| |
# 201 குறிஞ்சி | # 201 குறிஞ்சி |
அமிழ்தம் உண்க
நம் அயல் இலாட்டி | அமிழ்தம் உண்பாளாக,
நமக்கு அடுத்தவீட்டுக்காரி; |
பால் கலப்பு
அன்ன தே கொக்கு அருந்துபு | பாலைக் கலந்தது போன்ற
தேமாங்கனியை உண்டு |
நீல மென் சிறை
வள் உகிர் பறவை | நீலநிறமுள்ள மெல்லிய
சிறகையும், வளைந்த நகங்களையும் கொண்ட வௌவால் |
நெல்லி அம்
புளி மாந்தி அயலது | நெல்லியின் புளித்த
காய்களை உண்டு, அருகிலிருக்கும் |
முள் இல் அம்
பணை மூங்கிலில் தூங்கும் | முள் இல்லாத அழகிய
பருத்த மூங்கிலில் தொங்கும் |
கழை நிவந்து
ஓங்கிய சோலை | மூங்கிழ் கழைகள்
உயர்ந்து நிற்கும் சோலையுள்ள |
மலை கெழு நாடனை
வரும் என்றோளே | மலையைச் சேர்ந்த
நாட்டுக்காரன் (மணமுடிக்க)வருவான் என்று சொன்னதற்காக- |
| |
# அள்ளூர்
நன்முல்லை | # அள்ளூர் நன்முல்லை |
# 202 மருதம் | # 202 மருதம் |
நோம் என்
நெஞ்சே நோம் என் நெஞ்சே | நோகும் என் நெஞ்சம்;
நோகும் என் நெஞ்சம்; |
புன்_புலத்து
அமன்ற சிறியிலை நெருஞ்சி | புஞ்சை நிலத்தில்
அடர்ந்து படர்ந்த சிறிய இலையைக் கொண்ட நெருஞ்சியின் |
கட்கு இன் புது
மலர் முள் பயந்து ஆங்கு | கண்ணுக்கு இனிய
புதுமலர் பின்னர் முள்ளினைத் தருவதைப் போல் |
இனிய செய்த நம்
காதலர் | இனியவற்றைச் செய்த நம்
காதலர் |
இன்னா செய்தல்
நோம் என் நெஞ்சே | இப்பொழுது
இன்னதனவற்றையும் செய்வதால், நோகும் என் நெஞ்சம். |
| |
#
நெடும்பல்லியத்தன் | # நெடும்பல்லியத்தன் |
# 203 மருதம் | # 203 மருதம் |
மலை இடையிட்ட
நாட்டரும் அல்லர் | மலைகள்
இடையிட்டுக்கிடக்கும் தொலைவிலுள்ள நாட்டினர் அல்லர்; |
மரம் தலை
தோன்றா ஊரரும் அல்லர் | மரங்களின் உச்சி
காணப்படாத ஊர்க்காரரும் அல்லர்; |
கண்ணின் காண
நண்ணு_வழி இருந்தும் | கண்ணில் காணும்படியான
அருகிலுள்ள இடத்தில் இருந்தும் |
கடவுள் நண்ணிய
பாலோர் போல | கடவுளைச் சேர்ந்த
துறவிகள் போல |
ஒரீஇனன்
ஒழுகும் என் ஐக்கு | ஒதுங்கியவனாய் வாழும்
என் தலைவனுக்கு |
பரியலென்-மன்
யான் பண்டு ஒரு காலே | இரங்கும்
தன்மையுடையவளாய் இருந்தேன் முன்பு ஒரு காலத்தில் – |
| |
# மிளை பெரும்
கந்தன் | # மிளை பெரும் கந்தன் |
# 204 குறிஞ்சி | # 204 குறிஞ்சி |
காமம் காமம்
என்ப காமம் | காமம், காமம் என்று
கூறுகிறார்கள், காமம் |
அணங்கும்
பிணியும் அன்றே நினைப்பின் | தீண்டிவருத்தும்
தெய்வமோ, தீராத நோயோ அல்ல; எண்ணிப்பார்த்தால் |
முதை சுவல்
கலித்த முற்றா இளம் புல் | பழைய மேட்டு நிலத்தில்
செழித்துவளர்ந்த முற்றாத இளம் புல்லைப் |
மூதா தைவந்த
ஆங்கு | பல்லில்லாத
