#
251 குறிஞ்சி மதுரை பெருமருதிள நாகனார் | #
251 குறிஞ்சி மதுரை பெருமருதிள நாகனார் |
| |
நெடு
நீர் அருவிய கடும் பாட்டு ஆங்கண் | நெடிதாய்
விழும் நீரைக்கொண்ட அருவியையுடைய மிகுந்த ஒலி விளங்கும் இடத்தில் உள்ள |
பிணி
முதல் அரைய பெரும் கல் வாழை | ஊன்றிப்
பிணிப்புக்கொண்ட அடிப்பகுதியையுடையதும், பெரிய மலையில் உண்டானதுமான வாழையின் |
கொழு
முதல் ஆய் கனி மந்தி கவரும் | முழுமையும்
கொழுத்த அழகிய பழத்தை குரங்குகள் கவர்ந்துண்ணும் |
நன்
மலை நாடனை நயவா யாம் அவன் | நல்ல
மலைக்குரிய நாடனை விரும்பிய நாங்கள், அவன்மீதுகொண்ட |
நனி
பேர் அன்பின் நின் குரல் ஓப்பி 5 | மிகுந்த
பேரளவான அன்பினால், உன்னுடைய கதிர்களைக் கிளிகள் கொத்தாதவாறு ஓட்டி |
நின்
புறங்காத்தலும் காண்போய் நீ என் | உன்னைப்
பாதுகாத்து வருதலைக் காண்கிறாய்! நீ, எனது |
தளிர்
ஏர் மேனி தொல் கவின் அழிய | தளிர்
போன்ற அழகான மேனியின் நெடுநாளைய அழகு அழிந்துபோனதாக, |
பலி
பெறு கடவுள் பேணி கலி சிறந்து | பலியைப்
பெறும் கடவுளைத் தொழுது, ஆரவாரத்துடன் வெறியெடுக்க, |
நுடங்கு
நிலை பறவை உடங்கு பீள் கவரும் | கதிர்களால்
ஈர்க்கப்பட்ட பறவைகள் மொத்தமாக இளங்கதிர்களைக் கவர்ந்துபோகும், |
தோடு
இடம் கோடாய் கிளர்ந்து 10 | அதனால்
தோடு பொதிந்த உன் கதிர்களை வளைக்காதே! நிமிர்ந்து நின்று |
நீடினை
விளைமோ வாழிய தினையே | நெடுநாள்
கழித்து விளைவாயாக, வாழ்க , தினையே! |
| |
#
252 பாலை அம்மெய்யன் நாகனார் | #
252 பாலை அம்மெய்யன் நாகனார் |
| |
உலவை
ஓமை ஒல்கு நிலை ஒடுங்கி | கிளைகள்
பரந்த ஓமை மரத்தின் காய்ந்த நிலையில் அதனை ஒட்டிக்கொண்டு |
சிள்வீடு
கறங்கும் சேய் நாட்டு அத்தம் | சில்வண்டு
ஓயாது ஒலிக்கும், தொலைவான நாட்டுக்குச் செல்லும் வழியில் |
திறம்
புரி கொள்கையொடு இறந்து செயின் அல்லது | திட்டமிட்டுச்
செயலாற்றும் கொள்கையுடன் சென்று பொருள்சேர்த்தால் அன்றி |
அரும்
பொருள் கூட்டம் இருந்தோர்க்கு இல் என | அரிய
பொருளைச் சேர்ப்பது சோம்பியிருப்போர்க்கு இல்லை என்று, |
வலியா
நெஞ்சம் வலிப்ப சூழ்ந்த 5 | இதுவரை
துணியாத நெஞ்சம் இப்போது முடிவுசெய்ய, ஆராய்ந்து தொடங்கிய |
வினை
இடை விலங்கல போலும் புனை சுவர் | செயல்முனைப்பினைத்
தடுக்கவில்லை போலும் – தீட்டப்பட்ட சுவரில் உள்ள |
பாவை
அன்ன பழி தீர் காட்சி | சித்திரப்பாவை
போன்ற குற்றமற்ற தோற்றத்தையும், |
ஐது
ஏய்ந்து அகன்ற அல்குல் மை கூர்ந்து | மென்மை
பொருந்தி அகன்ற அல்குலையும், மையிட்டு |
மலர்
பிணைத்து அன்ன மா இதழ் மழை கண் | மலர்களைக்
கட்டிவைத்தது போன்ற கரிய இமைகளைக் கொண்ட குளிர்ச்சியான கண்களையும், |
முயல்
வேட்டு எழுந்த முடுகு விசை கத நாய் 10 | முயல்
வேட்டைக்காகப் புறப்பட்டு விரைவாகும் வேகங்கொண்ட சினமுள்ள நாயின் |
நன்
நா புரையும் சீறடி | நல்ல
நாவினை ஒத்த சிறிய பாதங்களையும், |
பொம்மல்
ஓதி புனை_இழை குணனே | பொங்கிச்
செறிந்த கூந்தலையும், புனையப்பட்ட அணிகலன்களையும் கொண்ட இவளது குணநலன் – |
| |
#
253 குறிஞ்சி கபிலர் | #
253 குறிஞ்சி கபிலர் |
| |
புள்ளு
பதி சேரினும் புணர்ந்தோர் காணினும் | பறவைகள்
தம் கூடுகளைச் சென்றடைவதைப் பார்த்தாலும், கணவனும் மனைவியுமாய்ச்
சேர்ந்திருப்போரைக் கண்டாலும், |
பள்ளி
யானையின் வெய்ய உயிரினை | படுத்திருக்கும்
யானையைப் போல பெருமூச்சு விடுகின்றாய்! |
கழிபட
வருந்திய எவ்வமொடு பெரிது அழிந்து | மிகுதிப்பட
வருத்தமுற்ற துன்பத்துடனே பெரிதும் மனங்குன்றி, |
எனவ
கேளாய் நினையினை நீ நனி | நான்
சொல்லுவதையும் கேளாது, வேறு எதனையோ நினைக்கின்றாய் நீ! மிகவும் |
உள்ளினும்
பனிக்கும் ஒள் இழை குறு_மகள் 5 | நினைத்து
நினைத்து மனம் நடுங்குகின்ற ஒள்ளிய அணிகலன்களைக் கொண்ட இளையவளான இவள் – |
பேர்
இசை உருமொடு மாரி முற்றிய | பெரிய
முழக்கத்தைச் செய்யும் இடியுடன் மழை மிகுந்து பெய்யும், |
பல்
குடை கள்ளின் வண் மகிழ் பாரி | பலவான
பனவோலைக்குடையில் உண்ணும் கள்ளினால் மிகுந்த மகிழ்ச்சியுற்ற பாரியின் |
பலவு
உறு குன்றம் போல | பலாமரங்கள்
விளங்கும் பறம்பு மலையைப் போல |
பெரும்
கவின் எய்திய அரும் காப்பினளே | பெரும்
அழகு வாய்க்கப்பெற்று இப்போது அரிய காவலுக்குட்படுத்தப்பட்டிருக்கிறாள். |
| |
#
254 நெய்தல் உலோச்சனார் | #
254 நெய்தல் உலோச்சனார் |
| |
வண்டல்
தைஇயும் வரு திரை உதைத்தும் | குறுமணலில்
வீடுகட்டி விளையாடியும், வருகின்ற அலைகளை எற்றிவிளையாடியும், |
குன்று
ஓங்கு வெண் மணல் கொடி அடும்பு கொய்தும் | குன்றைப்
போல் ஓங்கிய வெள்ளிய மணலில் படர்ந்த அடும்பு மலர்களைக் கொய்தும், |
துனி
இல் நன் மொழி இனிய கூறியும் | வெறுப்பை
விளைக்காத நல்ல மொழிகளை இனிமையாகக் கூறியும், |
சொல்
எதிர் பெறாஅய் உயங்கி மெல்ல | அச்சொற்களுக்கு
மறுமொழி கிடைக்கப்பெறாதவனாய் மனம்துவண்டு, மெதுவாக |
செலீஇய
செல்லும் ஒலி இரும் பரப்ப 5 | திரும்பிச்
செல்வதற்காகப் புறப்படும், ஒலிக்கின்ற பெரிய கடற்பரப்பினைச் சேர்ந்தவனே! |
உமணர்
தந்த உப்பு நொடை நெல்லின் | உப்பு
விற்பவர்கள் கொண்டுவந்த உப்புக்கு மாற்றான நெல்லைக் குற்றிச் செய்த |
அயினி
மா இன்று அருந்த நீல | அரிசிக்குருணையை
உன் குதிரைகள் இன்று உண்ண, நீல மலர்களின் |
கணம்
நாறு பெரும் தொடை புரளும் மார்பின் | தொகுதி
மணக்கின்ற பெரிய பூமாலை புரளுகின்ற மார்புக்குத் |
துணை
இலை தமியை சேக்குவை அல்லை | துணையில்லாதவனாய்
தனியனாய்த் தங்க மாட்டாய்!; |
நேர்
கண் சிறு தடி நீரின் மாற்றி 10 | நேராக
அமைந்த இடத்தையுடைய சிறிய பாத்திகளில் கடல்நீரைப் பாய்ச்சி |
வானம்
வேண்டா உழவின் எம் | மழை
தேவைப்படாத வேளாண்மை செய்யும் எமது |
கானல்
அம் சிறுகுடி சேந்தனை செலினே | கடற்கரைச்
சோலையிலுள்ள அழகிய சிறிய ஊருக்கு வந்துசேர்ந்து தங்கிச்சென்றால் – |
| |
#
255 குறிஞ்சி ஆலம்பேரி சாத்தனார் | #
255 குறிஞ்சி ஆலம்பேரி சாத்தனார் |
| |
கழுது
கால்கிளர ஊர் மடிந்தன்றே | பேயினங்கள்
நடமாடித்திரிய ஊர் துயில்கொள்ளுகின்றது; |
உரு
கெழு மரபின் குறிஞ்சி பாடி | அச்சம்பொருந்திய
மரபையுடைய குறிஞ்சிப்பண்ணைப் பாடியவாறு |
கடி
உடை வியல் நகர் கானவர் துஞ்சார் | காவலையுடைய
அகன்ற ஊரின் கானவர் தூங்கமாட்டார்; |
வய
களிறு பொருத வாள் வரி உழுவை | வலிமைகொண்ட
யானையோடு போரிட்ட வாளைப்போன்ற வரிகளையுடைய புலி |
கல்
முகை சிலம்பில் குழுமும் அன்னோ 5 | பாறைக்
குகைகள் கொண்ட மலைச்சரிவில் கூடியிருக்கும்; ஐயோ! |
மென்
தோள் நெகிழ்ந்து நாம் வருந்தினும் இன்று அவர் | நமது
மென்மையான தோள்கள் தளர்ந்து நாம் வருந்தினாலும், இன்று நம் காதலர் |
வாரார்
ஆயினோ நன்று-மன் தில்ல | வராமலிருந்தால்
நல்லதுதான் – |
உயர்
வரை அடுக்கத்து ஒளிறுபு மின்னி | உயர்ந்த
மலைகளைக்கொண்ட மலைத்தொடரில் ஒளிறும்படி மின்னி, |
பெயல்
கால்மயங்கிய பொழுது கழி பானாள் | மழை
காற்றோடு கலந்தடித்த பொழுது சென்ற நள்ளிரவில் |
திரு
மணி அரவு தேர்ந்து உழல 10 | அழகிய
மணி கொண்ட பாம்பு அதனைத் தேடி வருந்த, |
உருமு
சிவந்து எறியும் ஓங்கு வரை ஆறே | இடி
சினந்து முழங்கும் உயர்ந்த மலைப்பாதையில் – |
| |
#
256 பாலை பாலை பாடிய பெருங்கடுங்கோ | #
256 பாலை பாலை பாடிய பெருங்கடுங்கோ |
| |
நீயே
பாடல் சான்ற பழி தபு சீறடி | நீதான்,
புகழ்பெற்ற குற்றம் தீர்ந்த சிறிய அடிகளையும், |
அல்கு
பெரு நலத்து அமர்த்த கண்ணை | நிலைத்திருக்கும்
பெரிதான நலங்கள் உள்ள அமைதிகொண்ட கண்களையும் உடையவள்; |
காடே
நிழல் கவின் இழந்த அழல் கவர் மரத்த | வேனிலின்
காடோ, நிழல்தரும் அழகினை இழந்த, வேனில் வெம்மையால் கரிந்துபோன, மரங்களைக்
கொண்டு, |
புலம்பு
வீற்றிருந்து நலம் சிதைந்தனவே | நடமாட்டமற்ற
வெறுமை வீற்றிருக்க பொலிவழிந்து இருக்கும்; |
இ
நிலை தவிர்ந்தனம் செலவே வை நுதி5 | இந்த
