சொற்பிரிப்பு-மூலம் | அடிநேர்-உரை |
உலகம்
உவப்ப வலன் ஏர்பு திரிதரு | உயிர்கள்
மகிழும் பொருட்டு வலமாக எழுந்து திரிதலைச் செய்யும் |
பலர்
புகழ் ஞாயிறு கடல் கண்டு ஆஅங்கு | பலரும்
புகழும் ஞாயிறு கடலில் எழக் கண்டதைப் போன்று, |
ஓ
அற இமைக்கும் சேண் விளங்கு அவிர் ஒளி | ஒழிவு
இல்லாமல் மின்னும் சேய்த்துநின்று ஒளிரும் பிரகாசமான ஒளியையுடைய, |
உறுநர்
தாங்கிய மதன் உடை நோன் தாள் | தன்னைச்சேர்ந்தவர்களைத்
தாங்குகின்ற செருக்குடைய, வலிமையான திருவடிகளையும், |
செறுநர்
தேய்த்த செல் உறழ் தட கை 5 | தான்கோபங்கொண்டாரை
அழித்த இடியின் மாற்றான பெரிய கையினை உடையவனும், 5 |
மறு
இல் கற்பின் வாணுதல் கணவன் | குற்றமற்ற
கற்பினையும், ஒளியுடைய நெற்றியினையும், உடையவளின் கொழுநன் ஆகியவனும் – |
கார்கோள்
முகந்த கமம் சூல் மா மழை | கடலில்
முகந்த நிறைத்த சூல் கொண்டமேகங்கள், |
வாள்
போழ் விசும்பில் வள் உறை சிதறி | மின்னலாகியவாள்
பிளந்த வானிடத்தே பெரிய துளியைச் சிதறி, |
தலை
பெயல் தலைஇய தண் நறும் கானத்து | முதல்மழை
பொழிந்த தண்ணிய நறிய காட்டில், |
இருள்
பட பொதுளிய பராரை மராஅத்து 10 | இருள்
உண்டாகத் தழைத்த பரிய அடியையுடைய செங்கடம்பின் 10 |
உருள்
பூ தண் தார் புரளும் மார்பினன் | தேர்உருள்
போலும் பூவால் செய்யப்பட்ட குளிர்ந்த மாலை அசையும் மார்பினையுடையவனும் – |
மால்
வரை நிவந்த சேண் உயர் வெற்பில் | பெரிய
மூங்கில் உயர்ந்து வளர்ந்துள்ள வானளாவிய மலையிடத்தே, |
கிண்கிணி
கவைஇய ஒண் செம் சீறடி | சிறு
சதங்கை சூழ்ந்த ஒளிரும் சிவந்த சிறிய அடியினையும், |
கணை
கால் வாங்கிய நுசுப்பின் பணை தோள் | திரட்சியையுடைய
காலினையும், வளைந்து நுடங்கிய இடையினையும், பெருமையுடைய தோளினையும், |
கோபத்து
அன்ன தோயா பூ துகில் 15 | தம்பலப்பூச்சியின்
செந்நிறத்தை ஒத்த, சாயம் தோய்க்கப்படாத பூவேலைப்பாடமைந்த கிலினையும், 15 |
பல்
காசு நிரைத்த சில் காழ் அல்குல் | பல
பொற்காசுகளை வரிசையாக அமைத்த சில வடங்களை அணிந்த அல்குலினையும், |
கை
புனைந்து இயற்றா கவின் பெறு வனப்பின் | கையால்
ஒப்பனை செய்து தோற்றுவிக்கப்படாத அழகினைப் பெற்ற வனப்பையும், |
நாவலொடு
பெயரிய பொலம் புனை அவிர் இழை | நாவலின்
பெயர்பெற்ற சாம்பூந்தமென்னும்பொன்னால் செய்த ஒளிரும் அணிகலன்களையும், |
சேண்
இகந்து விளங்கும் செயிர் தீர் மேனி | தொலைதூரத்தையும்
கடந்து விளங்கும் குற்றம் தீர்ந்த நிறத்தினையும் உடைய சூரர மகளிர் – |
துணையோர்
ஆய்ந்த இணை ஈர் ஓதி 20 | தோழியர்
ஆராய்ந்த இணைந்து நெய் பூசி ஈரமான மயிரில் 20 |
செம்
கால் வெட்சி சீறிதழ் இடை இடுபு | சிவந்த
காலையுடைய வெட்சியின் சிறிய பூக்களை நடுவே விடுபூவாகஇட்டு, |
பைம்
தாள் குவளை தூ இதழ் கிள்ளி | பசிய
தண்டினையுடைய குவளையின் தூய இதழ்களைக் கிள்ளி இட்டு, |
தெய்வவுத்தியொடு
வலம்புரி வயின் வைத்து | தெய்வவுத்தி,
வலம்புரி ஆகிய தலைக்கோலங்களை அதனதன் இடத்தில் வைத்து, |
திலகம்
தைஇய தேம் கமழ் திரு நுதல் | திலகம்
இட்ட மணம் நாறுகின்ற அழகிய நெற்றியில் |
மகர
பகு வாய் தாழ மண்ணுறுத்து
25 | சுறாவின்
அங்காந்த வாயாகப்பண்ணின தலைக்கோலம் தங்கச் செய்து, 25 |
துவர
முடித்த துகள் அறும் முச்சி | முற்ற
முடித்த குற்றம் இல்லாத கொண்டையில் |
பெரும்
தண் சண்பகம் செரீஇ கரும் தகட்டு | பெரிய
குளிர்ந்த சண்பகப்பூவைச் செருகி, கரிய புறவிதழினையும் |
உளை
பூ மருதின் ஒள் இணர் அட்டி | உள்ளே
துய்யினையும் உடைய பூக்களையுடைய மருதின் ஒளிரும் பூங்கொத்துக்களை அதன் மேல்
இட்டு, |
கிளை
கவின்று எழுதரு கீழ் நீர் செ அரும்பு | கிளையில்
அழகுற்று வளரும் நீர்க்கீழ் நின்ற சிவந்த அரும்பைக் |
இணைப்புறு
பிணையல் வளைஇ துணை தக 30 | கட்டுதலுற்ற
மாலையை வளைய வைத்து, தம்மில்ஒத்தற்குப் பொருந்த, 30 |
வண்
காது நிறைந்த பிண்டி ஒண் தளிர் | வளவிய
காதில் இட்டுநிறைந்த பிண்டியின் ஒளிரும் தளிர் |
நுண்
பூண் ஆகம் திளைப்ப திண் காழ் | நுண்ணிய
பூணையுடைய மார்பில் அசைய, திண்ணிய வயிரத்தையுடைய |
நறும்
குறடு உரிஞ்சிய பூ கேழ் தேய்வை | நறிய
சந்தனக்கட்டையை உரைத்த பொலிவுள்ள நிறத்தையுடைய குழம்பை, |
தேம்
கமழ் மருது இணர் கடுப்ப கோங்கின் | மணம்
நாறுகின்ற மருதம் பூவை அப்பினால்ஒப்பக், கோங்கின் |
குவி
முகிழ் இள முலை கொட்டி விரி மலர்
35 | குவிந்த
அரும்பு ஒத்தஇளமுலையில் அப்பி, விரிந்த மலரினையுடைய 35 |
வேங்கை
நுண் தாது அப்பி காண்வர | வேங்கைப்
பூவின் நுண்ணிய தாதையும் அதன்மேல் அப்பி, மேலும்அழகுண்டாக, |
வெள்ளில்
குறு முறி கிள்ளுபு தெறியா | விளவின்
சிறிய தளிரைக் கிள்ளித் தெறித்துக்கொண்டு, |
கோழி
ஓங்கிய வென்று அடு விறல் கொடி | ‘கோழியின்
உருவத்தைத் தன்னிடத்தே கொண்டு உயர்ந்த வென்று அடுகின்ற வெற்றியையுடைய கொடி |
வாழிய
பெரிது என்று ஏத்தி பலர் உடன் | வாழ்வதாக,
நெடுங்காலம்’, என்று வாழ்த்திப், பலருடன் |