கிழட்டுப்பசு நாவினால் நக்கிப்பார்ப்பதைப் போன்று |
விருந்தே காமம்
பெரும் தோளோயே | புதுமையுடையதே காமம்,
பெரிய தோளையுடைய தலைவனே!# மிளை பெரும் கந்தன் |
| |
# உலோச்சன் | # உலோச்சன் |
# 205 நெய்தல் | # 205 நெய்தல் |
மின்னு செய்
கருவிய பெயல் மழை தூங்க | மின்னுதலைச் செய்யும்
கூட்டமான மழைபெய்யக்கூடிய மேகங்கள் தொங்கிநிற்க, |
விசும்பு ஆடு
அன்னம் பறை நிவந்து ஆங்கு | வானத்தில் திரியும்
அன்னப்பறவை சிறகுகளை உயர்த்தி எழுவதைப்போல் |
பொலம் படை
பொலிந்த வெண் தேர் ஏறி | பொன் தகட்டால் பொலிந்த
வெள்ளைத் தேரில் ஏறி |
கலங்கு கடல்
துவலை ஆழி நனைப்ப | கலங்கிய கடலின்
நீர்த்துளிகள் சக்கரங்களை நனைக்க, |
இனி சென்றனனே
இடு மணல் சேர்ப்பன் | இப்பொழுதுதான்
பிரிந்து சென்றான், குவித்த மணலையுடை கடற்கரைத் தலைவன்; |
யாங்கு
அறிந்தன்று-கொல் தோழி என் | (இவ்வளவு விரைவாக)
எப்படி அறிந்துகொண்டதோ? தோழி! என் |
தேம் கமழ் திரு
நுதல் ஊர்தரும் பசப்பே | தேன்மணம் கமழும் அழகிய
நெற்றியில் படர்ந்தது (பிரிவினாலாகிய) பசலை – |
| |
# ஐயூர் முடவன் | # ஐயூர் முடவன் |
# 206 குறிஞ்சி | # 206 குறிஞ்சி |
அமிழ்தத்து
அன்ன அம் தீம் கிளவி | அமிழ்தத்தைப் போன்றன
அழகிய இனிய சொற்கள்; |
அன்ன இனியோள்
குணனும் இன்ன | அப்படிப்பட்டன அந்த
இனியவளின் குணமும்; இத்தகைய |
இன்னா அரும்
படர் செய்யும் ஆயின் | இன்னாதனவாகிய
பொறுத்தற்கரிய துன்பத்தைச் செய்யுமாயின், |
உடன் உறைவு
அரிதே காமம் | சேர்ந்து வாழ்வதற்கு
அரியது இந்தக் காமம்; |
குறுகல்
ஓம்பு-மின் அறிவுடையீரே | காமப்படுவதைத்
தவிருங்கள், அறிவுடையோரே! |
| |
# உறையன் | # உறையன் |
# 207 பாலை | # 207 பாலை |
செப்பினம்
செலினே செலவு அரிது ஆகும் என்று | சொல்லிவிட்டுச்
சென்றால் செல்வது முடியாததாகும் என்று கூறி, |
அத்த ஓமை அம்
கவட்டு இருந்த | பாலைநிலத்திலுள்ள ஓமை
மரத்தின் அழகிய கிளையில் இருந்த |
இனம் தீர்
பருந்தின் புலம்பு கொள் தெள் விளி | தன் இனத்திடமிருந்து
பிரிந்துவந்த பருந்தின் தனிமைத்துயரைக் காட்டும் தெளிந்த அழைப்பொலி |
சுரம் செல்
மாக்கட்கு உயவு துணை ஆகும் | அவ்வழியில் செல்லும்
மக்களுக்கு வழித்துணையாகும் |
கல் வரை அயலது
தொல் வழங்கு சிறு நெறி | பாறைகளின் அருகே
உள்ளது நீண்ட நாட்களாய் புழக்கத்திலிருக்கும் சிறிய வழியில் |
நல் அடி
பொறிப்ப தாஅய் | தம் நல்ல கால்தடம்
படுமாறு விரைந்து |
சென்று என
கேட்ட நம் ஆர்வலர் பலரே | சென்றார் என்று கேட்ட
நமக்கு வேண்டியவர் பலரே! |
| |
# கபிலர் | # கபிலர் |
# 208 குறிஞ்சி | # 208 குறிஞ்சி |
ஒன்றேன்