நிலையில் தவிர்த்துவிட்டோம் பயணத்தை; கூர்மையான நுனியையுடைய |
களவுடன்
கமழ பிடவு தளை அவிழ | களாவின்
அரும்பு மலர்ந்து கமழ, பிடவமும் கட்டவிழ்ந்து மலர, |
கார்
பெயல் செய்த காமர் காலை | கார்காலம்
மழை பொழிந்த இனிதான மாலைப்பொழுதில், |
மட
பிணை தழீஇய மா எருத்து இரலை | தன்னுடைய
இளம் பெண்மானைத் தழுவிய பெரிய பிடரியைக் கொண்ட ஆண்மான் |
காழ்
கொள் வேலத்து ஆழ் சினை பயந்த | வயிரம்
பாய்ந்த வேலமரத்தின் தாழ்ந்த கிளைகள் கொடுத்த |
கண்
கவர் வரி நிழல் வதியும் 10 | கண்ணைப்
பறிக்கும் வரிகள்கொண்ட நிழலில் தங்கியிருக்கும் |
தண்
படு கானமும் தவிர்ந்தனம் செலவே | குளிர்ச்சி
பொருந்திய கார்காலத்துக் காட்டினிலும் தவிர்த்துவிட்டோம் பயணத்தை. |
| |
#
257 குறிஞ்சி வண்ணக்கன் சோருமருங்குமரனார் | #
257 குறிஞ்சி வண்ணக்கன் சோருமருங்குமரனார் |
| |
விளிவு
இல் அரவமொடு தளி சிறந்து உரைஇ | குறையாத
முழக்கத்துடன் மழைத்துளி மிகவும் பெய்து பரக்க, |
மழை
எழுந்து இறுத்த நளிர் தூங்கு சிலம்பின் | மழை
முகில்கள் எழுந்து தங்கிய குளிர்ச்சி தவழும் மலைச் சரிவில், |
கழை
அமல்பு நீடிய வான் உயர் நெடும் கோட்டு | மூங்கில்கள்
செறிவாக உயர்ந்துநிற்கும் வானளாவ உயர்ந்த நெடிய உச்சியில் |
இலங்கு
வெள் அருவி வியன் மலை கவாஅன் | ஒளிறும்
வெண்மையான அருவியையுடைய அகன்ற மலையுச்சியின் சரிவில், |
அரும்பு
வாய் அவிழ்ந்த கரும் கால் வேங்கை 5 | அரும்புகள்
மலர்ந்த கரிய அடிமரத்தையுடைய வேங்கைமரத்தின் |
பொன்
மருள் நறு வீ கல் மிசை தாஅம் | பொன்னைப்
போன்ற மணமுள்ள பூக்கள் பாறை மீது பரவிக்கிடக்கும் |
நன்
மலை நாட நயந்தனை அருளாய் | நல்ல
மலைநாட்டைச் சேர்ந்தவனே! எம்மை விரும்பினையெனினும் அருள்செய்யமாட்டாய்! |
இயங்குநர்
மடிந்த அயம் திகழ் சிறு நெறி | வழிச்செல்வோர்
அற்றுப்போன நீர் நிறைந்த பள்ளங்கள் உள்ள சிறிய வழியில், |
கடு
மா வழங்குதல் அறிந்தும் | கொலைத்தன்மையுள்ள
விலங்குகள் திரிவதை அறிந்திருந்தும் |
நடுநாள்
வருதி நோகோ யானே 10 | நடுயாமத்தில்
வருகிறாய், வருந்துகிறேன் நான். |
| |
#
258 நெய்தல் நக்கீரர் | #
258 நெய்தல் நக்கீரர் |
| |
பல்
பூ கானல் பகற்குறி மரீஇ | நிறையப்
பூக்களைக்கொண்ட கடற்கரைச் சோலையில் நீங்கள் பகலில் சந்திக்கும் இடத்தைப்
பார்த்துவிட்டுச் |
செல்வல்
கொண்க செறித்தனள் யாயே | செல்வாயாக,
தலைவனே! தலைவியை வீட்டிற்குள் அடைத்துவைத்துவிட்டாள் அவளின் தாய் |
கதிர்
கால் வெம்ப கல் காய் ஞாயிற்று | கதிர்கள்
கால்களை வெம்பிப்போகச்செய்ய, பாறைகளைச் சூடேற்றும் ஞாயிற்றுப் பகலில் |
திரு
உடை வியல் நகர் வரு விருந்து அயர்-மார் | செல்வம்
மிக்க தம் பெரிய வீட்டில், வந்திருக்கின்ற விருந்தினரை உபசரிக்க, |
பொன்
தொடி மகளிர் புறங்கடை உகுத்த5 | பொன்
வளையல் அணிந்த மகளிர் வீட்டுக் கொல்லைப்புறத்தில் உதிர்த்துவிட்ட, |
கொக்கு
உகிர் நிமிரல் மாந்தி எல் பட | கொக்கின்
நகம் போன்ற சோற்றை விரும்பி உண்டு, பொழுது மறைய |
அகல்
அங்காடி அசை நிழல் குவித்த | அகன்ற
மீன்கடையில் நீண்டுசெல்லும் நிழலில் குவித்த |
பச்சிறா
கவர்ந்த பசும் கண் காக்கை | பசிய
இறாமீனைக் கவர்ந்த பசுமையான கண்களைக்கொண்ட காக்கை, |
தூங்கல்
வங்கத்து கூம்பில் சேக்கும் | அசைவாடிக்கொண்டிருக்கும்
தோணியின் பாய்மரக்கூம்பினில் சென்றுதங்கும் |
மருங்கூர்
பட்டினத்து அன்ன இவள் 10 | மருங்கூர்ப்
பட்டினத்தைப் போன்ற இவளது |
நெருங்கு
ஏர் எல் வளை ஓடுவ கண்டே | நெருக்கமாயுள்ள
அழகிய ஒளிவிடும் வளையல்கள் கழன்றோடுவதைக் கண்டு – |
| |
#
259 குறிஞ்சி கொற்றம் கொற்றனார் | #
259 குறிஞ்சி கொற்றம் கொற்றனார் |
| |
யாங்கு
செய்வாம்-கொல் தோழி பொன் வீ | என்ன
செய்வோம் தோழி? பொன்னிற மலர்களைக்கொண்ட |
வேங்கை
ஓங்கிய தேம் கமழ் சாரல் | வேங்கை
மரங்கள் உயர்ந்துவளர்ந்த தேன் மணக்கும் மலைச்சாரலில் |
பெரும்
கல் நாடனொடு இரும் புனத்து அல்கி | பெரிய
மலைநாட்டினனோடு பெரிய தினைப்புனத்தில் தங்கி, |
செ
வாய் பைம் கிளி ஓப்பி அ வாய் | சிவந்த
வாயையுடைய பச்சைக்கிளிகளை ஓட்டி, அங்கே உள்ள |
பெரு
வரை அடுக்கத்து அருவி ஆடி 5 | பெரிய
மலைகளின் மலையிடுக்கில் உள்ள அருவியில் நீராடி, |
சாரல்
ஆரம் வண்டு பட நீவி | மலைச்சாரலில்
உள்ள சந்தனத்தை வண்டுகள் மொய்க்கும்படி பூசி, |
பெரிது
அமர்ந்து இயைந்த கேண்மை சிறு நனி | மிகவும்
விரும்பிச் செய்துகொண்ட நட்பு, சிறிது காலத்தில் |
அரிய
போல காண்பேன் விரி திரை | அரியது
ஆகிவிடுவது போலக் காண்கிறேன்; விரிந்த அலைகளையுடைய |
கடல்
பெயர்ந்து அனைய ஆகி | கடல்
பின்வாங்கிக் காய்ந்தநிலம் ஆகியது போல ஆகி |
புலர்
பதம் கொண்டன ஏனல் குரலே 10 | காய்ந்து
புலரும் பருவத்தை எய்தின தினையின் கதிர்கள். |
| |
#
260 மருதம் பரணர் | #
260 மருதம் பரணர் |
| |
கழுநீர்
மேய்ந்த கரும் தாள் எருமை | கழுநீர்
மலரை மேய்ந்த கரிய அடியினையுடைய எருமை, |
பழன
தாமரை பனி மலர் முணைஇ | பொய்கையில்
பூத்த தாமரையின் குளிர்ச்சியான மலரைத் திகட்டும்படி உண்டுவெறுத்து, |
தண்டு
சேர் மள்ளரின் இயலி அயலது | படையில்
சேர்ந்த மறவரைப் போல் செருக்கோடு நடந்து, அருகிலிருக்கும் |
குன்று
சேர் வெண் மணல் துஞ்சும் ஊர | குன்று
போன்ற வெள்ளை மணலில் படுத்துறங்கும் ஊரினைச் சேர்ந்தவனே! |
வெய்யை
போல முயங்குதி முனை எழ 5 | என்மேல்
மிகவும் விருப்பமுள்ளவன் போல என்னைத் தழுவவருகிறாய், முனைப்பு மிக, |
தெவ்வர்
தேய்த்த செ வேல் வயவன் | பகைவரை
அழித்த சிவந்த வேற்படையையுடைய வலிமையுள்ள வீரனுடைய |
மலி
புனல் வாயில் இருப்பை அன்ன என் | மிகுந்த
நீர் அமைந்த வாயிலைக்கொண்ட இருப்பையூர் போன்ற என்னுடைய |
ஒலி
பல் கூந்தல் நலம் பெற புனைந்த | தழைத்த
பலவான கூந்தல் அழகுபெற அலங்கரித்த |
முகை
அவிழ் கோதை வாட்டிய | மொட்டுக்கள்
மலர்ந்த பூமாலையை வாடும்படி செய்த |
பகைவன்-மன்
யான் மறந்து அமைகலனே 10 | பகைவனல்லவா
நீ? நான் மறக்கமாட்டேன்! |
| |
#
261 குறிஞ்சி சேந்தன் பூதனார் | #
261 குறிஞ்சி சேந்தன் பூதனார் |
| |
அருள்
இலர் வாழி தோழி மின்னு வசிபு | அருள்
இல்லாதவர் அவர், வாழ்க தோழியே! மின்னல் பிளக்க, |
இருள்
தூங்கு விசும்பின் அதிரும் ஏறொடு | இருள்
நிலைத்திருக்கும் வானத்தில் அதிரும் இடியுடன் |
வெம்
சுடர் கரந்த கமம் சூல் வானம் | வெம்மையான
ஞாயிற்றை மறைத்த நிறைந்த சூல்கொண்ட மேகங்கள் |
நெடும்
பல் குன்றத்து குறும் பல மறுகி | நெடிய
பலவான குன்றுகளில் சிறியதாகவும் பலவாகவும் அலைந்துதிரிந்து, |
தா
இல் பெரும் பெயல் தலைஇய யாமத்து 5 | இடையறவு
இன்றி பெரும் மழையாகப் பெய்யத்தொடங்கிய நடுயாமத்தில், |
களிறு
அகப்படுத்த பெரும் சின மாசுணம் | யானையை
இறுக வளைத்த பெரிய சினங்கொண்ட மலைப்பாம்பு |
வெளிறு
இல் காழ் மரம் பிணித்து நனி மிளிர்க்கும் | உட்கூடு
இல்லாமல் நன்கு வயிரம் பாய்ந்த மரத்தோடு சேர்த்துப் பிணித்து மிகவும்
புரண்டுகொண்டிருக்கும் |
சாந்தம்
போகிய தேம் கமழ் விடர் முகை | சந்தன
மரங்கள் ஓங்கிவளர்ந்த தேன் கமழும் மலைப்பிளவுகளின் மொட்டுக்களைக் கொண்ட |
எருவை
நறும் பூ நீடிய | எருவையின்
நறிய பூக்கள் நெடுக மலர்ந்துள்ள |
பெரு
வரை சிறு நெறி வருதலானே 10 | பெரிய
மலையில் உள்ள சிறிய பாதையில் வருவதால் – |
| |
#
262 பாலை பெருந்தலை சாத்தனார் | #
262 பாலை பெருந்தலை சாத்தனார் |
| |
தண்
புன கருவிளை கண் போல் மா மலர் | குளிர்ச்சியான
கொல்லையில் வளர்ந்த கருவிளம்பூவின், கண் போல மலர்ந்த, பெரிய பூவானது |
ஆடு
மயில் பீலியின் வாடையொடு துயல்வர | ஆடுகின்ற
மயிலின் தோகை போல வாடைக்காற்றில் முன்னும்பின்னும் அசைய, |
உறை
மயக்கு_உற்ற ஊர் துஞ்சு யாமத்து | அத்துடன்
சேர்ந்து தூறல்மழையும் கலந்து தூவ, ஊரே துயில்கொள்ளும் நடுயாமத்தில், |
நடுங்கு
பிணி நலிய நல் எழில் சாஅய் | நடுங்கவைக்கும்