சீர்
திகழ் சிலம்பகம் சிலம்ப பாடி
40 | சீர்மை
விளங்குகின்ற மலையிடமெல்லாம் எதிரொலிக்கப் பாடி – 40 |
சூர்
அரமகளிர் ஆடும் சோலை | கொடுமையுடைய
தெய்வமகளிர் ஆடும் சோலையையுடைய, |
மந்தியும்
அறியா மரன் பயில் அடுக்கத்து | மந்திகளும்
ஏறிஅறியாத மரம் நெருங்கின பக்கமலையில், |
சுரும்பும்
மூசா சுடர் பூ காந்தள் | வண்டுகளும்
மொய்க்காத நெருப்புப் போலும் பூவினையுடைய செங்காந்தளின் |
பெரும்
தண் கண்ணி மிலைந்த சென்னியன் | பெரிய
குளிர்ந்த கண்ணியைச் சூடிய திருமுடியையுடையவனும் – |
பார்
முதிர் பனி கடல் கலங்க உள் புக்கு
45 | பாறைநிலம்
முதிர்வு பெற்ற குளிர்ந்த கடல் நிலைகுலைய உள்ளே சென்று, 45 |
சூர்
முதல் தடிந்த சுடர் இலை நெடு வேல் | சூரனாகிய
தலைவனைக் கொன்ற ஒளிவிடுகின்ற இலைத்தொழிலையுடைய நெடிய வேல் – |
உலறிய
கதுப்பின் பிறழ் பல் பேழ் வாய் | காய்ந்து
போன மயிரினையும், நிரை ஒவ்வாத பல்லினைக் கொண்ட பெரிய வாயினையும், |
சுழல்
விழி பசும் கண் சூர்த்த நோக்கின் | சுழலும்
விழியையுடைய பசிய கண்ணினையும், கொடிய பார்வையினையும், |
கழல்
கண் கூகையொடு கடும் பாம்பு தூங்க | பிதுங்கிய
கண்ணையுடைய கூகையோடு, கொடிய பாம்பும் தூங்கும் அளவிற்குப் பெரிதான |
பெரு
முலை அலைக்கும் காதின் பிணர் மோட்டு 50 | பெரிய
முலையை வருத்துகின்ற காதினையும், சொரசொரப்பான பெரிய வயிற்றையும், 50 |
உரு
கெழு செலவின் அஞ்சுவரு பேய்மகள் | (கண்டோர்)அஞ்சுதல்
பொருந்திய நடையினையும் உடைய அச்சம் தோன்றுகின்ற பேயாகிய மகள் |
குருதி
ஆடிய கூர் உகிர் கொடு விரல் | குருதியை
அளைந்த கூரிய உகிரினையுடைய கொடிய விரலால் |
கண்
தொட்டு உண்ட கழி முடை கரும் தலை | கண்களைத்
தோண்டி உண்ணப்பட்ட மிக்க முடை நாற்றத்தையுடைய கரிய தலையை |
ஒண்
தொடி தட கையின் ஏந்தி வெருவர | ஒள்ளிய
தொடியையுடைய பெரிய கையில் ஏந்தி, அச்சந்தோன்ற |
வென்று
அடு விறல் களம் பாடி தோள் பெயரா 55 | வென்று
அழிக்கும் திறலையுடைய போர்க்களத்தைப் பாடி, தோளை அசைத்து, 55 |
நிணம்
தின் வாயள் துணங்கை தூங்க | நிணத்தைத்
தின்கின்ற வாயையுடையளாய், துணங்கைக்கூத்து ஆட – |
இரு
பேர் உருவின் ஒரு பேர் யாக்கை | இரண்டு
பெரிய வடிவினையுடைய ஒன்றாகிய பெரிய உடல், |
அறு
வேறு வகையின் அஞ்சுவர மண்டி | அற்று
வேறாகும் வகையால் அச்சம் தோன்ற மிக்குச் சென்று, |
அவுணர்
நல் வலம் அடங்க கவிழ் இணர் | அவுணரின்
நல்ல வெற்றி இல்லையாகும்படி, கீழ்நோக்கின பூங்கொத்துக்களையுடைய |
மா
முதல் தடிந்த மறு இல் கொற்றத்து
60 | மாமரத்தின்
அடியை வெட்டின குற்றம் இல்லாத வெற்றியினையும், 60 |
எய்யா
நல் இசை செ வேல் சேஎய் | அளந்தறியமுடியாத
நல்ல புகழினையும், செவ்விய வேலையும் உடைய முருகக்கடவுளின் – |
சேவடி
படரும் செம்மல் உள்ளமொடு | திருவடியில்
செல்லுதற்குரிய பெருமைகொண்ட உள்ளத்தோடு, |
நலம்
புரி கொள்கை புலம் பிரிந்து உறையும் | நன்மைகளையே
செய்யும் மேற்கோளுடன், (இருக்கும்)இடத்தை விட்டு (வேறிடத்தில்) தங்கும் |
செலவு
நீ நயந்தனை ஆயின் பல உடன் | பயணத்தை நீ
விரும்பியவனாய் இருந்தால், (கழிந்த)பற்பல பிறப்புகளிலும், |
நன்னர்
நெஞ்சத்து இன் நசை வாய்ப்ப 65 | நல்ல
நெஞ்சத்தில் கிடந்த இனிய (வீடுபேற்றின்கண்)விருப்பம் நிறைவேறும்படி, 65 |
இன்னே
பெறுதி நீ முன்னிய வினையே | இப்பொழுதே
பெறுவாய், நீ கருதிய வினையின் பயனை; |
செரு
புகன்று எடுத்த சேண் உயர் நெடும் கொடி | போரை
விரும்பி எடுத்துக்கொண்ட, தொலை நாட்டில் உயர்ந்த, நெடிய கொடிக்கு அருகே |
வரி
புனை பந்தொடு பாவை தூங்க | (நூலால்)வரிந்து
புனையப்பட்ட பந்துடன் பாவையும் தூங்கிக்கிடப்ப, |
பொருநர்
தேய்த்த போர் அரு வாயில் | பொருவாரை
இல்லையாக்கிய போர்த்தொழில் அரிதாகிய வாயிலினையும், |
திரு
வீற்றிருந்த தீது தீர் நியமத்து
70 | திருமகள்
வீற்றிருந்த குற்றம் தீர்ந்த அங்காடித் தெருவினையும், 70 |
மாடம்
மலி மறுகின் கூடல் குட வயின் | மாடங்கள்
மிகுந்திருக்கும் (ஏனைத்)தெருக்களையும் உடைய மதுரையின் மேற்றிசையில் – |
இரும்
சேற்று அகல் வயல் விரிந்து வாய் அவிழ்ந்த | கரிய
சேற்றினையுடைய அகன்ற வயலில் முறுக்கவிழ்ந்து மேற்புறமும் மலர்ந்த |
முள்
தாள் தாமரை துஞ்சி வைகறை | முள்ளிருக்கும்
தண்டையுடைய தாமரைப் பூவில் துயில்கொண்டு, விடியற்காலத்தே, |
கள்
கமழ் நெய்தல் ஊதி எல் பட | தேன்
நாறுகின்ற நெய்தல் பூவை ஊதி, ஞாயிறு வீழ |
கண்
போல் மலர்ந்த காமரு சுனை மலர் 75 | கண்ணைப்போன்று
விரிந்த விருப்பம் மருவின சுனைப் பூக்களில், 75 |
அம்
சிறை வண்டின் அரி கணம் ஒலிக்கும் | அழகிய
சிறகையுடைய வண்டின் அழகிய திரள் ஆரவாரிக்கும் – |
குன்று
அமர்ந்து உறைதலும் உரியன் அதாஅன்று | திருப்பரங்குன்றத்தில்
நெஞ்சமர்ந்து இருத்தலும் உரியன், அதோடன்றி, |
வைந்நுதி
பொருத வடு ஆழ் வரி நுதல் | கூரிய
