# 0
கடவுள் வாழ்த்து | # 0 கடவுள்
வாழ்த்து |
| |
எரி எள்ளு
அன்ன நிறத்தன் விரி இணர் | நெருப்பை
இகழ்ந்தாற்போன்ற சிவந்த நிறத்தையுடையவன்; விரிந்த பூங்கொத்துகளையுடைய |
கொன்றை அம்
பைந்தார் அகலத்தன் பொன்றார் | கொன்றை மலரால் ஆன
அழகிய புதிய மாலையணிந்த மார்பினன்; பகையாகிய அவுணரின் |
எயில்
எரியூட்டிய வில்லன் பயில் இருள் | கோட்டையைத்
தீவைத்துக்கொளுத்திய வில்லையுடையவன்; செறிந்த இருளில் |
காடு அமர்ந்து
ஆடிய ஆடலன் நீடிய | சுடுகாட்டை விரும்பி
அங்கு ஆடிய ஆட்டக்காரன்; நீண்டுபோய் |
புறம் புதை
தாழ்ந்த சடையன் குறங்கு அறைந்து 5 | முதுகை மறைக்கும்
அளவுக்குத் தாழ்ந்த சடைமுடியையுடையவன்; தொடையில் மோதி |
வெண்மணி
ஆர்க்கும் விழவினன் நுண் நூல் | வெண்மையான மணிகள்
பேரொலி எழுப்பும் விழாவினன்; நுண்ணிய நூலால் கட்டப்பட்ட |
சிரந்தை
இரட்டும் விரலன் இரண்டு உருவாய் | உடுக்கையை மாறிமாறி
ஒலிக்கும் விரல்களையுடையவன்; ஆணும் பெண்ணுமான இரண்டு உருவங்களால் |
ஈரணி பெற்ற
எழில் தகையன் ஏரும் | தோடும் குழையுமாகிய
இரண்டுவகை அணிகலன்கள் பெற்ற அழகிய பொலிவுபெற்றவன்; வளர்கின்ற |
இளம்பிறை
சேர்ந்த நுதலன் களங்கனி | இளம்பிறை சேர்ந்த
நெற்றியையுடையவன்; களங்கனி |
மாறேற்கும்
பண்பின் மறு மிடற்றன் தேறிய 10 | தன் நிற மாறுபாட்டை
ஏற்றுக்கொள்ளும் பண்பினையுடைய கறையுள்ள கழுத்தையுடையவன்; தெளிவான ஒளியையுடைய |
சூலம் பிடித்த
சுடர்ப்படை | சூலமாகிய வேலினைப்
பிடித்த, ஒளிவிடும் வேறு படைக்கலன்களையும் கொண்ட |
கால கடவுட்கு
உயர்க மா வலனே | காலக் கடவுளுக்கு
உயர்க பெரும் வெற்றி. |
| |
| |
பதிற்றுப்பத்தில் | |
முதல் பத்தும்
(1 – 10) | |
இறுதிப்
பத்தும் (91 – 100) | |
கிடைக்கவில்லை. | |
| |
தொல்காப்பியப்
பொருளதிகார உரையிலும் | தொல்காப்பியப்
பொருளதிகார உரையிலும் |
புறத்திரட்டிலும்
காணப்பட்ட சில பாடல்களும் | புறத்திரட்டிலும்
காணப்பட்ட சில பாடல்களும் |
பாடல்
வரிகளும் இடம் விளங்காத பாடல்கள் | பாடல் வரிகளும் இடம்
விளங்காத பாடல்கள் |
என்ற
தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன. | என்ற தலைப்பில்
தொகுக்கப்பட்டுள்ளன. |
அவற்றுக்கு
இங்கே ஆசிரியரால் | அவற்றுக்கு இங்கே
ஆசிரியரால் |
எண்கள்
கொடுக்கப்பட்டு (91 – 94) | எண்கள் கொடுக்கப்பட்டு
(91 – 94) |
அவை இறுதிப்
பட்டியலில் இடம்பெற்றுள்ளன. | அவை இறுதிப்
பட்டியலில் இடம்பெற்றுள்ளன. |
| |
| |
இரண்டாம்
பத்து | இரண்டாம் பத்து |
குமட்டூர்க்கண்ணனார் | குமட்டூர்க்கண்ணனார் |
| |
# 11 பாட்டு
11 | # 11 பாட்டு 11 |
வரை மருள்
புணரி வான் பிசிர் உடைய | மலை போல் எழும் அலைகள்
வெண்மையான சிறுதுளிகளாக உடைய |
வளி பாய்ந்து
அட்ட துளங்கு இரும் கமம் சூல் | காற்று மோதிச்
சிதைத்த, அசைந்தாடும் கரிய முதிர்ந்த சூலைக் கொண்டாற் போன்ற |
நளி இரும்
பரப்பின் மா கடல் முன்னி | மிகுந்த கரிய
பரப்பினைக் கொண்ட பெரிய கடலுக்குள் முனைந்து சென்று |
அணங்கு உடை
அவுணர் ஏமம் புணர்க்கும் | பிறரை வருத்துதலை உடைய
அவுணர்கள் பாதுகாத்து நிற்கும் |
சூர் உடை
முழு_முதல் தடிந்த பேர் இசை
5 | சூரபத்மனின் மாமரத்தை
வேருடன் வெட்டிச் சாய்த்த, பெரும் புகழும் |
கடும் சின
விறல் வேள் களிறு ஊர்ந்து ஆங்கு | கடும் சினமும்
வெற்றியையும் உடைய செவ்வேள் யானையின்மீது வந்ததைப் போன்று, |
செம் வாய்
எஃகம் விலங்குநர் அறுப்ப | கூரிய வாயினையுடைய
வாள்படை குறுக்கே வருவோரை வீழ்த்த, |
அரு நிறம்
திறந்த புண் உமிழ் குருதியின் | அவரின் அரிய மார்பு
பிளந்த புண்ணிலிருந்து வெளிவரும் குருதியினால் |
மணி நிற இரும்
கழி நீர் நிறம் பெயர்ந்து | நீல மணி போன்ற பெரிய
கழி தனது நீரின் நிறம் மாறிக் |
மனால கலவை போல
அரண் கொன்று 10 | குங்குமக் கலவை போலாக,
அவரின் அரணை அழித்து, |
முரண் மிகு
சிறப்பின் உயர்ந்த ஊக்கலை | வலி மிகுந்த
சிறப்பினால் உயர்ந்த மனவெழுச்சி உடையவனே! |
பலர் மொசிந்து
ஓம்பிய திரள் பூ கடம்பின் | பகைவர் பலராய்க்
கூடிநின்று பாதுகாத்த திரண்ட பூக்களைக் கொண்ட கடம்பமரத்தினை |
கடி உடை
முழு_முதல் துமிய ஏஎய் | காவல் உள்ள
முழுமரத்தையும் வெட்டிச்சாய்க்கும்படி வீரரை ஏவி, |
வென்று எறி
முழங்கு பணை செய்த வெல் போர் | வென்று அறையும்
முழங்குகின்ற முரசால் செய்த வெல்லும் போரினையும், |
நார் அரி
நறவின் ஆர மார்பின்
15 | நார்க்கூடையால்
அரித்து வடிக்கப்பட்ட கள்ளினையும், ஆரங்கள் அணிந்த மார்பினையும் |
போர் அடு தானை
சேரலாத | போர் புரியும்
சேனைகளையுடைய சேரலாதனே! |
மார்பு மலி
பைம் தார் ஓடையொடு விளங்கும் | மார்பில் கிடக்கும்
புதிய மாலை, யானையின் நெற்றிப்பட்டம் வரை தாழ்ந்து விளங்கும் |
வலன் உயர்
மருப்பின் பழி தீர் யானை | வெற்றியால் உயர்ந்த
கொம்புகளையுடைய குற்றம் தீர்ந்த யானையின் |
பொலன் அணி
எருத்தம் மேல்கொண்டு பொலிந்த நின் | பொன்னாற் செய்த
அணிகலன்களையுடைய பிடரியின் மேல் ஏறியிருந்து சிறந்து விளங்கும் உன் |
பலர் புகழ்
செல்வம் இனிது கண்டிகுமே 20 | பலரும் புகழும்
செல்வத்தை இனிதே காண்கிறோம் – |
கவிர் ததை
சிலம்பில் துஞ்சும் கவரி | முருக்க மரங்கள்
செறிவாக வளர்ந்த மலைச்சரிவில் துயில்கொள்ளும் கவரிமான்கள், |
பரந்து இலங்கு
அருவியொடு நரந்தம் கனவும் | பரந்து விளங்கும்
அருவியோடு, நரந்தம் புற்களைக் கனவில் காணும் |
ஆரியர்
துவன்றிய பேர் இசை இமயம் | ஆரியர் குழுமியுள்ள
பெரும் புகழைக் கொண்ட இமயமலை, |
தென்னம்
குமரியொடு ஆயிடை | தெற்கில் உள்ள அழகிய
குமரி முனை ஆகியவற்றுக்கு இடையில் உள்ள |
மன்
மீக்கூறுநர் மறம் தப கடந்தே
25 | பெருமை பேசித்
திரியும் மன்னர்களின் வீரம் எல்லாம் கெட்டொழியுமாறு – |
| |
# 12 பாட்டு
12 | # 12 பாட்டு 12 |
வயவர் வீழ
வாள் அரில் மயக்கி | வீரர்கள்
தோற்றுவிழும்படியாக, வாளால் செய்யும் போரினால் அவரை நிலைகுலையச் செய்து |
இடம் கவர்
கடும்பின் அரசு தலை பனிப்ப | பகைவரின் நாட்டைக்
கவர்ந்துகொள்ளும் சுற்றத்தாரையுடைய அரசர்கள் தலைநடுங்கி வணங்க, |
கடம்பு முதல்
தடிந்த கடும் சின வேந்தே | அவரின் காவல்மரமான
கடம்பரமரத்தை அடியோடு வெட்டிச் சாய்த்த கடும் சினத்தையுடைய வேந்தனே! |
தார் அணி
எருத்தின் வாரல் வள் உகிர் | பிடரி மயிர்
அழகுசெய்யும் கழுத்தினையும், நீண்ட கூரிய நகங்களையும் கொண்ட, |
அரி மான்
வழங்கும் சாரல் பிற மான்
5 | சிங்கங்கள் நடமாடும்
மலைச்சாரலில், பிற விலங்குகளின் |
தோடு கொள் இன
நிரை நெஞ்சு அதிர்ந்து ஆங்கு | திரளாகக் கூடும்
இனங்களைக் கொண்ட கூட்டம் நெஞ்சதிர நிற்பதைப் போல |
முரசு முழங்கு
நெடு நகர் அரசு துயில் ஈயாது | முரசுகள் முழங்கும்
நெடிய அரண்மனைக்குள் அரசர்கள் துயில் கொள்ளாமல் இருக்க, |
மாதிரம்
பனிக்கும் மறம் வீங்கு பல் புகழ் | நான்கு பக்கத்தையும்
நடுங்கச் செய்யும் உன் வீரம் சிறந்து விளங்கும் பலவாறான புகழ் |
கேட்டற்கு
இனிது நின் செல்வம் கேள்-தொறும் | கேட்பதற்கு இனியது;
உன் செல்வத்தைக் கேள்விப்படும்போதெல்லாம் |
காண்டல்
விருப்பொடு கமழும் குளவி 10 | உன்னைக்
காணவேண்டுமென்ற விருப்பத்தால், மணங்கமழும் காட்டுமல்லிகையால், |
வாடா பைம்
மயிர் இளைய ஆடு நடை | உதிராத பசிய
மயிரினையும், இளமையான அசைகின்ற நடையினையுமுடைய |
அண்ணல் மழ
களிறு அரி ஞிமிறு ஓப்பும் | பெருமை பொருந்திய
இளங்களிறு, தன்னை மொய்க்கும் வண்டு, ஞிமிறு ஆகியவற்றை ஓட்டுகின்ற, |
கன்று புணர்
பிடிய குன்று பல நீந்தி | கன்றுகளைத் தழுவிய
பெண்யானைகளைக் கொண்ட குன்றுகள் பலவற்றைக் கடந்து |
வந்து அவண்
நிறுத்த இரும் பேர் ஒக்கல் | வந்து, அங்குத் தங்கிய
பெரிய என் சுற்றத்தார், |
தொல் பசி
உழந்த பழங்கண் வீழ
15 | நாட்பட்ட பசியால்
வருந்திய வருத்தம் தீர, |
எஃகு போழ்ந்து
அறுத்த வாள் நிண கொழும் குறை | அரிவாளால் பிளந்து
அறுக்கப்பட்ட வெண்மையான ஊனின் கொழுத்த இறைச்சித்துண்டுகளையும், |
மை ஊன் பெய்த
வெண்ணெல் வெண் சோறு | ஆட்டு இறைச்சி இட்ட
வெண்ணெல்லின் வெண்மையான சோற்றினையும், |
நனை அமை
கள்ளின் தேறலொடு மாந்தி | மலர்களின் அரும்புகள்
சேர்த்த தெளிந்த கள்ளுடன் மிகுதியாக உண்டு, |
நீர்ப்படு
பருந்தின் இரும் சிறகு அன்ன | நீரில் நனைந்த
பருந்தின் பெரிய சிறகுகளைப் போன்ற |
நிலம் தின்
சிதாஅர் களைந்த பின்றை 20 | மண்படிந்த கிழிந்த
உடையைக் களைந்த பின்னால், |
நூலா_கலிங்கம்
வால் அரை கொளீஇ | நூற்கப்படாத நூலாகிய
பட்டால் செய்த ஆடையை நீளமாக இடுப்பில் கட்டி, |
வணர் இரும்
கதுப்பின் வாங்கு அமை மென் தோள் | வளைவாக முடிச்சிட்ட
கரிய கூந்தலையும், வளைவான மூங்கில் போன்ற மென்மையான தோள்களையும் கொண்ட |
வசை இல்
மகளிர் வயங்கு இழை அணிய | குற்றமற்ற மகளிர்
ஒளிவிடும் அணிகலன்களை அணிந்துகொள்ள, |
அமர்பு மெய்
ஆர்த்த சுற்றமொடு | உன்னை மிகவும்
விரும்பி, உன் மெய்யினைச் சூழவிருக்கும் சுற்றத்தோடு, |
நுகர்தற்கு
இனிது நின் பெரும் கலி மகிழ்வே
25 | துய்ப்பதற்கு இனியது,
உன் பெரும் மகிழ்ச்சி கொண்ட அரச அமர்வு. |
| |
# 13 பாட்டு
13 | # 13 பாட்டு 13 |
தொறுத்த வயல்
ஆரல் பிறழ்நவும் | பசுக்கூட்டங்கள்
கிடைபோட்ட வயல்வெளிகளில் ஆரல்மீன்கள் துள்ளிவிளையாடவும், |
ஏறு பொருத
செறு உழாது வித்துநவும் | காளைமாடுகள்
சண்டையிட்ட சேறுபட்ட வயல்களில் உழாமலே விதைவிதைக்கவும், |
கரும்பின்
பாத்தி பூத்த நெய்தல் | கரும்புப் பாத்திகளில்
பூத்த நெய்தல் |
இரும் கண்
எருமை நிரை தடுக்குநவும் | பெரிய கண்களையுடைய
எருமைக் கூட்டங்களை வேறு இடங்களுக்குச் செல்லாதபடி தடுக்கவும், |
கலி கெழு
துணங்கை ஆடிய மருங்கின் 5 | ஒலி மிகுந்த துணங்கைக்
கூத்து ஆடிய இடங்களில் |
வளை தலை மூதா
ஆம்பல் ஆர்நவும் | வளைந்த தலையையுடைய
முதிய பசுக்கள் ஆம்பலை உண்ணவும், |
ஒலி தெங்கின்
இமிழ் மருதின் | செழித்து வளர்ந்த
தென்னைமரங்களும், பறவைகள் ஒலிக்கும் மருதமரங்களும், |
புனல் வாயில்
பூ பொய்கை | கால்வாய்களையுடைய
பூம்பொய்கைகளும் உள்ள |
பாடல் சான்ற
பயம் கெழு வைப்பின் | புலவர் பாடும் சிறப்பு
மிக்க பயன்களைத் தரும் ஊர்களையுடைய |
நாடு கவின்
அழிய நாமம் தோற்றி 10 | நாடுகள் தம் அழகு
சிதைந்துபோக, அச்சத்தை உண்டாக்கி, |
கூற்று அடூஉ
நின்ற யாக்கை போல | கூற்றுவனால்
கொள்ளப்பட்டு நிற்கும் உடம்பினைப் போல, |
நீ சிவந்து
இறுத்த நீர் அழி பாக்கம் | நீ வெகுண்டு
முற்றுகையிட்டுத் தங்கிய, தம் சிறப்பு அழிக்கபெற்ற பேரூர்கள் – |
விரி பூ
கரும்பின் கழனி புல்லென | விரிந்த பூக்களைக்
கொண்ட கரும்பு வயல்கள் புல்லென்று தோன்ற, |
திரி காய்
விடத்தரொடு கார் உடை போகி | முறுக்கிய
காய்களையுடைய விடத்தேரை மரங்களுடன், கரிய உடை மரங்கள் நெடிது வளர்ந்து |
கவை தலை
பேய்_மகள் கழுது ஊர்ந்து இயங்க 15 | இரண்டாகப் பிரிந்த
தலைமயிருடன் பேய்மகள் கழுது என்னும் பேய் மீது ஏறி சுற்றித்திரிய, |
ஊரிய நெருஞ்சி
நீறு ஆடு பறந்தலை | பரவிக்கிடக்கும்
நெருஞ்சி மிகுந்து, புழுதி படியும் பாழிடங்களான |
தாது எரு
மறுத்த கலி அழி மன்றத்து | சாணப்பூச்சு அற்ற,
ஆரவாரம் அழிந்துபோன ஊர்ப்பொதுவிடங்கள், |
உள்ளம் அழிய
ஊக்குநர் மிடல் தபுத்து | நெஞ்சம் நிலைகுலைய,
துணிந்து செல்வோரின் மனவலிமையைக் கெடுத்து, |
உள்ளுநர்
பனிக்கும் பாழ் ஆயினவே | நினைத்துப்பார்ப்போர்
நெஞ்சம் நடுங்கும் பாழிடங்கள் ஆயின; |
காடே கடவுள்
மேன புறவே 20 | காடுகள் கடவுள்
விரும்பும் இடம் ஆக, முல்லைநிலங்கள் |
ஒள் இழை
மகளிரொடு மள்ளர் மேன | ஒளிரும் அணிகலன்கள்
அணிந்த மகளிரோடு மள்ளர்கள் விரும்பித்தங்கும் இடம் ஆக, |
ஆறே அ அனைத்து
அன்றியும் ஞாலத்து | பெருவழிகள் அவற்றைப்
போலவே இனியவை ஆக, மேலும் நிலத்து விளையும் |
கூலம் பகர்நர்
குடி புறந்தராஅ | தானியங்களை விற்போரின்
குடும்பங்களைக் காத்து, |
குடி
புறந்தருநர் பாரம் ஓம்பி | குடிமக்களைக் காக்கும்
காணியாளர்களின் பொறுப்புகளையும் பேணிக்காத்து, |
அழல் சென்ற
மருங்கின் வெள்ளி ஓடாது 25 | செவ்வாய் சென்ற
இடத்தில் வெள்ளி செல்லாமையால் |
மழை வேண்டு
புலத்து மாரி நிற்ப | மழை வேண்டி நிற்கும்
இடங்களில் பெருமழை பொழிய, |
நோயொடு பசி
இகந்து ஒரீஇ | நோயுடன் பசியும்
இல்லையாக நீங்கி, |
பூத்தன்று
பெரும நீ காத்த நாடே | வளம் சிறந்து
விளங்குகிறது, பெருமானே! நீ காத்த நாடு. |
| |
# 14 பாட்டு
14 | # 14 பாட்டு 14 |
நிலம் நீர்
வளி விசும்பு என்ற நான்கின் | நிலம், நீர், காற்று,
விசும்பு ஆகிய நான்கினையும் போல |
அளப்பு
அரியையே | உன் பெருமையை அளந்து
காண்பதற்கு அரியவன் ஆவாய்; |
நாள் கோள்
திங்கள் ஞாயிறு கனை அழல் | நாள் மீன்களும், கோள்
மீன்களும், திங்களும், ஞாயிறும், மிகுந்த நெருப்பும் |
ஐந்து ஒருங்கு
புணர்ந்த விளக்கத்து அனையை | ஆகிய ஐந்தும்
ஒன்றுசேர்ந்தால் பிறக்கும் பேரொளியைப் போன்றவன் ஆவாய்; |
போர்
தலைமிகுத்த ஈர்_ஐம்பதின்மரொடு
5 | போர் செய்வதில்
மிகுந்த மேன்மை பெற்ற நூறு பேர்களுடன், |
துப்பு
துறைபோகிய துணிவு உடை ஆண்மை | வலிமைபெற்றுத்
திகழ்வதில் மிகத் தேர்ந்த அஞ்சாமை பொருந்திய ஆண்மையினையுடைய |
அக்குரன் அனைய
கைவண்மையையே | அக்குரன் என்பவனைப்
போன்ற வள்ளல் தன்மை உடையவன் ஆவாய்; |
அமர் கடந்து
மலைந்த தும்பை பகைவர் | போர்க்களங்களில்
எதிர்சென்று போரிடும் தும்பைப் பூ சூடிய பகைவரின் |
போர் பீடு
அழித்த செரு புகல் முன்ப | போர்த்திறனின்
பெருமிதத்தை அழித்த போர்மீது விருப்பம் கொண்ட வலியவனே! |
கூற்று
வெகுண்டு வரினும் மாற்றும் ஆற்றலையே
10 | கூற்றுவனே வெகுண்டு
வந்தாலும் அழித்துவிடும் ஆற்றலையுடையவனே! |
எழு முடி
கெழீஇய திரு ஞெமர் அகலத்து | எழுவரது மணிமுடியினால்
செய்துகொண்ட ஆரத்தை அணிந்த வெற்றித்திருமகள் நிறைந்த மார்பினையும் |
நோன் புரி தட
கை சான்றோர் மெய்ம்மறை | வலிமை பொருந்திய பெரிய
கையினையுமுடைய படைவீரருக்கு மெய்க்கவசம் போன்றவனே! |
வான் உறை
மகளிர் நலன் இகல் கொள்ளும் | வானுலகில் வாழும்
மகளிரின் மெய்ந்நலத்தோடு போட்டிபோடக்கூடிய – |
வயங்கு இழை
கரந்த வண்டு படு கதுப்பின் | ஒளிரும் அணிகலன்களால்
மறைப்புண்ட வண்டுகள் மொய்க்கும் பின் கூந்தலும், |
ஒடுங்கு ஈர்
ஓதி கொடும்_குழை கணவ 15 | ஒடுங்கிய நெய்ப்புற்ற
முடிந்த கூந்தலும், வளைந்த காதணிகளையும் உடைய – தேவிக்குக் கணவனே! |
பல களிற்று
தொழுதியொடு வெல் கொடி நுடங்கும் | பல யானைகளின்
கூட்டத்தோடு, வெற்றிக்கொடி வளைந்து அசையும் |
படை ஏர் உழவ
பாடினி வேந்தே | படையினையே ஏராகக்
கொண்ட உழவனே! பாண்மகள்களுக்குப் பரிசுகள் தரும் வேந்தனே! |
இலங்கு மணி
மிடைந்த பொலம் கல திகிரி | ஒளிர்கின்ற மணிகள்
செறிந்த பொன்னால் செய்யப்பட்ட ஆணைச் சக்கரத்தைக் கொண்டு |
கடல்_அக
வரைப்பின் இ பொழில் முழுது ஆண்ட நின் | கடல் சூழ்ந்த இந்த
நிலவுலகின் இந்தத் தமிழகம் முழுவதையும் ஆண்ட உன் |
முன் திணை
முதல்வர் போல நின்று நீ
20 | சேரர் குலத்து
முன்னோர்களைப் போல, நிலையான புகழுடன், நீ |
கெடாஅ நல் இசை
நிலைஇ | கெடாத நல்ல புகழை
நிலைபெறச் செய்து |
தவாஅலியரோ இ
உலகமோடு உடனே | தாழ்வின்றி வாழ்க!