காதல்நோய் வருத்த, நல்ல அழகெல்லாம் தொலைந்து, |
துனி
கூர் மனத்தள் முனி படர் உழக்கும் 5 | கசந்துபோன
மனத்தினளாய் வெறுப்பும் துன்பமும் வருத்துகின்ற, |
பணை
தோள் அரும்பிய சுணங்கின் கணை கால் | பருத்த
தோள்களில் அரும்பிய தேமலும், திரட்சியையுடைய தண்டுகளையுடைய |
குவளை
நாறும் கூந்தல் தே மொழி | குவளைமலர்கள்
மணக்கும் கூந்தலும், இனிய மொழிகளும் கொண்ட |
இவளின்
தீர்ந்தும் ஆள்வினை வலிப்ப | இவளை
விட்டுப் பிரிந்தும், பொருளீட்டவேண்டும் எனும் ஆர்வம் தூண்டிவிட, |
பிரிவல்
நெஞ்சு என்னும் ஆயின் | பிரிந்துசெல்வோம்
என்று நெஞ்சு சொன்னால் |
அரிது
மன்று அம்ம இன்மையது இளிவே 10 | பொறுத்தற்கரியது
நிச்சயமாக, இல்லாமையினால் பிறக்கும் இழிவான நிலை. |
| |
#
263 நெய்தல் இளவெயினனார் | #
263 நெய்தல் இளவெயினனார் |
| |
பிறை
வனப்பு இழந்த நுதலும் யாழ நின் | பிறை
போன்ற தன் வனப்பை இழந்த நெற்றியையும், உனது |
இறை
வரை நில்லா வளையும் மறையாது | முன்கையின்
இறுதிவரை நில்லாத வளையையும், ஒளிக்காமல் |
ஊர்
அலர் தூற்றும் கௌவையும் நாண் விட்டு | ஊரினர்
பழிதூற்றும் அவதூறுகளைம், நாணத்தைவிட்டு |
உரை
அவற்கு உரையாம் ஆயினும் இரை வேட்டு | இவ்வாறாயின
என்று அவருக்குச் சொல்லாதுவிட்டாலும், இரையை விரும்பி |
கடும்
சூல் வயவொடு கானல் எய்தாது 5 | முதிர்ந்த
சூல்கொண்ட மசக்கைவிருப்போடு கடற்கரைச் சோலைக்குச் செல்லாமல் |
கழனி
ஒழிந்த கொடு வாய் பேடைக்கு | வயற்காடுகளிலேயே
தங்கிவிட்ட வளைந்த வாயைக் கொண்ட தன் பெண்நாரைக்கு |
முட
முதிர் நாரை கடல் மீன் ஒய்யும் | உடல்வளைந்த
ஆண்நாரை கடலில் மீன்பிடித்துக்கொணர்ந்து கொடுக்கும் |
மெல்லம்புலம்பன்
கண்டு நிலைசெல்லா | மென்புலமான
நெய்தல்நிலத்தலைவனைக் கண்டவுடன் நிலைகொள்ளாமல், |
கரப்பவும்_கரப்பவும்
கைம்மிக்கு | மறைக்க
மறைக்கக் கட்டுமீறிச் |
உரைத்த
தோழி உண்கண் நீரே 10 | சொல்லிவிட்டன
தோழி! மையுண்டகண்களிலிருந்து வடிந்த கண்ணீர். |
| |
#
264 பாலை ஆவூர் காவிதிகள் சாதேவனார் | #
264 பாலை ஆவூர் காவிதிகள் சாதேவனார் |
| |
பாம்பு
அளை செறிய முழங்கி வலன் ஏர்பு | பாம்புகள்
தம் புற்றுக்குள் சென்று பதுங்குமாறு முழக்கமிட்டு, வலமாக மேலெழுந்து |
வான்
தளி பொழிந்த காண்பு இன் காலை | வானம்
மழையைப் பொழிந்த காண்பதற்கு இனிய பொழுதில், |
அணி
கிளர் கலாவம் ஐது விரித்து இயலும் | அழகு
விளங்கும் தன் தோகையை மெதுவாக விரித்து நடந்துசெல்லும் |
மணி
புரை எருத்தின் மஞ்ஞை போல நின் | நீலமணி
போன்ற கழுத்தைக் கொண்ட மயிலைப் போல, உன் |
வீ
பெய் கூந்தல் வீசு வளி உளர 5 | பூச்சூட்டப்பெற்ற
கூந்தல் வீசுகின்ற காற்றில் அசைந்தாட, |
ஏகுதி
மடந்தை எல்லின்று பொழுதே | விரைந்து
நடப்பாய் மடந்தையே!, இருளடையத்தொடங்கிவிட்டது பொழுது; |
வேய்
பயில் இறும்பில் கோவலர் யாத்த | மூங்கில்கள்
நிறைந்த புதர்கள் உள்ள குறுங்காட்டில், மாடுமேய்ப்போர் கட்டிய |
ஆ
பூண் தெண் மணி இயம்பும் | பசுக்கள்
பூண்ட தெளிவான மணிகள் ஒலிக்கின்ற, |
ஈ
காண் தோன்றும் எம் சிறு நல் ஊரே | இதோ
பார் தெரிகிறது, எமது சிறிய நல்ல ஊர். |
| |
#
265 குறிஞ்சி பரணர் | #
265 குறிஞ்சி பரணர் |
| |
இறுகு
புனம் மேய்ந்த அறு கோட்டு முற்றல் | காய்ந்து
இறுகிப்போன கொல்லையில் மேய்ந்த, உதிர்ந்த கொம்பினையுடைய, முதிர்ச்சியையுடைய |
அள்ளல்
ஆடிய புள்ளி வரி கலை | சேற்றில்
குளித்தெழுந்த, புள்ளியையும் வரியையும் கொண்ட கலைமானை எய்வதற்கு |
வீளை
அம்பின் வில்லோர் பெருமகன் | சீழ்க்கை
ஒலியுடன் செல்லும் அம்பைக்கொண்ட வில்லோர்களின் தலைவனான, |
பூ
தோள் யாப்பின் மிஞிலி காக்கும் | பொலிவுள்ள
தோளில் கச்சு மாட்டிய மிஞிலி என்பான் காவல்காக்கும் |
பாரத்து
அன்ன ஆர மார்பின்5 | பாரம்
என்னும் ஊரைப் போன்ற – ஆத்திமாலை சூடிய |
சிறு
கோல் சென்னி ஆரேற்று அன்ன | செங்கோல்
ஏந்திய சோழனுடைய சிற்றரசரை உபசரிக்கும் ஆரேற்றினைப்போன்ற – |
மாரி
வண் மகிழ் ஓரி கொல்லி | மழை
போன்று வளப்பமிக்க கள்ளுணவையையுடைய ஓரியின் கொல்லி மலையிலிருக்கும் |
கலி
மயில் கலாவத்து அன்ன இவள் | செருக்கிய
மயிலின் தோகையைப் போன்ற – தலைவியின் |
ஒலி
மென் கூந்தல் நம்_வயினானே | தழைத்த
மென்மையான கூந்தல் நம்வசமே! |
| |
#
266 முல்லை கச்சிப்பேட்டு இளந்தச்சனார் | #
266 முல்லை கச்சிப்பேட்டு இளந்தச்சனார் |
| |
கொல்லை
கோவலர் குறும் புனம் சேர்ந்த | புன்செய்க்காட்டில்
வாழும் கோவலருடைய சிறிய புனத்தைச் சார்ந்த |
குறும்
கால் குரவின் குவி இணர் வான் பூ | குட்டையான
காம்பினையுடைய குராமரத்தின் குவிந்த கொத்திலுள்ள வெள்ளையான பூ |
ஆடு
உடை இடை_மகன் சூட பூக்கும் | ஆடு
மேய்த்தலையுடைய இடையன் சூடிக்கொள்ளுமாறு மலரும் |
அகலுள்
ஆங்கண் சீறூரேமே | அகன்ற
உட்புறத்தையுடைய மனைகளையுடையே சிறிய ஊரில் இருக்கின்றோம்; |
அதுவே
சாலும் காமம் அன்றியும் 5 | அதுவே
பொருந்தியிருக்கும் எமது விருப்பத்துக்கு; மேலும் |
எம்
விட்டு அகறிர் ஆயின் கொன் ஒன்று | எம்மைவிட்டுப்
பிரிந்துபோவீர் என்றால், சிறந்த ஒன்றைக் |
கூறுவல்
வாழியர் ஐய வேறுபட்டு | கூறுவேன்,
வாழ்க நீவிர் ஐயனே! என்னுடைய பிறந்த வீட்டினின்றும் வேறுபட்டு |
இரீஇய_காலை
இரியின் | எம்மை
உம்முடைய வீட்டில் இருக்கவைத்த பொழுது, நான் வருந்தினால் |
பெரிய
அல்லவோ பெரியவர் நிலையே | பெருமை
உடையன அல்லவோ பெரிய குடிப்பிறந்தவர் இயல்புகள்?. |
| |
#
267 நெய்தல் கபிலர் | #
267 நெய்தல் கபிலர் |
| |
நொச்சி
மா அரும்பு அன்ன கண்ண | நொச்சியின்
கரிய மொட்டுக்களைப் போன்ற கண்களையுடைய |
எக்கர்
ஞெண்டின் இரும் கிளை தொழுதி | மணல்மேட்டு
நண்டின் பெரிய சுற்றத்தோடு கூடிய கூட்டம், |
இலங்கு
எயிற்று ஏஎர் இன் நகை மகளிர் | ஒளிரும்
பற்களையுடைய அழகிய இனிய நகையினை உடைய மகளிர் |
உணங்கு
தினை துழவும் கை போல் ஞாழல் | வெயிலில்
காயும் தினையைத் துழாவும் கையைப் போல், ஞாழலின் |
மணம்
கமழ் நறு வீ வரிக்கும் துறைவன் 5 | மணம்
கமழும் நறிய உதிர்ந்த பூக்களை வரிகள் தோன்ற இழுத்துச் செல்கிற துறையைச்
சேர்ந்தவன் |
தன்னொடு
புணர்த்த இன் அமர் கானல் | தன்னோடு
தலைவியைச் சந்தித்த இனிமை பொருந்திய கடற்கரைச் சோலைக்குத் |
தனியே
வருதல் நனி புலம்பு உடைத்து என | தனித்து
வருவது மிகவும் வருத்தம் தருவதாம் என்று |
வாரேன்-மன்
யான் வந்தனென் தெய்ய | வாராதிருந்தேன்
நான், உறுதியாக; எனினும் ஒருநாள் அங்கே வந்தேன்; |
சிறு
நா ஒண் மணி தெள் இசை கடுப்ப | சிறிய
நாவைக்கொண்ட ஒளிவிடும் மணியின் தெளிந்த ஓசை போன்று |
இன
மீன் ஆர்கை ஈண்டு புள் ஒலி குரல் 10 | கூட்டமான
மீன்களை உண்பதற்காக, ஒன்று கூடிப் பறவைகள் ஒலிக்கும் குரலைக் கேட்டு, |
இவை
மகன் என்னா அளவை | “இவை
தலைமகனின் தேரின் மணிகளின் ஒலி அல்லவா” என்று கூறி முடிக்கும் முன்னர், |
வய_மான்
தோன்றல் வந்து நின்றனனே | வலிமை
மிக்க குதிரைகளையுடைய அவன் தானே அங்கு வந்து நின்றான். |
| |
#
268 குறிஞ்சி வெறி பாடிய காமக்கண்ணியார் | #
268 குறிஞ்சி வெறி பாடிய காமக்கண்ணியார் |
| |
சூர்
உடை நனம் தலை சுனை நீர் மல்க | அச்சம்
பொருந்திய அகன்ற இடத்திலுள்ள சுனையில் நீர் நிரம்பும்படி, |
மால்
பெயல் தலைஇய மன் நெடும் குன்றத்து | மிகுந்த
மழை பெய்த மிகவும் உயர்ந்த குன்றினில் |
கரும்
கால் குறிஞ்சி மதன் இல் வான் பூ | கருத்த
காம்புகளைக் கொண்ட குறிஞ்சியின் வலிமையற்ற ஒளிரும் பூவின் தேனைக்கொண்டு |
ஓவு
கண்டு அன்ன இல் வரை இழைத்த | ஓவியத்தைப்
பார்த்தாற்போன்று வீட்டு உச்சியில் கட்டப்பட்டுள்ள |
நாறு
கொள் பிரசம் ஊறு நாடற்கு 5 | மணங்கமழும்
தேன்கூட்டில் தேன் ஒழுகுகின்ற நாட்டினையுடைவனிடம் |
காதல்
செய்தவும் காதல் அன்மை | நாம்
காதல் செய்தபோதும், அவனுக்கு நம்மீது காதலில்லாமற்போனது |
யாதனின்-கொல்லோ
தோழி வினவுகம் | எதனாலோ?
