன்றினால்
மூலமே நினைப்பிராகில் முத்தி சித்தியாகுமே

#133
எங்கள் தேவர் உங்கள் தேவர் என்று இரண்டு தேவரோ
இங்குமங்குமாய் இரண்டு தேவரே இருப்பரோ
அங்குமிங்குமாகி நின்ற ஆதிமூர்த்தி ஒன்று அலோ
வங்கவாரம் சொன்ன பேர்கள் வாய் புழுத்து மாள்வரே

#134
அறையறை இடைக்கிட அன்று தூமை என்கிறீர்
முறை அறிந்து பிறந்தபோதும் அன்று தூமை என்கிறீர்
துறை அறிந்த நீர் குளித்தால் அன்று தூமை என்கிறீர்
பொறை இலாத நீசரோடும் பொருந்துமாறு அது எங்ஙனே

#135
சத்தம் வந்த வெளியிலே சலம் இருந்து வந்ததும்
மத்தமாகி நீரிலே துவண்டு மூழ்கும் மூடரே
சுத்தம் ஏது சுட்டது ஏது தூய்மை கண்டு நின்றது ஏது
பித்த காயம் உற்றது ஏது பேதம் ஏது போதமே

#136
மாதமாதம் தூமைதான் மறந்துபோன தூமைதான்
மாதம் அற்று நின்று அலோ வளர்ந்து ரூபம் ஆனது
நாதம் ஏது வேதம் ஏது நல் குலங்கள் ஏதடா
வேதம் ஓதும் வேதியர் விளைந்தவாறும் பேசடா

#137
தூமை அற்று நின்று அலோ சுதீபம் அற்று நின்றது
ஆண்மை அற்று நின்று அலோ வழக்கம் அற்று நின்றது
ஆண்மை அற்று ஆண்மை அற்று சஞ்சலங்கள் அற்று நின்ற
தூமை தூமை அற்ற காலம் சொல்லும் அற்று நின்றதே

#138
ஊறி நின்ற தூமையை உறைந்து நின்ற சீவனை
வேறு பேசி மூடரே விளைந்தவாறு அது ஏதடா
நாறுகின்ற தூமை அல்லோ நல் குலங்கள் ஆவன
சீறுகின்ற மூடனே அத் தூமை நின்ற கோலமே

#139
தூமை கண்டு நின்ற பெண்ணின் தூமைதானும் ஊறியே
சீமை எங்கும் ஆணும் பெண்ணும் சேர்ந்து உலகம் கண்டதே
தூமைதானும் ஆசையாய்த் துறந்து இருந்த சீவனை
தூமை அற்று கொண்டிருந்த தேசம் ஏது தேசமே

#140
வேணும் வேணும் என்று நீர் வீண் உழன்று தேடுவீர்
வேணும் என்று தேடினாலும் உள்ளதல்லது இல்லையே
வேணும் என்று தேடுகின்ற வேட்கையைத் துறந்து பின்
வேணும் என்ற அப் பொருள் விரைந்து காணல் ஆகுமே

#141
சிட்டர் ஓது வேதமும் சிறந்த ஆகமங்களும்
நட்ட காரணங்களும் நவின்ற மெய்ம்மை நூல்களும்
கட்டிவைத்த போதகம் கதைக்கு உகந்த பித்து எலாம்
பெட்டதாய் முடிந்ததே பிரானை யான் அறிந்த பின்

#142
நூறு கோடி ஆகமங்கள் நூறு கோடி மந்திரம்
நூறு கோடி நாள் இருந்தும் ஓதினால் அதன் பயன்
ஆறும் ஆறும் ஆறுமாய் அகத்தில் ஓர் எழுத்துமாய்
ஏறு சீர் எழுத்தை ஓத ஈசன் வந்து பேசுமோ

#143
காலை மாலை-தம்மிலே கலந்து நின்ற காலனார்
மாலை காலையாய்ச் சிவந்த மாயம் ஏது செப்பிடீர்
காலை மாலை அற்று நீர் கருத்திலே ஒடுங்கினால்
காலை மாலை ஆகி நின்ற காலன் இல்லை இல்லையே

#144
எட்டு மண்டலத்துளே இரண்டு மண்டலம் வளைத்து
இட்ட மண்டலத்திலே எண்ணி ஆறு மண்டலம்
தொட்ட மண்டலத்திலே தோன்றி மூன்று மண்டலம்
நட்ட மண்டலத்திலே நாதன் ஆடி நின்றதே

#145
நாலிரண்டு மண்டலத்துள் நாதன் நின்றது எவ்விடம்
கால் இரண்டு மூலநாடி கண்டது அங்கு உருத்திரன்
சேர் இரண்டு கண் கலந்து திசைகள் எட்டு மூடியே
மேல் இரண்டு தான் கலந்து வீசி ஆடி நின்றதே

#146
அம்மையப்பன் அப்பு நீர் அறிந்ததே அறிகிலீர்
அம்மையப்பன் அப்பு நீர் அரி அயன் அரனுமாய்
அம்மையப்பன் அப்பு நீர் ஆதி ஆதி ஆன பின்
அம்மையப்பன் அன்னை அன்றி யாரும் இல்லை ஆனதே

#147
உருத்தரிப்பதற்கு முன் உடல் கலந்தது எங்ஙனே
கருத்தரிப்பதற்கு முன் காரணங்கள் எங்ஙனே
பொருத்திவைத்த போதமும் பொருந்துமாறு எங்ஙனே
குருத் திருத்தி வைத்த சொல் குறித்து உணர்ந்துகொள்ளுமே

#148
ஆதி உண்டு அந்தம் இல்லை அன்றி நாலு வேதம் இல்லை
சோதி உண்டு சொல்லும் இல்லை சொல் இறந்தது ஏதும் இல்லை
ஆதியான மூவரில் அமர்ந்து இருந்த வாயுவும்
ஆதி அன்று தன்னையும் ஆர் அறிவது அண்ணலே

#149
புலால் புலால் புலாலது என்று பேதமைகள் பேசுறீர்
புலாலை விட்டு எம்பிரான் பிரிந்து இருந்தது எங்ஙனே
புலாலுமாய் பிதற்றுமாய் பேர் உலாவும் தானுமாய்
புலாலிலே முளைத்து எழுந்த பித்தன் காணும் அத்தனே

#150
உதிரமான பால் குடித்து ஒக்க நீர் வளர்ந்ததும்
இரதமாய் இருந்ததொன்று இரண்டுபட்டது என்னலாம்
மதிரமாக விட்டது ஏது மாமிசப் புலாலது என்று
சதிரமாய் வளர்ந்தது ஏது சைவரான மூடரே

#151
உண்ட கல்லை எச்சில் என்று உள் எறிந்து போடுறீர்
கண்ட எச்சில் கை அலோ பரமனுக்கு ஏறுமோ
கண்ட எச்சில் கேளடா கலந்த பாணி அப்பிலே
கொண்ட சுத்தம் ஏதடா குறிப்பிலாத மூடரே

#152
ஓதிவைத்த நூல்களும் உணர்ந்து கற்ற கல்வியும்
மாது மக்கள் சுற்றமும் மறக்க வந்த நித்திரை
ஏது புக்கு ஒளித்ததோ எங்கும் ஆகி நின்றதோ
சோதி புக்கு ஒளித்த மாயம் சொல்லடா சுவாமியே

#153
ஈண் எருமையின் கழுத்தில் இட்ட பொட்டணங்கள் போல்
மூணு நாலு சீலையில் முடிந்து அவிழ்க்கும் மூடர்காள்
மூணு நாலு லோகமும் முடிவிலாத மூர்த்தியை
ஊணி ஊணி நீர் முடிந்த உண்மை என்ன உண்மையே

#154
சாவல் நாலு குஞ்சு அது அஞ்சு தாய் அது ஆனவாறு போல்
காயமான கூட்டிலே கலந்து சண்டை கொள்ளுதே
கூவமான கிழ நரி அக் கூட்டிலே புகுந்த பின்
சாவல் நாலு குஞ்சு அது அஞ்சும் தாம் இறந்துபோனதே

#155
மூலமாம் குளத்திலே முளைத்து எழுந்த கோரையை
காலமே எழுந்திருந்து நாலு கட்டு அறுப்பிரேல்
பாலன் ஆகி வாழலாம் பரப்பிரமம் ஆகலாம்
ஆலம் உண்ட கண்டர் பாதம் அம்மை பாதம் உண்மையே

#156
செம்பினில் களிம்பு வந்த சீதரங்கள் போலவே
அம்பினில் எழுதொணாத அணி அரங்க சோதியை
வெம்பி வெம்பி வெம்பியே மெலிந்து மேல் கலங்கிட
செம்பினில் களிம்பு விட்ட சேதி ஏது காணுமே

#157
நாடி நாடி உம்முளே நயந்து காண வல்லிரேல்
ஓடி ஓடி மீளுவார் உம்முளே அடங்கிடும்
தேடி வந்த காலனும் திகைத்திருந்து போய்விடும்
கோடி காலமும் உகந்து இருந்தவாறு எங்ஙனே

#158
பிணங்குகின்றது ஏதடா பிரக்ஞை கெட்ட மூடரே
பிணங்கிலாத பேரொளிப் பிராணனை அறிகிலீர்
பிணங்குவோர் இருவினைப் பிணக்கு அறுக்க வல்லிரேல்
பிணங்கிலாத பெரிய இன்பம் பெற்றிருக்கல் ஆகுமே

#159
மீன் இறைச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர்
மீன் இருக்கும் நீர் அலோ மூழ்வதும் குடிப்பதும்
மான் இறைச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர்
மான் உரித்த தோல் அலோ மார்புநூல் அணிவதும்

#160
ஆட்டு இறைச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர்
ஆட்டு இறைச்சி அல்லவோ யாகம் நீங்கள் ஆற்றலே
மாட்டு இறைச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர்
மாட்டு இறைச்சி அல்லவோ மரக்கறிக்கு இடுவது

#161
அக்கிடீர் அனைத்து உயிர்க்கும் ஆதியாகி நிற்பது
முக்கிடீர் உமைப் பிடித்து முத்தரித்துவிட்டது
மைக்கிடில் பிறந்து இறந்து மாண்டு மாண்டு போவது
மொக்கிடீர் உமக்கு நான் உணர்த்துவித்தது உண்மையே

#162
ஐயன் வந்து மெய்யகம் புகுந்தவாறு எங்ஙனே
செய்ய தெங்கு இளங்குரும்பை நீர் புகுந்த வண்ணமே
ஐயன் வந்து மெய்யகம் புகுந்து கோயில் கொண்ட பின்
வையகத்தில் மாந்தரோடு வாய்திறப்பது இல்லையே

#163
நவ்வு மவ்வையும் கடந்து நாடொணாத சியின் மேல்
வவ்வு யவ்வுளும் சிறந்த வண்மை ஞான போதகம்
ஒவ்வு சுத்தியுள் நிறைந்தது உச்சி ஊடுருவியே
இவ் வகை அறிந்த பேர்கள் ஈசன் ஆணை ஈசனே

#164
அக்கரம் அனாதியோ ஆத்துமம் அனாதியோ
புக்கிருந்த பூதமும் புலன்களும் அனாதியோ
தர்க்கம் மிக்க நூல்களும் சாத்திரம் அனாதியோ
தற்பரத்தை ஊடறுத்த சற்குரு அனாதியோ

#165
பார்த்தது ஏது பார்த்திடில் பார்வை ஊடு அழிந்திடும்
கூர்த்ததாய் இருப்பிரேல் குறிப்பில் அச் சிவமதாம்
பார்த்த பார்த்த போது எலாம் பார்வையும் இகந்து நீர்
பூத்த பூவும் காயுமாய் பொருந்துவீர் பிறப்பிலே

#166
நெத்தி பத்தி உழலுகின்ற நீல மா விளக்கினைப்
பத்தி ஒத்தி நின்று நின்று பற்றறுத்தது என் பலன்
உற்றிருந்து பாரடா உள்ளொளிக்கு மேல் ஒளி
அத்தனார் அமர்ந்திடம் அறிந்தவன் அனாதியே

#167
நீரை அள்ளி நீரில் விட்டு நீ நினைத்த காரியம்
ஆரை உன்னி நீர் எலாம் அவத்திலே இறைக்கிறீர்
வேரை உன்னி வித்தை உன்னி விதத்திலே முளைத்து எழுந்த
சீரை உன்ன வல்லிரேல் சிவபதங்கள் சேரலாம்

#168
நெற்றியில் தியங்குகின்ற நீல மா விளக்கினை
உய்த்துணர்ந்து பாரடா உள்ளிருந்த சோதியைப்
பத்தியில் தொடர்ந்தவர் பரமயம் அது ஆனவர்
அத் தலத்தில் இருந்த பேர்கள் அவர் எனக்கு நாதரே

#169
கருத்தரிக்கும் முன் எலாம் காயம் நின்றது எவ்விடம்
உருத்தரிக்கும் முன் எலாம் உயிர்ப்பு நின்றது எவ்விடம்
அருள் தரிக்கும் முன் எலாம் ஆசை நின்றது எவ்விடம்
திருக்கு அறுத்துக்கொண்ட சிவாயம் என்று கூறுவீர்

#170
கருத்தரிக்கும் முன் எலாம் காயம் நின்ற தேயுவில்
உருத்தரிக்கும் முன் எலாம் உயிர்ப்பு நின்றது அப்புவில்
அருள் தரிக்கும் முன் எலாம் ஆசை நின்ற வாயுவில்
திருக்கு அறுத்துக்கொண்டதே சிவாயம் என்று கூறுமே

#171
தாதரான தாதரும் தலத்தில் உள்ள சைவரும்
கூதரைப் பறைச்சி மக்கள் கூடி செய்த காரியம்
வீதி போகு ஞானியை விரைந்து கல் எறிந்ததும்
பாதகங்களாகவே பலித்ததே சிவாயமே

#172
ஓடி ஓடி பாவி அழைத்து உள்ளங்கால் வெளுத்ததும்
பாவியான பூனை வந்து பாலிலே குதித்ததும்
பணிக்கன் வந்து பார்த்ததும் பாரம் இல்லை என்றதும்
இழை அறுந்துபோனதும் என்ன மாயம் ஈசனே

#173
சதுரம் நாலு மறையும் எட்டுதானது அங்கி மூன்றுமே
எதிரதான வாயு ஆறு எண்ணும் வட்டம் மேவியே
உதிரம்தான் வரைகள் எட்டும் எண்ணும் என் சிரசின் மேல்
கதிரதான காயகத்தில் கலந்து எழுந்த நாதமே

#174
நாலொடு ஆறு பத்து மேல் நாலுமூன்றும் இட்ட பின்
மேலு பத்தும் ஆறுடன் மே திரண்டது ஒன்றுமே
கோலி அஞ்செழுத்துளே குரு இருந்து கூறிடில்
தோலு மேனி நாதமாய்த் தோற்றி நின்ற கோசமே

#175
கோசமாய் எழுந்ததும் கூடு உருவி நின்றதும்
தேசமாய் பிறந்ததும் சிவாயம் அஞ்செழுத்துமே
ஈசனார் இருந்திடம் அனேகனேக மந்திரம்
ஆகமம் நிறைந்து நின்ற ஐம்பத்தோர் எழுத்துமே

#176
அங்க லிங்க பீடமாய் ஐயிரண்டு எழுத்திலும்
பொங்கு தாமரையினும் பொருந்துவார் அகத்தினும்
பங்குகொண்ட சோதியும் பரந்த அஞ்செழுத்துமே
சிங்கநாத ஓசையும் சிவாயமல்லது இல்லையே

#177
உவமை இல்லாப் பேரொளிக்குள் உருவமானது எவ்விடம்
உவமையாகி அண்டத்துள் உருவி நின்றது எவ்விடம்
தவமதான பரமனார் தரித்து நின்றது எவ்விடம்
தற்பரத்தில் ஜலம் பிறந்து தாங்கி நின்றது எவ்விடம்

#178
சுகமதாக எருது மூன்று கன்றை ஈன்றது எவ்விடம்
சொல்லு கீழுலோகம் ஏழும் நின்றவாறது எவ்விடம்
அளவதான மேருவும் அமைவதானது எவ்விடம்
அவனும் அவளும் ஆடலால் அரும் சீவன் பிறந்ததே

#179
உதிக்கும் என்றது எவ்விடம் ஒடுங்குகின்றது எவ்விடம்
கதிக்கு நின்றது எவ்விடம் கன்று உறக்கம் எவ்விடம்
மதிக்க நின்றது எவ்விடம் மதிமயக்கம் எவ்விடம்
விதிக்க வல்ல ஞானிகாள் விரித்து உரைக்க வேணுமே

#180
திரும்பி ஆடு வாசல் எட்டு திறம் உரைத்த வாசல் எட்டு
மருங்கு இலாத கோலம் எட்டு வன்னியாடு வாசல் எட்டு
துரும்பு இலாத கோலம் எட்டு சுத்திவந்த மருளரே
அரும்பு இலாத பூவும் உண்டு ஐயன் ஆணை உண்மையே

#181
தான் இருந்து மூல அங்கி தணல் எழுப்பு வாயுவால்
தேன் இருந்து வரை திறந்து தித்தி ஒன்று ஒத்தவே
வான் இருந்த மதியம் மூன்று மண்டலம் புகுந்த பின்
ஊன் இருந்தது அளவுகொண்ட யோகி நல்ல யோகியே

#182
முத்தனாய் நினைந்த போது முடிந்த அண்டத்து உச்சி மேல்
பத்தனாரும் அம்மையும் பரிந்து ஆடல் ஆடினார்
சித்தரான ஞானிகாள் தில்லை ஆடல் என்பீர்காள்
அத்தன் ஆடலுற்ற போது அடங்கல் ஆடலுற்றதே

#183
ஒன்றும் ஒன்றும் ஒன்றுமே உலகு அனைத்தும் ஒன்றுமே
அன்றும் இன்றும் ஒன்றுமே அனாதியானது ஒன்றுமே
கன்றல் நின்ற செம்பொனைக் களிம்பு அறுத்து நாட்டினால்
அன்று தெய்வம் உம்முளே அறிந்ததே சிவாயமே

#184
நட்ட தாவரங்களும் நவின்ற சாத்திரங்களும்
இட்டமான ஓமகுண்டம் இசைந்த நாலு வேதமும்
கட்டிவைத்த புத்தகம் கடும் பிதற்று இதற்கு எலாம்
பொட்டதாய் முடிந்ததே பிரானை யான் அறியவே

#185
வட்டமான கூட்டிலே வளர்ந்து எழுந்த அம்புலி
சட்டமாம் படத்திலே சங்கு சக்கரங்களாய்
விட்டது அஞ்சு வாசலில் கதவினால் அடைத்த பின்
முட்டையில் எழுந்த சீவன் விட்டவாறு அது எங்ஙனே

#186
கோயில் பள்ளி ஏதடா குறித்து நின்றது ஏதடா
வாயினால் தொழுது நின்ற மந்திரங்கள் ஏதடா
ஞாயமான பள்ளியில் நன்மையாய் வணங்கினால்
காயமான பள்ளியில் காணலாம் இறையையே

#187
நல்ல வெள்ளி ஆறதாய் நயந்த செம்பு நாலதாய்
கொல்லும் நாகம் மூன்றதாக் குலாவு செம்பொன் இரண்ட தாய்
வில்லின் ஓசை ஒன்றுடன் விளங்க ஊத வல்லிரேல்
எல்லை ஒத்த சோதியானை எட்டும் ஆற்றல் ஆகுமே

#188
மனத்தகத்து அழுக்கு அறாத மவுன ஞான யோகிகள்
வனத்தகத்து இருக்கினும் மனத்தகத்து அழுக்கு அறார்
மனத்தகத்து அழுக்கு அறுத்த மவுன ஞான யோகிகள்
முலைத்தடத்து இருக்கினும் பிறப்பு அறுத்து இருப்பரே

#189
உருவும் அல்ல ஒளியும் அல்ல ஒன்றது ஆகி நின்றதே
மருவும் அல்ல கந்தம் அல்ல மந்த நாடி உற்றது அல்ல
பெரியது அல்ல சிறியது அல்ல பேசும் ஆவிதானும் அல்ல
அரியதாக நின்ற நேர்மை யாவர் காண வல்லிரே

#190
ஓரெழுத்து உலகு எலாம் உதித்த உட்சரத்துளே
ஈரெழுத்து இயம்புகின்ற இன்பம் ஏது அறிகிலீர்
மூவெழுத்து மூவராய் மூண்டு எழுந்த மூர்த்தியை
நாலெழுத்து நாவிலே நவின்றதே சிவாயமே

#191
ஆதி அந்த மூல விந்து நாதம் ஐந்து பூதமாய்
ஆதி அந்த மூல விந்து நாதம் ஐந்து எழுத்துமாய்
ஆதி அந்த மூல விந்து நாதம் மேவி நின்றதும்
ஆதி அந்த மூல விந்து நாதமே சிவாயமே

#192
அன்னம் இட்ட பேர் எலாம் அனேக கோடி வாழவே
சொன்னம் இட்ட பேர் எலாம் துரைத்தனங்கள் பண்ணலாம்
வின்னமிட்ட பேர் எல்லாம் வீழ்வர் வெம் நரகிலே
கன்னமிட்ட பேர் எலாம் கடந்து நின்ற திண்ணமே

#193
ஓதொணாமல் நின்ற நீர் உறக்கம் ஊணும் அற்ற நீர்
சாதிபேதம் அற்ற நீர் சங்கை அன்றி நின்ற நீர்
கோதிலாத அறிவிலே குறிப்புணர்ந்து நின்ற நீர்
ஏதும் இன்றி நின்ற நீர் இயங்குமாறு அது எங்ஙனே

#194
பிறந்த போது கோவணம் இலங்கு நூல் குடுமியும்
பிறந்ததுடன் பிறந்ததோ பிறங்கு நாள் சடங்கு எலாம்
மறந்த நாலு வேதமும் மனத்துளே உதித்ததோ
நிலம் பிறந்து வான் இடிந்து நின்றது என்ன வல்லிரே

#195
துருத்தி உண்டு கொல்லர் உண்டு சொர்ணமான சோதி உண்டு
திருத்தமாய் மனதில் உன்னித் திகழ ஊத வல்லிரேல்
பெருத்த தூண் இலங்கியே பிழம்பதாய் விரிந்திடும்
நிருத்தமான சோதியும் நீயும் அல்லது இல்லையே

#196
வேடமிட்டு மணி துலக்கி மிக்க தூப தீபமாய்
ஆடு அறுத்து கூறுபோட்ட அவர்கள் போலும் பண்ணுறீர்
தேடிவைத்த செம்பு எலாம் திரள்படப் பரப்பியே
போடுகின்ற புட்ப பூசை பூசை என்ன பூசையே

#197
முட்டு கண்ட தூமையின் முளைத்து எழுந்த சீவனை
கட்டிக்கொண்டு நின்றிடம் கடந்து நோக்க வல்லிரேல்
முட்டும் அற்று கட்டும் அற்று முடியில் நின்ற நாதனை
எட்டுத் திக்கும் கையினால் இருத்த வீடது ஆகுமே

#198
அருக்கனோடு சோமனும் அதுக்கும் அப்புறத்திலே
நெருக்கி ஏறு தாரகை நெருங்கி நின்ற நேர்மையை
உருக்கி ஓர் எழுத்துளே ஒப்பிலாத வெளியிலே
இருக்க வல்ல பேர் அலோ இனிப் பிறப்பது இல்லையே

#199
மூலவட்டம் மீதிலே முளைத்த அஞ்செழுத்தின் மேல்
கோலவட்டம் மூன்றுமாய் குலைந்து அலைந்து நின்ற நீர்
ஞாலவட்ட மன்றுளே நவின்ற ஞானம் ஆகிலோ
ஏலவட்டம் ஆகியே இருந்ததே சிவாயமே

#200
சுக்கிலத் திசையுளே சுரோணிதத்தின் வாசலுள்
முச்சதுரம் எட்டுளே மூலாதார அறையிலே
அச்சம் அற்ற சவ்வுளே அரி அரன் அயனுமாய்
உச்சரிக்கும் மந்திரம் உண்மையே சிவாயமே

#201
பூவும் நீரும் என் மனம் பொருந்து கோயில் என் உளம்
ஆவியோடு லிங்கமாய் அகண்டம் எங்குமாகிலும்
மேவுகின்ற ஐவரும் விளங்கு தீப தீபமாய்
ஆடுகின்ற கூத்தனுக்கு ஓர் அந்தி சந்தி இல்லையே

#202
உருக் கலந்த பின் அலோ உன்னை நான் அறிந்தது
இருக்கில் என் மறக்கில் என் நினைந்திருந்த போது எலாம்
உருக் கலந்து நின்ற போது நீயும் நானும் ஒன்று அலோ
திருக் கலந்த போது அலோ தெளிந்ததே சிவாயமே

#203
சிவாயம் அஞ்செழுத்திலே தெளிந்து தேவர் ஆகலாம்
சிவாயம் அஞ்செழுத்திலே தெளிந்து வானம் ஆளலாம்
சிவாயம் அஞ்செழுத்திலே தெளிந்துகொண்ட வான் பொருள்
சிவாயம் அஞ்செழுத்துளே தெளிந்துகொள்ளும் உண்மையே

#204
பொய்க்குடத்தில் ஐந்து ஒதுக்கி போகம் வீசுமாறு போல்
இச் சடமும் இந்தியமும் நீரு மேல் அலைந்ததே
அக் குடம் சலத்தை மொண்டு அமர்ந்திருந்தவாறு போல்
இச் சடம் சிவத்தை மொண்டு உகந்து அமர்ந்து இருப்பதே

#205
பட்டமும் கயிறு போல் பறக்க நின்ற சீவனை
பார்வையாலே பார்த்து நீ படு முடிச்சிபோடடா
திட்டவும் படாதடா சீவனை விடாதடா
கட்டடா நீ சிக்கெனக் களவு அறிந்த கள்ளனை

#206
அல் இறந்து பகல் இறந்து அகப்பிரமம் இறந்துபோய்
அண்டர் அண்டமும் கடந்த அனேகனேக ரூபமாய்
சொல் இறந்து மனம் இறந்த சுக சொரூப உண்மையைச்
சொல்லி ஆற என்னில் வேறு துணைவர் இல்லை ஆனதே

#207
ஐயிரண்டு திங்களாய் அடங்கி நின்ற தூமைதான்
கை இரண்டு கால் இரண்டு கண் இரண்டும் ஆகியே
மெய் திரண்டு சத்தமாய் விளங்கு இரசகந்தமும்
துய்ய காயம் ஆனதும் சொல்லுகின்ற தூமையே

#208
அங்க லிங்க பீடமும் அசவை மூன்றெழுத்தினும்
சங்கு சக்கரத்தினும் சகல வாகனத்தினும்
பங்குகொண்ட யோகிகள் பரம வாசல் அஞ்சினும்
சிங்க நாத ஓசையும் சிவாயம் இல்லது இல்லையே

#209
அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் என்று உரைத்த அன்பர்காள்
அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் அல்ல காணும் அப் பொருள்
அஞ்செழுத்து நெஞ்செழுத்து அவ் எழுத்து அறிந்த பின்
அஞ்செழுத்து அவ்வின் வண்ணம் ஆனதே சிவாயமே

#210
ஆதரித்த மந்திரம் அமைந்த ஆகமங்களும்
மாதர் மக்கள் சுற்றமும் மயக்க வந்த நித்திரை
ஏது புக்கு ஒளித்ததோ எங்கும் ஆகி நின்றதோ
சோதி புக்கு ஒளித்திடம் சொல்லடா சுவாமியே

#211
அக்கரம் அனாதியோ ஆத்துமா அனாதியோ
புக்கு இருந்த பூதமும் புலன்களும் அனாதியோ
தக்கம் மிக்க நூல்களும் சதாசிவம் அனாதியோ
மிக்க வந்த யோகிகாள் விரைந்து உரைக்க வேணுமே

#212
ஒன்பதான வாசல்தான் ஒழியும் நாள் இருக்கையில்
ஒன்பதாம் ராம ராம ராம என்னும் நாமமே
வன்மமான பேர்கள் வாக்கில் வந்து நோய் அடைப்பராம்
அன்பரான பேர்கள் வாக்கில் ஆய்ந்து அமைந்து இருப்பதே

#213
அள்ளி நீரை இட்டது ஏது அகங்கையில் குழைத்தது ஏது
மெள்ளவே மிணமிணென்று விளம்புகின்ற மூடர்கள்
கள்ளவேடம் இட்டது ஏது கண்ணை மூடிவிட்டது ஏது
மெள்ளவே குருக்களே விளம்பிடீர் விளம்பிடீர்

#214
அன்னை கர்ப்பத் தூமையில் அவதரித்த சுக்கிலம்
முன்னையே தரித்ததும் பனித்துளி போல் ஆகுமோ
உன்னி தொக்கு உள் உழலும் தூமையுள் உளே அடங்கிடும்
பின்னையே பிறப்பதும் தூமை காணும் பித்தரே

#215
அழுக்கு அறத் தினம் குளித்து அழுக்கு அறாத மாந்தரே
அழுக்கு இருந்தது அவ்விடம் அழுக்கு இலாதது எவ்விடம்
அழுக்கு இருந்த அவ்விடத்து அழுக்கு அறுக்க வல்லிரேல்
அழுக்கு இலாத சோதியோடு அணுகி வாழல் ஆகுமே

#216
அணுத் திரண்ட கண்டமாய் அனைத்து பல் யோனியாய்
மனுப் பிறந்து ஓதிவைத்த நூலிலே மயங்குறீர்
சனிப்பது ஏது சாவது ஏது தாபரத்தின் ஊடுபோய்
நினைப்பது ஏது நிற்பது ஏது நீர் நினைந்து பாருமே

#217
ஆதி ஆகி அண்டர் அண்டம் அப்புறத்தும் அப்புறம்
சோதி ஆகி நின்று இலங்கு சுருதி நாத சோமனை
பேதியாமல் தம்முளே பெற்று உணர்ந்த ஞானிகாள்
சாதிபேதம் என்பதொன்று சற்றும் இல்லை இல்லையே

#218
ஆக்கை மூப்பது இல்லையே ஆதி காரணத்திலே
நாக்கு மூக்கை உள் மடித்து நாத நாடி ஊடுபோய்
ஏக்கறுத்தி ரெட்டையும் இறுக்கழுத்த வல்லிரேல்
பார்க்கப்பார்க்க திக்கு எல்லாம் பரப்பிரம்மம் ஆகுமே

#219
அஞ்சும் அஞ்சும் அஞ்சும் அஞ்சும் அல்லல் செய்து நிற்பதும்
அஞ்சும் அஞ்சும் அஞ்சும் அஞ்சுமே அமர்ந்து உளே இருப்பதும்
அஞ்சும் அஞ்சும் அஞ்சுமே ஆதரிக்க வல்லிரேல்
அஞ்சும் அஞ்சும் உம்முளே அமர்ந்ததே சிவாயமே

#220
அஞ்செழுத்தின் அனாதியாய் அமர்ந்து நின்றது ஏதடா
நெஞ்சு எழுத்தி நின்றுகொண்டு நீ செபிப்பது ஏதடா
அஞ்செழுத்தின் வாளதால் அறுப்பதாவது ஏதடா
பிஞ்செழுத்தின் நேர்மைதான் பிரித்து உரைக்க வேண்டுமே

#221
உயிர் இருந்தது எவ்விடம் உடம்பெடுத்ததின் முனம்
உயிரதாவது ஏதடா உடம்பதாவது ஏதடா
உயிரையும் உடம்பையும் ஒன்றுவிப்பது ஏதடா
உயிரினால் உடம்பெடுத்த உண்மை ஞானி சொல்லடா

#222
சுழித்த ஓர் எழுத்தையும் சொல்முகத்து இருத்தியே
துன்ப இன்பமும் கடந்து சொல்லும் மூலநாடிகள்
அழுத்தமான வக்கரம் அடங்கியுள் எழுப்பியே
ஆறு பங்கயம் கலந்து அப்புறத் தலத்துளே

#223
உருத்தரிப்பதற்கு முன் உயிர் புகுந்து நாதமும்
கருத்தரிப்பதற்கு முன் காயம் என்ன சோணிதம்
அருள் தரிப்பதற்கு முன் அறிவு மூலாதாரமாம்
குருத்து அறிந்துகொள்ளுவீர் குணம் கெடும் குருக்களே

#224
எங்கும் உள்ள ஈசனார் எம் உடல் புகுந்த பின்
பங்கு கூறு பேசுவார் பாடு சென்று அணுகிலார்
எங்கள் தெய்வம் உங்கள் தெய்வம் என்று இரண்டு பேதமோ
உங்கள் பேதம் அன்றியே உண்மை இரண்டும் இல்லையே

#225
அரியும் ஆகி அயனும் ஆகி அண்டம் எங்கும் ஒன்றதாய்
பெரியது ஆகி உலகு-தன்னில் நின்ற பாதம் ஒன்று அலோ
விரிவது என்று வேறு செய்து வேடமிட்ட மூடரே
அறிவினோடு பாரும் இங்கும் அங்கும் எங்கும் ஒன்று அதே

#226
வெந்த நீறு மெய்க்கு அணிந்து வேடமும் தரிக்கிறீர்
சிந்தையுள் நினைந்துமே தினம் செபிக்கும் மந்திரம்
முந்த மந்திரத்திலோ மூல மந்திரத்திலோ
எந்த மந்திரத்திலோ ஈசன் வந்து இயங்குமே

#227
அகார காரணத்திலே அனேகனேக ரூபமாய்
உகார காரணத்திலே உருத்தரித்து நின்றனன்
மகார காரணத்திலே மயங்குகின்ற வையகம்
சிகார காரணத்திலே தெளிந்ததே சிவாயமே

#228
அவ்வெழுத்தில் உவ்வு வந்து அகாரமும் சனித்ததோ
உவ்வெழுத்து மவ்வெழுத்தும் ஒன்றை ஒன்றி நின்றதோ
செவ்வை ஒத்து நின்று அலோ சிவபதங்கள் சேரினும்
மிவ்வை ஒத்த ஞானிகாள் விரித்து உரைக்க வேணுமே

#229
ஆதியான அஞ்சிலும் அனாதியான நாலிலும்
சோதியான மூன்றிலும் சொரூபம் அற்ற ரெண்டிலும்
நீதியானது ஒன்றிலே நிறைந்து நின்ற வஸ்துவை
ஆதியானது ஒன்றுமே அற்றது அஞ்செழுத்துமே

#230
வான் இலாதது ஒன்றும் இல்லை வானும் இல்லை வானிடில்
ஊன் இலாதது ஒன்றும் இல்லை ஊனும் இல்லை ஊனிடில்
நான் இலாதது ஒன்றும் இல்லை நானும் இல்லை நண்ணிடில்
தான் இலாதது ஒன்றுமே தயங்கி ஆடுகின்றதே

#231
சுழித்ததோர் எழுத்தை உன்னி சொல்முகத்து இருத்தியே
துன்ப இன்பமும் கடந்து சொல்லும் நாடி ஊடுபோய்
அழுத்தமான அக்கரத்தின் அங்கியை எழுப்பியே
ஆறு பங்கயம் கடந்து அப்புறத்து வெளியிலே

#232
விழித்த கண் குவித்த போது அடைந்துபோய் எழுத்து எலாம்
விளைத்துவிட்ட இந்திரசால வீடதான வெளியிலே
அழுத்தினாலும் மதிமயங்கி அனுபவிக்கும் வேளையில்
அவனும் உண்டு நானும் இல்லை யாரும் இல்லை ஆனதே

#233
நல்ல மஞ்சனங்கள் தேடி நாடி நாடி ஓடுறீர்
நல்ல மஞ்சனங்கள் உண்டு நாதன் உண்டு நம்முளே
எல்ல மஞ்சனங்கள் தேடி ஏக பூசைபண்ணினால்
தில்லை மேவும் சீவனும் சிவபதத்துள் ஆடுமே

#234
உயிர் அகத்தில் நின்றிடும் உடம்பெடுத்ததற்கு முன்
உயிர் அகாரம் ஆயிடும் உடல் உகாரம் ஆயிடும்
உயிரையும் உடம்பையும் ஒன்றுவிப்பது அச் சிவம்
உயிரினால் உடம்புதான் எடுத்தவாறு உரைக்கிறேன்

#235
அண்டம் ஏழும் உழலவே அணிந்த யோனி உழலவே
பண்டு மால் அயனுடன் பரந்து நின்று உழலவே
எண் திசை கடந்து நின்ற இருண்ட சத்தி உழலவே
அண்டர் அண்டம் ஒன்றதாய் ஆதி நட்டம் ஆடுமே

#236
உருவ நீர் உறுப்பு கொண்டு உருத்தரித்து வைத்திடும்
பெரிய பாதை பேசுமோ பிசாசை ஒத்த மூடரே
கரிய மாலும் அயனுமாக காணொணாத கடவுளை
உரிமையாக உம்முளே உணர்ந்துணர்ந்து கொள்ளுமே

#237
பண்ணிவைத்த கல்லையும் பழம்பொருள் அது என்று நீர்
எண்ணமுற்றும் என்ன பேர் உரைக்கிறீர்கள் ஏழைகாள்
பண்ணவும் படைக்கவும் படைத்துவைத்து அளிக்கவும்
ஒண்ணுமாகி உலகு அளித்த ஒன்றை நெஞ்சில் உன்னுமே

#238
நாலதான யோனியுள் நவின்ற விந்தும் ஒன்றதாய்
ஆலதான வித்துளே அமர்ந்து ஒடுங்குமாறு போல்
சூலதான உற்பனம் சொல்வதான மந்திரம்
மேலதான ஞானிகாள் விரித்து உரைக்க வேணுமே

#239
அருவமாய் இருந்த போது அன்னை அங்கு அறிந்திலை
உருவமாய் இருந்த போது உன்னை நான் அறிந்தனன்
குருவினால் தெளிந்துகொண்டு கோது இலாத ஞானமாம்
பருவமான போது அலோ பரப்பிரம்மம் ஆனதே

#240
பிறப்பதும் இறப்பதும் பிறந்திடாது இருப்பதும்
மறப்பதும் நினைப்பதும் மறந்ததைத் தெளிந்ததும்
துறப்பதும் தொடுப்பதும் சுகித்து வாரி உண்பதும்
பிறப்பதும் இறப்பதும் பிறந்த வீடு அடங்குமே

#241
கண்ணிலே இருப்பனே கருங்கடல் கடைந்த மால்
விண்ணிலே இருப்பனே மேவி அங்கு நிற்பனே
தன்னுளே இருப்பனே தராதலம் படைத்தவன்
என்னுளே இருப்பனே எங்கும் ஆகி நிற்பனே

#242
ஆடு நாடு தேடினும் ஆனை சேனை தேடினும்
கோடி வாசி தேடினும் குறுக்கே வந்து நிற்குமோ
ஓடி இட்ட பிச்சையும் உகந்து செய்த தர்மமும்
சாடிவிட்ட குதிரை போல் தர்மம் வந்து நிற்குமே

#243
எள் இரும்பு கம்பளி இடும் பருத்தி வெண்கலம்
அள்ளி உண்ட நாதனுக்கு ஓர் ஆடை மாடை வஸ்திரம்
உள் இருக்கும் வேதியர்க்கு உற்ற தானம் ஈதிரால்
மெள்ள வந்து நோய் அனைத்தும் மீண்டிடும் சிவாயமே

#244
ஊரில் உள்ள மனிதர்காள் ஒருமனதாய்க் கூடியே
தேரிலே வடத்தை இட்டு செம்பை வைத்து இழுக்கிறீர்
ஆரினாலும் அறியொணாத ஆதி சித்த நாதரை
பேதையான மனிதர் பண்ணும் புரளி பாரும் பாருமே

#245
மருள் புகுந்த சிந்தையால் மயங்குகின்ற மாந்தரே
குருக் கொடுத்த மந்திரம் கொண்டு நீந்த வல்லிரேல்
குருக் கொடுத்த தொண்டரும் குகன் ஒடிந்த பிள்ளையும்
பருத்தி பட்ட பன்னிரண்டு பாடுதான் படுவரே

#246
அன்னை கர்ப்ப அறையதற்குள் அங்கியின் பிரகாசமாய்
அந்த அறைக்குள் வந்திருந்து அரிய விந்து ரூபமாய்
தன்னை ஒத்து நின்ற போது தடை அறுத்து வெளியதாய்
தங்க நல் பெருமை தந்து தலைவனாய் வளர்ந்ததே

#247
உன்னை அற்ப நேரமும் மறந்திருக்கலாகுமோ
உள்ளம் மீது உறைந்தது எனை மறப்பு இலாத சோதியை
பொன்னை வென்ற பேரொளிப் பொரு இலாத ஈசனே
பொன் அடிப் பிறப்பிலாமை என்று நல்க வேணுமே

#248
பிடித்த தெண்டும் உம்மதோ பிரமமான பித்தர்காள்
தடித்த கோலம் அத்தை விட்டு சாதிபேதம் கொள்-மினோ
வடித்திருந்ததோர் சிவத்தை வாய்மை கூற வல்லிரேல்
திடுக்கமுற்ற ஈசனைச் சென்று கூடல் ஆகுமே

#249
சத்தி நீ தயவு நீ தயங்கு சங்கின் ஓசை நீ
சித்தி நீ சிவனும் நீ சிவாயமாம் எழுத்து நீ
முத்தி நீ முதலும் நீ மூவரான தேவர் நீ
அத் திறமும் உம்முளே அறிந்து உணர்ந்துகொள்ளுமே