நுனி(யையுடைய தோட்டி) வெட்டின வடு அழுந்தின புகரையுடைய நெற்றியில் |
வாடா
மாலை ஓடையொடு துயல்வர | வாடாத
மாலையான பொன்னரிமாலை நெற்றிப்பட்டத்தோடு கிடந்து அசைய, |
படு
மணி இரட்டும் மருங்கின் கடு நடை
80 | தாழ்கின்ற
மணி மாறிமறி ஒலிக்கின்ற பக்கத்தினையும், கடிய நடையினையும், 80 |
கூற்றத்து
அன்ன மாற்று அரு மொய்ம்பின் | கூற்றுவனை
ஒத்த பிறரால் தடுத்தற்கரிய வலிமையினையும் உடைய, |
கால்
கிளர்ந்து அன்ன வேழம் மேற்கொண்டு | காற்று
எழுந்ததைப் போன்ற (ஓட்டத்தையுடைய)களிற்றில் ஏறி – |
ஐ
வேறு உருவின் செய்வினை முற்றிய | ஐந்தாகிய
வேறுபட்ட வடிவினையுடைய (முடிக்குச்)செய்யும் தொழிலெல்லாம் முற்றுப்பெற்ற |
முடியொடு
விளங்கிய முரண் மிகு திரு மணி | முடியோடு
விளங்கிய (ஒன்றற்கொன்று)மாறுபாடு மிகும் அழகினையுடைய மணிகள் |
மின்
உறழ் இமைப்பின் சென்னி பொற்ப 85 | மின்னலுக்கு
மாற்றாகும் சிமிட்டலுடன் தலையில் பொலிவுபெறவும், 85 |
நகை
தாழ்பு துயல்வரூஉம் வகை அமை பொலம் குழை | ஒளி தங்கி
அசையும் வகையாக(-நன்றாக) அமைந்த பொன்னாலான மகரக்குழை |
சேண்
விளங்கு இயற்கை வாண் மதி கவைஇ | தொலை
தூரத்திற்கும் ஒளிரும் இயல்பினையுடைய ஒளியை உடைய திங்களைச் சூழ்ந்து |
அகலா
மீனின் அவிர்வன இமைப்ப | நீங்காத
மீன்கள் போல விளங்குவனவாய் மின்ன, |
தா
இல் கொள்கை தம் தொழில் முடிமார் | குற்றம்
இல்லாத நோன்புகளையுடைய தமது தவத்தொழிலை முடிப்பாருடைய |
மனன்
நேர்பு எழுதரு வாள் நிற முகனே
90 | நெஞ்சில்
பொருந்தித் தோன்றுகின்ற ஒளி மிக்க நிறத்தையுடைய திருமுகங்களில்; 90 |
மா
இருள் ஞாலம் மறு இன்றி விளங்க | பெரும்
இருள் (சூழ்ந்த)உலகம் குற்றமில்லாததாய் விளங்க |
பல்
கதிர் விரிந்தன்று ஒரு முகம் ஒரு முகம் | பல
ஒளிக்கீற்றுகளையும் பரப்பியது ஒரு முகம்; ஒரு முகம் |
ஆர்வலர்
ஏத்த அமர்ந்து இனிது ஒழுகி | (தன்பால்)அன்புசெய்தவர்கள்
வாழ்த்த, (அவர்க்கு) முகனமர்ந்து இனிதாக நடந்து, |
காதலின்
உவந்து வரம் கொடுத்தன்றே ஒரு முகம் | (அவர்மேல்
கொண்ட)காதலால் மகிழ்ந்து (வேண்டும்)வரங்களைக் கொடுத்தது; ஒரு முகம் |
மந்திர
விதியின் மரபுளி வழாஅ
95 | மந்திர
நியதிகளின் மரபுள்ளவற்றில் வழுவாத
95 |
அந்தணர்
வேள்வி ஓர்க்கும்மே ஒரு முகம் | அந்தணருடைய
வேள்விகளை கூர்ந்து கேட்கும்; ஒரு முகம் |
எஞ்சிய
பொருள்களை ஏமுற நாடி | எஞ்சிய
பொருள்களைச் (சான்றோர்)காவலுறும்படி ஆராய்ந்துணர்ந்து, |
திங்கள்
போல திசை விளக்கும்மே ஒரு முகம் | திங்கள்
போலத் திசைகளெல்லாவற்றையும் பொலிவுறுத்தி நிற்கும்; ஒரு முகம் |
செறுநர்
தேய்த்து செல் சமம் முருக்கி | கோபமுடையோரை
அழித்து, செல்லுகின்ற போரில் கொன்றழித்து, |
கறுவு
கொள் நெஞ்சமொடு களம் வேட்டன்றே ஒரு முகம்
100 | வெகுளி
கொண்ட நெஞ்சத்தோடு களவேள்வியைச் செய்யும்; ஒரு முகம் 100 |
குறவர்
மட மகள் கொடி போல் நுசுப்பின் | குறவரின்
இளமகளாகிய, கொடி போன்ற இடையையும் |
மடவரல்
வள்ளியொடு நகை அமர்ந்தன்றே | மடப்பத்தையும்
உடைய, வள்ளியோடே மகிழ்ச்சியைப் பொருந்திற்று; |
ஆங்கு
அ மூவிரு முகனும் முறை நவின்று ஒழுகலின் | அவ்வாறாக,
அந்த ஆறு முகங்களும் (தத்தம்)முறைமைகளைப் பயின்று நடத்தலால் – |
ஆரம்
தாழ்ந்த அம் பகட்டு மார்பின் | ஆரத்தைத்
தாங்கிய அழகுடைய பெரிய மார்பிடத்தே கிடக்கின்ற |
செம்
பொறி வாங்கிய மொய்ம்பின் சுடர் விடுபு
105 | சிவந்த
வரிகளை வாங்கிக்கொண்ட, வலிமை மிக்க, வேலை எறிந்து, 105 |
வண்
புகழ் நிறைந்து வசிந்து வாங்கு நிமிர் தோள் | வளவிய
புகழ் நிறையப்பெற்று, வளைந்து நெளிந்து(உருண்டு திரண்ட) நிமிர்ந்த தோள்களில், |
விண்
செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது | விண்ணுலகத்திற்குச்
செல்லும் முறைமையினையுடைய துறவிகட்குப் பாதுகாவலாக ஏந்தியது |
ஒரு
கை உக்கம் சேர்த்தியது ஒரு கை | ஒரு கை;
இடுப்பில் வைக்கப்பட்டது மற்றொரு கை; |
நலம்
பெறு கலிங்கத்து குறங்கின் மிசை அசைஇயது ஒரு கை | செம்மைநிறம்
பெற்ற ஆடையுடைய துடையின் மேலே கிடந்தது ஒரு கை; |
அங்குசம்
கடாவ ஒரு கை இரு கை 110 | தோட்டியைச்
செலுத்தி நிற்ப ஒரு கை; இரண்டு கைகள் 110 |
ஐ
இரு வட்டமொடு எஃகு வலம் திரிப்ப ஒரு கை | அழகிய
பெரிய கேடகத்தோடு வேற்படையையும் வலமாகச் சுற்றிநிற்ப; ஒரு கை |
மார்பொடு
விளங்க ஒரு கை | மார்போடே
விளங்கிநிற்க; ஒரு கை |
தாரொடு
பொலிய ஒரு கை | மாலையோடு
அழகு பெற; ஒரு கை |
கீழ்
வீழ் தொடியொடு மீமிசை கொட்ப ஒரு கை | கீழ்நோக்கி
நழுவி வீழும் தொடி என்ற அணிகலனோடு மேலே சுழல; ஒரு கை |
பாடு
இன் படு மணி இரட்ட ஒரு கை 115 | ஓசை இனிதாக
ஒலிக்கின்ற மணியை மாறி மாறி ஒலிக்கப்பண்ண; ஒரு கை 115 |
நீல்
நிற விசும்பின் மலி துளி பொழிய ஒரு கை | நீல
நிறத்தையுடைய முகிலால் மிக்க மழையைப் பெய்விக்க; ஒரு கை |
வான்
அரமகளிர்க்கு வதுவை சூட்ட | தெய்வ
மகளிர்க்கு மணமாலை சூட்ட; |
ஆங்கு