தோழி! கேட்போம், |
பெய்ம்
மணல் முற்றம் கடி கொண்டு | பரப்பி
விட்ட புதுமணலைக் கொண்ட முற்றத்தில் பூசைக்குரிய ஏற்பாடுகளைச் செய்து |
மெய்ம்
மலி கழங்கின் வேலன் தந்தே | மெய்யை
உரைக்கும் கழங்கினையுடைய வேலனை வருவித்து – |
| |
#
269 பாலை எயினந்தை மகன் இளங்கீரனார் | #
269 பாலை எயினந்தை மகன் இளங்கீரனார் |
| |
குரும்பை
மணி பூண் பெரும் செம் கிண்கிணி | குரும்பை
போன்ற மணியையுடைய பூணாகிய பெரிய செம்மையான கிண்கிணியையும் |
பால்
ஆர் துவர் வாய் பைம் பூண் புதல்வன் | பால்
பருகும் சிவந்த வாயையும், பைம்பொன் அணிகலன்களையும் கொண்ட புதல்வன் |
மாலை
கட்டில் மார்பு ஊர்பு இழிய | மாலை
அணிந்த மார்பினில் ஏறி இறங்கி விளையாட, |
அம்
எயிறு ஒழுகிய அம் வாய் மாண் நகை | அழகிய
பற்கள் வரிசையாக அமைந்த அழகிய வாயின் மாட்சிமையுள்ள நகைகொள்ளும் |
செயிர்
தீர் கொள்கை நம் உயிர் வெம் காதலி 5 | குற்றமற்ற
கற்பொழுக்கத்தையுடைய நம் உயிரான விருப்பமுள்ள காதலியின் |
திரு
முகத்து அலமரும் கண் இனைந்து அல்கலும் | அழகிய
முகத்தில் சுழலும் கண்கள் துன்பம் அடைந்து, நாளும் |
பெருமர
வள்ளியின் பிணிக்கும் என்னார் | பெரிய
மரத்தின் வள்ளிக்கொடியைப் போல நம்மைக் கட்டிப்போடும் என்று கருதாராய்ச் |
சிறு
பல் குன்றம் இறப்போர் | சிறிய
பலவான குன்றங்களைக் கடந்து செல்வோர்; |
அறிவார்
யார் அவர் முன்னியவ்வே | அறிவார்
யார் அவர் மனத்தில் கருதியதை – |
| |
#
270 நெய்தல் பரணர் | #
270 நெய்தல் பரணர் |
| |
தடம்
தாள் தாழை குடம்பை நோனா | அகலமான
அடிப்பகுதியைக் கொண்ட தாழையில் கட்டிய தன் கூட்டினில் தங்கமுடியாமல் |
தண்டலை
கமழும் வண்டு படு நாற்றத்து | பூஞ்சோலை
மலர்களின் மணங்கமழும், வண்டுகள் மொய்க்கின்ற நறிய மணத்தையுடைய, |
இருள்
புரை கூந்தல் பொங்கு துகள் ஆடி | இருளைப்
போன்ற கூந்தல்களில் உள்ள மிகுதியான பூந்துகள்களில் மூழ்கியெழுந்து |
உருள்
பொறி போல எம் முனை வருதல் | கீழே
விழுந்து, உருளும் பொறியைப் போல எம்மிடத்தில் வருதலையுள்ள, |
அணி
தகை அல்லது பிணித்தல் தேற்றா 5 | தன்னை
அழகுசெய்துகொள்வதைத் தவிர அதனால் உன்னைக் கட்டிப்போடுவதை அறியாத |
பெரும்
தோள் செல்வத்து இவளினும் எல்லா | பெரிய
தோளாகிய செல்வத்தையுடைய இவளைக்காட்டிலும், தலைவனே! |
என்
பெரிது அளித்தனை நீயே பொற்பு உடை | என்பால்
பெரிதும் அருள்செய்கின்றாய் நீ! அழகு பொருந்திய |
விரி
உளை பொலிந்த பரி உடை நன் மான் | விரிந்த
பிடரிமயிர் பொலிவுபெற்ற விரைந்த ஓட்டத்தையுடைய நல்ல குதிரைப் படைகளையுடைய, |
வேந்தர்
ஓட்டிய ஏந்து வேல் நன்னன் | பகைவரை
ஓட்டிய ஏந்திய வேற்படையை உடைய நன்னன் |
கூந்தல்
முரற்சியின் கொடிதே 10 | பகைவரின்
உரிமைமகளிரின் கூந்தலைக் கயிறாகத் திரித்த கொடுமையினும் கொடியது, |
மறப்பல்
மாதோ நின் விறல் தகைமையே | மறந்துவிடுவேன்
உன் சிறப்பியல்பின் தகுதிப்பாட்டினை. |
| |
#
271 பாலை கயமனார் | #
271 பாலை கயமனார் |
| |
இரும்
புனிற்று எருமை பெரும் செவி குழவி | கரிய,
அண்மையில் ஈன்ற, எருமையின் பெரிய செவியினையுடைய கன்று, |
பைம்
தாது எருவின் வைகு துயில் மடியும் | புதிய
பூந்தாது உதிர்ந்து சாணத்தின் துகள்போலக் கிடப்பதில் படுத்துத் துயில்கொண்டு
உறங்கும் |
செழும்
தண் மனையோடு எம் இவண் ஒழிய | செழுமையும்
குளிர்ச்சியும் உள்ள வீட்டோடு நான் இங்கே தனித்திருக்க, |
செல்
பெரும் காளை பொய்ம்மருண்டு சேய் நாட்டு | தன்னுடன்
வருகின்ற பெரிய காளைபோன்றவனின் பொய்மொழிகளில் மயங்கி, தொலை நாட்டு, |
சுவை
காய் நெல்லி போக்கு அரும் பொங்கர் 5 | சுவையுள்ள
காயைக்கொண்ட நெல்லியின், வழிச்செல்வோரைப் போகவிடாமல் தடுக்கும் தோப்பில் |
வீழ்
கடை திரள் காய் ஒருங்கு உடன் தின்று | விழுந்துகிடக்கின்ற
முற்றிலும் திரண்ட காய்களை இருவரும் சேர்ந்து தின்று, |
வீ
சுனை சிறு நீர் குடியினள் கழிந்த | வற்றியுள்ள
சுனையிலுள்ள சிறிதளவு நீரைக் குடித்துவிட்டுக் கடந்து சென்ற |
குவளை
உண்கண் என் மகள் ஓர் அன்ன | குவளை
மலர்போன்ற மையுண்ட கண்களையுடைய என் மகள், ஒன்றுபோலிருக்கும் |
செய்
போழ் வெட்டிய பொய்தல் ஆயம் | சிவந்த
பனங்குருத்தைப் பிளந்து பதனிடுவதற்குப் போடுகின்ற |
மாலை
விரி நிலவில் பெயர்பு புறங்காண்டற்கு10 | மாலைக்
காலத்து விரிந்த நிலவில் செல்ல, அவளைப் பின்சென்று தேடும்படியாக விட்டதற்கு, |
மா
இரும் தாழி கவிப்ப | பெரிய
கரிய தாழியிலிட்டுக் கவித்து மூடும்படி |
தா
இன்று கழிக என் கொள்ளா கூற்றே | வலிமையற்று
இறந்தொழிக என் உயிரை எடுத்துக்கொள்ளாத கூற்றம். |
| |
#
272 நெய்தல் முக்கல் ஆசான் நல்வெள்ளையார் | #
272 நெய்தல் முக்கல் ஆசான் நல்வெள்ளையார் |
| |
கடல்
அம் காக்கை செ வாய் சேவல் | கடலைச்
சேர்ந்த காக்கையின் சிவந்த வாயையுடைய ஆண்பறவை, |
படிவ
மகளிர் கொடி கொய்து அழித்த | நோன்பு
மேற்கொண்ட மகளிர் கொய்து அழித்த |
பொம்மல்
அடும்பின் வெண் மணல் ஒரு சிறை | மிகவும்
தழைத்த அடும்பு படர்ந்த வெண்மையான மணலின் ஒருபக்கத்தில், |
கடும்
சூல் வதிந்த காமர் பேடைக்கு | நிறைந்த
சூல் கொண்டு தங்கியிருந்த அழகிய பேடைக்கு, |
இரும்
சேற்று அயிரை தேரிய தெண் கழி 5 | கரிய
சேற்றில் இருக்கும் அயிரைமீனைத் தேடிக்கொணர தெளிந்த கழியில் |
பூ
உடை குட்டம் துழவும் துறைவன் | பூக்கள்
மலர்ந்துள்ள ஆழமான பகுதியில் மூழ்கித் துழாவும் துறையைச் சேர்ந்தவன் |
நல்காமையின்
நசை பழுது ஆக | நமக்கு
அருளாததினால் நமது விருப்பமெல்லாம் பழுதடைய |
பெரும்
கையற்ற என் சிறுமை பலர் வாய் | பெரிதாகச்
செயலற்றுப்போன எனது கீழ்நிலை, பலர் வாயிலும் |
அம்பல்
மூதூர் அலர்ந்து | குசுகுசுக்கும்
அம்பலாகிப் பின்னர் ஊர்முழுக்கப் பலரறிய அலராகிய அவதூறாகி |
நோய்
ஆகின்று அது நோயினும் பெரிதே10 | நோய்தருவதாகிவிட்டது;
அது பிரிவுதரும் நோயைக்காட்டிலும் பெரிதாயிருக்கிறது |
| |
#
273 குறிஞ்சி மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார் | #
273 குறிஞ்சி மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார் |
| |
இஃது
எவன்-கொல்லோ தோழி மெய் பரந்து | இது
என்னாகுமோ? தோழி! நம் உடம்பில் பரவி |
எவ்வம்
கூர்ந்த ஏமுறு துயரம் | துன்பத்தை
உண்டாக்கி மனத்தடுமாற்றத்தை ஏற்படுத்திய துயரத்துக்காக, |
வெம்மையின்
தான் வருத்து_உறீஇ நம்_வயின் | நம்மேல்
கொண்ட நாட்டத்தினாலே தானும் வருத்தம் மேற்கொண்டு, நமக்காக |
அறியாது
அயர்ந்த அன்னைக்கு வெறி என | அறியாமல்
வெறியாட்டு எடுத்த அன்னைக்கு, “இது முருகுதான் உண்டாக்கியது” என்று |
வேலன்
உரைக்கும் என்ப ஆகலின் 5 | வேலன்
கூறுவான் என்பர்; அதனால் |
வண்ணம்
மிகுந்த அண்ணல் யானை | இயற்கை
அழகு மிகுந்த தலைமைப்பண்புள்ள யானை |
நீர்
கொள் நெடும் சுனை அமைந்து வார்ந்து உறைந்து என் | நீர்
உண்ணும் நெடிய சுனையில் அமைந்து நீண்டநாள் இருக்கும், என் |
கண்
போல் நீலம் தண் கமழ் சிறக்கும் | கண்
போன்ற நீல மலர்கள் குளிர்ச்சியுடன் மணங்கமழ்ந்து சிறந்துவிளங்கும் |
குன்ற
நாடனை உள்ளு-தொறும் | குன்றுகளுக்குரிய
நாடனை நினைக்கும்போதெல்லாம் |
நெஞ்சு
நடுக்கு_உறூஉம் அவன் பண்பு தரு படரே
10 | என்
நெஞ்சை நடுங்கவைக்கும் அவனது நற்பண்பு தருகின்ற நட்பால் வரும் வருத்தமானது – |
| |
#
274 பாலை காவன் முல்லை பூதனார் | #
274 பாலை காவன் முல்லை பூதனார் |
| |
நெடு
வான் மின்னி குறும் துளி தலைஇ | நெடிய
மேகங்கள் மின்னி, சிறிய தூறலைப் போடத்தொடங்கி, |
படு
மழை பொழிந்த பகு வாய் குன்றத்து | பெரிய
மழையாய்ப் பொழிந்த அகன்ற பிளப்புகளை உடைய குன்றத்தில், |
உழை
படு மான் பிணை தீண்டலின் இழை_மகள் | உழை
மானின் அழகிய பெண்ணானது உராய்தலால், இழை அணிந்த ஒரு பெண்ணின் |
பொன்
செய் காசின் ஒண் பழம் தாஅம் | பொன்னால்
செய்யப்பட்ட மேகலைக்காசு போன்று ஒள்ளிய பழங்கள் உதிரும் |
குமிழ்
தலைமயங்கிய குறும் பல் அத்தம் 5 | குமிழமரங்கள்
செறிந்துவளர்ந்த, சிறிதானவும் பலவானதுமான வழிகளில் |
எம்மொடு
வருதியோ பொம்மல்_ஓதி என | “என்னோடு
வருகிறாயா? அடர்ந்த கூந்தலையுடையவளே” என்று |
கூறின்றும்
உடையரோ மற்றே வேறுபட்டு | கூறியதும்
உண்டல்லவா? தமக்குள் சண்டையிட்டுக்கொண்டு |
இரும்
புலி வழங்கும் சோலை | பெரிய
புலிகள் நடமாடித்திரியும் சோலைகளையுடைய |
பெரும்
கல் வைப்பின் சுரன் இறந்தோரே | பெரிய
மலைநாட்டைச் சேர்ந்த நிலமாகிய பாலைவெளியைக் கடந்துசென்றவர் – |
| |
#
275 நெய்தல் அம்மூவனார் | #
275 நெய்தல் அம்மூவனார் |
| |
செந்நெல்
அரிநர் கூர் வாள் புண் உற | செந்நெல்லின்
கதிர் அறுப்போரின் கூரிய அரிவாளால் காயப்பட்டு |
காணார்
முதலொடு போந்து என பூவே | அதைக்
காணாதவரின் நெற்கதிர் கட்டுக்களோடு போனதினால், பூவானது |
படையொடும்
கதிரொடும் மயங்கிய படுக்கை | அரிவாளோடும்,
கதிர்க்கட்டோடும் கலந்து படுக்கையாய்க் கிடந்து |