இந்த உலகத்தில். |
| |
# 15 பாட்டு
15 | # 15 பாட்டு 15 |
யாண்டு
தலைப்பெயர வேண்டு புலத்து இறுத்து | ஆண்டுகள் கழிந்துபோக,
நீ வேண்டிய நாட்டில் தங்கி, |
முனை எரி
பரப்பிய துன் அரும் சீற்றமொடு | போர்முனைகளில்
நெருப்பு பரவும்படி கொளுத்தி அழித்து, நெருங்கமுடியாத சீற்றத்துடன் |
மழை தவழ்பு
தலைஇய மதில் மரம் முருக்கி | மேகங்கள் தவழ்ந்து
ஒன்றுகூடிய மதிலையும், காவல்மரத்தையும் சிதைத்து, |
நிரை களிறு
ஒழுகிய நிரைய வெள்ளம் | வரிசையாகக் களிறுகள்
ஒழுங்குபடச் செல்லும், பகைநாட்டை வென்று கொள்ளும் படைவெள்ளம் |
பரந்து ஆடு
கழங்கு அழி மன் மருங்கு அறுப்ப 5 | நாலாபக்கங்களிலும்
பரவி, கழங்குகளைப் போட்டுக் குறிபார்த்து மனம் அழியும் மன்னர்களின் சுற்றத்தை
அழிக்கும், |
கொடி விடு
குரூஉ புகை பிசிர கால் பொர | கொடிவிட்டெழும்
நிறங்கொண்ட புகை பிசிராக உடைந்துபோகும்படி காற்று மோத |
அழல் கவர்
மருங்கின் உரு அற கெடுத்து | நெருப்பு எரித்தழித்த
இடங்களைப் போல, அனைத்தையும் உருக்குலைய அழித்து, |
தொல் கவின்
அழிந்த கண் அகன் வைப்பின் | தம்முடைய பழைய அழகிய
நிலை அழிந்துபோன இடம் அகன்ற ஊர்களையும், |
வெண் பூ
வேளையொடு பைம் சுரை கலித்து | வெண்மையான
பூக்களைக்கொண்ட வேளைக்கொடியுடன், பசுமையான சுரைக்கொடிகள் தழைத்துப் படர, |
பீர் இவர்பு
பரந்த நீர் அறு நிறை முதல் 10 | பீர்க்கங்கொடிகள்
மேலேறிப் படர்ந்த நீரற்ற உழவடை சால்களில், |
சிவந்த
காந்தள் முதல் சிதை மூதில் | சிவந்த காந்தள்
வேருடன் காய்ந்துபோய் இருக்கும் பாழடைந்த வீடுகளையுடைய |
புலவு வில்
உழவின் புல்லாள் வழங்கும் | புலால் நாறும் வில்லை
வாழ்க்கையாகக் கொண்ட புல்லிய மறவர்கள் நடமாடும் |
புல் இலை
வைப்பின் புலம் சிதை அரம்பின் | புல்லிய பனையோலை
வேய்ந்த ஊர்களையுடைய பகைநிலங்களை அழிக்கும் மறமாண்பினைத் |
அறியாமையான்
மறந்து துப்பு எதிர்ந்த நின் | தமது அறியாமையால்
மறந்து உன் பகைமையினை எதிர்கொண்ட உன் |
பகைவர் நாடும்
கண்டு வந்திசினே 15 | பகைவரின் நாடுகளையும்
பார்த்துவிட்டு இங்கே வந்திருக்கிறேன் – |
கடலவும்
கல்லவும் யாற்றவும் பிறவும் | கடலில் விளைவனவும்,
மலையில் கிடைப்பனவும், ஆற்றால் பெறுவனவும், பிறவும் ஆன |
வளம் பல
நிகழ்தரு நனம் தலை நன் நாட்டு | வளம் பலவும் திகழும்
அகன்ற இடத்தையுடைய நல்ல நாட்டிலுள்ள |
விழவு அறுபு
அறியா முழவு இமிழ் மூதூர் | விழாக்கள் இல்லாமல்
இருப்பதை அறியாத, முழவுகள் முழங்கும் மூதூர்களில் |
கொடி நிழல்
பட்ட பொன் உடை நியமத்து | கொடிகளின் நிழலில்
இருக்கும் பொன்னை மிகவும் உடைய கடைத்தெருக்களில் |
சீர் பெறு கலி
மகிழ் இயம்பும் முரசின் 20 | சிறப்புப் பெற்ற
மிகுந்த மகிழ்ச்சியுடன் ஒலிக்கும் முரசைக் கொண்ட |
வயவர் வேந்தே
பரிசிலர் வெறுக்கை | வலிமிகுந்த வீரர்களின்
வேந்தனே! பரிசிலர்களின் ஆதாரப் பொருளே! |
தார் அணிந்து
எழிலிய தொடி சிதை மருப்பின் | மாலையணிந்து அழகுடன்
விளங்கும் பூண்கள் விட்டுப்போன கொம்புகளையுடைய |
போர் வல் யானை
சேரலாத | போரிடுவதில் வல்ல
யானைகளையுடைய சேரலாதனே! |
நீ வாழியர் இ
உலகத்தோர்க்கு என | ‘நீ வாழ்வாயாக! இந்த
உலகத்தோர் பொருட்டு’ என்று |
உண்டு உரை
மாறிய மழலை நாவின் 25 | கள்ளை உண்டதினால்
பேச்சு மாறிப்போன குழறுகின்ற நாவினில் |
மென் சொல்
கலப்பையர் திருந்து தொடை வாழ்த்த | மென் சொற்களைக் கொண்ட,
இசைக்கலன்களின் பையினையுடைய இயவர் திருத்தமான யாழை இசைத்து வாழ்த்த – |
வெய்து_உறவு
அறியாது நந்திய வாழ்க்கை | மனத்துயரம் கொள்ளுதலை
அறியாத, வளம் பெருகிய வாழ்க்கையினையுடைய, |
செய்த மேவல்
அமர்ந்த சுற்றமோடு | சான்றோர் செய்த
நல்லறங்களைத் தாமும் விரும்பிச் செய்து சூழ இருக்கும் சுற்றத்தாருடன், |
ஒன்றுமொழிந்து
அடங்கிய கொள்கை என்றும் | உண்மையே உரைத்துப்
புலனடங்கிய ஒழுக்கத்தோடு, எப்பொழுதும் |
பதி பிழைப்பு
அறியாது துய்த்தல் எய்தி 30 | வாழுமிடங்களை இழப்பதை
அறியாது, இனியவற்றை நுகர்வதை அடைந்து, |
நிரையம் ஒரீஇய
வேட்கை புரையோர் | நரகத்தை வெறுத்த
அறவேட்கையுடைய சான்றோர் |
மேயினர்
உறையும் பலர் புகழ் பண்பின் | விரும்பி வாழ்கின்ற –
பலரும் புகழ்கின்ற பண்பினையுடைய – |
நீ
புறந்தருதலின் நோய் இகந்து ஒரீஇய | நீ காத்துவருவதால்
நோயை முற்றிலும் நீங்கப்பெற்ற – |
யாணர் நன்
நாடும் கண்டு மதி மருண்டனென் | புதுவருவாயை உடைய –
நல்ல நாட்டினையும் கண்டு மதி மருண்டேன் – |
மண் உடை
ஞாலத்து மன் உயிர்க்கு எஞ்சாது
35 | மண் செறிந்த இந்த
உலகில் வாழும் நிலைபெற்ற உயிர்களுக்கெல்லாம் குறைவின்றிக் |
ஈத்து கை
தண்டா கை கடும் துப்பின் | கொடுத்துக் கை ஓயாத
ஈகையினையும், மிகுந்த வலிமையினையும் கொண்ட – |
புரை_வயின்
புரை_வயின் பெரிய நல்கி | உயர்ந்தோர்க்கெல்லாம்
நிறையக் கொடுத்த – |
ஏமம் ஆகிய
சீர் கெழு விழவின் | இன்பம் தரும் சிறப்பு
மிக்க விழாவினையுடைய |
நெடியோன் அன்ன
நல் இசை | திருமாலைப் போன்ற நல்ல
புகழ் |
ஒடியா மைந்த
நின் பண்பு பல நயந்தே 40 | குன்றாத – மைந்தனே!
உன் பண்புகள் பலவற்றை விரும்பி – |
| |
# 16 பாட்டு
16 | # 16 பாட்டு 16 |
கோடு உறழ்ந்து
எடுத்த கொடும் கண் இஞ்சி | மலைச் சிகரங்களோடு
மாறுபடுவது போன்று கட்டிய, வளைந்த பார்க்குமிடங்களையுடைய வெளிமதிலை அடுத்துள்ள, |
நாடு கண்டு
அன்ன கணை துஞ்சு விலங்கல் | ஒரு நாட்டைக் கண்டது
போன்ற அகன்ற இடைவெளியைக் கொண்ட அம்புக்கட்டுகள் இருக்கும் நடுமதிலையும் அடுத்து, |
துஞ்சு_மர
குழாஅம் துவன்றி புனிற்று_மகள் | குறுக்காகக் கிடக்கும்
கணையமரங்கள் பல செறிவாக அமைந்து, அண்மையில் பிள்ளைபெற்ற இளம்பெண் |
பூணா_ஐயவி
தூக்கிய மதில | பூசிக்கொள்ளும் ஐயவி
அல்லாத ஐயவித்துலாம் என்னும் மரம் தொங்கவிடப்பட்டிருக்கும் உள் மதிலில் உள்ள |
நல் எழில்
நெடும் புதவு முருக்கி கொல்லுபு
5 | நல்ல அழகிய நெடிய
கதவுகளைத் தாக்கிச் சிதைத்ததால் |
ஏனம் ஆகிய
நுனை முரி மருப்பின் | பன்றியைப் போலாகிய
நுனி முறிந்துபோன கொம்புகளையுடைய, |
கடாஅம்
வார்ந்து கடும் சினம் பொத்தி | மதநீர் சொரிந்து,
மிக்க சினம் கொண்டு |
மரம் கொல் மழ
களிறு முழங்கும் பாசறை | கணைய மரங்களை
ஒடித்துப்போடும் இளம் களிறுகள் முழங்கும் பாசறையில் |
நீடினை ஆகலின்
காண்கு வந்திசினே | நீண்டநாள்
தங்கிவிட்டாயாதலால் கண்பதற்காக வந்தேன் – |
ஆறிய கற்பின்
அடங்கிய சாயல் 10 | அமைதிகொண்ட கற்பும்,
அடக்கமான பெண்மைநலமும், |
ஊடினும் இனிய
கூறும் இன் நகை | ஊடிய காலத்திலும்
இன்சொற்களைக் கூறும் இனிதான முறுவலும், |
அமிர்து பொதி
துவர் வாய் அமர்த்த நோக்கின் | அமுதத்தையே
உள்ளேகொண்டிருக்கிற சிவந்த வாயும், அமைதியான கண்களும், |
சுடர் நுதல்
அசை நடை உள்ளலும் உரியள் | ஒளிவிடும் நெற்றியும்,
அசைந்த நடையும் உள்ள உன் மனைவி உன்னை நினைத்து வருந்துகிறாள்; |
பாயல் உய்யுமோ
தோன்றல் தா இன்று | படுக்கையில் கிடந்து
வருந்தும் வருத்தத்திலிருந்து உய்வாளோ? தோன்றலே! குற்றமற்ற |
திரு மணி
பொருத திகழ் விடு பசும்_பொன்
15 | அழகிய மணிகள்
நெருக்கமாய் அமைந்த, ஒளி விடும் பசும்பொன்னாலான, |
வயங்கு கதிர்
வயிரமோடு உறழ்ந்து பூண் சுடர்வர | பிரகாசிக்கும்
கதிர்களையுடைய வயிரத்தோடு சேர்ந்த பூண் ஆரமானது சுடர்விடுகின்ற – |
எழு முடி
கெழீஇய திரு ஞெமர் அகலத்து | எழுவரது மணிமுடியினால்
செய்துகொண்ட ஆரத்தை அணிந்த – வெற்றித்திருமகள் நிறைந்த – உன் மார்பினை, |
புரையோர்
உண்கண் துயில் இன் பாயல் | உன் காதல் மகளிரின்
மையுண்ட கண்கள் உறங்குவதற்கு இனிய படுக்கையாக ஆக, |
பாலும்
கொளாலும் வல்லோய் நின் | போர்மேற் செல்லும்போது
நீங்குவதும், இல்லத்திலிருக்கும்போது கொள்ளுவதும் ஆகிய இரண்டுக்கும் வல்லவனே!
உன் |
சாயல் மார்பு
நனி அலைத்தன்றே 20 | மென்மையான மார்பு அவளை
மிகவும் வருத்துகின்றது. |
| |
# 17 பாட்டு
17 | # 17 பாட்டு 17 |
புரைவது
நினைப்பின் புரைவதோ இன்றே | – உனக்கு ஒப்பானது
ஏதேனும் உள்ளதோ என்று எண்ணிப்பார்த்தால், சிறப்பானது ஒன்றும் இல்லை; |
பெரிய
தப்புநர் ஆயினும் பகைவர் | பொறுக்கமுடியாத பெரிய
பிழை செய்தாரெனினும், பகைவர்கள் |
பணிந்து திறை
பகர கொள்ளுநை ஆதலின் | பணிந்து திறை செலுத்த
அதனை ஏற்றுக்கொள்கிறாய் என்பதனால் – |
துளங்கு
பிசிர் உடைய மா கடல் நீக்கி | அசைகின்ற அலைகள்
துளித்துளியாய்ச் சிதறும்படி, கரிய கடலைக் கடந்து சென்று, |
கடம்பு
அறுத்து இயற்றிய வலம்படு வியன் பணை
5 | கடம்பமரத்தை வெட்டி
உண்டாக்கிய வெற்றியைத்தரும் பெரிய முரசுக்கு, |
ஆடுநர்
பெயர்ந்து வந்து அரும் பலி தூஉய் | வீரர்கள் திரும்ப
வந்து அரிய பலியினைப் படைத்து, |
கடிப்பு கண்
உறூஉம் தொடி தோள் இயவர் | குறுந்தடியால் முரசின்
கண்ணில் அறைந்து முழக்கும் தொடி அணிந்த தோள்களையுடைய இயவர்கள், |
அரணம் காணாது
மாதிரம் துழைஇய | ‘ஒரு பாதுகாப்பான
இடத்தையும் காணாமல் திக்கெல்லாம் தேடிச்செல்லும், |
நனம் தலை
பைஞ்ஞிலம் வருக இ நிழல் என | விரிந்த இடத்தையுடைய
பசுமையான நிலத்துள்ளோரே, வருக இக் குடைநிழலின் கீழ்’ என்று, |
ஞாயிறு புகன்ற
தீது தீர் சிறப்பின்
10 | ஞாயிறு விரும்பிச்
செல்லும் குற்றமற்ற சிறப்பையுடைய, |
அமிழ்து திகழ்
கருவிய கண மழை தலைஇ | நீர் நிறைந்து, இடி
மின்னலைக் கொண்ட கூட்டமான மேகங்கள் ஒன்றுகூடும், |
கடும் கால்
கொட்கும் நன் பெரும் பரப்பின் | கடுமையான காற்று
சுழன்றடிக்கும் நல்ல பெரிய பரப்பினையுடைய |
விசும்பு தோய்
வெண்குடை நுவலும் | விசும்பினைச்
சென்றடையும் வெண்கொற்றக்குடையின் புகழினைக் கூறும் |
பசும் பூண்
மார்ப பாடினி வேந்தே | பசிய பூணினை அணிந்த
மார்பினனே! பாடினிகளுக்குப் பரிசளிக்கும் வேந்தனே! – |
| |
# 18 பாட்டு
18 | # 18 பாட்டு 18 |
உண்-மின்
கள்ளே அடு-மின் சோறே | உண்பீராக கள்ளை!
சமைப்பீராக சோற்றை! |
எறிக திற்றி
ஏற்று-மின் புழுக்கே | அறுப்பீராக,
தின்பதற்கான ஊன்கறியை! உலையில் ஏற்றுவீர்களாக வேகவைக்கவேண்டியவற்றை! |
வருநர்க்கு
வரையாது பொலன் கலம் தெளிர்ப்ப | இல்லையென்று
வருவோர்க்குக் குறைவுபடாமல் – பொன்னாலான அணிகலன்கள் ஒலியெழுப்ப, |
இருள் வணர்
ஒலிவரும் புரி அவிழ் ஐம்பால் | இருண்டு வளைந்த,
செழித்த, முறுக்கு அவிழ்ந்த, ஐவகையாய் முடிக்கப்பட்ட பின்னலையுடைய, |
ஏந்து கோட்டு
அல்குல் முகிழ் நகை மடவரல் 5 | ஏந்திய கொம்பினைப்
போன்ற அல்குலையுடைய, முகிழ்த்த நகையினையுடைய, இளமைப் பண்புடைய, |
கூந்தல்
விறலியர் வழங்குக அடுப்பே | கூந்தலழகு மிக்க
விறலியரே! – மூட்டுங்கள் அடுப்புகளை – |
பெற்றது
உதவு-மின் தப்பு இன்று பின்னும் | நீங்கள்
பெற்றுக்கொண்டவைகளைச் சிறிது கொடுத்துதவுங்கள்! மேலும் அது தவறாகாது! |
மன் உயிர்
அழிய யாண்டு பல துளக்கி | உலகத்து உயிர்கள்
அழிய, பல ஆண்டுகள் வருத்தி, |
மண் உடை ஞாலம்
புரவு எதிர்கொண்ட | மண் திணிந்த
நிலவுலகத்தைக் காப்பதை மேற்கொண்ட |
தண் இயல்
எழிலி தலையாது மாறி 10 | குளிர்ந்த
இயல்பினையுடைய மேகங்கள் மழைபெய்யாமல் மாறிப்போய், |
மாரி
பொய்க்குவது ஆயினும் | மாரிக்காலத்தில்
பொய்த்துவிட்டாலும் |
சேரலாதன்
பொய்யலன் நசையே | சேரலாதன்
பொய்க்கமாட்டான் உமது விருப்பத்தை – |
| |
# 19 பாட்டு
19 | # 19 பாட்டு 19 |
கொள்ளை வல்சி
கவர் கால் கூளியர் | பகைவர் நிலத்தில்
கொள்ளையிட்டதையே உணவாகக் கொண்ட, முன்னேறிச் செல்லும் கால்களையுடைய ஏவலர்கள் |
கல் உடை நெடு
நெறி போழ்ந்து சுரன் அறுப்ப | கற்களையுடைய நெடிய
வழிகளை வெட்டி, பாலைவெளியில் வழிகளை உருவாக்க, |
ஒண் பொறி கழல்
கால் மாறா வயவர் | ஒளிரும்
புள்ளிகளையுடைய கழல் அணிந்த கால் முன்வைத்ததைப் பின்னால் எடுக்காத வீரர்கள் |
திண் பிணி
எஃகம் புலியுறை கழிப்ப | திண்ணிதாகப்
பிணிக்கப்பட்ட வாளினை அதன் புலித்தோல் உறையிலிருந்து உருவியவாறு |
செம் கள
விருப்பொடு கூலம் முற்றிய
5 | சிவந்த போர்க்களத்தில்
புகும் விருப்பத்தோடு, கூலங்களாக நிரப்பிய |
உருவ செந்தினை
குருதியொடு தூஉய் | நிறங்கொண்ட
செந்தினையைக் குருதியோடு கலந்து தூவிப் பலியிட்டு, |
மண்_உறு
முரசம் கண் பெயர்த்து இயவர் | கழுவிப் பூசிக்கப்பட்ட
முரசத்தின் மேற்பகுதியில் குருதியினைப் பூசி, முரசு முழக்குவோர் |
கடிப்பு உடை
வலத்தர் தொடி தோள் ஓச்ச | குறுந்தடியை வலது
கையில் கொண்டவராய், தொடி அணிந்த தோளினை ஓங்கிஉயர்த்தி முழக்க, |
வம்பு களைவு
அறியா சுற்றமோடு அம்பு தெரிந்து | காப்புக்கயிறுகளை
களைதலை அறியாத வீரரோடு, அம்புகளைத் தெரிவுசெய்து |
அ வினை மேவலை
ஆகலின் 10 | முடிந்துபோன அந்தப்
போரினையே மேலும் விரும்புகிறாயாதலால், |
எல்லு நனி
இருந்து எல்லி பெற்ற | பகலில் பெரிதும்
பொறுத்திருந்து, இரவில் கிடக்கும் |
அரிது பெறு
பாயல் சிறு மகிழானும் | அரிதாகப் பெறுகின்ற
உறக்கத்தில் சிறிய மகிழ்ச்சியேனும் பெற்று |
கனவினுள்
உறையும் பெரும் சால்பு ஒடுங்கிய | கனவினிலேயே வாழும்,
பெரும் நற்பண்புகளும், மேனியின் மெலிவால் ஏற்பட்ட |
நாணு மலி
யாக்கை வாள் நுதல் அரிவைக்கு | நாணம் மிகுந்த
உடம்பும், ஒளி திகழும் நெற்றியும் கொண்ட உன் மனைவிக்கு |
யார்-கொல்
அளியை 15 | நீ யாராயினாய்?