அ பன்னிரு கையும் பால் பட இயற்றி | அப்படியே,
அந்தப் பன்னிரண்டு கையும் (ஆறு முகங்களின்)பகுதியில் பொருந்தத் தொழில்செய்து – |
அந்தர
பல் இயம் கறங்க திண் காழ் | விசும்பின்
பல இசைக்கருவிகள் முழங்கவும், திண்ணிய வயிரத்தையுடைய |
வயிர்
எழுந்து இசைப்ப வால் வளை ஞரல 120 | கொம்பு
மிக்கு ஒலிப்பவும், வெள்ளிய சங்கு முழங்கவும்,
120 |
உரம்
தலை கொண்ட உரும் இடி முரசமொடு | வலிமையை(த்
தன்னிடத்து)க் கொண்ட உருமேற்றின் இடி(யைப் போன்று ஒலிக்கும்)முரசுடன் |
பல்
பொறி மஞ்ஞை வெல் கொடி அகவ | பல
பீலியையுடைய மயில் வெற்றிக் கொடியிலிருந்து அகவ, |
விசும்பு
ஆறு ஆக விரை செலல் முன்னி | வானமே
வழியாக விரைந்த செலவினை மேற்கொண்டு, |
உலகம்
புகழ்ந்த ஓங்கு உயர் விழு சீர் | உலகமக்களால்
புகழப்பட்ட மிக உயர்ந்த சிறந்த புகழினையுடைய |
அலைவாய்
சேறலும் நிலைஇய பண்பே அதாஅன்று 125 | அலைவாய்
என்னும் ஊரில் ஏற எழுந்தருளுதலும் (அவன்)நிலைபெற்ற பண்பே, அவ்வூரல்லாமலும், 125 |
சீரை
தைஇய உடுக்கையர் சீரொடு | மரவுரியை
உடையாகச் செய்த உடையவரும், அழகோடு |
வலம்புரி
புரையும் வால் நரை முடியினர் | வலம்புரிச்சங்கினை
ஒத்த வெண்மையான நரைமுடியினை உடையவரும், |
மாசு
அற இமைக்கும் உருவினர் மானின் | அழுக்கு அற
மின்னும் உருவினரும், மானின் |
உரிவை
தைஇய ஊன் கெடு மார்பின் | தோல்
போர்த்த தசை கெடுகின்ற மார்பின் |
என்பு
எழுந்து இயங்கும் யாக்கையர் நன் பகல்
130 | எலும்புகள்
தோன்றி உலவும் உடம்பினையுடையவரும், நல்ல பகற்பொழுதுகள் 130 |
பல
உடன் கழிந்த உண்டியர் இகலொடு | பலவும்
சேரக்கழிந்த உணவினையுடையவரும், மாறுபாட்டுடன் |
செற்றம்
நீக்கிய மனத்தினர் யாவதும் | கோபத்தை(யும்)
நீக்கிய மனத்தினரும், பலவற்றையும் |
கற்றோர்
அறியா அறிவினர் கற்றோர்க்கு | கற்றோரும்
அறியாத அறிவினையுடையவரும், கற்றோர்க்கும் |
தாம்
வரம்பு ஆகிய தலைமையர் காமமொடு | தாம்
எல்லையாகிய தலைமையை உடையவரும், அவாவோடு |
கடும்
சினம் கடிந்த காட்சியர் இடும்பை
135 | கடிய
சினத்தை(யும்) விலக்கிய காண்பதற்கினியரும், மனவருத்தம் 135 |
யாவதும்
அறியா இயல்பினர் மேவர | ஒருசிறிதும்
அறியாத இயல்பினரும், பொருந்துதல் வரும்படி |
துனி
இல் காட்சி முனிவர் முன் புக | வெறுப்பு
அற்ற காட்சியையுடையரும் ஆகிய முனிவர், முன்னே செல்ல, |
புகை
முகந்து அன்ன மாசு இல் தூ உடை | புகையை
முகந்துகொண்டதைப் போன்ற அழுக்கேறாத தூய உடையினையும், |
முகை
வாய் அவிழ்ந்த தகை சூழ் ஆகத்து | மொட்டு
வாய் நெகிழ்ந்த மாலை சூழ்ந்த மார்பினையும் (கொண்ட), |
செவி
நேர்பு வைத்த செய்வுறு திவவின்
140 | செவியால்
இசையை அளந்து நரம்பைக் கட்டின சுற்றுதலுறும் வார்க்கட்டினையுடைய 140 |
நல்
யாழ் நவின்ற நயன் உடை நெஞ்சின் | நல்ல
யாழின் இசையில் பயின்ற நன்மையையுடைய நெஞ்சால் |
மென்
மொழி மேவலர் இன் நரம்பு உளர | மெல்லிய
மொழி பேசுதல் பொருந்தியோர் (ஆகிய கந்தருவர்), இனிய யாழ் நரம்பை இயக்க – |
நோய்
இன்று இயன்ற யாக்கையர் மாவின் | நோய்
இல்லையாக இயன்ற உடம்பினையும், மாவின் |
அவிர்
தளிர் புரையும் மேனியர் அவிர்தொறும் | ஒளிரும்
தளிரை ஒக்கும் நிறத்தினையுடையவரும், ஒளிர்தோறும் |
பொன்
உரை கடுக்கும் திதலையர் இன் நகை
145 | பொன்னுரை
(விளங்கினால்)போல (விளங்கும்)தேமலையுடையவரும் ஆகிய, இனிய ஒளியினையுடைய 145 |
பருமம்
தாங்கிய பணிந்து ஏந்து அல்குல் | மேகலையை
அணிந்த தாழ்ந்தும் உயர்ந்தும் உள்ள அல்குலையும், |
மாசு
இல் மகளிரொடு மறு இன்றி விளங்க | குற்றமில்லாத
மகளிரோடு கறை இன்றி விளங்க; |
கடுவொடு
ஒடுங்கிய தூம்பு உடை வால் எயிற்று | நஞ்சுடன்
மறைந்திருக்கும் உள்துளையுடைய வெண்மையான பல்லினையும், |
அழல்
என உயிர்க்கும் அஞ்சுவரு கடும் திறல் | நெருப்பென்னும்படி
நெட்டுயிர்ப்புக்கொள்ளும் அச்சம் தோன்றும் கடிய வலிமையினையும் உடைய, |
பாம்பு
பட புடைக்கும் பல் வரி கொடும் சிறை 150 | பாம்புகள்
மாளும்படி அடிக்கின்ற பல வரியினையுடைய வளைந்த சிறகினையுடைய 150 |
புள்
அணி நீள் கொடி செல்வனும் வெள் ஏறு | கருடனை
அணிந்த நீண்ட கொடியினையுடைய திருமாலும் – வெள்ளிய ஆனேற்றை |
வல
வயின் உயரிய பலர் புகழ் திணி தோள் | வலப்பக்கத்தே
(வெற்றிக்கொடியாக)உயர்த்திய, பலரும் புகழ்கின்ற திண்ணிய தோள்களையும், |
உமை
அமர்ந்து விளங்கும் இமையா மு கண் | இறைவி
பொருந்தி விளங்குகின்ற, இமையாத மூன்று கண்களையும் உடைய, |
மூவெயில்
முருக்கிய முரண் மிகு செல்வனும் | முப்புரத்தை
எரித்த, மாறுபாடு மிக்க உருத்திரனும் – |
நூற்றுப்பத்து
அடுக்கிய நாட்டத்து நூறு பல்
155 | நூற்றைப்
பத்தாக அடுக்கிய(ஆயிரம்) கண்களையும், நூற்றுக்கணக்கான பல 155 |
வேள்வி
முற்றிய வென்று அடு கொற்றத்து | வேள்விகளை
வேட்டு முடித்ததனால் வென்று கொல்கின்ற வெற்றியினையும் உடையனாய், |
ஈரிரண்டு
ஏந்திய மருப்பின் எழில் நடை | நான்கு