தன்
உறு விழுமம் அறியா மென்மெல | தனக்கு
நேர்ந்த கதியை அறியாமல், மெல்லமெல்ல, |
தெறு
கதிர் இன் துயில் பசு வாய் திறக்கும்5 | சுடுகின்ற
கதிர் ஒளியில் தன் இனிய துயில் நீங்கித் தன் பசிய வாயைத் திறக்கும் |
பேதை
நெய்தல் பெரு நீர் சேர்ப்பற்கு | ஏமாளியான
நெய்தலைக் கொண்ட கடற்கரைத் தலைவனுக்காக |
யான்
நினைந்து இரங்கேன் ஆக நோய் இகந்து | நான்
நினைத்து இரங்கமாட்டேன்; ஆதலால் என்னுடைய காதல் நோயை நீக்கி, |
அறன்
இலாளன் புகழ என் | அந்த
அறமற்றவனை ஊரார் புகழும்படி, என்னை |
பெறினும்
வல்லேன்-மன் தோழி யானே | அவன்
வேண்டிப் பெற்றாலும் உடன்படுவேன், உறுதியாக தோழி, நானே! |
| |
#
276 குறிஞ்சி தொல் கபிலர் | #
276 குறிஞ்சி தொல் கபிலர் |
| |
கோடு
துவையா கோள் வாய் நாயொடு | கொம்புகளை
ஊதியவாறு, வேட்டையைப் பற்றிக்கொள்ளும் வாயையுடைய நாயுடன் |
காடு
தேர்ந்து அசைஇய வய_மான் வேட்டு | காட்டில்
வேட்டையைத் தேடி, தளைர்ச்சியுற்ற வலிமையான விலங்குகளை வேட்டையாடும் |
வயவர்
மகளிர் என்றி ஆயின் | வேட்டுவரின்
பெண்கள் என்று எம்மைச் சொல்வாயாயின், |
குறவர்
மகளிரேம் குன்று கெழு கொடிச்சியேம் | நாங்கள்
குறவரின் பெண்களாவோம், மலைவாழ் கொடிச்சியர் ஆவோம், |
சேணோன்
இழைத்த நெடும் கால் கழுதில் 5 | உயர்ந்த
பரணில் இருக்கும் தினைக்காவலன் கட்டிய உயரமான கால்களைக் கொண்ட பரணில், |
கான
மஞ்ஞை கட்சி சேக்கும் | காட்டு
மயில்கள் தம் இருப்பிடமாய்த் தங்கிவாழும் |
கல்
அகத்தது எம் ஊரே செல்லாது | மலைகளுக்கிடையே
அமைந்தது எமது ஊர்; எனவே இப்போது புறப்பட்டுச்செல்லாமல் |
சேந்தனை
செல்-மதி நீயே பெரு மலை | எம்
ஊரில் தங்கிச் செல்வாயாக நீயே! பெரிய மலையில் உண்டான |
வாங்கு
அமை பழுனிய நறவு உண்டு | வளைந்த
மூங்கிலாலான குப்பிகளில் விளைந்த கள்ளினை உண்டு |
வேங்கை
முன்றில் குரவையும் கண்டே 10 | வேங்கை
மரங்கள் இருக்கும் முற்றத்தில் நாங்கள் ஆடும் குரவைக்கூத்தையும் கண்டுவிட்டு – |
| |
#
277 பாலை தும்பி சேர் கீரனார் | #
277 பாலை தும்பி சேர் கீரனார் |
| |
கொடியை
வாழி தும்பி இ நோய் | நீ
கொடியவள்! நன்றாக இரு! தும்பியே! எனது இந்த நோயினால் |
படுக
தில் அம்ம யான் நினக்கு உரைத்து என | நான்
இறந்துபடுவேனாக , நான் உனக்கு என் துன்பத்தைச் சொல்லியதால் – |
மெய்யே
கருமை அன்றியும் செவ்வன் | உன்
உடம்புதான் கருப்பு! அன்றியும், செவ்வனே இருக்கும் |
அறிவும்
கரிதோ அறன் இலோய் நினக்கே | அறிவும்
கருப்போ, நீதியற்ற உனக்கு? |
மனை
உற காக்கும் மாண் பெரும் கிடக்கை 5 | வீட்டைப்
பொருந்திநின்று காக்கும் மாண்பும் பெருமையும் பொருந்திய இடத்திலுள்ள |
நுண்
முள் வேலி தாதொடு பொதுளிய | நுண்மையான
முட்களாலாகிய வேலியில் படர்ந்த, தாதுடன் செழித்துத் தழைத்த, |
தாறு
படு பீரம் ஊதி வேறுபட | கொத்துக்கொத்தாய்ப்
பூக்கும் பீர்க்கின் மஞ்சள் நிறப் பூவில் தேன்குடித்து, அதினின்றும் வேறுபட |
நாற்றம்
இன்மையின் பசலை ஊதாய் | மணம்
இல்லாததினால் என் நெற்றியில் பூத்த பசலையை ஊதாமற்சென்றாய்; |
சிறு
குறும் பறவைக்கு ஓடி விரைவுடன் | சிறிய
குறுகிய பறவையான உன் பெடைக்காக அதன் பின்னே ஓடி, விரைவுடன் |
நெஞ்சு
நெகிழ் செய்ததன் பயனோ அன்பு இலர் 10 | அதன்
நெஞ்சு நெகிழுமாறு செய்ததன் பயனோ இது? என்மீது அன்புகொள்ளாதவராய் |
வெம்
மலை அரும் சுரம் இறந்தோர்க்கு | வெம்மையான
மலையிலுள்ள அரிய பாலைநில வழிகளைக் கடந்துசென்றோர்க்கு |
என்
நிலை உரையாய் சென்று அவண் வரவே | என்
நிலையை உரைக்கவும்மாட்டாய், சென்று அங்கே, அவர் வருமாறு – |
| |
#
278 நெய்தல் உலோச்சனார் | #
278 நெய்தல் உலோச்சனார் |
| |
படு
காழ் நாறிய பராஅரை புன்னை | விழுந்த
விதை முளைத்து மரமாகிய பருத்த அடிமரத்தைக் கொண்ட புன்னையின், |
அடு
மரல் மொக்குளின் அரும்பு வாய் அவிழ | அடுத்து
வளர்ந்த மரலின் பழம் போல், அரும்புகள் வாய் திறந்து |
பொன்னின்
அன்ன தாது படு பன் மலர் | பொன்
போன்ற மகரந்தம் உடைய பல மலர்களில் |
சூடுநர்
தொடுத்த மிச்சில் கோடு-தொறும் | சூடிக்கொள்பவர்
பறித்துத்தொடுத்துக்கொண்டது போக மீதமானவை, கிளைகள்தோறும் |
நெய்
கனி பசும் காய் தூங்கும் துறைவனை 5 | நெய்ப்பசை
மிக்க பசிய காய்களாகத் தொங்கும் கடற்கரைத்துறையைச் சேர்ந்தவனை |
இனி
அறிந்திசினே கொண்கன் ஆகுதல் | நான்
இப்போது அறிந்துகொண்டேன், அவன் கணவன் ஆகுதலை – |
கழி
சேறு ஆடிய கணை கால் அத்திரி | கழியின்
சேறு படிந்த திரண்ட கால்களைக் கொண்ட அவனது கோவேறு கழுதையின் |
குளம்பினும்
சே_இறா ஒடுங்கின | விரைவான
ஓட்டத்தால் அதன் குளம்புகளில் சிவந்த இறால் மீன்கள் சிக்கி மிதிபட்டன; |
கோதையும்
எல்லாம் ஊதை வெண் மணலே | அந்த
விரைவினால் அவனது மாலையெல்லாம் ஊதைக்காற்று எழுப்பிய வெள்ளை மணல் படிந்துள்ளது. |
| |
#
279 பாலை கயமனார் | #
279 பாலை கயமனார் |
| |
வேம்பின்
ஒண் பழம் முணைஇ இருப்பை | வேம்பின்
ஒள்ளிய பழத்தை உண்டு வெறுத்து, இருப்பையின் |
தேம்
பால் செற்ற தீம் பழம் நசைஇ | தேனுள்ள,
பால் வற்றிய இனிய பழத்தை விரும்பி, |
வைகு
பனி உழந்த வாவல் சினை-தொறும் | நிலைகொண்டிருக்கும்
பனியில் வருந்திய வௌவாலின் மேல், கிளைகளிலிருந்து |
நெய்
தோய் திரியின் தண் சிதர் உறைப்ப | நெய்தோய்ந்த
திரியில் எண்ணெய் துளிப்பது போல குளிர்ந்த பனித்துளிகள் சொட்டுகின்ற |
நாள்
சுரம் உழந்த வாள் கேழ் ஏற்றையொடு 5 | விடியற்காலத்தில்
பாலைநிலவழியில் சென்று வருந்திய ஒளிறும் நிறமுடைய புலியுடன் |
பொருத
யானை புல் தாள் ஏய்ப்ப | போரிட்ட
யானையின் புல்லிய காலைப் போன்ற, |
பசி
பிடி உதைத்த ஓமை செம் வரை | பசிமிக்க
பெண்யானை உதைத்துச் சிதைத்த ஓமையின் சிவந்த பட்டை இல்லாத அடிப்பகுதி |
வெயில்
காய் அமையத்து இமைக்கும் அத்தத்து | வெயிலடிக்கும்போது
விட்டுவிட்டு ஒளிறும் காட்டு வழியின் |
அதர்
உழந்து அசையின-கொல்லோ ததர்_வாய் | பாதையில்
நடந்து வருந்தினவோ? செறிந்த வாயினையுடைய |
சிலம்பு
கழீஇய செல்வம் 10 | சிலம்பைக்
கழற்றும் விழாவின் சிறப்பு |
பிறர்
உழை கழிந்த என் ஆய்_இழை அடியே | பிறரிடத்துக்
கழிந்த என் அழகிய அணிகலன் அணிந்த மகளின் அடிகள். |
| |
#
280 மருதம் பரணர் | #
280 மருதம் பரணர் |
| |
கொக்கின்
உக்கு ஒழிந்த தீம் பழம் கொக்கின் | மாமரத்திலிருந்து
உதிர்ந்து கீழே விழுந்த இனிய மாம்பழம், கொக்கின் |
கூம்பு
நிலை அன்ன முகைய ஆம்பல் | கூம்பிய
நிலை போன்ற மொட்டுக்களையுடைய ஆம்பல் உள்ள |
தூங்கு
நீர் குட்டத்து துடுமென வீழும் | அசைவாடும்
நீர் உள்ள ஆழமான பள்ளத்தில் ‘துடும்’ என்று விழுகின்ற |
தண்
துறை ஊரன் தண்டா பரத்தமை | குளிர்ந்த
ஆற்றுத்துறைகளைக் கொண்ட ஊரினனுடைய நீங்காத பரத்தைமை பொருட்டு |
புலவாய்
என்றி தோழி புலவேன் 5 | அவன்
மீது பிணக்குக்கொள்ளவேண்டாம் என்கிறாய் தோழி! அவன் மீது கோபங்கொள்ளேன் – |
பழன
யாமை பாசடை புறத்து | நீர்நிலைகளில்
வாழும் ஆமையின் பசிய கல்போன்ற முதுகின்மேல்வைத்து, |
கழனி
காவலர் சுரி நந்து உடைக்கும் | வயலைக்
காப்பவர்கள் சுருக்கம் விழுந்த நத்தையை உடைக்கும் |
தொன்று
முதிர் வேளிர் குன்றூர் அன்ன என் | பழமை
முதிர்ந்த வேளிருடைய குன்றூரைப் போன்ற என் |
நன்
மனை நனி விருந்து அயரும் | நல்ல
வீட்டில் மிகுந்துவரும் விருந்தினரை உபசரிக்கும் |
கைதூவு
இன்மையின் எய்தா மாறே 10 | கை
ஓயாத வேலையால் என் கண்ணில் அவன் படவில்லை – |
| |
#
281 பாலை கழார் கீரன் எயிற்றியார் | #
281 பாலை கழார் கீரன் எயிற்றியார் |
| |
மாசு
இல் மரத்த பலி உண் காக்கை | அழுக்கில்லாத
மரத்திலிருக்கும், படையல்சோற்றை உண்ணும், காக்கை |
வளி
பொரு நெடும் சினை தளியொடு தூங்கி | காற்று
அலைக்கும் நீண்ட கிளையில் மழைத்துளியுடன் ஆடிக்கொண்டு, |
வெல்
போர் சோழர் கழாஅர் கொள்ளும் | வெல்லுகின்ற
போரையுடைய சோழரின் கழார் என்ற ஊரில் கிடைக்கும் |
நல்
வகை மிகு பலி கொடையோடு உகுக்கும் | நல்ல
வகையில் மிகுந்த பலியுணவுப் படையலோடு வரும் |
அடங்கா
சொன்றி அம் பல் யாணர் 5 | அளவுக்கதிகமான
சோற்றுத்திரளுடன், அழகிய பலவாகிய புதிய |
விடக்கு
உடை பெரும் சோறு உள்ளுவன இருப்ப | ஊன்
துண்டங்களோடு கூடிய பெருவிருந்தை நினைத்துக்கொண்டு இருக்க, |
மழை
அமைந்து_உற்ற மால் இருள் நடுநாள் | மழை
நின்று பெய்த மிக்க இருள் செறிந்த நள்ளிரவில், |
தாம்
நம் உழையர் ஆகவும் நாம் நம் | தாம்
நம் பக்கத்தில் இருக்கவும், நாம் நமக்கு உண்டான |
பனி
கடுமையின் நனி பெரிது அழுங்கி | மிகுந்த
குளிரின் கடுமையால் மிகப் பெரிதும் வருந்தி, |
துஞ்சாம்
ஆகலும் அறிவோர் 10 | தூங்காதிருப்பதையும்
அறிந்திருப்போர் |
அன்பு
இலர் தோழி நம் காதலோரே | அன்பு
இல்லாதவர் தோழி! நம் காதலர் |
| |
#
282 குறிஞ்சி நல்லூர் சிறு மேதாவியார் | #
282 குறிஞ்சி நல்லூர் சிறு மேதாவியார் |
| |
தோடு