இரங்கத்தக்கவனே! |
இனம் தோடு அகல
ஊர் உடன் எழுந்து | பசுக்கூட்டங்கள்
கூட்டம் கூட்டமாகச் சிதறியோட, ஊர்மக்கள் ஒன்றுசேர ஓடிப்போக, |
நிலம் கண் வாட
நாஞ்சில் கடிந்து நீ | விளைநில இடங்களெல்லாம்
களையிழக்க, உழவுத்தொழிலினை அழித்து, நீ |
வாழ்தல் ஈயா
வளன் அறு பைதிரம் | வாழ்வு தராததால் வளம்
அற்றுப்போன பகைவர் நாடுகள் |
அன்ன ஆயின
பழனம்-தோறும் | அப்படிப்பட இயல்பினை
அடைந்தன – நீர்நிலைகளிலெல்லாம் |
அழல் மலி
தாமரை ஆம்பலொடு மலர்ந்து
20 | நெருப்புப் போன்ற
தாமரை ஆம்பலுடன் மலர்ந்து, |
நெல்லின்
செறுவில் நெய்தல் பூப்ப | நெல்விளையும் இனிய
வயல்களில் நெய்தல் பூத்திருக்க, |
அரிநர்
கொய்வாள் மடங்க அறைநர் | விளைந்த நெல்லை
அறுப்போரின் அரிவாள் மழுங்கிப்போக, கரும்பு ஆட்டுவோரின் |
தீம் பிழி
எந்திரம் பத்தல் வருந்த | சாறு பிழியும்
எந்திரத்தின் கொப்பரை வருந்த, |
இன்றோ அன்றோ
தொன்று ஓர் காலை | இன்றல்ல, நேற்றல்ல,
தொன்றுதொட்டு |
நல்ல-மன்
அளியதாம் என சொல்லி 25 | இந்த நாடுகள்
நல்லனவாய் இருந்தன, இப்போது இரங்கத்தக்கன என்று சொல்லி |
காணுநர் கை
புடைத்து இரங்க | காண்போர் கைகளைத்
தட்டிக்கொண்டு வருந்திநிற்க, |
மாணா மாட்சிய
மாண்டன பலவே | கெட்டழிந்த
தன்மையினைக் கொண்டன, பலவகையாலும் சிறப்புப் பெற்ற இந்த நாடுகள் – |
| |
# 20 பாட்டு
20 | # 20 பாட்டு 20 |
நும் கோ யார்
என வினவின் எம் கோ | உம்முடைய அரசன் யார்
என்று கேட்பீராயின், எமது அரசன் |
இரு முந்நீர்
துருத்தியுள் | கரிய கடலிலுள்ள
தீவினுள் வாழ்ந்த, |
முரணியோர்
தலைச்சென்று | அவனுடன் முரண்பட்டோரை
எதிர்த்துச் சென்று, |
கடம்பு முதல்
தடிந்த கடும் சின முன்பின் | அவரின் காவல் மரமான
கடம்பினை அடியோடு வெட்டிச் சாய்த்த மிக்க சினமும், வலிமையும் கொண்ட |
நெடுஞ்சேரலாதன்
வாழ்க அவன் கண்ணி 5 | நெடுஞ்சேரலாதன் ஆவான்;
வாழ்க அவன் சூடியிருக்கும் தலைமாலை; |
வாய்ப்பு
அறியலனே வெயில் துகள் அனைத்தும் | – வாய்ப்பதை அறியான் –
வெயிலில் காணப்படும் சிறிய தூசியளவுகூட – |
மாற்றோர்
தேஎத்து மாறிய வினையே | பகைவரின் நாட்டில்
பின்வாங்கும் முயற்சி – |
கண்ணின்
உவந்து நெஞ்சு அவிழ்பு அறியா | கண்ணுக்கு முன்னால்
மகிழ்ச்சியைக் காட்டி, தம் மனம் திறந்து அன்புசெலுத்தாத |
நண்ணார்
தேஎத்தும் பொய்ப்பு அறியலனே | உட்பகைகொண்டாரின்
நாட்டினிலும் பொய்கூறுவதை அறியான், |
கனவினும்
ஒன்னார் தேய ஓங்கி நடந்து
10 | கனவில்கூட – பகைவர்
வலிகுன்றிப்போக வெற்றிப்பெருமிதத்தோடு தலைநிமிர்ந்து நடந்து |
படியோர்
தேய்த்து வடி மணி இரட்டும் | தன்னைப் பணியாதோரை
அழித்து, வடிவமைப்பான மணிகள் மாறிமாறி ஒலிக்கும் |
கடாஅ யானை கண
நிரை அலற | மதம்பிடித்த யானைகளின்
கூட்டமான வரிசைகள் அலறிக்கொண்டு ஓட |
வியல் இரும்
பரப்பின் மா நிலம் கடந்து | அகன்ற பெரிய
பரப்பினையுடைய பெரிய நிலத்தை வென்று, |
புலவர் ஏத்த
ஓங்கு புகழ் நிறீஇ | புலவர்கள்
புகழ்ந்துபாட, ஓங்கிய புகழை நிலைநாட்டி, |
விரி உளை
மாவும் களிறும் தேரும் 15 | விரிந்த தலையாட்டம்
அணிந்த குதிரைகளையும், களிறுகளையும், தேர்களையும் |
வயிரியர்
கண்ணுளர்க்கு ஓம்பாது வீசி | கொம்பூதுவோர்,
கழைக்கூத்தாடிகள் ஆகிய கூத்தர்களுக்கு, தனக்காக எதுவும் வைத்துக்கொள்ளாமல், வாரி
வழங்கி |
கடி மிளை
குண்டு கிடங்கின் | பபதுகாப்பு மிக்க
காவல்காடுகளையும், ஆழமான அகழிகளையும் |
நெடு மதில்
நிலை ஞாயில் | நெடிய மதில்களையும்,
நிலைபெற்ற கோட்டை வாயிலையும், |
அம்பு உடை ஆர்
எயில் உள் அழித்து உண்ட | அம்புகளையுடைய
கடத்தற்கரிய அகமதிலையுமுடைய உள்புறத்தை அழித்து, இவற்றை விழுங்கிய |
அடாஅ அடு பகை
அட்டு மலர் மார்பன் 20 | சமையலினால் எழாமல்
ஊரினைச் சுட்டதால் உண்டான இந்தப் புகை படிந்த மலர்ந்த மார்பினன்; |
எமர்க்கும்
பிறர்க்கும் யாவர் ஆயினும் | எம்மைச் சேர்ந்த
பாணருக்கும், பிற பொருநருக்கும், வேறு இரவலர் போன்றோர் எவராயினும், |
பரிசில்_மாக்கள்
வல்லார் ஆயினும் | பரிசில் பெறுவதற்குரிய
திறன் இல்லாதவராயினும், |
கொடை கடன்
அமர்ந்த கோடா நெஞ்சினன் | கொடுப்பதையே கடமையாக
விரும்பிக் கொண்ட கோணலற்ற நெஞ்சினன்; |
மன் உயிர்
அழிய யாண்டு பல மாறி | உலகத்து உயிர்கள்
அழியுமாறு, ஆண்டுகள் பலவாக மாறுபட்டு, |
தண் இயல்
எழிலி தலையாது ஆயினும் 25 | குளிர்ச்சியான
இயல்பினையுடைய மேகங்கள் மழையினைப் பெய்யாமற்போனாலும் |
வயிறு பசி கூர
ஈயலன் | வயிற்றுப்பசி
மிகுகின்ற வகையில் ஈயாமல் இருக்கமாட்டான்; |
வயிறு மாசு
இலீயர் அவன் ஈன்ற தாயே | வயிறு குற்றமின்றி
இருக்கட்டும் அவனை ஈன்ற தாய். |
| |
| |
மூன்றாம்
பத்து | மூன்றாம் பத்து |
பாலைக்கௌதமனார் | பாலைக்கௌதமனார் |
| |
# 21 பாட்டு
21 | # 21 பாட்டு 21 |
சொல் பெயர்
நாட்டம் கேள்வி நெஞ்சம் என்று | சொல்லிலக்கணம்,
பொருளிலக்கணம், சோதிடம், வேதம், ஆகமம் ஆகிய |
ஐந்து உடன்
போற்றி அவை துணை ஆக | ஐந்தினையும் சேர்ந்து
கற்று, அவையே துணையாக, |
எவ்வம் சூழாது
விளங்கிய கொள்கை | எவ்வுயிருக்கும்
துன்பம் சூழாமல் விளங்கும் கொள்கையுடன், |
காலை அன்ன
சீர் சால் வாய்மொழி | ஞாயிற்றைப் போன்ற
சிறப்புப் பொருந்திய, வாய்மை உரையால், |
உரு கெழு
மரபின் கடவுள் பேணியர் | அச்சம் பொருந்திய
முறைமையினையுடைய கடவுளைப் போற்றுவதற்காக |
கொண்ட தீயின்
சுடர் எழு-தோறும் | மேற்கொண்ட
வேள்வித்தீயின் சுடர் மேலெழும்போதெல்லாம், |
விரும்பு மெய்
பரந்த பெரும் பெயர் ஆவுதி | உள்ளத்து விருப்பம்
உடலிலும் பரவும் பெரும் புகழ் கொண்ட ஆவுதிப்புகையும்; |
வருநர்
வரையார் வார வேண்டி | பரிசில் பெற
வருபவர்கள் அளவில்லாமல் தாமே வாரி எடுத்துக்கொள்ளவேண்டியும், |
விருந்து
கண்மாறாது உணீஇய பாசவர் | விருந்தினர் வேறு
இடங்களுக்கு மாறிப்போகாமல் உண்ணவேண்டியும், இறைச்சி விற்போர் |
ஊனத்து அழித்த
வால் நிண கொழும் குறை | இறைச்சி கொத்தும்
பட்டைமரத்தில் வைத்துக் கொத்திய வெள்ளை நிற நிணத்தோடு சேர்ந்த கொழுத்த இறைச்சியை |
குய்
இடு-தோறும் ஆனாது ஆர்ப்ப | தாளிக்கும்போதெல்லாம்
இடைவிடாமல் ஒலிக்க – |
கடல் ஒலி
கொண்டு செழு நகர் வரைப்பின் | கடல் ஒலியைப் போல,
செழுமையான இல்லங்களின் மதில்களின் |
நடுவண் எழுந்த
அடு நெய் ஆவுதி | நடுவில் எழுந்த
சமைக்கும் நெய்யால் எழுந்த ஆவுதிப்புகையும்; |
இரண்டு உடன்
கமழும் நாற்றமொடு வானத்து | இரண்டும் சேர்ந்து
கமழும் மணத்தோடு, வானுலகத்தில் |
நிலை பெறு
கடவுளும் விழை_தக பேணி | நிலைபெற்ற கடவுளும்
விரும்புமாறு வழிபட்டு, |
ஆர் வளம்
பழுனிய ஐயம் தீர் சிறப்பின் | குறையாத வளம் நிறைந்த,
குற்றம் நீங்கிய சிறப்பினையுடைய – |
மாரி அம்
கள்ளின் போர் வல் யானை | மழையாய்ச் சொரியும்
கள்ளினையுடைய – போரில் வல்ல யானையின் மேலிருக்கும் |
போர்ப்பு_உறு
முரசம் கறங்க ஆர்ப்பு சிறந்து | தோலினால்
போர்த்தப்பட்ட போர்முரசம் முழங்க, ஆரவாரம் மிகுந்து |
நன் கலம்
தரூஉம் மண் படு மார்ப | பகைவர் திறையாகத்
தரும் பெருஞ் செல்வத்தைக் கொண்டுவருகின்ற – சாந்து அணிந்த மார்பினனே! |
முல்லை கண்ணி
பல் ஆன் கோவலர் | முல்லைப்பூவால்
கட்டப்பட்ட தலைமாலையையுடைய பல பசுக்களையுடைய கோவலர் |
புல் உடை
வியன் புலம் பல் ஆ பரப்பி | புல் நிறைய உடைய அகன்ற
வெளியில் அந்தப் பசுக்களை மேயவிட்டு, |
கல் உயர்
கடத்து இடை கதிர் மணி பெறூஉம் | கற்கள் உயர்ந்த
காட்டுவெளியில் கதிர்விடும் மணிகளைப் பொறுக்கியெடுக்கின்ற |
மிதி அல்
செருப்பின் பூழியர் கோவே | மிதிக்கும் செருப்பு
அல்லாத செருப்பு என்னும் மலையினையுடைய பூழியரின் அரசே! |
குவியல் கண்ணி
மழவர் மெய்ம்மறை | குவியலான தலைமாலைகளை
அணிந்த மழவரின் கவசம் போன்றவனே! |
பல் பயம்
தழீஇய பயம் கெழு நெடும் கோட்டு | பலவகைப் பயன்களைத்
தரும் காடுகளைக் கொண்ட, தானும் பயன்களை அளிக்கும் நெடிய உச்சியையுடைய, |
நீர் அறல்
மருங்கு வழிப்படா பாகுடி | நீர் ஒழுகும்
பக்கத்தில் செல்லாமல், நீண்ட தொலைவிலிருந்து |
பார்வல்
கொக்கின் பரிவேட்பு அஞ்சா | உன்னிப்பாகப்
பார்க்கும் கொக்கின் விரைவான கொத்தலுக்கு அஞ்சாத, |
சீர் உடை
தேஎத்த முனை கெட விலங்கிய | புகழ் படைத்த
நாட்டினிடையே பகைவர் போரிடாதவாறு குறுக்கிட்டுக்கிடக்கும் |
நேர் உயர்
நெடு வரை அயிரை பொருந | நேராக உயர்ந்த நெடிய
மலையான அயிரை என்னும் மலைக்குத் தலைவனே! |
யாண்டு
பிழைப்பு அறியாது பய மழை சுரந்து | ஆண்டுதோறும்
பொய்க்காமல் பயனைத் தரும் மழை நிறையப்பெய்து, |
நோய் இல்
மாந்தர்க்கு ஊழி ஆக | நோய் இல்லாமல்,
மக்களுக்கு, நல்ல காலமாகக் கழிய, |
மண்ணா ஆயின்
மணம் கமழ் கொண்டு | நறுநெய்
பூசப்படாவிட்டாலும் கமழ்கின்ற மணத்தைக் கொண்டு, |
கார் மலர்
கமழும் தாழ் இரும் கூந்தல் | கார்காலத்து மலரின்
மணம் கமழும் தாழ இறங்கிய கரிய கூந்தலையும், |
ஒரீஇயின போல
இரவு மலர் நின்று | குளத்திலிருந்து
நீங்கி வந்ததைப் போல, இரவிலும் மலர்ந்து நின்று, |
திரு முகத்து
அலமரும் பெரு மதர் மழை கண் | அழகிய முகத்தினில்
சுழல்கின்ற பெரிய அமைதியான குளிர்ச்சியான கண்களையும், |
அலங்கிய
காந்தள் இலங்கு நீர் அழுவத்து | அசைகின்ற காந்தள்
ஒளிவிடும் நீர்ப்பரப்பின் கரையில் நிற்கும் |
வேய் உறழ் பணை
தோள் இவளோடு | மூங்கிலைப் போன்ற
பெரிய தோள்களையும் உடைய இவளோடு |
ஆயிர வெள்ளம்
வாழிய பலவே | பல்லாயிரக்கணக்கான
ஆண்டுகள் வாழ்க! |
| |
# 22 பாட்டு
22 | # 22 பாட்டு 22 |
சினனே காமம்
கழி கண்ணோட்டம் | கோபம், காமம், மிகுந்த
உவகை, |
அச்சம் பொய்
சொல் அன்பு மிக உடைமை | அச்சம், பொய்சொல்லல்,
பொருளின் மீது மிகுந்த பற்றுக்கொள்ளல், |
தெறல்
கடுமையொடு பிறவும் இ உலகத்து | தண்டிப்பதில் கடுமை
ஆகிய இவற்றோடு இவை போன்ற பிறவும் இந்த உலகத்தில் |
அறம் தெரி
திகிரிக்கு வழியடை ஆகும் | அறவழியிலான
ஆட்சிக்குத் தடைக்கற்கள் ஆகும்; |
தீது சேண்
இகந்து நன்று மிக புரிந்து | இந்தத் தீயவைகளைத்
தொலைவிற்குத் தள்ளிவிட்டு, நன்மையானவற்றை மிகவும் செய்து, |
கடலும்
கானமும் பல பயம் உதவ | கடலும்,
முல்லைக்காடுகளும் பலவிதப் பயன்களைக் கொடுத்துதவ, |
பிறர்_பிறர்
நலியாது வேற்று பொருள் வெஃகாது | குடிமக்கள் ஒருவரையும்
வருத்தாமல், அயலார் பொருள்மீது ஆசைப்படாமல், |
மை இல்
அறிவினர் செவ்விதின் நடந்து தம் | குற்றமற்ற
அறிவினராய்ச் செம்மையான ஒழுக்கநெறியில் நடந்து, தம்மை |
அமர் துணை
பிரியாது பாத்து உண்டு மாக்கள் | விரும்பும் துணையான
மனைவியைப் பிரியாமல், இருப்பதைப் பகுத்து உண்டு, குடிமக்கள் |
மூத்த
யாக்கையொடு பிணி இன்று கழிய | முதுமையடைந்த
உடம்புடன் நோய் இல்லாமல் வாழ |
ஊழி உய்த்த
உரவோர் உம்பல் | ஆட்சி செய்யும்
முன்னோர்களின் வழித்தோன்றலே! |
பொன் செய்
கணிச்சி திண் பிணி உடைத்து | இரும்பால் செய்யப்பட்ட
குந்தாலியால், திண்மையான பிணிப்புக்கொண்ட கட்டாந்தரையைப் பிளந்து |
சிரறு சில
ஊறிய நீர் வாய் பத்தல் | அங்கொன்றும்
இங்கொன்றுமாய்ச் சிறிதளவு ஊறிய நீரைக் கொண்ட பள்ளத்தில் |
கயிறு குறு
முகவை மூயின மொய்க்கும் | கயிறுகட்டி மேலிழுத்து
நீர் முகந்த பாத்திரத்தைச் சூழ்ந்துகொண்டு மொய்த்துநிற்கும் |
ஆ கெழு
கொங்கர் நாடு அகப்படுத்த | பசுக்கள் நிறைந்த
கொங்கர் நாட்டினை வென்று சேர்த்துக்கொண்ட |
வேல் கெழு
தானை வெருவரு தோன்றல் | வேல்கள் தாங்கிய
வேற்படையைக் கொண்ட அச்சம்தரும் தோன்றலே! |
உளை பொலிந்த
மா | தலையாட்டத்தால்
பொலிவுபெற்ற குதிரைகளோடும், |
இழை பொலிந்த
களிறு | நெற்றிப்பட்டம் போன்ற
அணிகளால் பொலிவுபெற்ற களிறுகளோடும், |
வம்பு பரந்த
தேர் | புதிய தேர்ச் சீலைகள்
பரந்து விளங்கும் தேர்களோடும் |
அமர்க்கு
எதிர்ந்த புகல் மறவரொடு | போரினை எதிர்கொள்ளும்
விருப்பத்தையுடைய வீரர்களோடும், |
துஞ்சு_மரம்
துவன்றிய மலர் அகன் பறந்தலை | கணையமரங்கள்
செறிக்கப்பட்ட, பெரிய அகன்ற வெளியில் அமைந்துள்ள |
ஓங்கு நிலை
வாயில் தூங்குபு தகைத்த | உயர்ந்து நிற்கும்
வாயில்களில், தொங்கிக்கொண்டிருக்கும்படி கட்டிய, |
வில் விசை
மாட்டிய விழு சீர் ஐயவி | எந்திர வில்கள்
பொருத்தப்பட்ட, மிகுந்த சிறப்பினையுடைய ஐயவித்துலா மரங்களும், |
கடி மிளை
குண்டு கிடங்கின் | பாதுகாப்பான
காவல்காடும் ஆழமான அகழியும் கொண்ட, |
நெடு மதில்
நிரை பதணத்து | நெடிய மதிலில்
வரிசையாய் அமைந்த உயர்ந்த மேடைகளையும் கொண்ட, |
அண்ணல் அம்
பெரும் கோட்டு அகப்பா எறிந்த | பெருமை மிக்க அழகிய
பெரிய சிகரங்களைக் கொண்ட அகப்பா என்னும் கோட்டையை அழித்த |
பொன் புனை
உழிஞை வெல் போர் குட்டுவ | பொன்னால் செய்த உழிஞை
மாலையை அணிந்த வெல்லுகின்ற போரைச் செய்யும் குட்டுவனே! |
போர்த்து
எறிந்த பறையால் புனல் செறுக்குநரும் | தோல் போர்த்துள்ள
பறையை முழக்கி வெள்ளம் வரும்போது கரையை அடைக்க அழைப்பவர் ஒலியும், |
நீர் தரு
பூசலின் அம்பு அழிக்குநரும் | நீர்விளையாட்டில்
எழும் ஆரவாரத்தின், போரில் அம்புகள் எழுப்பும் ஒலியையும் அமுக்கிப்போடும்,
ஒலியும், |
ஒலி தலை
விழவின் மலியும் யாணர் | பேராரவாரம் எழுகின்ற
விழாக்களில் உள்ளதைப் போல் மிகுந்துவரும், புதுவருவாயையுடைய |
நாடு கெழு தண்
பணை சீறினை ஆதலின் | நாட்டினில் பொருந்திய
மருதநிலங்களைச் சினந்து பார்ப்பதனால் – |
குட திசை
மாய்ந்து குணம் முதல் தோன்றி | மேற்குத் திசையில்
மறைந்து, கிழக்கில் அடிவாரத்தில் தோன்றி, |
பாய் இருள்
அகற்றும் பயம் கெழு பண்பின் | பரவிக்கிடக்கும் இருளை
அகற்றும் பயன்தரும் பண்பினையுடைய |
ஞாயிறு கோடா
நன் பகல் அமயத்து | ஞாயிறு ஒருபக்கமும்
சாயாமல் இருக்கும் நடுப்பகற் பொழுதில் |
கவலை வெள் நரி
கூஉம் முறை பயிற்றி | பிரிந்து செல்லும்
வழிகளில் வெள்ளையான நரிகள் மாறி மாறி ஊளையிடும், |
கழல் கண் கூகை
குழறு குரல் பாணி | பிதுங்கியது போன்ற
கண்களையுடைய கூகைகள் குழறுகின்ற குரலின் தாளத்துக்கேற்ப, |
கரும் கண்
பேய்_மகள் வழங்கும் | கரிய கண்களையுடைய
பேய்மகள் கூத்தாடும் |
பெரும் பாழ்
ஆகும்-மன் அளிய தாமே | – பெரிய