அல்லேன் ஒன்றுவென் குன்றத்து | (தலைவனோடு)
ஒத்துப்போகமாட்டேன் அல்லேன்; ஒத்துப்போவேன்; குன்றினில் |
பொரு களிறு
மிதித்த நெரி தாள் வேங்கை | சண்டையிடும்
ஆண்யானைகள் மிதித்து நெரிந்துபோன அடிமரத்தையுடைய வேங்கைமரம் |
குறவர் மகளிர்
கூந்தல் பெய்ம்-மார் | குறவரின் மகளிர் தம்
கூந்தலில் வைத்துக்கொள்வதற்காக, |
நின்று கொய
மலரும் நாடனொடு | நின்றுகொண்டே
கொய்யும்படி மலரும் நாட்டைச் சேர்ந்தவனோடு |
ஒன்றேன் தோழி
ஒன்றினானே | ஒத்துப்போகமாட்டேன்,
தோழி! (வேறு மணம் என்ற) அந்த ஒன்றனுக்குமட்டும். |
| |
# பாலை பாடிய
பெருங்கடுங்கோ | # பாலை பாடிய
பெருங்கடுங்கோ |
# 209 பாலை | # 209 பாலை |
சுரம்
தலைப்பட்ட நெல்லி அம் பசும் காய் | பாலைநிலைத்து வழியில்
உள்ள நெல்லியின் அழகிய பசிய காய்கள் |
மற புலி குருளை
கோள் இடம் கரக்கும் | வீரமிக்க புலிக்குட்டி
இரைகொள்ளுமிடத்தை மறைக்கும் |
இறப்பு அரும்
குன்றம் இறந்த யாமே | கடப்பதற்கு அரிய
குன்றத்தைக் கடந்த நாம் |
குறு நடை புள்
உள்ளலமே நெறி முதல் | சிறுநடையாளே! பறவையின்
நிமித்தத்தை எண்ணிப்பார்க்கவில்லை; வழியின் தொடக்கத்திலிருக்கும் |
கடற்றில்
கலித்த முட சினை வெட்சி | காட்டில் தழைத்த
வளைந்த கிளைகளையுடைய வெட்சியின் |
தளை அவிழ் பல்
போது கமழும் | முறுக்கவிழும் பல
அரும்புகள் மணங்கமழும் |
மை இரும்
கூந்தல் மடந்தை நட்பே | கரிய, தழைத்த
கூந்தலையுடைய தலைவியின் காதலையே (எண்ணியிருந்தோம்)- |
| |
# காக்கை
பாடினியார் நச்செள்ளையார் | # காக்கை பாடினியார்
நச்செள்ளையார் |
# 210 முல்லை | # 210 முல்லை |
திண் தேர்
நள்ளி கானத்து அண்டர் | திண்ணிய தேரையுடைய
நள்ளியின் புஞ்செய்க்காட்டிலுள்ள இடையர்களின் |
பல் ஆ பயந்த
நெய்யின் தொண்டி | கூட்டமான பசுக்கள்
கொடுத்த நெய்யோடு, தொண்டி |
முழுது உடன்
விளைந்த வெண்ணெல் வெம் சோறு | முழுவதும் ஒருசேர
விளைந்த வெண்ணெல்லால் ஆக்கிய சூடான
சோற்றை |
எழு கலத்து
ஏந்தினும் சிறிது என் தோழி | ஏழு பாத்திரங்களில்
வைத்து ஏந்திக் கொடுத்தாலும், அது சிறிதாகும் என் தோழியே! |
பெரும் தோள்
நெகிழ்த்த செல்லற்கு | உனது பெரிய தோள்களை
நெகிழ்த்த துன்பம் தீர |
விருந்து வர
கரைந்த காக்கையது பலியே | விருந்தினர் வரும்படி
கரைந்த காக்கைக்கு இடும் பலி – |
| |
# காவன் முல்லை
பூதனார் | # காவன் முல்லை
பூதனார் |
# 211 பாலை | # 211 பாலை |
அம்_சில்_ஓதி
ஆய் வளை நெகிழ | அழகிய, சிலவான
முடிந்துவிட்ட கூந்தலையுடைய உனது ஆய்ந்தணிந்த வளைகள் நெகிழும்படி |
நொந்தும் நம்
அருளார் நீத்தோர்க்கு அஞ்சல் | வருந்தியும் நமக்கு