அமை செறிப்பின் இலங்கு வளை ஞெகிழ | தொகுப்பாக
அமைந்து நன்கு செறிக்கப்பட்ட ஒளிரும் வளையல்கள் நெகிழவும், |
கோடு
ஏந்து அல்குல் அம் வரி வாட | வளைவாக
ஏந்திய அல்குலின் அழகிய வரிகள் சுருங்கிப்போகவும், |
நன்
நுதல் சாய படர் மலி அரு நோய் | நல்ல
நெற்றி அழகுகெடவும், வருத்தம் மிக்க தாங்கற்கரிய காதல் நோய் |
காதலன்
தந்தமை அறியாது உணர்த்த | காதலன்
நமக்குத் தந்தது என்பதனை அறியாமல், அதனை வேலனுக்கு அறிவிக்க, |
அணங்கு
உறு கழங்கின் முது வாய் வேலன் 5 | தெய்வத்தன்மையுள்ள
கழங்குகளைக் கொண்ட அனுபவசாலியான வேலனின் |
கிளவியின்
தணியின் நன்று-மன் சாரல் | சொற்களால்
இது தணியுமானால் மிகவும் நல்லது, உறுதியாக – மலைச் சாரலில் |
அகில்
சுடு கானவன் உவல் சுடு கமழ் புகை | அகில்
கட்டையை எரிக்கும் குறவன், முதலில் சருகளைக் கொளுத்துவதால் எழுகின்ற புகை |
ஆடு
மழை மங்குலின் மறைக்கும் | அசைகின்ற
மழையின் மேகமூட்டம் போலப் பரந்து மறைக்கும் |
நாடு
கெழு வெற்பனொடு அமைந்த நம் தொடர்பே | நாட்டில்
விளங்கும் தலைவனோடு அமைந்த நம் நட்பு – |
| |
#
283 நெய்தல் மதுரை மருதன் இளநாகனார் | #
283 நெய்தல் மதுரை மருதன் இளநாகனார் |
| |
ஒண்
நுதல் மகளிர் ஓங்கு கழி குற்ற | ஒளியுள்ள
நெற்றியையுடைய மகளிர், பரவிக்கிடக்கும் கழியில் பறித்த |
கண்
நேர் ஒப்பின கமழ் நறு நெய்தல் | கண்களை
மிகச் சரியாக ஒத்திருக்கும் கமழ்கின்ற நறுமணமுள்ள நெய்தல் மலரால் |
அகல்
வரி சிறு_மனை அணியும் துறைவ | அகன்ற
கோலமிட்ட சிறிய மனையை அழகுசெய்யும் துறைக்குத் தலைவனே! |
வல்லோர்
ஆய்ந்த தொல் கவின் தொலைய | அழகுசெய்வதில்
வல்லவர்கள் ஆராய்ந்து கண்ட இவளின் பழைய அழகு கெடுமாறு |
இன்னை
ஆகுதல் தகுமோ ஓங்கு திரை 5 | இத்தன்மையுடைவனாய்
இருப்பது உனக்குத் தகுமோ? உயர்ந்த அலைகளைக் கொண்ட |
முந்நீர்
மீமிசை பலர் தொழ தோன்றி | கடலின்
மேல் பலரும் தொழும்படியாகத் தோன்றி, |
ஏமுற
விளங்கிய சுடரினும் | உயிர்கள்
இன்புற விளங்கும் ஞாயிற்றைக் காட்டிலும் |
வாய்மை
சான்ற நின் சொல் நயந்தோர்க்கே | உண்மை
மிக்க உனது சொற்களை விரும்பியவருக்கு – |
| |
#
284 பாலை தேய்புரி பழங்கயிற்றினார் | #
284 பாலை தேய்புரி பழங்கயிற்றினார் |
| |
புறம்
தாழ்பு இருண்ட கூந்தல் போதின் | முதுகில்
தாழ்ந்து கிடக்கும் கரிய கூந்தலையும், நெய்தல் பூவின் |
நிறம்
பெறும் ஈர் இதழ் பொலிந்த உண்கண் | நிறத்தைப்
பெற்ற ஈரமான இமைகளால் பொலிவடைந்த மையுண்டகண்களையும் கொண்டு |
உள்ளம்
பிணிக்கொண்டோள்_வயின் நெஞ்சம் | நம்
உள்ளத்தை வசமாக்கிக்கொண்டவளிடம், நெஞ்சம் |
செல்லல்
தீர்கம் செல்வாம் என்னும் | “அவளின்
துன்பத்தைத் தீர்க்கத் திரும்பிச் செல்வோம்” என்று சொல்லும்; |
செய்_வினை
முடியாது எவ்வம் செய்தல் 5 | “மேற்கொண்ட
பணியை முடிக்காமல் அதற்கு இடையூறு விளைவிப்பது |
எய்யாமையோடு
இளிவு தலைத்தரும் என | வந்த
நோக்கத்தையும் அடையாமல், பழிச்சொல்லையும் கொண்டுசேர்க்கும்” என்று |
உறுதி
தூக்கா தூங்கி அறிவே | உறுதிப்பாட்டை
தூக்கிநிறுத்தித் தாமதித்து, அறிவானது |
சிறிது
நனி விரையல் என்னும் ஆயிடை | “சிறிதளவுகூட
கூடுதல் அவசரப்படவேண்டாம்” என்று சொல்லும்; இவற்றுக்கிடையே, |
ஒளிறு
ஏந்து மருப்பின் களிறு மாறு பற்றிய | ஒளிவிடும்
ஏந்திய கொம்புகளைக் கொண்ட யானைகள் தமக்குள் மாறுபட்டு பற்றி இழுத்த |
தேய்
புரி பழம் கயிறு போல10 | தேய்ந்த
புரிகளைக் கொண்ட பழைய கயிற்றினைப் போல |
வீவது-கொல்
என் வருந்திய உடம்பே | இற்றுப்போவதோ?
என் வருந்திய உடம்பு. |
| |
#
285 குறிஞ்சி மதுரை கொல்லன் வெண்ணாகனார் | #
285 குறிஞ்சி மதுரை கொல்லன் வெண்ணாகனார் |
| |
அரவு
இரை தேரும் ஆர் இருள் நடுநாள் | பாம்புகள்
இரைதேடித்திரியும் மிகுந்த இருள் நிறைந்த நள்ளிரவாகிய |
இரவின்
வருதல் அன்றியும் உரவு கணை | இரவில்
வருகின்றதல்லாமலும், வலிய அம்புகளையும், |
வன்
கை கானவன் வெம் சிலை வணக்கி | ஆற்றல்
மிக்க கைகளையும் கொண்ட கானவன், தன் கடுமையான வில்லை வளைத்து, |
உளம்
மிசை தவிர்த்த முளவு_மான் ஏற்றையொடு | மார்பில்
செலுத்தி வீழ்த்திய ஆண் முள்ளம்பன்றியோடு, |
மனை_வாய்
ஞமலி ஒருங்கு புடை ஆட 5 | வீட்டு
நாய்கள் ஒன்றுசேர்ந்து பக்கத்தில் வந்து குதிக்க, |
வேட்டு
வலம் படுத்த உவகையன் காட்ட | வேட்டையில்
வெற்றிகொண்ட மகிழ்ச்சியுள்ளவனாய், காட்டிலுள்ள |
நடு
கால் குரம்பை தன் குடி_வயின் பெயரும் | கால்களை
நட்டு எழுப்பிய குடிசைகளைக்கொண்ட தன் ஊருக்குச் செல்லுகின்ற |
குன்ற
நாடன் கேண்மை நமக்கே | குன்றுகளுள்ள
நாட்டினையுடையவனின் நட்பு, நமக்கு |
நன்றால்
வாழி தோழி என்றும் | நலம்
தருவதாகும், வாழ்க! தோழியே! என்றும் |
அயலோர்
அம்பலின் அகலான் 10 | அயலோர்
உரைக்கும் பழிச்சொற்களைக் கேட்டும் நம்மை விட்டு நீங்கான், |
பகலின்
வரூஉம் எறி புனத்தானே | பகலிலும்
வருவான் காய்ந்த தூர்களை எறிக்கின்ற தினைப்புனத்துக்கு. |
| |
#
286 பாலை துறைக்குறுமாவின் பாலம் கொற்றனார் | #
286 பாலை துறைக்குறுமாவின் பாலம் கொற்றனார் |
| |
ஊசல்
ஒண் குழை உடை வாய்த்து அன்ன | ஊசலாடும்
ஒள்ளிய காதணியான குழைகளை உடைமரங்கள் பெற்றாற் போன்ற, |
அத்த
குமிழின் ஆய் இதழ் அலரி | வழியில்
அமைந்த குமிழமரத்தின் அழகிய இதழையுடைய மலர் |
கல்
அறை வரிக்கும் புல்லென் குன்றம் | மலையின்
பாறைகளில் உதிர்ந்து கோலமாய்க் கிடக்கும் பொலிவழிந்த குன்றின்வழியே |
சென்றோர்
மன்ற செலீஇயர் என் உயிர் என | காதலர்
சென்றுவிட்டார், திண்ணமாக; சென்றொழியட்டும் என் உயிர் என்று |
புனை
இழை நெகிழ விம்மி நொந்து_நொந்து 5 | அணிந்த
அணிகலன்கள் நெகிழ்ந்துபோகுமாறு விம்மி பலவாறு நொந்து |
இனைதல்
ஆன்றிசின் ஆய்_இழை நினையின் | வருந்துகின்றதை
மேற்கொள்கிறாய்; நினைத்துப்பார்த்தால் |
நட்டோர்
ஆக்கம் வேண்டியும் ஒட்டிய | தம்
நண்பர்களுக்கு உதவி செய்யவும், அவரை அண்டியிருக்கும் |
நின்
தோள் அணி பெற வரற்கும் | உனது
தோள்கள் அணிகலன்களால் வனப்பெய்யவும் |
அன்றோ
தோழி அவர் சென்ற திறமே | அன்றோ
தோழி! அவர் சென்றதன் நோக்கம். |
| |
#
287 நெய்தல் உலோச்சனார் | #
287 நெய்தல் உலோச்சனார் |
| |
விசும்பு
உறழ் புரிசை வெம்ப முற்றி | வானத்தைத்
தடவும்படியான கோட்டையைப் பகை வெம்மை தோன்ற முற்றுகையிட்டு, |
பைம்
கண் யானை வேந்து புறத்து இறுத்த | பசிய
கண்களையுடைய யானைப்படையுடன் வேந்தன் மதிலுக்கு வெளியே தங்கியிருக்க, |
நல்
எயில் உடையோர் உடையம் என்னும் | ‘நன்கு
கோட்டையைக் காப்போரை நாம் உடையோம்’ என்னும் |
பெருந்தகை
மறவன் போல கொடும் கழி | பெருமிதங்கொண்ட
கோட்டைக் காவலன் போல, வளைந்த கழியிலுள்ள |
பாசடை
நெய்தல் பனி நீர் சேர்ப்பன்5 | பசிய
இலையைக் கொண்ட நெய்தல் உள்ள குளிர்ந்த நீருக்கு உரிய தலைவன் |
நாம
முதலை நடுங்கு பகை அஞ்சான் | அச்சம்தரும்
முதலையாகிய நடுங்கவைக்கும் பகைக்கும் அஞ்சாதவனாய் |
காமம்
பெருமையின் வந்த ஞான்றை | நம்
மீது கொண்ட காதலின் மிகுதியால், நம்மிடம் வந்த போது, |
அருகாது
ஆகி அவன்_கண் நெஞ்சம் | அஞ்சாதது
ஆகி அவன்பால் சென்ற என் நெஞ்சம், |
நள்ளென்
கங்குல் புள் ஒலி கேள்-தொறும் | நள்ளென்னும்
ஓசையினையுடைய இரவில் பறவைகளின் ஒலி கேட்கும்போதெல்லாம் |
தேர்
மணி தெள் இசை-கொல் என 10 | அவனது
தேர் மணியின் தெளிந்த ஓசை அல்லவா என்று |
ஊர்
மடி கங்குலும் துயில் மறந்ததுவே | ஊரெல்லாம்
உறங்கும் இரவிலும் துயிலை மறந்தது. |
| |
#
288 குறிஞ்சி குளம்பனார் | #
288 குறிஞ்சி குளம்பனார் |
| |
அருவி
ஆர்க்கும் அணங்கு உடை நெடும் கோட்டு | அருவி
ஆரவாரமாய் ஒலிக்கும் தெய்வ மகளிர் வாழும் நெடிய மலையுச்சியில் |
ஞாங்கர்
இள வெயில் உணீஇய ஓங்கு சினை | மேலிருந்துவரும்
இளவெயிலைப் பெறுவதற்காக, உயர்ந்த கிளைகளிலிருந்து |
பீலி
மஞ்ஞை பெடையோடு ஆலும் | தோகையையுடைய
ஆண்மயில் தன் பெடையோடு ஆடும் |
குன்ற
நாடன் பிரிவின் சென்று | குன்றுகளையுடைய
நாட்டினன் பிரிந்துசென்றதனால் அழகு விட்டுப்போக, |
நன்
நுதல் பரந்த பசலை கண்டு அன்னை5 | நல்ல
நெற்றியில் பரந்த பசலையைக் கண்டு அன்னையானவள் |
செம்
முது பெண்டிரொடு நெல் முன் நிறீஇ | செம்மையும்
முதுமையும் கொண்ட பெண்களோடு, கொட்டிய நெல்லுக்கு முன் நம்மை நிறுத்தி, |
கட்டின்
கேட்கும் ஆயின் வெற்பில் | கட்டுவைத்துக்
குறிகேட்டால், மலையில் |
ஏனல்
செந்தினை பால் ஆர் கொழும் குரல் | ஏனலாகிய
செந்தினையின் பால் பிடித்த கொழுத்த கதிர்களில் படியும் |
சிறு
கிளி கடிகம் சென்றும் இ | சிறிய
கிளிகளை ஓட்டுவதற்காகச் சென்றிருந்தும் இந்த |
நெடுவேள்
அணங்கிற்று என்னும்-கொல் அதுவே 10 | முருகவேள்
வருத்தியது என்று சொல்லுமோ அது? |
| |
#
289 முல்லை மருங்கூர் பட்டினத்து சேந்தன் குமரனார் | #
289 முல்லை மருங்கூர் பட்டினத்து சேந்தன் குமரனார் |
| |
அம்ம
வாழி தோழி காதலர் | கேட்பாயாக!