பாழ்நிலமாய்விடும், அவைதாம் இரங்கத்தக்கன! |
| |
# 23 பாட்டு
23 | # 23 பாட்டு 23 |
அலந்தலை
உன்னத்து அம் கவடு பொருந்தி | காய்ந்துபோன
உச்சியையுடைய உன்ன மரத்தின் பிரிவுபட்ட கிளையினில் இருந்து |
சிதடி கரைய
பெரு வறம் கூர்ந்து | சிள்வண்டு ஒலிக்கும்
அளவுக்குப் பெரிய வறட்சி உண்டாகி |
நிலம் பைது
அற்ற புலம் கெடு காலையும் | நிலம் பசுமை
இல்லாமற்போன, விளைநிலங்கள் சீர்குலைந்த காலத்திலும் |
வாங்குபு
தகைத்த கலப்பையர் ஆங்கண் | இழுத்துக் கட்டிய
இசைக்கலங்களைக் கொண்ட பையினராய், அங்குள்ள |
மன்றம் போந்து
மறுகு சிறை பாடும் | ஊர்ப்பொதுவிடத்துக்குப்
போய் தெருவின் இரண்டு பக்கங்களிலும்
பாடுகின்ற |
வயிரிய
மாக்கள் கடும் பசி நீங்க | கூத்தரும் பாணருமான
மக்களின் கடும் பசி நீங்க, |
பொன் செய்
புனை இழை ஒலிப்ப பெரிது உவந்து | அவர்களின் பொன்னால்
செய்யப்பட்ட அழகிய அணிகலன்கள் ஒலிக்க, பெரிதும் உவந்து |
நெஞ்சு மலி
உவகையர் உண்டு மலிந்து ஆட | நெஞ்சு நிறைந்த
மகிழ்ச்சியினராய், உண்டு கூட்டமாய் ஆட, |
சிறு
மகிழானும் பெரும் கலம் வீசும் | சிறிதளவு கள்ளுண்ட
மகிழ்ச்சியிலும் பெரும் செல்வத்தை வாரி வழங்கும் |
போர் அடு தானை
பொலம் தார் குட்டுவ | போரில் வெற்றிகொள்ளும்
சேனைகளையுடைய பொன்னாலான மாலையைச் சூடிய குட்டுவனே! |
நின் நயந்து
வருவேம் கண்டனம் புல் மிக்கு | உன்னைக் காணவிரும்பி
வந்த நாங்கள் கண்டோம், புற்கள் மிகுந்து, |
வழங்குநர்
அற்று என மருங்கு கெட தூர்ந்து | நடமாடுவோர்
இல்லாமற்போனதால் ஓரங்கள் உருக்குலைந்து தூர்ந்துபோய் |
பெரும் கவின்
அழிந்த ஆற்ற ஏறு புணர்ந்து | தமது பெரும் அழகு
அழிந்துபோன வழிகளில் காளைகளைக் கூடி, |
அண்ணல் மரையா
அமர்ந்து இனிது உறையும் | பெரிய
காட்டுப்பசுக்கள் அமைதியாகவும் இனிமையாகவும் வாழ்ந்திருக்கும் அளவுக்கு, |
விண் உயர்
வைப்பின காடு ஆயின நின் | வானளாவ உயர்ந்த
மாடங்களைக் கொண்ட ஊர்கள் காட்டுநிலம் ஆயின; உன் |
மைந்து மலி
பெரும் புகழ் அறியார் மலைந்த | வலிமையால் நிறைந்த
பெரும் புகழை அறியாதவராய், உன்னோடு பகைகொண்டு |
போர் எதிர்
வேந்தர் தார் அழிந்து ஒராலின் | போரிட எதிர்த்துவந்த
வேந்தர், உன் முன்னணிப்படைக்கே தோற்று ஓடிப்போனதால்; |
மருது
இமிழ்ந்து ஓங்கிய நளி இரும் பரப்பின் | மருதமரங்கள், தம்மிடம்
பல பறவைகள் தங்கி ஒலிக்கும்படி நிற்கின்ற செறிவான பெரிய பரப்பிடமாகிய, |
மணல் மலி
பெரும் துறை ததைந்த காஞ்சியொடு | மணல் நிறைந்த பெரிய
ஆற்றுத்துறையில் நெருங்கிவளர்ந்த காஞ்சி மரங்களோடு |
முருக்கு
தாழ்பு எழிலிய நெருப்பு உறழ் அடைகரை | முருக்க மரங்களினின்று
உதிர்ந்த பூக்களால் நெருப்பைப்போன்று தோன்றும் மணல் அடைத்த கரையில் |
நந்து
நாரையொடு செ வரி உகளும் | நன்கு வளர்ந்த
நாரையோடு, செவ்வரி நாரையும் ஓடித்திரியும் |
கழனி வாயில்
பழன படப்பை | கழனிகளுக்கு வாயிலாக
அமைந்த பொய்கையைச் சார்ந்த விளைநிலங்களில் |
அழல் மருள்
பூவின் தாமரை வளை_மகள் | நெருப்பினைப் போன்ற
பூவையுடைய தாமரையும், வளையணிந்த பெண் |
குறாஅது
மலர்ந்த ஆம்பல் | பறிக்காமல்
விட்டுவிட்ட ஆம்பலும் உள்ள, |
அறாஅ யாணர்
அவர் அகன் தலை நாடே | அற்றுப்போகாத
புதுவருவாயையுடைய பகைவரின் அகன்ற இடத்தையுடைய நாடு – |
| |
# 24 பாட்டு
24 | # 24 பாட்டு 24 |
நெடு வயின்
ஒளிறு மின்னு பரந்து ஆங்கு | நீண்ட விசும்பில்
ஒளிறுகின்ற மின்னல் பரந்தாற் போலப் |
புலி_உறை
கழித்த புலவு வாய் எஃகம் | புலித்தோலால் செய்த
உறையிலிருந்து உருவப்பட்ட புலால் நாறும் வாளை |
ஏவல் ஆடவர்
வலன் உயர்த்து ஏந்தி | உன் ஏவலுக்கு உட்பட்ட
மறவர் வலக்கையில் உயர்த்திப் பிடித்து, |
ஆர் அரண்
கடந்த தார் அரும் தகைப்பின் | கடத்தற்கரிய அரண்களை
அழித்துச் செல்லும் முன்னணிப்படையின் அரிய அணிவகுப்பினையுடைய |
பீடு கொள்
மாலை பெரும் படை தலைவ | பெருமை கொள்ளும்
இயல்பினையுடைய பெரும் படைக்குத் தலைவனே! |
ஓதல் வேட்டல்
அவை பிறர் செய்தல் | மறையோதல்,
வேள்விசெய்தல், இவை ஒவ்வொன்றையும் பிறரைச் செய்வித்தல் |
ஈதல் ஏற்றல்
என்று ஆறு புரிந்து ஒழுகும் | ஈதல்,
ஏற்றுக்கொள்ளுதல் என்று ஆறினையும் செய்து ஒழுகும் |
அறம் புரி
அந்தணர் வழிமொழிந்து ஒழுகி | அறச்செயல்களை
விரும்பும் அந்தணர்களை வழிபட்டு நடந்து, |
ஞாலம் நின்
வழி ஒழுக பாடல் சான்று | உலகமோ உன் வழியில்
நடக்க, புலவர் பாடும் புகழைப் பெற்று |
நாடு உடன்
விளங்கும் நாடா நல் இசை | நாடு முழுவதும்
விளங்கும் நீ நாடிப்பெறாத நல்ல புகழைக் கொண்ட – |
திருந்திய
இயல் மொழி திருந்து இழை கணவ | மேன்மையான இயல்புள்ள
மொழியினையுடைய திருத்தமான அணிகலன்கள் அணிந்தவளுக்குக் கணவனே! |
குலை இழிபு
அறியா சாபத்து வயவர் | நாணைக் கழற்றி அறியாத
வில்லைக்கொண்ட வீரர்கள், |
அம்பு களைவு
அறியா தூங்கு துளங்கு இருக்கை | அம்பினைக் கீழே
போடமுடியாத அளவுக்கு நெருக்கமாக இருப்பதால் அசைகின்ற இருக்கைகளைக் கொண்ட |
இடாஅ ஏணி இயல்
அறை குருசில் | அளவிடமுடியாத
எல்லையைக் கொண்ட இயல்பினையுடைய பாசறையையுடைய குருசிலே! |
நீர் நிலம் தீ
வளி விசும்போடு ஐந்தும் | நீர், நிலம்,
நெருப்பு, காற்று, விசும்பு ஆகிய ஐந்தனையும் |
அளந்து கடை
அறியினும் அளப்பு அரும்-குரையை நின் | அளந்து அவற்றின்
எல்லையை அறிந்தாலும், உனது அறிவு, ஆற்றல் ஆகியவற்றை அளக்க முடியாது; உன் |
வளம் வீங்கு
பெருக்கம் இனிது கண்டிகுமே | செல்வம் பெருகிய
வளத்தை இனிதே கண்டறிந்தோம்; |
உண்மரும்
தின்மரும் வரை கோள் அறியாது | உண்பாரும்,
தின்பாருமாய் கணக்கில் அடங்காதவாறு உண்டும் – |
குரை தொடி
மழுகிய உலக்கை வயின்-தோறு | ஒலிக்கின்ற பூண்
மழுங்கிப்போன உலக்கை இருக்கும் இடங்கள்தோறும் |
அடை சேம்பு
எழுந்த ஆடு_உறும் மடாவின் | இலையையுடைய சேம்பினைப்
போன்ற அடுப்பிலிடப்பட்ட பெரிய பானையினையும், |
எஃகு உற
சிவந்த ஊனத்து யாவரும் | வாளால் இறைச்சியை
வெட்டும்போது சிவந்துபோன வெட்டுமரத்தையும் யாவரும் |
கண்டு மதி
மருளும் வாடா சொன்றி | கண்டு வியக்கும் –
குறையாத சோறு – |
வயங்கு கதிர்
விரிந்து வான்_அகம் சுடர்வர | ஒளிரும் கதிர்கள்
பரந்து வானகம் ஒளிபெற்றுவிளங்க, |
வறிது வடக்கு
இறைஞ்சிய சீர் சால் வெள்ளி | சிறிதே வடக்குப்பக்கம்
சாய்ந்துள்ள சிறப்பமைந்த வெள்ளியாகிய கோள்மீன் |
பயம் கெழு
பொழுதோடு ஆநியம் நிற்ப | பயன் தரும் பிற
கோள்களோடு நல்லநாள் காட்டி நிற்க, |
கலிழும்
கருவியொடு கை உற வணங்கி | ஒளிரும் இடிமின்னலோடு
நாற்புறமும் கவிந்து |
மன் உயிர்
புரைஇய வலன் ஏர்பு இரங்கும் | உலகத்து உயிர்களைக்
காக்கும்பொருட்டு வலப்பக்கமாய் எழுந்து முழங்கும் |
கொண்டல் தண்
தளி கமம் சூல் மா மழை | கீழ்க்காற்றால்
கொணரப்பட்ட குளிர்ச்சியான நீர்த்துளிகளைக் கொண்ட நிறைசூலைக்கொண்ட கரிய மேகங்கள் |
கார் எதிர்
பருவம் மறப்பினும் | கார்காலம்
எதிர்ப்படுகின்ற தன் பருவத்தை மறந்துபோனாலும் – |
பேரா
யாணர்த்தால் வாழ்க நின் வளனே | நீங்காத
புதுமையையுடையது, வாழ்க! உன் வளம்! |
| |
# 25 பாட்டு
25 | # 25 பாட்டு 25 |
மா ஆடிய புலன்
நாஞ்சில் ஆடா | உன் குதிரைப்படைகள்
பாய்ந்துசென்ற நிலங்களில் கலப்பைகள் உழுதுசெல்லமாட்டா; |
கடாஅம்
சென்னிய கடுங்கண் யானை | மதம் சொரியும்
தலையைக்கொண்ட கடுமையாய்ப் பார்க்கும் யானைகளின் |
இனம் பரந்த
புலம் வளம் பரப்பு அறியா | கூட்டம் பரந்து சென்ற
நிலங்கள் இனி வளம் பரப்புதலை அறியமாட்டா; |
நின் படைஞர்
சேர்ந்த மன்றம் கழுதை போகி | உன் படைவீரர்கள் கூடிய
ஊர்ப்பொதுவிடங்களில் கழுதைகள் கூடிக்கிடக்கின்றன; |
நீ உடன்றோர்
மன் எயில் தோட்டி வையா | நீ பகைத்து
மேற்சென்றவரின் பெரிய மதில்கள் காப்புகளை இழந்தன; |
கடும் கால்
ஒற்றலின் சுடர் சிறந்து உருத்து | நீ மூட்டிய தீ –
மிகுந்த காற்று எழுந்து மோதுவதால், சுடர்விட்டு எழுந்து, வெப்பமடைந்து |
பசும் பிசிர்
ஒள் அழல் ஆடிய மருங்கின் | புதிதாய்த் தோன்றும்
பிசிர்களையுடைய ஒளிவிட்டுச் சுட்டெரித்த பக்கங்கள் |
ஆண்டலை
வழங்கும் கான் உணங்கு கடு நெறி | காட்டுக்கோழி உலவும்
காடுகள் தீய்ந்துபோன கடிய வழிகளாய், |
முனை அகன்
பெரும் பாழ் ஆக மன்னிய | ஆறலைக்கள்வரின்
ஒளிப்பிடமாக அகன்ற பெரிய பாழிடங்களாய் மாறிவிட்டன; |
உரும் உறழ்பு
இரங்கும் முரசின் பெரு மலை | இடிபோல முழங்கும்
முரசத்தோடு, பெரிய மலையின் |
வரை இழி
அருவியின் ஒளிறு கொடி நுடங்க | பக்கங்களில் இறங்கும்
அருவியைப் போல பொலிவுள்ள கொடிகள் மடங்கி ஆட, |
கடும் பரி
கதழ் சிறகு அகைப்ப நீ | விரைந்த ஓட்டத்துடன்
சீறியெழும் பறவையைப் போல் பறந்து செல்ல, நீ |
நெடும் தேர்
ஓட்டிய பிறர் அகன் தலை நாடே | உன் நெடிய தேரினை
ஓட்டிய பகைவருடைய அகன்ற இடத்தையுடைய நாடுகள். |
| |
# 26 பாட்டு
26 | # 26 பாட்டு 26 |
தேஎர் பரந்த
புலம் ஏஎர் பரவா | செல்வர்களின் தேர்கள்
சென்று சேறுபட்ட நிலங்களில் ஏர்களால் உழுவது தேவைப்படவில்லை; |
களிறு ஆடிய
புலம் நாஞ்சில் ஆடா | ஆண்பன்றிகள்
கிழங்குக்காகத் தோண்டிய நிலங்களில் கலப்பைகளால் உழுவது தேவைப்படவில்லை; |
மத்து உரறிய
மனை இன் இயம் இமிழா | தயிர் கடையும்
மத்துகள் முழங்கும் வீடுகளில் வேறு இன்னிசைக் கருவிகள் ஒலிக்கத் தேவையில்லை; |
ஆங்கு பண்டு
நற்கு அறியுநர் செழு வளம் நினைப்பின் | அவ்விடத்தை முன்பு
நன்றாக அறிந்தவர் அப்போதிருந்த செழுமையான வளத்தை இப்போது நினைத்துப்பார்த்தால், |
நோகோ யானே
நோ_தக வருமே | வருந்துகிறேன் நான்,
அவர்கள் மிகவும் வருத்தப்பட நேருமே என்று; |
பெயல் மழை
புரவு இன்று ஆகி வெய்து_உற்று | காலத்தில் பெய்யும்
மழை காக்காமல் போனதினால் வெப்பம் மிகுந்து |
வலம் இன்று
அம்ம காலையது பண்பு என | நலமற்றுப் போனது
காலத்தின் பண்பு என்று |
கண் பனி மலிர்
நிறை தாங்கி கை புடையூ | கண்கள் பனித்துப்
பெருக்கெடுக்கும் நீரை நிறையத் தாங்கிக்கொண்டு, கைகளை அடித்துக்கொண்டு |
மெலிவு உடை
நெஞ்சினர் சிறுமை கூர | தளர்ச்சியுற்ற
நெஞ்சத்தினராய்ப் பகைவர்நாட்டு மக்கள் சிறுமை மிகுந்திருக்க, |
பீர் இவர்
வேலி பாழ் மனை நெருஞ்சி | பீர்க்கங்கொடிகள்
பற்றியேறின வேலிசூழ்ந்த பாழ்பட்ட மனைகளும், நெருஞ்சிமுள் |
காடு உறு கடு
நெறி ஆக மன்னிய | காடாய்
வளர்ந்திருக்கும் கடிய வழிகளுமாக நிலைபெற்றன – |
முருகு உடன்று
கறுத்த கலி அழி மூதூர் | முருகப்பெருமான்
மாறுபட்டு வெகுண்டதால் தன் ஆரவாரமிக்க சிறப்பை இழந்த பழமையான ஊரைப்போல, |
உரும்பு இல்
கூற்றத்து அன்ன நின் | பிறரால் நலிவுறாத
கூற்றுவனைப் போன்ற உன் |
திருந்து
தொழில் வயவர் சீறிய நாடே | திருத்தமான
போர்த்தொழிலையுடைய படைவீரர்கள் சீறிச் சென்ற நாடு – |
| |
# 27 பாட்டு
27 | # 27 பாட்டு 27 |
சிதைந்தது
மன்ற நீ சிவந்தனை நோக்கலின் | – சிதைந்துபோனது,
உண்மையாகவே! நீ கண்கள் சிவந்து பார்த்தபோது – |
தொடர்ந்த
குவளை தூ நெறி அடைச்சி | தொடர்ந்தாற்போல மலரும்
குவளையைத் தமது தூய அலையலையான கூந்தலில் செருகி, |
அலர்ந்த
ஆம்பல் அக மடிவையர் | மலர்ந்த ஆம்பல் பூவின்
அக இதழை மடித்துவைத்துத் தைத்த தழையாடை அணிந்தவராய், |
சுரியல் அம்
சென்னி பூ செய் கண்ணி | சுருண்ட மயிரையுடைய
அழகிய தலையுச்சியில் பூவினால் தொடுத்த தலைமாலையை அணிந்து, |
அரியல்
ஆர்கையர் இனிது கூடு இயவர் | கள்ளை உண்டவராய்,
இனிதே சுருதி சேர்ந்த வாத்தியத்தையுடையோர் தங்கியிருக்கும் |
துறை நணி
மருதம் ஏறி தெறும்-மார் | துறைக்குப் பக்கத்தில்
இருக்கும் மருத மரத்தில் ஏறி, பக்கத்து வயல்களில் பரவியிருக்கும் பறவைகளை
ஓட்டுவதற்காக |
எல் வளை
மகளிர் தெள் விளி இசைப்பின் | ஒளிவிடும் வளையல்களை
அணிந்த மகளிரின் தெளிவான அழைப்பொலியின் இனிய ஓசையைக் கேட்டு |
பழன காவில்
பசு மயில் ஆலும் | வயலோரச் சோலைகளில்
புத்துணர்ச்சிகொண்ட மயில்கள் ஆடுகின்ற |
பொய்கை வாயில்
புனல் பொரு புதவின் | பொய்கையின் மதகுகளில்
நீர் வந்து மோதும் கதவிடுக்கில் |
நெய்தல்
மரபின் நிரை கள் செறுவின் | நெய்தல் பூக்களை
மொய்க்கும் வழக்கமுடைய கூட்டமான வண்டுகளைக் கொண்ட வயல்வழிச் சென்ற |
வல் வாய்
உருளி கதுமென மண்ட | வலிமையான
மேற்புறத்தையுடைய சக்கரம் திடீரென்று ஆழ்ந்துபோய் |
அள்ளல் பட்டு
துள்ளுபு துரப்ப | சேற்றில்
மாட்டிக்கொள்ள, பதைப்புடன் முடுக்கிவிடப்பட்ட |
நல் எருது
முயலும் அளறு போகு விழுமத்து | நல்ல எருதுகள்
இழுப்பதற்கு முயலுகின்ற அந்த, சேற்றிலிருந்து மீளும் சிரமத்தின்போது |
சாகாட்டாளர்
கம்பலை அல்லது | வண்டியை ஓட்டுபவர்கள்
எழுப்பும் ஆரவார ஒலியை அன்றி |
பூசல் அறியா
நன் நாட்டு | வேறே போரினால்
ஏற்படும் ஆரவார ஒலியை அறியாத நல்ல நாட்டின் |
யாணர் அறாஅ
காமரு கவினே | புதிய வருவாய்கள்
அற்றுப்போகாத பலரும் விரும்பும் தம் அழகு – |
| |
# 28 பாட்டு
28 | # 28 பாட்டு 28 |
திரு உடைத்து
அம்ம பெரு விறல் பகைவர் | – மிகுந்த செல்வத்தை
உடையது – மிகுந்த வலிமை கொண்ட பகைவரின் |
பைம் கண் யானை
புணர் நிரை துமிய | பசிய கண்களையுடைய யானை
கலந்த படைவரிசை தூள்தூளாக, |
உரம் துரந்து
எறிந்த கறை அடி கழல் கால் | தமது வலிமையைச்
செலுத்தித் தூக்கிவைத்த குருதிக்கறை படிந்த பாதத்தையுடைய கழலணிந்த கால்களைக்
கொண்ட |
கடு மா மறவர்
கதழ் தொடை மறப்ப | விரையும் குதிரையைப்
போன்ற மறவர்கள் மிகுந்த விசையுடன் கூடிய தம் வில் தொழிலை மறக்கும்படியாக, |
இளை இனிது
தந்து விளைவு முட்டு_உறாது | காவல்காட்டைக்
காக்கும் தொழிலை இனிதே செய்து, நாட்டினில் விளைச்சல் குறைவின்றி இருக்க, |
புலம்பா
உறையுள் நீ தொழில் ஆற்றலின் | வீட்டைவிட்டுப்
பிரியாத வாழ்க்கையுடன் நீ ஆட்சி செய்வதால் – |
விடு நில
கரம்பை விடர் அளை நிறைய | – மேய்ச்சலுக்காக
விடப்பட்ட கரம்பை நிலத்தில் உள்ள வெடிப்பான பள்ளங்கள் நிறையும்படி – |
கோடை நீட
குன்றம் புல்லென | கோடைக்காலம்
நீட்டித்துச் செல்ல, குன்றுகள் பொலிவழிந்து தோன்ற, |
அருவி அற்ற
பெரு வறல் காலையும் | அருவிகள் வற்றிப்போன
பெரும் வறட்சியான காலத்திலும் |
நிவந்து கரை