ஏந்திய கொம்புகளையும், அழகிய நடையினையும், |
தாழ்
பெரும் தட கை உயர்த்த யானை | (நிலம்
வரை)தாழ்ந்த பெரிய வளைவினையுடைய கையினையும் உடைய புகழ்பெற்ற யானையின் |
எருத்தம்
ஏறிய திரு கிளர் செல்வனும் | புறக்கழுத்தில்
ஏறிய திருமகளின் விளக்கமுடைய இந்திரனும் – |
நால்
பெரும் தெய்வத்து நல் நகர் நிலைஇய
160 | நான்கு
பெரும் தெய்வங்களுள் வைத்து நல்ல நகரங்கள் நிலைபெற்றுள்ள 160 |
உலகம்
காக்கும் ஒன்று புரி கொள்கை | உலகத்தை
ஓம்புதல் தொழில் ஒன்றையே விரும்பும் கோட்பாட்டையுடைய |
பலர்
புகழ் மூவரும் தலைவர் ஆக | பலராலும்
புகழப்படுகின்ற (அயனை ஒழிந்த ஏனை)மூவரும் தலைவராக வேண்டி, |
ஏமுறு
ஞாலம்தன்னில் தோன்றி | பாதுகாவலுறுகின்ற
(இம்)மண்ணுலகில் (வந்து)தோன்றி, |
தாமரை
பயந்த தா இல் ஊழி | தாமரை
பெற்ற குற்றமற்ற ஊழிகளையுடைய |
நான்முக
ஒருவர் சுட்டி காண்வர 165 | நான்முகன்
ஒருவனை(ப் பழைய நிலையிலே நிறுத்தலை)க் கருதி, அழகுண்டாக, 165 |
பகலில்
தோன்றும் இகல் இல் காட்சி | பகுத்துக்
காணுங்கால் (வேறுபடத்)தோன்றியும், தம்முள் மாறுபாடில்லாத அறிவினையுடைய |
நால்
வேறு இயற்கை பதினொரு மூவரொடு | நான்காகிய
வேறுபட்ட இயல்பினையுடைய முப்பத்து மூவரும், |
ஒன்பதிற்று
இரட்டி உயர் நிலை பெறீஇயர் | பதினெண்வகையாகிய
உயர்ந்த நிலையைப் பெற்றவரும் – |
மீன்
பூத்து அன்ன தோன்றலர் மீன் சேர்பு | விண்மீன்கள்
மலர்ந்ததைப் போன்ற தோற்றத்தையுடையவராய், மீன்களின்(இடத்தைச்)சேர்ந்து |
வளி
கிளர்ந்து அன்ன செலவினர் வளி இடை 170 | காற்று
எழுந்ததைப் போன்ற செலவினையுடையராய், காற்றிடத்தே 170 |
தீ
எழுந்து அன்ன திறலினர் தீ பட | நெருப்பு
எழுந்ததைப் போன்ற வலிமையினையுடையராய், நெருப்புப் பிறக்க |
உரும்
இடித்து அன்ன குரலினர் விழுமிய | உருமேறு
இடித்ததைப் போன்ற குரலினை உடையராய், இடும்பையாயுள்ள |
உறு
குறை மருங்கில் தம் பெறு முறை கொண்மார் | தமக்குற்ற
குறைவேண்டும் பகுதியில் (தம்)தொழில்களைப் பெறுமுறையினை முடித்துக்கொள்வதற்கு, |
அந்தர
கொட்பினர் வந்து உடன் காண | வானத்தே
சுழற்சியினையுடையராய், வந்து ஒருசேரக் காண – |
தா
இல் கொள்கை மடந்தையொடு சில் நாள்
175 | குற்றமற்ற
அறக்கற்பினையுடைய மடந்தையுடன், சில நாள் 175 |
ஆவினன்குடி
அசைதலும் உரியன் அதாஅன்று | திருவாவினன்குடி
என்னும் ஊரிலே இருத்தலும் உரியன் – அவ்வூரேயல்லாமல், |
இருமூன்று
எய்திய இயல்பினின் வழாஅது | ஆறாகிய
நன்மை பொருந்திய இலக்கணத்தில் வழுவாமல், |
இருவர்
சுட்டிய பல் வேறு தொல் குடி | (பெற்றோர்)இருவர்
குலத்தையும் உலகத்தார் சுட்டிக்காட்டத்தக்க பலவாய் வேறுபட்ட பழைய குடியிற்
பிறந்த, |
அறுநான்கு
இரட்டி இளமை நல் யாண்டு | இருபத்துநான்கின்
இரட்டியாகிய இளமை மிக்க நல்ல ஆண்டுகளை |
ஆறினில்
கழிப்பிய அறன் நவில் கொள்கை 180 | (மெய்ந்நூல்
கூறும்)நெறியால் கழித்த, அறத்தை எப்பொழுதும் கூறுகின்ற கோட்பாட்டினையும், 180 |
மூன்று
வகை குறித்த முத்தீ செல்வத்து | மூன்று
வகையைக் கருதின மூன்று தீயாலுண்டாகிய செல்வத்தினையும் உடைய |
இருபிறப்பாளர்
பொழுது அறிந்து நுவல | இருபிறப்பினையுடைய
அந்தணர், காலம் அறிந்து வாழ்த்துக்கூற – |
ஒன்பது
கொண்ட மூன்று புரி நுண் ஞாண் | ஒன்பதாகிய
நூலைத் தன்னிடத்தே கொண்ட, ஒரு புரி மூன்றாகிய, நுண்ணிய பூணூலையும் உடைய, |
புலரா
காழகம் புலர உடீஇ | ஈரம் காயாத
துகில் புலர உடுத்தி, |
உச்சி
கூப்பிய கையினர் தன் புகழ்ந்து
185 | தலைமேல்
கூப்பிய கையினராய், தன்னைப் புகழ்ந்து,
185 |
ஆறெழுத்து
அடக்கிய அரு மறை கேள்வி | ஆறெழுத்தினைத்
தன்னிடத்தே அடக்கி நிற்கின்ற கேட்டற்கரிய மந்திரத்தை |
நா
இயல் மருங்கில் நவில பாடி | நா புடை
பெயரும் அளவுக்கு பயில ஓதி, |
விரையுறு
நறு மலர் ஏந்தி பெரிது உவந்து | (வாசனைப்புகை
முதலியவற்றால்)வாசனையேற்றப்பட்ட மணமுள்ள பூவை எடுத்துத் தூவி, பெரிதும்
மகிழ்ந்து, |
ஏரகத்து
உறைதலும் உரியன் அதாஅன்று | திருவேரகம்
என்கின்ற ஊரில் இருத்தலும் உரியன் – அதுவேயன்றி |
பைம்
கொடி நறை காய் இடை இடுபு வேலன் 190 | பச்சிலைக்கொடியால்
நறு நாற்றத்தையுடைய காயை நடுவே இட்டு, வேலன், 190 |
அம்
பொதி புட்டில் விரைஇ குளவியொடு | அழகினையுடைய
தக்கோலக் காயைக் கலந்து, காட்டு மல்லிகையுடன் |
வெண்கூதாளம்
தொடுத்த கண்ணியன் | வெண்டாளியையும்
கட்டின கண்ணியினை உடைய; |
நறும்
சாந்து அணிந்த கேழ் கிளர் மார்பின் | நறிய
சந்தனத்தைப் பூசின நிறம் விளங்கும் மார்பினையுடைய; |
கொடும்
தொழில் வல் வில் கொலைஇய கானவர் | கொடிய
தொழிலையுடைய வலிய வில்லால் கொல்லுதலைச் செய்த குறவர் |
நீடு
அமை விளைந்த தேம் கள் தேறல் 195 | நெடிய
மூங்கிலில் இருந்து முற்றின தேனால் செய்த கள்தெளிவை 195 |
குன்றக
சிறு குடி கிளையுடன் மகிழ்ந்து | மலையிடத்தேயுள்ள
சிறிய ஊரில் இருக்கின்ற தம் சுற்றத்தோடு உண்டு மகிழ்ந்து |
தொண்டக
சிறுபறை குரவை அயர | தொண்டகமாகிய