வாழ்க! தோழியே! காதலர் |
நிலம்
புடைபெயர்வது ஆயினும் கூறிய | நிலம்
இடம்பெயர்ந்தாலும், தான் சொன்ன |
சொல்
புடைபெயர்தலோ இலரே வானம் | சொல்லினின்றும்
மாறுபடுகிறவர் இல்லை; மேகம் |
நளி
கடல் முகந்து செறி_தக இருளி | படர்ந்த
கடல்நீரை முகந்துகொண்டு செறிவுற்று இருண்டு |
கனை
பெயல் பொழிந்து கடும் குரல் பயிற்றி 5 | மிக்க
மழையைப் பொழிந்து, பெரு முழக்கத்தை பன்முறை எழுப்பி, |
கார்
செய்து என் உழையதுவே ஆயிடை | கார்காலத்தைச்
செய்து என் முன்னே நிற்கின்றது; அப்பொழுது |
கொல்லை
கோவலர் எல்லி மாட்டிய | புன்செய்க்காட்டில்
கோவலர் இரவில் கொளுத்திய |
பெரு
மர ஒடியல் போல | பெரிய
மரத்துண்டைப் போன்று |
அருள்
இலேன் அம்ம அளியேன் யானே | அவர்
அருளும் இல்லாமல் இரங்கத்தக்கவள் ஆனேன் நானே! |
| |
#
290 மருதம் மதுரை மருதன் இளநாகனார் | #
290 மருதம் மதுரை மருதன் இளநாகனார் |
| |
வயல்
வெள் ஆம்பல் சூடு தரு புது பூ | வயலிலுள்ள
வெள்ளைநிற ஆம்பலின் நெற்கதிர்க்கட்டுகளோடு வந்த புதிய பூவை, |
கன்று
உடை புனிற்று ஆ தின்ற மிச்சில் | கன்றை
உடைய அண்மையில் ஈன்ற பசு தின்றுவிட்டுப்போன மிச்சத்தை |
ஓய்
நடை முது பகடு ஆரும் ஊரன் | ஓய்ந்துபோன
நடையையுடைய முதிய காளை ஆவலுடன் தின்னும் ஊரைச் சேர்ந்தவனின் |
தொடர்பு
நீ வெஃகினை ஆயின் என் சொல் | தொடர்பினை
நீ விரும்பினால், என் சொல்லைக் |
கொள்ளல்
மாதோ முள் எயிற்றோயே 5 | கேட்பாயாக!
முள்ளைப் போன்ற பற்களையுடையவளே! |
நீயே
பெரு நலத்தையே அவனே | நீயோ
பெண்மை நலம் மிகுதியாகப் பெற்றவள்; உன் கணவனோ |
நெடு
நீர் பொய்கை நடுநாள் எய்தி | ஆழமான
நீரையுடைய பொய்கைக்கு நள்ளிரவில் சென்று |
தண்
கமழ் புது மலர் ஊதும் | குளிர்ச்சியுடன்
மணங்கமழும் புதிய மலரில் தேனுண்ணும் |
வண்டு
என மொழிப மகன் என்னாரே | வண்டு
என்று சொல்வார்கள், அவனை நல்லவன் என்று யாரும் சொல்லமாட்டார். |
| |
#
291 நெய்தல் கபிலர் | #
291 நெய்தல் கபிலர் |
| |
நீர்
பெயர்ந்து மாறிய செறி சேற்று அள்ளல் | நீர்
வற்றி மாறிப்போன செறிவான சேற்றுச் சகதியில் உள்ள |
நெய்
தலை கொழு மீன் அருந்த இன குருகு | நெய்ப்பசை
கொண்ட கொழுத்த மீன்களைத் தின்ற கூட்டமான குருகுகள் |
குப்பை
வெண் மணல் ஏறி அரைசர் | குவிந்திருக்கும்
வெள்ளை மணலில் ஏறி, அரசர்களின் |
ஒண்
படை தொகுதியின் இலங்கி தோன்றும் | ஒள்ளிய
காலாட்படையைப் போல விளங்கித் தோன்றும் |
தண்
பெரும் பௌவ நீர் துறைவற்கு நீயும் 5 | குளிர்ச்சியான
பெரிய கடல் நீரின் துறைவனுக்கு நீயும் |
கண்டு
ஆங்கு உரையாய் கொண்மோ பாண | கண்டது
கண்டபடியே உரைப்பாய்! மனத்திற்கொள்வாயாக, பாணனே! |
மா
இரு முள்ளூர் மன்னன் மா ஊர்ந்து | மிகவும்
பெரிதாகிய முள்ளூரின் மன்னன் தன் குதிரையில் சென்று |
எல்லி
தரீஇய இன நிரை | இரவில்
கொணர்ந்த ஆநிரைகளின் கூட்டத்துக்குரியவரான |
பல்
ஆன் கிழவரின் அழிந்த இவள் நலனே | ஆயர்களின்
தலைவனைப் போல மனமழிந்துபோன இவளது பெண்மை நலனை – |
| |
#
292 குறிஞ்சி நல்வேட்டனார் | #
292 குறிஞ்சி நல்வேட்டனார் |
| |
நெடும்
தண் ஆரத்து அலங்கு சினை வலந்த | நெடிதுயர்ந்த
குளிர்ச்சியான சந்தனமரத்தின் ஆடுகின்ற கிளைகளில் சுற்றிக்கொண்டிருக்கும் |
பசும்
கேழ் இலைய நறும் கொடி தமாலம் | பசுமை
நிறங்கொண்ட இலைகளையுடைய மணமிக்க தமாலக்கொடியை |
தீம்
தேன் கொள்பவர் வாங்குபு பரியும் | இனிய
தேனை எடுக்கும் குறவர்கள் வளைத்து முறிக்கும் |
யாணர்
வைப்பின் கானம் என்னாய் | எப்போதும்
புதிய வருமானம் கொண்ட இடத்தையுடைய கானம் என்று கருதமாட்டாய்; |
களிறு
பொர கரைந்த கய வாய் குண்டு கரை 5 | களிறுகள்
சண்டையிட்டுக்கொள்வதால் கரைந்துபோன, பெரிய பள்ளங்கள் உள்ள குழிவான கரையில் |
ஒளிறு
வான் பளிங்கொடு செம் பொன் மின்னும் | ஒளிறுகின்ற
வெள்ளைப் பளிங்குக்கற்களோடு, செம்பொன்னும் மின்னும் |
கரும்
கல் கான்யாற்று அரும் சுழி வழங்கும் | கருங்கற்களுக்கிடையே
ஓடும் காட்டாற்றில் நீந்தமுடியாத சுழல்களில் திரியும் |
கராஅம்
பேணாய் இரவரின் | முதலைகளையும்
கருத்தில்கொள்ளாமல் இரவுக்காலத்தில் வந்தால், |
வாழேன்
ஐய மை கூர் பனியே | நான்
உயிரோடு இருக்கமாட்டேன் ஐயனே! அதுவும் இந்த இருள் நிறைந்த பனிக்காலத்தில் – |
| |
#
293 பாலை கயமனார் | #
293 பாலை கயமனார் |
| |
மணி
குரல் நொச்சி தெரியல் சூடி | நீலமணி
போன்ற பூங்கொத்துக்களையுடைய நொச்சியின் பூமாலையைச் சூடிக்கொண்டு |
பலி
கள் ஆர்கை பார் முது குயவன் | பலியாக
இடப்பட்ட கள்ளைக் குடிக்கும் இந் நிலத்து முதுகுடியைச் சேர்ந்த குயவன் |
இடு
பலி நுவலும் அகன் தலை மன்றத்து | இன்னும்
இடவேண்டிய பலியைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருக்கும் அகன்ற இடமுள்ள மன்றத்தில் |
விழவு
தலைக்கொண்ட பழ விறல் மூதூர் | திருவிழாவை
மேற்கொண்ட பழமைச் சிறப்புவாய்ந்த மூதூரில் |
பூ
கண் ஆயம் காண்-தொறும் எம் போல்5 | பூப்போல்
கண்கொண்ட குமரிகளைக் காணும்போதெல்லாம், என்னைப் போல |
பெரு
விதுப்பு உறுக மாதோ எம் இல் | பெரிதாக
மனம் ‘விதுக்’கென்று போகட்டும்; எமது வீட்டுப் |
பொம்மல்_ஓதியை
தன் மொழி கொளீஇ | பொங்கிநிற்கும்
கூந்தல்காரியான என் மகளைத் தன் சொற்களால் மயக்கித் |
கொண்டு
உடன் போக வலித்த | தன்னுடன்
கூட்டிக்கொண்டுபோய்விடுவதற்கு மனத்தை மாற்றிய |
வன்கண்
காளையை ஈன்ற தாயே | கொடுமைக்கார
இளைஞனைப் பெற்றெடுத்த தாய்க்கு – |
| |
#
294 குறிஞ்சி புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர் கிழான் | #
294 குறிஞ்சி புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர் கிழான் |
| |
தீயும்
வளியும் விசும்பு பயந்து ஆங்கு | தீயையும்
தென்றலையும் ஒன்றுசேர ஆகாயம் பெற்றிருப்பதைப் போல, |
நோயும்
இன்பமும் ஆகின்று மாதோ | நோயையும்,
இன்பத்தையும் கொண்டிருக்கிறதல்லவா! |
மாயம்
அன்று தோழி வேய் பயின்று | பொய்த்தோற்றமில்லை
இது தோழி! மூங்கில்கள் மிகுந்து, |
எருவை
நீடிய பெரு வரை_அகம்-தொறும் | கொறுக்கச்சியாய்
உயர வளர்ந்த பெரிய மலைப்பக்கந்தோறும் |
தொன்று
உறை துப்பொடு முரண் மிக சினைஇ 5 | தொன்றுதொட்டு
வரும் பகைமையுணர்ச்சியுடன், முரண்கொண்டு மிகவும் சினந்து |
கொன்ற
யானை கோடு கண்டு அன்ன | புலியைக்
கொன்ற யானையின் கொம்பினைப் பார்த்ததைப் போன்ற |
செம்
புடை கொழு முகை அவிழ்ந்த காந்தள் | சிவந்த
பக்கங்களையுடைய கொழுத்த மொட்டு மலர்ந்த காந்தளானது |
சிலம்பு
உடன் கமழும் சாரல் | மலைப்பக்கமெல்லாம்
சேர்ந்து கமழும் மலைச்சாரல் |
இலங்கு
மலை நாடன் மலர்ந்த மார்பே | திகழ்கின்ற
மலைநாடனின் அகன்ற மார்பு – |
| |
#
295 நெய்தல் ஔவையார் | #
295 நெய்தல் ஔவையார் |
| |
முரிந்த
சிலம்பின் நெரிந்த வள்ளியின் | உச்சி
சரிந்து விழுந்த மலைப்பக்கத்தில் நசுங்கிப்போன வள்ளிக்கொடி போல |
புறன்
அழிந்து ஒலிவரும் தாழ் இரும் கூந்தல் | புற
அழகெல்லாம் அழிந்துபோய், தழைத்துத் தாழ்ந்த கரிய கூந்தலையுடைய |
ஆயமும்
அழுங்கின்று யாயும் அஃது அறிந்தனள் | தோழியர்
கூட்டமும் மனம்வருந்தினர்; எம் தாயும் அதனை அறிந்துகொண்டாள்; |
அரும்
கடி அயர்ந்தனள் காப்பே எந்தை | கடுமையான
காவலையுடைய பாதுகாப்பை மேற்கொண்டாள்; எமது தந்தையின், |
வேறு
பல் நாட்டு கால் தர வந்த 5 | வேறுபட்ட
பல நாடுகளிலிருந்து காற்றால் உந்தித்தள்ளப்பட்டு வந்த |
பல
வினை நாவாய் தோன்றும் பெரும் துறை | பலவாறான