#250
சட்டையிட்டு மணி துலங்கும் சாத்திரச் சழக்கரே
பொஸ்தகத்தை மெத்த வைத்து போதம் ஓதும் பொய்யரே
நிட்டை ஏது ஞானம் ஏது நீர் இருந்த அட்சரம்
பட்டை ஏது சொல்லிரே பாதகக் கபடரே

#251
உண்மையான சுக்கிலம் உபாயமாய் இருந்ததும்
வெண்மையாகி நீரிலே விரைந்து நீரது ஆனதும்
தண்மையான காயமே தரித்து உருவம் ஆனதும்
தெண்மையான ஞானிகாள் தெளிந்து உரைக்க வேணுமே

#252
வஞ்சகப் பிறவியை மனத்துளே விரும்பியே
அஞ்செழுத்தின் உண்மையை அறிவிலாத மாந்தர்காள்
வஞ்சகப் பிறவியை வதைத்திடவும் வல்லிரேல்
அஞ்செழுத்தின் உண்மையை அறிந்துகொள்ளல் ஆகுமே

#253
காய் இலாத சோலையில் கனி உகந்த வண்டுகாள்
ஈ இலாத தேனை உண்டு இராப்பகல் உறங்குறீர்
பாய் இலாத கப்பல் ஏறி அக்கரைப்படும் முனே
வாயினால் உரைப்பதாகுமோ மவுன ஞானமே

#254
பேய்கள் பேய்கள் என்கிறீர் பிதற்றுகின்ற பேயர்காள்
பேய்கள் பூசை கொள்ளுமோ பிடாரி பூசை கொள்ளுமோ
ஆதி பூசை கொள்ளுமோ அனாதி பூசை கொள்ளுமோ
காயமான பேய் அலோ கணக்கு அறிந்துகொண்டதே

#255
மூல மண்டலத்திலே முச்சதுரம் ஆதியாய்
நாலு வாசல் எம்பிரான் நடு உதித்த மந்திரம்
கோலி எட்டு இதழுமாய் குளிர்ந்து அலர்ந்த திட்டமாய்
மேலும் வேறு காண்கிலேன் விளைந்ததே சிவாயமே

#256
ஆதி கூடு நாடி ஓடி காலை மாலை நீரிலே
சோதி மூலமான நாடி சொல் இறந்த தூவெளி
ஆதி கூடி நெற்பறித்தகாரம் ஆதி ஆகமம்
பேதபேதம் ஆகியே பிறந்து உடல் இறந்ததே

#257
பாங்கினோடு இருந்துகொண்டு பரமன் அஞ்செழுத்துளே
ஓங்கி நாடி மேல் இருந்து உச்சரித்த மந்திரம்
மூங்கில் வெட்டி நார் உரித்து மூச்சில் செய் விதத்தினில்
ஆய்ந்த நூலில் தோன்றுமே அறிந்து உணர்ந்துகொள்ளுமே

#258
புண்டரீக மத்தியில் உதித்து எழுந்த சோதியை
மண்டலங்கள் மூன்றினோடு மன்னுகின்ற மாயனை
அண்டர் அண்டம் ஊடறுத்து அறிந்து உணர வல்லிரேல்
கண்ட கோயில் தெய்வம் என்று கையெடுப்பதில்லையே

#259
அம்பலங்கள் சந்தியில் ஆடுகின்ற வம்பனே
அன்பனுக்குள் அன்பனாய் நிற்பன் ஆதி வீரனே
அன்பருக்குள் அன்பராய் நின்ற ஆதி நாயனே
உன்பருக்கு உண்மையாய் நின்ற உண்மை உண்மையே

#260
அண்ணலாவது ஏதடா அறிந்து உரைத்த மந்திரம்
தண்ணலான வந்தவன் சகல புராணம் கற்றவன்
கண்ணனாக வந்தவன் காரணத்து உதித்தவன்
ஒண்ணதாவது ஏதடா உண்மையான மந்திரம்

#261
உள்ளதோ புறம்பதோ உயிர் ஒடுங்கி நின்றிடம்
மெள்ள வந்து கிட்டி நீர் வினவ வேணும் என்கிறீர்
உள்ளதும் புறம்பதும் ஒத்த போது நாதமாம்
கள்ளவாசலைத் திறந்து காண வேணும் அப்பனே

#262
ஆரல் ஐந்து பூதமாய் அளவிடாத யோனியும்
பாரமான தேவரும் பழுது இலாத பாசமும்
ஓரொணாத அண்டமும் உலோகலோக லோகமும்
சேர வந்து போய் இந்த தேகம் ஏது செப்புமே

#263
என் அகத்துள் என்னை நான் எங்கு நாடி ஓடினேன்
என் அகத்துள் என்னை நான் அறிந்திலாததாகையால்
என் அகத்துள் என்னை நான் அறிந்துமே தெரிந்த பின்
என் அகத்துள் என்னை அன்றி யாதும் ஒன்றும் இல்லையே

#264
விண்ணின்-நின்று மின் எழுந்து மின் ஒடுங்கும் ஆறு போல்
என்னுள் நின்று எண்ணும் ஈசன் என் அகத்து இருக்கையில்
கண்ணின்-நின்று கண்ணில் தோன்றும் கண் அறிவிலாமையால்
என்னுள் நின்ற என்னையும் யான் அறிந்தது இல்லையே

#265
அடக்கினும் அடக்கொணாத அம்பலத்தின் ஊடுபோய்
அடக்கினும் அடக்கொணாத அன்பருக்கும் ஒன்றுளே
கிடக்கினும் இருக்கினும் கிலேசம் வந்து இருக்கினும்
நடக்கினும் இடைவிடாத நாத சங்கு ஒலிக்குமே

#266
மட்டு உலாவு தண் துழாய் அலங்கலாய் புனல் கழல்
விட்டு வீழில் தாக போக விண்ணில் கண்ணில் வெளியினும்
எட்டினோடு இரண்டினும் இதத்தினால் மனம்-தனைக்
கட்டி வீடு இலாது வைத்த காதல் இன்பம் ஆகுமே

#267
ஏக முத்தி மூன்று முத்தி நாலு முத்தி நன்மை சேர்
போக முற்றி புண்ணியத்தில் முத்தி அன்றி முத்தியாய்
நாகமுற்ற சயனமாய் நலம் கடல் கடந்த தீ
யாகம் முற்றி ஆகி நின்றது என்-கொல் ஆதி தேவனே

#268
மூன்று முப்பத்தாறினோடு மூன்று மூன்று மாயமாய்
மூன்று முத்தி ஆகி மூன்று மூன்று மூன்று மூன்றுமாய்
தோன்று சோதி மூன்றதாய் துலக்கம்_இல் விளக்கதாய்
ஏன்றன் நாவின் உள் புகுந்தது என்-கொலோ நம் ஈசனே

#269
ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய் அல்லவத்துள் ஆயுமாய்
ஐந்தும் மூன்றும் ஒன்றும் ஆகி நின்ற ஆதி தேவனே
ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய் அமைந்து அனைத்தும் நின்ற நீ
ஐந்தும் ஐந்தும் ஆய நின்னை யாவர் காண வல்லரே

#270
ஆறும் ஆறும் ஆறுமாய் ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய்
ஏறு சீர் இரண்டு மூன்றும் ஏழும் ஆறும் எட்டுமாய்
வேறுவேறு ஞானம் ஆகி மெய்யினோடு பொய்யுமாய்
ஊறும் ஓசையாய் அமர்ந்த மாய மாய மாயனே

#271
எட்டும் எட்டும் எட்டுமாய் ஓர் ஏழும் ஏழும் ஏழுமாய்
எட்டு மூன்றும் ஒன்றும் ஆகி நின்ற ஆதி தேவனே
எட்டும் ஆய பாதமோடு இறைஞ்சி நின்ற வண்ணமே
எட்டெழுத்தும் ஓதுவார்கள் அல்லல் நீங்கி நிற்பரே

#272
பத்தினோடு பத்துமாய் ஓர் ஏழினோடும் ஒன்பதாய்
பத்து நால் திசைக்குள் நின்ற நாடு பெற்ற நன்மையாய்
பத்துமாய் கொத்தும் ஓடும் அத்தலமிக்கு ஆதி மால்
பத்தர்கட்கு அலாது முத்தி முத்தி முத்தி ஆகுமே

#273
வாசி ஆகி நேசம் ஒன்றி வந்து எதிர்ந்தது என்னும்
நேசமாக நாள் உலாவ நன்மை சேர் பவங்களில்
வீசி மேல் நிமிர்ந்த தோளி இல்லை ஆக்கினாய் கழல்
ஆசையால் மறக்கலாது அமரர் ஆகல் ஆகுமே

#274
எளியதான காயம் மீது எம்பிரான் இருப்பிடம்
அளிவுறாது நின்றதே அகாரமும் உகாரமும்
கொளுகையான சோதியும் குலாவி நின்றது அவ்விடம்
வெளியதாகும் ஒன்றிலே விளைந்ததே சிவாயமே

#275
அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் என்று உரைக்கும் அன்பர்காள்
அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் அல்ல காணும் அப் பொருள்
அஞ்செழுத்தை நெஞ்சு அழுத்தி அவ் எழுத்தை அறிந்த பின்
அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் அவ் உபாயம் சிவாயமே

#276
பொய் உரைக்க போதம் என்று பொய்யருக்கு இருக்கையால்
மெய் உரைக்க வேண்டுதில்லை மெய்யர் மெய்க்கு இலாமையால்
வையகத்தில் உண்மை-தன்னை வாய்திறக்க அஞ்சினேன்
நையவைத்தது என்-கொலோ நமசிவாய நாதனே

#277
ஒன்றையொன்று கொன்றுகூட உணவுசெய்து இருக்கினும்
மன்றின் ஊடு பொய் களவு மாறு வேறு செய்யினும்
பன்றி தேடும் ஈசனைப் பரிந்து கூட வல்லிரேல்
அன்று தேவர் உம்முளே அறிந்து உணர்ந்துகொள்ளுமே

#278
மச்சகத்துளே இவர்ந்து மாயை பேசும் வாயுவை
அச்சகத்துளே இருந்து அறிவு உணர்த்திக்கொள்விரேல்
அச்சகத்துளே இருந்து அறிவு உணர்த்திக்கொண்ட பின்
இச்சை அற்ற எம்பிரான் எங்கும் ஆகி நிற்பனே

#279
வயலிலே முளைத்த செந்நெல் களையதான ஆறு போல்
உலகினோரும் வண்மை கூறில் உய்யுமாறு அது எங்ஙனே
விரகிலே முளைத்து எழுந்த மெய் அலாது பொய்யதாய்
நரகிலே பிறந்திருந்து நாடு பட்ட பாடு அதே

#280
ஆடுகின்ற எம்பிரானை அங்கும் எங்கும் என்று நீர்
தேடுகின்ற பாவிகாள் தெளிந்தது ஒன்றை ஓர்கிலீர்
காடு நாடு வீடு வீண் கலந்து நின்ற கள்வனை
நாடி ஓடி உம்முளே நயந்து உணர்ந்துபாருமே

#281
ஆடுகின்ற அண்டர் கூடும் அப்புற மதிப் புறம்
தேடு நாலு வேதமும் தேவரான மூவரும்
நீடு வாழி பூதமும் நின்றதோர் நிலைகளும்
ஆடுவானை ஒழியலாது அனைத்தும் இல்லை இல்லையே

#282
ஆவதும் பரத்துளே அழிவதும் பரத்துளே
போவதும் பரத்துளே புகுவதும் பரத்துளே
தேவரும் பரத்துளே திசைகளும் பரத்துளே
யாவரும் பரத்துளே யானும் அப் பரத்துளே

#283
ஏழு பார் ஏழு கடல் இபங்கள் எட்டு வெற்புடன்
சூழு வான் கிரி கடந்து சொல்லும் ஏழ் உலகமும்
ஆழி மால் விசும்பு கொள் பிரமாண்டரண்ட அண்டமும்
ஊழியான் ஒளிக்குளே உதித்து உடன் ஒடுங்குமே

#284
கயத்து நீர் இறைக்கிறீர் கைகள் சோர்ந்து நிற்பது ஏன்
மனத்துள் ஈரம் ஒன்று இலாத மதி இலாத மாந்தர்காள்
அகத்துள் ஈரம் கொண்டு நீர் அழுக்கு அறுக்க வல்லிரேல்
நினைத்திருந்த ஓதியும் நீயும் நானும் ஒன்று அலோ

#285
நீரிலே பிறந்திருந்து நீர் சடங்கு செய்கிறீர்
ஆரை உன்னி நீர் எலாம் அவத்திலே இறைக்கிறீர்
வேரை உன்னி வித்தை உன்னி வித்திலே முளைத்து எழும்
சீரை உன்ன வல்லிரேல் சிவபதம் அடைவிரே

#286
பத்தொடு ஒத்த வாசலில் பரந்து மூல அக்கர
முத்தி சித்தி தொந்தம் என்று இயங்குகின்ற மூலமே
மத்த சித்த ஐம்புலன் மகாரமான கூத்தையே
அத்தியூரர்-தம்முளே அமைந்ததே சிவாயமே

#287
அணுவினோடும் அண்டமாய் அளவிடாத சோதியை
குணமதாகி உம்முளே குறித்திருக்கின் முத்தியாம்
முணமுணென்று உம்முளே விரலை ஒன்றி மீளவும்
தினந்தினம் மயக்குவீர் செம்பு பூசைபண்ணியே

#288
மூலமான அக்கரம் உகப்பதற்கு முன் எலாம்
மூடமாக மூடுகின்ற மூடம் ஏது மூடரே
காலனான அஞ்சு பூதம் அஞ்சிலே ஒடுங்கினால்
ஆதியோடு கூடுமோ அனாதியோடு கூடுமோ

#289
முச்சதுர மூலம் ஆகி முடிவும் ஆகி ஏகமாய்
அச் சதுரம் ஆகியே அடங்கி ஓரெழுத்துமாய்
மெய்ச் சதுர மெய்யுளே விளங்கு ஞான தீபமாய்
உச்சரிக்கும் மந்திரத்தின் உண்மையே சிவாயமே

#290
வண்டலங்கள் போலும் நீர் மனத்து மாசு அறுக்கிலீர்
குண்டலங்கள் போலும் நீர் குளத்திலே முழுகிறீர்
பண்டும் உங்கள் நான்முகன் பறந்து தேடி காண்கிலான்
கண்டிருக்கும் உம்முளே கலந்திருப்பர் காணுமே

#291
நின்றது அன்று இருந்தது அன்று நேரிது அன்று கூரிது அன்று
பந்தம் அன்று வீடும் அன்று பாவகங்கள் அற்றது
கெந்தம் அன்று கேள்வி அன்று கேடு இலாத வானிலே
அந்தம் இன்றி நின்றது ஒன்றை எங்ஙனே உரைப்பதே

#292
பொருந்து நீரும் உம்முளே புகுந்து நின்ற காரணம்
எருது இரண்டு கன்றை ஈன்ற வேகம் ஒன்றை ஓர்கிலீர்
அருகிருந்து சாவுகின்ற யாவையும் அறிந்திலீர்
குரு இருந்து உலாவுகின்ற கோலம் என்ன கோலமே

#293
அம்பரத்துள் ஆடுகின்ற அஞ்செழுத்து நீ அலோ
சிம்புளாய் பரந்து நின்ற சிற்பரமும் நீ அலோ
எம்பிரானும் எவ்வுயிர்க்கும் ஏகபோகம் ஆதலால்
எம்பிரானும் நானுமாய் இருந்ததே சிவாயமே

#294
ஈர் ஒளிய திங்களே இயங்கி நின்றது அப்புறம்
பேரொளிய திங்களே யாவரும் அறிகிலீர்
கார் ஒளிப் படலமும் கடந்துபோன தற்பரம்
பேரொளிப் பெரும்பதம் ஏகநாத பாதமே

#295
கொள்ளொணாது மெல்லொணாது கோது அறக் குதட்டொணாது
தள்ளொணாது அணுகொணாது ஆகலான் மனத்துளே
தெள்ளொணாது தெளியொணாது சிற்பரத்தின் உட்பயன்
விள்ளொணாத பொருளை நான் விளம்புமாறு அது எங்ஙனே

#296
வாக்கினால் மனத்தினால் மதித்த காரணத்தினால்
நோக்கொணாத நோக்கை உன்னி நோக்கை யாவர் நோக்குவார்
நோக்கொணாத நோக்கு வந்து நோக்க நோக்க நோக்கிடில்
நோக்கொணாத நோக்கு வந்து நோக்கை எங்கண் நோக்குமே

#297
உள்ளினும் புறம்பினும் உலகம் எங்கணும் பரந்து
எள்ளில் எண்ணெய் போல நின்று இயங்குகின்ற எம்பிரான்
மெள்ள வந்து என்னுள் புகுந்து மெய்த் தவம் புரிந்த பின்
வள்ளல் என்ன வள்ளலுக்கு வண்ணம் என்ன வண்ணமே

#298
வேதம் ஒன்று கண்டிலேன் வெம் பிறப்பு இலாமையால்
போதம் நின்ற வடிவதாய்ப் புவனம் எங்கும் ஆயினாய்
சோதியுள் ஒளியுமாய்த் துரியமோடு அதீதமாய்
ஆதி மூலம் ஆதியாய் அமைந்ததே சிவாயமே

#299
சாண் இரு மடங்கினால் சரிந்த கொண்டை-தன்னுளே
பேணி அப் பதிக்குளே பிறந்து இறந்து உழலுவீர்
தோணியான ஐவரைத் துறந்து அறுக்க வல்லிரேல்
காணி கண்டு கோடியாய்க் கலந்ததே சிவாயமே

#300
அஞ்சு கோடி மந்திரம் அஞ்சுளே அடங்கினால்
நெஞ்சு கூற உம்முளே நினைப்பது ஓர் எழுத்துளே
அஞ்சு நாலு மூன்றதாகி உம்முளே அடங்கினால்
அஞ்சும் ஓர் எழுத்ததாய் அமைந்ததே சிவாயமே

#301
அக் கரந்த அக்கரத்தில் உள் கரந்த அக்கரம்
சக்கரத்து சிவ்வை உண்டு சம்புளத்து இருந்ததும்
எள் கரந்த வெண்ணெய் போல் எவ்வெழுத்தும் எம்பிரான்
உள் கரந்து நின்ற நேர்மை யாவர் காண வல்லரே

#302
ஆகமத்தின் உட்பொருள் அகண்ட மூலமாதலால்
தாக போகம் அன்றியே தரித்த தற்பரமும் நீ
ஏக பாதம் வைத்தனை உணர்த்தும் அஞ்செழுத்துளே
ஏகபோகம் ஆகியே இருந்ததே சிவாயமே

#303
மூல வாசல் மீது உளே முச்சதுரம் ஆகியே
நாலு வாசல் எண் விரல் நடு உதித்த மந்திரம்
கோலம் ஒன்றும் அஞ்சும் ஆகும் இங்கு அலைந்து நின்ற நீ
வேறுவேறு கண்டிலேன் விளைந்ததே சிவாயமே

#304
சுக்கிலத்து அடியுளே சுழித்ததோர் எழுத்துளே
அக்கரத்து அடியுளே அமர்ந்த ஆதி சோதி நீ
உக்கரத்து அடியுளே உணர்ந்த அஞ்செழுத்துளே
அக்கரம் அது ஆகியே அமர்ந்ததே சிவாயமே

#305
குண்டலத்து உளேயுளே குறித்து அகத்து நாயகன்
கண்டு வந்த மண்டலம் கருத்து அழித்த கூத்தனை
விண்டு அலர்ந்த சந்திரன் விளங்குகின்ற மெய்ப்பொருள்
கண்டுகொண்ட மண்டலம் சிவாயம் அல்லது இல்லையே

#306
சுற்றமைந்து கூடம் ஒன்று சொல் இறந்தது ஓர் வெளி
சத்தியும் சிவனுமாக நின்ற தன்மை ஓர்கிலீர்
சத்தியாவது உம் உடல் தயங்கு சீவனுள் சிவம்
பித்தர்காள் அறிந்திலீர் பிரான் இருந்த கோலமே

#307
மூலம் என்ற மந்திரம் முளைத்த அஞ்செழுத்துளே
நாலு வேதம் நாவுளே நவின்ற ஞான மெய்யுளே
ஆலம் உண்ட கண்டனும் அரி அயனும் ஆதலால்
ஓலம் என்ற மந்திரம் சிவாயம் அல்லது இல்லையே

#308
தத்துவங்கள் என்று நீர் தமைக் கடிந்து போவிர்காள்
தத்துவம் சிவமதாகில் தற்பரமும் நீர் அல்லோ
முத்தி சீவன் நாதமே மூல பாதம் வைத்த பின்
அத்தனாரும் உம்முளே அறிந்து உணர்ந்துகொள்ளுமே

#309
மூன்று பத்து மூன்றையும் முன்பு சொன்ன மூலனே
தோன்று சேர ஞானிகாள் துய்ய பாதம் என்றலை
ஏன்று வைத்த வைத்த பின் இயம்பும் அஞ்செழுத்தையும்
தோன்ற ஓத வல்லிரேல் துய்ய சோதி காணுமே

#310
உம்பர் வானகத்தினும் உலகு வாரம் ஏழினும்
நம்பர் நாடு-தன்னிலும் நாவல் என்ற தீவினும்
செம்பொன் மாடம் மல்கு தில்லை அம்பலத்துள் ஆடுவான்
எம்பிரான் அலாது தெய்வம் இல்லை இல்லை இல்லையே

#311
பூவிலாய ஐந்துமாய் புனலில் நின்ற நான்குமாய்
தீயிலாய மூன்றுமாய் சிறந்த கால் இரண்டுமாய்
வேயிலாயது ஒன்றுமாய் வேறுவேறு தன்மையாய்
நீ அலாமல் நின்ற நேர்மை யாவர் காண வல்லரே

#312
அந்தரத்தில் ஒன்றுமாய் அசைவு கால் இரண்டுமாய்
செந்தழலில் மூன்றுமாய்ச் சிறந்த வைப்பு நான்குமாய்
ஐந்து பாரில் ஐந்துமாய் அமர்ந்திருந்த நாதனை
சிந்தையில் தெளிந்த மாயை யாவர் காண வல்லரே

#313
மன விகாரம் அற்று நீர் மதித்திருக்க வல்லிரேல்
நினைவிலாத மணி விளக்கு நித்தமாகி நின்றிடும்
அனைவர் ஓதும் வேதமும் அகம் பிதற்ற வேணுமேல்
கனவு கண்டது உண்மை நீர் தெளிந்ததே சிவாயமே

#314
இட்ட குண்டம் ஏதடா இருக்கு வேதம் ஏதடா
சுட்ட மண்கலத்திலே சுற்று நூல்கள் ஏதடா
முட்டி நின்ற தூணிலே முளைத்து எழுந்த சோதியை
பற்றி நின்றது ஏதடா பட்டநாத பட்டரே

#315
நீரிலே முளைத்து எழுந்த தாமரையின் ஓர் இலை
நீரினோடு கூடி நின்றும் நீர் இலாதவாறு போல்
பாரிலே முளைத்து எழுந்த பண்டிதப் பராபரம்
பாரினோடு கூடி நின்ற பண்பு கண்டு இருப்பிரே

#316
உறங்கில் என் விழிக்கில் என் உணர்வு சென்று ஒடுங்கில் என்
சிறந்த ஐம்புலன்களும் திசைத் திசைகள் ஒன்றில் என்
புறம்பும் உள்ளும் எங்கணும் பொருந்திருந்த தேகமாய்
நிறைந்திருந்த ஞானிகாள் நினைப்பதேனும் இல்லையே

#317
ஓதுவார்கள் ஓதுகின்ற ஓர் எழுத்தும் ஒன்றதே
வேதம் என்ற தேகமாய் விளம்புகின்றது அன்று இது
நாதம் ஒன்று நான்முகன் மாலும் நானும் ஒன்றதே
ஏதும் அன்றி நின்றது ஒன்றை யான் உணர்ந்த நேர்மையே

#318
பொங்கியே தரித்த அச்சு புண்டரீக வெளியிலே
தங்கியே தரித்த போது தாது மாது வையதாம்
அங்கியுள் சரித்த போது வடிவுகள் ஒளியுமாய்
கொம்பு மேல் வடிவு கொண்டு குரு இருந்த கோலமே

#319
மண்ணுளோரும் விண்ணுளோரும் வந்தவாறு எங்ஙனில்
கண்ணினோடு சோதி போல் கலந்த நாத விந்துவும்
அண்ணலோடு சத்தியும் அஞ்சு பஞ்சபூதமும்
பண்ணினோடு கொடுத்துழிப் பாரொடு எழும் இன்றுமே

#320
ஒடுக்குகின்ற சோதியும் உந்தி நின்ற ஒருவனும்
நடுத்தலத்தில் ஒருவனும் நடந்து காலில் ஏறியே
விடுத்து நின்ற இருவரோடு மெய்யினோடு பொய்யுமாய்
அடுத்து நின்று அறி-மினோ அனாதி நின்ற ஆதியே

#321
உதித்த மந்திரத்தினும் ஒடுங்கும் அக்கரத்தினும்
மதித்த மண்டலத்தினும் மறைந்து நின்ற சோதி நீ
மதித்த மண்டலத்துளே மரித்து நீர் இருந்த பின்
சிரித்த மண்டலத்துளே சிறந்ததே சிவாயமே

#322
திருத்திவைத்த சற்குருவைச் சீர்பெற வணங்கிலீர்
குருக் கெடுக்கும் பித்தரே கொண்டு நீந்த வல்லிரோ
குருக் கெடுக்கும் பித்தரும் குருக் கொள் வந்த சீடனும்
பருத்தி இட்ட பாடுதான் பன்னிரண்டும் பட்டதே

#323
விழித்த கண் துதிக்கவும் விந்து நாத ஓசையும்
மேருவும் கடந்த அண்ட கோளமும் கடந்துபோய்
எழுத்து எலாம் அறிந்துவிட்ட இந்திரஞால வெளியிலே
யானும் நீயுமே கலந்தது என்ன தொன்மை ஈசனே

#324
ஓம் நமோ என்று உளே பாவை என்று அறிந்த பின்
பானு உடல் கருத்து உளே பாவை என்று அறிந்த பின்
நானும் நீயும் உண்டடா நலம் குலம் அது உண்டடா
ஊனுன் ஊணும் ஒன்றுமே உணர்ந்திடாய் எனக்குளே

#325
ஐம்புலனை வென்றவர்க்கு அன்னதானம் ஈவதால்
நம் புலன்களாகி நின்ற நாதருக்கு அது ஏறுமோ
ஐம்புலனை வென்றிடாது அவத்தமே உழன்றிடும்
வம்பருக்கும் ஈவதும் கொடுப்பதும் அவத்தமே

#326
ஆணியான ஐம்புலன்கள் அவையும் மொக்குள் ஒக்குமோ
யோனியில் பிறந்து இறந்த துன்பமிக்கும் ஒக்குமோ
வீணர்காள் பிதற்றுவீர் மெய்ம்மையே உணர்திரேல்
ஊண் உறக்க போகமும் உமக்கு எனக்கும் ஒக்குமே

#327
ஓடுகின்ற ஐம்புலன் ஒடுங்க அஞ்செழுத்துளே
நாடுகின்ற நான்மறை நவிலுகின்ற ஞானிகாள்
கூடுகின்ற கண்டித குணங்கள் மூன்றெழுத்துளே
ஆடுகின்ற பாவையாய் அமைந்ததே சிவாயமே

#328
புவன சக்கரத்துளே பூத நாத வெளியிலே
பொங்கு தீப அங்கியுள் பொதிந்து எழுந்த வாயுவைத்
தவன சோமர் இருவரும் தாம் இயங்கும் வாசலில்
தண்டு மாறி ஏறி நின்ற சரசமான வெளியிலே

#329
மவுன அஞ்செழுத்திலே வாசி ஏறி மெள்ளவே
வான் அளாய் நிறைந்த சோதி மண்டலம் புகுந்த பின்
அவனும் நானும் மெய் கலந்து அனுபவித்த அளவிலே
அவனும் உண்டு நானும் இல்லை யாரும் இல்லையானதே

#330
வாளுறையில் வாள் அடக்கம் வாய் உறையில் வாய்வு அடக்கம்
ஆள் உறையில் ஆள் அடக்கம் அருமை என்ன வித்தை காண்
தாள் உறையில் தாள் அடக்கம் தன்மையான தன்மையும்
நாள் உறையில் நாள் அடக்கம் நானும் நீயும் கண்டதே

#331
வழுத்திடான் அழித்திடான் மாய ரூபம் ஆகிடான்
கழன்றிடான் வெகுண்டிடான் காலகால காலமும்
துவண்டிடான் அசைந்திடான் தூய தூபம் ஆகிடான்
சுவன்றிடான் உரைத்திடான் சூட்ச சூட்ச சூட்சமே

#332
ஆகி கூவென்றே உரைத்த அட்சரத்தின் ஆனந்தம்
யோகி யோகி என்பர் கோடி உற்றறிந்து கண்டிடார்
பூகமாய் மனக்குரங்கு பொங்கும் அங்குமிங்குமாய்
ஏகம் ஏகமாகவே இருப்பர் கோடி கோடியே

#333
கோடி கோடி கோடி கோடி குவலயத்தோர் ஆதியை
நாடி நாடி நாடி நாடி நாள் அகன்று வீணதாய்
தேடித்தேடி தேடித்தேடி தேகமும் கசங்கியே
கூடிக்கூடி கூடிக்கூடி நிற்பர் கோடி கோடியே

#334
கருத்திலான் வெளுத்திலான் பரன் இருந்த காரணம்
இருந்திலான் ஒளித்திலான் ஒன்றும் இரண்டும் ஆகிலான்
ஒருத்திலான் மரித்திலான் ஒழிந்திடான் அழிந்திடான்
கருத்திற்கீயும் கூவும் உற்றோன் கண்டறிந்த ஆதியே

#335
வாதி வாதி வாதி வாதி வண்டலை அறிந்திடான்
ஊதி ஊதி ஊதி ஊதி ஒளி மயங்கி உளறுவான்
வீதி வீதி வீதி வீதியிடை எருப் பொறுக்குவோன்
சாதி சாதி சாதி சாதி சாகரத்தைக் கண்டிடான்

#336
ஆண்மை ஆண்மை ஆண்மை ஆண்மை ஆண்மை கூறும் அசடரே
காண்மையான வாதி ரூபம் காலகால காலமும்
பாண்மையாகி மோனமான பாசமாகி நின்றிடும்
நாண்மையான நாலை வாயில் தங்கும் இங்குமங்குமே

#337
மிங்கு என்ற அட்சரத்தின் மீட்டு ஆகிக் கூவுடன்
துங்கமாகச் சோமனோடு சோமன் மாறி நின்றிடும்
அங்கமா முனைச் சுழியில் ஆகும் ஏகம் ஆகையால்
கங்குல் அற்றுக் கியானமுற்று காணுவாய் சுடர் ஒளி

#338
சுடர் எழும்பும் சூட்சமும் சுழி முனையின் சூட்சமும்
அடர் எழும்பி ஏகமாக அமர்ந்து நின்ற சூட்சமும்
திடரதான சூட்சமும் திரியின் வாலை சூட்சமும்
கடல் எழும்பு சூட்சமும் கண்டறிந்தோன் ஞானியே

#339
ஞானி ஞானி என்று உரைத்த நாய்கள் கோடி கோடியே
வான் இலாத மழை நாள் என்ற வாதி கோடி கோடியே
தானில் ஆன சாகரத்தின் தன்மை காணா மூடர்கள்
மூனி இலாமல் கோடி கோடி முன்னறிந்தது என்பரே

#340
சூட்சமான கொம்பிலே சுழி முனைச் சுடரிலே
வீச்சமான வீயிலே விபுலை தங்கும் வாயிலே
கூச்சமான கொம்பிலே குடியிருந்த கோவிலே
தீட்சையான தீவிலே சிறந்ததே சிவாயமே

#341
பொங்கி நின்ற மோனமும் பொதிந்து நின்ற மோனமும்
தங்கி நின்ற மோனமும் தயங்கி நின்ற மோனமும்
கங்கையான மோனமும் கதித்து நின்ற மோனமும்
திங்களான மோனமும் சிவன் இருந்த மோனமே

#342
மோனமான வீதியில் முனைச் சுழியின் வாலையில்
பானமான வீதியில் பசைந்த செஞ்சுடரிலே
ஞானமான மூலையில் நரலை தங்கும் வாயிலில்
ஓனமான செஞ்சுடர் உதித்ததே சிவாயமே

#343
உதித்து எழுந்த வாலையும் உசங்கி நின்ற வாலையும்
கதித்து எழுந்த வாலையும் காலையான வாலையும்
மதித்து எழுந்த வாலையும் மறைந்து நின்ற ஞானமும்
கொதித்து எழுந்து கும்பல் ஆகி ஹூவும் ஹீயும் ஆனதே

#344
கூவும் கீயும் மோனம் ஆகி கொள்கையான கொள்கையை
மூவிலே உதித்து எழுந்த முச்சுடர் விரிவிலே
பூவிலே நறைகள் போல் பொருந்தி நின்ற பூரணம்
ஆவி ஆவி ஆவி ஆவி அன்பர் உள்ளம் உற்றதே

#345
ஆண்மை கூறும் மாந்தரே அருக்கனோடும் வீதியைக்
காண்மையாகக் காண்பிரே கசடு அறுக்க வல்லிரே
தூண்மையான வாதி சூட்சம் சோபம் ஆகும் ஆகுமே
நாண்மையான வாயிலில் நடித்து நின்ற நாதமே

#346
நாதமான வாயிலில் நடித்து நின்ற சாயலில்
வேதமான வீதியில் விரிந்த முச்சுடரிலே
கீதமான ஹீயிலே கிளர்ந்து நின்ற கூவிலே
பூதமான வாயிலைப் புகல் அறிவன் ஆதியே

#347
ஆவி ஆவி ஆவி ஆவி ஐந்து கொம்பின் ஆவியே
மேவி மேவி மேவி மேவி மேதினியில் மானிடர்
வாவி வாவி வாவி வாவி வண்டல்கள் அறிந்திடார்
பாவி பாவி பாவி பாவி படியிலுற்ற மாந்தரே

#348
வித்திலே முளைத்த சோதி வில் வளைவின் மத்தியில்
உத்திலே ஒளிவது ஆகி மோனமான தீபமே
நத்திலோ திரட்சி போன்ற நாதனை அறிந்திடார்
வத்திலே கிடந்து உழன்ற வாலையான சூட்சமே

#349
வாலையோடு காலையும் வடிந்து பொங்கும் மோனமே
மாலையோடு காலையானவாறு அறிந்த மாந்தரே
மூலையான கோணமின் முளைத்து எழுந்த செஞ்சுடர்
காலையோடு பானகன்று தங்கி நின்ற மோனமே

#350
மோனமான வீதியில் முடுகி நின்ற நாதமே
ஈனம் இன்றி வேகமான வேகம் என்ன வேகமே
கானமான மூலையில் கனிந்திருந்த வாலையில்
ஞானமான செஞ்சுடர் நடந்ததே சிவாயமே

#351
உச்சி மத்தி வீதியில் ஒழிந்திருந்த சாதியில்
பச்சியுற்ற சோமனும் பரந்து நின்று உலாவவே
செச்சியான தீபமே தியானமான மோனமே
கச்சியான மோனமே கடந்ததே சிவாயமே

#352
அஞ்சி கொம்பில் நின்ற நாத மாலை போல் எழும்பியே
பிஞ்சினோடு பூ மலர்ந்து பெற்றியுற்ற சுத்தமே
செஞ்சுடர் உதித்த போது தேசிகன் சுழன்றுடன்
பஞ்சபூதம் ஆனதே பரந்து நின்ற மோனமே

#353
சடுதியான கொம்பிலே தத்துவத்தின் ஹீயிலே
அடுதியான ஆவிலே அரன் இருந்த ஹூவிலே
இடுதி என்ற சோலையில் இருந்த முச்சுடரிலே
நடுதி என்று நாதம் ஓடி நன்குற அமைத்ததே

#354
அமையும் மால் மோனமும் அரன் இருந்த மோனமும்
சமையும் பூத மோனமும் தரித்திருந்த மோனமும்
இமையும் கொண்ட வேகமும் இலங்கும் உச்சி மோனமும்
தமை அறிந்த மாந்தரே சடத்தை உற்றுநோக்கிலார்

#355
பாய்ச்சலூர் வழியிலே பரன் இருந்த சுழியிலே
காய்ச்ச கொம்பின் நுனியிலே கனி இருந்த மலையிலே
வீச்சமானது ஏதடா விரிவு தங்கும் இங்குமே
மூச்சினோடு மூச்சை வாங்கு முட்டி நின்ற சோதியே

#356
சோதி சோதி என்று நாடித் தோற்பவர் சிலவரே
ஆதி ஆதி என்று நாடும் ஆடவர் சிலவரே
வாதி வாதி என்று சொல்லும் வம்பரும் சிலவரே
நீதி நீதி நீதி நீதி நின்றிடும் முழுச் சுடர்

#357
சுடரதாகி எழும்பி எங்கும் தூபமான காலமே
இடரதாகிப் புவியும் விண்ணும் ஏகமாய் அமைக்க முன்
படரதாக நின்ற ஆதி பஞ்சபூதம் ஆகியே
அடரதாக அண்டம் எங்கும் ஆண்மையாக நின்றதே

#358
நின்றிருந்த சோதியை நிலத்தில் உற்ற மானிடர்
கண்டறிந்து கண் குளிர்ந்து காதலுற்று உலாவுவோர்
கண்டமுற்ற மேல் முனையின் காட்சி-தன்னைக் காணுவார்
நன்றியற்று நரலை பொங்கி நாதமும் மகிழ்ந்திடும்

#359
வயங்கு மோனச் செஞ்சுடர் வடிந்த சோதி நாதமும்
கயங்கள் போலக் கதறியே கருவூர் அற்ற வெளியிலே
பங்கொடு இன்றி இன்றியே படர்ந்து நின்ற பான்மையை
நயங்கள் கோ என்றே நடுங்கி நங்கையான தீபமே

#360
தீப உச்சி முனையிலே திவாகரத்தின் சுழியிலே
கோபமாறு கூவிலே கொதித்து நின்ற தீயிலே
தாபமான மூலையில் சமைந்து நின்ற சூட்சமும்
சாபமான மோட்சமும் தடிந்து நின்று இலங்குமே

#361
தேசிகன் கழன்றதே திரி முனையின் வாலையில்
வேசமோடு வாலையில் வியன் இருந்த மூலையில்
நேச சந்திரோதயம் நிறைந்திருந்த வாரமில்
வீசி வீசி நின்றதே விரிந்து நின்ற மோனமே

#362
உட்கமல மோனமில் உயங்கி நின்ற நந்தியை
விக்கலோடு கீயும் ஆகி வில் வளைவின் மத்தியில்
முள் பொதிந்தது என்னவே முடுகி நின்ற செஞ்சுடர்
கள் குவைகள் போலவும் கடிந்து நின்ற காட்சியே

#363
உந்தியில் சுழி வழியில் உச்சியுற்ற மத்தியில்
சந்திரன் ஒளி கிரணம் தாண்டி நின்ற செஞ்சுடர்
பந்தமாக வில் வளைவில் பஞ்சபூத விஞ்சையாம்
கிந்து போலக் கீயில் நின்று கீச்சுமூச்சு என்றதே

#364
செச்சை என்ற மூச்சினோடு சிகாரமும் வகாரமும்
பச்சை ஆகி நின்றதே பரவெளியின் பான்மையே
இச்சையான ஹூவிலே இருந்து எழுந்த ஹீயிலே
உச்சியான கோணத்தில் உதித்ததே சிவாயமே

#365
ஆறு மூலைக் கோணத்தில் அமைந்த ஒன்பதாத்திலே
நாறும் என்று நங்கையான நாவியும் தெரிந்திட
கூறும் என்று ஐவர் அங்கு கொண்டு நின்ற மோனமே
பாறு கொண்டு நின்றது பறந்ததே சிவாயமே

#366
பறந்ததே கறந்த போது பாய்ச்சலூர் வழியிலே
பிறந்ததே பிராணன் அன்றிப் பெண்ணும் ஆணும் அல்லவே
துறந்ததோ சிறந்ததோ தூய துங்கம் ஆனதோ
இறந்த போதில் அன்றதே இலங்கிடும் சிவாயமே

#367
அருள் இருந்த வெளியிலே அருக்கன் நின்ற இருளிலே
பொருள் இருந்த சுழியிலே புரண்டு எழுந்த வழியிலே
தெருள் இருந்த கலையிலே தியங்கி நின்ற வலையிலே
குரு இருந்த வழியில் நின்று ஹூவும் ஹீயும் ஆனதே

#368
ஆனதோர் எழுத்திலே அமைந்து நின்ற ஆதியே
கானமோடு தாலம் மீதில் கண்டறிவது இல்லையே
தானும் தானும் ஆனதே சமைந்த மாலை காலையில்
வேனலோடு மாறு போல் விரிந்ததே சிவாயமே

#369
ஆறு கொண்ட வாரியும் அமைந்து நின்ற தெய்வமும்
தூறு கொண்ட மாரியும் துலங்கி நின்ற தூபமும்
வீறுகொண்ட போனமும் விளங்கும் முள் கமலமும்
மாறுகொண்ட ஹூவிலே மடிந்ததே சிவாயமே