இழிதரும் நனம் தலை பேரியாற்று | – உயர்ந்து, கரையை
மீறிக்கொண்டு இறங்கும் அகன்ற பரப்புள்ள பேரியாறு பாயும் |
சீர் உடை
வியன் புலம் வாய் பரந்து மிகீஇயர் | சிறப்புப் பொருந்திய
அகன்ற நிலங்களில் இடங்கள்தோறும் பரந்து மிகும்படியாக, |
உவலை சூடி
உருத்து வரு மலிர் நிறை | காய்ந்த இலைதழைகளைச்
சுமந்துகொண்டு கடுங்கோபத்துடன் வருவதுபோன்ற மிகுந்துவரும் வெள்ளத்தின் |
செம் நீர்
பூசல் அல்லது | சிவந்த நீர் எழுப்பும்
ஆரவார ஒலியை அன்றி |
வெம்மை அரிது
நின் அகன் தலை நாடே | கொடுமையான போர் ஆரவார
ஒலிகள் அரிதாயுள்ள, அகன்ற இடத்தையுடைய உன் நாடு – |
| |
# 29 பாட்டு
29 | # 29 பாட்டு 29 |
அவல் எறி
உலக்கை வாழை சேர்த்தி | அவலை இடிக்கும்
உலக்கையை வாழைமரத்தில் சார்த்திவிட்டு, |
வளை கை மகளிர்
வள்ளை கொய்யும் | வளையலணிந்த கையையுடைய
மகளிர் வள்ளைப் பூவினைப் பறிக்கின்ற |
முடந்தை
நெல்லின் விளை வயல் பரந்த | வளைந்த நெற்கதிர்கள்
விளைந்த வயலில் மேல் பரவித்திரியும் |
தடம் தாள்
நாரை இரிய அயிரை | பெரிய கால்களையுடைய
நாரைகள், அந்த மகளிரைக் கண்டு வெருண்டு, அங்கிருக்கும் அயிரையாகிய |
கொழு மீன்
ஆர்கைய மரம்-தொறும் குழாஅலின் | நிறைந்த மீனைகளைத்
தின்பதற்காக, மரங்கள்தோறும் குழுமியிருக்க, |
வெண்கை மகளிர்
வெண்_குருகு ஓப்பும் | வெறும் கையாய்
இருக்கும் மகளிர் அந்த வெள்ளைப் பறவைகளை விரட்டுகின்ற – |
அழியா விழவின்
இழியா திவவின் | தொடர்ந்து நடைபெறும்
விழாக்களினால் தொய்ந்துபோகாத யாழ்க்கட்டுகளையுடைய |
வயிரிய
மாக்கள் பண் அமைத்து எழீஇ | கூத்தரான மக்கள்
பண்களை நன்றாக அமைத்து, இசையை எழுப்பி, |
மன்றம் நண்ணி
மறுகு சிறை பாடும் | ஊர்ப்பொதுவிடங்களை
அணுகி, தெருக்களின் இரண்டு பக்கங்களிலும் பாடுகின்ற – |
அகன் கண்
வைப்பின் நாடு-மன் அளிய | அகன்ற இடங்களையுடைய
ஊர்களையுடைய நாடுகளாயிருந்தன – இப்போது இரங்கத்தக்கன. |
விரவு வேறு
கூலமொடு குருதி வேட்ட | கலந்திருக்கும்
பல்வேறான தானியங்களோடு சேர்ந்த இரத்தத்தைப் பலியாகச் செலுத்தி, |
மயிர் புதை மா
கண் கடிய கழற | மயிருள்ள தோலால்
மறைக்கப்பட்ட பெரிய முகப்பினைக் கொண்ட முரசம் வேகமாக அடிக்கப்பெற, |
அமர் கோள்
நேர் இகந்து ஆர் எயில் கடக்கும் | போரைச் செய்வதில்
தனக்கு நிகர் யாரும் இல்லை என்னும்படி, அரிய மதில்களை வெற்றிகொள்ளும் |
பெரும் பல்
யானை குட்டுவன் | மிகவும் அதிகமான
யானைகளைக் கொண்ட குட்டுவனின் |
வரம்பு இல்
தானை பரவா ஊங்கே | வரம்பில்லாத சேனைகள்
பரந்து செல்வதற்கு முன்னர் – |
| |
# 30 பாட்டு
30 | # 30 பாட்டு 30 |
இணர் ததை
ஞாழல் கரை கெழு பெரும் துறை | பூங்கொத்துகள்
செறிந்திருக்கும் ஞாழல்கள் இருக்கும் கரையைப் பொருந்திய பெரிய நீர்த்துறையில் |
மணி கலத்து
அன்ன மா இதழ் நெய்தல் | நீல மணியினால்
செய்யப்பட்ட பாத்திரத்தைப் போன்ற பெரிய இதழ்களையுடைய நெய்தலின் |
பாசடை பனி கழி
துழைஇ புன்னை | பசிய இலைகள் உள்ள
குளிர்ந்த கழியினில் மீனை வேட்டையாடிவிட்டு, புன்னையின் |
வால் இணர் படு
சினை குருகு இறைகொள்ளும் | நீண்ட பூங்கொத்துகள்
உள்ள தாழ்ந்த கிளையில் கொக்குகள் தங்கும், |
அல்கு_உறு
கானல் ஓங்கு மணல் அடைகரை | மக்கள் தங்குவதற்குரிய
கடற்கரைச் சோலையில் உள்ள உயர்ந்த, மணல் இறுக்கமாய் அமைந்த கரையில், |
தாழ் அடும்பு
மலைந்த புணரி வளை ஞரல | தாழ்வாகப்
படர்ந்திருக்கும் அடும்பங்கொடியை மோதிய அலை கொண்டுவந்த சங்கு ஒலிக்க, |
இலங்கு நீர்
முத்தமொடு வார் துகிர் எடுக்கும் | ஒளிரும் தன்மையுள்ள
முத்துக்களோடு, நீண்ட பவளக்கொடிகளையும் பொறுக்கியெடுக்கும் |
தண் கடல்
படப்பை மென்பாலனவும் | குளிர்ந்த கடல்
வெளியாகிய மென்மையான நிலமாகிய நெய்தல் நில மக்களும் – |
காந்தள் அம்
கண்ணி கொலை வில் வேட்டுவர் | காந்தள் பூவால்
தொடுக்கப்பட்ட தலைமாலையினையும், கொலைபுரியும் வில்லினையும் கொண்ட வேடர்கள் |
செம் கோட்டு
ஆமான் ஊனொடு காட்ட | செம்மையான
கொம்பினையுடைய காட்டுப்பசுவின் இறைச்சியோடு, காட்டிலுள்ள |
மதன் உடை
வேழத்து வெண் கோடு கொண்டு | வலிமையுடைய யானைகளின்
வெண்மையான தந்தங்களையும் எடுத்துக்கொண்டு, அவற்றைப் |
பொன் உடை
நியமத்து பிழி நொடை கொடுக்கும் | பொன்னை உடைய
கடைத்தெருக்களில் கள்ளுக்கு விலையாகக் கொடுக்கும் |
குன்று
தலைமணந்த புன்_புல வைப்பும் | குன்றுகள்
கூடிக்கிடக்கும் புன்புலமாகிய பாலைநில ஊர்களின் மக்களும் – |
காலம்
அன்றியும் கரும்பு அறுத்து ஒழியாது | பருவமல்லாத
காலத்திலும் கரும்பினை அறுத்து மாளாது, |
அரி கால்
அவித்து பல பூ விழவின் | கரும்பின்
வேர்க்கட்டைகளை அழித்து, அங்கு பல பூக்களைக் கொண்டு எடுக்கும் விழாவினையுடைய, |
தேம் பாய்
மருதம் முதல் பட கொன்று | தேன் பாயும்
மருதமரத்தை அடியோடு சாய்த்து, |
வெண் தலை செம்
புனல் பரந்து வாய் மிகுக்கும் | வெண்மையான நுரையை
முகப்பினில் கொண்ட சிவந்த புதுவெள்ளம் பரந்து ஓரங்களை உடைத்துச் செல்லும்
இடங்களில் |
பல சூழ்
பதப்பர் பரிய வெள்ளத்து | பல வைக்கோல் புரிகள்
சூழக் கட்டிய மணல் தடுப்புகளும் கரைந்துபோக, அந்த வெள்ளத்தை |
சிறை கொள்
பூசலின் புகன்ற ஆயம் | அணையிட்டுத் தடுக்கும்
ஆரவாரத்தோடு விரும்பிநிற்கும் மக்கள் கூட்டம், |
முழவு இமிழ்
மூதூர் விழவு காணூஉ பெயரும் | முழவுகள் முழங்குகின்ற
பழமையான ஊரில் விழாவினைக் காண்பதற்காகச் செல்லுகின்ற, |
செழும் பல்
வைப்பின் பழன பாலும் | செழுமையான பல
ஊர்களையும் கொண்ட மருத நிலப் பகுதிகளின் மக்களும் – |
ஏனல் உழவர்
வரகு மீது இட்ட | தினைப்புனத்தை உழுது
வாழும் குறவர்கள், வரகுத்தாள்களை மேலே வேய்ந்த, |
கான் மிகு
குளவிய வன்பு சேர் இருக்கை | மணம் மிக்க
காட்டுமல்லிகை வளர்கின்ற, வலிய நிலத்தைச் சேர்ந்த, மனைகளில் |
மென் தினை
நுவணை முறை_முறை பகுக்கும் | மென்மையான தினை மாவை
விருந்தினருக்கு முறை முறையாய்ப் பகிர்ந்தளிக்கும் |
புன்_புலம்
தழீஇய புறவு அணி வைப்பும் | புன்செய் நிலங்களைத்
தழுவிக்கிடக்கும் முல்லைநிலத்திற்கு அண்மையிலுள்ள குறிஞ்சிப் பகுதி மக்களும் – |
பல் பூ
செம்மல் காடு பயம் மாறி | பலவகைப் பூக்களும்
உதிர்ந்து வாடிக்கிடக்கும் காடுகளின் பயன்படும் தன்மை மாறிப்போய், |
அரக்கத்து
அன்ன நுண் மணல் கோடு கொண்டு | செவ்வரக்கு போன்ற
நுண்ணிய மணல் பொருந்திய மண்மேடுகளைக் கொண்டு, |
ஒண் நுதல்
மகளிர் கழலொடு மறுகும் | ஒளிவிடும்
நெற்றியையுடைய மகளிர் காலில் தண்டையோடு திரியும், |
விண் உயர்ந்து
ஓங்கிய கடற்றவும் பிறவும் | வானளாவ உயர்ந்த நின்ற
மரங்களைக் கொண்ட காடுகளும் அவை சார்ந்த நிலங்களிலுள்ள மக்களும் – |
பணை கெழு
வேந்தரும் வேளிரும் ஒன்று_மொழிந்து | முரசினையுடைய
வேந்தர்களும், குறுநில மன்னரும், வஞ்சினம் கூறிக் |
கடலவும்
காட்டவும் அரண் வலியார் நடுங்க | கடலோரத்திலும்,
காடுகளிலும் அரண்களைக் கொண்டு வலிமையுடையோராய் இருந்தும் நடுக்கமுறும்படி, |
முரண் மிகு
கடும் குரல் விசும்பு அடைபு அதிர | மாறுபாடு மிகுந்து
ஒலிக்கும் முரசின் கடுமையான ஒலி விசும்பினை அடைந்து அதிர, |
கடும் சினம்
கடாஅய் முழங்கும் மந்திரத்து | மிகுந்த சினத்தைக்
கொண்டு முழங்குகின்ற மந்திரவொலியால் |
அரும் திறல்
மரபின் கடவுள் பேணியர் | அரிய திறல் படைத்த
மரபினையுடைய கடவுளை வாழ்த்தும்பொருட்டு, |
உயர்ந்தோன்
ஏந்திய அரும் பெறல் பிண்டம் | வழிபாட்டினைச்
செய்யும் உயர்ந்தோன் படைத்த பெறுவதற்கரிய பலியினைக் கண்டு, |
கரும் கண்
பேய்_மகள் கை புடையூஉ நடுங்க | கரிய கண்களையுடைய
பேய்மகள் கைகளை அடித்துக்கொண்டு நடுங்க, |
நெய்த்தோர்
தூஉய நிறை மகிழ் இரும் பலி | இரத்தம் தூவிய நிறைந்த
கள்ளுடனான பெரிய பலியானது |
எறும்பும்
மூசா இறும்பூது மரபின் | எறும்புகளும்
மொய்க்காத வியப்புத்தரும் முறைமையினை யுடையதாக, |
கரும் கண்
காக்கையொடு பருந்து இருந்து ஆர | கரிய கண்களையுடைய
காக்கைகளோடு பருந்துகளும் சேர்ந்து உண்ணும்படியாக, |
ஓடா பூட்கை
ஒண் பொறி கழல் கால் | பகைவருக்குப்
பின்னிட்டு ஓடாத கொள்கையைப் பூண்ட, ஒளிரும் புள்ளிகளைக் கொண்ட கழலணிந்த
கால்களையுடைய |
பெரும் சமம்
ததைந்த செரு புகல் மறவர் | பகைவரின் பெரிய
போரினைச் சிதைத்துக் கெடுத்த போரை விரும்பும் மறவர்களால், |
உருமு நிலன்
அதிர்க்கும் குரலொடு கொளை புணர்ந்து | இடி போன்ற நிலத்தை
அதிரச் செய்யும் குரலோடு, யாழிசை சேர்ந்தொலிக்க, |
பெரும் சோறு
உகுத்தற்கு எறியும் | போர்வீரருக்குப் பெரிய
விருந்துணவு படைப்பதற்கு அறையப்பெறுகின்றது – |
கடும் சின
வேந்தே நின் தழங்கு குரல் முரசே | கடும் சினமுள்ள
வேந்தனே! உன்னுடைய முழங்குகின்ற ஒலியையுடைய முரசம். |
| |
| |
நான்காம்
பத்து | நான்காம் பத்து |
காப்பியாற்றுக்காப்பியனார் | காப்பியாற்றுக்காப்பியனார் |
| |
# 31 பாட்டு
31 | # 31 பாட்டு 31 |
குன்று
தலைமணந்து குழூஉ கடல் உடுத்த | குன்றுகள் திரளாக
நெருங்கி நிற்க, பல பொருட்களும் திரண்டுள்ள கடலினை ஆடையாக உடுத்திய |
மண் கெழு
ஞாலத்து மாந்தர் ஓராங்கு | மண் செறிந்த உலகத்து
மாந்தர் எல்லாம் ஒரேநேரத்தில் |
கை சுமந்து
அலறும் பூசல் மாதிரத்து | கைகளைத் தலைக்குமேல்
கூப்பி உரத்த ஒலி எழுப்பும் ஆரவாரம், திசைகளின் |
நால் வேறு
நனம் தலை ஒருங்கு எழுந்து ஒலிப்ப | நால்வேறான அகன்ற
பக்கங்களில் ஒன்றாக எழுந்து ஒலிக்க, |
தெள் உயர் வடி
மணி எறியுநர் கல்லென | தெளிந்த ஓசையையுடைய,
உயர்வாக வடிக்கப்பெற்ற மணியை அடிப்பவர்கள் கல்லென்ற ஓசையை உண்டாக்க, |
உண்ணா
பைஞ்ஞிலம் பனி துறை மண்ணி | உண்ணாநோன்பிருக்கும்
மக்கள்கூட்டம் குளிர்ந்த நீர்த்துறையில் நீராடி, |
வண்டு ஊது
பொலி தார் திரு ஞெமர் அகலத்து | வண்டுகள் சுற்றிவரும்
பொலிவுள்ள மாலையணிந்த, திருமகள் நிறைந்த மார்பினையும், |
கண் பொரு
திகிரி கமழ் குரல் துழாஅய் | கண்ணைக் கூசவைக்கும்
சக்கரப்படையினையும், கமழ்கின்ற துளசிக் கொத்தினைக்கொண்ட |
அலங்கல்
செல்வன் சேவடி பரவி | மாலையினையும் உடைய
திருமாலின் திருவடிகளைப் புகழ்ந்து வணங்கி, |
நெஞ்சு மலி
உவகையர் துஞ்சு பதி பெயர | நெஞ்சில் நிறைந்த
உவகையினராய், தாம் வாழும் ஊர்களுக்குத் திரும்பிச் செல்வர்; |
மணி நிற மை
இருள் அகல நிலா விரிபு | நீலமணியின் நிறத்தைப்
போன்ற கரிய இருள் நீங்கும்படி நிலவொளியைப் பரப்பி |
கோடு கூடு
மதியம் இயல்_உற்று ஆங்கு | பிறைநிலவின் கொம்புகள்
கூடிநிற்கும் முழுமதி வானத்தில் ஊர்ந்துவந்தாற் போன்று |
துளங்கு குடி
விழு திணை திருத்தி முரசு கொண்டு | வருந்துகின்ற
குடிமக்களைச் சிறந்த நிலையில் நிலைநிறுத்தி, பகைவரின் முரசுகளைக் கைப்பற்றி, |
ஆண் கடன்
நிறுத்த நின் பூண் கிளர் வியன் மார்பு | வெற்றி வீரர்களுக்குப்
பரிசளித்து ஆண்கடனைச் செய்துமுடித்த உன் பூண் அணிந்த பரந்த மார்பு, |
கருவி வானம்
தண் தளி தலைஇய | இடிமின்னலுடன் கூடிய
மேகங்கள் குளிர்ந்த நீரைப் பொழிய, |
வட_தெற்கு
விலங்கி விலகு தலைத்து எழிலிய | வடதெற்காகக்
குறுக்கிட்டு நின்று தடுத்து விலக்கும் உச்சிகளில் மேகங்களை உடையதாகி, |
பனி வார்
விண்டு விறல் வரை அற்றே | குளிர்ச்சி நிறைந்த
மலையாகிய சிறந்த மலையைப் போன்றது. |
கடவுள் அஞ்சி
வானத்து இழைத்த | தேவர்களுக்குப் பயந்து
வானத்தில் கட்டிய |
தூங்கு எயில்
கதவம் காவல் கொண்ட | தொங்குகின்ற
கோட்டையின் கதவினைக் காத்துநிற்கும் |
எழூஉ நிவந்து
அன்ன பரேர் எறுழ் முழவு தோள் | கணைய மரத்தை
நிமிர்த்தி வைத்தாற்போன்ற பருத்த அழகிய வலிமையுள்ள முழவினைப் போன்ற தோள்கள்
உன்னவை; |
வெண் திரை
முந்நீர் வளைஇய உலகத்து | வெண்மையான அலைகளையுடைய
கடல் சூழ்ந்த உலகத்தில் |
வண் புகழ்
நிறுத்த வகை சால் செல்வத்து | கொடையால் வரும் புகழை
நிலைநிறுத்திய வகைவகையான செல்வங்களைக் கொண்ட |
வண்டன்
அனையை-மன் நீயே வண்டு பட | வண்டன் என்பானைப்
போன்றவன் நீ; வண்டுகள் மொய்க்கும் |
ஒலிந்த
கூந்தல் அறம் சால் கற்பின் | செழிப்பான
கூந்தலையும், அறம் சார்ந்த கற்பினையும், |
குழைக்கு
விளக்கு ஆகிய ஒண் நுதல் பொன்னின் | காதிலிருக்கும்
குழைக்கு வெளிச்சம் தரும் ஒளிவிடும் நெற்றியையும், பொன்னாலான |
இழைக்கு
விளக்கு ஆகிய அம் வாங்கு உந்தி | அணிகலன்களுக்கு
வெளிச்சமூட்டும் அழகிய வளைந்த வயிற்றையும் கொண்டு, |
விசும்பு
வழங்கு மகளிருள்ளும் சிறந்த | வானுலகில் நடமாடும்
பெண்களுக்குள் சிறந்த |
செம்மீன்
அனையள் நின் தொல் நகர் செல்வி | செம்மீனாகிய
அருந்ததியைப் போன்றவள் உன் தொன்மையான அரண்மனையின் செல்வியான உன் மனைவி; |
நிலன் அதிர்பு
இரங்கல ஆகி வலன் ஏர்பு | நிலத்திலுள்ளோர்
அதிர்ந்து நடுங்குமாறு முழங்காமல், வெற்றியினால் சிறந்து |
வியன் பணை
முழங்கும் வேல் மூசு அழுவத்து | உன் அகன்ற முரசு
முழங்கும்; வேற்படை மொய்த்துக்கிடக்கும் போர்க்களத்தின் நடுவே, |
அடங்கிய
புடையல் பொலன் கழல் நோன் தாள் | ஒடுங்கிய பனைமாலை
அணிந்த, பொன்னாலான கழலை அணிந்த வலிமையான கால்களையுடைய – |
ஒடுங்கா
தெவ்வர் ஊக்கு அற கடைஇ | அடங்காத பகைவரின்
ஊக்கம் கெடும்படியாக விரட்டி |
புறக்கொடை
எறியார் நின் மற படை கொள்ளுநர் | அவரின் முதுகினில்
வேல்களை வீசியெறியமாட்டார் – உன் வீரம் மிக்க சேனைக்குத் தலைமைகொள்பவர் |
நகைவர்க்கு
அரணம் ஆகி பகைவர்க்கு | உன்னோடு சிரித்து
உறவாடுவோருக்குப் பாதுகாவலாய் அமைந்து, பகைவர்க்கு |
சூர்
நிகழ்ந்து அற்று நின் தானை | அச்சுறுத்தும் தெய்வம்
தாக்கியது போன்றது உன் சேனை, |
போர் மிகு
குருசில் நீ மாண்டனை பலவே | இவ்வாறு
போர்த்தொழிலில் சிறந்து விளங்கும் அரசனே! மாட்சிமை பொருந்தியவனாவாய்
பலவகையாலும்! |
| |
# 32 பாட்டு
32 | # 32 பாட்டு 32 |
மாண்டனை பலவே
போர் மிகு குருசில் நீ | மாட்சிமை
பொருந்தியவனாவாய் பலவகையாலும்! போரில் மேம்பட்டு விளங்கும் குருசிலே! நீ! |
மாதிரம்
விளக்கும் சால்பும் செம்மையும் | நாற்புறத்தையும்
ஒளிவிடச் செய்யும் நற்குணங்களும், நடுவுநிலைமையும், |
முத்து உடை
மருப்பின் மழ களிறு பிளிற | முத்து உடைய
கொம்புகளையுடைய இளமையான களிறுகள் பிளிறும்படி, |