சிறுபறை(யின் தாளத்திற்கேற்ப)க் குரவைக்கூத்தைப் பாட, |
விரல்
உளர்ப்பு அவிழ்ந்த வேறுபடு நறும் கான் | விரலின்
அலைப்பால் மலர்ந்தமையால் வேறுபடுகின்ற நறிய மணத்தையுடைய |
குண்டு
சுனை பூத்த வண்டு படு கண்ணி | ஆழ்ந்த
சுனையில் பூத்த மலர்(புனையப்பட்ட) வண்டு வீழ்கின்ற மாலையினையும், |
இணைத்த
கோதை அணைத்த கூந்தல் 200 | பிணைக்கப்பட்ட
மாலையினையும், சேர்த்தின கூந்தலையும் உடையராய், 200 |
முடித்த
குல்லை இலை உடை நறும் பூ | தலையிலே
அணிந்த கஞ்சங்குல்லையினையும், இலையையுடைய நறிய பூங்கொத்துக்களையும், |
செம்
கால் மராஅத்த வால் இணர் இடை இடுபு | செவ்விய
காலினையும் உடைய மரத்திலுள்ள வெண்மையான கொத்துக்களை நடுவே வைத்துச் |
சுரும்பு
உண தொடுத்த பெரும் தண் மா தழை | சுரும்பு
(தேன்)உண்ணும்படி தொடுத்த பெரிய குளிர்ந்த அழகினையுடைய தழையை |
திருந்து
காழ் அல்குல் திளைப்ப உடீஇ | திருந்திய
வடங்களையுடைய அல்குலிடத்தே அசையும்படி உடுத்தி, |
மயில்
கண்டு அன்ன மட நடை மகளிரொடு 205 | மயிலைக்
கண்டாற் போன்ற மடப்பம் பொருந்திய நடையையுடைய மகளிரோடும், 205 |
செய்யன்
சிவந்த ஆடையன் செ அரை | சிவந்த
மேனியன், சிவந்த ஆடையை உடையவன், சிவந்த அரையினையுடைய |
செயலை
தண் தளிர் துயல்வரும் காதினன் | அசோகின்
குளிர்ந்த தளிர் அசைகின்ற செவியை உடையவன், |
கச்சினன்
கழலினன் செச்சை கண்ணியன் | கச்சைக்
கட்டியவன், வீரக்கழல் அணிந்தவன், வெட்சிமாலை சூடியவன், |
குழலன்
கோட்டன் குறும் பல் இயத்தன் | குழலை
ஊதுபவன், கொம்பைக் குறிப்பவன், சிறிய இசைக்கருவிகளை இசைப்பவன், |
தகரன்
மஞ்ஞையன் புகர் இல் சேவல் அம் 210 | கிடாயையும்,
மயிலையும் உடையவன், குற்றமில்லாத கோழிக் 210 |
கொடியன்
நெடியன் தொடி அணி தோளன் | கொடியை
உடையவன், நெடுக வளர்ந்தவன், தொடியை அணிந்த தோளையுடையவன், |
நரம்பு
ஆர்த்து அன்ன இன் குரல் தொகுதியொடு | நரம்பு
ஆரவாரித்ததைப் போன்ற இனிய மிடற்றையுடைய மகளிர் கூட்டத்தோடு, |
குறும்பொறி
கொண்ட நறும் தண் சாயல் | ஒட்டியாணத்தை(யும்)
கொண்டதும், நறிய, குளிர்ந்த, மென்மையுடைய |
மருங்கில்
கட்டிய நிலன் நேர்பு துகிலினன் | இடையில்
கட்டப்பட்ட, நிலத்தளவும் தொங்குகின்ற துகிலினையுடையன், |
முழவு
உறழ் தட கையின் இயல ஏந்தி 215 | முழவுக்கு
மாற்றான பெருமையுடைய கைகளில் பொருந்தத் தாங்கி, 215 |
மென்
தோள் பல் பிணை தழீஇ தலைத்தந்து | மெல்லிய
தோளையுடைய பல மான்போல் மகளிரைத் தழுவி, (அவர்க்கு)இருக்கை தந்து, |
குன்றுதொறு
ஆடலும் நின்ற தன் பண்பே அதாஅன்று | மலைகள்தோறும்
சென்று விளையாடுதலும் தனக்கு நிலைநின்ற குணமாம் – அவ்விடமன்றியும், |
சிறு
தினை மலரொடு விரைஇ மறி அறுத்து | சிறிய தினை
அரிசியைப் பூக்களோடு கலந்து, மறியை அறுத்து, |
வாரண
கொடியொடு வயின் பட நிறீஇ | கோழிக்கொடியோடு
(தான்)அவ்விடத்தே நிற்கும்படி நிறுத்தி, |
ஊரூர்
கொண்ட சீர் கெழு விழவினும் 220 | ஊர்கள்தோறும்
எடுத்துக்கொண்ட தலைமை பொருந்தின விழாவின் கண்ணும், 220 |
ஆர்வலர்
ஏத்த மேவரு நிலையினும் | (தன்பால்)அன்புடையார்
(தன்னை வழிபட்டு)ஏத்துதலால், தன் மனம் பொருந்துதல் வந்த இடத்திலும், |
வேலன்
தைஇய வெறி அயர் களனும் | வேலன்
இழைத்த வெறியாடு களத்திலும், |
காடும்
காவும் கவின் பெறு துருத்தியும் | காட்டிலும்,
பொழிலிலும், அழகிய ஆற்றிடைக் குறையிலும், |
யாறும்
குளனும் வேறு பல் வைப்பும் | ஆறுகளிலும்,
குளங்களிலும், (முற்கூறப்பட்ட ஊர்களன்றி)வேறு பல ஊர்களிலும், |
சதுக்கமும்
சந்தியும் புது பூ கடம்பும்
225 | நாற்சந்தியிலும்,
முச்சந்தியிலும், புதிய பூக்களையுடைய கடப்ப மரத்தினும், 225 |
மன்றமும்
பொதியிலும் கந்து உடை நிலையினும் | ஊர்ப்பொது
மரத்தடியிலும், அம்பலத்திலும், திருவருள்குறியாக நடப்பட்ட தறியிடத்திலும், |
மாண்
தலை கொடியொடு மண்ணி அமைவர | மாட்சிமைப்பட்ட
தலைமையினையுடைய கொடியோடு பொருந்துதல் வரச்செய்து, |
நெய்யோடு
ஐயவி அப்பி ஐது உரைத்து | நெய்யோடு
வெண்சிறுகடுகையும் அப்பி, மெல்லிதாக (மந்திரத்தை)உரைத்து, |
குடந்தம்பட்டு
கொழு மலர் சிதறி | மெய்
வளைத்துக் கைகூப்பி, அழகிய மலர்களைச் சிதறி, |
முரண்
கொள் உருவின் இரண்டு உடன் உடீஇ 230 | (தம்மில்)மாறுபட்ட
வடிவினையுடைய இரண்டு அறுவையை உடுத்து, 230 |
செம்
நூல் யாத்து வெண் பொரி சிதறி | சிவந்த
நூலைக் காப்புகட்டி, வெண்மையான பொரியைச் சிதறி, |
மத
வலி நிலைஇய மா தாள் கொழு விடை | மிகுந்த
வலிமை நிலைபெற்ற பெரிய காலையுடைய கொழுவிய கிடாயின் |
குருதியொடு
விரைஇய தூ வெள் அரிசி | உதிரத்தோடு
பிசைந்த தூய வெள்ளரிசியை |
சில்
பலி செய்து பல் பிரப்பு இரீஇ | சிறு
பலியாக இட்டு, பல குறுணிப் படையல்களையும் வைத்து, |
சிறு
பசு மஞ்சளொடு நறு விரை தெளித்து 235 | சிறிய
பசுமஞ்சளோடு மணமுள்ள சந்தனம் முதலியவற்றையும் தெளித்து, 235 |
பெரும்
தண் கணவீர நறும் தண் மாலை | பெரிய