#370
வாயில் கண்ட கோணமில் வயங்கும் ஐவர் வைகியே
சாயல் கண்டு சார்ந்ததும் தலைமன்னாய் உறைந்ததும்
காய வண்டு கண்டதும் கருவூர் அங்கு சென்றதும்
பாயும் என்று சென்றதும் பறந்ததே சிவாயமே

#371
பறந்ததே துறந்த போது பாய்ச்சலூரின் வழியிலே
மறந்ததே கவ்வுமுற்றவாணர் கையின் மேவியே
பிறந்ததே இறந்த போதில் நீடிடாமல் கீயிலே
சிறந்து நின்ற மோனமே தெளிந்ததே சிவாயமே

#372
வடிவு பத்மாசனத்து இருத்தி மூல அனலையே
மாருதத்தினால் எழுப்பி வாசல் ஐந்து நாலையும்
முடிவு முத்திரைப்படுத்தி மூல வீணாதண்டினால்
முளரி ஆலயம் கடந்து மூலநாடி ஊடுபோய்

#373
அடி துவக்கி முடி அளவும் ஆறு மாநிலம் கடந்து
அப்புறத்தில் வெளி கடந்த ஆதி எங்கள் சோதியை
உடுபதிக்-கண் அமுது அருந்தி உண்மை ஞான உவகையுள்
உச்சிபட்டு இறங்குகின்ற யோகி நல்ல யோகியே

#374
மந்திரங்கள் உண்டு நீர் மயங்குகின்ற மானிடர்
மந்திரங்கள் ஆவது மரத்தில் ஊறல் அன்று காண்
மந்திரங்கள் ஆவது மதித்து எழுந்த வாயுவை
மந்திரத்தை உண்டவர்க்கு மரணம் ஏதும் இல்லையே

#375
மந்திரங்கள் கற்று நீர் மயங்குகின்ற மாந்தரே
மந்திரங்கள் கற்ற நீர் மரித்த போது சொல்விரோ
மந்திரங்கள் உம்முளே மதித்த நீரும் உம்முளே
மந்திரங்கள் ஆவது மனத்தின் ஐந்தெழுத்துமே

#376
உள்ளதோ புறம்பதோ உயிர் ஒடுங்கி நின்றிடம்
மெள்ள வந்து கிட்டி நீர் வினாவ வேண்டும் என்கிறீர்
உள்ளதும் பிறப்பதும் ஒத்த போது நாதமாம்
கள்ளவாசலைத் திறந்து காண வேண்டும் மாந்தரே

#377
ஓரெழுத்து லிங்கமாய் ஓதும் அட்சரத்துளே
ஓரெழுத்து இயங்குகின்ற உண்மையை அறிகிலீர்
மூவெழுத்து மூவராய் முளைத்து எழுந்த சோதியை
நாவெழுத்து நாவுளே நவின்றதே சிவாயமே

#378
முத்தி சித்தி தொந்தமாய் முயங்குகின்ற மூர்த்தியை
மற்று உதித்த அப் புனல்கள் ஆகும் மத்தி அப் புலன்
அத்தர் நித்தர் காளகண்டர் அன்பினால் அனுதினம்
உச்சரித்து உளத்திலே அறிந்து உணர்ந்துகொள்-மினே

#379
மூன்றிரண்டும் ஐந்துமாய் முயன்று எழுந்த தேவராய்
மூன்றிரண்டும் ஐந்ததாய் முயன்றதே உலகு எலாம்
ஈன்ற தாயும் அப்பனும் இயங்குகின்ற நாதமாய்
தோன்றும் ஓர் எழுத்தினோடு சொல்ல ஒன்றும் இல்லையே

#380
வெளி உருக்கி அஞ்செழுத்து விந்து நாத சத்தமும்
தளி உருக்கி நெய் கலந்து சகல சத்தி ஆனதும்
வெளியிலும் அவ் வினையிலும் இருவரை அறிந்த பின்
வெளி கடந்த தன்மையால் தெளிந்ததே சிவாயமே

#381
முப்புரத்தில் அப்புறம் முக்கணன் விளைவிலே
சிற்பரத்துள் உற்பனம் சிவாயம் அஞ்செழுத்துமாம்
தற்பரம் உதித்து நின்ற தாணு எங்கும் ஆன பின்
இப்புறம் ஒடுங்கும் ஓடி எங்கும் லிங்கம் ஆனதே

#382
ஆடி நின்ற சீவன் ஓர் அஞ்சு பஞ்சபூதமோ
கூடி நின்ற சோதியோ குலாவி நின்ற மூலமோ
நாடு கண்டு நின்றதோ நாவு கற்ற கல்வியோ
வீடு கண்டு விண்டிடின் வெட்டவெளியும் ஆனதே

#383
உருத்தரித்த போது சீவன் ஒக்க நின்ற உண்மையும்
திருத்தமுள்ளது ஒன்றிலும் சிவாயம் அஞ்செழுத்துமாம்
இருத்து நின்று உறுத்து அடங்கி ஏகபோகம் ஆன பின்
கருத்தில் நின்று உதித்ததே கபாலம் ஏந்தும் நாதனே

#384
கருத்தரித்து உதித்த போது கமல பீடம் ஆனதும்
கருத்தரித்து உதித்த போது காரணங்கள் ஆனதும்
கருத்தரித்து உதித்த போது கரணம் இரண்டு கண்களாய்
கருத்தில் நின்று உதித்ததே கபாலம் ஏந்தும் நாதனே

#385
ஆன வன்னி மூன்று கோணம் ஆறிரண்டு எட்டிலே
ஆன சீவன் அஞ்செழுத்து அகாரமிட்டு அலர்ந்தது
ஆன சோதி உண்மையும் அனாதியான உண்மையும்
ஆனது ஆனது ஆனதா அவலமாய் மறைந்திடும்

#386
ஈன்று எழுந்த எம்பிரான் திருவரங்க வெளியிலே
நான்ற பாம்பின் வாயினால் நாலு திக்கும் ஆயினான்
மூன்று மூன்று வளையமாய் முப்புரம் கடந்த பின்
ஈன்று எழுந்த அவ்வின் ஓசை எங்கும் ஆகி நின்றதே

#387
எங்கும் எங்கும் ஒன்று அலோ ஈரேழ் லோகம் ஒன்று அலோ
அங்கும் இங்கும் ஒன்று அலோ அனாதியானது ஒன்று அலோ
தங்கு தாபரங்களும் தரித்துவார் அது ஒன்று அலோ
உங்கள் எங்கள் பங்கினில் உதித்ததே சிவாயமே

#388
அம்பரத்தில் ஆடும் சோதியான வன்னி மூலமாம்
அம்பரமும் தம்பரமும் அகோரமிட்டு அலர்ந்ததும்
அம்பரக் குழியிலே அங்கமிட்டு உருக்கிட
அம்பரத்தில் ஆதியோடு அமர்ந்ததே சிவாயமே

#389
வாடிலாத பூ மலர்ந்து வண் துரிசை நாவிலே
ஓடி நின்று உருவெடுத்து உகாரமாய் அலர்ந்ததும்
ஆடி ஆடி அங்கமும் அகப்படக் கடந்த பின்
கூடி நின்று உலாவுமே குரு இருந்த கோலமே

#390
விட்டு அடி விரைத்ததோ வேர் உருக்கி நின்றதோ
எட்டி நின்ற சீவனும் ஈரேழ் லோகம் கண்டதோ
தட்டு உருவமாகி நின்ற சதாசிவத்து ஒளியதோ
வட்ட வீடு அறிந்த பேர்கள் வான தேவர் ஆவரே

#391
வானவர் நிறைந்த சோதி மானிடக் கருவிலே
வான தேவர் அத்தனைக்குள் வந்தடைவர் வானவர்
வானகமும் மண்ணகமும் வட்ட வீடு அறிந்த பின்
வான் எலாம் நிறைந்து மன்னு மாணிக்கங்கள் ஆனவே

#392
பன்னிரண்டு கால் நிறுத்திப் பஞ்சவர்ணம் உற்றிடின்
மின்னியே வெளிக்குள் நின்று வேறிடத்து அமர்ந்ததும்
சென்னியாம் தலத்திலே சீவன் நின்று இயங்கிடும்
பன்னி உன்னி ஆய்ந்தவர் பரப்பிரமம் ஆனதே

#393
உச்சி கண்டு கண்கள் கட்டி உண்மை கண்டது எவ்விடம்
மச்சுமாளிகைக்குள்ளே மானிடம் கலப்பிரேல்
எச்சிலான வாசல்களும் ஏகபோகமாய்விடும்
பச்சை மாலும் ஈசனும் பரந்ததே சிவாயமே

#394
வாயில் இட்டு நல் உரிசை அட்சரத்து ஒலியிலே
கோயில் இட்டு வாவியுமாம் கொம்பிலே உலர்ந்தது
ஆயில் இட்ட காயமும் அனாதி இட்ட சீவனும்
வாயு விட்ட வன்னியும் வளர்ந்ததே சிவாயமே

#395
அட்சரத்தை உச்சரித்து அனாதி அங்கி மூலமாம்
அட்சரத்தையும் திறந்த சோரமிட்டு அலர்ந்ததும்
அட்சரத்தில் உட்கரம் அகப்படக் கடந்த பின்
அட்சரத்தில் ஆதியோடு அமர்ந்ததே சிவாயமே

#396
கோயிலும் குளங்களும் குறியினில் குருக்களாய்
மாயிலும் மடியிலும் மனத்திலே மயங்குறீர்
ஆயனை அரனையும் அறிந்து உணர்ந்துகொள்விரேல்
தாயினும் தகப்பனோடு தான் அமர்ந்தது ஒக்குமே

#397
கோயில் எங்கும் ஒன்று அலோ குளங்கள் நீர்கள் ஒன்று அலோ
தேயு வாயு ஒன்று அலோ சிவனும் அங்கே ஒன்று அலோ
ஆய சீவன் எங்குமாய் அமர்ந்துவார் அது ஒன்று அலோ
காயம் ஈது அறிந்த பேர்கள் காட்சியாவர் காணுமே

#398
காது கண்கள் மூக்கு வாய் கலந்துவார் அது ஒன்று அலோ
சோதியிட்டு எடுத்ததும் சுகங்கள் அஞ்சும் ஒன்று அலோ
ஓதி வைத்த சாத்திரம் உதித்துவார் அது ஒன்று அலோ
நாத வீடு அறிந்த பேர்கள் நாதர் ஆவர் காணுமே

#399
அவ் உதித்த அட்சரத்தின் உட்கலந்த அட்சரம்
சவ் உதித்த மந்திரம் சம்புளத்து இருந்ததால்
மவ் உதித்த மாய்கையால் மயங்குகின்ற மாந்தர்காள்
உவ் உதித்தது அவ்வுமாய் உருத்தரித்த உண்மையே

#400
அகாரம் என்னும் அக்கரத்தில் அக்கரம் ஒழிந்ததோ
அகாரம் என்னும் அக்கரத்தில் அவ்வு வந்து உதித்ததோ
உகாரமும் அகாரமும் ஒன்றி நன்று நின்றதோ
விகாரம் அற்ற ஞானிகாள் விரித்து உரைக்க வேணுமே

#401
சத்தியாவது உன் உடல் தயங்கு சீவன் உள் சிவம்
பித்தர்காள் இதற்குமேல் பிதற்றுகின்றது இல்லையே
சுத்தி ஐந்து கூடம் ஒன்று சொல் இறந்ததோர் வெளி
சத்தி சிவமும் ஆகி நின்று தண்மை ஆவது உண்மையே

#402
சுக்கிலத் துளையிலே சுரோணிதக் கருவுளே
முச்சதுர வாசலில் முளைத்து எழுந்த மோட்டினில்
மெய்ச் சதுர மெய்யுளே விளங்கு ஞான தீபமாய்
உச்சரிக்கும் மந்திரம் ஓம் நமசிவாயமே

#403
அக்கரம் அனாதி அல்ல ஆத்துமா அனாதி அல்ல
புக்கு இருந்த பூதமும் புலன்களும் அனாதி அல்ல
தக்க மிக்க நூல்களும் சாஸ்திரம் அனாதி அல்ல
ஒக்க நின்று உடன் கலந்த உண்மை காண் அனாதியே

#404
மென்மையாகி நின்றது ஏது விட்டு நின்று தொட்டது ஏது
உண்மையாக நீ உரைக்க வேணும் எங்கள் உத்தமா
பெண்மையாகி நின்றது ஒன்று விட்டு நின்ற தொட்டதை
உண்மையாய் உரைக்க முத்தி உள் கலந்து இருந்ததே

#405
அடக்கினால் அடங்குமோ அண்டம் அஞ்செழுத்துளே
உடக்கினால் எடுத்த காயம் உண்மை என்று உணர்ந்து நீ
சடக்கில் ஆறு வேதமும் தரிக்க ஓதிலாமையால்
விடக்கு நாயும் மாய ஓதி வேறுவேறு பேசுமோ

#406
உண்மையான சக்கரம் உபாயமாய் இருந்ததும்
தண்மையான காயமும் தரித்த ரூபம் ஆனதும்
வெண்மையாகி நீறியே விளைந்து நின்றது ஆனதும்
உண்மையான ஞானிகள் விரித்து உரைக்க வேண்டுமே

#407
எள் அகத்தில் எண்ணெய் போல எங்கும் ஆகி எம்பிரான்
உள் அகத்திலே இருக்க ஊசலாடும் மூடர்காள்
கொள்ளை நாயின் வாலினைக் குணக்கெடுக்க வல்லிரேல்
வள்ளல் ஆகி நின்ற சோதி காணலாகும் மெய்ம்மையே

#408
வேணும் என்ற ஞானமும் விரும்புகின்ற நூலிலே
தாணு உண்டு அங்கு என்கிறீர் தரிக்கிலீர் மறக்கிலீர்
தாணு ஒன்று மூலநாடி தன்னுள் நாடி உம்முளே
காணும் அன்றி வேறு யாவும் கனா மயக்கம் ஒக்குமே

#409
வழக்கிலே உரைக்கிறீர் மனத்துளே தவிக்கிறீர்
உழக்கு இலாது நாழியானவாறு போலும் ஊமைகாள்
உழக்கு நாலு நாழியானவாறு போலும் உம்முளே
வழக்கிலே உரைக்கிறீர் மனத்துள் ஈசன் மன்னுமே

#410
அறத் திறங்களுக்கு நீ அண்டம் எண் திசைக்கும் நீ
திறத் திறங்களுக்கு நீ தேடுவார்கள் சிந்தை நீ
உறக்கம் நீ உணர்வு நீ உள் கலந்த சோதி நீ
மறக்கொணாத நின் கழல் மறப்பினும் குடிகொளே

#411
ஆடுகின்ற எம்பிரானை அங்குமிங்கும் நின்று நீர்
தேடுகின்ற வீணர்காள் தெளிவது ஒன்றை ஓர்கிலீர்
நாடி நாடி உம்முளே நவின்று நோக்க வல்லிரேல்
கூடொணாத தற்பரம் குவிந்து கூடல் ஆகுமே

#412
சுத்தி ஐந்து கூடம் ஒன்று சொல் இறந்ததோர் வெளி
சத்தியும் சிவமும் ஆகி நின்ற தன்மை ஓர்கிலீர்
சத்தியாவது உம் உடல் தயங்கு சீவன் உள் சிவம்
பித்தர்காள் அறிந்துகொள் பிரான் இருந்த கோலமே

#413
அகாரமானது அம்பலம் அனாதியானது அம்பலம்
உகாரமானது அம்பலம் உண்மையானது அம்பலம்
மகாரமானது அம்பலம் வடிவமானது அம்பலம்
சிகாரமானது அம்பலம் தெளிந்ததே சிவாயமே

#414
சக்கரம் பறந்தது ஓடி சக்கரம் மேல் பலகையாய்
செக்கு இலாமல் எண்ணெய் போல் சிங்கு வாயு தேயுவும்
உக்கிலே ஒளி கலந்து யுகங்களும் கலக்கமாய்
புக்கிலே புகுந்த போது போனவாறு அது எங்ஙனே

#415
வளர்ந்து எழுந்த கொங்கை-தன்னை மாயம் என்று எண்ணி நீ
அருள் கொள் சீவரார் உடம்பு உடைமையாகத் தேர்வீர்காள்
விளங்கு ஞானம் மேவியே மிக்கோர் சொல்லைக் கேட்பிரேல்
களங்கம் அற்று நெஞ்சுளே கருத்து வந்து புக்குமே

#416
நாலு வேதம் ஓதுகின்ற ஞானம் ஒன்று அறிவிரோ
நாலு சாமம் ஆகியே நவின்ற ஞான போதமாய்
ஆலம் உண்ட கண்டனும் அயனும் அந்த மாலுமாய்ச்
சால உன்னி நெஞ்சுளே தரித்ததே சிவாயமே

#417
சுற்றம் என்று சொல்வதும் சுருதி முடிவில் வைத்திடீர்
அத்தன் நித்தம் ஆடியே அமர்ந்திருந்தது எவ்விடம்
பத்தி முற்றி அன்பர்கள் பரத்தில் ஒன்று பாழ் அது
பித்தரே இதைக் கருதி பேசலாவது எங்ஙனே

#418
எங்ஙனே விளக்கதுக்குள் ஏற்றவாறு நின்றுதான்
எங்ஙனே எழுந்தருளி ஈசன் நேசர் என்பரேல்
அங்ஙனே இருந்தருளும் ஆதியான தற்பரம்
சிங்கம் அண்மி யானை போலத் திரிமலங்கள் அற்றதே

#419
அற்ற உள் அகத்தையும் அலகிடும் மெழுக்கிடும்
மெத்த தீபம் இட்டதில் பிறவாத பூசை ஏத்தியே
நல் தவம் புரிந்து ஏகநாதர் பாதம் நாடியே
கற்று இருப்பதே சரிதை கண்டுகொள்ளும் உம்முளே

#420
பார்த்து நின்றது அம்பலம் பரன் ஆடும் அம்பலம்
கூத்து நின்றது அம்பலம் கோரமானது அம்பலம்
வார்த்தையானது அம்பலம் வன்னியானது அம்பலம்
சீற்றமானது அம்பலம் தெளிந்ததே சிவாயமே

#421
சென்று சென்றிடம்-தொறும் சிறந்த செம்பொன் அம்பலம்
அன்றும் இன்றும் நின்றதோர் அனாதியானது அம்பலம்
என்றும் என்றும் இருப்பதோர் உறுதியான அம்பலம்
ஒன்றி ஒன்றி நின்றதுள் ஒழிந்ததே சிவாயமே

#422
தந்தை தாய் தமரும் நீ சகல தேவதையும் நீ
சிந்தை நீ தெளிவு நீ சித்தி முத்திதானும் நீ
விந்து நீ விளைவு நீ மேலதாய வேதம் நீ
எந்தை நீ இறைவ நீ என்னை ஆண்ட ஈசனே

#423
எப்பிறப்பிலும் பிறந்திருந்து அழிந்த ஏழைகாள்
இப் பிறப்பிலும் பிறந்து என்ன நீறு பூசுறீர்
அப்புடன் மலம் அறுத்து ஆசை நீக்க வல்லிரேல்
செப்பும் நாத ஓசையில் தெளிந்து காணல் ஆகுமே

#424
மந்திரங்கள் கற்று நீர் மயங்குகின்ற மாந்தரே
மந்திரங்கள் கற்று நீர் மரித்த போது சொல்விரோ
மந்திரங்கள் உம்முளே மதிக்க நீறும் உம்முளே
மந்திரங்களாவது மனத்தின் ஐந்தெழுத்துமே

#425
எட்டு யோகமானதும் இயங்குகின்ற நாதமும்
எட்டு அக்கரத்துளே உகாரமும் அகாரமும்
விட்டு அலர்ந்த மந்திரம் வீணாதண்டின் ஊடுபோய்
அட்ட அட்சரத்துளே அமர்ந்ததே சிவாயமே

#426
பிரான் பிரான் என்று நீர் பினத்துகின்ற மூடரே
பிரானை விட்டு எம்பிரான் பிரிந்தவாறு அது எங்ஙனே
பிரானுமாய் பிரானுமாய் பேருலகுதானுமாய்
பிரானிலே முளைத்து எழுந்த பித்தர் காணும் உம் உடல்

#427
ஆதி இல்லை அந்தம் இல்லை ஆன நாலு வேதம் இல்லை
சோதி இல்லை சொல்லும் இல்லை சொல் இறந்த தூவெளி
நீதி இல்லை நேசம் இல்லை நிச்சயப்படாததும்
ஆதி கண்டுகொண்ட பின் அஞ்செழுத்தும் இல்லையே

#428
அம்மையப்பன் ஆன நீ அமர்ந்த போது அறிகிலீர்
அம்மையப்பன் ஆன நீர் ஆதியான பாசமே
அம்மையப்பன் நின்னை அன்றி யாரும் இல்லையான பின்
அம்மையப்பன் நின்னை அன்றி யாரும் இல்லை இல்லையே

#429
நூறு கோடி மந்திரம் நூறு கோடி ஆகமம்
நூறு கோடி நாள் இருந்து ஊடாடினாலும் என் பயன்
ஆறும் ஆறும் ஆறுமாய் அகத்தில் ஓர் எழுத்ததாய்
சீரை ஓத வல்லிரேல் சிவபதங்கள் சேரலாம்

#430
முந்த ஓர் எழுத்துளே முளைத்து எழுந்த செஞ்சுடர்
அந்த ஓர் எழுத்துளே பிறந்து காயம் ஆனதும்
அந்த ஓர் எழுத்துளே ஏகம் ஆகி நின்றதும்
அந்த ஓர் எழுத்தையும் அறிந்து உணர்ந்துகொள்ளுமே

#431
கூட்டமிட்டு நீங்களும் கூடி வேதம் ஓதுறீர்
ஏட்டகத்துள் ஈசனும் இருப்பது என் எழுத்துளே
நாட்டமிட்டு நாடிடும் நாலு மூன்று-தன்னுளே
ஆட்டகத்துள் ஆடிடும் அம்மை ஆணை உண்மையே

#432
காக்கை மூக்கை ஆமையார் எடுத்துரைத்த காரணம்
நாக்கை ஊன்றி உள் வளைத்து ஞான நாடி ஊடுபோய்
ஏக்கை நோக்க அட்சரம் இரண்டெழுத்தும் ஏத்திடில்
பார்த்த பார்த்த திக்கு எலாம் பரப்பிரம்மம் ஆனதே

#433
கொள்ளொணாது குவிக்கொணாது கோதறக் குலைக்கொணாது
அள்ளொணாது அணுகொணாது ஆதி மூலம் ஆனதைத்
தெள்ளொணாது தெளியொணாது சிற்பரத்தின் உட்பணன்
வில்லொணாது பொருளை யான் விளம்புமாறு அது எங்ஙனே

#434
ஓசையுள்ள கல்லை நீர் உடைத்து இரண்டாய் செய்துமே
வாசலில் பதித்த கல்லை மழுங்கவே மிதிக்கிறீர்
பூசனைக்கு வைத்த கல்லில் பூவும் நீரும் சாத்துறீர்
ஈசனுக்கு உகந்த கல் எந்தக் கல்லு சொல்லுமே

#435
ஒட்டுவைத்து கட்டி நீ உபாயமான மந்திரம்
கட்டுபட்ட போதிலும் கர்த்தன் அங்கு வாழுமோ
எட்டும் எட்டும் எட்டுளே இயங்குகின்ற வாயுவை
வட்டுமிட்ட அவ்விலே வைத்து உணர்ந்துபாருமே

#436
இந்த ஊரில் இல்லை என்று எங்கு நாடி ஓடுறீர்
அந்த ஊரில் ஈசனும் அமர்ந்து வாழ்வது எங்ஙனே
அந்தமான பொந்திலாரில் மேவி நின்ற நாதனை
அந்தமான சீயில் அவ்வில் அறிந்து உணர்ந்துகொள்ளுமே

#437
புக்கு இருந்தது உம்முளே பூரியிட்ட தோத்திரம்
தொக்கு சட்சு சிங்குவை ஆக்கிராணன் சூழ்த்திடில்
அக்குமணி கொன்றை சூடி அம்பலத்துள் ஆடுவார்
மிக்க சோதி அன்புடன் விளம்பிடாது பின்னையே

#438
பின் எழுந்த மாங்கிசத்தை பேதையர் கண் பற்றியே
பின்பு மாங்கிசத்தினால் போக மாய்கை பண்ணினால்
துன்புறும் வினைகள்தான் சூழ்ந்திடும் பின் என்று அலோ
அன்பராய் இருந்த பேர்கள் ஆறு நீந்தல் போல்விரே

#439
விட்டு இருந்தது உம்முளே விதனம் அற்று இருக்கிறீர்
கட்டிவைத்த வாசல் மூன்று காட்சியான வாசல் ஒன்று
கட்டிவைத்த வாசலும் கதவு தாள் திறந்து போய்த்
திட்டமான ஈசனைத் தெளியும் மாங்கிசத்துளே

#440
ஆகும் ஆகும் ஆகுமே அனாதியான அப் பொருள்
ஏகர் பாதம் நாடி நாடி ஏத்தி நிற்க வல்லிரேல்
பாகு சேர் மொழி உமைக்குப் பாலன் ஆகி வாழலாம்
வாகுடனே வன்னியை மருவியே வருந்திடீர்

#441
உண்மையானது ஒன்று அது ஒன்றை உற்றுநோக்கி உம்முளே
வண்மையான வாசி உண்டு வாழ்த்தி ஏத்த வல்லிரேல்
தண்மை பெற்று இருக்கலாம் தவமும் வந்து நேரிடும்
கன்ம தன்மம் ஆகும் ஈசர் காட்சிதானும் காணுமே

#442
பாலனாக வேணும் என்று பத்தி முற்றும் என்பரே
நாலு பாதம் உண்டு அதில் நனைந்து இரண்டு அடுத்ததால்
மூலநாடி-தன்னில் வன்னி மூட்டி அந்த நீர் உண
ஏலவார்குழலியோடே ஈசர் பாதம் எய்துமே

#443
எய்தும் நின்னை அன்பினால் இறைஞ்சி ஏத்த வல்லிரேல்
எய்தும் உண்மை-தன்னிலே இறப்பிறப்பு அகற்றிடும்
மை இலங்கு கண்ணி பங்கன் வாசி வானில் ஏறி முன்
செய்த வல் வினைகளும் சிதறும் அது திண்ணமே

#444
திண்ணம் என்று சேதி சொன்ன செவ்வியோர்கள் கேள்-மினோ
அண்ணல் அன்புள் அன்பு உருகி அறிந்து நோக்கலாயிடும்
மண் அதிர விண் அதிர வாசியை நடத்திடில்
நண்ணி எங்கள் ஈசனும் நமது உடலில் இருப்பனே

#445
இருப்பன் எட்டெட்டு எண்ணிலே இருந்து வேறதாகுவன்
நெருப்பு வாயும் நீரும் மண்ணும் நீள் விசும்பும் ஆகுவான்
கருப் புகுந்து காலமே கலந்து சோதி நாதனைக்
குருப் புனலில் மூழ்கினார் குறித்து உணர்ந்துகொள்வரே

#446
கொள்ளுவார்கள் சிந்தையில் குறிப்பு உணர்ந்த ஞானிகள்
விள்ளுவார்கள் பக்குவத்தில் வேண்டி வேண்டி ஏத்தினால்
உள்ளுமாய் புறம்புமாய் உணர்வதற்கு உணர்வுமாய்த்
தெள்ளிதாக நின்ற சோதி செம்மையைத் தெளிந்திடே

#447
தெளிந்த நல் சரியை-தன்னில் சென்று சாலோகம் பெறும்
தெளிந்த நல் கிரியை பூசை சேரலாம் சாமீபமே
தெளிந்த நல் யோகம்-தன்னில் சேரலாகும் சாரூபம்
தெளிந்த ஞானம் நான்கினும் சேரலாம் சாயுச்யமே

#448
சேருவார்கள் ஞானம் என்று செப்புவார் தெளிவுளோர்
சேருவார்கள் நாலு பாதச் செம்மை என்றது இல்லையே
சேருவார்கள் சிவகதி திருவருளைப் பெற்ற பேர்
சேருமாறு கண்டு நாலும் செய் தொழில் திடப்படே

#449
திறம் அளிக்கும் நாலு பாதம் செம்மையும் திடப்படார்
அறிவிலிகள் தேசம் நாடி அவத்திலே அலைவதே
குழியதனைக் காட்டி உள் குறித்து நோக்க வல்லிரேல்
வெறி கமழ் சடையுடையோன் மெய்ப் பதம் அடைவரே

#450
அடைவுளோர்கள் முத்தியை அறிந்திடாத மூடரே
படையுடைய தத்துவமும் பாதகங்கள் அல்லவோ
மடை திறக்க வாரியின் மடையில் ஏறுமாறு போல்
உடலில் மூலநாடியை உயர ஏற்றி ஊன்றிடே

#451
ஊன்றி ஏற்றி மண்டலம் உருவி மூன்று தாள் திறந்து
ஆன்று தந்தி ஏறிடில் அமுர்தம் வந்து இறங்கிடும்
நான்று இது என்று தொண்டருக்கு நாதனும் வெளிப்படும்
ஆன்றியும் உயிர் பரம் பொருந்தி வாழ்வதாகவே

#452
ஆக மூலநாடியில் அனல் எழுப்பி அன்புடன்
மோகமான மாயையில் முயல்வது மொழிந்திடில்
தாக மேரு நாடி ஏகர் ஏகமானவாறு போல்
ஏகர் பாதம் அன்புடன் இறைஞ்சினார் அறிவரே

#453
அறிந்து நோக்கி உம்முளே அயன் தியானம் உம்முளே
இருந்திராமல் ஏகர் பாதம் பெற்றிருப்பது உண்மையே
அறிந்து மீள வைத்திடா வகையும் மரணம் ஏத்தினார்
செறிந்து மேலை வாசலைத் திறந்து பாரும் உம்முளே

#454
சோதியாக உம்முளே தெளிந்து நோக்க வல்லிரேல்
சோதி வந்து உதித்திடும் துரியாதீதம் உற்றிடு
ஆதி சக்கரத்தினில் அமர்ந்து தீர்த்தம் ஆடுவன்
பேதியாது கண்டுகொள் பிராணனைத் திருத்தியே

#455
திருவும் ஆகிச் சிவனும் ஆகித் தெளிந்துளோர்கள் சிந்தையில்
மருவிலே எழுந்து வீசும் வாசனையது ஆகுவன்
கருவிலே விழுந்து எழுந்த கன்ம வாதனை எலாம்
பருதி முன் இருளதாயப் பறியும் அங்கி பாருமே

#456
பாரும் எந்தை ஈசர் வைத்த பண்பிலே இருந்து நீர்
சேருமே நடு அறிந்து செம்மையான அப் பொருள்
வேரையும் முடியையும் விரைந்து தேடி மால் அயன்
பார் இடந்து விண்ணிலே பறந்தும் கண்டது இல்லையே

#457
கண்டிலாது அயன் மால் என்று காட்சியாகச் சொல்கிறீர்
மிண்டிலால் அரனுடன் மேவலாய் இருக்குமோ
தொண்டுமட்டும் அன்புடன் தொழுது நோக்க வல்லிரேல்
பண்டு முப்புரம் எரித்த பக்தி வந்து முற்றுமே

#458
முற்றுமே அவன் ஒழிந்து முன்பின் ஒன்றும் காண்கிலேன்
பற்றிலாத ஒன்று தன்னை பற்றி நிற்க வல்லது
கற்றதாலே ஈசர் பாதம் காணலாய் இருக்குமோ
பெற்ற பேரை அன்புடன் பிரியமாகக் கேளுமே

#459
கேட்டு நின்ற உன் நிலை கிடைத்த காலத்துளே
வாட்டமுள்ள தத்துவ மயக்கமும் அகற்றிடும்
வீட்டிலே வெளியதாகும் விளங்க வந்து நேரிடும்
கூட்டி வன்னி மாருதம் குயத்தை விட்டு எழுப்புமே

#460
எழுப்பி மூலநாடியை இதப்படுத்தலாகுமே
மழுப்பிலாத சபையை நீர் வலித்து வாங்க வல்லிரேல்
சுழுத்தியும் கடந்துபோய் சொப்பனத்தில் அப்புறம்
அழுத்தி ஓரெழுத்துளே அமைப்பது உண்மை ஐயனே

#461
அல்லது இல்லை என்றுதான் ஆவியும் பொருள் உடல்
நல்ல ஈசர் தாள் இணைக்கும் நாதனுக்கும் ஈந்திலை
என்றும் என்னுள் நேசமும் வாசியை வருந்தினால்
தொல்லையாம் வினை விடு என்று தூரதூரம் ஆனதே

#462
ஆனதே பதியது அற்றதே பசு பாசம்
போனதே மலங்களும் புலன்களும் வினைகளும்
கானகத்தில் இட்ட தீயில் காற்று வந்து அடுத்ததோ
ஊனகத்தில் வாயு உன்னி ஒன்றியே உலாவுமே

#463
உலாவும் உவ்வும் மவ்வுமாய் உதித்து அடர்ந்து நின்றதும்
உலாவி ஐம்புலன்களும் ஒரு தலத்து இருந்திடும்
நிலாவும் அங்கு நேசம் ஆகி நின்று அமுர்தம் உண்டுதாம்
குலாவும் எங்கள் ஈசனைக் குறித்து உணர்ந்து கும்பிடே

#464
கும்பிடும் கருத்துளே குகனை ஐங்கரனையும்
நம்பியே இடம் வலம் நமஸ்கரித்து நாடிட
எம்பிரானும் அம்மையும் இருத்தியே நடுவனைத்
தும்பி போல வாசகம் தொடர்ந்து சோம்பி நீங்குமே

#465
நீங்கும் ஐம்புலன்களும் நிறைந்த வல் வினைகளும்
ஆங்காரமாம் ஆசையும் அருந்து அடர்ந்த பாவமும்
ஓங்காரத்தின் உள் இருந்த ஒன்பது ஒழிந்து ஒன்றில் அத்
தூங்க ஈசர் சொற்படி துணிந்திருக்க சுத்தமே

#466
நினைப்பது ஒன்று கண்டிலேன் நீ அலாது வேறு இலை
நினைப்புமாய் மறப்புமாய் நின்ற மாய்கை மாய்கையே
அனைத்துமாய் அகண்டமாய் அனாதி முன் அனாதியாய்
நினக்குள் நான் எனக்குள் நீ நினைக்குமாறு அது எங்ஙனே

#467
கருக் கலந்த காலமே கண்டு நின்ற காரணம்
உருக் கலந்த போது அலோ உன்னை நான் உணர்ந்தது
விரிக்கில் என் மறைக்கில் என் வினைக்கு இசைந்த போது எலாம்
உருக் கலந்து நின்ற போது நீயும் நானும் ஒன்று அலோ

#468
ஞான நூல்கள் தேடியே நவின்ற ஞான யோகிகாள்
ஞானமான சோதியை நாடியுள் அறிகிலீர்
ஞானம் ஆகி நின்றதோர் நாதனை அறிந்த பின்
ஞானமற்றது இல்லை வேறு நாம் உரைத்தது உண்மையே

#469
கருத்தரிப்பதற்கு முன் காயம் நின்றது எவ்விடம்
உருத்தரிப்பதற்கு முன் உயிர்ப்பு நின்றது எவ்விடம்
அருள் பொதிந்த சிந்தையில் மயக்கம் நின்றது எவ்விடம்
விருப்பு உணர்ந்த ஞானிகள் விரித்து உரைக்க வேணுமே

#470
கருவினில் கருவதாய் எடுத்த ஏழு தோற்றமும்
இரு வினைப் பயத்தினால் பிறந்து இறந்து உழன்றிடும்
மறு வினைப் பிறவி மூன்று காலமும் வகுத்த பின்
உருவினைப் பயன் இது என்று உணர்ந்த ஞானி சொல்லுமே

#471
வாயில் எச்சில் போகவே நீர் குடித்து துப்புவீர்
வாய் இருக்க எச்சில் போனவாறு அது என்னது எவ்விடம்
வாயில் எச்சில் அல்லவோ நீர் உரைத்த மந்திரம்
நாதனை அறிந்த போது நாடும் எச்சில் ஏது சொல்

#472
தொடக்கு அது என்று நீர் விழத் தொடங்குகின்ற ஊமர்காள்
தொடக்கு இருந்தது எவ்விடம் சுத்தியானது எவ்விடம்
தொடக்கு இருந்தவாறு அறிந்து சுத்திபண்ண வல்லிரேல்
தொடக்கு இலாத சோதியைத் தொடர்ந்து காணலாகுமே

#473
மேதியோடும் ஆவுமே விரும்பியே உணர்ந்திடில்
சாதிபேதமாய் உருத்தரிக்குமாறு போலவே
வேதம் ஓதுவானுடன் புலைச்சி சென்று மேவிடில்
பேதமாய்ப் பிறக்கு இலாதவாறு அது என்ன பேசுமே

#474
வகைக் குலங்கள் பேசியே வழக்குரைக்கும் மாந்தர்காள்
தொகைக் குலங்களான நேர்மை நாடியே உணர்ந்த பின்
மிகைத்த சுக்கிலம் அன்றியே வேறும் ஒன்று கண்டிலீர்
நகைத்த நாதன் மன்றுள் நின்ற நந்தினியாரும் பேசுமே

#475
ஓதும் நாலு வேதமும் உரைத்த சாஸ்திரங்களும்
பூத தத்துவங்களும் பொருந்தும் ஆகமங்களும்
சாதிபேத வன்மையும் தயங்குகின்ற நூல்களும்
பேதபேதம் ஆகியே பிறந்து உழன்று இருந்ததே

#476
உறங்கில் என் விழிக்கில் என் உணர்வு சென்று ஒடுங்கில் என்
திறம்பில் என் திகைக்கில் என் சில திசைகள் எட்டில் என்
புறம்பும் உள்ளும் எங்ஙணும் பொதிந்திருந்த தேகமாய்
நிறைந்திருந்த ஞானிகள் நினைப்பது ஏதும் இல்லையே

#477
அங்க லிங்கம் பூண்டு நீர் அகண்ட பூசைசெய்கிறீர்
அங்க லிங்கம் பூண்டு நீர் அமர்ந்திருந்த மார்பனே
எங்கும் ஓடி எங்குமெங்கும் ஈடு அழிந்து மாய்குகிறீர்
செங்கல் செம்பு கல் எலாம் சிறந்து பார்க்கும் மூடரே

#478
தீட்டம் தீட்டம் என்று நீர் தினம் முழுகும் மூடரே
தீட்டமாகி அல்லவோ திரண்டு காயம் ஆனது
பூட்ட காயம் உம்முளே புகழுகின்ற பேயரே
தீட்டு வந்துகொண்டு அலோ தெளிந்ததே சிவாயமே

#479
மூலநாடி-தம்முளே முளைத்து எழுந்த வாயுவை
நாளும் நாளும் நம்முளே நடு இருத்த வல்லிரேல்
பாலன் ஆகும் உம் உடல் பறந்துபோகலாய்விடும்
ஆலம் உண்ட கண்டர் பாதம் அம்மை பாதம் உண்மையே

#480
உந்தி மேலே நாலு மூன்று ஓம் நமசிவாயமாம்
சந்தி சந்தி என்று நீர் சாற்றுகின்ற பேயரே
முந்த வந்து நம்முளே மூலநாடி ஊடுபோய்
அந்தி சந்தி அற்றிட அறிந்து உணர்ந்துபாருமே

#481
வன்னி மூன்று தீயினில் வாழும் எங்கள் நாதனும்
கன்னியானது உள் இருக்கக் காதல்கொண்டது எவ்விடம்
சென்னி நாலு கை இரண்டு சிந்தையில் இரண்டில் ஒன்று
உன்னி உன்னி நம்முளே உய்த்து உணர்ந்துபாருமே

#482
தொண்டுசெய்து நீங்களும் சூழ ஓடி மாள்கிறீர்
உண்டு உழன்று நும்முளே உற்று உணர்ந்துபார்க்கிலீர்
வண்டு உலாவு சோலை சூழ் வாழும் எங்கள் நாதனும்
பண்டு போல நம்முளே பகுத்து இருப்பன் ஈசனே

#483
அரியதோர் நமச்சிவாயம் ஆதி அந்தம் ஆனதும்
ஆறிரண்டு நூறு கோடி அளவிடாத மந்திரம்
தெரிய நாலு வேதம் ஆறு சாத்திர புராணமும்
தேடுமாறும் அயனும் சர்வ தேவ தேவ தேவனே

#484
பரம் உனக்கு எனக்கு வேறு பயமும் இல்லை பாரையா
கரம் உனக்கு நித்தமும் குவித்திடக் கடமையாம்
சிரம் முருக்கி அமுது அளித்த சீர் உலாவும் நாதனே
உரம் எனக்கு நீ அளித்த உண்மை உண்மை உண்மையே

#485
மூலவட்டம் மீதிலே முளைத்த ஐந்தெழுத்திலே
கோலவட்டம் மூன்றுமாய்க் குளிர்ந்து அலர்ந்து நின்ற தீ
ஞாலவட்ட மன்றுளே நவின்ற ஞானி மேலதாய்
ஏலவட்டம் ஆகியே இருந்ததே சிவாயமே

#486
என் அகத்தில் என்னை நான் எங்கும் ஓடி நாடினேன்
என் அகத்தில் என்னை அன்றி ஏதும் ஒன்று கண்டிலேன்
மின் எழும்பி விண்ணகத்தின் மின் ஒடுங்குமாறு போல்
என் அகத்துள் ஈசனோடு யானும் அல்லது இல்லையே