மிக்கு எழு
கடும் தார் துய் தலை சென்று | போர்வேட்கை மிகுந்து
எழுகின்ற கடுமையான முன்னணிப்படையினர் பகைவர் நாட்டின் இறுதியெல்லை வரை சென்று |
துப்பு துவர்
போக பெரும் கிளை உவப்ப | வலிமை முழுவதையும்
காட்டிப் போரிட்டு, பெருங்கூட்டமான பாணரும் கூத்தருமாகிய சுற்றத்தார்
மகிழும்படி, |
ஈத்து ஆன்று
ஆனா இடன் உடை வளனும் | கொடுத்து நிறைந்தும்
அழியாத செல்வத்தையுடைய வளமும், |
துளங்கு குடி
திருத்திய வலம்படு வென்றியும் | வருந்துகின்ற
குடிமக்களை முன்னைய நிலையில் இருத்திய சிறந்த வெற்றியும் ஆகிய |
எல்லாம்
எண்ணின் இடு கழங்கு தபுந | எல்லாவற்றையும்
ஒவ்வொன்றாக எண்ணினால் எண்ணிக்கைக் கழங்குகளும் முடிந்துவிடும்; |
கொன் ஒன்று
மருண்டனென் அடு போர் கொற்றவ | உன்னிடம் மிகச்
சிறந்ததொன்றைக் கண்டு மருண்டேன், கொல்லுகின்ற போரையுடைய கொற்றவனே! |
நெடுமிடல் சாய
கொடு மிடல் துமிய | நெடுமிடல் என்னும்
மன்னன் தோற்றோட, அவனது கொடிய வலிமை அழியும்படி, |
பெரு மலை
யானையொடு புலம் கெட இறுத்து | பெரிய மலையைப் போன்ற
யானையோடு பகைவரின் நாடு கெடும்படி அவர் நாட்டில் தங்கி, |
தடம் தாள்
நாரை படிந்து இரை கவரும் | பெரிய கால்களையுடைய
நாரை நிலையாகத் தங்கி மீனைக் கவர்கின்ற |
முடந்தை
நெல்லின் கழை அமல் கழனி | வளைந்த நெல்லின்
மூங்கிலைப் போன்ற தாள் செறிவாக இருக்கும் வயல்வெளிகளையுடைய |
பிழையா
விளையுள் நாடு அகப்படுத்து | தவறாத விளைச்சலையுடைய
நாடுகளைக் கைப்பற்றி, |
வையா மாலையர்
வசையுநர் கறுத்த | ஒரு பொருட்டாக
மதிக்கத்தகாத இயல்பினரும், வசைமொழியே பேசுபவரும் ஆகிய உன்னால் வெகுளப்பட்ட |
பகைவர்
தேஎத்து ஆயினும் | பகைவரின் நாட்டில்
இருப்பினும், |
சினவாய்
ஆகுதல் இறும்பூதால் பெரிதே | சினங்கொள்ளாது
இருக்கிறாய்! எனக்குண்டாகும் வியப்பு பெரியது! |
| |
# 33 பாட்டு
33 | # 33 பாட்டு 33 |
இறும்பூதால்
பெரிதே கொடி தேர் அண்ணல் | எனக்குண்டாகும்
வியப்பு பெரியது! கொடிகள் கட்டப்பட்ட தேர்ப்படையையுடைய அரசனே! |
வடி மணி
அணைத்த பணை மருள் நோன் தாள் | வடிவாக அமைக்கப்பட்ட
மணிகள் தழுவிக்கிடக்கும் பக்கங்களையும், முரசு போன்ற வலிய கால்களையுமுடைய |
கடி_மரத்தான்
களிறு அணைத்து | யானைகளைக் காவல்
மரத்தில் கட்டி, |
நெடு நீர துறை
கலங்க | ஆழமான நீரையுடைய
குளங்களின் துறைகள் கலங்குமாறு |
மூழ்த்து
இறுத்த வியன் தானையொடு | அதனை மூழ்கடிப்பதுபோல்
தங்கிய பெரும் படையோடு, |
புலம் கெட
நெரிதரும் வரம்பு இல் வெள்ளம் | பகைவர் நாடு
கெடும்படியாக நெருக்கமாய்ச் செல்லும் வரம்பு கடந்த வெள்ளம் போன்ற உன்
படைகளுக்கு, |
வாள் மதில் ஆக
வேல் மிளை உயர்த்து | வாட்படையே மதில் ஆக,
வேற்படை உயர்ந்த காவற்காடு ஆக, |
வில் விசை
உமிழ்ந்த வை முள் அம்பின் | வில்லிலிருந்து வேகமாக
வெளிவரும் அம்புகளே கூர்மையான முள்வேலியாக, |
செ வாய் எஃகம்
வளைஇய அகழின் | சிவந்த வாயையுடைய
படைக்கருவிகள் வளைவான அகழியாக, |
கார் இடி
உருமின் உரறு முரசின் | மேகத்திலிருந்து
இடிக்கும் இடியைப் போன்ற முழங்கும் முரசினையுடைய |
கால் வழங்கு
ஆர் எயில் கருதின் | காலாட்படையே
வெல்லுதற்கரிய கோட்டை ஆக, பகைமேற் செல்லக் கருதினால், |
போர் எதிர்
வேந்தர் ஒரூஉப நின்னே | போர்புரிய எதிர்ப்பட்ட
மன்னர்கள் புறங்கொடுத்து ஓடுவர் உன்னைவிட்டு. |
| |
# 34 பாட்டு
34 | # 34 பாட்டு 34 |
ஒரூஉப நின்னை
ஒரு பெரு வேந்தே | புறங்கொடுத்து ஓடுவர்
உன்னைவிட்டு, ஒப்பற்ற பெரிய வேந்தனே! |
ஓடா பூட்கை
ஒண் பொறி கழல் கால் | புறங்கொடாத
நிலைப்பாட்டைக் கொண்ட ஒளிவிடும் புள்ளிகள் உள்ள கழலை அணிந்த கால்களையும் |
இரு நிலம்
தோயும் விரி நூல் அறுவையர் | பெரிய நிலம் வரையில்
தொங்குகின்ற விரிந்த நூலால் நெய்யப்பட்ட ஆடையினையும் உடைய உன் பகைவர் – |
செ உளைய மா
ஊர்ந்து | சிவந்த தலையாட்டமணிந்த
குதிரையை ஓட்டிக்கொண்டும், |
நெடும் கொடிய
தேர் மிசையும் | நீண்ட கொடியையுடைய
தேர் மீது ஏறிக்கொண்டும், |
ஓடை விளங்கும்
உரு கெழு புகர் நுதல் | முகபடாம் அணிந்து
விளங்கும் அச்சம்பொருந்திய புள்ளிகளுள்ள நெற்றியையுடைய |
பொன் அணி யானை
முரண் சேர் எருத்தினும் | பொன்னரிமாலை அணிந்த
யானையினுடைய வலிமை பொருந்திய கழுத்தின் மீதிருந்தும், |
மன் நிலத்து
அமைந்த | நிலைபெற்ற
நிலத்தின்மீது இருந்தும் போரிடுகின்ற, |
மாறா மைந்தர்
மாறு நிலை தேய | போரிடுவதிலிருந்து
மாறாத வீரரின் வலிமை கெட்டுப்போகவும், |
முரைசு உடை
பெரும் சமம் ததைய ஆர்ப்பு எழ | முரசை முழக்கிச்
செய்யும் பெரிய போர் உருக்குலைந்துபோவதனாலும், ஆரவாரம் உண்டாக, |
அரைசு பட
கடக்கும் ஆற்றல் | பகை மன்னர் பலரை
வெல்லும் ஆற்றலையுடைய |
புரை சால்
மைந்த நீ ஓம்பல் மாறே | சிறப்பு மிக்க
வலிமையினை உடையவனே! நீ உன் படையைப் பேணுகின்ற முறையால். |
| |
# 35 பாட்டு
35 | # 35 பாட்டு 35 |
புரை சால்
மைந்த நீ ஓம்பல் மாறே | சிறப்பு மிக்க
வலிமையினை உடையவனே! நீ உன் படையைப் பேணுகின்ற முறையால். |
உரை
சான்றனவால் பெருமை நின் வென்றி | சான்றோரும் புகழும்
தன்மைய ஆயின, பெருமை மிக்க உன் வெற்றி – |
இரும் களிற்று
யானை இலங்கு வால் மருப்பொடு | பெரிய களிறுகளான
யானைகளின் ஒளிருகின்ற நீண்ட தந்தங்களுடன், |
நெடும் தேர்
திகிரி தாய வியன் களத்து | நெடிய தேர்களின்
சக்கரங்கள் சிதறிப் பரவும் அகன்ற போர்க்களத்தில், |
அளகு உடை
சேவல் கிளை புகா ஆர | பெடையையுடைய சேவல்கள்
தம் சுற்றத்தோடு இறைச்சியாகிய உணவை மிகுதியாய் உண்ண, |
தலை துமிந்து
எஞ்சிய மெய் ஆடு பறந்தலை | தலைகள்
துண்டிக்கப்பட்டதால் குறைந்துபோன முண்டங்கள் எழுந்தாடும் பாழிடமாகிய, |
அந்தி மாலை
விசும்பு கண்டு அன்ன | அந்தி மாலை நேரத்தில்
வானத்தைக் கண்டது போன்ற |
செம் சுடர்
கொண்ட குருதி மன்றத்து | சிவந்த ஒளியையுடைய
குருதி படிந்த போர்க்களத்து நடுவே |
பேஎய் ஆடும்
வெல் போர் | பேய்கள்
எழுந்தாடுகின்ற வெல்லுகின்ற போரினால் |
வீயா யாணர்
நின்_வயினானே | குன்றாத
புதுச்செல்வங்கள் வந்தடைந்தன, உன்னிடத்தில் – |
| |
# 36 பாட்டு
36 | # 36 பாட்டு 36 |
வீயா யாணர்
நின்_வயினானே | குன்றாத
புதுச்செல்வங்கள் வந்தடையும் உன்னிடத்தில் |
தாவாது ஆகும்
மலி பெறு வயவே | குறைபடாததாகும்,
மிகுதியாகப் பெற்ற வலிமை; |
மல்லல்
உள்ளமொடு வம்பு அமர் கடந்து | வெற்றி நிறைந்த
உள்ளத்தோடு, புதுமையாக வந்த போர்களை வென்று, |
செரு மிகு
முன்பின் மறவரொடு தலைச்சென்று | போரில் சிறந்த வலிமை
பொருந்திய வீரர்களுடன் கூடிச் சென்று, |
பனை தடி
புனத்தின் கை தடிபு பல உடன் | பனைமரங்கள் வெட்டிச்
சாய்க்கப்பட்டிருக்கும் காட்டினைப் போல துதிக்கைகள் வெட்டப்பட்டு, திரளான |
யானை பட்ட
வாள் மயங்கு கடும் தார் | யானைகள்
இறந்துகிடக்கும், வாட்படைவீரர் ஒருவரோடொருவர் மோதிக்கொள்ளும் கடுமையான முன்னணிக்
களத்தில் |
மாவும்
மாக்களும் படு பிணம் உணீஇயர் | குதிரைகள், யானைகள்,
வீரர்கள் ஆகியோரின் வீழ்ந்துகிடக்கும் பிணங்களை உண்ணும்பொருட்டு, |
பொறித்த
போலும் புள்ளி எருத்தின் | இட்டுவைத்தாற் போன்ற
புள்ளிகளையுடைய கழுத்தினையும், |
புன் புற
எருவை பெடை புணர் சேவல் | புல்லிய முதுகையும்
கொண்ட பருந்தின், பெடையோடு சேர்ந்துவாழும் சேவலை, |
குடுமி
எழாலொடு கொண்டு கிழக்கு இழிய | குடுமியைக் கொண்ட
கழுகுடன், இழுத்துக்கொண்டு கீழே இறங்கிப் பாய, |
நிலம் இழி
நிவப்பின் நீள் நிரை பல சுமந்து | பள்ளமான இடத்திற்குப்
பாய்ந்துசெல்லும் வெள்ளத்தைப் போல, நீண்ட குவியல்கள் பலவற்றைச் சுமந்துகொண்டு, |
உரு எழு
கூளியர் உண்டு மகிழ்ந்து ஆட | அச்சம் பொருந்திய
கூளிக்கூட்டம் உண்டு மகிழ்ச்சி மிகுந்து கூத்தாட, |
குருதி செம்
புனல் ஒழுக | குருதியாகச் சிவந்த
வெள்ளம் பெருக்கெடுத்தோட, |
செரு பல
செய்குவை வாழ்க நின் வளனே | போர்கள் பலவற்றைச்
செய்வாய்! வாழ்க உன் வளம்! |
| |
# 37 பாட்டு
37 | # 37 பாட்டு 37 |
வாழ்க நின்
வளனே நின் உடை வாழ்க்கை | – வாழ்க உன் வளம்!
வாழ்க உன்னுடைய வாழ்நாள்! |
வாய்மொழி
வாயர் நின் புகழ் ஏத்த | வாய்மையே உரைக்கும்
சான்றோர், உன்னுடைய புகழைப் போற்றிப் பாட, |
பகைவர் ஆர
பழங்கண் அருளி | பகைவர்க்கு அதிகமான
துன்பத்தைச் செய்து, |
நகைவர் ஆர நன்
கலம் சிதறி | நீ நகைத்து
உறவாடுவோர்க்கு அதிகமான நல்ல அணிகலன்களை அள்ளிக்கொடுத்து, |
ஆன்று அவிந்து
அடங்கிய செயிர் தீர் செம்மால் | நற்குணங்களால்
நிறைந்து, பணிவுடன் நடந்து, புலன்களை அடக்கியாளும் குற்றமற்ற தலைவனே! |
வான் தோய் நல்
இசை உலகமொடு உயிர்ப்ப | வானைத் தொடும் உன்
நல்ல புகழ் உலகமுள்ளளவும் வாழ, |
துளங்கு குடி
திருத்திய வலம் படு வென்றியும் | வருந்துகின்ற
குடிமக்களை முன்னைய நிலையில் இருத்திய சிறந்த வெற்றியும், |
மா இரும்
புடையல் மா கழல் புனைந்து | கரிய பெரிய பனந்தோட்டு
மாலையையும், பெரிய வீரக் கழலையும், சூடிக்கொண்டு, |
மன் எயில்
எறிந்து மறவர் தரீஇ | பகை மன்னர்களின்
மதில்களை அழித்து, அவர்களுடைய வீரர்களைச் சிறைப்பிடித்துக் கொணர்ந்து, |
தொல் நிலை
சிறப்பின் நின் நிழல் வாழ்நர்க்கு | பழமையான நிலைபெற்ற
சிறப்பினையுடைய உன் ஆட்சியின் கீழ் வாழ்பவர்க்கு இணையாக, |
கோடு அற வைத்த
கோடா கொள்கையும் | அவரின் மனக்கோட்டம்
தீர்ந்துபோகுமாறு திருத்தி வைத்த மனக்கோட்டமற்ற கோட்பாட்டையும் |
நன்று பெரிது
உடையையால் நீயே | மிகவும் மிகுதியாகக்
கொண்டிருக்கிறாய் நீ! |
வெம் திறல்
வேந்தே இ உலகத்தோர்க்கே | கடுமையான திறத்தையுடைய
வேந்தனே! இந்த உலகத்தார்க்காக -. |
| |
# 38 பாட்டு
38 | # 38 பாட்டு 38 |
உலகத்தோரே
பலர்-மன் செல்வர் | இந்த உலகத்தாரில் பலர்
இருக்கிறார்கள் செல்வர்கள், |
எல்லாருள்ளும்
நின் நல் இசை மிகுமே | அவர் எல்லாரிலும் உனது
நல்ல புகழே மிகுந்திருக்கும்! |
வளம்
தலைமயங்கிய பைதிரம் திருத்திய | பலவகையான வளங்கள்
ஒன்றுகூடிக் கலக்கும் வகையில் நாட்டைச் செம்மை செய்த |
களங்காய்க்கண்ணி
நார்முடி சேரல் | களங்காய்க் கண்ணி
நார்முடிச் சேர வேந்தனே! |
எயில் முகம்
சிதைய தோட்டி ஏவலின் | பகைவரின் கோட்டை
மதிலின் முகப்பு சிதையும்படியாக அங்குசத்தால் குத்தி ஏவுதலினால், |
தோட்டி தந்த
தொடி மருப்பு யானை | அந்த நாட்டின் ஆளுமையை
உனக்கே பெற்றுத்தந்த பூண் அணிந்த தந்தங்களைக் கொண்ட யானைப்படையையும், |
செ உளை கலி_மா
ஈகை வான் கழல் | சிவந்த தலையாட்டத்தைக்
கொண்டு விரைகின்ற குதிரைப் படையையும், பொன்னால் செய்த உயர்ந்த கழலையும், |
செயல் அமை
கண்ணி சேரலர் வேந்தே | நல்ல வேலைப்பாடு
அமைந்த தலைமாலையையும் உடைய சேரநாட்டு வேந்தனே! |
பரிசிலர்
வெறுக்கை பாணர் நாள்_அவை | பரிசிலர்களின்
செல்வமாக இருப்பவனே! பாணர்கள் இருக்கும் அரச அவையை உடையவனே! |
வாள்_நுதல்
கணவ மள்ளர் ஏறே | ஒளி பொருந்திய
நெற்றியையுடையவளுக்குக் கணவனே! போர்வீரர்க்குக் காளை போன்றவனே! |
மை அற
விளங்கிய வடு வாழ் மார்பின் | குற்றமின்றி
விளங்குகிற, விழுப்புண்ணாலேற்பட்ட வடுக்கள் இருக்கும் மார்பினனே! |
வசை இல் செல்வ
வானவரம்ப | பழிச்சொல் இல்லாத
செல்வத்தையுடையவனே! வானவரம்பனே! |
இனியவை பெறினே
தனிதனி நுகர்கேம் | உன்னிடமிருந்து
இனியவற்றைப் பெறும்போது, ‘அவற்றைத் தனித்தனியே நுகருவோம், |
தருக என
விழையா தா இல் நெஞ்சத்து | கொண்டுவாருங்கள்’
என்று பெறுவோர் விரும்பாமல், மாசற்ற மனத்தினராய் |
பகுத்தூண்
தொகுத்த ஆண்மை | பகிர்ந்து
உண்ணுவதற்காக உணவைத் திரளாகத் தருகின்ற ஆண்மைச் சிறப்பொடு |
பிறர்க்கு என
வாழ்தி நீ ஆகல் மாறே | பிறர்க்கென்று
வாழ்பவனாக நீ இருப்பதால் – |
| |
# 39 பாட்டு
39 | # 39 பாட்டு 39 |
பிறர்க்கு என
வாழ்தி நீ ஆகல் மாறே | பிறர்க்கென்று
வாழ்பவனாக நீ இருப்பதால், |
எமக்கு இல்
என்னார் நின் மறம் கூறு குழாத்தர் | எமக்கு இல்லையென்று
சொல்லமாட்டார் – உன் வீரத்தை விளக்கிக்கூறும் வீரர்கள்! |
துப்பு
துறைபோகிய வெப்பு உடை தும்பை | போர்த்தொழிலின்
முழுமையையும் கற்றறிந்த, கடுமையையுடைய தும்பை மாலையைச் சூடிய, |
கறுத்த
தெவ்வர் கடி முனை அலற | சினங்கொண்டு வந்த
பகைவர்கள், அச்சந்தரும் போர்முனையில் அலறியோடும்படி |
எடுத்து
எறிந்து இரங்கும் ஏவல் வியன் பணை | குறுந்தடியால் ஓங்கி
அடிக்க ஒலிக்கின்ற. படைவீரரைப் போருக்கும் ஏவிவிடும் அகன்ற முரசம் |
உரும் என
அதிர்பட்டு முழங்கி செரு மிக்கு | இடிபோல் அதிர்ந்து
முழங்க, போர்வெறி மிகுந்து, |
அடங்கார் ஆர்
அரண் வாட செல்லும் | அடங்காதாரின்
கடத்தற்கரிய அரண் அழியும்படியாக முன்னோக்கிச் செல்லும் |
காலன் அனைய
கடும் சின முன்ப | காலனைப் போன்றவன் நீ,
கடும் சினத்தோடுகூடிய வலிமையுடையவனே! |
வாலிதின்
நூலின் இழையா நுண் மயிர் இழைய | வெண்மையான பருத்தி
நூலால் இழைக்கப்படாத, நுண்ணிய மயிர் போன்ற இழைகளையுடைய, |
பொறித்த
போலும் புள்ளி எருத்தின் | பொறித்து வைத்தது
போன்ற புள்ளிகளையுடைய கழுத்தையும், |
புன் புற
புறவின் கண நிரை அலற | புன்மையான முதுகினைக்
கொண்டதுமான புறாக்களின் கூட்டமான வரிசைகள் பயந்து ஓடும்படியாக, |
அலந்தலை
வேலத்து உலவை அம் சினை | சிதைந்துபோன
தலையையுடைய வேலமரத்தின் காய்ந்துபோன கிளைகளில், |
சிலம்பி கோலிய
அலங்கல் போர்வையின் | சிலந்தி பின்னிய
ஆடுகின்ற வலையைப் போல, |
இலங்கு மணி
மிடைந்த பசும்_பொன் படலத்து | மின்னுகின்ற மணிகள்
இடையிடையே கலந்த பசும்பொன்னாலான உட்குழிவுள்ள கூட்டின் ஓரத்தை. |
அவிர் இழை தைஇ
மின் உமிழ்பு இலங்க | ஒளிருகின்ற இழைகளால்
தைத்து, மின்னலைப் போல பளிச்சிட, |
சீர் மிகு
முத்தம் தைஇய | சிறப்பு மிகுந்த
முத்துக்கள் தைக்கப்பெற்ற |
நார்முடிச்சேரல்
நின் போர் நிழல் புகன்றே | நார்முடிச் சேரலே!
உனது போரினைப் புகலிடமாக விரும்பி – |
| |
# 40 பாட்டு
40 | # 40 பாட்டு 40 |
போர் நிழல்
புகன்ற சுற்றமொடு ஊர்முகத்து | உனது போரினைப்
புகலிடமாக விரும்பிய சுற்றத்தோடு, ஊரின் முன்பகுதியில் |
இறாஅலியரோ
பெரும நின் தானை | தங்கிவிடாமலிருப்பாராக!