அருளைச் செய்யாமல் பிரிந்துசென்றவரின் பொருட்டாக அஞ்சுதலைத் |
எஞ்சினம் வாழி
தோழி எஞ்சாது | தவிர்ந்தோம், வாழ்க
தோழியே!, மீதமின்றி முற்றிலுமாகத் |
தீய்ந்த
மராஅத்து ஓங்கல் வெம் சினை | தீய்ந்துபோன
மராமரத்தின் ஓங்கிய வெம்பிப்போன கிளையில் |
வேனில் ஓர்
இணர் தேனோடு ஊதி | வேனிற்காலத்து ஒற்றைப்
பூங்கொத்தினைத் தேனுடன் ஊதி |
ஆராது பெயரும்
தும்பி | வயிறு நிரம்பாமல்
திரும்பிச்செல்லும் தும்பியுடன், |
நீர் இல்
வைப்பின் சுரன் இறந்தோரே | நீர் இல்லாத
இடங்களையுமுடைய பாலைநிலத்துவழியில் சென்றோர் – |
| |
# நெய்தல்
கார்க்கியன் | # நெய்தல் கார்க்கியன் |
# 212 நெய்தல் | # 212 நெய்தல் |
கொண்கன் ஊர்ந்த
கொடுஞ்சி நெடும் தேர் | தலைவன் வந்த
கொடுஞ்சியையுடைய நீண்ட தேர் |
தெண் கடல்
அடைகரை தெளிர் மணி ஒலிப்ப | தெளிந்த நீரையுடைய
கடலின் அடைந்தகரையில் தெளிந்த ஓசையுள்ள மணிகள் ஒலிக்க, |
காண வந்து நாண
பெயரும் | எம்மைக் காண வந்து,
நாம் நாணியதால் (காணாமலேயே) திரும்பிச்செல்லும், |
அளிதோ தானே
காமம் | இரங்கத்தக்கது (அவன்
கொண்ட) காமம்; |
விளிவது மன்ற
நோகோ யானே | அழியக்கடவது
நிச்சயமாக; வருந்துகிறேன் நான். |
| |
#
கச்சிப்பேட்டு காஞ்சி கொற்றன் | # கச்சிப்பேட்டு
காஞ்சி கொற்றன் |
# 213 பாலை | # 213 பாலை |
நசை நன்கு
உடையர் தோழி ஞெரேரென | (உன்பால்) விருப்பம்
மிக உடையவர் தோழி! விரைவாக |
கவை தலை முது
கலை காலின் ஒற்றி | கிளைத்த கொம்பையுடைய
தலையைப் பெற்ற முதிய ஆண்மான் காலால் உதைத்து |
பசி பிணிக்கு
இறைஞ்சிய பரூஉ பெரும் ததரல் | பசிநோயைத்
தீர்த்துக்கொள்ள வளைத்த பருத்த பெரிய மரப்பட்டையைத் |
ஒழியின் உண்டு
வழு இல் நெஞ்சின் | தன் குட்டி உண்டபின்
ஒழிந்ததை உண்டு குற்றமற்ற நெஞ்சத்தோடு |
தெறித்து நடை
மரபின் தன் மறிக்கு நிழல் ஆகி | துள்ளி நடக்கும்
இயல்பையுடைய தன் குட்டிக்கு நிழல் ஆகி |
நின்று வெயில்
கழிக்கும் என்ப நம் | நின்று வெயிலைக்
கழிக்கும் என்பர் நம்மோடு (கொள்ளும்) |
இன் துயில்
முனிநர் சென்ற ஆறே | இனிய துயிலையும்
வெறுத்துச் சென்ற அவர் போன வழி – |
| |
# கூடலுலுர்
கிழார் | # கூடலுலுர் கிழார் |
# 214 குறிஞ்சி | # 214 குறிஞ்சி |
மரம் கொல்
கானவன் புனம் துளர்ந்து வித்திய | மரங்களை வெட்டிய
குறவன், அந்த நிலத்தை உழுது விதைத்த |
பிறங்கு குரல்
இறடி காக்கும் புறம் தாழ் | ஒளிரும் கதிரையுடைய
தினையைக் காக்கின்ற, முதுகில் விழும் |
அம் சில் ஓதி
அசை இயல் கொடிச்சி | அழகிய சிலவான
கூந்தலையும் மெலிந்த சாயலையும் கொண்ட கொடிச்சியின் |