#487
நாலு வேதம் ஓதுகின்ற ஞானம் ஒன்று அறிவிரோ
நாலு சாமம் ஆகியும் நவின்ற ஞான போதமாய்
ஆலம் உண்ட கண்டனும் அயனும் அந்த மாலுமாய்ச்
சால உன்னி நெஞ்சிலே தரித்ததே சிவாயமே

#488
முச்சதுர மூலம் ஆகி மூன்றதான பேதமாய்
அச் சதுரம் உம்முளே அடங்கி வாசி யோகமாம்
மெய்ச் சதுர மெய்யுளே விளங்கு ஞான தீபமாய்
உச்சரித்த மந்திரம் ஓம் நமசிவாயமே

#489
மூல மண்டலத்துளே முச்சதுர மாயமாய்
நாலு வாசல் எண் விரலில் உடுத்து உதித்த மந்திரம்
கோலி என்றும் ஐந்துமாய்க் குளிர்ந்து அலந்து நின்ற நீ
மேலும் மேலும் நாடினேன் விழைந்ததே சிவாயமே

#490
இடங்கள் பண்ணி சுத்திசெய்தே இட்ட பீடம் மீதிலே
அடங்க நீறு பூசல்செய்து அரும் தவங்கள் பண்ணுவீர்
ஒடுங்குகின்ற நாதனார் உதித்த ஞானம் எவ்விடம்
அடங்குகின்றது எவ்விடம் அறிந்து பூசைசெய்யுமே

#491
புத்தகங்களைச் சுமந்து பொய்களைப் பிதற்றுவீர்
செத்திடம் பிறந்திடம் அது எங்ஙன் என்றே அறிகிலீர்
அத்தனைய சித்தனை அறிந்து நோக்க வல்லிரேல்
உத்தமத்துள் ஆய சோதி உணரும் போகம் ஆகுமே

#492
அருளிலே பிறந்து உதித்து மாயை ரூபம் ஆகியே
இருளிலே தயங்குகின்ற ஏழை மாந்தர் கேள்-மினோ
பொருளிலே தவம் புனைந்து பொருந்தி நோக்க வல்லிரேல்
மருளது ஏது வன்னியின் மறைந்ததே சிவாயமே

#493
கருக் கலந்த காலமே கண்டிருந்த காரணா
உருக் கலந்த சோதியைத் தெளிந்து யான் அறிந்த பின்
தருக் கலந்த சோதியைத் தெளிந்து யான் அறிந்த பின்
இருக்கிலேன் இறக்கிலேன் இரண்டும் அற்று இருந்ததே

#494
தன்ம சிந்தையாம் அளவும் தவம் அறியாத் தன்மையாய்க்
கன்ம சிந்தை வெயில் உழன்று கருத்து அமிழ்ந்த கசடரே
சென்மசென்மம் தேடியும் தெளிவொணாத செல்வனை
நன்மையாக உம்முளே நயந்து காண வேண்டுமே

#495
கள்ள உள்ளமே இருந்து கடந்த ஞானம் ஓதுவீர்
கள்ளம் உள் அறுத்த போது கதியிது அன்றிக் காண்கிலீர்
உள்ளமே விளக்கி நித்தம் ஒளி அணுக வல்லிரேல்
தெள்ளு ஞானம் உம்முளே சிறந்ததே சிவாயமே

#496
காண வேண்டும் என்று நீர் கடல் மலைகள் ஏறுவீர்
ஆணவம் அது அல்லவோ அறிவில்லாத மாந்தரே
வேணும் என்று அவ் ஈசர் பாதம் மெய்யுளே தரிப்பிரேல்
தாணுவாக நின்ற சீவன் தான் சிவமது ஆகுமே

#497
அணுவினொடு அகண்டமாய் அளவிலாத சோதியைக்
குணமதாக உம்முளே குறித்து நோக்கின் முத்தியாம்
மிணமிணென்று விரலை எண்ணி மீளொணாத மயக்கமாய்
துணிவிலாதபடியினால் தொடர்ந்து பூசைசெய்குவீர்

#498
எச்சில் எச்சில் என்று நீர் இடைந்திருக்கும் ஏழைகாள்
துச்சில் எச்சில் அல்லவோ தூய காயம் ஆனதும்
வைத்த எச்சில் தேன் அலோ வண்டின் எச்சில் பூ அலோ
கைச்சுதாவில் வைத்துடன் கறந்த பாலும் எச்சிலே

#499
தீர்த்த லிங்க மூர்த்தி என்று தேடி ஓடும் தீதரே
தீர்த்த லிங்கம் உள்ளில் நின்ற சீவனைத் தெளியுமே
தீர்த்த லிங்கம் உம்முளே தெளிந்து காண வல்லிரேல்
தீர்த்த லிங்கம் தானதாய்ச் சிறந்ததே சிவாயமே

#500
ஆடு கொண்டு கூடு செய்து அமர்ந்திருக்குமாறு போல்
தேடுகின்ற செம்பினைத் திடப்படப் பரப்பியே
நாடுகின்ற தம்பிரானும் நம்முளே இருக்கவே
போடு தர்ப்ப பூசை என்ன பூசை என்ன பூசையே

#501
என்னை அற்ப நேரமும் மறக்கிலாத நாதனே
ஏகனே இறைவனே இராசராச ராசனே
உன்னை அற்ப நேரமும் ஒழிந்திருக்கல் ஆகுமோ
உனது நாட்டம் எனது நாவில் உதவிசெய்வீர் ஈசனே

#502
எல்லையற்று நின்ற சோதி ஏகமாய் எரிக்கவே
வல்ல பூரணப் பிரகாசர் ஏகபோகம் ஆகியே
நல்ல இன்ப மோன சாகரத்திலே அழுத்தியே
நாடொணாத அமிர்தம் உண்டு நான் அழிந்து நின்ற நாள்

#503
ஆனவாறு அது ஆயிடும் அகண்டமான சோதியை
ஊனை காட்டி உம்முளே உகந்து காண வல்லிரே
ஊன காயம் ஆளலாம் உலக பாரம் ஆளலாம்
வானநாடும் ஆளலாம் வண்ணநாடர் ஆணையே

#504
நித்தமும் மணி துலக்கி நீடு மூலை புக்கு இருந்து
கத்தியே கதறியே கண்கள் மூடி என் பயன்
எத்தனை பேர் எண்ணினும் எட்டிரண்டும் பத்து அலோ
அத்தனுக்கு இது ஏற்குமோ அறிவிலாத மாந்தரே

#505
எட்டிரண்டும் கூடியே இலிங்கமான தேவனை
மட்டதாக உம்முளே மதித்து நோக்க வல்லிரேல்
கட்டமான பிறவி என் கருங்கடல் கடக்கலாம்
இட்டமான வெளியினோடு இசைந்திருப்பீர் காண்-மினே

#506
உண்மையான மந்திரம் ஒளியிலே இருந்திடும்
தண்மையான மந்திரம் சமைந்து ரூபம் ஆகியே
வெண்மையான மந்திரம் விளைந்து நீறது ஆனதே
உண்மையான மந்திரம் அது ஒன்றுமே சிவாயமே

#507
பன்னிரண்டு நாள் இருத்திப் பஞ்சவண்ணம் ஒத்திட
மின்னி அவ் வெளிக்குள் நின்று வேரெடுத்து அமர்ந்தது
சென்னியான தலத்திலே சீவன் நின்று இயங்கிடும்
பன்னி உன்னி ஆய்ந்தவர் பரப்பிரம்மம் ஆவரே

#508
தச்சு வாயில் உச்சி மேல் ஆயிரம் தலங்களாய்
முச்சுடரும் மூவிரண்டு மூண்டு எழுந்த தீச் சுடர்
வச்சிரம் அதாகியே வளர்ந்து நின்றது எவ்விடம்
இச் சுடரும் இந்திரியமும் மேகமானது எங்ஙனே

#509
முத்தி சித்தி தொந்தமாய் முயங்குகின்ற மூர்த்தியை
மற்று உதித்த ஐம்புலன்கள் ஆகும் மத்தி அப் புலன்
அத்தனித்த காளகண்டர் அன்பினால் அனுதினம்
உச்சரித்து உளத்திலே அறிந்து உணர்ந்துகொள்-மினே

#510
அண்ணலார் அநாதியாய் அநாதி முன் அநாதியாய்
பெண்ணும் ஆணும் ஒன்று அலோ பிறப்பதாகும் முன் அலோ
கண்ணிலானில் சுக்கிலம் கருத்து ஒடுங்கி நின்ற பின்
மண்ணுளோரும் விண்ணுளோரும் வந்தவாறு அது எங்ஙனே

#511
எத்திசைக்கும் எவ்வுயிர்க்கும் எங்கள் அப்பன் எம்பிரான்
முத்தியான விந்துளே முளைத்து எழுந்து செஞ்சுடர்
சித்தினில் தெளிந்த போது தேவர் கோயில் சேர்ந்தனன்
அத்தன் ஆடல் கண்ட போது அடங்கி ஆடலுற்றதே

#512
வல்ல வாசல் ஒன்பது மருந்து அடைத்த வாசலும்
சொல்லும் வாசல் ஓர் ஐந்தும் சொல்ல விம்மி நின்றதும்
நல்ல வாசலைத் திறந்து ஞான வாசல் ஊடுபோய்
எல்லை வாசல் கண்ட பின் இனிப் பிறப்பது இல்லையே

#513
ஆதியானது ஒன்றுமே அனேக ரூப மாயமாய்ப்
பேதபேதமாய் எழுந்து சர்வ சீவன் ஆன பின்
ஆதியோடு கூடி மீண்டு எழுந்து சன்மம் ஆன பின்
சோதியான ஞானியரும் சத்தமாய் இருப்பரே

#514
வண்டு பூ மணங்களோடு வந்திருந்த தேன் எலாம்
உண்டு உளே அடங்கு வண்ணம் ஓது லிங்க மூலமாய்க்
கண்டு கண்டு வேரிலே கருத்து ஒடுங்க வல்லிரேல்
பண்டு கொண்ட வல் வினை பறந்திடும் சிவாயமே

#515
ஓரெழுத்து லிங்கமாக ஓதும் அக்கரத்துளே
ஓரெழுத்து இயங்குகின்ற உண்மையை அறிகிலீர்
மூவெழுத்து மூவராய் முளைத்து எழுந்த சோதியை
நாலெழுத்து நாவுளே நவின்றதே சிவாயமே

#516
தூரதூர தூரமும் தொடர்ந்து எழுந்த தூரமும்
பாரபாரம் என்றுமே பரித்திருந்த பாவிகாள்
நேரநேர நேரமும் நினைந்திருக்க வல்லிரேல்
தூரதூர தூரமும் தொடர்ந்து கூடல் ஆகுமே

#517
குண்டலங்கள் பூண்டு நீர் குளங்கள்-தோறும் மூழ்கிறீர்
மண்டுகங்கள் போல நீர் மனத்தின் மாசு அறுக்கிலீர்
மண்டை ஏந்து கையரை மனத்து இருத்த வல்லிரேல்
பண்டை மால் அயன் தொழப் பணிந்து வாழல் ஆகுமே

#518
கூடுகட்டி முட்டையிட்டுக்கொண்டு இருந்தவாறு போல்
ஆடு இரண்டு கன்றை ஈன்ற அம்பலத்துள் ஆடுதே
மாடு கொண்டு வெண்ணெய் உண்ணும் மானிடப் பசுக்களே
வீடு கண்டுகொண்ட பின்பு வெட்டவெளியும் காணுமே

#519
உள்ளதோ பிறப்பதோ உயிர்ப்பு அடங்கி நின்றிடும்
மெள்ள வந்து கிட்ட நீர் வினவ வேண்டும் என்கிறீர்
உள்ளதும் பிறப்பதும் ஒத்த போது நாதமாம்
கள்ளவாசலைத் திறந்து காண வேண்டும் மாந்தரே

#520
நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே
சுற்றிவந்து மொணமொணென்று சொல்லும் மந்திரம் ஏதடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ

#521
நானும் அல்ல நீயும் அல்ல நாதன் அல்ல ஓதுவேன்
வானில் உள்ள சோதி அல்ல சோதி நம்முள் உள்ளதே
நானும் நீயும் ஒத்த போது நாடிக் காணல் ஆகுமோ
தானதான தத்ததான தானதான தானனா

#522
நல்லது அல்ல கெட்டது அல்ல நடுவில் நிற்பது ஒன்றுதான்
நல்லது என்ற போது அது நல்லது ஆகி நின்று பின்
நல்லது அல்ல கெட்டது என்றால் கெட்டது ஆகும் ஆதலால்
நல்லது என்று நாடி நின்று நாமம் சொல்ல வேண்டுமே

#523
பேய்கள் கூடிப் பிணங்கள் தின்னும் பிரியமில்லாக் காட்டிலே
நாய்கள் சுற்ற நடனமாடும் நம்பன் வாழ்க்கை ஏதடா
தாய்கள்-பால் உதிக்கும் இச்சை தவிர வேண்டி நாடினால்
நோய்கள் பட்டு உழல்வது ஏது நோக்கிப் பாரும் உம்முளே

#524
உப்பை நீக்கில் அழுகிப்போகும் ஊற்றை ஆகும் உடலில் நீ
அப்பி ஆசைகொண்டிருக்கல் ஆகுமோ சொல் அறிவிலா
தப்பிலிப் பொய் மானம்கெட்ட தடியன் ஆகும் மனமே கேள்
ஒப்பிலா செஞ்சடையன் ஆகும் ஒருவன் பாதம் உண்மையே

#525
பிறப்பது எல்லாம் இறப்பது உண்டு பேதை மக்கள் தெரிகிலாது
இறப்பது இல்லை என மகிழ்ந்து எங்கள் உங்கள் சொத்து எனக்
குறிப்புப் பேசித் திரிவர் அன்றிக் கொண்ட கோலம் என்னவோ
நிறப்பும் தொந்தி அழிந்த போது நேசம் ஆமோ ஈசனே

#526
சுட்டு எரித்த சாந்து பூசும் சுந்தரப் பெண் மதி முகத்து
இட்ட நெட்டு எழுத்து அறியாது ஏங்கி நோக்கும் மதிவலீர்
பெட்டகத்துப் பாம்பு உறங்கும் பித்தலாட்டம் அறியிரோ
கட்டு அவிழ்த்துப் பிரமன் பார்க்கில் கதி உமக்கும் ஏது காண்

#527
வேதம் ஓது வேலையோ வீணதாகும் பாரிலே
காதகாத தூரம் ஓடிக் காதல் பூசை வேணுமோ
ஆதிநாதன் வெண்ணெய் உண்ட அவன் இருக்க நம்முளே
கோது பூசை வேதம் ஏது குறித்துப் பாரும் உம்முளே

#528
பரம் இலாதது எவ்விடம் பரம் இருப்பது எவ்விடம்
அறம் இலாத பாவிகட்குப் பரம் இலை அஃது உண்மையே
கரம் இருந்தும் பொருள் இருந்தும் அருள் இலாத போது அது
பரம் இலாத சூன்யம் ஆகும் பாழ் நரகம் ஆகுமே

#529
மாதர் தோள் சேராத தேவர் மாநிலத்தில் இல்லையே
மாதர் தோள் புணர்ந்த போது மனிதர் வாழ்வு சிறக்குமே
மாதராகும் சத்தி ஒன்று மாட்டிக்கொண்டது ஆதலால்
மாதராகும் நீலி கங்கை மகிழ்ந்து கொண்டான் ஈசனே

#530
சித்தர் என்றும் சிறியர் என்றும் அறியொணாத சீவர்காள்
சித்தர் இங்கு இருந்த போது பித்தர் என்று எண்ணுவீர்
சித்தர் இங்கு இருந்தும் என்ன பித்தன் நாட்டு இருப்பரே
அத்தன் நாடும் இந்த நாடும் அவர்களுக்கு எலாம் ஒன்றே

#531
மாந்தர் வாழ்வு மண்ணிலே மறந்த போது விண்ணிலே
சாந்தனான ஆவியைச் சரிப்படுத்த வல்லிரேல்
வேந்தன் ஆகி மன்றுள் ஆடும் விமலன் பாதம் காணலாம்
கூந்தல் அம்மை கோணல் ஒன்றும் குறிக்கொணாது இஃது உண்மையே

#532
சருகு அருந்தி நீர் குடித்துச் சாரல் வாழ் தவசிகாள்
சருகு அருந்தில் தேகம் குன்றிச் சஞ்சலம் உண்டாகுமே
வருவிருந்தோடு உண்டு உடுத்தி வளர் மனை சுகிப்பிரேல்
வருவிருந்தோன் ஈசன் ஆகி வாழ்வு அளிக்கும் சிவாயமே

#533
காடு மேடு குன்று பள்ளம் கானின் ஆறு அகற்றியும்
நாடு தேசம் விட்டு அலைவர் நாதன் பாதம் காண்பரோ
கூடு விட்டு அகன்று உன் ஆவி கூத்தன் ஊர்க்கே நோக்கலால்
வீடு பெற்று அரன் பதத்தில் வீற்றிருப்பர் இல்லையே

#534
கட்டையால் செய் தேவரும் கல்லினால் செய் தேவரும்
மட்டையால் செய் தேவரும் மஞ்சளால் செய் தேவரும்
சட்டையால் செய் தேவரும் சாணியால் செய் தேவரும்
வெட்டவெளி அது அன்றி மற்று வேறு தெய்வம் இல்லையே

#535
தங்கள் தேகம் நோய் பெறின் தனைப் பிடாரி கோயிலில்
பொங்கல்வைத்து ஆடு கோழிப் பூசைப் பலியை இட்டிட
நங்கச் சொல்லு நலி மிகுந்து நாளும் தேய்ந்து மூஞ்சூராய்
உங்கள் குலதெய்வம் உங்கள் உருக்குலைப்பது உண்மையே

#536
ஆசைகொண்டு அனுதினமும் அன்னியர் பொருளினை
மோசம்செய்து அபகரிக்க முற்றிலும் அலைபவர்
பூசையோடு நேம நிட்டை பூரிக்கச் செய் பாதகர்
காசினியில் ஏழு நரகைக் காத்திருப்பது உண்மையே

#537
நேசமுற்றுப் பூசைசெய்து நீறு பூசிச் சந்தனம்
வாசமோடு அணிந்து நெற்றி மை திலதம் இட்டுமே
மோசம் பொய் புனைசுருட்டு முற்றிலும் செய் மூடர்காள்
வேசரி களம் புரண்ட வெண்ணீறு ஆகும் மேனியே

#538
வாதம் செய்வேன் வெள்ளியும் பொன் மாற்று உயர்ந்த தங்கமும்
போதவே குரு முடிக்கப் பொன் பணங்கள் தா எனச்
சாதனை செய்து எத்திச் சொத்து தந்ததைக் கவர்ந்துமே
காத தூரம் ஓடிச் செல்வர் காண்பதும் அருமையே

#539
யோக சாடை காட்டுவார் உயரவும் எழும்புவார்
வேகமாக அட்ட சித்து வித்தை கற்று நெட்டுவார்
மோகம் கொண்டு மாதரின் மூத்திரப்பை சிக்கிப் பின்
பேயது பிடித்தவர் போல் பேருலகில் சாவரே

#540
காயகல்பம் உண்பதாகக் கண்டவர் மதித்திட
மாயவித்தை செய்வது எங்கு மடிப்பு மோசம் செய்பவர்
நேயமாக் கஞ்சா அடித்து நேர் அபினைத் தின்பதால்
நாயதாக நக்கி முக்கி நாட்டினில் அலைவரே

#541
நீரினில் குமிழி ஒத்த நிலையிலாத காயம் என்று
ஊரினில் பறை அடித்து உதாரியாய்த் திரிபவர்
சீரினில் உனக்கு ஞானசித்தி செய்வேன் பார் என
நேரினில் பிறர் பொருளை நீளவும் கைப்பற்றுவார்

#542
காவியும் சடைமுடி கமண்டலங்கள் ஆசனம்
தா உருத்திராட்சம் யோகத்தண்டு கொண்ட மாடுகள்
தேவியை அலையவிட்டுத் தேசம் எங்கும் சுற்றியே
பாவி என்ன வீடு எலாம் பருக்கை கேட்டு அலைவரே

#543
முத்தி சேரச் சித்தி இங்கு முன் அளிப்பேன் பார் எனச்
சத்தியங்கள் சொல்லி எங்கும் சாமிவேடம் பூண்டவர்
நித்தியம் வயிறு வளர்க்க நீதி ஞானம் பேசியே
பத்தியாய்ப் பணம் பறித்துப் பாழ் நரகில் வீழ்வரே

#544
செம்மை சேர் மரத்திலே சிலை தலைகள் செய்கிறீர்
கொம்மை அற்ற கிளையில் பாதக்குறடு செய்து அழிக்கிறீர்
நும்முளே விளங்குவோனை நாடி நோக்க வல்லிரேல்
இம்மலமும் மும்மலமும் எம்மலமும் அல்லவே

#545
எத்திசை எங்கெங்கும் ஓடி எண்ணிலாத நதிகளில்
சுற்றியும் தலைமுழுகச் சுத்த ஞானி ஆவரோ
பத்தியோடு அரன் பதம் பணிந்திடாத பாவிகாள்
முத்தி இன்றி பாழ் நரகில் மூழ்கி நொந்து அலைவரே

#546
கல்லு வெள்ளி செம்பு இரும்பு காய்ந்திடும் தராக்களில்
வல்ல தேவ ரூப பேதம் அங்கு அமைத்துப் போற்றிடில்
தொல்லை அற்றிடப் பெரும் சுகம் தருமோ சொல்லுவீர்
இல்லை இல்லை இல்லை இல்லை ஈசன் ஆணை இல்லையே

#547
இச்சகம் சனித்ததுவும் ஈசன் ஐந்தெழுத்திலே
மெச்சவும் சராசரங்கள் மேவும் ஐந்தெழுத்திலே
உச்சிதப் பல உயிர்கள் ஓங்கல் ஐந்தெழுத்திலே
நிச்சய மெய்ஞ்ஞான போதம் நிற்கும் ஐந்தெழுத்திலே

#548
சாத்திரங்கள் பார்த்துப்பார்த்து தான் குருடு ஆவதால்
நேத்திரம் கெட வெய்யோனை நேர் துதிசெய் மூடர்கள்
பாத்திரம் அறிந்து மோன பக்திசெய்ய வல்லிரேல்
சூத்திரப்படி யாவரும் சுத்தர் ஆவர் அங்ஙனே

#549
மனவுறுதிதான் இலாத மட்டிப் பிண மாடுகள்
சினமுறப் பிறர் பொருளைச் சேகரித்து வைத்ததைத்
தினந்தினம் ஊர் எங்கும் சுற்றி திண்டிக்கே அலைபவர்
இனமதில் பலர்கள் வையும் இன்பம் அற்ற பாவிகள்

#550
சிவாயவசி என்னவும் செபிக்க இச் சகம் எலாம்
சிவாயவசி என்னவும் செபிக்க யாவும் சித்தியாம்
சிவாயவசி என்னவும் செபிக்க வானம் ஆளலாம்
சிவாயவசி என்பதே இருதலைத்தீ ஆகுமே
**

25 சூரியானந்தர் சூத்திரம்


#1
சீர்கொண்ட அருமறையின் பொருளாய் நின்ற தெட்சிணாமூர்த்தியுடைய பாதம் காப்பு
பேர்கொண்ட சூத்திரமே பதின்மூன்றுக்குள் பிரித்துவைப்பேன் பூவழலை பெருமை எல்லாம்
நீர்கொண்ட ஊசரத்தின் மகிமை-தன்னை நிசமாகச் சொல்லாமல் மறந்துவிட்டார்
ஆர்கொண்ட வேணியனார் உமக்குச் சொன்னார் ஆத்தாளும் அடியேனுக்கு அறைந்திட்டாளே

#2
அறைந்திட்ட வகை ஏது உப்பே ஆதி ஆகாச விந்துவினால் செனித்த பிண்டம்
மறைந்திட்ட உப்பதுவே காரம் காரம் மண்ணான உப்பதுவே சாரம் சாரம்
கறைந்திட்ட ஊசரத்துக்கு ஏற்ற உப்பைக் காணாமல்போனதினால் கலக்கம் ஆச்சு
இறைந்திட்ட மலசலமாய்க் காணலாகும் இந்த இரண்டு ஓரிடத்தில் இருக்கும் பாரே

#3
இருக்கின்ற உப்பினுக்கு மூலாதாரம் இந்து ஒன்று இரவி ஒன்று வன்னி ஒன்று
பெருக்கின்ற ஈசனுக்குச் சூட்சமும்தான் பிருதிவியே தூலம் எனப் பேசலாகும்
கருக்கொண்ட யோனியிலே நாலு பேதம் கருதையிலே எழு தோற்றம் காணலாகும்
உருக்கொண்ட சீவசெந்தும் அனேகம் உண்டாம் உற்றுப்பார் அண்ட பிண்டம் உண்மைதானே

#4
தானாக நின்றதுவே பாரும் ஆச்சு சகல சித்துப் பிரகிருதி உயிரும் ஆச்சு
வானாகி நின்றதுவே சாட்சியாகும் மன் உயிர் எல்லாம் சோதி மயமும் ஆச்சு
ஊனாகப் பிறந்த சடம் பிறவா முத்திக்கு உதவி அல்லோ பிரகிருதி யோனி யோனி
கோனாக நின்ற குரு உபதேசத்தால் குழி புகுந்து உப்பு எடுத்துக்கொள்ளுவாயே

#5
கொள்ளுவார் முப்பூவின் முதலாம் அங்கம் கூர்ந்து பார் ஊசரத்தைக் கொள்கிக்கொண்டு
விள்ளுவார் யோனியின்படி விடாமல் மேல் ஏற்ற மேல் உதவி மேவித்தானால்
துள்ளுவார் இந்த உப்புச் சிவமும் ஆச்சு துருசுப்பு பணவிடையால் தொந்தம் ஏற்றித்
தள்ளுவார் பிரளயம் ஓர் கோடி காலம் சகல சித்தும் மூல உப்பு-தன்னில் ஆச்சே

#6
ஆச்சப்பா மூல உப்புக்கு அஞ்சு தீட்சை ஆதி உப்புக்கு அப்படியே தீட்சையாகும்
மூச்சப்பா தச தீட்சை யார்தான் செய்வார் மூல குரு செய்வார் பின் ஆர்தான் செய்தார்
ஏச்சப்பா கொங்கணவர் தீட்சை மார்க்கம் ஏற்றிவிட்டார் முப்பத்திரண்டாம் என்று
பேச்சப்பா பேசினதில் ஆவது உண்டோ பிண்ட உப்புக்கு ஏழு விதம் பேசலாமே

#7
பேசுகின்ற உப்பினுக்கு மேலே அங்கம் பெருமையுள்ள சித்தர்கள்தாம் செய்யும் மார்க்கம்
வீசுகின்ற சூதத்தின் துறைகள் எல்லாம் மிஞ்சவில்லை மூன்று நாலஞ்சானாலும்
பாசையினால் சொன்னார்கள் வெளி தோணாது பாலனுக்குத் தோன்றும் இந்த நூலைப் பார்த்தால்
கூசல் மிஞ்சிப் போடுது என்று என்றன் நூலைக் குகைக்குள் மறைத்திட்டதனால் கூறொண்ணாதே

#8
ஒண்ணான நூலாகும் இருநூற்றைந்தில் ஓதிவைத்த கருத் தெரியும் இருபத்தைந்தில்
கண்ணாகும் இந்த நூல் பதின்மூன்றுக்குள் கருவை ஒரு கற்ப முறை காட்டிவைத்தேன்
வண்ணானை அறியாதபேருக்கு எல்லாம் வாதி என்ற பேர் ஏது வாதம் ஏது
பெண்ணாடன் சுரோணிதமும் விந்தும் கண்டால் பேரான பூரணத்தின் பெருமைதானே

#9
பெருமை என்ற காயசித்தி பண்ணாவிட்டால் பேரான அடியோடு முடியும் போச்சு
அருமை என்ற குண்டலிக்குள் வராகி பூசை அப்பனே கண்டமதில் அங்கு என்று ஊணு
புருவ மையத்துள் ஏவும் என்று கும்பி போதம் என்ற மவுன வித்தை கைக்குள் ஆச்சு
தரும வித்தை பிரகிருதி மூச்சு ஆடாது சகத்திரத்து எண் மலர்ப் பதத்தில் சார்ந்து நில்லே

#10
நில்லாத மூலிகையால் காயசித்தி நிட்டை மவுனத்தாலே யோக சித்தி
கொல்லாத மூலமதில் அபான சுத்தி கூடாமல் இருந்துவிட்டால் ஏது முத்தி
சொல்லாத ஈசன் உப்பு மதி சூதத்தில் சூட்டினேன் வெள்ளை என்ற சூடன் வித்தை
எல்லாரும் இருந்த விதம் பாடமாட்டார் இதமான சூதகத்தின் வெடியுப்பு ஆச்சே

#11
உப்பான வெடியுப்புச் செயநீராலே ஒரு கோடி வித்தை எல்லாம் ஆடல் ஆகும்
அப்பான கல்லுப்பு நீரினாலே ஆடலாம் துருசினுட அங்கம் எல்லாம்
செப்பாத யோனி ருது சேநீர் பட்டால் சிவன் வேறுதான் உண்டோ இவன் அல்லாமல்
தப்பாமல் செய்வது என்ன சவுக்காரம்தான் சட்டி முதல் பவுரணையும் தாக்கிப் பாரே

#12
தாக்கிப் பார் ஆகாசம் சருவசாட்சி சதா நித்தம் அந்தரமே சாடி நின்றால்
நோக்கிப் பார் வாயு லயப்படுவதற்கு நூதனமாய் வன்னியத்தில் கூட வேணும்
மூக்கில்தான் ஓடுவது பிராணவாயு மூலம் எனும் வளையமது நகாரம்-தன்னைத்
தூக்கித்தான் விட்டவர்க்கு யோகம் எய்தும் சூரியானந்தன் இவை சொல்லும் நூலே

#13
செல்வது என்ன ரேசகத்தை வெளிவிடாதே துடியான பூரகத்தைப் பின்னிடாதே
வெல்வது என்ன கும்பகத்தை அடிவிடாதே மேல் ஏற்று மாத்திரையை மறந்திடாதே
செல்வது என்ன கற்பத்தை மறந்திடாதே செந்தூரம் சேர்க்கையிலே சிதறிடாதே
கொல்வது என்ன அமுர்தயிலே பிறக்கும் இந்தக் குளிகைக்குச் சாரணைசெய் குணமும் முற்றே
**

26 தடங்கண் சித்தர் பாடல்கள்

** தங்கப் பா

#1
அதி வெடி முழக்கி முரசுகள் முடுக்கி அலறிடும் உடுக்கைகள் துடிப்ப
விதிர்விதிர் குரலால் வெற்றுரை அலப்பி வீணில் ஓர் கல்லினைச் சுமந்தே
குதிகுதி என்று தெரு எலாம் குதிப்பார் குனிந்து வீழ்ந்து உருகுவர் மாக்கள்
இது-கொலோ சமயம் இது-கொலோ சமயம் எண்ணவும் வெள்கும் என் நெஞ்சே

#2
அருவருப்பூட்டும் ஐந்தலை நாற்கை ஆனை போல் வயிறு முன் துருத்தும்
உருவினை இறைவன் எனப் பெயர் கூறி உருள் பெரும் தோளில் அமர்த்தி
இருபது நூறு மூடர்கள் கூடி இழுப்பதும் தரை விழுந்து எழலும்
தெரு எலாம் நிகழும் அது-கொலோ சமயம் தீங்கு கண்டு உழலும் என் நெஞ்சே

#3
எண்ணெயால் நீரால் பிசுபிசுக்கேறி இருண்டு புன் நாற்றமே விளைக்கும்
திண்ணிய கற்குத் திகழ் நகை பூட்டித் தெரியல்கள் பலப்பல சார்த்திக்
கண்ணினைக் கரிக்கும் கரும் புகை கிளப்பிக் கரு மனப் பார்ப்பு செய் விரகுக்கு
எண்ணிலா மாக்கள் அடி மிதி படுவர் இது-கொலோ இது-கொலோ சமயம்

#4
அழகிய உடல் மேல் சாம்பலைப் பூசி அருவருப்பாக்கலும் மகளிர்
கொழுவிய குழலை மொட்டையாய் மழித்துக் குரங்கு எனத் தோன்றலும் அறியா
மழலையர் கையினுள் காவடி கொடுத்து மலையின் மேல் ஏற்றலும் இவைதாம்
வழிபடு முறையோ இது-கொலோ சமயம் மடமை கண்டு இரங்கும் என் நெஞ்சே

#5
நீட்டிய பல்லும் சின மடி வாயும் நிலைத்தவோர் கல் உரு முன்னே
கூட்டமாய் மோதிக் குடி வெறித்தவர் போல் குதிப்பர் தீ வளர்த்து அதில் மிதிப்பார்
ஆட்டினைத் துடிக்க வெட்டி வீழ்த்திடுவார் ஆங்கு அதன் உதிரமும் குடிப்பார்
காட்டில் வாழ் காலக் கூத்து-கொல் சமயம் கண்ணிலார்க்கு இரங்கும் என் நெஞ்சே

#6
உடுக்கையை அடித்தே ஒருவன் முன் செல்வான் ஒருவன் தீச்சட்டியும் கொள்வான்
எடுத்ததோர் தட்டில் பாம்பு உருத் தாங்கி இல்-தொறும் சென்று முன் நிற்பார்
நடுக்கொடும் தொழுவார் நங்கையர் சிறுவர் நல்குவர் காணிக்கை பலவும்
கொடுத்த நீறு அணிவார் இது-கொலோ சமயம் குருடருக்கு இரங்கும் என் நெஞ்சே

#7
வேப்பிலைக் கொத்தும் விரி தலை மயிரும் வெவ்விதின் மடித்திடு வாயும்
கூப்பிய கையும் கொண்டவள் ஒருத்தி குரங்கு என ஆடுவள் குதிப்பாள்
நாற்புறம் நின்றே வணங்குவர் மாக்கள் நற்குறி கேட்டிட நிற்பார்
காப்பதோ வாழ்வை இது-கொலோ சமயம் கண்ணிலார்க்கு இரங்கும் என் நெஞ்சே

#8
தாய்மொழி பேணார் நாட்டினை நினையார் தம் கிளை நண்பருக்கு இரங்கார்
தூய் நல் அன்பால் உயிர்க்கு எலாம் நெகிழார் துடிப்புறும் ஏழையர்க்கு அருளார்
போய் மலை ஏறி வெறும் கருங்கற்கே பொன் முடி முத்தணி புனைவார்
ஏய்ந்த புன் மடமை இது-கொலோ சமயம் ஏழையர்க்கு இரங்கும் என் நெஞ்சே

#9
பால் இலாச் சேய்கள் பசி பணியாளர் பல் துயர் பெருகும் இ நாட்டில்
பாலொடு தயிர் நெய் கனி சுவைப் பாகு பருப்பு நல் அடிசிலின் திரளை
நூலணிவார்-தம் நொய்யையே நிரப்ப நுழைத்த கல் உருவின் முன் படைத்தே
சாலவும் மகிழ்வார் இது-கொலோ சமயம் சழக்கினுக்கு அழலும் என் நெஞ்சே

#10
அன்பிலார் உயிர்கட்கு அளியிலார் தூய்மை அகத்திலார் ஒழுக்கமுமில்லார்
வன்பினால் பிறரை வருத்துவர் எனினும் வகைபெற உடம்பு எலாம் பூசி
முன் தொழு கையர் முறைகளில் தவறார் முழுகுவார் துறை-தொறும் சென்றே
நன்று-கொல் முரண்பாடு இது-கொலோ சமயம் நடலையர்க்கு உடையும் என் நெஞ்சே

#11
மெய்யுணர்வு எய்தித் தனை முதல் உணர்ந்து மெய்ம்மைகள் விளங்குதல் வேண்டும்
பொய் மிகு புலன்கள் கடந்து பேருண்மை புரிதலே இறையுணர்வு அன்றோ
செய்கையால் வழக்கால் அச்சத்தால் மடத்தால் செய் பொருள் இறை எனத் தொழுவார்
உய்வரோ இவர்தாம் இது-கொலோ சமயம் உணர்விலார்க்கு உழலும் என் நெஞ்சே
**

27 திரிகோணச் சித்தர் பாடல்

** கலிவெண்பா

#1
சிவனே பரமகுரு தேசிகனே பாதம்
அவனே அனுதினமும் ஆகும் நவநீத

#2
பொன் பூத்த நீலப் புயல்வண்ணனும் பொறி வாய்
மின் பூத்த நான்முகனும் வேதாவும் தென் பூத்த

#3
செக்கச் சடையானும் தேசு பெறவே உருவாய்
ஒக்கத் தனி வந்து உதித்த பிரான் தர்க்கமிடும்

#4
வேதமும் சாத்திரமும் வேண்டும் பல சமயம்
பேதமும் காணாப் பெரும் சமயம் நாதத்தில்

#5
ஓசை அடங்க ஒளியும் பரமனையில்
ஆசை அடங்க அனுபவிப்போன் பூசைபுரி

#6
தொண்டர் இதயச் சுனை மடலில் வேரூன்றி
விண்ட நறைக் கமல மெல்லடியான் எண் திக்கும்

#7
சாதியான் தோன்றும் சமரசமாய் இருந்து
பேதியான் வஞ்சம் இலாப் பேதைமையான் ஆதி

#8
முதலாய் நடுவாய் முடிவாய் முடிந்து
சிதலாய் வெளி ஒளியாம் சென்மம் சத கோடி

#9
சத்தியும் மந்திரமும் தானாகப் பாவித்து
முத்தி கொடுக்கும் முழுமுதல்வன் சுத்திய

#10
செஞ்சடையான் யோக நிலை தேர்ந்து தனைக் குறியார்
நெஞ்சடையான் பிஞ்சு நிலாச் சடையான் நஞ்சு ஆர்ந்த

#11
கண்டத்தான் தேட அரிய காட்சியான் பல் கோடி
அண்டத்தான் சோதி அருவுருவான் முண்டகச் செம்

#12
போதம் கடலும் பொருப்பும் விருப்பாகிச்
சூதுபுரி மூன்று தொழிலுடையோன் ஓதும்

#13
சரியை கிரியை தவயோக ஞானம்
தெரிய அமைத்த சிவசித்தன் துரியத்தில்

#14
தோத்தி அணுவாய்த் துகழாய்ச் சுடர் ஒளியாய்த்
தேத்தி உருவாக வந்து சென்மிப்போன் சாத்த அரிய

#15
முக்குணமும் ஐம்பொறியும் மும்மலமும் உண்டாகி
எக்குணமும் தானாய் இருந்து அருள்வோன் அக்கரமாம்

#16
அஞ்செழுத்தாய் எட்டெழுத்தாய் ஐம்பத்தோர் அட்சரமாய்ப்
பிஞ்செழுத்தாய் எங்கும் பிரணவமாய்க் கொஞ்சப்

#17
பொருளாய் மருளாய்ப் புரையாய் உரையாய்
அருளாய்த் தனி இருந்த ஆனந்தன் இருளாத

#18
காட்சியான் கண்டவர்க்குக் காணாதபேர்க்கு உருவும்
சூட்சியாய் நின்ற தொழிலாளி ஆட்சி

#19
இடை பிங்கலை சுழியினை எட்டாமல் மூலக்
கடையில் நடக்கும் கடலுடையோன் விடை ஏறும்

#20
பாசன் குடிலைப் பராசத்தி வீட்டில் உறை
ஏகன் பிறப்பு இறப்பு ஒன்று இல்லாதான் யோகன்

#21
சிறியன் பெரியன் சிவப்பன் கறுப்பன்
குறியன் நெடியன் எனக் கூறாதான் பொறி கலந்த

#22
பாசத்தான் பாசக் கட்டை அறுத்தவர்க்கு
மாசத்தான் சோதி மணி மண்டலத்தான் நேசத்தான்

#23
பொய்யர்க்குப் பொய்யன் பொருந்தி உளம்-தோறும்
மெய்யர்க்கு மெய்யாய் வெளி நின்றோன் ஐயன்

#24
உருவும் அருவும் ஒளியும் வெளியும்
கருவும் கடந்த கன மாயன் குருவாகித்

#25
தோத்திப் பழவடியார் சூழ்வினையை நீக்கி உரு
மாத்தித் தனது வசம் ஆக்கியே சாத்த அரிய

#26
மானிடச் சட்டை வடிவெடுத்த மா யோகி
யான் இடபம் முந்தும் அருள் ஆனந்தன் தேன் அடர்ந்த

#27
செங்கமலத்தோற்கு அரிய தேவன் அடியவர்கள்
அம் கமலத்தே உறையும் ஆனந்தன் எங்கள் குரு

#28
நேசிக்கும் அன்பர் துயர் நீக்கி நிலைபெறவே
யாசிக்கும் எங்கள் குரு ஆனந்தன் பூசிக்கும்

#29
பொன் மலைக்கும் வெள்ளிப் பொருப்புக்கும் பொற்புடைய
கன்மலைக்கும் தானே கடவுளாய் பன் மலைக்கும்