வேலைப்பாடுகள் கொண்ட நாவாய்கள் வந்து நிற்கும், பெரிய துறைமுகத்தில் இருக்கும் |
கலி
மடை கள்ளின் சாடி அன்ன எம் | செருக்குத்தரும்
உணவான கள் இருக்கும் சாடியைப் போன்ற எமது |
இள
நலம் இல்_கடை ஒழிய | இளமை
நலம் வீட்டுக்குள் அடங்கி ஒழியச் |
சேறும்
வாழியோ முதிர்கம் யாமே | செல்வோம்,
வாழ்க நீவிர், வயதாகிப்போகட்டும் எங்களுக்கு. |
| |
#
296 பாலை குதிரை தறியனார் | #
296 பாலை குதிரை தறியனார் |
| |
என்
ஆவது-கொல் தோழி மன்னர் | என்ன
ஆகுமோ? தோழி! மன்னர்களின் |
வினை
வல் யானை புகர் முகத்து அணிந்த | போர்த்தொழிலில்
வல்லமையுள்ள யானையின் புள்ளிகள் நிறைந்த முகத்தில் அணிந்த |
பொன்
செய் ஓடை புனை நலம் கடுப்ப | பொன்னால்
செய்யப்பட்ட முகபடாத்தின் வேலைப்பாட்டின் சிறப்பைப் போன்று, |
புழல்
காய் கொன்றை கோடு அணி கொடி இணர் | உள்ளீடற்ற
காயைக் கொண்ட கொன்றையின் கிளைகளில், அழகாகக் கொடிபோன்ற பூங்கொத்து |
ஏ
கல் மீமிசை மே தக மலரும் 5 | பெரிய
மலையின் மிக உயர்ந்த இடத்தில் மேன்மை பொலிய மலர்கின்ற, |
பிரிந்தோர்
இரங்கும் அரும் பெறல் காலையும் | பிரிந்திருப்போர்
வருந்தும், அரிதினில் பெறும், கார்காலத்திலும் |
வினையே
நினைந்த உள்ளமொடு துனைஇ | மேற்கொண்ட
பணியையையே நினைத்த உள்ளத்தோடு விரைவாகச் |
செல்ப
என்ப காதலர் | செல்வார்
என்பர் நம் காதலர்; |
ஒழிதும்
என்ப நாம் வருந்து படர் உழந்தே | இங்கேயே
இருந்து ஒழிவீர் என்பர், நாம் வருந்துகின்ற துன்பத்தில் உழன்று – |
| |
#
297 குறிஞ்சி மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் | #
297 குறிஞ்சி மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் |
| |
பொன்
செய் வள்ளத்து பால் கிழக்கு இருப்ப | பொன்னால்
செய்யப்பட்ட கிண்ணத்தில் இருக்கும் பால் கீழே இருக்க, |
நின்
ஒளி எறிய சேவடி ஒதுங்காய் | உன்
மேனியின் ஒளி மாறுபட்டுத் தோன்ற, உன் சிவந்த அடிகளால் ஒதுங்கிப்போனாய் இல்லை; |
பன்
மாண் சேக்கை பகை கொள நினைஇ | பலவகையில்
சிறப்புற்ற படுக்கையை பகையாக நினைத்துக்கொண்டு, |
மகிழா
நோக்கம் மகிழ்ந்தனை போன்றனை | வெறியேறாத
அமைதியான உன் பார்வை, கள்வெறிகொண்டதுபோல் தோன்றுகிறாய்; |
எவன்-கொல்
என்று நினைக்கலும் நினைத்திலை 5 | இது
எதனால் என்று நினைத்துப்பார்க்கவும் இல்லை; |
நின்னுள்
தோன்றும் குறிப்பு நனி பெரிதே | உன்
உள்ளத்தில் தோன்றும் குறிப்பு மிகவும் பெரிதாக இருக்கிறது; |
சிதர்
நனை முணைஇய சிதர் கால் வாரணம் | வண்டுகள்
மொய்க்கும் அரும்புகளைக் கொத்தித் தூக்கியெறிந்த, கிளறுகின்ற கால்களையுடைய கோழி |
முதிர்
கறி யாப்பின் துஞ்சும் நாடன் | முதிர்ந்த
மிளகுக்கொடிகளின் பின்னலில் உறங்கிக் கிடக்கும் மலைநாட்டைச் சேர்ந்தவன் |
மெல்ல
வந்து நல் அகம் பெற்றமை | மெல்ல
வந்து உன் உள்ளத்தில் இடம்பெற்றதை |
மையல்
உறுகுவள் அன்னை 10 | ஊகித்தறியும்
மயக்கத்தைக் கொண்டிருக்கிறாள் அன்னை, |
ஐயம்
இன்றி கடும் கவவினளே | ஐயமின்றி
அவள் கடுமையாக உன்னை வீட்டுக்குள்வைத்துப் பூட்டிவிடுவாள். |
| |
#
298 பாலை விற்றூற்று வண்ணக்கன் தத்தனார் | #
298 பாலை விற்றூற்று வண்ணக்கன் தத்தனார் |
| |
வம்ப
மாக்கள் வரு_திறம் நோக்கி | பாலை
வழியில், புதிய மக்கள் வருகின்ற தன்மையைப் பார்த்து, |
செம்
கணை தொடுத்த செயிர் நோக்கு ஆடவர் | செம்மையான
அம்பினை அவர்மீது தொடுக்கும் சினந்த பார்வையினரான ஆடவர் எழுப்பும் |
மடி
வாய் தண்ணுமை தழங்கு குரல் கேட்ட | மடித்துவிட்ட
வாயையுடைய தண்ணுமைப் பறையின் முழங்குகின்ற ஓசையைக் கேட்ட |
எருவை
சேவல் கிளை_வயின் பெயரும் | பருந்தின்
சேவல் தன் சொந்தங்களை நோக்கிப் பறந்து செல்லும் |
அரும்
சுர கவலை அஞ்சுவரு நனம் தலை5 | கடப்பதற்கரிய
பாலைநிலத்தின் பலவாறாய்ப் பிரியும் பாதைகளைக் கொண்ட அச்சம் தரும் அகன்ற இடமான |
பெரும்
பல் குன்றம் உள்ளியும் மற்று இவள் | பெரிய
பலவான குன்றுகளை நினைத்துப்பார்த்தும் – அடுத்து இவளின் |
கரும்பு
உடை பணை தோள் நோக்கியும் ஒரு திறம் | கரும்பு
வரைந்த பருத்த தோள்களை எண்ணிப்பார்த்தும், ஒரு பக்கமும் |
பற்றாய்
வாழி எம் நெஞ்சே நல் தார் | உறுதியாக
முடிவெடுக்கமாட்டாய், வாழ்க என் நெஞ்சே! நல்ல வெப்பமாலையை அணிந்த |
பொன்
தேர் செழியன் கூடல் ஆங்கண் | பொன்னாலான
தேரையுடைய செழியனின் கூடல் நகரில் |
ஒருமை
செப்பிய அருமை வான் முகை 10 | முன்பு
பிரியேன் என்று ஒரே முடிவாகச் சொன்ன அருமையான முடிவு, வெண்மையான அரும்புகள் |
இரும்
போது கமழும் கூந்தல் | பெரிய
பூக்களாய்க் கமழும் கூந்தலையுடையவள் |
பெரு
மலை தழீஇயும் நோக்கு இயையுமோ மற்றே | நாம்
பிரிந்து சென்ற பெரிய மலைகளை ஏக்கத்தோடு பார்க்கும் பார்வையோடு ஒத்துப்போகுமோ? |
| |
#
299 நெய்தல் வடம வண்ணக்கன் பேரிசாத்தனார் | #
299 நெய்தல் வடம வண்ணக்கன் பேரிசாத்தனார் |
| |
உரு
கெழு யானை உடை கோடு அன்ன | அச்சத்தை
உண்டாக்கும் யானை உடைந்த கொம்பினைப் போன்ற |
ததர்
பிணி அவிழ்ந்த தாழை வான் பூ | செறிந்த
கட்டவிழ்ந்த தாழையின் வெள்ளைநிறப் பூ |
தயங்கு
இரும் கோடை தூக்கலின் நுண் தாது | வீசுகின்ற
பெரிதான மேல்காற்று மோதுவதால், நுண்ணிய தாதுக்கள் |
வயங்கு
இழை மகளிர் வண்டல் தாஅம் | மின்னுகின்ற
அணிகலன்களையுடைய மகளிரின் விளையாட்டு மணலின் மேல் பரவும் |
காமர்
சிறுகுடி புலம்பினும் அவர்_காண் 5 | அழகுமிக்க
சிறிய ஊர் நம்மைத் தனிமைப்படுத்தினும், அவரே நம் தலைவர்; |
நாம்
இலம் ஆகுதல் அறிதும்-மன்னோ | நாம்
இருந்தும் இல்லாமல் போவோம் என்பதை அறிவோம் திண்ணமாக – |
வில்
எறி பஞ்சி போல மல்கு திரை | வில்லால்
அடிக்கப்பட்ட பஞ்சினைப் போல பெருகும் அலைகளில் |
வளி
பொரு வயங்கு பிசிர் பொங்கும் | காற்று
மோதுவதால் ஒளிறும் பிசிர்கள் மேலெழும்பும் |
நளி
கடல் சேர்ப்பனொடு நகாஅ ஊங்கே | படர்ந்த
கடலைச் சேர்தவனோடு நாம் மகிழ்ந்து இருக்காத போது – |
| |
#
300 மருதம் பரணர் | #
300 மருதம் பரணர் |
| |
சுடர்
தொடி கோ_மகள் சினந்து என அதன்_எதிர் | ஒளிர்கின்ற
தோள்வளை அணிந்த அரசகுமாரி கோபங்கொள்ள, அதைத் தணிக்க |
மட
தகை ஆயம் கைதொழுது ஆஅங்கு | மடப்பத்தையுடைய
தோழியர் கூட்டம் கைகூப்பி நின்றதைப் போல, |
உறு
கால் ஒற்ற ஒல்கி ஆம்பல் | பெரிய
காற்று தள்ளுவதால் தளர்ந்து, ஆம்பல் மலர்கள் |
தாமரைக்கு
இறைஞ்சும் தண் துறை ஊரன் | தாமரையின்
எதிரில் சாய்ந்துநிற்கும் குளிர்ந்த துறையினையுடைய தலைமகன் |
சிறு
வளை விலை என பெரும் தேர் பண்ணி எம் 5 | சிறுவளை
அணிந்தவளுக்கு இது விலையாகும் என்று பெரிய தேரை அலங்கரித்து, எமது |
முன்கடை
நிறீஇ சென்றிசினோனே | வீட்டின்முன்
நிறுத்திச் சென்றுவிட்டான்; |
நீயும்
தேரொடு வந்து பேர்தல் செல்லாது | நீயும்
அவனோடு தேருடன் வந்து திரும்பிச் செல்லாமல், |
நெய்
வார்ந்து அன்ன துய் அடங்கு நரம்பின் | நெய்யை
ஊற்றிவிட்டாற் போன்ற பிசிர் அடங்கிய நரம்புகளைக் கொண்ட யாழை இசைக்கும் |
இரும்
பாண் ஒக்கல் தலைவன் பெரும் புண் | பெரிய
பாணர் சுற்றத்தாருக்குத் தலைவனே! பெரும் புண்பட்ட |
ஏஎர்
தழும்பன் ஊணூர் ஆங்கண் 10 | அழகினைக்
கொண்ட தழும்பனின் ஊணூர் என்னுமிடத்தில் |
பிச்சை
சூழ் பெரும் களிறு போல எம் | பிச்சைக்காக
வந்த பெரிய களிறு போல, எம்முடைய |
அட்டில்
ஓலை தொட்டனை நின்மே | அடுப்படியின்
கூரை ஓலையைத் தொட்டுக்கொண்டு நிற்கின்றாய். |
| |