பெருமானே! உன் படைகள்’ என்று |
இன் இசை இமிழ்
முரசு இயம்ப கடிப்பு இகூஉ | இனிய ஓசையுடன்
முழங்குகின்ற முரசுகள் ஒலிக்கக் குறுந்தடியால் அடிக்கும் |
புண் தோள்
ஆடவர் போர்முகத்து இறுப்ப | முரசுகளைச் சுமப்பதால்
காயம்பட்ட தோளினையுடைய வீரர்கள் போரின் முன்னணியில் தங்கியிருக்க, |
காய்த்த
கரந்தை மா கொடி விளை வயல் | ‘காய் காய்த்த
கரந்தையின் கரிய கொடி விளைகின்ற வயலில் |
வந்து
இறைகொண்டன்று தானை அந்தில் | வந்து நிலையாகத்
தங்கியுள்ளது சேனை, அவ்விடத்தில் |
களைநர் யார்
இனி பிறர் என பேணி | நம் துயரைத்
தீர்ப்பவர் சேரனைத்தவிர யார் இருக்கிறார்கள் இனி வேறே’ என்று இறைவனைத் தொழுது, |
மன் எயில்
மறவர் ஒலி அவிந்து அடங்க | பகைவரின் நிலையான
கோட்டைக்குள்ளிருக்கும் வீரர்கள் ஓசை அடங்கிப்போய் வெளிவராமல் இருக்க, |
ஒன்னார் தேய
பூ மலைந்து உரைஇ | வேறு பகைவரும்
அழியும்படி, தும்பைப் பூ மாலையினைச் சூடிக்கொண்டு, வஞ்சினம் கூறி, |
வெண் தோடு
நிரைஇய வேந்து உடை அரும் சமம் | வெண்மையான
பனந்தோட்டினை வரிசையாகத் தொடுத்து அணிந்தவராய் வரும் வேந்தர்களையுடைய அரிய
போரினை |
கொன்று
புறம்பெற்று மன்பதை நிரப்பி | அழித்து, அவரைப்
புறமிடச் செய்து, அவ்விடங்களில் மக்களைக் குடியேறச் செய்த, |
வென்றி ஆடிய
தொடி தோள் மீ கை | வெற்றிக் குரவை ஆடிய
தொடி விளங்கும் தோள்களையும், மேம்பட்ட கையினையும், |
எழு முடி
கெழீஇய திரு ஞெமர் அகலத்து | பகைவர் ஏழுபேரின்
கிரீடப்பொன்னால் செய்த பதக்கம் அணிந்த வெற்றித்திருமகள் தங்கியிருக்கும்
மார்பினையும் உடைய, |
பொன் அம்
கண்ணி பொலம் தேர் நன்னன் | பொன்னால் செய்த அழகிய
தலைமாலை அணிந்த, பொன்னாலான தேரினைக் கொண்ட நன்னனின் |
சுடர் வீ வாகை
கடி முதல் தடிந்த | ஒளிவிடும்
பூக்களையுடைய வாகையாகிய காவல்மரத்தை அடியோடு வெட்டிச் சாய்த்த |
தார் மிகு
மைந்தின் நார்முடிச்சேரல் | முன்னணிப்படையினரை
மிகுதியாகக் கொண்ட, வலிமையுள்ள நார்முடிச் சேரல், |
புன் கால்
உன்னம் சாய தெண் கண் | புல்லிய
அடிப்பகுதியையுடைய உன்னமரம் பகைவரின் தோல்வியைக் குறியிட்டுக்காட்டி வாடி நிற்க,
தெளிந்த கள்ளில் |
வறிது கூட்டு
அரியல் இரவலர் தடுப்ப | சிறிதளவே சேர்மானப்
பொருள்கள் கலக்கப்பட்ட அரியல் என்ற கள் இரவலரை வேறு ஏதேனும் குடிக்கவிடாமல்
தடுக்க, |
தான் தர உண்ட
நனை நறவு மகிழ்ந்து | தான் தனக்கெனத்
தருவித்து உண்ட பூ அரும்புகளால் சமைக்கப்பட்ட நறவு என்ற கள்ளினை உண்டுகளித்து, |
நீர் இமிழ்
சிலம்பின் நேரியோனே | அருவிநீர் இனிமையாக
ஒலிக்கும் மலைச் சரிவையுடைய நேரிமலையில் இருக்கிறான்! |
செல்லாயோ தில்
சில் வளை விறலி | செல்வாயாக! சிலவாகிய
வளைகளை அணிந்த விறலியே! |
மலர்ந்த
வேங்கையின் வயங்கு இழை அணிந்து | மலர்ந்த வேங்கை
மரத்தைப் போல ஒளிரும் அணிகலன்களை அணிந்து |
மெல் இயல்
மகளிர் எழில் நலம் சிறப்ப | மென்மையான
இயல்பினையுடைய மகளிரின் அழகு நலம் சிறந்திருக்க, |
பாணர் பைம் பூ
மலைய இளையர் | பாணர்கள் பசும்பொன்
மாலையைச் சூடியிருக்க, இளையவர்கள் |
இன் களி வழாஅ
மென் சொல் அமர்ந்து | இனிய களிப்பால் வழுவாத
மெல்லிய சொற்களை விருப்பத்துடன் பேசி |
நெஞ்சு மலி
உவகையர் வியன் களம் வாழ்த்த | நெஞ்சு நிறைந்த
மகிழ்ச்சியினராய் பெரிய போர்க்களத்தை வாழ்த்த, |
தோட்டி நீவாது
தொடி சேர்பு நின்று | அங்குசம் காட்டும்
குறிப்பினை மீறாமல் – தந்தத்தின் பூண்கள் இறுக்க அணியப்பெற்று |
பாகர் ஏவலின்
ஒண் பொறி பிசிர | பாகரின் ஏவுதலின்படி,
கால் மிதித்து எழுகின்ற தூசியின் ஒளிவிடும் துகள்கள் சிதறும்படியாக, |
காடு
தலைக்கொண்ட நாடு காண் அவிர் சுடர் | காட்டினில் தோன்றி
பரந்து உயர்ந்து நின்று, நாட்டிலுள்ளோர் காணும்படி ஒளிரும் காட்டுத்தீயைப் போன்ற |
அழல் விடுபு
மரீஇய மைந்தின் | சினத்தைக் கைவிட்டு –
நடக்கின்ற, வலிமையுடைய |
தொழில் புகல்
யானை நல்குவன் பலவே | வேண்டும் தொழிலை
விரும்பிச் செய்யும் யானைகள் பலவற்றைக் கொடுப்பான். |
| |
| |
ஐந்தாம்
பத்து | ஐந்தாம் பத்து |
பரணர் | பரணர் |
| |
# 41 பாட்டு
41 | # 41 பாட்டு 41 |
புணர் புரி
நரம்பின் தீம் தொடை பழுனிய | முறுக்கேற்றிய
நரம்பினையுடைய, இனிய இசை நிறைவுற்ற |
வணர் அமை நல்
யாழ் இளையர் பொறுப்ப | வளைந்த அமைப்பினையுடைய
நல்ல யாழினை ஏவல்இளையவர்கள் தாங்கிநிற்க, |
பண் அமை
முழவும் பதலையும் பிறவும் | தாளங்களைத்
தட்டிப்பார்த்து அமைக்கப்பட்ட மத்தளமும், ஒரு கண் பறையும், பிறவும் |
கண் அறுத்து
இயற்றிய தூம்பொடு சுருக்கி | மூங்கிலின் கணுக்களை
அறுத்துச் செய்யப்பட்ட பெருவங்கியத்தோடு சேர்த்துக்கட்டி |
காவில் தகைத்த
துறை கூடு கலப்பையர் | காவடியின் இரு
பக்கங்களிலும் சரியாகக் கட்டப்பட்ட, ஆடல்துறைக்கு வேண்டிய கலங்களைக் கொண்ட
பையினராய் |
கைவல் இளையர்
கடவுள் பழிச்ச | யாழிசைப்பதில்
வல்லவரான இளையோர் கடவுளை வாழ்த்திக்கொண்டுவர, |
மற புலி குழூஉ
குரல் செத்து வய களிறு | வீரம்செறிந்த புலியின்
தொகுதியான பிடரிமயிர் என்று எண்ணி, வலிமைகொண்ட களிறு, |
வரை சேர்பு
எழுந்த சுடர் வீ வேங்கை | மலையினைச் சார்ந்து
நிற்கும், ஒளிவிடும் பூக்களையுடைய வேங்கைமரத்தின் |
பூ உடை பெரும்
சினை வாங்கி பிளந்து தன் | பூக்களைக் கொண்ட பெரிய
கிளையை வளைத்து, அதனைப் பிளந்து தன் |
மா இரும்
சென்னி அணிபெற மிலைச்சி | கரிய பெரிய தலையுச்சி
அழகுபெறச் சூடிக்கொண்டு, |
சேஎர் உற்ற
செல் படை மறவர் | திரளாக வருகிற
பகைவர்மேற் செல்லும் படைவீரர்கள் |
தண்டு உடை
வலத்தர் போர் எதிர்ந்து ஆங்கு | தண்டினை வலதுகையில்
ஏந்தியவராய்ப் போரை எதிர்கொண்டு ஆரவாரிப்பதைப் போல, |
வழை அமல்
வியன் காடு சிலம்ப பிளிறும் | சுரபுன்னைகள் செறிந்து
இருக்கின்ற அகன்ற காடு எதிரொலிக்கப் பிளிறுகின்ற, |
மழை பெயல்
மாறிய கழை திரங்கு அத்தம் | மழை பெய்வது
மாறிப்போன, மூங்கில்கள் உலர்ந்துநிற்கும் அரிய வழிகள் |
ஒன்று இரண்டு
அல பல கழிந்து திண் தேர் | ஒன்றோ, இரண்டோ அல்ல,
பலவற்றைக் கடந்து, திண்ணிய தேரையுடைய |
வசை இல்
நெடுந்தகை காண்கு வந்திசினே | பழிச்சொல் அற்ற
நெடுந்தகையாகிய உன்னைக் காண்பதற்கு வந்திருக்கிறேன்! |
தாவல் உய்யுமோ
மற்றே தாவாது | வருந்துவதிலிருந்து
உய்வு பெறுமோ? – தவறாமல் |
வஞ்சினம்
முடித்த ஒன்றுமொழி மறவர் | தமது சூளுரையைச்
செய்து முடிக்கும் பேச்சு மாறாத வீரர்கள், |
முரசு உடை
பெரும் சமத்து அரசு பட கடந்து | முரசுகளையுடைய பெரிய
போரில் அரசர்கள் பலரை வெற்றிகொண்டு, |
வெவ்வர்
ஓச்சம் பெருக தெவ்வர் | போர்வெம்மையின் மிகுதி
பெருக, பகைவரை, |
மிளகு எறி
உலக்கையின் இரும் தலை இடித்து | மிளகினை இடிக்கும்
உலக்கையைப்போல் அவரின் பெரிய தலைகளைத் தோமரத்தால் இடித்து அழிக்க, |
வைகு ஆர்ப்பு
எழுந்த மை படு பரப்பின் | நிலைத்திருக்கும்
ஆரவாரம் உண்டாகும் கருமை படிந்த கடற்பரப்பைப் போல், |
எடுத்தேறு ஏய
கடிப்பு புடை வியன்_கண் | எடுத்து எறிதலை ஏவிய
குறுந்தடியால் அடிக்கப்படுகின்ற அகன்ற முகப்பையுடைய முரசு, |
வலம் படு
சீர்த்தி ஒருங்கு உடன் இயைந்து | வெற்றியால் உண்டாகிய
புகழொலியோடு, ஒன்றாகக் கூடிச் சேர்ந்து முழங்க, |
கால் உளை
கடும் பிசிர் உடைய வால் உளை | காற்றால் மோதுண்டு
சிறு சிறு கடிய திவலைகளாக உடையுமாறு, வெண்மையான தலையாட்டமணிந்த |
கடும் பரி
புரவி ஊர்ந்த நின் | விரைவான ஓட்டத்தையுடைய
புரவியில் ஏறிவந்த உன் |
படும் திரை
பனி கடல் உழந்த தாளே | ஒலிக்கின்ற
அலைகளையுடைய குளிர்ந்த கடலில் போரிட்ட உன் கால்கள் – |
| |
# 42 பாட்டு
42 | # 42 பாட்டு 42 |
இரும் பனம்
புடையல் ஈகை வான் கழல் | கரிய பனந்தோட்டால் ஆன
மாலையையும், பொன்னால் செய்த பெரிய வீரக் கழலினையும் உடையோராய் |
மீன் தேர்
கொட்பின் பனி கயம் மூழ்கி | மீனைத் தெரிவுசெய்ய
உயரத்தே சுற்றிச்சுற்றிவந்து, குளிர்ந்த குளத்தில் பாய்ந்து மூழ்கி |
சிரல்
பெயர்ந்து அன்ன நெடு வெள் ஊசி | மீன்கொத்திப் பறவை
மீண்டு எழுவதைப் போல, நெடிய வெண்மையான ஊசி |
நெடு வசி
பரந்த வடு வாழ் மார்பின் | நீண்ட பிளவினில் தைத்த
தழும்பு இருக்கின்ற மார்பினைக் கொண்ட, |
அம்பு சேர்
உடம்பினர் சேர்ந்தோர் அல்லது | அம்புகள் தைத்த
உடம்பினையுடையவராய்ப் போரிட வந்தவரோடு அல்லாமல், |
தும்பை சூடாது
மலைந்த மாட்சி | மற்றவரோடு தும்பை மாலை
சூடிப் போரிடாமல், மேற்சொன்னவரோடு மட்டும் போர்செய்யும் மாட்சியையுடைய |
அன்னோர் பெரும
நன்_நுதல் கணவ | அத்தகையவருக்குத்
தலைவனே! நல்ல நெற்றியையுடைவளுக்குக் கணவனே! |
அண்ணல் யானை
அடு போர் குட்டுவ | தலைமை சான்ற
யானைகளையும் எதிர்த்து அழிக்கும் போராற்றல் மிகுந்த குட்டுவனே! |
மைந்து உடை
நல் அமர் கடந்து வலம் தரீஇ | பகைவரின் வலிமையை
உடைக்கும் நல்ல போரில் எதிர்நின்று வெற்றியைத் தந்து, |
இஞ்சி வீ
விராய பைம் தார் பூட்டி | இஞ்சியினையும்
பூவினையும் கலந்த வாடாத மாலையை அணிந்து, |
சாந்து
புறத்து எறிந்த தசும்பு துளங்கு இருக்கை | சந்தனத்தை வெளியில்
பூசிய கள்குடங்கள் சமைக்குக்கும்போது ஆடுகின்ற அடுப்புகளிலிருந்து |
தீம் சேறு
விளைந்த மணி நிற மட்டம் | இனிய சுவைமிகுந்த சாறு
வடிக்கப்பட்ட நீலமணி போன்ற தெளிந்த கள்ளினைத் |
ஓம்பா ஈகையின்
வண் மகிழ் சுரந்து | தனக்கென்று
வைத்துக்கொள்ளாத ஈகையால் மிகுந்த களிப்பினை அளித்து, |
கோடியர்
பெரும் கிளை வாழ ஆடு இயல் | கூத்தர்களின் பெரிய
சுற்றம் செழித்து வாழ, ஆடும் இயல்பினையுடைய |
உளை அவிர்
கலி_மா பொழிந்தவை எண்ணின் | தலையாட்டம்
சிறந்துவிளங்கும் செருக்குள்ள குதிரைகள் கொடுக்கப்பட்டவற்றை எண்ணினால், |
மன்பதை மருள
அரசு பட கடந்து | மக்களெல்லாம்
வியப்படையுமாறு அரசர்கள் பலரை வென்று, |
முந்து வினை
எதிர்வர பெறுதல் காணியர் | முன்னால் செய்த போரை,
அடுத்தும் எதிர்வரப் பெறுவதைக் காணும்பொருட்டாக – |
ஒளிறு நிலை
உயர் மருப்பு ஏந்திய களிறு ஊர்ந்து | ஒளிர்கின்ற
நிலையையுடைய உயர்ந்த தந்தங்களை ஏந்தியபடி இருக்கும் களிறின் மீது ஏறி வந்து |
மான மைந்தரொடு
மன்னர் ஏத்த நின் | மானத்தையுடைய வலிமை
மிகுந்த வீரரோடு மன்னர்களும் புகழ்ந்து போற்ற, – உன் |
தேரொடு
சுற்றம் உலகு உடன் மூய | தேருடன் சேர்ந்த
வீரர்கள் உலகமுழுவதும் சூழ்ந்திருக்க, |
மா இரும் தெண்
கடல் மலி திரை பௌவத்து | கரிய பெரிய தெளிந்த
கடலின் மிக்க அலைகளையுடைய நீர்ப்பரப்பில் |
வெண் தலை
குரூஉ பிசிர் உடைய | நுரையாகிய வெண்மையான
உச்சி நிறமுள்ள திவலைகளாக மோதி உடைய, |
தண் பல வரூஉம்
புணரியின் பலவே | குளிர்ச்சியாகவும்
பலவாகவும் வருகின்ற அலைகளைக் காட்டிலும் பலவே! |
| |
# 43 பாட்டு
43 | # 43 பாட்டு 43 |
கவரி முச்சி
கார் விரி கூந்தல் | கவரிமானின் மயிர்
சேர்த்த உச்சிக் கொண்டையினையும், மேகத்தைப் போன்ற விரிந்த கூந்தலையும், |
ஊசல் மேவல் சே
இழை மகளிர் | ஊஞ்சலாடுவதின் மேல்
விருப்பத்தையும் கொண்ட செம்மையான இழை அணிந்த மகளிர், |
உரல் போல்
பெரும் கால் இலங்கு வாள் மருப்பின் | உரல் போன்ற பெரிய
கால்களையும், ஒளிருகின்ற கூர்மையான கொம்புகளையும், |
பெரும் கை
மத_மா புகுதரின் அவற்றுள் | பெரிய துதிக்கையையும்
கொண்ட யானைகள் தமது காட்டினுள் புகுந்தால், அவற்றுக்குள் |
விருந்தின்
வீழ் பிடி எண்ணு முறை பெறாஅ | தமக்குப் புதுமையாகத்
தோன்றித் தாம் விரும்பும் பெண்யானைகள் எண்ணிப்பார்க்கும் எண்ணிக்கையில் அடங்கப்
பெறாத, |
கடவுள் நிலைய
கல் ஓங்கு நெடு வரை | தெய்வங்கள்
நிலைபெற்றிருக்கும், பெரும் பாறைகள் உயர்ந்து நிற்கும் மலையான |
வட திசை எல்லை
இமயம் ஆக | வடதிசையிலுள்ள இமயம்
வடக்கு எல்லையாக, |
தென்னம்
குமரியொடு ஆயிடை அரசர் | தெற்கில் உள்ள
குமரியோடு, இவற்றுக்கிடையே உள்ள அரசர்களின் |
முரசு உடை
பெரும் சமம் ததைய ஆர்ப்பு எழ | முரசுகளையுடைய பெரிய
போர் அழிந்துபோக, அதனால் ஆரவாரம் மிகுந்து எழ, |
சொல் பல
நாட்டை தொல் கவின் அழித்த | புகழ் பெற்ற பல
நாடுகளின் பழமையான அழகினை அழித்த, |
போர் அடு தானை
பொலம் தார் குட்டுவ | போரில் பகைவரைக்
கொல்லும் சேனைகளையுடைய, பொன்னால் செய்யப்பட்ட மாலையினை அணிந்த குட்டுவனே! |
இரும் பணை
திரங்க பெரும் பெயல் ஒளிப்ப | பெரிய மூங்கில்கள்
வாடிப்போகுமளவுக்கு மிகுந்த மழை பெய்யாமற்போக, |
குன்று வறம்
கூர சுடர் சினம் திகழ | குன்றுகளில் வறட்சி
மிகுந்திருக்க, ஞாயிறு சினந்து வெப்பம் மிக்குத் திகழ, |
அருவி அற்ற
பெரு வறல் காலையும் | அருவிகள் நீர் அற்றுப்
போன பெரும் வறட்சி நிலவுகின்ற காலத்திலும், |
அரும் செலல்
பேர் ஆற்று இரும் கரை உடைத்து | கடப்பதற்கரிய
நீரோட்டத்தையுடைய பெரிய ஆற்றின் பெரிய கரையை உடைத்துச் செல்லும்படியாகவும், |
கடி ஏர்
பூட்டுநர் கடுக்கை மலைய | புதிய ஏரைப் பூட்டி
உழும் உழவர் கொன்றைப்பூவைச் சூடிக்கொள்ளவும், |
வரைவு இல்
அதிர் சிலை முழங்கி பெயல் சிறந்து | எண்ணற்ற அதிர்கின்ற
முழக்கங்களை முழங்கி, மழை மிகுந்து, |
ஆர் கலி வானம்
தளி சொரிந்து ஆங்கு | பெருத்த
ஆரவாரத்தையுடைய வானம் துளிகளைச் சொரிவதைப் போல, |
உறுவர் ஆர
ஓம்பாது உண்டு | தான் அன்புகொண்டவர்
நிரம்ப உண்ணும்படி, தனக்கென எதனையும் வைத்துக்கொள்ளாமல் அவருடன் உண்டு, |
நகைவர் ஆர நன்
கலம் சிதறி | தான் சிரித்து
உறவாடுவோர் நிரம்பக் கொள்ளும்படி நல்ல அணிகலன்களை வாரி வழங்கி, |
ஆடு சிறை
அறுத்த நரம்பு சேர் இன் குரல் | ஆடுகின்ற
சிறகுகளையுடைய கின்னரப்பறவையை வெல்லுகின்ற யாழ்நரம்பின் இனிய இசையோடு சேர்ந்த
இனிய குரலில் |
பாடு விறலியர்
பல் பிடி பெறுக | பாடுகின்ற விறலியர் பல
பெண்யானைகளைப் பெற்றுக்கொள்க; |
துய் வீ வாகை
நுண் கொடி உழிஞை | மேலே பஞ்சு போன்ற
முடியினைக் கொண்ட வாகைப்பூவும், நுண்ணிய கொடியில் பூக்கும் உழிஞையும் சூடுகின்ற |
வென்றி மேவல்
உரு கெழு சிறப்பின் | வெற்றியை விரும்பும்,
பகைவர்க்கு அச்சம்தரும் சிறப்பினையுடைய, |
கொண்டி மள்ளர்
கொல் களிறு பெறுக | பகைப்புலத்தைக்
கொள்ளையாடும் மள்ளர்கள், கொல்லுகின்ற களிறுகளைப் பெற்றுக்கொள்க; |
மன்றம்
படர்ந்து மறுகு சிறை புக்கு | ஊர்ப்பொதுவிடத்தில்
பரவித்திரிந்து, தெருக்களின் இரண்டு பக்கங்களிலும் சென்று |
கண்டி நுண்
கோல் கொண்டு களம் வாழ்த்தும் | சிறிதாக வெட்டப்பட்ட
நுண்ணிய கோலைக் கையில் ஏந்திக்கொண்டு, அரசனின் போர்வெற்றியை வாழ்த்திப் பாடும் |
அகவலன் பெறுக
மாவே என்றும் | பாணன் பெற்றுக்கொள்க
குதிரைகளை என்ற – எப்பொழுதுமே |
இகல் வினை
மேவலை ஆகலின் பகைவரும் | போராகிய தொழிலை
விரும்புவதால், பகைவர்களும் |
தாங்காது
புகழ்ந்த தூங்கு கொளை முழவின் | மனம் அடங்காமல்
புகழ்ந்த, தூங்கல் ஓசையினைக் கொண்ட முழவினையுடைய, |
தொலையா கற்ப
நின் நிலை கண்டிகுமே | அழையாத
கல்வியினையுடையவனே! – உனது செல்வமிக்க
நிலையைக் கண்டோம் – |
நிணம் சுடு
புகையொடு கனல் சினம் தவிராது | நிணத்தைச் சுடுவதால்
உண்டான புகையுடன் நெருப்பு தன் வெம்மையை நீங்காமல் |
நிரம்பு
அகல்பு அறியா ஏறா_ஏணி | நிரம்புதலும்
அகலுதலும் இல்லாத, கோக்காலியின் மேல் வைக்கப்பட்டுள்ள |
நிறைந்து
நெடிது இரா தசும்பின் வயிரியர் | நீண்ட நேரம் நிறைந்து
இருப்பதை அறியாத குடங்களிலிருக்கும், கூத்தரும் பாடகரும் |
உண்டு என தவாஅ
கள்ளின் | உண்டபோதும் குறையாத,
கள்ளினையுடைய |
வண் கை வேந்தே
நின் கலி மகிழானே | வளமையான கொடையினையுடைய
வேந்தனே! உன்னுடைய மகிழ்ச்சிமிக்க அரசவையில் – |
| |
# 44 பாட்டு
44 | # 44 பாட்டு 44 |
நிலம்
புடைப்பு அன்ன ஆர்ப்பொடு விசும்பு துடையூ | நிலத்தையே உடைப்பது
போன்ற முழக்கத்துடன், விசும்பினைத் துடைப்பது போல் |
வான் தோய்
வெல் கொடி தேர் மிசை நுடங்க | வானத்தில்
தோயும்படியாக, வெற்றிக்கொடி, தேர் மீது அசைந்தாட, |
பெரிய ஆயினும்
அமர் கடந்து பெற்ற | எவ்வளவு
பெருமையுடையதாயினும், போரில் வெற்றியடைந்து பெற்றவைகளை, |
அரிய என்னாது
ஓம்பாது வீசி | மிகவும் அரியவை என்று
எண்ணாமல், தனக்கென எதுவும் வைத்துக்கொள்ளாமல் வாரி வழங்கி, |
கலம் செல
சுரத்தல் அல்லது கனவினும் | அணிகலன்களை மிகவும்
கொடுப்பதை அன்றி, கனவிலும் |
களைக என அறியா
கசடு இல் நெஞ்சத்து | என் துயரத்தைக் களைக
என்று யாரிடமும் சொல்வதை அறியாத குற்றமில்லாத நெஞ்சத்தினையும், |
ஆடு நடை