#30
எட்டாய்ச் சிகரம் எழுத்துக் கொழுந்தோட
மட்டான ஓங்கார வன் மலையான் கட்டாகத்

#31
தேடும் அடியார்கள் சின்னம் துகள் அறவே
ஆடும் சிவ கருணை ஆற்றினான் நாடு தவம்

#32
பண்ணும் அடியார் பழவினை போய்ப் பாத மலர்
நண்ணும் மொழியில் பேரின்பம் நாட்டினான் எண்ணும் நிறை

#33
கற்புடையான் என்னக் கலங்காத நெஞ்சுகொண்ட
பொற்புடைய காயாபுரி நகரான் அற்ப விசை

#34
வண்டு தொடாமல் மது ஒழுகி வாய்ந்தாறைக்
கொண்டு மணத்த குணமலையான் துண்டத்

#35
தரமே கரமாய் ஒருநாளும் ஓயாச்
சரமே முழங்கும் தவத்தோன் கரம் எடுக்கும்

#36
தொண்டர் பல பகையைச் சூறைகொளவேணும் எனக்
கொண்ட தவ வேடக் கொடியினான் சண்டம் மிகும்

#37
சமையப் பகை துடைத்துச் சாதி முறை எல்லாம்
குமைய மிதித்துக் குளப்பி அமையாத

#38
ஆணவத்தை வேரோடு அறுத்து விழுத்தாட்டி
நாணமுற்ற பாகம் நறுக்கியே காணத்

#39
துடர்ந்த கிளை நிகழச் சூரைபட வீசி
அடர்ந்த மக வாகைக்கு அடங்காப் படர்ந்த தெரு

#40
வீதியும் அம்பலமும் மிக்கதொரு சாதிகட்குப்
பூதிப் பொடி அணிந்து பொய் மிதித்துக் காதிச்

#41
சினக் குறும்பை வாரிச் சிதறித் திரட்டி
மனக் குறும்பைப் பற்றி வளைத்து உனக்கு என்

#42
ஓது குறும்பை உழக்கி எமராசன்
தூதனைப் பாய்ந்து துரத்தியே தாது செறி

#43
அஞ்ஞான மோகம் அறுக்கும் அனுபோக
மெய்ஞ்ஞான மோன மத வேளத்தான் பை நாகம்

#44
நெட்டு உடலை மாறி நெருக்கிப் பரிபடுத்திக்
கட்டும் இசைக்கும் கடிவாளம் தொட்டுத்

#45
திசை வாயு என்னும் சின்னூல் அகப்பட்டுக்
குசையால் இறுக்கிக் குணப்படுத்தி அசையா

#46
மனம் என்னும் கல்லணையை வைத்து இறுக்கி வாய்ந்த
சினம் என்னும் அங்கவடி சேர்த்துக் கனமான

#47
நாகபந்தம் சாரி நடை துலுக்குத் தூவான
மாகமுற விட்டு உள் அடக்கியே சோகப்

#48
புரியட்ட காயப் பொருப்பைத் தகர்த்துச்
சரியட்ட ஐம்பொறியைத் தாண்டித் துரியத்தில்

#49
ஓடி விந்து நாதம் எனும் உட்கோட்டையும் கூத்து
வாடியிடும் நாடி வரம்பு அழித்து ஆடியிடும்

#50
தொண்டுபுரி அன்பர் தொடர் நரகில் வீழாமல்
மண்டு சினம்கொண்டு எழுந்த வாசியான் கண்டு தொழும்

#51
தன் ஆணை தானே தனக்கு ஆணை ஆவதன்றிப்
பின் ஆணை இல்லாத பெற்றியான் எந்நாளும்

#52
மாறாத கீர்த்தி மது மாலையான் வாய் திறந்து
சீறாத மோனச் சிவயோகி நேராக

#53
ஆண்ட குரு சிற்றம்பலவன் அடி அருளும்
வேண்டி வளர்த்த இருபதத்தான் பூண்ட சிவ

#54
வேடத்தான் ஓங்கி விளங்கும் செழும் கமல
பீடத்தான் ஞானப் பிரகாசன் ஆடில்

#55
பரியான் உரியான் பசியான் பொசியான்
பெரியான் அரியான் பேரில்லான் துரியா

#56
தீதம் கடந்து திகழம் பரம் கடந்து
போதம் கடந்து நின்ற பொற்பதத்தான் சீதம்

#57
கருணை ஆனந்த முனி கண்டு தொழ வந்த
வருணன் ஆனந்த மழை மேகம் அருணப்

#58
பிரகாசம் கொண்டு நின்ற பேரொளி போல் மாயைப்
பிரகாசம் மாற்றும் பெருமையான் இறவாத

#59
மெய்ப்பொருளைக் காட்டி விரும்பும் அடியாரைக்
கைப்பொருளாய்க் கொண்ட கருணையான் துய்க்கும்

#60
உடல் பொருள் ஆவி உதகத்தால் கொண்டு
சடவினையை மாற்றும் சமனன் இடை பிங்

#61
கலை சுழிமுனைக்கு எட்டாத காட்சியான் காமம்
கொலை களவு தீர்த்த குடோரி அலையாமல்

#62
ஆட்கொண்ட சிற்றம்பலவன் அடிக் கமலத்து
ஆட்கொண்ட தொண்டர்-தனக்கு அடியேன் ஆட்கொண்ட

#63
தூர்த்தன் இவன் என்பர் சொல்லத் துயர் உழந்து
பார்த்த இடம் எல்லாம் பகையாகி வேர்த்துக்

#64
கலங்கி விதிர்விதிர்த்துக் கண்ணீர் ஒழுக
மலங்கிக் குருநாட்டில் வந்தேன் துலங்கும் எனக்

#65
காயாபுரி நகரைக் கண்ணுற்றேன் அவ் ஊரில்
போய் ஆதரித்துப் பொருந்தினேன் மாயாத

#66
மாது சிவானந்தவல்லி எனப் பேரிட்டாள்
ஓது திரிகோணவல்லி ஊர்தான் ஆதரவாய்

#67
கொஞ்சி வளர்த்த குடிலை மகள்-தனையே
மிஞ்சு சிலம்பத் தொழிற்கு விட்டாளே ரஞ்சிதமாய்

#68
கால் மாறி ஆடக் கலாதி கரண வித
மேல் மாறிச் சுத்தி விளையாட நூல் மாறிக்

#69
கைலாகு பாயக் கலந்து பல சமய
மெய் வாகு தாவி அதன் மேல் மிதிக்கப் பையப்

#70
பரதத் தொழிலும் பல கோடி வேத
கரதத் தொழிலும் தொகுத்து விரதவுரை

#71
தென்னூல் வடநூலைத் தேர்ந்து பல கோடி
முந்நூலும் தானே மொழிந்திட்டாள் இ நிலத்தில்

#72
ஆடப் பதுமை-தனை ஆட்டுவிக்க அப் பதுமை
பாடத் தொழிலும் பல கற்றாள் நாடு அறிந்த

#73
வம்பி திரிகோணவல்லி வடகிரியைக்
கெம்பீரம் எல்லாம் கிரகித்தேன் அம்புவியில்

#74
மின்னே எரிந்து எழுந்த மேகம் போல் மெய் குளிர்ந்து
தன்னை அறிந்த தளதளத்தாள் பொன்_அனையாள்

#75
பக்குவத்தை நோக்கி முகம் பார்த்துப் பரிமளிக்க
முக்குணமும் கற்ற முதுகிழவி தொக்கு அறுத்து

#76
மின்னே அமுதம் விளைந்த மனக் கமலப்
பொன்னே உறுதியுள்ள புத்திக்கே பன்ன அரிய

#77
வேத புராணர் வெறும் பிலுக்காய் உன் கமலப்
பாதம் பணிவர் முகம் பாராதே நாதத்

#78
துரிய மணி வாசலிலே தோன்றி முகம் சற்றே
தெரிய நின்று பின்னை உள்ளே சென்று அரிதாகச்

#79
சாற்றும் சரியைச் சளுக்கர் உனைத் தழுவப்
போற்றுவார் அங்கு அவர் பின் போகாதே ஏற்றும்

#80
அவலக் கிரியை அசடர் உனை மேவக்
கவலைப்படுவார் கடத்திச் சிவயோக

#81
ஆதியர்கள் வந்து உன் மலர் அடியைத் தெண்டனிட்டால்
பேதியாது உள் அழைத்துப் பேசிக்கொள் ஆதி

#82
தவ ஞான மோனத் தனக்காரர் வந்தால்
அவமானம் பண்ணாது அழைத்துச் சிவபொருளைத்

#83
தேடாத மூடரிடம் சிக்காதே சிந்தையிலே
நாடாத வஞ்சரிடம் நத்தாதே கோடாத

#84
சாத்திரத் தூரித்தர்-தமைச் சாராதே தர்க்கமிடும்
கோத்திரப் பஞ்சியரைக் கூடாதே சூத்திரப்

#85
பொய் வீணர் ஆசை பொருந்தாதே புத்தகப்பேய்
மெய் வீணர் ஆசை விரும்பாதே கையோகக்

#86
காமத்துக்கு ஆன கலாதி வேள் நூல் கற்ற
வாமத்தார்-பால் மனதுவையாதே நாமமிட்டுப்

#87
பஞ்சரிக்கும் பாசிப் பதப் பிலுக்கர் வந்தக்கால்
நெஞ்சு எரியத் தள்ளிவிடு நில்லாமல்

#88
சித்தக் கருவியிடம் செல்லாதே சீல மதக்
கொத்தவன்-தன் ஆசை குறியாதே பற்றற்ற

#89
மோனக் குறும்பரசர் மோகித்தால் நீ அவருக்கு
ஆனபடியே அழைத்துவிடு ஞானப்

#90
பொருள் தேடும் வல்லாரைப் போற்றிப் பொருந்தி
அருளோடு நீ சென்றிடு
**

28. திருமூல நாயனார்

** ஞானம் – 20

#1
அடியாகி அண்டரண்டத்து அப்பாலாகி அகாரம் எனும் எழுத்ததுவே பாதமாகி
முடியாகி நடுவாகி மூலம்-தன்னில் முப்பொருளும் தானாகி முதலுமாகிப்
படியாய் முப்பாழ் அற்றுப் படிக்கும் அப்பால் படி கடந்த பரஞ்சோதிப் பதியுமாகி
அடியாகும் மூலமதே அகாரமாகி அவன் அவளாய் நின்ற நிலை அறிவது ஆமே

#2
அதுவாகி அவன் அவளாய் எல்லாமாகி அடி நடுவும் முடிவாகி அகண்டமாகிப்
பொதுவாகிப் பல்லுயிர்கள் அனைத்துக்கெல்லாம் புகலிடமாய் எப்பொருட்கும் மூலமாகி
மதுவாகி வண்டாகிச் சுவையுமாகி மலராகி மணமாகி மதிக்கவொண்ணா
அதுவாகும் அகாரமதே மூலமாகி அண்டம் எல்லாம் தாங்கி நின்ற அ மூலம் ஆமே

#3
மூலம் எனும் ஆதார வட்டம்தானே முச்சுடரும் முக்கோண மூன்று நாடிச்
சீலம் எனும் சிவலிங்க பாத தீர்த்தம் திருவடியும் திருமேனி நடமும் ஆகும்
கோலமுடன் அண்டம் எல்லாம் தாங்கிக்கொண்டு கொழுந்துவிட்ட கம்பமதாய் மேலே நோக்கி
ஆலம் உண்ட கண்டம் எலாம் தானாய் நின்ற அகாரம் முதல் அவ்வெழுத்தை அறிந்து பாரே

#4
அறிந்ததுவும் தற்பரமே அகாரம் ஆகும் அறிவுடைய உகாரம் சிற்பரமது ஆகும்
பிறந்ததுவும் உலகம் எலாம் சமயம்தானாம் பேதம் எனும் கருவி வகை எல்லாம் ஆகும்
அறிந்ததுவும் அகாரம் எனும் பாதம்-தன்னை அடி முடி என்று அனுதினமும் அறிந்து நோக்கே

#5
நோக்கமுடன் மூலம் எனும் பாதம்-தன்னை நுண்பொருளாம் சிற்பரத்தினூடே நோக்கும்
தீர்க்கமுடன் ஆதார வகையும் தாண்டித் திருநயனம் நாசி நெற்றி நடுவே பார்த்துப்
போக்கு அறிந்து இங்கு இந்த நிலை நோக்க வல்லார் புரி சடையோன்-தன்னுடைய புதல்வர் ஆவார்
ஆக்கமுடன் அருள் சுடர் போல் குருவைத்தானே அனுதினமும் நோக்கி நிற்பார் ஆசானாமே

#6
ஆசானும் ஈசானும் ஒன்றேயாகும் அவன் அவளும் ஒன்றாகும் அதுதானாகும்
பேசாத மந்திரமும் இதுவேயாகும் பேரொளியின் வடிவாகும் பேருமாகும்
நேசாரும் கலைகள் எலாம் தானேயாகும் நிலையான ஓங்கார பீடமாகும்
ஈசானை ஆசானாய்க் காணும்பேர்க்கு இங்கு இன்பமுடன் கயிலாசம் எய்தலாமே

#7
எய்த அரிய பரசிவத்தின் மூலம்-தன்னில் இரு சுடரும் உதித்து ஒடுங்கும் இடமே என்று
எய்த அரிய பரசிவத்தின் மூலம்-தன்னில் இரு சுடரும் உதித்து ஒடுங்கும் இடமே என்று
மெய்தொழியும் சுழுமுனையே கம்பமாகி மெய்ப்பொருளாம் சோதி என மேவி நிற்கும்
இவ் வகையே மூலம் எனும் பாதம்-தன்னை இருநேரமற்றிடத்தே இறைஞ்சிக் காணே

#8
காண்பதுதான் பேரொளியின் காட்சியாகும் காண அரிய பொருளாகும் காட்டும்போதே
ஆண் பெண்ணாய் அலியாகி அடியுமாகி அப்பாலைக்கப்பாலாய் அமர்ந்த சோதி
வீண் பயிலும் வேதம் எல்லாம் தேடிக் காணா வெறும் பாழதாகியே மேவி நின்றார்
சேண் பயிலும் செகசோதி மூலம்-தன்னைத் தேட அரிய பாதம் என்றே தெளிந்து நோக்கே

#9
தெளிவு அரிய பாதமது அகாரமாகிச் சிற்பரமும் தற்பரமும் தானேயாகி
அழிவு அரிய சோதியது தானேயாகி அடி முடிவு முடியாகி அமர்ந்து நின்று
மொழிவு அரிய முதலாகி மூலமாகி முச்சுடரும் தானாகி முடிந்த சோதி
சுழியினிலே முனையாகிக் கோபமாகிச் சொல்ல அரிய எழுத்து என்றே தொகுத்துப் பாரீர்

#10
தொகுப்பதும்தாம் மந்திரங்கள் கருவி நூல்கள் சொல்ல அரிய தத்துவங்கள்-தம்மை எல்லாம்
வகுத்துடனே இவற்றை எலாம் கண்டு நீங்கி வாகான உடல் உயிரை வகையால் கண்டு
பகுப்புடனே சேராமல் பாதம்-தன்னைப் பரகதிக்கு வழி எனவே பற்றிக்கொண்டு
விகற்பம் இலா மூலமதில் நின்ற சோதி மேலான பாதம் என்றே மேவி நில்லே

#11
மேவியதோர் சற்குருவின் பாதம்-தன்னை மெய்ஞ்ஞானம் என்று அதனை மேவிக்கொண்டு
ஆவி உடல் காயம் எல்லாம் அறிந்து பார்த்தே அத்தனார் வடிவம் என்றே அறிந்துகொண்டு
பாவனையுளான எல்லாம் விட்டு நீங்கிப் பகல் இரவு மற்றிடத்தே கருத்தை வைத்துச்
சீவனையும் சிவம்-தனையும் ஒன்றாய்த்தானே திருமூலர் பாதம் ஒன்றித் திடமாய்க் காணே
**

29 திருவள்ளுவர் ஞானம்

** காப்பு
** எண்சீர் விருத்தம்

#1
அண்ட பிண்டம் நிறைந்து நின்ற அயன் மால் போற்றி அகண்ட பரிபூரணத்தின் அருளே போற்றி
மண்டலம் சூழ் இரவி மதி சுடரே போற்றி மதுர தமிழ் ஓதும் அகத்தியனே போற்றி
எண் திசையும் புகழும் என்றன் குருவே போற்றி இடைகலையின் சுழுமுனையின் கமலம் போற்றி
குண்டலிக்குள் அமர்ந்து நின்ற குகனே போற்றி குரு முனியின் தாள் இணை எப்போதும் போற்றி
** கட்டளைக் கலித்துறை

#2
அன்னை எனும் கர்ப்பமதனில் வந்தும் அதிலே இருந்தும்
நன்னயமாய்ப் பத்துத் திங்களும் நான் அகத்தே இருந்தேன்
என்ன அதிசயம் காண் இவ் உலகிலே அமைந்த
உன்னதம் எல்லாம் அமைத்தோன் உண்மையைக் காண்கிலரே

#3
அம்புவி-தன்னிலே உதித்து ஆய்ந்து அறி பாடை-தன்னை
வம்பு உலகத்தார் வசியமாய்க் கைப்பிடித்தே பிரிந்து
கும்பி-தனிலே உழன்றும் அக் குண்டலி பொன் கமலம்
நம்பியிருந்தேன் சில நாள் ரகசியம் காண்கிலனே
** தரவு கொச்சகம்

#4
அண்டரண்ட வான் புவியும் ஆகமத்தின் உட்பொருளும்
கண்டிதமாய் யான் விளங்கும் காயமதிலே அறியும்
வண்டர் எனை நீசன் என்றவாறு தனையே ஒழித்தேன்
விண்ட ரகசியம்-தன்னை விளக்கமது காண்கிலரே

#5
வையமதிலே உதிக்கும் மாண்பர்களே உங்கள் உயிர்
மெய் என்று இருந்து அசைவு வெளிப்படுவது என்ன விதம்
அய்யம் இல்லா வாழ்ந்து உலகில் ஆண்மையாய்ப் பூண்ட மதிப்
பொய் எனும் இவ் வாழ்க்கையது போகும் சுடுகாடு உளதே
** கட்டளைக் கலித்துறை

#6
வீடான மூலச் சுழி நாத வீட்டில் விளங்கும் விந்து
நீடு ஆழி லோகம் தழைத்துப் பெருகியும் நின்று இலகும்
தேடாது அழித்த பொருளான பொக்கிடம் தேடி என்ன
காடான நாடு சுடுகாடு சேர்வதும் கண்டிலரே

#7
எழு வகைத் தோற்றமும் நால் வகை யோனியில் எய்திடினும்
பொழியச் சுரோணிதம் நாத விந்துப் பொருள் போதகத்தால்
கழியக்கழியக் கடல் உயிர் தேய்பிறை கண்டும் இருந்து
அழியப் பெரும் தரை எந்நாள் இருந்தும் அனித்தியமே

#8
எந்நாள் இருந்து என்ன முன்னாள் அனுப்படி இந்த உடல்
தன்னால் அழிவதும் தான் அறியாது எனத் தந்தை விதி
உன்னால் அழிவது உடல் உயிர் காயம் ஒழிவதும் கண்
அந்நாள் அனுப்படி கண்டும் இருந்து அறியாதவரே

#9
யோனிக்குள் ஆசை ஒழியாது அனித்தியம் உங்கள் உயிர்
தேனிக்குள் இன்பம் சுகாதிதமோ வரும் சிற்றின்பத்தில்
ஊன் அற்றுக் காயம் உடல் அற்றுப் போம் பொழுது ஒன்று அறியா
ஈனர்க்குச் சொர்க்கம் சுடுகாடு ஒழிய இனி இல்லையே
** நேரிசை வெண்பா

#10
இந்த உடல் காயம் இறந்துவிடும் இவ் உலகில்
வந்த வழி தான் அறியா வாழ்க்கையோ இந்த உடல்
அற்பக் குழியில் அரவம் இருப்பது எனும்
கற்பகத்தை ஆண்டிடுமோ காண்

#11
ஞானம் அறிந்தோர்க்கு நமன் இல்லை நாள்-தோறும்
பானமதை உண்டு பசியினால் ஞானமது
கண்டால் உடல் உயிரும் காயம் வலுவாகும்
உண்டால் அமிர்த ரசம் ஊண்

#12
சுழி அறியார்க்கு என்ன சுகம் அறியார்க்கு என்ன
வழி அறியார்க்கு என்ன எய்துமாறு சுழி அறியா
மூலம் அறிந்து அவ் வழியில் முத்தியடையார்க்கு நமன்
காலன் அவர்க்கே மரணம் காண்

#13
வேத மறை ஞான மெய்யுணர்வு தான் ஆகில்
நாதன் அருளால் பதவி நாடுமே வேத மறை
நாலு பொருளுள் நற்பொருளின் ஆற்று அறியப்
பாலுமது நெய் எனவும் பார்

#14
முதல் இருந்த ஊழ்வினையை முப்பாழைச் சுட்டுப்
பதறா மதி பாடுபட்டேன் முதல் இருந்த
நல்வினையும் தீவினையும் நாடாமலும் பிறந்து
வல்வினையில் போக்கிவிட்டேன் வாழ்வு

#15
காயசித்தியால் எனது கன்மவினை போக்கிய பின்
மாயசித்தி மூல சுழி வாய்க்குமே காயசித்தி
மூலப் புளியால் முதல் தீட்சை ஆச்சுது இனிக்
காலம் என் இரண்டு ஆண்டில் காண்

#16
கல் உப்பின் வாரும் கருத்து அறியா துண்டு மனு
வல்வினைக்கு உள்ளாகி மரணமார் கல் உப்பு
வெள்ளைக்கல் உப்பு வெகுவிதமாய் வந்தாலும்
உள்ளம் அதில் உண்டு என்றே உன்

#17
என்றும் இந்துப்பு ஆகும் எண் சாண் உடல் இருக்கக்
கண்டும் அறியாதது என்ன காரணமோ என்று மதி
வாரியம் உரியதை வன்னி விட்டுக் காய்ச்சிய பின்
வீரியமாய் யான் உணரும் மெய்

#18
உப்பின் கசடுதான் ஊறல் அது மாறினதால்
முப்பு சுன்னம் ஆவதற்கும் முன்னமே உப்பதனால்
கற்பாந்தம் கோடி காயம் இது வலுத்துச்
சொல் பாயும் வாசியில் தேகம்

#19
அஞ்சு பஞ்சபூதம் அறிந்தால் அனித்தியம் போம்
அஞ்சு வசப்படுவது ஆண்டதனில் அஞ்சினையும்
கண்டு அறிவோர் ஞானக் காட்சியதில் நினைவு
விண்டு அறியலாமே விதி

#20
எண் சாணாம் தேகம் எடுத்தால் என் ஆண்டையே
பெண் சாரல் நீக்கியே பேரின்பம் கண் காணத்
தேகம் ஒழியாமல் சித்தி பெறு ஞானம்
யோக சித்தி பூசை விதி உன்
**

30 பட்டினத்துச் சித்தர் ஞானம்

** நேரிசை வெண்பா
** காப்பு

#1
நண்பான நெஞ்சுக்கே ஞானத்தால் நல்ல புத்தி
வெண்பாவாய் நூறும் விளம்பவே பண்பாக்
ககனப் பதமுற அக் கன்மம் அருகக்
ககன கதிர் வேல் முருகன் காப்பு

#2
நெஞ்சுடனேதான் புலம்பி நீலநிறத்தாள் ஈன்ற
குஞ்சரத்தை ஆதரித்துக் கும்பிட்டால் கஞ்சமுடன்
காமம் முதல் மும்மலத்தின் கட்டு அறுத்து ஞானமுடன்
பூமி-தனில் வாழ்வர் எப்போதும்

#3
எப்போது இறைவன் எழுத்தை விட்டுத் தப்புவோம்
எப்போது எழுத்து இரண்டை ஏத்துவோம் எப்போது
காமன் வலை அறுப்போம் கார் ஒளியைக் கண்டு நெஞ்சே
ஏமன் வலை அறுப்பது என்று

#4
என்றும் பயம் அறவே ஈரெழுத்தும் ஓரெழுத்தாய்
நின்ற சிவலிங்கத்தை நெஞ்சே கேள் உண்டு உறங்கித்
தேசம் எல்லாம் நின்று அசைந்த தீ எழுத்தே லிங்கம் காண்
ஆசை விந்தே ஆவுடையாள்

#5
ஆவுடையாளோடு இருந்தேன் அருளானந்தம் பெறவே
கோவுடையாள் நின்ற தினம் கூடிய பூவுடையாள்
கட்டழகியைத்தான் கடந்து பெருவெளியில்
இட்டமுடன் நெஞ்சே இரு

#6
இருவினைக்கு உளாகாதே என் உடைமை எண்ணாதே
பெருகு சினம்கொண்டு பினத்தாதே மருவு மலக்
கள்ளம் எலாம் விட்டுக் கரைந்துகரைந்து உருகி
உள் உணர்ந்து நெஞ்சே பார் ஒன்று

#7
ஒன்றும் அறியாதே ஓடி அலையாதே
சென்று மயங்கித் திரியாதே நின்ற
நிலை பிரியாதே நெடிய நெஞ்சே கொடிய
புலை வினையும் மாற்றும் பொருள்

#8
பொருளுடைமை நம்பாதே பொய் வாழ்வை நத்தாதே
இருள் உறவை நம்பி இராதே பொருள் உறவு
கொண்டு அறிவினாலே குறித்து வெளியதனைக்
கண்டுபிடித்து ஏறு நெஞ்சே காற்று

#9
காற்றுடனே சேர்ந்து கனல் உருவைக் கண்ட வழி
மாற்றி இனிப் பிறக்க வாராதே ஏற்றபடி
ஓடி அலையாதே ஓங்காரத்து உள்ளொளியை
நாடி இருப்போம் மனமே நாம்

#10
நான் எனது என்று வினை நாடி அலையாதே
தான் அவனே என்று தரியாய் நீ ஏன் மனமே
வீண் ஆவல்கொள்ளாதே மேலாம் பழம்பொருளைக்
காண் ஆவல்கொள்ளாய் கருத்து

#11
கருத்து வேறு ஆகாதே கண்டிடத்து ஓடாதே
விரித்துப் பல வேடம் மேவாய் பெருத்ததொரு
சஞ்சலத்தை விட்டுச் சலம் அறிந்து காண் மனமே
அஞ்செழுத்தால் ஒன்பது

#12
ஒன்பது வாய்க் கூட்டை உறுதி என்று நம்பாதே
ஐம்புலனே என்று அணுகாதே இன்பமுடன்
சிற்பரத்தின் உள்ளே தெளிந்த பரமானந்தத்து
உட்பொருளே மெய் என்று உணர்

#13
மெய் உணர்ந்து பாராமல் விரிந்து அகன்று போகாதே
அய்யன் திருவிளையாட்டா நெஞ்சே செய்யதோர்
ஆணெழுத்தும் பெண்ணெழுத்தும் ஆகி நடு நின்ற
காணும் பொருள் உரைக்கும் கல்

#14
கல்லான நெஞ்சே கவலைக் கருத்தாகிப்
பொல்லாப் பவக் கடலில் போகாதே எல்லாம்
செலக் குமிழி என்று நினை செம்பொன்னம்பலத்தைக்
கலக்கம் அறப் பார்த்தே கரை

#15
கரை தெரியா இன்பக் கடலில் மூழ்காதே
வரை கடந்த வாழ்வை நத்தாதே உரை இறந்த
ஓசை விந்துவே மனமே உற்ற சபையால் அறிந்து
நேசமுள்ள பாக்கியத்தில் நில்

#16
பாக்கியத்தைக் கண்டு பரிந்து மகிழாதே
தாக்கும் இடி வந்தால் சலியாதே நோக்குமே
ஒருத்தன் திருவிளையாட்டு என்று உணரு நெஞ்சே
கருத்தாலே நின்று கருது

#17
கருதாதே மங்கையர் காம வலைக்கு ஏங்கி
உருகாதே நெஞ்சே ஒருவன் இரு காலைக்
காத்து அயர்ந்து சேர்த்துக் கனலைக் கண் காட்டின கண்
போற்றிப் பார் ஒத்த நல் பொன்

#18
பொன்னாசை மண்ணாசை பூங்குழலார் ஆசை எனச்
சொன்னாசை என்று அறிந்து சோராதே எந்நாளும்
ஈசன் அமைத்தாங்கு இருக்கும் காண் இ மூன்றும்
பாசமது நெஞ்சே பரிந்து

#19
பரிந்து திரியாதே பார் வினைக்கும் அஞ்சாதே
அறிந்து உருகிச் சிந்தித்து அலையேல் வருந்தி
நடந்து சித்ரநாடியிலே நாதம் அறி நெஞ்சே
உடைந்திடு முன்னே உடம்பு

#20
உடம்பு அழிந்த பின் மனமே ஒன்றும் கிடையாது
உடம்பு அழியும் முன் கண்டு உணராதே உடம்பில்
கரு நிறத்தைச் சேர்ந்து கருமலச் சிற்றற்றுப்
பருகு கலை மதியப் பால்

#21
பாலிக்கும் தோல் தனத்தை பாராதே மங்கையர்கள்
கால் இடுக்கை நத்திக் கரையாதே கோல் எடுத்து
வீர மறலி இவரும் முன் வினை அறுக்கும்
பார வழி இன் அருளைப் பார்

#22
பார்த்த இடம் எல்லாம் பரம் என்று இரு மனமே
காற்று அனல் மண் நீர் வெளியாம் கண்ட எல்லாம் மாத் திரண்ட
ஐம்புலனும் நில்லா ஆசைகளும் நில்லாவே
என்பு உடலும் நில்லாது இனி

#23
இனிய சுகம் ஐம்புலன் என்று எண்ணாதே நெஞ்சே
இனிய சுகம் மறவாதே இனிய சுகம்
கண்டது எல்லாம் எவ் உலகு காணாத இவ் உலகில்
நின்றதோ நில்லாததோ

#24
நில்லாமல் ஓடுகின்ற நெஞ்சே நிலையில்லா
எல்லாம் பகையாய் இருக்கும் காண் பொல்லாக்
கருக்குழியிலே பிறந்த கன்மவினையானால்
திருக்கு அறுக்க வேணும் தினம்

#25
தினம் தினைப் போதாகிலும் தான் தீது அற நில்லாமல்
இனம் பிரிந்த மான் போல் இருந்தாய் தினம்தினமும்
ஓங்காரத்து உள்ளொளியை உற்று உணர்ந்த நீ மனமே
ஆங்கார அச்சம் அறு

#26
அச்சத்தால் ஐம்புலனும் ஆங்காரத்தால் மேய்ந்த
கச்சத்தான் நிச்சயமாய்க் கள்ளதோ மெச்சத்தான்
அண்டம் எல்லாம் ஊடுருவ ஆகாசமும் கடந்து
நின்ற நிலைதான் நிலை

#27
நிலை அறிந்து நில்லாமல் நீ பாவி நெஞ்சே
அலை மதி போலே தினமும் ஆனாய் கலை அறிந்து
மாரனையும் கூற்றினையும் மாபுரத்தையும் புகைத்த
வீரனையும் தேட விரும்பு

#28
விரும்பித் தனித்தனியே மெய்யுணராதே மா
இரும்பு உண்ட நீர் போல வேகும் கரும்பதனைத்
தின்றால் அல்லோ தெரியும் நெஞ்சே நின் ஐம்புலனை
வென்றால் அல்லோ வெளிச்சமாம்

#29
வெளிச்சம் இல்லா வீடே விளக்கேற்றினதாக்
களி சிறந்து நின்றதைக் கா நெஞ்சே வெளிச்சம் அற
தொண்ணூற்றறு தத்துவம் ஒன்றாய்த் தோன்றும் காண்
எண்ணில் இவை காணாது இருட்டு

#30
இருட்டு அனைய மாய்கையால் எவ்வுலகும் தாய
பொருள்-தனையே மூடு ஐம்புலனால் திருட்டு மன
வண்டருடன் கூடாதே வாழ் மனமே நாம் இருவோர்
கண்டுகொள்வோம் காணாதது

#31
காணாததைக் கண்டால் கண்டது எல்லாம் காணாது
வீண் ஆவல்கொண்டு உள் மெலியாதே நாணாதே
இந்திரியத்தோடு பிணங்காதே பாவி நெஞ்சே
செஞ்சொல் மறை அக்கரத்தைத் தேடு

#32
தேடினால் ஐந்து திரு அக்கரத்தைச் சென்று வெளி
நாடினால் நெஞ்சே நலம் பெறலாம் வாடியே
பொல்லாப் புவி காணப் போகமதை நம்பாதே
எல்லாம் வெயில் மஞ்சளே

#33
மஞ்சு அனைய கூந்தல் மடவாரைக் கண்டு உருகும்
பஞ்சமல நெஞ்சே பகரக் கேள் மஞ்சள்
மயம் காணும் இந்த உடல் மாய வாழ்வு எல்லாம்
அயன் காண் அழி சூத்திரம்

#34
சூத்திரத்தால் ஆடும் சுழுமுனையைத்தான் திறந்து
பார்த்திருந்தால் வாராது பாவம் எல்லாம் சூத்திரத்தைப்
பாராமலே இருந்து பாவி மனமே பிறக்க
வாராமலே இருக்க வா

#35
வாசி-தனைப் பிடித்து வண் கனலோடே சேர்த்துச்
சீசீ எனவே திரியாமல் மாசி
இருளானதைச் சேர்த்து இருந்தாயே நெஞ்சே
பொருளானதை மறந்துபோட்டு

#36
போட்டுவிக்கும் பொல்லாப் புழுச் சொரியும் நாய் விடக்கே
கூட்டம் குலைந்து குலைந்திடும் முன் காட்டிடில்
தாழ்வுறாய் நெஞ்சே தராதரமாய் எங்கும்
மூழ்வானதை உயிர் போம் முன்

#37
முன்னே அயன் எழுதும் மூன்று வினை கண்டு உழன்று
பின்னும் தெரியலையோ பேய் மனமே தன்னை
அறியாதிருந்தால் அவன் அறிவானோ
குறியான புத்தி என்றே கொள்

#38
கொள்ளைக்கு உட்பட்டுக் குடிகேடரோடு இருந்து
கள்ளக் கருத்தால் கருதாதே மெள்ளமெள்ள
ஆய்ந்தாய்ந்து பார்த்து நீ ஆறாறுக்கு அப்பாலே
தேர்ந்து ஆய்ந்து பார்த்துத் தெளி

#39
தெளிந்த நீர் பட்டு அமுதம் சேர்ந்தால் தெளியா
தெளிந்த நீர் காட்டாதவை போல் தெளிந்தால்
சகலப் பொருள் தோற்றும் தாழ்வுறாது ஒன்றும்
பகல் இரவு இல்லாத பதி

#40
பதி பசு பாசங்களையும் பற்றி உருவப்
பதி-தனிலே தங்கிப் பலரும் கதி பெறவே
வீணாமோ நெஞ்சே கேள் வேதாந்தத்து உட்பொருளை
காணாமலாமோ கணக்கு

#41
கணக்கு அறியா மாயக் கருவி கரணாதிப்
பிணக்கு அறியாமல் பேதை நெஞ்சே இணக்கம்
அறிந்து இணங்க வேணும் அருள் வெளியின் உள்ளே
செறிந்து விந்து நாதத்தைச் சேர்

#42
சேராதே மாய்கை-தனை சேர்ந்து கருக்குழியைப்
பாராதே நெஞ்சே பதையாதே சீரான
சித்திரத்தைப் பார்த்து தினமே சித்திரத்தில்
உத்திரத்தைக் கொள்ளாய் உகந்து

#43
உகந்து உகந்து நெஞ்சமே ஓரெழுத்தினாலே
அகம்-தனையே சுத்திபண்ணி பாய்ந்து முகந்து
குடியாமல் ஆமோ குலவு மலமான
மிடியானது தீர வேண்டி

#44
வேண்டும் திரவியமும் மேல் உயர்ந்த பள்ளி எல்லாம்
ஆண்ட திரை நாடும் அம்பலமும் மாண்டு பெரும்
காடு உயர்ந்தாரே மனமே கண்டாயோ மாயன் அயன்
தேட அரிய ஈசன் செயல்

#45
செய மகா நெஞ்சே திருட்டு மலக் கோட்டை
பயம் அறவே வெட்டிப் பரப்பி நயமான
வாசியினால் சுட்டு மதி மயங்கக் கண்டிருப்போம்
பேசிய நாம் பேசாமலே

#46
பேசாத ஞானப் பெருமை கிடப்பதுதான்
ஆசாபாசங்கள் இல்லாதார்க்கு அல்லோ கூசாமல்
தேசம் எல்லாம் ஓடித் திரிகின்றாயே மனமே
ஆசாபாசங்களும் நீயாய்

#47
பாசம் களைந்து பதியில் இருந்துகொண்டு
பேச அரிய காலைப் பிடித்திருக்க நேசமுடன்
நாம் இருவரும் கூடி நாதாந்த ஞானத்தை
தாம் ஒருவனாய் இருக்கத் தங்கு

#48
தங்கு நெடுவளையில் சகலங்களும் கடந்து
எங்கும் நான்தானாய் இருக்காமல் மங்கு
கருவானாய் நெஞ்சே கரிக் காலதூதன்
வருவானே என்ன வகை

#49
என்ன வகை செய்வோம் எமதூதன் வந்தக்கால்
பின்னை என ஒட்டானே பேய் நெஞ்சே சொன்ன
படியே கேள் தூதன் பரிந்து வரும் முன்னே
அடி தேடிக்கொண்டே அமர்

#50
அமரும் மனம் புத்தி ஆங்காரமே சித்து
அமரும் பொழுது வேறானோர் அமரும்
கோவென்று உரைத்த நமன் கொண்டுபோம்போது அறிவு
வா என்றால் நெஞ்சே வாராது

#51
வாராது நெஞ்சே மயக்கம் வரும் முன்னே
வேரானதைப் பிடித்து மேல் ஏறிப் பாராமல்
பொய்யிலே நில்லாதே புத்தி கெடாதே இருந்தால்
மெய்யிலே நின்று அறிவோம் மெய்

#52
மெய் ஆறு வீடுகளாய் மேலாம் படைவீடாய்
ஐயாறு மாதம் அறுபதாய் மெய்யாகக்
கண்டது எல்லாம் நானே காண் காணாததைத் தேடிக்
கண்டு உருகி நெஞ்சே கனி

#53
கனி அருந்தமாட்டாமல் காய் அருந்துகின்றாய்
கனி ருசி போல் ஆகுமோ காய்தான் இனியது கேள்
நானும் நீயும் கனி காண் நடு இருந்ததே ருசி காண்
தேனும் பாலும் போல் சிவன்

#54
சிவதலங்களைத் தேடி சீ எழுத்து அறுத்துச்
சிவதலங்களைத் தேடிச் சேரா தவ தவங்கள்
பண்ணாதே நெஞ்சே கேள் பார வினை வந்தக்கால்
எண்ணாதே அஞ்சி ஏங்காதே

#55
ஏங்காதே நெஞ்சே கேள் எவ் வினைகள் வந்தாலும்
ஏங்காதே சற்றும் இளைக்காதே தாங்காமல்
கொண்டவனும் செத்தவனும் கூட்டத்தானும் வந்தான்
இன்று குறித்து உண்மை இது என்று எண்

#56
எண்ணரிய நெஞ்சே இனிய நல் பாலதனை
அன்னம் தண்ணீர் நீக்கியே அருந்து தன்மை போல்
துன்பம்-தனைக் களைந்து தூய வெளி ஊடுருவாய்
இன்பங்களைச் சேர்ந்து இரு

#57
சேர்ந்து இருவோரும் பாலும் தேனும் போலே கலந்து
வார்ந்ததிலே உள்ளுரிசி வாங்காமல் போங்காலம்
வைத்த மறக் காலன் வருவானே வந்தக்கால்
எய்த்திடுவான் நெஞ்சே எவன்

#58
எவன் இருந்து நெஞ்சே எதிர்ப்பாரும் உண்டோ
கவனம் அற நின்று கருதின் புவனம் எல்லாம்
வித்து உயிர் எல்லாம் கழண்டு விண் அடைந்ததே மனமே
மற்று உடலை உண்கிறதே மண்

#59
மண் எழுந்தும் நீர் எழுந்தும் வாய்வு எழுந்தும் தீ எழுந்தும்
விண் எழுந்தும் கூடி ஒரு வீடாகி நண்ண அரிய
மாயம் எல்லாம் உண்டாக்கி வைத்தான் காண் நெஞ்சே இக்
காயம் எல்லாம் நானாக் கரு

#60
கரு அழிந்தால் வித்தை இல்லாக் காரணம் போல் நெஞ்சே
கரு அழிந்தது எல்லாம் கண்டது எல்லாம் கருதித்
திரியாதே நெஞ்சே சிவன் செயலே அல்லால்
மரியார் இல்லாதக்கால் வந்து

#61
வந்ததுவும் நாதாந்த வாதனைக் கண்டே வணங்கித்
தந்திரமாய்ச் சென்று தரியாமல் அந்தரத்தில்
விட்ட பட்டம் போல் அலைந்து வெவ்வினையினால் மனமே
தட்டுகெட்டுப்போகாதே தான்

#62
தானம் தவம் முயற்சி தாளாண்மையோடு நெஞ்சே
வானம் பிளந்து வழி கூடின் நானும் அதில்
நீயும் ஒரு நிழலில் நின்று அங்கு இளைப்பாறி
தோயுமதி தானே தொடங்கு