குளிர்ந்த செவ்வலரிமாலையினையும், (ஒழிந்த)நறிய குளிர்ந்த மாலைகளையும் |
துணையுற
அறுத்து தூங்க நாற்றி | (தம்மில்)இணையொக்க
அறுத்து அசையும்படி தொங்கவிட்டு, |
நளி
மலை சிலம்பில் நல் நகர் வாழ்த்தி | செறிந்த
மலைப்பக்கத்திலுள்ள நல்ல ஊர்களை வாழ்த்தி, |
நறும்
புகை எடுத்து குறிஞ்சி பாடி | நறிய
மணப்புகை கொடுத்து, குறிஞ்சிப்பண்ணைப் பாடி, |
இமிழ்
இசை அருவியொடு இன் இயம் கறங்க 240 | முழங்குகின்ற
ஓசையினையுடைய அருவியோடு இனிய இசைக்கருவிகளும் ஒலிக்க, 240 |
உருவ
பல் பூ தூஉய் வெருவர | சிவந்த
நிறத்தையுடைய பல பூக்களையும் தூவி, அச்சம் வரும்படி |
குருதி
செம் தினை பரப்பி குறமகள் | குருதி
அளைந்த சிவந்த தினையினையும் பரப்பி, குறமகள் |
முருகு
இயம் நிறுத்து முரணினர் உட்க | முருகன்
உவக்கும் இசைக்கருவிகளை ஒலிக்கச்செய்து, முரண்பட்டோர் அஞ்சும்படியாக, |
முருகு
ஆற்றுப்படுத்த உரு கெழு வியல் நகர் | முருகக்கடவுள்
வரும்படி வழிப்படுத்தின அச்சம் பொருந்தின அகன்ற நகரின்கண்ணே – |
ஆடுகளம்
சிலம்ப பாடி பல உடன் 245 | வெறியாடுகளம்
ஆரவாரிப்பப் பாடி, பல சேர்ந்த
245 |
கோடு
வாய்வைத்து கொடு மணி இயக்கி | கொம்புகளை
ஊதி, வளைவுடைய மணியை ஒலிப்பித்து, |
ஓடா
பூட்கை பிணிமுகம் வாழ்த்தி | பின்வாங்காத
கொள்கையை மேற்கோளாகவுடைய பிணிமுகம் என்னும் யானையை வாழ்த்தி, |
வேண்டுநர்
வேண்டியாங்கு எய்தினர் வழிபட | வேண்டினோர்
விரும்பினபடியே பெற்றாராய் வழிபாடுசெய்ய, |
ஆண்டாண்டு
உறைதலும் அறிந்த ஆறே | அவ்வவ்விடங்களில்
தங்குதலும் உரியன், யான் அறிந்தபடியே, |
ஆண்டாண்டு
ஆயினும் ஆக காண்தக 250 | அங்கேயும்,
வேறெங்கேயும் ஆக, காணும் தகுதி பெற
250 |
முந்து
நீ கண்டுழி முகன் அமர்ந்து ஏத்தி | நின் முன்
அப்பெருமானைக் கண்ட பொழுது, முகத்தால் விரும்பி நோக்கி, வாயால் வாழ்த்தி, |
கை
தொழூஉ பரவி கால் உற வணங்கி | கையால்
தொழுது, புகழ்ந்து, அவன் அடிகளில் வீழ்ந்து வணங்கி, |
நெடும்
பெரும் சிமையத்து நீல பைம் சுனை | ‘நெடிய
பெரிய உச்சியில் கரும் பச்சை (நிறச்)சுனையில், |
ஐவருள்
ஒருவன் அங்கை ஏற்ப | ஐவருள்
ஒருவனாகிய தீ தன் அங்கையில் ஏற்ப, |
அறுவர்
பயந்த ஆறு அமர் செல்வ 255 | அறுவராலே
பெறப்பட்ட ஆறு வடிவு பொருந்தின செல்வனே, 255 |
ஆல்
கெழு கடவுள் புதல்வ மால் வரை | ஆலமரத்தின்
கீழிருந்த கடவுளுடைய மகனே, பெருமையையுடைய மலையிலுள்ள |
மலைமகள்
மகனே மாற்றோர் கூற்றே | மலைமகளின்
மகனே, பகைவருக்குக் கூற்றுவனே, |
வெற்றி
வெல் போர் கொற்றவை சிறுவ | வெற்றியையுடைய
வெல்லும் போர்த்தெய்வமான கொற்றவையின் மகனே, |
இழை
அணி சிறப்பின் பழையோள் குழவி | பூண்
அணிந்த தலைமையினையுடைய காடுகிழாளின் மகனே, |
வானோர்
வணங்கு வில் தானை தலைவ 260 | தேவர்கள்
வணங்குகின்ற விற்படைத் தலைவனே,
260 |
மாலை
மார்ப நூல் அறி புலவ | மாலையணிந்த
மார்பையுடையவனே, நூல்களை அறிந்த புலவனே, |
செருவில்
ஒருவ பொரு விறல் மள்ள | போர்த்தொழிலில்
ஒருவனாகி நிற்போய், பொருகின்ற வெற்றியையுடைய இளைஞனே, |
அந்தணர்
வெறுக்கை அறிந்தோர் சொல்மலை | அந்தணரின்
செல்வமாயிருப்பவனே, சான்றோர் புகழும் சொற்களின் ஈட்டமாயிருப்பவனே, |
மங்கையர்
கணவ மைந்தர் ஏறே | மகளிர்க்குக்
கணவனே, மறவருள் அரியேறு போன்றவனே, |
வேல்
கெழு தட கை சால் பெரும் செல்வ 265 | வேல்
பொருந்தின பெருமையையுடைய கையமைந்த பெரிய செல்வனே, 265 |
குன்றம்
கொன்ற குன்றா கொற்றத்து | மலையைப்
பிளந்த குறையாத வெற்றியையுடைய, |
விண்
பொரு நெடு வரை குறிஞ்சி கிழவ | விண்ணைத்
தீண்டும் நெடிய மலைகளையுடைய குறிஞ்சிநிலத்திற்கு உரிமையுடையோனே, |
பலர்
புகழ் நல் மொழி புலவர் ஏறே | பலரும்
புகழ்ந்து சொல்லும் நன்றாகிய சொற்களையுடைய புலவர்களுக்கு அரியேறு போன்றவனே, |
அரும்
பெறல் மரபின் பெரும் பெயர் முருக | அரிதில்
பெறும் முறைமையினையுடைய பெரிய பொருளையுடைய முருகனே, |
நசையுநர்க்கு
ஆர்த்தும் இசை பேராள 270 | நச்சிவந்தோர்க்கு
அதனை அளித்து நுகர்விக்கும் பெரிய புகழை ஆளுதல் உடையோனே, 270 |
அலந்தோர்க்கு
அளிக்கும் பொலம் பூண் சேஎய் | இடுக்கண்பட்டோர்க்கு
அருள்பண்ணும், பொன்னால் செய்த அணிகலன்களையுடைய சேயோனே, |
மண்டு
அமர் கடந்த நின் வென்று ஆடு அகலத்து | மிக்குச்
செல்கின்ற போர்களை முடித்த வென்று அடுகின்ற (உன்னுடைய)மார்பிடத்தே, |
பரிசிலர்
தாங்கும் உரு கெழு நெடு வேஎள் | இரந்து
வந்தோரைத் தழுவி (வேண்டுவன கொடுத்து)ப் பாதுகாக்கும் உட்குதல் பொருந்திய நெடிய
வேளே, |
பெரியோர்
ஏத்தும் பெரும் பெயர் இயவுள் | பெரியோர்
ஏத்துகின்ற பெரிய திருப்பெயரையுடைய இறைவனே, |
சூர்
மருங்கு அறுத்த மொய்ம்பின் மதவலி 275 | சூரபன்மாவின்
குலத்தை இல்லையாக்கின வலிமையுடைமையால் மதவலி என்னும் பெயரையுடைத்தோய்,275 |
போர்
மிகு பொருந குருசில் என பல | போர்த்தொழிலில்
மிகுகின்ற வீரனே, தலைவனே’, என்று பலவற்றையும் |