அண்ணல் நின் பாடு_மகள் காணியர் | பெருமித நடையையுமுடைய
அண்ணலே! உன்னைப் பாடுகின்ற பாடினி காண்பாளாக – |
காணிலியரோ
நின் புகழ்ந்த யாக்கை | – காணாமலேபோகட்டும் – உன்னைப் புகழ்ந்த
யாக்கையாகிய, |
முழு வலி
துஞ்சும் நோய் தபு நோன் தொடை | மிக்க வலிமை
பொருந்திய, நோயில்லாத, வலிமையாக முறுக்கேறக் கட்டப்பட்ட உடம்பினை – |
நுண் கொடி
உழிஞை வெல் போர் அறுகை | நுண்ணிய கொடியையுடைய
உழிஞையின் பூவைச் சூடிய, வெல்லுகின்ற போரைச் செய்யும் அறுகை என்பவன் |
சேணன் ஆயினும்
கேள் என மொழிந்து | தோலைவில் இருந்தாலும்
உன்னை நண்பன் என்று கூறிக்கொண்டு, |
புலம்
பெயர்ந்து ஒளித்த களையா பூசற்கு | பகைவர்க்கு அஞ்சி தன்
இடத்தை விட்டுப் பெயர்ந்து ஒளிந்திருந்த நீக்கமுடியாத சச்சரவிற்கு, |
அரண்கள்
தாவு_உறீஇ அணங்கு நிகழ்ந்து அன்ன | அரண்களைக் கடந்து,
தெய்வத்தால் கேடு நிகழ்ந்தாற் போல, |
மோகூர் மன்னன்
முரசம் கொண்டு | பகை மன்னனாகிய மோகூர்
மன்னனின் முரசத்தைக் கைப்பற்றி, |
நெடுமொழி
பணித்து அவன் வேம்பு முதல் தடிந்து | அவன் கூறிய வஞ்சினத்தை
முறித்து அவனைப் பணிவித்து, அவனது காவல்மரமாகிய வேம்பினை அடியோடு வீழ்த்தி |
முரசு செய
முரச்சி களிறு பல பூட்டி | முரசு செய்வதற்காகத்
துண்டுகளாக வெட்டி, யானைகள் பலவற்றை வண்டியில் பூட்டி |
ஒழுகை
உய்த்தோய் கொழு இல் பைம் துணி | இழுத்துக்கொண்டு போகச்
செய்தவனே! திரட்சி இல்லாத பசிய இறைச்சித் துண்டத்தை |
வைத்தலை மறந்த
துய் தலை கூகை | வைத்த இடத்தை மறந்த
பஞ்சுபோன்ற கொண்டையையுடைய ஆண்கூகையைக் |
கவலை கவற்றும்
குராலம் பறந்தலை | கவலைப்படச்செய்து
வருத்தும் பென்கூகையையுடைய பாழ்நிலத்தில், |
முரசு உடை
தாயத்து அரசு பல ஓட்டி | முரசினை உடைய,
பரம்பரையாக அரசுரிமை பெற்ற, வேந்தர்கள் பலரை வென்று |
துளங்கு நீர்
வியல்_அகம் ஆண்டு இனிது கழிந்த | அசைகின்ற கடல் சூழ்ந்த
அகன்ற நிலப்பரப்பை ஆட்சிசெய்து, தம் வாழ்நாளை இனிதே கழித்து இறந்துபோன |
மன்னர் மறைத்த
தாழி | மன்னர்களை உள்ளிட்டு
மூடிமறைத்த தாழிகளைக் கொண்ட |
வன்னி
மன்றத்து விளங்கிய காடே | வன்னி மரம் நிற்கும்
ஊர்ப்பொதுவிடத்தில் விளங்கிய இடுகாடு -(- காணாமலேபோகட்டும் – – உடம்பினை.) |
| |
# 45 பாட்டு
45 | # 45 பாட்டு 45 |
பொலம் பூ
தும்பை பொறி கிளர் தூணி | பொன்னால் செய்யப்பட்ட
தும்பைப் பூவையும், புள்ளிகள் பொருந்திய அம்பறாத்தூணியில் |
புற்று அடங்கு
அரவின் ஒடுங்கிய அம்பின் | புற்றினில் அடங்கி
இருக்கும் பாம்பைப் போன்று ஒடுங்கிக்கிடக்கும் அம்புகளையும், |
நொசிவு உடை
வில்லின் ஒசியா நெஞ்சின் | வளைந்த வில்லினையும்,
வளைந்து முரியாத நெஞ்சினையும், |
களிறு எறிந்து
முரிந்த கதுவாய் எஃகின் | களிற்றை எறிந்ததால்
நுனிமடிந்து கொறுவாய்ப்பட்டுப்போன வேலினையும், |
விழுமியோர்
துவன்றிய அகன் கண் நாட்பின் | சிறந்த போர்வீரர்
சூழ்ந்திருக்கும் அகன்ற இடத்தையுடைய போர்க்களத்தையும் உடைய, |
எழுமுடி
மார்பின் எய்திய சேரல் | ஏழுஅரசர்களின்
மணிமுடியினின்றும் செய்யப்பட்ட பதக்கத்தை மார்பினில் அணிந்த சேரலே! |
குண்டு கண்
அகழிய மதில் பல கடந்து | ஆழமான இடத்தையுடைய
அகழிகளைக் கொண்ட மதில்கள் பலவற்றை வெற்றிகொண்டு, |
பண்டும்_பண்டும்
தாம் உள் அழித்து உண்ட | முன்னர் பலகாலங்களின்
பலமுறை உள்ளே புகுந்து அங்குள்ள பொருள்களைக் கொண்டு அழித்த |
நாடு கெழு
தாயத்து நனம் தலை அருப்பத்து | நாடு பொருந்திய
அரசுரிமையுடைய, அகன்ற உள்ளிடத்தையுடைய அரண்களின் |
கதவம்
காக்கும் கணை எழு அன்ன | கதவினைக் காக்கும்
திரண்ட எழுமரத்தைப் போன்ற |
நிலம் பெறு
திணி தோள் உயர ஓச்சி | பகைவர் நாடுகளைப்
பெறும் திண்மையான தோளினை உயர ஓங்கித் தூக்கி, |
பிணம் பிறங்கு
அழுவத்து துணங்கை ஆடி | பிணங்கள்
குவிந்துகிடக்கும் போர்க்களத்தில் துணங்கைக்கூத்து ஆடி, |
சோறு வேறு
என்னா ஊன் துவை அடிசில் | சோறு வேறு ஊன் வேறு
என்று பிரிக்கமுடியாதபடி ஊன் குழையச் சமைத்த உணவினை |
ஓடா பீடர்
உள்_வழி இறுத்து | பகைவருக்குப்
புறங்கொடுத்து ஓடாத பெருமையையுடைவர்களுக்கு அவர்கள் இருக்குமிடங்களில் அளித்து, |
முள் இடுபு
அறியா ஏணி தெவ்வர் | முள்வேலி இடுவதை
அறியாத எல்லையையும், பகைவரின் |
சிலை விசை
அடக்கிய மூரி வெண் தோல் | வில் விசையால் வரும்
அம்புகளை அடக்கிய வலிமையான வெள்ளிய தோலாலான கேடகத்தையும், |
அனைய பண்பின்
தானை மன்னர் | அத்தகைய பண்பினையுடைய
சேனையையுடைய வேந்தர் |
இனி யார் உளரோ
நின் முன்னும் இல்லை | இப்பொழுது வேறு யார்
உள்ளாரோ? உனக்கு முன்னாலும் இல்லை, |
மழை கொள
குறையாது புனல் புக நிறையாது | மேகங்கள்
உறிஞ்சிக்கொள்வதால் குறையாமலும், ஆற்று வெள்ளம் புகுவதால் நிறையாமலும்
இருக்கின்ற – |
விலங்கு வளி
கடவும் துளங்கு இரும் கமம் சூல் | குறுக்கிட்டுத்
தடுக்கும் காற்று செலுத்துதலால், அசைகின்ற, மிக நிறைந்த சூல்கொண்ட மேகங்களின் |
வயங்கு மணி
இமைப்பின் வேல் இடுபு | ஒளிர்கின்ற மணி போன்ற
மின்னலைப் போன்று வேலினைச் செலுத்தி, |
முழங்கு திரை
பனி கடல் மறுத்திசினோரே | – முழங்குகின்ற
அலைகளோடு கூடிய குளிர்ந்த கடலிடத்தில் பகைவரைப் போரிட்டு அழித்தவர்கள் – |
| |
# 46 பாட்டு
46 | # 46 பாட்டு 46 |
இழையர்
குழையர் நறும் தண் மாலையர் | அணிகலன்களையும்,
காதணிகளையும், நறிய குளிர்ந்த மாலையினையும் அணிந்த, |
சுடர் நிமிர்
அவிர் தொடி செறித்த முன்கை | நிமிர்ந்தெரியும்
சுடர் போன்று ஒளிரும் வளையல்களைச் செறிவாக அணிந்த முன்னங்கைகளையும், |
திறல் விடு
திரு மணி இலங்கு மார்பின் | மிகுந்த ஒளியை
விடுகின்ற அழகிய மணிமாலை பளிச்சிடும் மார்பினையும், |
வண்டு படு
கூந்தல் முடி புனை மகளிர் | வண்டுகள் மொய்க்கின்ற
கூந்தலைக் கொண்டையாக முடித்து அலங்கரித்துக்கொண்ட மகளிர், |
தொடை படு
பேரியாழ் பாலை பண்ணி | நரம்புகள் இறுக்கமாகக்
கட்டப்பட்ட பேரியாழில் பாலைப் பண்ணை அமைத்து, |
பணியா மரபின்
உழிஞை பாட | பகைவருக்குப் பணியாத
மரபினையுடைய உழிஞைத் திணையைப் பாட, |
இனிது
புறந்தந்து அவர்க்கு இன் மகிழ் சுரத்தலின் | அவர்களை நன்கு
உபசரித்து, அவர்க்கு இனிய கள்ளினை மிகுதியாகக் கொடுப்பதால் – |
சுரம் பல
கடவும் கரை வாய் பருதி | பாலைவழிகள் பலவற்றைக்
கடந்துசெலுத்தப்படும், தேய்ந்துபோன விளிம்புகளைக் கொண்ட தேர்ச்சக்கரங்கள் |
ஊர் பாட்டு
எண்ணில் பைம் தலை துமிய | தான் செல்லுகின்ற
போக்கில் எண்ணற்ற பசிய தலைகளைத் துண்டாக்க, |
பல் செரு
கடந்த கொல் களிற்று யானை | பல போர்களை வென்ற,
கொல்லுகின்ற களிறாகிய யானைகளையுடைய, |
கோடு நரல்
பௌவம் கலங்க வேல் இட்டு | சங்குகள் முழங்கும்
கடல் கலங்கும்படி, வேற்படையைச் செலுத்தி, |
உடை திரை
பரப்பில் படு கடல் ஓட்டிய | எழுந்து உடையும்
அலைகளையுடைய நீர்ப்பரப்பாகிய ஒலிக்கின்ற கடலில் பகைவரைத் தோற்றோடச் செய்த |
வெல் புகழ்
குட்டுவன் கண்டோர் | வெற்றியால் கிடைக்கும்
புகழை உடைய குட்டுவனைக் கண்டோர் |
செல்குவம்
என்னார் பாடுபு பெயர்ந்தே | செல்வோம் என்று
சொல்லமாட்டார், பாடிவிட்டுத் திரும்ப அவரது ஊருக்கு – |
| |
# 47 பாட்டு
47 | # 47 பாட்டு 47 |
அட்டு ஆனானே
குட்டுவன் அடு-தொறும் | பகைவரோடு போரிட்டது
போதும் என்று ஓயமாட்டான் குட்டுவன்; அவ்வாறு போரிடும்போதெல்லாம் |
பெற்று ஆனாரே
பரிசிலர் களிறே | பெற்று ஓயமாட்டார்,
பரிசிலர், களிறுகளை; |
வரை மிசை
இழிதரும் அருவியின் மாடத்து | மலைமேலிருந்து விழும்
அருவியினைப் போல, மாடங்களின் மேலிருந்து |
வளி முனை
அவிர்வரும் கொடி நுடங்கு தெருவில் | காற்றால்
அலைக்கப்படும் ஒளிவிடும் கொடிகள் ஆடி அசையும் தெருவில் |
சொரி சுரை
கவரும் நெய் வழிபு உராலின் | சொரிகின்ற சுரை
பெற்றுக்கொண்ட நெய் வழிந்து பரவுதலால் |
பாண்டில்
விளக்கு பரூஉ சுடர் அழல | பாண்டிலாகிய வட்ட
விளக்கில் பருத்த சுடர் ஆடிக்கொண்டு எரிய, |
நன் நுதல்
விறலியர் ஆடும் | நல்ல நெற்றியைக் கொண்ட
விறலியர் ஆடுகின்ற |
தொல் நகர்
வரைப்பின் அவன் உரை ஆனாவே | பழமையான மாளிகையுள்ள
ஊர்களில் அவனது புகழுரைகள் ஓயமாட்டா. |
| |
# 48 பாட்டு
48 | # 48 பாட்டு 48 |
பைம் பொன்
தாமரை பாணர் சூட்டி | பசும்பொன்னால் செய்த
தாமரைப் பூவைப் பாணருக்குச் சூட்டி, |
ஒண் நுதல்
விறலியர்க்கு ஆரம் பூட்டி | ஒளிவிடும்
நெற்றியையுடைய விறலிகளுக்குப் பொன்னாற் செய்த மாலைகளை அணிவித்து, |
கெடல் அரும்
பல் புகழ் நிலைஇ நீர் புக்கு | நிலையில்
தாழ்ந்துபோகாத பலவான புகழை நிலைநாட்டி, கடலுக்குள் சென்று, |
கடலொடு உழந்த
பனி துறை பரதவ | கடற்பகைவரோடு போரிட்டு
வெற்றிபெற்ற, குளிர்ந்த துறைகளைக் கொண்ட பரதவனே! |
ஆண்டு நீர்
பெற்ற தாரம் ஈண்டு இவர் | அங்கு, நீரில் பெற்ற
அரும் பொருள்களை, இங்கு இவரின் |
கொள்ளா
பாடற்கு எளிதின் ஈயும் | மனம்கொள்ளாப்
பாடலுக்கு எளிதிலே வழங்கும், |
கல்லா
வாய்மையன் இவன் என தத்தம் | கொடுத்தலையன்றித்
தனக்கென வைத்துக்கொள்ளுதலைக் கல்லாத வாய்மையையுடையவன் இவன் என்று, அவரவர், |
கைவல் இளையர்
நேர் கை நிரைப்ப | இசைப்பதில்
வல்லவர்களாகிய இளையவர்கள், தங்களின் ஒத்த கைகளை வரிசையாக நீட்ட, |
வணங்கிய சாயல்
வணங்கா ஆண்மை | வேண்டியவர்க்கு
வணங்கிய மென்மையினையும், வேண்டாதோர்க்கு வணங்காத ஆண்மையினையும், கொண்டு |
முனை சுடு கனை
எரி எரித்தலின் பெரிதும் | பகைவரின் ஊர்களைச்
சுடுகின்ற மிகுதியான நெருப்பை எரிப்பதால், மிகவும் |
இதழ் கவின்
அழிந்த மாலையொடு சாந்து புலர் | பூவிதழ்கள் தம்
அழகழிந்துபோன மாலையோடு, பூசிய சந்தனம் புலர்ந்துபோன |
பல் பொறி
மார்ப நின் பெயர் வாழியரோ | பலவாகிய
புள்ளிகளையுடைய மார்பையுடையவனே! உன் பெயர் வாழட்டும் – |
நின் மலை
பிறந்து நின் கடல் மண்டும் | உனது மலையில் பிறந்து,
உனது கடலில் சென்று கலக்கும் |
மலி புனல்
நிகழ்தரும் தீம் நீர் விழவின் | மிகுந்த நீர் நிறைந்த
ஆற்றில் நிகழ்த்தப்பெறும் இனிய நீராட்டு விழாவும் |
பொழில் வதி
வேனில் பேர் எழில் வாழ்க்கை | சோலைகளில்
தங்கியிருந்து செய்யும் வேனில் விழாவும் கொண்ட பெரிய அழகிய வாழ்க்கையில் |
மேவரு
சுற்றமோடு உண்டு இனிது நுகரும் | உன்னை விரும்பிச்
சூழ்ந்திருக்கும் சுற்றத்தாரோடு உண்டு, இனிமையாகத் துய்த்து, |
தீம் புனல்
ஆயம் ஆடும் | இனிய வெள்ளத்தில்,
மக்கள் கூட்டம் நீர்விளையாட்டு ஆடுகின்ற |
காஞ்சி அம்
பெரும் துறை மணலினும் பலவே | காஞ்சி என்னும்
ஆற்றின் அழகிய பெரிய துறையிலிருக்கும் மணலைக் காட்டிலும் பல ஆண்டுகள் – |
| |
# 49 பாட்டு
49 | # 49 பாட்டு 49 |
யாமும்
சேறுகம் நீயிரும் வம்-மின் | – நாங்களும்
செல்கிறோம், நீங்களும் வாருங்கள், |
துயலும் கோதை
துளங்கு இயல் விறலியர் | முன்னும் பின்னும்
அசைகின்ற மாலையினையும், பக்கவாட்டில் அசைந்தசைந்து நடக்கும் இயல்பினையும் உடைய
விறலியரே! |
கொளை வல்
வாழ்க்கை நும் கிளை இனிது உணீஇய | பாடும் திறத்தால்
வாழும் வாழ்க்கையினையுடைய உம்முடைய சுற்றத்தவர் இனிதே உண்பார்களாக – |
களிறு பரந்து
இயல கடு மா தாங்க | யானைப்படை பரந்து
செல்ல, விரைந்து செல்லும் குதிரைகள் தாங்கித்தாங்கி நடக்க, |
ஒளிறு கொடி
நுடங்க தேர் திரிந்து கொட்ப | ஒளிவிடும் கொடிகள்
அசைந்து ஆட, தேர்கள் விலகி விலகி வளைந்து செல்ல, |
எஃகு துரந்து
எழுதரும் கை கவர் கடும் தார் | வேல்களை எறிந்துகொண்டு
மேற்செல்லும், பகைவரின் பக்கவாட்டுப் படைகளை அழிக்கின்ற விரைவான
முன்னணிப்படையும், |
வெல் போர்
வேந்தரும் வேளிரும் ஒன்றுமொழிந்து | வெல்கின்ற போரினையுடைய
வேந்தரும், குறுநில மன்னரும், வஞ்சினம் கூறி, |
மொய் வளம்
செருக்கி மொசிந்து வரும் மோகூர் | மிகுந்த வலிமையால்
மனம் செருக்கி, ஒன்றுகூடி வருகின்ற மோகூர் மன்னனின் |
வலம் படு
குழூஉ நிலை அதிர மண்டி | வெற்றிதரும் சேனையின்
கூட்டம் கலைந்து சிதையும்படி நெருங்கித் தாக்கி, |
நெய்த்தோர்
தொட்ட செம் கை மறவர் | இரத்தத்தைத் தொட்டதால்
சிவந்த கையையுடைய மறவர்களின் |
நிறம் படு
குருதி நிலம் படர்ந்து ஓடி | மார்பிலிருந்து
ஒழுகும் குருதி, நிலத்தில் படர்ந்து ஓடி, |
மழை நாள்
புனலின் அவல் பரந்து ஒழுக | மழை நாளின் வெள்ளம்
போலச் செங்கலங்கலாக, பள்ளங்களை நோக்கிப் பாய, |
படு பிணம்
பிறங்க பாழ் பல செய்து | செத்து விழுகின்ற
பிணங்கள் குவியும்படியாக மிகுதியான சீரழிவைச் செய்து, |
படு கண்
முரசம் நடுவண் சிலைப்ப | ஒலிக்கின்ற கண்ணையுடைய
முரசு போர்க்களத்து நடுவே வெற்றியை முழங்க, |
வளன் அற
நிகழ்ந்து வாழுநர் பலர் பட | பகைவரின் வளம் எல்லாம்
அற்றுப்போகுமாறு கொள்ளை நிகழ, இருந்து வாழக்கூடிய இளையர் பலர் இறக்கும்படி
செய்து, |
கரும் சினை
விறல் வேம்பு அறுத்த | கரிய கிளைகளையும்,
வலிமையினையும் உடைய வேம்பினை வெட்டி வீழ்த்திய, |
பெரும் சின
குட்டுவன் கண்டனம் வரற்கே | மிகுந்த சினத்தைக்
கொண்ட குட்டுவனைக் கண்டு வருவதற்காக – |
| |
# 50 பாட்டு
50 | # 50 பாட்டு 50 |
மா மலை
முழக்கின் மான் கணம் பனிப்ப | பெரிய மலையில்
மேகங்களின் முழக்கத்தினால் விலங்குக் கூட்டம் அஞ்சி நடுங்க, |
கால் மயங்கு
கதழ் உறை ஆலியொடு சிதறி | காற்றோடு கலந்து
வேகமாகப் பெய்யும் மழை, ஆலங்கட்டிகளோடு சிதறிப் பொழிய, |
கரும்பு அமல்
கழனிய நாடு வளம் பொழிய | கரும்புகள் நெருங்கி
வளர்ந்த கழனிகளையுடைய நாடு வளத்தை மிகுதியாகத் தர, |
வளம் கெழு
சிறப்பின் உலகம் புரைஇ | வளம் பொருந்திய
சிறப்பினையுடைய உலகத்தைப் பேணிப் பாதுகாத்து, |
செம் குணக்கு
ஒழுகும் கலுழி மலிர் நிறை | நேர் கிழக்காக ஓடும்
கலங்கலான நிறைந்த வெள்ளத்தையுடைய, |
காவிரி
அன்றியும் பூ விரி புனல் ஒரு | காவிரியோடு கூட,
பூக்கள் பரந்த வெள்ளத்தையுடைய ஆறுகள் |
மூன்று உடன்
கூடிய கூடல் அனையை | மூன்றும் ஒன்று கூடும்
முக்கூடல் போன்றவன் நீ! |
கொல் களிற்று
உரவு திரை பிறழ அ வில் பிசிர | கொல்லுகின்ற களிறுகள்
வலிமையுள்ள கடலலைகளாய் நடந்துவர, அழகிய வில்கள் பிசிர் போல் விளங்க, |
புரை தோல்
வரைப்பின் எஃகு மீன் அவிர்வர | உயர்ந்த தோலாகிய
கேடகங்களுக்கு மேல்பக்கத்தில் வேல்முனைகள் மீன்களாய் மின்னியொளிர, |
விரவு பணை
முழங்கு ஒலி வெரீஇய வேந்தர்க்கு | பலவாறான முரசங்கள்
கலந்து முழங்குகின்ற ஒலியினைக் கேட்டு வெருண்டுபோன வேந்தர்களுக்குப் |
அரணம் ஆகிய
வெருவரு புனல் தார் | பாதுகாப்பாகிய அச்சம்
தரும் வெள்ளமாகிய முன்னணிப்படை, |
கல்
மிசையவ்வும் கடலவும் பிறவும் | மலையின் மேலும்,
கடலிலும், பிற இடங்களிலும் உள்ள |
அருப்பம்
அமைஇய அமர் கடந்து உருத்த | அரண்கள் அமைந்த
போர்களை வென்று, அச்சம் பொருந்திய |
ஆள் மலி
மருங்கின் நாடு அகப்படுத்து | வீரர்கள் நிறைந்த
இடங்களையுடைய நாடுகளைக் கைப்பற்றி, |
நல் இசை நனம்
தலை இரிய ஒன்னார் | நல்ல புகழ், இந்த
அகன்ற உலகில், கெட்டழிய, பகைவரின் |
உருப்பு அற
நிரப்பினை ஆதலின் சாந்து புலர்பு | சினமாகிய தீ
முற்றிலும் அணைந்துபோகுமாறு நிறைவுசெய்தாய்! எனவே பூசிய சந்தனம் புலர்ந்துபோக, |
வண்ணம் நீவி
வகை வனப்பு உற்ற | மேனியின் ஒப்பனைகள்
துடைக்கப்பட, பலவகையாக அழகு சேர்ந்த |
வரி ஞிமிறு
இமிரும் மார்பு பிணி மகளிர் | கோடுகளைக் கொண்ட
வண்டுகள் ஒலிக்கும், உன் மார்பினால் ஒன்றுசேர்க்கப்படும் மகளிரின் |
விரி மென்
கூந்தல் மெல் அணை வதிந்து | விரிந்த மெல்லிய
கூந்தலான மென்மையான படுக்கையில் இருந்து, |
கொல் பிணி
திருகிய மார்பு கவர் முயக்கத்து | வருத்துகின்ற காமமாகிய
நோயை நீக்கும்பொருட்டு, அவரின் மார்பைச் சேர்ந்திருக்கும் அணைப்பினால் |
பொழுது கொள்
மரபின் மென் பிணி அவிழ | இரவுப்பொழுதின் பயனைக்
கொள்ளும் முறைமையினால் – சிறிய தூக்கத்திலிருந்து விழிக்க |
எவன் பல
கழியுமோ பெரும பல் நாள் | எத்தனை நாட்கள்
கழியுமோ? பெருமானே! பல நாட்கள், |
பகை
வெம்மையின் பாசறை மரீஇ | பகைவர்மீது கொண்ட
பகைமையின் வெம்மையினால், பாசறையில் தங்கியிருப்பதால் |
பாடு அரிது
இயைந்த சிறு துயில் இயலாது | தூக்கம் என்பது அரிதாக
அமைந்த சிறிய துயிலும் கொள்ள இயலாமல், |
கோடு முழங்கு
இமிழ் இசை எடுப்பும் | சங்கொலி முழக்கமும்,
பிற கருவிகளின் இனிய ஓசையும் எழுப்பிவிடும் |
பீடு கெழு
செல்வம் மரீஇய கண்ணே | பெருமை பொருந்திய
போர்ச்செல்வத்தில் பழகிப்போன உன் கண்களுக்கு – |
| |
| |