#63
தொடங்கு வினை அறுத்து சுற்றம் எலாம் நீத்தே
அடங்கும் இடத்தில் அடங்காமல் கிடந்து
பறந்து எடுத்த குஞ்சாய் பதைத்தாய் மனமே
அரும் சரத்தம் அதன் அடி

#64
மதன சரத்தால் மனமே வையம் மயங்கி
விதனத்து உறலால் வேறு இல்லை மதனாலே
தத்துச் சுகத்தை நத்தித்தான் அலைய வேண்டாம் காண்
மெத்த சுகத்தை வெறுத்து

#65
வெறுத்து வெருக்கொண்டது போல் வீணிலே நெஞ்சே
பொறுத்த மயக்கில் போகாதே குறித்தெடுத்துத்
தேடியே வாசி-தனைச் சேர்ந்து கலந்த பொருள்
கூடினால் ஆமே குணம்

#66
குணங்கள் பலவிதமாய் கொள்ளாதே நெஞ்சே
வணங்கும் குணமாக வந்து வணங்கியே
மண்டலம் எலாம் கடந்து மா வீட்டை நீ திறந்து
கண்டெடுத்துக்கொள்வாய் கனம்

#67
கன தனத்து மாதர் கழி காதல் கொண்டே
வினையார் நகைக்கு உருக வேண்டா தினம் மனமே
சோதித்தான் அல்லால் சுபகாரியமாகப்
போதித்தால் கொள்விலையோ புத்தி

#68
புத்தி தரும் வித்தை தரும் பொல்லாப்பு இல்லாமல் நெஞ்சே
சித்தி முத்தி பேரின்பம் சேர்ந்திடலாம் நித்தநித்தம்
தான் அந்தமானதொரு சற்குருவோடே பழகி
ஆனந்தமுண்டு இருந்தக்கால்

#69
கால் வழிச் சென்று கருப்பைக் குழிக்குக் கீழ்
மூலம் அற்ற நல் வழியே மூழ்கின்றி மாலை
இருட்டு அறுத்துப்போடாமல் என் பாவி நெஞ்சே
திருட்டு வித்தை செய்கிறாய் சென்று

#70
சென்று சிவன் அடியில் சேர்ந்த பெரும் பாம்பு
ஒன்று மிக வாசியைத் தான் ஓட்டாமல் நன்றாய்
நிலையாக நில்லாது அலைவாய் மனமே
அலை வாயினில் துரும்பதாய்

#71
தாய் தந்தை பெண்டு பிள்ளை தான் என்று இரங்கி நித்தம்
காய் பறிக்கிறாயே கனி இருக்க தாய் தந்தை
எத்தனை பேர் பெற்றாரோ என் மனமே நாமும்தான்
எத்தனை பேரைப் பெற்றோம் இங்கு

#72
இங்கு அங்குமாய் மனமே ஈடழிய வேண்டாம் காண்
அங்கம் பொருளா அறிந்துகொண்டு எங்குமெங்கும்
நாமே சிவமாக நாடினால் ஞான மொழி
தாமே அருளைத் தரும்

#73
அருளில்லாதார்க்கும் அருள் அறிவு அங்கு ஆமோ
அருள் அறிவுதானே ஆனந்தம் அருள் அறிவு
தேடுவதும் கூடுவதும் சிந்தை ஆனந்தமுடன்
நாடுவதும்தான் அறிவினால்

#74
நாடில் எழுத்து ஆறும் நடு எழுத்து ஈரைந்தும்
ஓடின் ஒரு பதினால் ஆகுமோ ஓடாய் நீ
ஓரெழுத்தைக் கண்டு உறங்கி உன்னோடு உறங்கி நெஞ்சே
ஓரெழுத்திலே சென்று உறை

#75
உறை கலத்தினாய் போல உள்ள மலம் எல்லாம்
அறுத்து அடைந்து நெஞ்சே அறுதி நிறைத்துப்
புளியம்பழத் தோடு போல் இருக்க வேண்டும்
களி அழியும் காலத்துக்கே

#76
காலம் கழித்துக் கடைவாயில் பால் உறும் முன்
வேல் அங்கு அனைய விழி மடவார் ஏலக்
குழியில் வைத்து மாரடித்து கூப்பிடும் முன் மாய்கைக்
கழி எடுத்துப் போடும் முன் கண்ணால்

#77
கண்ணாலே ஞானம் கருதாமல் நெஞ்சே நீ
எண்ணாத மாய்கை எல்லாம் எண்ணுகிறாய் நண்ணாய் கேள்
பார்க்கவேண்டும்தனையும் பத்தரைமாற்றுத் தங்கம்
ஆக்கப் போகாதோ உன்னால்

#78
உன்னாலே நெஞ்சமே ஊழ்வினை வந்தாலும்
எந்நாளும் பாம்பின் வாய் தேரை போல் முன்னால்
அம்புபட்டுப் போகாதே ஆனந்த மெய் விளக்கு
நம்பி துணைக்கு முற்றும் நம்பு

#79
நம்பினான்-தன்னை நடுவணையிலே இருந்து
கும்பிடாதார்க்கும் குறை உண்டோ நம்பிப்
பளிங்கு ஒளி போல் நெஞ்சே பரந்திடலாம் எங்கும்
விளங்கு அனலோடே சேருமே

#80
ஏமன் வரும் முன் நெஞ்சே எவ் வினையுமே வென்று
சாம நடுவதனில் சார்ந்ததிலே சேமமுடன்
காலனையும் வென்று சில காமனையும் வென்று பின்பு,
பாலிக்கலாம் அது நாம் பார்

#81
பார் அயனும் மாலும் பரவ அரு உருத்திரனும்
கார் அனைய வாரணத்தைத் தான் கண்டு சீராய
நக்கத்திடை நடுவே நல் ககன பொன் பதியில்
சொல் கனகத்தன் பதியில் தோன்று

#82
தோன்றுமே எல்லாச் சுகமுற்று அதில் மனமே
தோன்றுமே ஆனந்தச் சுந்தரர் பின் தோன்றுமே
அட்சரச் சுருக்கினொடும் அக்கரப் பெருக்கமுடன்
உச்சரித்து உரைக்கிற உண்மை

#83
உண்மை இது காண் ஒளி இருந்த வீடது காண்
உண்மை சிவன் இருக்கும் ஊரு காண் உண்மை
கருமை ஒளி ஏழ் கதியுள் பதங்கள்
மருவு தங்கி நீ வருந்துமாறு

#84
வருந்தும் பொழுது காண் மாயையாய் நெஞ்சே
வருந்தும் குணமாக வந்து வருந்தும்
இருவினை தொடக்கு அறும் ஏழ் வகைப் பிறப்பாம்
கரு மலத் திருக்கு அறும் காண்

#85
காண் மனமே சத்தி சிவம் ஒன்றான காரணத்தைக்
காண் மனமே மால் அயனும் காண அரிதைக் காண் மனமே
செம்பொன்னின் அம்பலத்துள் சேரும் செஞ்சொல் என்னும்
அம்பலத்தில் ஆடும் நடனம்

#86
நடனமது பார் மனமே நயனத்திடையே
நடனமது நாலாம் பதம் காண் நடனம்
பதி மதி வித்தாய் மனமே பல கதி வித்தாய் எனவே
அதி வித சித்தாந்தம் ஆடும்

#87
ஆடும் பதி மனமே அம்பலத்தைச் சுட்டு நடம்
ஆடும் பரமகுரு ஆனந்தம் ஆடுகின்ற
கூத்தனை கூற்று இற்ற கூத்தபிரானைச் சுற்றம்
நீத்து அவனைச் சித்தம்வைத்து நில்

#88
நில்லு நிலவரமாய் நேசமுடனே பதியில்
நில்லு பிறவி அற நீ நெஞ்சே நில்லு
கனல் மதியும் கார் மிடறும் கதிரும் மதியும்
புனலொடு செஞ்சடையும் போற்றி

#89
போற்றித் தினம் மனமே பொல்லாக் குலங்கள் விட்டுக்
காற்றும் கனலும் கருத்து ஒன்றாய்ப் பார்த்து அறிவால்
சுத்த மலப் பித்தை அற்றுச் சுற்ற ஒழி சுற்றிலுற்றுச்
சத்தம் அறிந்து உற்று அதிலே தங்கு

#90
தங்கு நீ சென்று சதாசிவத்திலே மனமே
மங்கும் கருக்குழிக்குள் வாராமல் தங்கும்
கருவும் புனலும் கதியும் கெதியும்
விதியும் திருத்தான வெளி

#91
வெளியில் வெளியாகி விண்ணவன்தானாய்
வெளியில் ஒளியாய் இருக்க வெளியில்
கரி உரித்துப் போர்த்தவனைக் கார் மதி செற்றானைக்
கருவறுத்துப் பார்த்தலே காண்

#92
காணு மனமே கரி காலனை வதைத்துக்
காணும் உலகம் எல்லாம் காண் உருவாய் தானு
மன விரகமான புலி மன்றுள் நடனப்
பண வரவின் உற்ற பாதம்

#93
பாதத்தான் அஞ்செழுத்தான் பரமன் சிங்க
நாதத்தான் என்று நெஞ்சே நன்றாகப் போதத்தான்
ஆரணத்தினோடு அடைந்து அண்டம் எல்லாம் சுட்ட திரு
நீறு அணிந்துகொண்டு இரு நித்தம்

#94
நித்தனாய் நிர்மலனாய் நின்று உலகம் மூன்று உரைக்கும்
கர்த்தனாய் அஞ்செழுத்தின் காரணமாய்ப் பெற்ற
குருவின் இரு பாதம் குளிர நினை நீ
தரும் அது பற்றா மனமேதான்

#95
தான் அவன் ஆகாவிட்டால் சண்டாளன் தடிவான்
தான் அவனும் அங்கே தரிக்கொட்டான் மானார்
கலங்கும் கலவிக் கருத்து இற்றால் தான் கொடுப்பான்
இலங்கும் அடி தேர் நெஞ்சே

#96
நெஞ்சே உனக்கு நிலவரமாய்ச் சொன்ன எலாம்
எஞ்சா என் சொல் என்று இகழாதே நெஞ்சே
கருத்து இச்சை தள்ளிக் கருது என்று செப்பின்
கருத்து இச்சை தள்ளு கருத்துள்

#97
உள் இருந்து நெஞ்சே உலாவும் சிவகுருவை
வெள்ளெருக்கின் பூச் சூடும் வேணியனை உள்ளே
மனம் உருகப் பார்த்தால் மலை சிலையாகச் சென்றால்
உனது அறிவால் பார்த்து நீ ஓது

#98
ஓது நீ நெஞ்சே கேள் ஓரெழுத்து மந்திரத்தால்
ஆதியாய் எங்கும் அமர்ந்தானை ஓதில்
கடிய மிடியும் கடிய பிணியும்
கடிய அணுகாமல் காக்கும்

#99
காக்கும் தினமே கடியப் பிறப்பு அறுத்து
கார்க்கும் பல பிணி நோய் காட்டாமல் நோக்கும் அந்தி
வந்து பகல் வெளியில் வாராத மன்மதனை
உந்தும் அதை உணர்ந்து இல் வாழ்

#100
வாழு நீ நெஞ்சே மயங்கித் திரியாதே
ஏழெழுத்துக்கு அப்பால் இருப்பானை ஏழை
வருத்தம் தீர்த்து அன்பன் மனமதனில் தங்கு
பருத்த ரத்தினத்தைப் பணி

#101
பணிந்து துதி மனமே பல்லுயிர்கட்கு எல்லாம்
அணுவில் அணுவாகி இருந்தானைத் துணிவாய்ப்
பிறவாது இருக்கவும் பேரின்ப வாழ்வைத்
திறமாக நம்பிச் செலுத்து
**

31 பத்திரகிரியாரின் மெய்ஞ்ஞானப் புலம்பல்


#1
முத்தி தரும் வேதமொழியாம் புலம்பல் சொல்ல
அத்திமுகவன்-தன் அருள் பெறுவது எக்காலம்

#2
ஆங்காரம் உள் அடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்துத்
தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம்

#3
நீங்காச் சிவயோக நித்திரைகொண்டே இருந்து
தேங்காக் கருணை வெள்ளம் தேக்குவதும் எக்காலம்

#4
தேங்காக் கருணை வெள்ளம் தேக்கியிருந்து உண்பதற்கு
வாங்காமல் விட்டகுறை வந்து அடுப்பது எக்காலம்

#5
ஓயாக் கவலையினால் உள் உடைந்து வாடாமல்
மாயாப் பிறவி மயக்கு அறுப்பது எக்காலம்

#6
மாயாப் பிறவி மயக்கத்தை ஊடறுத்துக்
காயாபுரிக் கோட்டை கைக்கொள்வது எக்காலம்

#7
காயாபுரிக் கோட்டை கைவசமாய்க் கொள்வதற்கு
மாயா அனுபூதி வந்து அடுப்பது எக்காலம்

#8
சேயாச் சமைந்து செவிடு ஊமை போல் திரிந்து
பேய் போல் இருந்து உன் பிரமைகொள்வது எக்காலம்

#9
பேய் போல் திரிந்து பிணம் போல் கிடந்து பெண்ணைத்
தாய் போல் நினைத்துத் தவம் முடிப்பது எக்காலம்

#10
கால் காட்டிக் கை காட்டிக் கண்கள் முகம் காட்டி
மால் காட்டும் மங்கையரை மறந்திருப்பது எக்காலம்

#11
பெண்ணின் நல்லார் ஆசைப் பிரமையினை விட்டொழிந்து
கண் இரண்டு மூடிக் கலந்திருப்பது எக்காலம்

#12
வெட்டுண்ட புண் போல் விரிந்த அல்குல் பை-தனிலே
தட்டுண்டு நிற்கை தவிர்வதுவும் எக்காலம்

#13
ஆறாத புண்ணில் அழுந்திக்கிடவாமல்
தேறாத சிந்தை-தனைத் தேற்றுவதும் எக்காலம்

#14
தந்தை தாய் மக்கள் சகோதரரும் பொய் எனவே
சிந்தை-தனில் கண்டு திருக்கு அறுப்பது எக்காலம்

#15
மன் உயிரைக் கொன்று வதைத்து உண்டு உழலாமல்
தன் உயிர் போல் எண்ணித் தவம் முடிப்பது எக்காலம்

#16
பாவி என்ற பேர் படைத்துப் பாழ் நரகில் வீழாமல்
ஆவி என்ற சூத்திரத்தை அறிவது இனி எக்காலம்

#17
உளியிட்ட கல்லும் உருப்பிடித்த செஞ்சாந்தும்
புளியிட்ட செம்பும் பொருளாவது எக்காலம்

#18
வேடிக்கையும் சொகுசும் மெய்ப் பகட்டும் பொய்ப் பகட்டும்
வாடிக்கை எல்லாம் மறந்திருப்பது எக்காலம்

#19
பட்டு உடையும் பொன் பணியும் பாவனையும் தீவினையும்
விட்டுவிட்டு உன் பாதம் விரும்புவதும் எக்காலம்

#20
ஆமை வரும் ஆள் கண்டு ஐந்து அடக்கம் செய்தால் போல்
ஊமை உருக்கொண்டு ஒடுங்குவதும் எக்காலம்

#21
தண்டிகையும் சாவடியும் சாளிகையும் மாளிகையும்
கண்டு களிக்கும் கருத்து ஒழிவது எக்காலம்

#22
அத்தன் இருப்பிடத்தை ஆராய்ந்து பார்த்து நிதம்
செத்த சவம் போல் திரிவது இனி எக்காலம்

#23
ஒழிந்த கருத்தினை வைத்து உள் எலும்பு வெள்ளெலும்பாய்க்
கழிந்த பிணம் போல் இருந்து காண்பது இனி எக்காலம்

#24
அற்பசுகம் மறந்தே அறிவை அறிவால் அறிந்து
கெர்ப்பத்தில் வீழ்ந்து கொண்ட கோள் அறுப்பது எக்காலம்

#25
கருப்படுத்தி என்னை யமன் கைப்பிடித்துக்கொள்ளா முன்
உருப்படுத்தி ஆள உடன்படுவது எக்காலம்

#26
தூண்டு விளக்கு அணையத் தொடர்ந்து இருள் முன் சூழ்ந்தால் போல்
மாண்டு பிழைத்து வந்த வகை தெரிவது எக்காலம்

#27
தூரியினில் மீன் போல் சுழன்று மனம் வாடாமல்
ஆரியனைத் தேடி அடிபணிவது எக்காலம்

#28
எண்ணூறு யுகம் இருந்தும் எய்தாத வீடு பெற
வெண்ணீறு பூசி விளங்குவதும் எக்காலம்

#29
அவ வேடம் பூண்டு இங்கு அலைந்து திரியாமல்
சிவ வேடம் பூண்டு சிறந்து இருப்பது எக்காலம்

#30
அண்டருக்கா நஞ்சு அருந்தி அம்பலத்தில் ஆடு சிவன்
தொண்டருக்குத் தொண்டன் எனத் தொண்டுசெய்வது எக்காலம்

#31
பன்றி வடிவெடுத்துப் பார் இடந்து மால் காணாக்
குன்றில் விளக்கொளியைக் கூறுவதும் எக்காலம்

#32
தித்திக்கும் தெள் அமிர்தை சித்தாந்தத்து உட்பொருளை
முத்திக்கு வித்தை முதல் நினைப்பது எக்காலம்

#33
வேதாந்த வேதம் எல்லாம் விட்டொழிந்தே நிட்டையிலே
ஏகாந்தமாக இருப்பது இனி எக்காலம்

#34
மற்றிடத்தைத் தேடி என்றன் வாழ்நாளைப் போக்காமல்
உற்றிடத்தைத் தேடி உறங்குவதும் எக்காலம்

#35
இன்றுளோர் நாளை இருப்பதுவும் பொய் எனவே
மன்றுளோர் சொல்லும் வகை அறிவது எக்காலம்

#36
கஞ்சா அபினியுடன் கள் உண்டே வாடாமல்
பஞ்சாமிர்தத்தைப் பருகுவதும் எக்காலம்

#37
செஞ்சலத்தினால் திரண்ட ஜெனன மோக்ஷம் பெறவே
சஞ்சலத்தை விட்டு உன் சரணடைவது எக்காலம்

#38
கும்பிக்கு இரை தேடிக் கொடுப்பார் இடம்-தோறும்
வெம்பித் திரிகை விடுப்பது இனி எக்காலம்

#39
ஆடுகின்ற சூத்திரம்தான் அறுமளவுமே திரிந்து
போடுகின்ற நாள் வரும் முன் போற்றுவதும் எக்காலம்

#40
நவ சூத்திர வீட்டை நான் என்று அலையாமல்
சிவ சூத்திரத்தைத் தெரிந்து அறிவது எக்காலம்

#41
மறந்து மலசலங்கள் மாயப் புழுக்கூட்டை விட்டுக்
கரந்து உன் அடி இணைக் கீழ்க் கலந்து நிற்பது எக்காலம்

#42
இம்மை-தனில் பாதகனாய் இருவினைக்கு ஈடாய் எடுத்த
பொம்மை-தனைப் போட்டு உன்னைப் போற்றி நிற்பது எக்காலம்

#43
உப்பிட்ட பாண்டம் உடைந்து கருக்கொள்ளும் முன்னே
அப்பு இட்ட வேணியனுக்கு ஆட்படுவது எக்காலம்

#44
சேவைபுரிந்து சிவரூபக் காட்சி கண்டு
பாதை-தனைக் கழித்துப் பயனடைவது எக்காலம்

#45
காண்டத்தை வாங்கிக் கருமேகம் மீண்டது போல்
பாண்டத்தை நீக்கிப் பரம் அடைவது எக்காலம்

#46
சோற்றுத் துருத்தி-தனைச் சுமந்து அலைந்து வாடாமல்
ஊத்தைச் சடம் போட்டு உனை அடைவது எக்காலம்

#47
தொடக்கைச் சதம் எனவே சுமந்து அலைந்து வாடாமல்
உடக்கைக் கழற்றி உனை அறிவது எக்காலம்

#48
ஆசை வலைப் பாசத்து அகப்பட்டு மாயாமல்
ஓசை மணி தீபத்தில் ஒன்றி நிற்பது எக்காலம்

#49
கூறரிய நால் வேதம் கூப்பிட்டும் காணாத
பார ரகசியத்தைப் பார்த்திருப்பது எக்காலம்

#50
புல்லாய் விலங்காய்ப் புழுவாய் நர வடிவாய்
எல்லாப் பிறப்பின் இருள் அகல்வது எக்காலம்

#51
தக்கும் வகைக்கு ஓர் பொருளும் சாராமலே நினைவில்
பக்குவம் வந்து உன் அருளைப் பார்த்திருப்பது எக்காலம்

#52
பருவத் தலைவரொடும் புல்கி இன்பம் கொள்வதற்குத்
தெரிவைப் பருவம் வந்து சிக்குவதும் எக்காலம்

#53
தெரிவையுறும் பக்குவத்தின் சீராட்டம் எல்லாம் அறிந்து
குருவை அறிந்தே நினைத்துக் கும்பிடுவது எக்காலம்

#54
வம்படிக்கும் மாதருடன் வாழ்ந்தாலும் மன்னு புளி
யம்பழமும் ஓடும் போல் ஆவது இனி எக்காலம்

#55
பற்றற்று நீரில் படர் தாமரை இலை போல்
சுற்றத்தை நீங்கி மனம் தூர நிற்பது எக்காலம்

#56
சல்லாப லீலையிலே தன் மனைவி செய்த சுகம்
சொல்லாரக் கண்டு எனக்குச் சொல்வது இனி எக்காலம்

#57
மருவும் அயல் புருடன் வரும் நேரம் காணாமல்
உருகு மனம் போல் என் உள்ளம் உருகுவதும் எக்காலம்

#58
தன் கணவன் தன் சுகத்தில் தன் மனம் வேறானது போல்
என் கருத்தில் உன் பதத்தை ஏற்றுவதும் எக்காலம்

#59
கூடிப் பிரிந்துவிட்ட கொம்பு_அனையன் காணாமல்
தேடித் தவிப்பவள் போல் சிந்தைவைப்பது எக்காலம்

#60
எவ்வனத்தின் மோகம் எப்படி உண்டு அப்படி போல்
கவ்வனத் தியானம் கருத்துவைப்பது எக்காலம்

#61
கண்ணால் அருவி கசிந்து முத்துப் போல் உதிரச்
சொன்ன பரம்பொருளைத் தொகுத்து அறிவது எக்காலம்

#62
ஆகம் மிக உருக அன்பு உருக என்பு உருகப்
போக அநுபூதி பொருந்துவதும் எக்காலம்

#63
நீரில் குமிழி போல் நிலையற்ற வாழ்வை விட்டு உன்
பேரின்பக் கருணை வெள்ளம் பெருக்கெடுப்பது எக்காலம்

#64
அன்பை உருக்கி அறிவை அதன் மேல் புகட்டித்
துன்ப வலைப் பாசத் தொடக்கு அறுப்பது எக்காலம்

#65
கருவின் வழி அறிந்து கருத்தைச் செலுத்தாமல்
அருவி விழி சொரிய அன்புவைப்பது எக்காலம்

#66
தெளியத் தெளியத் தெளிந்த சிவானந்தத் தேன்
பொழியப் பொழிய மனம் பூண்டிருப்பது எக்காலம்

#67
ஆதார மூலத்து அடியில் கணபதியைப்
பாதாரவிந்தம் பணிந்து நிற்பது எக்காலம்

#68
மண் வளைந்த நல் கீற்றில் வளைந்து இருந்த வேதாவைக்
கண்வளர்த்துப் பார்த்து உள்ளே கண்டு இருப்பது எக்காலம்

#69
அப்புப் பிறை நடுவே அமர்ந்திருந்த விட்டுணுவை
உப்புக் குடுக்கை உள்ளே உணர்ந்து அறிவது எக்காலம்

#70
மூன்று வளையமிட்டு முளைத்து எழுந்த கோணத்தில்
தோன்றும் உருத்திரனைத் தொழுது நிற்பது எக்காலம்

#71
வாயு அறுகோணமதில் வாழும் மகேச்சுரனைத்
தோயும் வகை கேட்கத் தொடங்குவதும் எக்காலம்

#72
வட்ட வழிக்கு உள்ளே மருவும் சதாசிவத்தைக்
கிட்ட வழி தேடக் கிருபைசெய்வது எக்காலம்

#73
உச்சிக்கு இடை நடுவே ஓங்கும் குருபதத்தை
நிச்சயித்துக்கொண்டு இருந்து நேர்வது இனி எக்காலம்

#74
பார் ஆகிப் பார் மீதில் பஞ்சவர்ணம்தான் ஆகி
வேறு ஆகி நீ முளைத்த வித்து அறிவது எக்காலம்

#75
கட்டறுக்கவொண்ணாக் கருவி கரணாதி எல்லாம்
சுட்டறுத்த நிட்டையிலே தூங்குவதும் எக்காலம்

#76
கள்ளக் கருத்தை எல்லாம் கட்டோடு வேரறுத்து இங்கு
உள்ளக் கருத்தை உணர்ந்து இருப்பது எக்காலம்

#77
அட்டகாசம் செலுத்தும் அவத்தைச் சடலத்துடனே
பட்டபாடு அத்தனையும் பகுத்து அறிவது எக்காலம்

#78
அறிவுக் கருவியுடன் அவத்தைப்படும் பாட்டை எல்லாம்
பிரியமுடன் நிறுத்திப் பெலப்படுவது எக்காலம்

#79
பூதம் பொறி கரணம் போந்த விந்து நாதமுமாய்ப்
பேதம் பலவிதமும் பிரித்து அறிவது எக்காலம்

#80
தோன்று ஆசை மூன்றும் தொடர்ந்து வந்து சுற்றாமல்
ஊன்று ஆசை வேரை அடி ஊடறுப்பது எக்காலம்

#81
புன்சனனம் போற்றும் முன்னே புரிவட்டம் போகில் இனி
என் சனனம் ஈடேறும் என்று அறிவது எக்காலம்

#82
நட்டநடுவில் நின்று நல் திரோதாயி அருள்
கிட்ட வழிகாட்டிக் கிருபைசெய்வது எக்காலம்

#83
நானே நான் என்று இருந்தேன் நடுவில் நின்ற கட்டழகி
தானே வெளிப்படுத்தித் தருவன் என்பது எக்காலம்

#84
அடர்ந்த மனக்காட்டை அஞ்செழுத்தாம் வாளாலே
தொடர்ந்து தொடர்ந்து வெட்டிச் சுடுவது இனி எக்காலம்

#85
ஐந்து பொறி வழி போய் அலைத்தும் இந்தப் பாழ் மனதை
வெந்து விழப் பார்த்து விழிப்பது இனி எக்காலம்

#86
இனம் மாண்டு சேர்ந்திருந்தோர் எல்லோரும் தான் மாண்டு
சினம் மாண்டுபோக அருள் சேர்ந்து இருப்பது எக்காலம்

#87
அமையா மனது அமையும் ஆனந்த வீடு கண்டு அங்கு
இமையாமல் நோக்கி இருப்பது இனி எக்காலம்

#88
கூண்டு விழும் சீவன் மெள்ளக் கொட்டாவிகொண்டால் போல்
மாண்டு விழும் முன்னே நான் மாண்டு இருப்பது எக்காலம்

#89
ஊன் நிறைந்த காயம் உயிர் இழந்து போகும் முன்னம்
நாம் இறந்துபோக இனி நாள் வருவது எக்காலம்

#90
கெட்டுவிடும் மாந்தர் கெர்விதங்கள் பேசி வந்த
சுட்டுவிடும் முன் என்னைச் சுட்டு இருப்பது எக்காலம்

#91
தோல் ஏணி வைத்து ஏறித் தூர நடந்து எய்க்காமல்
நூலேணி வைத்து ஏறி நோக்குவதும் எக்காலம்

#92
வாயோடு கண் மூடி மயக்கமுற்று நில்லாமல்
தாயோடு கண் மூடித் தழுவி நிற்பது எக்காலம்

#93
காசினி எலாம் நடந்து கால் ஓய்ந்துபோகாமல்
வாசி-தனில் ஏறி வருவது இனி எக்காலம்

#94
ஒலி படரும் குண்டலியை உன்னி உணர்வால் எழுப்பிச்
சுழுமுனையின் தாள் திறந்து தூண்டுவதும் எக்காலம்

#95
இடை பிங்கலை நடுவே இயங்கும் சுழுமுனையில்
தடை அறவே நின்று சலித்திருப்பது எக்காலம்

#96
மூல நெருப்பை விட்டு மூட்டி நிலா மண்டபத்தில்
பாலை இறக்கி உண்டு பசி ஒழிவது எக்காலம்

#97
ஆக வெளிக்குள்ளே அடங்காப் புரவி செல்ல
ஏக வெளியில் இருப்பது இனி எக்காலம்

#98
பஞ்சரித்துப் பேசும் பல கலைக்கு எட்டாப் பொருளில்
சஞ்சரித்து வாழ்ந்து தவம் பெறுவது எக்காலம்

#99
மலமும் சலமும் அற்று மாயை அற்று மானம் அற்று
நலமும் குலமும் அற்று நான் இருப்பது எக்காலம்

#100
ஓடாமல் ஓடி உலகை வலம்வந்து சுற்றித்
தேடாமல் என்னிடமாய்த் தெரிசிப்பது எக்காலம்

#101
அஞ்ஞானம் விட்டே அருள் ஞானத்து எல்லை தொட்டு
மெய்ஞ்ஞான வீடு பெற்று வெளிப்படுவது எக்காலம்

#102
வெல்லும்மட்டும் பார்த்து வெகுளி எலாம் விட்டு அகன்று
சொல்லும்மட்டும் சிந்தை செலுத்துவதும் எக்காலம்

#103
மேலாம் பதம் தேடி மெய்ப்பொருளை உள் இருத்தி
நாலாம் பதம் தேடி நான் பெறுவது எக்காலம்

#104
எண்ணாத தூரம் எல்லாம் எண்ணியெண்ணிப் பாராமல்
கண்ணாடிக்குள் ஒளி போல் கண்டு அறிவது எக்காலம்

#105
என்னை அறிந்துகொண்டே என் கோமானோடு இருக்கும்
தன்மை அறிந்து சமைந்திருப்பது எக்காலம்

#106
ஆறு ஆதாரம் கடந்த ஆனந்தப் பேரொளியை
வேறாகக் கண்டு நான் பெற்றிருப்பது எக்காலம்

#107
ஆணவ மாயத்தால் அழிந்து உடலம் போகா முன்
காணுதலால் இன்பமுற்றுக் கண்டு அறிவது எக்காலம்

#108
மும்முலமும் சேர்த்து முளைத்து எழுந்த காயம் இதை
நிர்மலமாய்க் கண்டு வினை நீங்கி இருப்பது எக்காலம்

#109
முன்னை வினை கெடவே மூன்று வகை காட்சியினால்
உன்னை வெளிப்படுத்தி உறுவது இனி எக்காலம்

#110
கண்ணின் ஒளி பாய்ந்ததுவும் கருத்து அறிந்துகொண்டதுவும்
விண்ணின் ஒளி கண்டதுவும் வெளிப்படுவது எக்காலம்

#111
கனவுகண்டால் போல் எனக்குக் காட்டி மறைத்தே இருக்க
நினைவைப் பரவெளி மேல் நிறுத்துவதும் எக்காலம்

#112
ஆர் என்று கேட்டதுவும் அறிவு வந்து கண்டதுவும்
பார் என்று சொன்னதுவும் பகுத்து அறிவது எக்காலம்

#113
நினைக்கும் நினைவு-தொறும் நிறைந்த பரிபூரணத்தை
முனைக்கு மேல் கண்டு கண்ணில் முளைத்து எழுவது எக்காலம்

#114
முப்பாழும் பாழாய் முதல் பாழும் சூனியமாய்
அப் பாழும் பாழா அன்புசெய்வது எக்காலம்

#115
சீயென்று எழுந்து தெளிந்து நின்ற வான் பொருளை
நீ என்று கண்டு நிலைபெறுவது எக்காலம்

#116
வவ்வெழுத்தும் அவ்வெழுத்தும் வாள் ஆகும் சிவ்வெழுத்தும்
யவ்வெழுத்தின் உள்ளே அடங்கி நிற்பது எக்காலம்

#117
எழுத்து எல்லாம் மாண்டு இறந்தே ஏகமாய் நின்றதிலே
அழுத்தமாய்ச் சிந்தைவைத்து அன்புகொள்வது எக்காலம்

#118
அருவாய் உரு ஆகி ஆதி அந்தம் ஆகி நின்ற
குரு ஆகி வந்து எனை ஆட்கொண்டு அருள்வது எக்காலம்

#119
நான் என்று அறிந்தவனை நான் அறியாக் காலம் எல்லாம்
தான் என்று நீ இருந்ததனை அறிவது எக்காலம்

#120
என்மயமாய்க் கண்டது எல்லாம் எண்ணியெண்ணிப் பார்த்த பின்பு
தன்மயமாய்க் கொண்டதிலே சார்ந்து நிற்பது எக்காலம்

#121
ஒளியில் ஒளியாம் உருப் பிறந்தவாறது போல்
வெளியில் வெளியான விதம் அறிவது எக்காலம்

#122
ஒளியிட்ட மெய்ப்பொருளை உள்வழியிலே அடைத்து
வெளியிட்டுச் சாத்திவைத்து வீடுறுவது எக்காலம்

#123
காந்தம் வலித்து இரும்பை கரத்து இழுத்துக்கொண்டது போல்
பாய்ந்து பிடித்து இழுத்து உன் பதத்தில் வைப்பது எக்காலம்

#124
பித்தாயங்கொண்டு பிரணவத்தை ஊடறுத்துச்
செத்தாரைப் போலே திரிவது இனி எக்காலம்

#125
ஒழிந்த கருத்தினை வைத்து உள் எலும்பு வெள்ளெலும்பாய்க்
கழிந்த பிணம் போல் இருந்து காண்பது இனி எக்காலம்

#126
ஆதி கபிலர் சொன்ன ஆகமத்தின் சொற்படியே
சாதி வகை இல்லாமல் சஞ்சரிப்பது எக்காலம்

#127
சூதும் களவும் தொடர்வினையும் சுட்டிடக் காற்று
ஊதும் துருத்தியைப் போட்டு உனை அடைவது எக்காலம்

#128
ஆசை வலைப் பாசத்து அகப்பட்டு மாயாமல்
ஓசை மணி தீபத்தில் ஒன்றி நிற்பது எக்காலம்

#129
கல்லாய் மரமாய் கயலாய் பறவைகளாய்
புல்லாய்ப் பிறந்த ஜென்மம் போதும் என்பது எக்காலம்

#130
தக்கும் வகைக்கு ஓர் பொருளும் சாராமலே நினைவில்
பக்குவமாய் உன் அருளைப் பார்த்திருப்பது எக்காலம்

#131
தூரோடு இது சுழன்று வரும் தத்துவத்தை
வேரோடு இசைந்து விளங்குவதும் எக்காலம்

#132
பாக நடு ஏறிப் பயந்து எழுந்த சித்திரத்தை
ஏக நடு மூலத்து இருத்துவதும் எக்காலம்

#133
ஓர் இன்பம் காட்டும் உயர் ஞான வீதி சென்று
பேரின்ப வீடு கண்டு பெற்று இருப்பது எக்காலம்

#134
காரணமாய் வந்து என் கருத்தில் உரைத்தது எல்லாம்
பூரணமாகக் கண்டு புகழ்ந்து இருப்பது எக்காலம்

#135
ஆயும் கலைகள் எல்லாம் ஆராய்ந்து பார்த்ததன் பின்
நீ என்றும் இல்லா நிசம் காண்பது எக்காலம்

#136
குறியாகக் கொண்டு குலம் அளித்த நாயகனைப்
பிரியாமல் சேர்ந்து பிறப்பு அறுப்பது எக்காலம்

#137
மத்து அடுத்து நின்று மருளாடுவார் போல
பித்து அடுத்து நின் அருளைப் பெற்று இருப்பது எக்காலம்

#138
சாவாமல் செத்திருந்து சற்குருவின் பொன் அடிக் கீழ்
வேகாமல் வெந்திருக்க வேண்டுவதும் எக்காலம்

#139
என்னை அறியாமல் இருந்து ஆட்டும் சூத்திர நின்-
தன்னை அறிந்து தவம் பெறுவது எக்காலம்

#140
உள்ளம் அறியாது ஒளித்திருந்த நாயகனைக்
கள்ள மனம் தெளிந்து காண்பது இனி எக்காலம்

#141
வாசித்தும் காணாமல் வாய்விட்டும் பேசாமல்
பூசித்தும் தோன்றாப் பொருள் காண்பது எக்காலம்

#142
பன்னிரண்டு கால் புரவி பாய்ந்து சில்லம் தப்பாமல்
பின் இரண்டு சங்கிலிக்குள் பிணிப்பது இனி எக்காலம்

#143
நாட்டுக் கால் இரண்டும் விட்டு நடுவுக் கால் ஊடேபோய்
ஆட்டுக்கால் இரண்டின் உள்ளே அமர்ந்து இருப்பது எக்காலம்

#144
பால்பசுவைப் பூட்டிப் பதியில் வைத்துச் சீராட்டிக்
கால் பசுவை ஓட்டி அதில் கட்டிவைப்பது எக்காலம்

#145
பலவிடத்தே மனதைப் பாயவிட்டுப் பாராமல்
நிலவரையின் ஊடேபோய் நேர்படுவது எக்காலம்

#146
காமக் கடல் கடந்து கரையேறிப் போவதற்கே
ஓமக் கனல் வளர்த்தி உள் இருப்பது எக்காலம்

#147
உதயச் சுடர் மூன்றும் உள்வீட்டிலே கொளுத்தி
இதயத் திருநடனம் இனிக் காண்பது எக்காலம்

#148
வேதாந்த வேதம் எல்லாம் விட்டு ஏறியே கடந்து
நாதாந்த மூல நடு இருப்பது எக்காலம்

#149
பட்டம் அற்றுக் காற்றில் பறந்து ஆடும் சூத்திரம் போல்
விட்டு வெளியாக விசுவசித்தல் எக்காலம்

#150
அட்டாங்க யோகம் அதற்கு அப்பாலுக்கப்பாலாய்
கிட்டாப் பொருளதனைக் கிட்டுவதும் எக்காலம்

#151
ஒட்டாமல் ஒட்டி நிற்கும் உடலும் உயிரும் பிரித்தே
எட்டாப் பழம்பதிக்கு இங்கு ஏணிவைப்பது எக்காலம்

#152
பாசத்தை நீக்கிப் பசுவைப் பதியில் விட்டு
நேசத்தினுள்ளே நினைந்து இருப்பது எக்காலம்

#153
ஆசார நேய அனுட்டானமும் மறந்து
பேசா மெய்ஞ்ஞான நிலை பெற்று இருப்பது எக்காலம்

#154
பல்லாயிரம் கோடிப் பகிரண்டமும் படைப்பே
அல்லாது வேறு இல்லை என்று அறிவது இனி எக்காலம்

#155
ஆதி முதல் ஆகி நின்ற அரி என்ற அட்சரத்தை
ஓதி அறிந்து உள்ளே உணர்வது இனி எக்காலம்

#156
சாத்திரத்தைச் சுட்டுச் சதுர்மறையைப் பொய்யாக்கிச்
சூத்திரத்தைக் கண்டு துயர் அறுப்பது எக்காலம்

#157
அல்லும் பகலும் என்றன் அறிவை அறிவால் அறிந்த
சொல்லும் முறை மறந்து தூங்குவதும் எக்காலம்

#158
இயங்கும் சராசரத்தில் எள்ளும் எண்ணெயும் போல
முயங்கும் அந்த வேத முடிவு அறிவது எக்காலம்

#159
ஊன் ஆகி ஊனில் உயிர் ஆகி எவ்வுலகும்
தான் ஆகி நின்ற தனை அறிவது எக்காலம்

#160
என்னைவிட்டு நீங்காமல் என்னிடத்து நீ இருக்க
உன்னைவிட்டு நீங்காது ஒருப்படுவது எக்காலம்

#161
இன்னது என்று சொல்லவொண்ணா எல்லையற்ற வான் பொருளைச்
சொன்னது என்று நான் அறிந்து சொல்வது இனி எக்காலம்

#162
மனதை ஒரு வில் ஆக்கி வான் பொறியை நாண் ஆக்கி
எனது அறிவை அம்பு ஆக்கி எய்வது இனி எக்காலம்

#163
என்னை இறக்க எய்தே என் பதியை ஈடழித்த
உன்னை வெளியில் வைத்தே ஒளித்து நிற்பது எக்காலம்

#164
கடத்துகின்ற தோணி-தனைக் கழைகள் குத்தி விட்டால் போல்
நடத்துகின்ற சித்திரத்தை நான் அறிவது எக்காலம்

#165
நின்ற நிலை பேராமல் நினைவில் ஒன்றும் சாராமல்
சென்ற நிலை முத்தி என்று சேர்ந்து அறிவது எக்காலம்

#166
பொன்னும் வெள்ளியும் பூண்ட பொன் பதத்தை உள் அமைத்து
மின்னும் ஒளி வெளியேவிட்டு அடைப்பது எக்காலம்

#167
கூட்டில் அடைப்பட்ட புழு குளவி உருக்கொண்டது போல்
வீட்டில் அடைப்பட்டு அருளை வேண்டுவதும் எக்காலம்

#168
கடலில் ஒளித்திருந்த கனல் எழுந்து வந்தால் போல்
உடலில் ஒளித்த சிவம் ஒளிசெய்வது எக்காலம்