யான்
அறி அளவையின் ஏத்தி ஆனாது | நான்
அறிந்த அளவாலே புகழ்ந்து, அமையாதே, |
நின்
அளந்து அறிதல் மன் உயிர்க்கு அருமையின் | ‘உன்
தன்மையெல்லாம் முற்ற அளவிட்டறிதல் பல் உயிர்க்கும் அரிதாகையால், |
நின்
அடி உள்ளி வந்தனென் நின்னொடு | உன்
திருவடியை நினைத்து வந்தேன், உன்னோடு |
புரையுநர்
இல்லா புலமையோய் என 280 | ஒப்பாரில்லாத
மெய்யறிவுடையோனே’, என
280 |
குறித்தது
மொழியா அளவையின் குறித்து உடன் | சொல்ல
நினைத்ததைச் சொல்லி முடிப்பதற்கு முன்னரே – அதைக்குறித்து அப்பொழுதே , |
வேறு
பல் உருவின் குறும் பல் கூளியர் | வேறு
வேறாகிய பல வடிவினையுடைய குறிய பலராகிய பணியாளர், |
சாறு
அயர் களத்து வீறு பெற தோன்றி | விழாவெடுத்த
களத்தின் பொலிவுபெறத் தோன்றி, |
அளியன்தானே
முது வாய் இரவலன் | ‘அருள்புரியத்
தகுந்தவன் (இந்த)அறிவு வாய்க்கப்பெற்றோனாகிய இரவலன், |
வந்தோன்
பெரும நின் வண் புகழ் நயந்து என 285 | வந்துளன்
பெருமானே, உன்னுடைய வளவிய புகழினை விரும்பி’, என 285 |
இனியவும்
நல்லவும் நனி பல ஏத்தி | இனியனவும்
நல்லனவும் ஆகிய மிக்க பலவற்றை வாழ்த்தி, |
தெய்வம்
சான்ற திறல் விளங்கு உருவின் | தெய்வத்தன்மை
அமைந்த வலிமை விளங்கும் வடிவினையும், |
வான்
தோய் நிவப்பின் தான் வந்து எய்தி | வானைத்
தீண்டும் வளர்ச்சியினையும் உடைய தான் (உனக்கு)முன்னர் எழுந்தருளி, |
அணங்கு
சால் உயர் நிலை தழீஇ பண்டை தன் | வருத்தமமைந்த
உயர்ந்த தெய்வத்தன்மையை உள்ளடக்கிக்கொண்டு, முன்பு உண்டாகிய தனது |
மணம்
கமழ் தெய்வத்து இள நலம் காட்டி 290 | மணம்
கமழ்கின்ற தெய்வத்தன்மை பொருந்திய இளைய வடிவைக் காட்டி அருளி, 290 |
அஞ்சல்
ஓம்புமதி அறிவல் நின் வரவு என | ‘அஞ்சுவதை
விடுக, அறிவேன் நின் வரவை’ என |
அன்பு
உடை நல் மொழி அளைஇ விளிவு இன்று | அன்புடைய
நல்ல மொழிகளைப் பலகாலும் அருளிச்செய்து, கேடு இன்றாக |
இருள்
நிற முந்நீர் வளைஇய உலகத்து | இருண்ட
நிறத்தையுடைய கடலால் சூழப்பட்ட (இந்த)உலகத்தில் |
ஒரு
நீ ஆகி தோன்ற விழுமிய | ஒருவனாகிய
நீயே (யாண்டுமாகித்)தோன்றுமாறு, சீரிய |
பெறல்
அரும் பரிசில் நல்குமதி பல உடன் 295 | பெறுதற்கரிய
பரிசில்(ஆன வீடுபேற்றினைத்) தந்தருளுவான் – பலவும் ஒருங்கே இயைந்த 295 |
வேறு
பல் துகிலின் நுடங்கி அகில் சுமந்து | வேறு
வேறாகிய பல துகில் கொடிகளைப் போன்று அசைந்து, அகிலைச் சுமந்துகொண்டு, |
ஆர
முழு முதல் உருட்டி வேரல் | சந்தனமாகிய
பெரிய மரத்தைத் தள்ளி, சிறுமூங்கிலின் |
பூ
உடை அலங்கு சினை புலம்ப வேர் கீண்டு | பூவையுடைய
அசைகின்ற கொம்பு தனிப்ப, வேரைப் பிளந்து, |
விண்
பொரு நெடு வரை பரிதியின் தொடுத்த | விண்ணைத்
தொடுகின்ற நெடிய மலையிடத்தே ஞாயிற்றைப் போல் (தேனீக்கள்)செய்த |
தண்
கமழ் அலர் இறால் சிதைய நன் பல 300 | தண்ணியவாய்
மணக்கின்ற விரிந்த தேன்கூடு கெட, நல்ல பல 300 |
ஆசினி
முது சுளை கலாவ மீமிசை | ஆசினிகளுடைய
முற்றிய சுளை தன்னிடத்தே கலக்க, (மலையின்)உச்சியில் |
நாக
நறு மலர் உதிர யூகமொடு | சுரபுன்னையின்
நறிய மலர்கள் உதிர, கருங்குரங்கோடு |
மா
முக முசு கலை பனிப்ப பூ நுதல் | கரிய
முகத்தையுடைய முசுக்கலைகளும் நடுங்க, புகரை அணிந்த மத்தகத்தையுடைய |
இரும்
பிடி குளிர்ப்ப வீசி பெரும் களிற்று | பெரிய
பிடியானை குளிரும்படி வீசி, பெரிய ஆண்யானையின் |
முத்து
உடை வான் கோடு தழீஇ தத்துற்று 305 | முத்தை
உடைய வெண்மையான கொம்புகளை உள்ளடக்கி, தத்துதல் அடைந்து 305 |
நல்
பொன் மணி நிறம் கிளர பொன் கொழியா | நல்ல
பொன்னும் மணியும் நிறம் விளங்கும்படி செய்து, பொடியான பொன்னைத் தெள்ளி, |
வாழை
முழு முதல் துமிய தாழை | வாழையின்
பெரிய முதல் துணியத், தெங்கின் |
இளநீர்
விழு குலை உதிர தாக்கி | இளநீரையுடைய
சீரிய குலை உதிர, (அவ்விரண்டையும்)மோதி, |
கறி
கொடி கரும் துணர் சாய பொறி புற | மிளகுக்
கொடியின் கரிய கொத்துக்கள் சாய, பொறியையுடைய புறத்தினையும் |
மட
நடை மஞ்ஞை பல உடன் வெரீஇ
310 | மடப்பத்தினையுடைய
நடையினையும் உடைய மயில்கள் பலவற்றோடே அஞ்சிக், 310 |
கோழி
வய பெடை இரிய கேழலொடு | கோழியின்
வலிமையுடைய பேடைகள் கெட்டோட, ஆண் பன்றியுடன் |
இரும்
பனை வெளிற்றின் புன் சாய் அன்ன | கரிய
பனையின் – (உள்ளே)வெளிற்றினையுடைய – புல்லிய செறும்பை ஒத்த |
குரூஉ
மயிர் யாக்கை குடா அடி உளியம் | கரிய
நிறத்தையுடைய மயிரினையுடைய உடம்பினையும் வளைந்த அடியினையுமுடைய கரடி |
பெரும்
கல் விடர் அளை செறிய கரும் கோட்டு | பெரிய கல்
வெடித்த முழைஞ்சிலே சேர, கரிய கொம்பினையுடைய |
ஆமா
நல் ஏறு சிலைப்ப சேணின்று 315 | ஆமாவினுடைய
நல்ல ஏறுகள் முழங்க, உயரத்தினின்றும் 315 |
இழுமென
இழிதரும் அருவி | இழும்
என்னும் ஓசைபடக் குதிக்கும் அருவியையுடைய |
பழம்
முதிர் சோலை மலை கிழவோனே | பழம்
முற்றின சோலைகளையுடைய மலைக்கு உரிமையை உடையோனாகிய முருகப்பெருமான். |