#169
அருணப் பிரகாசம் அண்டம் எங்கும் போர்த்தது போல்
கருணைத் திருவடியில் கலந்து நிற்பது எக்காலம்

#170
பொன்னில் பலவிதமாம் பூணும் உண்டானாது போல்
உன்னில் பிறந்தது உன்னில் ஒடுங்குவதும் எக்காலம்

#171
நாயில் கடைப் பிறப்பாய் நான் பிறந்த துன்பம் அற
வேயில் கனல் ஒளி போல் விளங்குவதும் எக்காலம்

#172
சூரியகாந்தி ஒளி சூழ்ந்து பஞ்சைச் சுட்டது போல்
ஆரியன் தோற்றத்து அருள் பெறுவது எக்காலம்

#173
இரும்பிற்கு அனல் மூட்டி இவ் உரு போய் அவ் உருவாய்க்
கரும்பில் சுவை ரசத்தைக் கண்டு அறிவது எக்காலம்

#174
கருக்கொண்ட முட்டை-தனை கடலாமை தான் நினைக்க
உருக்கொண்டவாறது போல் உனை அடைவது எக்காலம்

#175
வீடு விட்டுப் பாய்ந்து வெளியில் வருவார் போல்
கூடு விட்டுப் பாயும் குறிப்பு அறிவது எக்காலம்

#176
கடைந்த வெண்ணை மோரில் கலவாதவாறது போல்
உடைந்து தமியேன் உனைக் காண்பது எக்காலம்

#177
இருளை ஒளி விழுங்கி ஏக உருக்கொண்டால் போல்
அருளை விழுங்கும் இருள் அகன்று நிற்பது எக்காலம்

#178
மின் எழுந்து மின் ஒடுங்கி விண்ணில் உறைந்தால் போல்
என்னுள் நின்றது என்னுள்ளே யான் அறிவது எக்காலம்

#179
கண்ட புனல் குடத்தில் கதிரொளிகள் பாய்ந்தால் போல்
கொண்ட சொரூபமதைக் கூர்ந்து அறிவது எக்காலம்

#180
பூணுகின்ற பொன் அணிந்தால் பொன் சுமக்குமோ உடலை
காணுகின்ற என் கருத்தில் கண்டு அறிவது எக்காலம்

#181
செம்பில் களிம்பு போல் சிவத்தை விழுங்க மிக
வெம்பி நின்ற மும்மலத்தை வேறுசெய்வது எக்காலம்

#182
ஆவியும் காயமும் போல் ஆத்துமத்து நின்றதனைப்
பாவி அறிந்து மனம் பற்றி நிற்பது எக்காலம்

#183
ஊமைக் கனாக்கண்டு உரைக்க அறியா இன்பமதை
நாம் அறிந்துகொள்வதற்கு நாள் வருவது எக்காலம்

#184
சாகாச் சிவன் அடியைத் தப்பாதார் எப்போதும்
போகா உடல் அகன்று போவது என்பது எக்காலம்

#185
நிட்டை-தனை விட்டு நினைவு அறிவு தப்பவிட்டு
வெட்டவெளியில் விரவி நிற்பது எக்காலம்

#186
வெட்டவெளி-தன்னில் விளைந்த வெம் பாதத்தை
திட்டமுடன் கண்டு தெளிவது இனி எக்காலம்

#187
எங்கும் பர வடிவாய் என் வடிவு நின் வடிவாய்க்
கங்குல் பகல் இன்றி உனைக் கண்டு இருப்பது எக்காலம்

#188
உண்டதுவும் மாதருடன் கூடிச் சேர்ந்து இன்பம்
கண்டதுவும் நீ எனவே கண்டுகொள்வது எக்காலம்

#189
ஈம் என்று கேட்டதுவும் என்னுள்ளே நின்றதுவும்
ஓம் என்று சொன்னதுவும் உற்று அறிவது எக்காலம்

#190
சத்தம் பிறந்தவிடம் தன்மயமாய் நின்றவிடம்
சித்தம் பிறந்தவிடம் தேர்ந்து அறிவது எக்காலம்

#191
போக்கு வரவும் புறம்பு உள்ளும் ஆகி நின்றும்
தாக்கும் ஒரு பொருளைச் சந்திப்பது எக்காலம்

#192
நான் எனவும் நீ எனவும் நாம் இரண்டு மற்றொன்றும்
நீ எனவே சிந்தை தனி நேர்படுவது எக்காலம்

#193
அறிவை அறிவால் அறிந்தே அறிவும் அறிவு-தனில்
பிறிவுபட நில்லாமல் பிடிப்பது இனி எக்காலம்

#194
நீடும் புவனம் எல்லாம் நிறைந்து சிந்தூரமதாய்
ஆடும் திருக்கூத்தை அறிவது இனி எக்காலம்

#195
தித்தி என்ற கூத்தும் திருச்சிலம்பின் ஓசைகளும்
பத்தியுடனே கேட்டுப் பணிவது இனி எக்காலம்

#196
நயனத்து இடை வெளி போய் நண்ணும் பரவெளியில்
சயனத்து இருந்து தலைப்படுவது எக்காலம்

#197
அருவி மலை நடுவே ஆயிரக்கால் மண்டபத்தில்
திருவிளையாடல் கண்டு தெரிசிப்பது எக்காலம்

#198
மீனை மிக உண்டு நக்கி விக்கி நின்ற கொக்கது போல்
தேனை மிக உண்டு தெவிட்டி நிற்பது எக்காலம்

#199
பொல்லாத காயமதைப் போட்டு விடுக்கும் முன்னே
கல் ஆவின் பால் கறப்பக் கற்பது இனி எக்காலம்

#200
வெட்டவெளிக்குள்ளே விளங்கும் சதாசிவத்தைக்
கிட்டிவரத் தேடிக் கிருபைசெய்வது எக்காலம்

#201
பேரறிவிலே மனதை பேசாமலே இருத்தி
ஓர் அறிவில் எந்நாளும் ஊன்றி நிற்பது எக்காலம்

#202
அத்துவிதம் போலும் என்றன் ஆத்துமத்தின் உள்ளிருந்து
முத்தி தர நின்ற முறை அறிவது எக்காலம்

#203
நான் நின்ற பாசமதில் நான் இருந்து மாளாமல்
நீ நின்ற கோலமதில் நிரவி நிற்பது எக்காலம்

#204
எள்ளும் கரும்பும் எழு மலரும் காயமும் போல்
உள்ளும் புறம்பும் நின்றது உற்று அறிவது எக்காலம்

#205
அன்னம் புனலை வகுத்து அமிர்தத்தை உண்டது போல்
என்னை வகுத்து உன்னை இனிக் காண்பது எக்காலம்

#206
அந்தரத்தில் நீர் பூத்து அலர்ந்து எழுந்த தாமரை போல்
சிந்தைவைத்துக் கண்டு தெரிசிப்பது எக்காலம்

#207
பிறப்பும் இறப்பும் அற்றுப் பேச்சும் அற்று மூச்சும் அற்று
மறப்பும் நினைப்பும் அற்று மாண்டு இருப்பது எக்காலம்

#208
மன்னும் பரவெளியை மனவெளியில் அடைத்து அறிவை
என்னுள் ஒரு நினைவை எழுப்பி நிற்பது எக்காலம்

#209
ஆசைகொண்ட மாதர் அடை கனவு நீக்கி உன் மேல்
ஓசைகொண்டு நானும் ஒடுங்குவதும் எக்காலம்

#210
தன் உயிரைக் கொண்டு தான் திரிந்தவாறது போல்
உன் உயிரைக் கொண்டு இங்கு ஒடுங்குவதும் எக்காலம்

#211
சேற்றில் கிளை நாட்டும் திடமாம் உடலை இனிக்
காற்றில் உழல் சூத்திரமாய்க் காண்பது இனி எக்காலம்

#212
என் வசமும் கெட்டு இங்கு இருந்த வசமும் அழிந்து
தன் வசமும் கெட்டு அருளைச் சார்ந்து இருப்பது எக்காலம்

#213
தன்னை மறந்து தலத்து நிலை மறந்து
கன்மம் மறந்து கதி பெறுவது எக்காலம்

#214
என்னை என்னிலே மறைந்தே இருந்த பதியும் மறந்து
தன்னையும் தானே மறந்து தனித்து இருப்பது எக்காலம்

#215
தன்னையும் தானே மறந்து தலைவாசல் தாழ்போட்டே
உன்னை நினைந்து உள்ளே உறங்குவதும் எக்காலம்

#216
இணை பிரிந்த போதில் அன்றி இன்பமுறும் அன்றிலைப் போல்
துணை பிரிந்த போது அருள்நூல் தொடர்ந்து கொள்வது எக்காலம்

#217
ஆட்டம் ஒன்றும் இல்லாமல் அசைவு சற்றும் காணாமல்
தேட்டம் அற்ற வான் பொருளைத் தேடுவதும் எக்காலம்

#218
முன்னை வினையால் அறிவு முற்றாமல் பின் மறைந்தால்
அன்னை-தனைத் தேடி அமுது உண்பது எக்காலம்

#219
கள்ளுண்டவன் போல் களி தரும் ஆனந்தமதால்
தள்ளுண்டு நின்று ஆடித் தடைப்படுவது எக்காலம்

#220
தான் என்ற ஆணவமும் தத்துவமும் கெட்டு ஒழிந்தே
ஏன் என்ற பேச்சும் இலாது இலங்குவதும் எக்காலம்

#221
நான் அவனாய்க் காண்பது எல்லாம் ஞானவிழியால் அறிந்து
தான் அவனாய் நின்று சரணடைவது எக்காலம்

#222
தான் அந்தம் இல்லாத தற்பரத்தின் ஊடுருவி
ஆனந்தம் கண்டே அமர்ந்து இருப்பது எக்காலம்

#223
உற்ற வெளி-தனிலே உற்றுப்பார்த்து அந்தரத்தே
மற்ற மறமாய் கை மாள்வது இனி எக்காலம்

#224
ஏடு அலர்ந்த பங்கயமும் இரு கருணை நேத்திரமும்
தோடு அணிந்த குண்டலமும் தோன்றுவதும் எக்காலம்

#225
ஐயாறும் ஆறு அகன்று வெறுவெளியில்
மை இருளில் நின்ற மனம் மாள்வது இனி எக்காலம்

#226
காட்டும் அருள் ஞானக் கடலில் அன்புக் கப்பல்விட்டு
மூட்டும் கருணைக் கடலில் மூழ்குவதும் எக்காலம்

#227
நான் ஆரோ நீ ஆரோ நன்றாம் பரமான
தான் ஆரோ என்று உணர்ந்து தவம் முடிப்பது எக்காலம்

#228
எவரெவர்கள் எப்படி கண்டு எந்தப்படி நினைத்தார்
அவரவர்க்கு அப்படி நின்றான் என்பது எக்காலம்

#229
உற்றுற்றுப் பார்க்க ஒளி தரும் ஆனந்தமதை
நெற்றிக்கு நேர் கண்டு நிலைப்பது இனி எக்காலம்

#230
விளங்குகின்ற தாரகையை வெய்யோன் மறைத்தால் போல்
களங்கம் அற உன் காட்சி கண்டு அறிவது எக்காலம்

#231
என்னையே நான் அறியேன் இந்த வண்ணம் சொன்னது எல்லாம்
முன்னையோர் கைக்கொள்ள முன் பணிவது எக்காலம்

#232
மாயத்தை நீக்கி வரு வினையைப் பாழாக்கிக்
காயத்தை வேறு ஆக்கிக் காண்பது உனை எக்காலம்

#233
அஞ்சுகரத்தானை அடி இணையைப் போற்றிசெய்து
நெஞ்சில் பொருந்தி நிலைபெறுவது எக்காலம்
**

32 பாம்பாட்டிச் சித்தர்


#1
தெளிந்து தெளிந்து தெளிந்து ஆடு பாம்பே சிவன்
சீர் பாதம் கண்டு தெளிந்து ஆடு பாம்பே
ஆடும் பாம்பே தெளிந்து ஆடு பாம்பே சிவன்
அடியினைக் கண்டோம் என்று ஆடு பாம்பே

#2
நீடு பதம் நமக்கு என்றும் சொந்தம் என்றே
நித்தியம் என்றே பெரிய முத்தி என்றே
பாடுபடும்போதும் ஆதி பாதம் நினைந்தே
பன்னிப் பன்னிப் பரவி நின்று ஆடு பாம்பே

#3
பொன்னில் ஒளி போல எங்கும் பூரணமதாய்ப்
பூவின் மணம் போலத் தங்கும் பொற்புடையதாய்
மன்னும் பல உயிர்களில் மன்னிப் பொருந்தும்
வள்ளல் அடி வணங்கி நின்று ஆடு பாம்பே

#4
எள்ளில் எண்ணெய் போல உயிர் எங்கும் நிறைந்த
ஈசன் பத வாச மலர் எண்ணியெண்ணியே
உள்ளபடி அன்பு பத்தி ஓங்கி நிற்கவே
ஒடுங்கி அடங்கித் தெளிந்து ஆடு பாம்பே

#5
அண்ட பிண்டம் தந்த எங்கள் ஆதி தேவனை
அகலாமலே நினைந்து அன்புடன் பணிந்து
எண் திசையும் புகழ்ந்திட ஏத்தியேத்தியே
ஏக மனமாக நாடி ஆடு பாம்பே

#6
சோதி மயமான பரிசுத்த வஸ்துவைத்
தொழுது அழுது அரற்றித் தொந்தோந்தோம் எனவே
நீதி தவறா வழியில் நின்று நிலையாய்
நினைந்துநினைந்து உருகி ஆடு பாம்பே

#7
அருவாயும் உருவாயும் அந்தியாயும்
அந்தமாயும் ஒளியாயும் ஆகமமாயும்
திருவாயும் குருவாயும் சீவனாயும்
செறிந்த வஸ்துவைப் போற்றி ஆடு பாம்பே

#8
சுட்டிக்காட்டவொண்ணாத பாழ் சூனியம்-தன்னைச்
சூட்ச மதியால் அறிந்து தோஷம் அறவே
எட்டிப்பிடித்தோம் என்று ஆனந்தமாகப் பை
எடுத்து விரித்து நின்று ஆடு பாம்பே

#9
எவ்வுயிரும் எவ்வுலகும் ஈன்று புறம்பாய்
இருந்து திருவிளையாட்டு எய்தியும் பின்னர்
அவ் உயிரும் அவ் உலகும் ஆகியும் நின்ற
ஆனந்த வெள்ளம் கண்டு ஆடு பாம்பே

#10
சாற்றும் உடல் பொருள் ஆவி தத்தமாகவே
தானம் வாங்கி நின்ற எங்கள் சற்குருவினைப்
போற்றி மனம் வாக்குக் காயம் மூன்றும் பொருந்தப்
புகர்ந்து புகழ்ந்து நின்று ஆடாய் பாம்பே

#11
பொய் மதங்கள் போதனை செய் பொய்க் குருக்களைப்
புத்திசொல்லி நன்னெறியில் போக விடுக்கும்
மெய் மதம்தான் இன்னது என்றும் மேவ விளம்பும்
மெய்க் குருவின் பதம் போற்றி ஆடாய் பாம்பே

#12
வேதப் பொருள் இன்னது என்று வேதம் கடந்த
மெய்ப்பொருளைக் கண்டு மனம் மேவி விளம்பிப்
போதப் பொருள் இன்னது என்றும் போதனைசெய்யும்
பூரண சற்குரு தாள் கண்டு ஆடாய் பாம்பே

#13
உள்ளங்கையில் கனி போல உள்ள பொருளை
உண்மையுடன் காட்ட வல்ல உண்மைக் குருவைக்
கள்ள மனம்-தன்னைத் தள்ளிக் கண்டுகொண்டு அன்பாய்க்
களித்துக்களித்து நின்று ஆடாய் பாம்பே

#14
அங்கையில் கண்ணாடி போல ஆதி வஸ்துவை
அறிவிக்கும் எங்கள் உயிரான குருவைச்
சங்கை அறச் சந்ததமும் தாழ்ந்து பணிந்தே
தமனியப் படமெடுத்து ஆடாய் பாம்பே

#15
காயம் நிலை அழிகையைக் கண்டுகொண்டு பின்
கற்பு நிலை உள்ளில் கொண்டு எக்காலமும் வாழும்
தூய நிலை கண்ட பரிசுத்தக் குருவின்
துணை அடி தொழுது நின்று ஆடாய் பாம்பே

#16
கூடுவிட்டுக் கூடுபாயும் கொள்கை உடைய
குருவின் வல்லபம் எவர் கூற வல்லவர்
வீடு பெறும் வகையை மென்மேலும் காட்டும்
மெய்க் குருவைப் பணிந்து நின்று ஆடாய் பாம்பே

#17
அட்ட திக்கும் அண்டவெளியான இடமும்
அடக்கிய குளிகையோடு ஆடி விரைவாய்
வட்டமிட்டு வலம்வரும் வல்ல குருவின்
மலரடி தஞ்சம் என்று ஆடாய் பாம்பே

#18
கற்பகாலம் கடந்து ஆதி கர்த்தாவோடும்
கடம் அழியாது வாழும் காரணக் குரு
பொன் பதமே தஞ்சம் என்று போற்றுதல்செய்து
பூரணச் சிந்தையோடு ஆடாய் பாம்பே

#19
வச்சிரத்திற்கோர் பழுது வாய்க்குமாயினும்
வல் உடம்புக்கோர் குறை வாய்த்திடாது
மெச்ச கடம் உள்ள எங்கள் வேத குருவின்
மெல்லடி துதித்து நின்று ஆடாய் பாம்பே

#20
நாதர் முடி மேல் இருக்கும் நாகப் பாம்பே
நச்சுப்பையை வைத்திருக்கும் நல்ல பாம்பே
பாதலத்தில் குடிபுகும் பை கொள் பாம்பே
பாடிப்பாடி நின்று விளையாடு பாம்பே

#21
வளை புகும்போதே தலை வாங்கும் பாம்பே
மண்டலமிட்டு உடல் வளை வண்ணப் பாம்பே
தளைக்கு அஞ்சி நின்றிடும் சத்தியப் பாம்பே
தலையெடுத்தே விளையாடு பாம்பே

#22
குற்றமற்ற சிவனுக்குக் குண்டலம் ஆனாய்
கூறும் திருமாலினுக்குக் குடையும் ஆனாய்
கற்றைக் குழல் பார்வதிக்கும் கங்கணம் ஆனாய்
கரவாமல் உளம் களித்து ஆடு பாம்பே

#23
மண்டலத்தைத் தாங்கும் மிக வல்லமை கொண்டாய்
மாயனுக்குப் படுக்கைக்கு வண்ணப் பாய் ஆனாய்
கண்ட படை நடுங்கிடக் காட்சியும் பெற்றாய்
கண்ணே செவியாகக் கொண்டாய் ஆடு பாம்பே

#24
சந்திரனைச் சூரியனைத் தாவித் தீண்டினாய்
சங்கரனுக்கு ஆபரணம்தானும் ஆகினாய்
மந்திரத்திற்கு அடங்கினாய் மண்டலமிட்டாய்
வளைந்துவளைந்து நின்று ஆடு பாம்பே

#25
எட்டு நாகம்-தம்மைக் கையால் எடுத்தே ஆட்டுவோம்
இந்திரனார் உலகத்தை இங்கே காட்டுவோம்
கட்டுக்கடங்காத பாம்பைக் கட்டி விடுவோம்
கடு விஷம்-தன்னைக் கக்கி ஆடு பாம்பே

#26
ஆதிசேடன் ஆயிகினும் எம் அங்கையினாலே
ஆட்டிவிடுவோம் எங்கள் ஆக்கினைக்குள்ளே
நீதியோடு அடங்கியே நின்றிடச் செய்வோம்
நின்ற நிலை தவறாமல் ஆடு பாம்பே

#27
தூணைச் சிறு துரும்பாகத் தோன்றிடச்செய்வோம்
துரும்பைப் பெரும் தூணாகத் தோற்றச்செய்குவோம்
ஆணைப் பெண்ணும் பெண்ணை ஆணுமாகச் செய்குவோம்
ஆரவாரித்து எதிராய் நின்று ஆடு பாம்பே

#28
எட்டு மலைகளைப் பந்தாய் எடுத்து எறிகுவோம்
ஏழு கடலையும் குடித்து ஏப்பமிடுவோம்
மட்டுப்படா மணலையும் மதித்திடுவோம்
மகாராஜன் முன்பு நீ நின்று ஆடு பாம்பே

#29
மண்டலம் முற்றும் கையால் மறைத்துவிடுவோம்
வானத்தையும் வில்லாக வளைத்துவிடுவோம்
தொண்டருக்குச் சூனியம் சொல்லிக் காட்டுவோம்
தோன்றலுக்கு முன்பு நின்று ஆடாய் பாம்பே

#30
மூண்டு எரியும் அக்கினிக்குள் மூழ்கி வருவோம்
முந்நீருள் இருப்பினும் மூச்சடக்குவோம்
தாண்டி வரும் வன் புலியைத் தாக்கிவிடுவோம்
தார் வேந்தன் முன்பு நீ நின்று ஆடு பாம்பே

#31
செப்பரிய மூன்று உலகும் செம்பொன் ஆக்குவோம்
செங்கதிரைத் தண் கதிராய்ச் செய்துவிடுவோம்
இப் பெரிய உலகத்தை இல்லாமல்செய்வோம்
எங்கள் வல்லபம் கண்டு நீ ஆடு பாம்பே

#32
வேதன் செய்த சிருஷ்டிகள் போல் வேறு செய்குவோம்
வேதனையும் எங்கள் கீழே மேவச் செய்குவோம்
நாதனுடன் சமமாக நாங்களும் வாழ்வோம்
நாங்கள் செய்யும் செய்கை இது என்று ஆடு பாம்பே

#33
அறுபத்துநாலு கலை யாவும் அறிந்தோம்
அதற்குமேல் ஒரு கலையானது அறிந்தோம்
மறு பற்றுச் சற்றும் இல்லா மனமும் உடையோம்
மன்னனே ஆசான் என்று ஆடு பாம்பே

#34
சிறு புலி யானை யாளி சிங்கம் முதலாய்ச்
சிற்றடிக்குக் குற்றேவல்செய்யச் சொல்லுவோம்
வீறு பெரும் கடவுளை எங்களுடனே
விளையாடச் செய்குவோம் என்று ஆடு பாம்பே

#35
வாசுகியை ஒருபக்கம் மன்ன நிறுத்தி
மகத்தான பதுமனை மறுபக்கம் வைத்தே
தேசுலவு தக்கனைத் தன் திக்கில் சேர்த்துச்
செய்ய பதுமனைக் கொள் சித்தனாரே

#36
அனந்தனை ஒருபக்கமாக நிறுத்தி
அதன் பக்கம் குளிகனை அண்டச் சேர்த்துக்
கனம் கொண்ட கார்க்கோடகன் காணக் காட்டும்
கடும் சங்கபாலனைத்தான் சித்தனாரே

#37
அட்ட திக்கும் சக்கரங்களாகக் கீறி
அக் கோண நிலைகளில் அக்கரம் சேர்த்துத்
திட்டமுடன் மந்திரத்தைச் செபித்து நில்லும்
சித்தம் தடுமாறாதீர் சித்தனாரே

#38
அட்ட திக்கும் சக்கரங்கள் அமைத்துவிட்டோம்
அவ்வவற்றில் அக்கரங்கள் அமைத்துவிட்டோம்
எட்டு நாகம் இருக்கின்ற இடத்தில் விட்டோம்
இனி என்ன செய்வம் சொல்லும் சித்தனாரே

#39
நடுவாக ஆதிசேடன்-தன்னை நாட்டும்
நான்கு திக்கும் மந்திரித்த நீறு தூவும்
கடு விஷம் கக்கவே அக் கட்செவிகளைக்
கையில் எடுத்து ஆடுங்கள் சித்தனாரே

#40
நாடு நகர் வீடு மாடு நல் பொருள் எல்லாம்
நடுவன் வரும்பொழுது நாடி வருமோ
கூடுபோன பின்பு அவற்றால் கொள் பயன் என்னோ
கூத்தன் பதம் குறித்து நின்று ஆடாய் பாம்பே

#41
யானை சேனை தேர்ப் பரி யாவும் அணியாய்
யமன் வரும்போது துணை ஆமோ அறிவாய்
ஞானம் சற்றும் இல்லாத நாய்கட்குப் புத்தி
நாடி வரும்படி நீ நின்று ஆடு பாம்பே

#42
மாணிக்க மா மணிமுடி வாகுவலயம்
மார்பில் தொங்கும் பதக்கங்கள் மற்றும் பணிகள்
ஆணிப்பொன் முத்தாரம் அம் பொன் அந்த கடகம்
அழிவான பொருள் என நின்று ஆடாய் பாம்பே

#43
மாட கூட மாளிகைகள் வண்ண மண்டபம்
மதில் சூழ்ந்த அரண்மனை மற்றும் உள்ளவை
கூட வாரா என்ற அந்தக் கொள்கை அறிந்தோர்
குலவாமல் வெறுப்பார் என்று ஆடாய் பாம்பே

#44
மலை போன்ற செம்பொன் குவை வைத்திருப்பவர்
மறலிதான் வருகையில் வாரிச் செல்வரோ
அலையாமல் அகத்தினை அத்தன்-பால் வைத்தோர்
அழியார் என்றே நீ துணிந்து ஆடாய் பாம்பே

#45
பஞ்சணையும் பூவணையும் பாயலும் வெறும்
பாழ் சுடுகாடதிலே பயன்பெறுமோ
மஞ்சள் மணம் போய் சுடு நாறும் மணங்கள்
வரும் என்று தெளிந்து நின்று ஆடாய் பாம்பே

#46
முக்கனியும் சர்க்கரையும் மோதகங்களும்
முதிர் சுவைப் பண்டங்களும் முந்தி உண்ட வாய்
மிக்க உயிர் போன பின்பு மண்ணை விழுங்க
மெய்யாகக் கண்டோம் என்று ஆடாய் பாம்பே

#47
வண்ணப் பட்டும் வாசனையும் வாய்த்த கோலமும்
வண் கவிகை ஆலவட்டம் மற்றும் சின்னமும்
திண்ணமுடன் யமபுரம் செல்லும் காலத்தில்
சேர வரமாட்டா என்று ஆடாய் பாம்பே

#48
மக்கள் பெண்டிர் சுற்றம் மருமக்கள் மற்றவர்
மாளும் போது கூட அவர் மாள்வது இல்லையே
தக்க உலகு அனைத்தையும் தந்த கர்த்தனைத்
தாவித்தாவித் துதித்து நின்று ஆடாய் பாம்பே

#49
கானலை மான் நீர் எனவே கண்டு செல்லல் போல்
காசினி வாழ்வினை மூடர் கண்டு களிப்பார்
மேல் நிலை கண்டார்கள் வீணாய் வீம்பு பேசிடார்
மெய்யன் பதம் நாடுவார் என்று ஆடாய் பாம்பே

#50
வெயில் கண்ட மஞ்சள் போன்ற மாதர் அழகை
விரும்பியே மேல் விழுந்து மேவும் மாந்தர்
ஒயில் கண்டே இலவு காத்து ஓடும் கிளி போல்
உடல் போனால் ஓடுவார் என்று ஆடாய் பாம்பே

#51
செண்டு முலை வண்டு விழி கொண்ட தோகையைச்
சித்தப் பால் விழுங்கியே சீயென்று ஒறுத்தோம்
குண்டு கட்டு எருமை ஏறும் கூற்றுப் பருந்தைக்
கொன்று தின்றுவிட்டோம் என்று ஆடாய் பாம்பே

#52
வட்ட முலை என்று மிக வற்றும் தோலை
மக மேரு என்று உவமைவைத்துக் கூறுவார்
கெட்ட நாற்றமுள்ள யோனிக் கேணியில் வீழ்ந்தோர்
கெடுவர் என்றே நீ துணிந்து ஆடாய் பாம்பே

#53
மலம் சொரி கண்ணை வடி வாளுக்கு ஒப்பாக
வருணித்துச் சொல்வார் மதிவன்மையில்லாதார்
குரு நலம் பேசுகின்ற கூகை மாந்தர்கள்
கும்பிக்கே இரையாவர் என்று ஆடாய் பாம்பே

#54
சிக்கு நாறும் கூந்தலைச் செழுமை மேகமாய்ச்
செப்புவார்கள் கொங்கை-தனைச் செப்புக்கு ஒப்பதாய்
நெக்குநெக்குருகிப் பெண்ணை நெஞ்சில் நினைப்பார்
நிமலனை நினையார் என்று ஆடாய் பாம்பே

#55
நாறி வரும் எச்சில்-தனை நல் அமுது என்றும்
நண்ணும் சளி நாசி-தனை நல் குமிழ் என்றும்
கூறுவார்கள் புத்தியில்லாக் கூகை மாந்தர்
கோன் நிலையை அறியார் என்று ஆடாய் பாம்பே

#56
மயில் என்றும் குயில் என்றும் மாணிக்கம் என்றும்
மானே என்றும் தேனே என்றும் வான் அமுது என்றும்
ஒயிலான வன்ன மயிற்கு ஒத்தவள் என்றும்
ஓதாமல் கடிந்துவிட்டு ஆடாய் பாம்பே

#57
மின்னல்கொடி என்றும் சோதி விளக்கு என்றும்
மெல்லி என்றும் வல்லி என்றும் மேனகை என்றும்
கன்னல்கட்டி என்றும் சீனிக் கற்கண்டு என்றும்
கழறாமல் கடிந்தோம் என்று ஆடாய் பாம்பே

#58
பூவை என்றும் பாவை என்றும் பொன்னே என்றும்
பூம் திருவே என்றும் என்றன் பொக்கிஷம் என்றும்
கோவை என்றும் கோதை என்றும் கோகிலம் என்றும்
கூறாமல் துறந்தோம் நாம் என்று ஆடாய் பாம்பே

#59
மலக்குடம் மீதினிலே மஞ்சள் பூச்சு என்றும்
மல்கும் புழுக்கூட்டின் மேல் வண்ணத் தோல் என்றும்
சலக்குழிக்குள்ளே நாற்றம் சார்ந்த சேறு என்றும்
தான் அறிந்து தள்ளினோம் என்று ஆடாய் பாம்பே

#60
ஊத்தைக் குழி-தனிலே மண்ணை எடுத்தே
உதிரப் புனலினிலே உண்டை சேர்த்தே
வாய்த்த குயவனார் பண்ணும் பாண்டம்
வறகோட்டுக்கும் ஆகாது என்று ஆடாய் பாம்பே

#61
இருவர் மண் சேர்த்திட ஒருவர் பண்ண
ஈரைந்து மாதமாய் வைத்த சூளை
அருமையாய் இருப்பினும் அந்தச் சூளை
அரைக்காசுக்கு ஆகாது என்று ஆடாய் பாம்பே

#62
பரியாசம் போலவே கடித்த பாம்பு
பலபேர் அறியவே மெத்த வீங்கிப்
பரியாரம் ஒரு மாது பார்த்த போது
பையோடே கழன்றது என்று ஆடாய் பாம்பே

#63
சீயும் மலமும் செறி செந்நீரும் நிணமும்
சேர்ந்திடு துர்நாற்றமுடைக் குடமது உடைந்தால்
நாயும் நரியும் பெரிய பேயும் கழுகும்
நமது என்றே தின்னும் என்று ஆடாய் பாம்பே

#64
நீரில் எழும் நீர்க்குமிழி நிலைகெடல் போல
நில்லாது உடல் நீங்கிவிடும் நிச்சயம் என்றே
பாரில் பல உயிர்களைப் படைத்தவன்-தனைப்
பற்றவே நீ பற்றித் தொடர்ந்து ஆடாய் பாம்பே

#65
நாறும் மீனைப் பலதரம் நல்ல தண்ணீரால்
நாளும் கழுவினும தன் நாற்றம் போமோ
கூறும் உடல் பல நதி ஆடிக்கொண்டதால்
கொண்ட மலம் நீங்காது என்று ஆடாய் பாம்பே

#66
காய்த்த மரமது மிக்க கல்லடிப்படும்
கன்மவினை கொண்ட காயம் கண்டனை பெறும்
வாய்த்த தவமுடையவர் வாழ்பவர் என்றே
வத்துத் திருவடி தொழுது ஆடாய் பாம்பே

#67
பேசரிய நவ வாயில் பீற்றல் துருத்தி
பெருங்காற்று உள் புகுந்ததால் பேச்சு உண்டாச்சே
ஈசன் நிலை அறியாருக்கு இந்தத் துருத்தி
எரி மண்ணிற்கு இரையாம் என்று ஆடாய் பாம்பே

#68
மரப்பாவை போல ஒரு மண்ணுருச் செய்து
வளமான சீவன் என்னும் சூத்திரம் மாட்டித்
திரைக்குள் இருந்து அசைப்போன் தீர்ந்த பொழுதே
தேகம் விழும் என்று தெளிந்து ஆடாய் பாம்பே

#69
தச நாடி தச வாயு சத்த தாது
சார்ந்த மரக்கப்பலது தத்தி விழுமே
இசைவான கப்பலினை ஏக வெள்ளத்தில்
எந்நாளும் ஓட்டத் துணிந்து ஆடாய் பாம்பே

#70
தாமரையின் இலையினிலே தண்ணீர் தங்காத
தன்மை போலச் சகத்து ஆசை தள்ளிவிட்டு எங்கும்
தூமணியாம் விளங்கிய சோதி பதத்தைத்
தொழுது தொழுது தொழுது ஆடாய் பாம்பே

#71
கள்ளம் கொலை காமமாதி கண்டித்த எல்லாம்
கட்டறுத்துவிட்டு ஞானக் கண்ணைத் திறந்து
தெள்ளிதான வெட்டவெளி சிற்சொரூபத்தைத்
தேர்ந்துபார்த்துச் சிந்தை தெளிந்து ஆடாய் பாம்பே

#72
சொல்லும் புளியம்பழத்தின் ஓடு போலவே
சுற்றத்து இருந்தாலும் அவர் தொந்தங்கள் அற்று
நில்லு மனமே நீ பர நின்மலத்திலே
நின் துணைதான் வெறும் பாழ் என்று ஆடாய் பாம்பே

#73
சேற்றில் திரி பிள்ளைப்பூச்சி சேற்றை நீக்கல் போல்
தேசத்தோடு ஒத்து வாழ்வார் செய்கை கண்ட பின்
சாற்று பரவெளி-தனைச் சாரும் வழியே
தான் நடக்கவேணும் என்று ஆடாய் பாம்பே

#74
எண்ணெய்க்கும் தண்ணீர்க்கும் தொந்தம் இல்லாவாறு போல்
எப்போதும் இப் புவியில் எய்த வேண்டும்
கண்ணுக்குக் கண்ணான ஒளி கண்டுகொள்ளவே
கட்டறுத்து வாழ்ந்திட நின்று ஆடாய் பாம்பே

#75
கக்கிவிட்ட சோறு கறி கந்த மூலங்கள்
கண்களுக்குச் சுத்தமான காட்சி போலவே
சிக்கிக்கொண்ட சகத்தினைச் சீயென்று ஒறுத்துச்
சீர் பாதம் காணத் தெளிந்து ஆடாய் பாம்பே

#76
கோபம் என்னும் மதயானை கொண்ட மதத்தை
கூர் கொள் புத்தி அங்குசத்தால் கொன்றுவிட்டோம் காண்
தீபம் என்னும் சிற்சொரூப செய்ய பொருளைச்
சேர்ந்து உறவுகொண்டோம் என்று ஆடாய் பாம்பே

#77
நித்தியம் என்னும் மலையில் நின்றுகொண்டோம் யாம்
நினைத்தபடியே முடித்து நின்மலம் ஆனோம்
சத்தியமாய் எங்கள் கடம்தான் அழியாதே
சந்ததமும் வாழ்வோம் என்று ஆடாய் பாம்பே

#78
மனம் என்னும் குதிரையை வாகனமாக்கி
மதி என்னும் கடிவாளம் வாயில் பூட்டிச்
சினம் என்னும் சீனி மேல் சீராய் ஏறித்
தெளிவிடம் சவாரிவிட்டு ஆடாய் பாம்பே

#79
ஆசை என்னும் செருப்பின் மேல் அடியை வைத்தே
ஆங்கார முள்காட்டை அறவே மிதித்தே
காசை எனும் துர்குணத்தின் கனவைக் கொளுத்திக்
காலாகாலம் கடந்தோம் என்று ஆடாய் பாம்பே

#80
காலன் எனும் கொடிதான கடும் பகையை நாம்
கற்பம் எனும் வாளினாலே கடிந்துவிட்டோம்
தாலமதில் பிறப்பினைத் தானும் கடந்தோம்
தற்பரம் கண்டோம் என்று ஆடாய் பாம்பே

#81
தேனில் வீழ்ந்த ஈயைப் போலச் சிந்தை குலைந்து
திகையாமல் சிற்சொரூப தெரிசனை கண்டு
வானில் பறந்திடச் சூதவான்மணி தீர்ந்து
வாயில் போட்டு ஏக நீ நின்று ஆடாய் பாம்பே

#82
தூக்கிய நல் பாதம் கண்டேன் சோதியும் கண்டேன்
சுத்த வெளிக்குள்ளே ஒரு கூத்தனைக் கண்டேன்
தாக்கிய சிரசின் மேல் வைத்த பாதம்
சற்குருவின் பாதம் என்று ஆடாய் பாம்பே

#83
ஆலடிப் பொந்தினிலே வாழ்ந்த பாம்பே
அரசடிப் பொந்திலே புகுந்துகொண்டாய்
வாலடி-தன்னிலே பார்த்துப்பார்த்து
வாங்கியே தூங்கி நின்று ஆடாய் பாம்பே

#84
நாலு தெருவினிலே நாலு கம்பம்
நடுத்தெருவினிலேயோ பொன்னுக் கம்பம்
போலும் விளங்கு பொன்னுக் கம்பத்தினுக்கே
பூமாலை சூட்டி நின்று ஆடாய் பாம்பே

#85
ஆழி பெயர்ந்தாலும் மேருமட்டே அலையும்
அடியோடு பெயர்ந்தாலும் அன்றிக் கால
ஊழி பெயர்ந்தாலும் மதி உண்மைப்படிக்கே
உறுதி பெயராது நின்று ஆடாய் பாம்பே

#86
வாயுவினை இரையாக வாங்கி உண்டே
வருடிக்கு நீரினை வாயுள் மடுத்தே
தேயு பிறை குளிர்காய்ந்து வெட்டவெளியில்
திகைப்பு அறச் சேர்ந்து நின்று ஆடாய் பாம்பே

#87
மாசில் கதி வளையிலே மண்டலமிட்டே
மதியான பெரும் பட மடலை விரித்தே
ஆசில் பராபரமான ஆதி பாதத்தை
அடுத்தடுத்தே துதித்து ஆடாய் பாம்பே

#88
காடு மலை நதி பதி காசி முதலாய்க்
கால்கடுக்க ஓடிப் பலன் காணலாகுமோ
வீடு பெறும் வழி நிலை மேவிக்கொள்ளவே
வேதாந்தத் துறையில் நின்று ஆடாய் பாம்பே

#89
எள்ளளவும் அன்பகத்தில் இல்லாதார் முத்தி
எய்துவது தொல் உலகில் இல்லை எனவே
கள்ளப் புலன் கட்டறுத்துக் காலகாலனைக்
கண்டு தொழுதே களித்து ஆடாய் பாம்பே

#90
சூரியனைக் கண்ட பனி தூர ஓடல் போல்
சொந்தபந்தம் சிந்த பரிசுத்த தலத்தில்
ஆரியனைக் கண்டு தரிசித்தே அன்புடன்
அகலாமல் பற்றித் தொடர்ந்து ஆடாய் பாம்பே

#91
காந்தம் வலி இரும்பு போல் காசில் மனத்தைக்
காட்சியான வஸ்துவுடன் கலக்கச் சேர்த்துச்
சாந்தமுடன் தோண்டியும் தாம்பும் போலச்
சலியாமல் தொடர்ந்து நின்று ஆடாய் பாம்பே

#92
உளியிட்ட கற்சிலையில் உண்டோ உணர்ச்சி
உலகத்தின் மூடர்களுக்கு உண்டோ உணர்ச்சி
புளியிட்ட செம்பில் குற்றம் போமோ அஞ்ஞானம்
போகாது மூடருக்கு என்று ஆடாய் பாம்பே

#93
திரளான போரில் ஊசி தேடல் போல் முத்தி
சிக்காது தேசாசார தேசிகர்-தம்மால்
அருளான மூல குரு ஐயர் செயலால்
ஆனந்தம்கொண்டோம் என்று ஆடாய் பாம்பே

#94
ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு இங்கு எய்திடாது போல்
எண் திசை திரிந்தும் கதி எய்தல் இலையே
நாட்டுக்கு ஒரு கோயில் கட்டி நாளும் பூசித்தே
நாதன் பாதம் காணார்கள் என்று ஆடாய் பாம்பே

#95
தன்னை அறிந்து ஒழுகுவார் தன்னை மறைப்பார்
தன்னை அறியாதவரே தன்னைக் காட்டுவார்
பின்னை ஒரு கடவுளைப் பேண நினையார்
பேரொளியைப் பேணுவார் என்று ஆடாய் பாம்பே

#96
பாலில் சுவை போலும் எங்கும் பாய்ந்த ஒளியைப்
பற்றுப் பொன் பற்றவைத்த பான்மை போலே
காலில் சுழுமுனை நின்று கண்டுகொண்டு
களித்துக்களித்து நின்று ஆடாய் பாம்பே

#97
தேக்கெடுத்தே ஓடும் வானத் தேனை உண்ட பின்
தேக பந்தம் கொண்ட மனித் தேக வாழ்வினை
ஓக்காளம் என்று எண்ணி மிகும் ஓகையுடன் நீ
உள்ளம் தெளிந்து நின்று ஆடாய் பாம்பே

#98
சதுர்வேதம் ஆறு வகை சாஸ்திரம் பல
தந்திரம் புராணம் கலை சாற்றும் ஆகமம்
விதம்விதமான வேறு நூல்களும்
வீணான நூல்களே என்று ஆடாய் பாம்பே

#99
சமய பேதம் பலவான சாதி பேதங்கள்
சகத்தோர்க்கே அல்லாது சற்சாதுக்களுக்கோ
சிமயத்தில் ஏறினபேர் சித்தம் மாறுமோ
சித்தர் சித்தாந்தம் தேர்ந்து ஆடாய் பாம்பே

#100
பூசைசெய்ததாலே சுத்த போதம் வருமோ
பூமி வலம்செய்ததனால் புண்ணியம் உண்டோ
ஆசை அற்ற காலத்திலே ஆதி வஸ்துவை
அடையலாம் என்று துணிந்து ஆடாய் பாம்பே

#101
மூல வேர் அறிந்துகொண்டால் மூன்று உலகமும்
முன்பாகவே கண்டு நித்ய முத்தி சேரலாம்
சால வேர் அறிந்ததாலேதான் பயன் உண்டோ
சகத்தைப் பொய் என்று தெளிந்து ஆடாய் பாம்பே

#102
சகத்து அனாதி என்றிடாது தான் அனாதியார்
சமைந்தது என்று உரைப்பார்கள் சத்தையறியார்
மகத்துவ நிலை கற்ப வன்மை அல்லாது
மற்றும் வன்மை இல்லையே என்று ஆடாய் பாம்பே

#103
ஆயிரத்தெட்டு இதழ் வீட்டில் அமர்ந்த சித்தன்
அண்டம் எல்லாம் நிறைந்திடும் அற்புதச் சித்தன்
காயம் இல்லாது ஓங்கி வளர் காரணச் சித்தன்
கண்ணுள் ஒளி ஆயினான் என்று ஆடாய் பாம்பே

#104
நாற்பத்து முக்கோண நிலை நாப்பணதாக
நாடும் அக்கரச் சொரூப நாயகன்-தனை
மேற்படுத்திக்கொண்டால் அந்த மேலுலகு எலாம்
மெல்லடிக்குத் தொண்டேயாம் என்று ஆடாய் பாம்பே

#105
கண்டவர்கள் ஒருக்காலும் விண்டிடார்களே
விண்டவர்கள் ஒருக்காலும் கண்டிடார்களே
கொண்டகோலம் உள்ளவர்கள் கோன் நிலை காணார்
கூத்தாடிக்கூத்தாடியே நீ ஆடாய் பாம்பே

#106
ஆறு கலைக் குச்சுக்குள்ளே ஆடும் ஒருவன்
அயல் வீடு போகும் முன்னே அரண் கோலிக்கொள்ளு
வேறுபட்டால் அவன்-தனை மீட்டல் அரிதே
மேவி முன்னே விடாது கொண்டு ஆடாய் பாம்பே

#107
எண்ணரிய புண்ணியங்கள் எல்லாம் செய்தும் என்
ஏகன் அடி நெஞ்சமதில் எண்ணாவிடிலே
பண்ணரிய தவப் பயன் பத்தி இல்லையேல்
பாழ்படும் என்று துணிந்து ஆடாய் பாம்பே

#108
எவ்வுலகும் சொந்தமதாய் எய்தும் பயன் என்
எங்கள் ஆதி பதாம்புயம் எண்ணாக் காலையில்
இவ் உலக வாழ்வுதானும் இன்றே அறும் என்று
எண்ணிக் கர்த்தன் அடி நினைந்து ஆடாய் பாம்பே

#109
மணக்கோலம் கொண்டு மிக மனம் மகிழ்ந்துமே
மக்கள் மனை சுற்றத்தோடு மயங்கி நின்றாய்
பிணக்கோலம் கண்டு பின்னும் துறவாவிட்டால்
பிறப்புக்கே துணையாம் என்று ஆடாய் பாம்பே

#110
பிறப்பையும் இறப்பையும் அறுத்துவிட யான்
பெரு மருந்து ஒன்று சொல்வேன் பெட்புடன் கேளாய்
திறப்புடன் மனப் பூட்டும் சிந்தைக் கதவும்
திறந்திடும் வகை அறிந்து ஆடாய் பாம்பே

#111
இறந்தவர் ஐவர் அவர் இட்டமானவர்
எய்தும் அவர் இறந்தார் என்று எல்லவர்க்கும் சொல்
மறந்தவர் ஒருவர் என்றே மண்ணினில் உள்ளோர்
வகை அறிந்திடவே நின்று ஆடாய் பாம்பே

#112
ஆகார முதலிலே பாம்பதாக ஆனந்த வயலிலே படம் விரித்தே
ஊகார முதலிலே ஒத்து ஒடுங்கி ஓடி வகாரத்தில் நாவை நீட்டிச்
சீகாரம் கிடந்ததோர் மந்திரத்தைச் சித்தப் பிடாரனார் போதம்செய்ய
மாகாரப் பிறப்பையும் வேரறுத்து மாய பந்தம் கடந்தோம் என்று ஆடாய் பாம்பே

#113
தந்திரம் சொல்லுவார் தம்மை அறிவார் தனி மந்திரம் சொல்லுவார் பொருளை அறியார்
மந்திரம் செபிப்பார்கள் வட்ட வீட்டினுள் மதிலினைச் சுற்றுவார் வாயில் காணார்
அந்தரம் சென்றுமே வேர் பிடுங்கி அருள் என்னும் ஞானத்தால் உண்டை சேர்த்தே
இந்த மருந்தினைத் தின்பீராகில் இனிப் பிறப்பு இல்லை என்று ஆடாய் பாம்பே

#114
களிமண்ணினால் ஒரு கப்பல் சேர்த்தே கனமான பாய்மரம் காண நாட்டி
அளி புலம்-தன்னையே சுக்கானாக்கி அறிவு என்னும் ஆதாரச் சீனி தூக்கி
வெளி என்னும் வட்டத்தே உள் அடக்கி வேதாந்தக் கடலினை வெல்ல ஓட்டித்
தெளிவுறு ஞானியார் ஓட்டும் கப்பல் சீர் பாதம் சேர்ந்தது என்று ஆடாய் பாம்பே

#115
உள்ளத்துக்குள்ளே உணர வேண்டும் உள்ளும் புறம்பையும் அறிய வேண்டும்
மெள்ளக் கனலை எழுப்ப வேண்டும் வீதிப் புனலிலே செலுத்த வேண்டும்
கள்ளப் புலனைக் கடிந்து விட்டுக் கண்ணுக்கு மூக்கு மேல் காண நின்று
தெள்ளு பரஞ்சோதி-தன்னைத் தேடிச் சீர் பாதம் கண்டோம் என்று ஆடாய் பாம்பே

#116
ஓங்காரக் கம்பத்தின் உச்சி மேலே உள்ளும் புறம்பையும் அறிய வேண்டும்
ஆங்காரக் கோபத்தை அறுத்துவிட்டே ஆனந்த வெள்ளத்தைத் தேக்கிக்கொண்டே
சாங்காலம் இல்லாமல் தாணுவோடே சட்டதிட்டமாய்ச் சேர்ந்து சாந்தமாகத்
தூங்காமல் தூங்கியே சுகமடைந்து தொந்தோம் தொந்தோம் என்று ஆடாய் பாம்பே

#117
விரகக் குடத்திலே பாம்பு அடைப்போம் வேதாந்த வெளியிலே விட்டே ஆட்டுவோம்
காரணங்களைப் பிடுங்கி இரை கொடுப்போம் காலக் கடுவெளி நின்று ஆட்டுவிப்போம்
துரகம்-தனில் ஏறித் தொல் உலகு எங்கும் சுற்றி வலம்வந்து நித்ய சூட்சமம் கண்டும்
உரை அற்ற மந்திரம் சொல்லி மீட்டோம் ஒரு நான்கும் பெற்றோம் என்று ஆடாய் பாம்பே

#118
காயக் குடத்திலே நின்ற பாம்பைக் கருணைக் கடலிலே தியங்க விட்டு
நேயச் சுழுமுனை நீடு பாய்ச்சி நித்யமான வஸ்துவை நிலைக்க நாடி
மாயப் பெருவெளி-தன்னில் ஏறி மாசற்ற பொருளினை வாய்க்கத் தேடி
ஆயத் துறை கடந்து அப்பால் பாழின் ஆனந்தம் சேர்ந்தோம் என்று ஆடாய் பாம்பே

#119
மூலத் தலத்திலே நின்ற கருத்தை முற்றும் சுழுமுனை-தன்னில் ஊடே
மேலத் தலத்திலே விந்து வட்டம் வேலை வழியிலே மேவி வாழும்
பாலத்திருத்தாய்க் கருணையதனால் பரகதி ஞான சொரூபம் ஆகி
ஆலச் சயனத்து மாலுடன் நின்றே ஆனந்தம் சேர்ந்தோம் என்று ஆடாய் பாம்பே

#120
புலன் ஐந்து வீதியில் வையாளி பாயும் புரவி எனும் மனதை ஒருமைப்படுத்தி
மல பந்த உலகம் கடந்ததாலே மன்னு குரு பாதத்தின் நிலையை நாடித்
தலம் ஐந்து பூலோகம் கடந்ததாலே சந்திர மண்டலமும் கடந்ததாகும்
அலமந்து பூலோகக் கடலை நீக்கி ஆனந்தமாகி நின்று ஆடாய் பாம்பே

#121
குரு என்னும் ஆசானின் உருவெடுத்துக் குறியான ஞானத்தின் பாக்கி ஆக்கி
அருள் என்னும் அருளையே உண்டை ஆக்கி ஆனந்தமாகவே அதைக் கடந்தே
மருள் என்னும் மாதர் மன நெறியைத் தொட்டு வாங்காமல் எரிந்திட நெட்டையிட்டு
பரு வளைக்குள்ளேயே பட்டது என்றே பற்றானைப் பற்றி நின்று ஆடாய் பாம்பே

#122
கன்னான் குகையிலே கால் மறிப்போம் கருமான் உலையிலே தீயை மூட்டுவோம்
சொன்னார் தலையிலே பொன்னை ஆக்குவோம் சுருதி அரு கல்வி ஒப்பம்செய்வோம்
மின்னார்கள் பாசத்தை விட்டே எரிப்போம் மெய்ப்பொருள் குறிகண்டு விருப்பை அடைவோம்
பன்னாதே பன்னாதே சும்மா இருந்து பராபரம் சேர்ந்தோம் என்று ஆடாய் பாம்பே

#123
சாதிப் பிரிவினிலே தீயை மூட்டுவோம் சந்தை வெளியினிலே கோலை நாட்டுவோம்
வீதிப் பிரிவினிலே விளையாடிடுவோம் வேண்டாத மனையினில் உறவுசெய்வோம்
சோதித்து உலாவியே தூங்கிவிடுவோம் சுகமான பெண்ணையே சுகித்திருப்போம்
ஆதிப் பிரமர்கள் ஐந்து பேரும் அறியார்கள் இதை என்று ஆடாய் பாம்பே

#124
நெட்டெழுத்ததனிலே நிலைபிடித்து நீங்கா எழுத்திலே வாலை முறுக்கி
விட்டு அவ் எழுத்திலே படம் விரித்து விண்ணின் வழியிலே மேவி ஆடிப்
பட்ட எழுத்தையும் பதிந்திருப்போம் பன்னிரண்டாம் எழுத்தினில் பன்னிக் கூடித்
திட்டமுடன் எமக்கு அருள் தேசிகனார்-தம் சீர் பாதம் சேர்ந்தோம் என்று ஆடாய் பாம்பே

#125
ஊசித்துளைக் குடத்தினில் பாம்பை அடைப்போம் உலகு எலாம் சுற்றி உலாவி வருவோம்
மாசுள்ள பிறவியை மறந்திருப்போம் மனம் ஒத்த வெளியிலே விட்டே ஆட்டுவோம்
மாசுப் புலன்களை இரைகொடுப்போம் மனமுற்ற உச்சியில் ஏறி ஆடுவோம்
பேசும் எழுத்தையும் விழுங்கிவிடுவோம் பிறப்பு இறப்பு அற்றோம் என்று ஆடாய் பாம்பே

#126
ஆணிக் குடத்திலே பாம்பு அடைப்போம் அக்கினிக் கோட்டை மேல் ஏறிப் பார்ப்போம்
மாணிக்கத் தூணின் மேல் விட்டே ஆட்டுவோம் மனம் வாக்குக் காயத்தை இரைகொடுப்போம்
நாணிக் கயிற்றையும் அறுத்துவிடுவோம் நமன் அற்ற நாதன் பதம் நாடியே நிற்போம்
ஏணிப் படி வழி கண்டு ஏறிவிடுவோம் யாரும் இதை அறியார் என்று ஆடாய் பாம்பே

#127
வடக்கும் கிழக்குமாக நூலை இழைப்போம் மற்றும் சுழலிலே பாவு பூட்டுவோம்
நடக்கும் வழியினிலே உண்டை சேர்ப்போம் நடவா வழியினிலே புடவை நெய்வோம்
குடக்குக் கரையினிலே கோலைப் போடுவோம் கொய்ததை எங்குமே விற்றுவிடுவோம்
அடக்கியே ஏகத்துளே வைக்கவும் வல்லோம் ஆதி பதம் கண்டோம் என்று ஆடாய் பாம்பே

#128
சூத்திரக் குடத்திலே பாம்பை அடைப்போம் சுழுமுனைக்குள்ளேயோ சுகித்திருப்போம்
பாத்திரம் கொண்டுமே பலி இரப்போம் பத்தெட்டு மூன்று படி கடந்தோம்
ஊத்தைச் சடலத்தினைப் புடமே இடுவோம் உளவன் எமக்கு நல் உறுதி சொல்லப்
பார்த்து உரை இதன் மெய் பலிக்க எண்ணிப் பதனம் பதனம் என்று ஆடாய் பாம்பே

#129
மவ்வக் குடத்திலே பாம்பு அடைப்போம் மணிவட்ட வாசியை வாரி உண்போம்
வவ்வக் குடங்களைத் தள்ளிவிடுவோம் வக்கிர சொர்ப்பனம் தாண்டிவிடுவோம்
பவ்வ வெளியிலே விட்டே வாட்டுவோம் பஞ்ச கருவியைப் பலிகொடுப்போம்
சிவ்வுரு ஆகியே நின்றோம் என்றே சீர் பாதம் கண்டு தெளிந்து ஆடாய் பாம்பே
**

33 புண்ணாக்குச் சித்தர் பாடல்


#1
தேவி மனோன்மணியாள் திருப்பாதம் காண என்று
தாவித் திறந்தேனே ஞானம்மா
சரணம் சரணம் என்றே

#2
அஞ்ஞானமும் கடந்து அறிவை மிகச் செலுத்தி
மெய்ஞ்ஞானம் கண்டுகொண்டால் ஞானம்மா
விலையிலா ரத்தினமடி

#3
முட்டையின் உள்ளே முழுக்குஞ்சு இருப்பது போல்
சட்டையாம் தேகத்துள்ளே ஞானம்மா
தான் உயிரும் நிற்பதடி

#4
விட்டகுறை வாராமல் மெய்ஞ்ஞானம் தேராமல்
தொட்டகுறை ஆனதினால் ஞானம்மா
தோன்றும் மெய்ஞ்ஞானமடி

#5
தம் உளம் அறியாமல் சரத்தைத் தெரியாமல்
சம்சாரம் மெய் என்று ஞானம்மா
சாகரத்திலே உழல்வார்

#6
இட்டர்க்கு உபதேசம் எந்நாளும் சொல்லிடலாம்
துட்டர்க்கு உபதேசம் ஞானம்மா
சொன்னால் வரும் மோசம்

#7
முத்தி பெறுவதற்கும் முதலாய் நினைத்தவர்க்கும்
நித்திரையும் விட்டு ஞானம்மா
நினைவோடு இருக்கணுமே

#8
நினைவைக் கனவாக நீ எண்ணியே பார்க்கில்
சினமாய் வரும் எமனும் ஞானம்மா
தெண்டனிட்டுப் போவானே

#9
யோக விளக்கு ஒளியால் உண்மை தெரியாமல்
மோகம் எனும் குழியில் ஞானம்மா
மூழ்கியே போவார்கள்

#10
சாத்திரம் கற்றறியாத சாமியார் தான் ஆகி
ஆத்தி தேட நினைத்து ஞானம்மா
அலைவார் வெகு கோடி

#11
பூச்சும் வெறும் பேச்சும் பூசையும் கைவீச்சும்
ஏச்சுக்கு இடம்தானே ஞானம்மா
ஏதொன்றும் இல்லையடி

#12
கலத்தை அலங்கரித்துப் பெண்கள் தலைவிரித்து
கணக்கைத் தெரியாமல் ஞானம்மா
கலங்கி அழுதாரடி

#13
மேளங்கள் போடுவதும் வெகுபேர்கள் கூடுவதும்
நாளை எண்ணாமல் அல்லோ ஞானம்மா
நலிந்தே அழுவாரடி

#14
கோவணமும் இரவல் கொண்ட தூலம் இரவல்
தேவமாதா இரவல் ஞானம்மா
தெரியாதே அலைவாரே

#15
செத்தவரை மயானம் சேர்க்கும்வரையில் ஞானம்
உத்தமர் போலப் பேசி ஞானம்மா
உலகில் திரிவாரடி

#16
காட்டில் இருந்தாலும் கனக தவம்செய்தாலும்
காட்டில் குரு இல்லாமல் ஞானம்மா
கண்டறிதல் ஆகாதே

#17
நல்ல வெளிச்சமது ஞான வெளிச்சமது
இல்லா வெளிச்சமது ஞானம்மா
ஈன வெளிச்சமடி

#18
சம்சாரம் என்றும் சாகரமாம் என்றும்
இம்சை அடைவோர்கள் ஞானம்மா
இருந்து பயன் ஆவது என்ன

#19
காத்தடைத்து வந்தது இது கசமாலப் பாண்டம் இது
ஊத்தச் சடலம் இது ஞானம்மா
உப்பிலாப் பொய்க்கூடு

#20
அஞ்சுபேர் கூடி அரசாளவே தேடி
சஞ்சாரம் செய்ய ஞானம்மா
தான் அமைத்த பொய்க்கூடே
**

34 மச்சேந்திர நாதர் என்ற நொண்டிச் சித்தர் பாடல்

** நொண்டிச் சிந்து

#1
ஆதி பராபரையாள் சிவசத்தி அம்பிகையின் பாதமதைக் கும்பிட்டு நித்தம்
கோதிலாச் சுடர் ஒளியில் திரிகோணக் குஞ்சரத்தின் பாத மலர் தஞ்சமாய்க் கொண்டு

#2
திருமூலர் காலாங்கி போகர் தென்பொதிகைக் குறுமுனி தன்வந்திரியர்
கருவூரார் இடைக்காடர் அத்திரி கலைக்கோடார் மச்சமுனி புலத்தியரே

#3
சுந்தரானந்தர் கபிலர் கொங்கணர் சூதமுனி கோசிகர் வேதமுனிவர்
நந்தீசர் சட்டைமுனிவர்-தன்னை நான் தொழுதேன் அடி தாள் பணிந்தேன்

#4
அஞ்சு புலக் கதவு அறிந்து பிரமமந்திரத்தின் உண்மை வழி விந்தை தெரிந்து
சஞ்சலம்-தனைப் பிரிந்து சித்தாதிகள் தாள் பணிந்தேன் நான் துணிந்தே

#5
சரியையும் கிரியையும் விட்டு அப்பால் சாதனாமா யோகமதின் பாதமதைத் தொட
உரியாதீதம் வெளிப்பட்டு அங்கு சும்மாயிருந்ததைச் சொல்ல எம்மால் ஆகுமோ

#6
பராபரவெளி கைக்கொண்டு மனம் ஒன்றிப் பற்றிடவே சிற்பரத்தின் உற்பனம் கண்டு
நிராதரமான பண்டு நீங்கா ஆனந்த ரசம் பாங்கதாய் உண்டு

#7
அடி நடு முடிவு கண்டேன் மோன நிலை அறிந்துகொண்டேன் ஞானம் தெரிந்துகொண்டேன்
முடிவில்லாப் பரப்பிரம சொரூபத்தை முற்றும் கண்டேன் இகப் பற்றும் விண்டேன்

#8
சுத்தப் பரவெளியே ஒளியாகத் தோன்றிட மெய்ஞ்ஞானச் சுகமடைந்தேன்
சத்துச் சித்தானந்தத்தைத் தெரிசிக்கச் சகலமும் பிரமமயம் புகல அரிதே

#9
நாசி முனை நடுவில் விளங்கிய நயனத்திடை ஒளியாம் பரவெளியில்
தேசிகன் திருக்கூத்தை தெரிசித்தே மோன நிலை பரிசமுற்றே

#10
நினைவே கனவு எனவும் தெளிந்து அந்த நினைவையும் மறந்து எழு கலை மறந்தே
தனது எனும் தனை மறந்தே சுத்த சாகரத்தில் உழலாத பாகம் துறந்தே

#11
ஓம் என்ற பிரணவத்தை இன்னது என உண்மை கண்ட பின்பு வெகு நன்மையும் பெற்றேன்
நாம் எனும் அகங்காரம்-தனை விட்டு நாட்டம் தெரிந்துகொண்டேன் தேட்டமுடனே

#12
ஆசையை விட்டு ஒளிந்து விரிந்து ஓடும் ஐம்புலனைத் தான் அறுக்கும் தெம்பை அளித்துப்
பாசம்-தனைக் கடந்து குரு சொல்படி தவறாமல் அப்படி நடந்து

#13
கவனக் குளிகை கொண்டு அதனாலே ககன மார்க்கம்-தனிலே கவனமாய்ச் சென்று
தவமுறு மா சித்தர்கள் வாழ்கின்ற சதுரகிரிக்குப் போய் குதூகலித்தேன்

#14
தவப் பரம்பரையின் மேல் இருக்கிற சாமி பர ஞான நவ சித்தருடனே
சிவ சொரூபம் தெரிந்தேன் மனதினில் தீப ஒளி கண்ட பின்பு ஆவலும் விண்டேன்

#15
மூலாதாரம் தெரிந்தேன் தெரிந்தது அந்த முச்சுடரின் தீப ஒளி கண்டு மகிழ்ந்தேன்
நாலா கலை அறிந்தேன் என் பாட்டன் நந்தீசர் கிருபையால் சந்தோடம்கொண்டேன்

#16
யோகானுபவம் அறிந்தே மணி பூரகம் உத்தமர்க்குச் சித்தி என மெத்தவும் கண்டேன்
சாகாது இருந்திடவே விசுத்தி நிலை-தன்னில் இருந்து அ நிலையே நல் நிலையதாய்

#17
கண்டதே அங்கு நின்றேன் சிவசத்தி கற்பனையது என்று மகிழ்ந்து அப்புறம் சென்றேன்
பண்டு அன்னை உமையவட்கு அருளிய பாதை கண்டு ரசபான போதையும் உண்டேன்

#18
ஆரும் அறியவொண்ணாப் பூரணத்து ஆச்சரியம் கண்ட பின்பு பேச்சு அடங்கினேன்
சீரும் சிறப்பும் மிக்க மனோன்மணி தேவி அருளால் அறிந்து மேவிக்கொண்டேன்

#19
காமியம் கடந்த இடம் தினந்தினம் கண்டு அறிந்துகொண்டேன் முனி அண்டர் புகழும்
வாமி இவள் எனப் பேர் நன்றாக வாங்கிக்கொண்டேன் பரத்து ஓங்கிக்கொண்டேன்

#20
நாதாந்த மோனம் எனும் நிலை கண்டு நான் இருந்தேன் உறக்கம் ஊணும் அற்றேன்
வேதாந்த வழி அறிந்தேன் அஞ்ஞான வீட்டைக் கடந்து மேலாம் வீட்டையும் கண்டேன்

#21
சாத்திரம் பல படித்தேன் பொல்லாச் சண்டாளர் சவகாசம்-தன்னை மறந்தேன்
பாத்திரம் அறிந்துகொண்டேன் அவருடன் பத்தியொடு சேர்க்கைசெய்து முத்தியைக் கண்டேன்

#22
உப்பிட்ட பாண்டம் இது வந்த வழி ஈது என்று உண்மை தெரியாத மாந்தர் நன்மை ஈது என்று
செப்புக் குயம் ஆனார் ஆசைகொண்டு தேசமதிலே அலைந்து பாசத்து உழல்வார்

#23
நிலையிலாப் பொய்க்கூடு இத் தேகம் நிச்சயமதற்றது என அச்சமதோடு
மலை குகை-தனில் ஏகி சிவஞான மார்க்கம் தெரிந்து அதின் நேர்கையாகி

#24
ஆங்காரமும் ஒழித்தேன் உண்மை நிலை அறிந்திடும் நொண்டி எனச் சிறந்து இழித்தேன்
பாங்காம் நிலை தெரிந்தேன் குரு சொன்ன பரப்பிரம சொரூபத்தின் தெளிவு அறிந்தேன்

#25
தன்னையும் தான் உணர்ந்தேன் எட்டுத் தலங்களும் ஒன்பது வாசல் உணர்ந்தேன்
பின்னும் அக் கதவு அடைத்தேன் மேலாம் பெருவழி ஊடுசென்று திரு அடைந்தேன்

#26
மாதா மனோன்மணியாள் பீடமதில் மணிச் சத்தத் தொனியது கணகணவென
நாத கீதம் கேட்டுச் சிவ திருநடனக் கண்காட்சியை உடனே கண்டேன்

#27
மந்திரம்-தனைத் தெரிந்தேன் ஓங்கார வட்டமதைத் திட்டமதா எட்டி அறிந்தேன்
இந்திரபீடம் உணர்ந்தேன் மோன நிலை இன்னது என்று கண்டு மனம் நன்னயம்கொண்டேன்

#28
அழியாப் பொருள் இதுதான் என்று தொழுது அகம் மகிழ்ந்தேன் ஞானச் சுகமடைந்தேன்
வழியாய் உணர்ந்தவர்க்கு மோட்ச நிலை வாய்க்கும் என்று பேய்க்குணத்தைப் போக்கிப் புகழ்ந்தேன்

#29
வேத முடிவு உணர்ந்தேன் எங்கும் விளங்கும் பொருளைக்கொண்டு உளம் குளிர்ந்தேன்
நாத வெளியில் உற்றேன் இந்த நானிலத்தோர் புகழவே ஞானி பேர் பெற்றேன்

#30
வெட்டவெளிதானே யாம் இது என்று அறிந்துகொண்டவர் வேறொன்றையும் உன்னார்
பட்டப்பகலதனை இருளாகப் பார்த்தவருக்குக் காண ஞான நேத்திரம் உண்டோ

#31
மூல முதலி மொள்ளே என்று முன்னாள் மொழிந்தார் நமது குரு மூலர் அன்றே
சாலவே மறை நான்கும் சொன்னதோர் சங்கை தெளிந்து ஆனந்தம் பொங்கித் ததும்ப

#32
தான் நான் என அற்று குரு அருள்-தன்னை மறவாமல் என்னை என்னால் அறிந்தேன்
ஊன் உடல் அழியாமல் நிட்டை-தனில் உற்ற விழி துயிலாத பெற்றியில் இருந்தேன்

#33
ஒரு பொருள் விரிவாலே கண்டு அறிந்த உற்பனம் எல்லாம் விழலாம் கற்பனை என்றே
அறிவால் அறிந்துகொண்டு சிதம்பரத்து ஆடல் கண்டு ஆனந்தப் பாடல் விண்டேன்
**

35 வகுளிநாதர் என்னும் மௌனச்சித்தர் பாடல்

** குறவஞ்சிப்பா

#1
ஆதி பெரும் சோதி-தனை அனுதினமும் நாடி
ஐயர் பதம் தேடிக்கொண்டு அருள்பெறவே பாடிச்
சோதி எனும் மனோன்மணியாள் அருளதனைப் பெற்றுச்
சுகருடைய பாதமதை மனம்-தனிலே உற்று

#2
ஆங்காரம்-தனை அடக்கி அருள் நிலையை நோக்கி
அரிய புவனங்கள் எல்லாம் அறிய மனதாக்கி
பாங்காகப் பெரியோர்கள் பாதமது பணிவோம்
பத்தியொடு யோகநிட்டை நித்தியமும் புரிவோம்

#3
பேய்க்குணத்தைச் சுட்டு அல்லவோ பிரம நிலை கண்டோம்
பிரமபதிதான் கடந்து சுழிமுனையுள் கொண்டோம்
நாய் போலே அலையாமல் நாம் இருந்தோம் தவசில்
நல்லதொரு ஆங்காரம் அடக்கி மிகப் பவுசாய்

#4
வஞ்சகமாம் வாழ்வை நம்பிச் சஞ்சலங்கள் அடையோம்
மகத்தான மகரிடிகள் பதம் காணச் சடையோம்
பஞ்சமாபாதகரை ஒருநாளும் பாரோம்
பாவ வினை பற்றறுத்தோர் சிநேகிதங்கள் மறவோம்

#5
ஆயிரம்பேர் சித்தருடன் அனுதினமும் பாடி
ஆனந்தத் திருநடனம் ஆடுவோமே கூடி
தாயி உமை மனோன்மணியாள் எனக்கு சொன்ன சித்தைத்
தான் அறிந்து நடந்துகொள்வோம் பெரியோரை அடுத்தே

#6
நிலையைக் கண்டுகொள்வதற்கு நினைந்து உருகி வாடி
நிர்மலமாம் ஐயன் பதம் தினம்தினமும் தேடி
கலை அறிந்து வாசியையும் கட்டுடனே பிடித்தோம்
கனல் எழுப்பி மூலமதைச் சுகமுடனே படித்தோம்

#7
ஊண் உறக்கம் நீக்கி அல்லோ யோகநிட்டை புரிந்தோம்
உற்றாரைப் பற்று அறுத்து மலைக்குகையில் இருந்தோம்
காணுதற்கும் எட்டாத பரவெளியைக் கண்டோம்
கற்பமது சாப்பிட்டு உடல் வளர்த்துக்கொண்டோம்

#8
தந்தை தாயார் சுற்றமொடு தளர்ந்து உறவாடோம்
தவ நிலையைப் பெற்று உணராச் செய்கையைத் தேடோம்
விந்தையுடன் ஞானமதை மேன்பாடாய்த் தெரிந்தோம்
மேலான பரவெளியின் அருளதனை அறிந்தோம்

#9
நாசி நுனி வழியதனில் நாட்டமதைத் தெரிந்தோம்
நல்லதொரு மூலவட்டம் சுழியை அறிந்தோம்
வாசி ஏற்ற வகை அறிந்து ஆசைகளை அறுப்போம்
வையகத்தின் செய்கை-தன்னை வழுவாமல் மறுப்போம்

#10
சக்தி சக்ர பீடம் ஏறிச் சுத்தவெளியைக் கண்டோம்
சகலமும் பரவெளி என்று எண்ணி மனமதனில் கொண்டோம்
சித்திபெற்ற முத்தர்களை எத்தினமும் அறிவோம்
சீவ கலை இன்னது என்று நாட்டமுடன் தெரிவோம்

#11
தொண்ணுத்தாறு தத்துவத்து உரைத்தனங்கள் கொண்டோம்
துய்ய பரவெளி-தனிலே அய்யர் பதம் கண்டோம்
விண்ணுலகு இன்னது என்று அறிந்துகொண்டேன் யானே
மேலான பரவெளியின் ஒளியைக் கண்டுதானே

#12
நான் என்ற ஆணவத்தை நயந்து அறுத்து விடுத்தேன்
நன்மைபெற்றுக் குகை-தனிலே வாழ்ந்திருக்க அடுத்தேன்
தான் என்ற கருவமதைத் தணித்துவிட்டு வந்தோம்
தவமேதான் கதி என்று சரவழியில் உகந்தோம்
**

36 வால்மீகர்

** சூத்திர ஞானம்

#1
இருள் வெளியாய் நின்ற சிவ பாதம் போற்றி எழுத்ததனின் விவரத்தை விரித்துச் சொல்வேன்
அருவுருவாய் நின்றதுவே எழுத்ததாகும் ஆதி அந்தம் அண்ட பிண்டம் அதுவேயாகும்
திரு உருவாய் ரவி மதியாய் நின்ற ரூபம் சிவ சத்தி திருமாலின் ரூபமாகும்
வரும் உருவே சிவ சத்தி வடிவமாகும் வந்ததிலும் போனதிலும் மனத்தை வையே

#2
வந்ததுவும் போனதுவும் வாசியாகும் வானில் வரும் ரவி மதியும் வாசியாகும்
சிந்தை தெளிந்திருப்பவன் ஆர் அவனே சித்தன் செகம் எலாம் சிவம் என்றே அறிந்தோன் கித்தன்
நந்தி என்ற வாகனமே தூல தேகம் நான்முகனே கண் மூக்குச் செவி நாக்காகும்
தந்திமுகன் சிவ சத்தி திருமூச்சாகும் தந்தை தாய் ரவி மதி என்று அறிந்துகொள்ளே

#3
அறிந்துகொள்ளு பூரகமே சரியை மார்க்கம் அடங்குகின்ற கும்பகமே கிரியை மார்க்கம்
பிரிந்துவரும் ரேசகமே யோக மார்க்கம் பிசகாமல் நின்றதுவே ஞான மார்க்கம்
மறிந்து உடலில் புகுகின்ற பிராண வாயு மகத்தான சிவ சத்தி அடங்கும் வீடு
சிறந்து மனத் தெளிவாகிச் சேர்ந்தோன் சித்தன் சிவசிவா அவன் அவன் என்று உரைக்கலாமே

#4
ஆமப்பா உலகத்தில் பெருநூல் பார்த்தோர் அவரவர் கண்டதை எல்லாம் சரிதை என்பார்
ஓமப்பா கல் செம்பைத் தெய்வம் என்றே உருகுவார் பூசிப்பார் கிரியை என்பார்
வாமப்பா யோகம் என்று கனி காய் தின்று வாய் பேசா ஊமையைப் போல திரிகுவார்கள்
காமப்பா ஞானம் என விண்டு மேலும் காக்கை பித்தன் மிருகம் போல் சுற்றுவாரே

#5
சுற்றுவார் பெருநூலைப் பார்த்துப்பார்த்துத் துடிப்பார் உலகத்தில் சிற்சில்லோர்கள்
தெற்றுவார் அவர் பிழைக்க அனேக வேடம் தேகத்தில் அணிந்துகொண்டு திரிகுவார்கள்
பற்றுவார் குருக்கள் என்பார் சீடர் என்பார் பையவே தீட்சை வைப்பார் தீமை என்பார்
கத்துவார் திரிமூர்த்தி தாமே என்று காரணத்தை அறியாத கசடர்தானே

#6
தான் என்ற உலகத்தில் சிற்சில்லோர்கள் சடை புலித்தோல் காசாயம் தவ வேடம் பூண்டு
ஊன் என்ற உடம்பு எல்லாம் சாம்பல் பூசி உலகத்தில் யோகி என்பார் ஞானி என்பார்
தேன் என்ற சிவபூசை தீட்சை என்பார் திருமாலைக் கண்ணாலே கண்டோம் என்பார்
கான் என்ற காட்டுக்குள் அலைவார் கோடி காரணத்தை அறியாமல் கதறுவாரே

#7
கதறுகின்றபேர்கள் ஐயா கோடாகோடி காரணத்தைக் கண்டவர்கள் கொஞ்சம் கொஞ்சம்
பதறுகின்றபேர்கள் எல்லாம் பராபரத்தைப் பற்றி நின்று பார்த்தவர்கள் சுருக்கமப்பா
உதறுகின்றபேர்கள் எல்லாம் உலகத்துள்ளே உதித்த கலை தம்முள்ளே அறிய மாட்டார்
சிதறுகின்றபேர்களைப் போல சிதறிடாமல் சிவ சத்தி வரும்போதே தன்னில் நில்லே

#8
நில் என்ற பெரியோர்கள் பாடையாலே நீடு உலகம்-தன்னுள்ளே நாலு வேதம்
வல்லமையாய்ச் சாத்திரங்கள் இருமூன்றாக வயிறு பிழை புராணங்கள் பதினெட்டாகக்
கல்லுகளைக் கரைப்பது போல் வேதாந்தங்கள் கட்டினார் அவரவர்கள் பாடையாலே
தொல் உலகில் நால் சாதி அனேகம் சாதி தொடுத்தார்கள் அவரவர்கள் பிழைக்கத்தானே

#9
தான் என்ற உலகத்தில் இல்லாவிட்டால் தன் பெருமையால் அழிந்து சகத்தில் வீழ்வார்
ஊன் என்ற உடம்பெடுத்தால் எல்லாம் வேணும் உலகத்தில் அவரவர்கள் பாடை வேணும்
மான் என்ற சிவகாமி சிவனும் கூடி மா முனிவர் முகம் பார்த்து மறைநூல் சொன்னார்
தேன் என்ற சிவகாமி அருளினாலே திரட்டினார் வெகு கோடி தேச பாடை

#10
தேசத்தின் பாடை-தனை அறிந்திடாமல் தெளிவாகத் தாம் உரைப்பார் பாடை பார்த்தோர்
ஆசிப்பார் உலகத்தில் கண்டது எல்லாம் ஆச்சரியம் தனைக் கண்டு மறந்துபோவார்
வாசி-தனை அறியாத சண்டி மாண்பர் வார்த்தையினால் மருட்டிவைப்பார் வகை இலாமல்
நாசி நுனியதன் நடுவில் சிவத்தைக் கண்டோர் நான்முகனும் திருமாலும் சிவனும்தாமே

#11
சிவசிவா பதினெண்பேர் பாடற்கு எல்லாம் திறவுகோல் வால்மீகன் பதினாறாகும்
சிவம் பெத்த சித்தர் எல்லாம் என் நூல் பார்த்துச் சிவனோடே கோள்சொன்னார் சினந்தான் நாதன்
அவமாகிப்போகாமல் சிவன் உத்தார அருளினால் திறந்து சொன்னேன் உலகுக்காக
நவமான நவக்கிரகம்-தன்னுள்ளேயே நாக்கு வாய் செவி மூக்கு மத்திக்கு அப்பால்

#12
நாக்கு வாய் செவி மூக்கு மத்திக்கு அப்பால் நடு வீதி குய்யம் முதல் உச்சிதொட்டுத்
தாக்குவாய் அங்கென்றே அதிலே முட்டுத் தாயாரைப் பூசித்து வேதம் ஓது
வாக்குவாய் அசையாமல் மவுனம்கொண்டு வாசி வருமிடத்தில் மனம்வைத்துக் காத்து
நீக்குவாய் வாசியொடு மனம்தான் புக்கு நினைவதனில் அடங்கிவரும் வரிசை காணே

#13
காண அரிதே எவராலும் இரு சுவாசம் காண்பவனே சிவ சித்தன் அவனேயாகும்
பூண அரிது இவ் உலகத்தில் இ நூல் கிட்டில் பூலோக சித்தன் என உரைக்கலாகும்
காண அரிது சிவ சக்தி திருமூச்சாகும் காட்டாதே மூடருக்கே இ நூல்-தன்னை
தோண அரிது விழி மயக்கம் சும்மாப்போமே சொல்ல அரிய சூட்சுமத்தைச் சொன்னேனப்பா

#14
சூட்சம் இ நூல் சொல்லுகிறேன் வாசி காண சூட்சாதி சூட்சத்தைத் துறக்கப் போகா
சாட்சி இல்லை துணை இல்லை கேள்வி இல்லை சந்தேகம் ஒன்றும் இல்லை விழியைக் காணக்
காட்சி என்ன கற்பகத்தில் வசிக்குமாப்போல் காரணத்தைக் கண்ணாலே கண்டிருக்க
ஆட்சி தரும் உமையாள் அப்படியே கண்டேன் ஆனந்தத் திருக்கூத்தின் நடக்கை காப்பே

#15
காப்பதற்குப் பத்தியத்தைச் சொல்லக் கேளு காய் கனிகள் பஞ்சரசம் பரமான்னங்கள்
ஏற்கையுடன் உண்டுகொண்டு சிவத்தைக் காத்தே என் மகனே சித்தருடைக் குருநூல் பாராய்
ஆத்துமத்துக்கு அழிவு இல்லாது இருக்க வேணும் அவரவர்கள் நித்யகர்மம் நடக்க வேணும்
தீர்க்கமுடன் நின்றவர்க்கு வாசி சித்தி சிறப்புடனே பதினாறும் பலிக்கும்தானே

#16
தான் அவனாய் இருக்கவென்றால் வாசி வேணும் தனக்குள்ளே தான் நிற்க இடமும் வேணும்
வானவனாய் நின்றவர்கட்கு எல்லாம் சித்தி வானுக்குள் மனம் இருக்க மதி போல் காணும்
தேனவனாம் சித்தருக்குத் தெவிட்டா மூலி சிரசப்பா உடலுக்குப் பதியேயாகும்
கோனவனாய் இருக்கவென்று குறியைச் சொன்னேன் குவலயத்தில் பதினாறும் குறுகத்தானே
****
**