திருந்து இழை
அல்குற்கு பெரும் தழை உதவி | திருத்தமான
அணிகலனையுடைய அல்குலுக்குப் பெரிய தழையுடையை அளித்து, |
செயலை
முழு_முதல் ஒழிய அயலது | அசோகின் பெருத்த
அடிமரம் இலையற்று இருக்க, அதற்கு அடுத்து(ள்ள கடம்பமரத்துக்கு) |
அரலை மாலை
சூட்டி | கழலை மாலை சூட்டி
(முருகனுக்கு வெறியெடுத்து) |
ஏமுற்றன்று இ
அழுங்கல் ஊரே | மயக்கமுற்றது இந்த
ஆரவாரத்தையுடைய ஊர். |
| |
# மதுரை
அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் | # மதுரை அளக்கர்
ஞாழார் மகனார் மள்ளனார் |
# 215 பாலை | # 215 பாலை |
படரும் பைபய
பெயரும் சுடரும் | உன் துன்பமும்
உன்னைவிட்டு மெல்லமெல்ல நீங்கும், ஒளிவிடும் |
என்றூழ் மா மலை
மறையும் இன்று அவர் | ஞாயிறும் பெரிய
மலையில் சென்று மறையும்; இன்று அவர் |
வருவர்-கொல்
வாழி தோழி நீர் இல் | வருவார் அல்லவா தோழி?
நீர் இல்லாத |
வறும் கயம்
துழைஇய இலங்கு மருப்பு யானை | வறிய குளத்தைத்
துழாவிய ஒளிரும் கொம்புள்ள யானை |
குறும் பொறை
மருங்கின் அமர் துணை தழீஇ | சிறிய மலையின்
பக்கத்தில் தான் விரும்பிய துணையைத் தழுவி |
கொடு வரி இரும்
புலி காக்கும் | வளைந்த வரிகளையுஇடைய
பெரிய புலியினின்றும் காக்கும் |
நெடு வரை
மருங்கின் சுரன் இறந்தோரே | நெடிய மலையின்
பக்கத்தேயுள்ள பாலைநிலத்தைக் கடந்து சென்றவர்- |
| |
#
கச்சிப்பேட்டு காஞ்சி கொற்றன் | # கச்சிப்பேட்டு
காஞ்சி கொற்றன் |
# 216 பாலை | # 216 பாலை |
அவரே கேடு இல்
விழு பொருள் தரும்-மார் பாசிலை | தலைவர், கேடில்லாத
சிறந்த பொருளைக் கொணருவதற்காக, பசிய இலைகளையுடைய |
வாடா வள்ளி அம்
காடு இறந்தோரே | வாடாத வள்ளிக்கொடி
படர்ந்த அழகிய காட்டைக் கடந்துசென்றார்; |
யானே தோடு ஆர்
எல் வளை ஞெகிழ நாளும் | நானோ, தொகுதியான
ஒளியையுடைய வளையல்கள் நெகிழ்ந்துவீழ, ஒவ்வொருநாளும் |
பாடு அமை
சேக்கையில் படர் கூர்ந்திசினே | படுத்தலுக்குரிய
கட்டிலில் வருத்தமுற்று இருக்கிறேன்; |
அன்னள் அளியள்
என்னாது மா மழை | அப்படிப்பட்டவள்
இரங்கத்தக்கவள் என்று எண்ணாமல், பெரிய மழை |
இன்னும்
பெய்யும் முழங்கி | இன்னும் பெய்கிறது,
இடிகளை முழக்கி |
மின்னும் தோழி
என் இன் உயிர் குறித்தே | மின்னவும் செய்கிறது
தோழி, என் இனிய உயிரைக் கொள்வதற்காக- |
| |
# தங்கால்
முடக்கொல்லனார் | # தங்கால்
முடக்கொல்லனார் |
# 217 குறிஞ்சி | # 217 குறிஞ்சி |
தினை கிளி
கடிதலின் பகலும் ஒல்லும் | தினைக்காக வரும்
கிளிகளை ஓட்டவேண்டியிருப்பின் பகலும் சரியாக அமையும்; |
இரவு நீ
வருதலின் ஊறும் அஞ்சுவல் | இரவில் நீ வந்தால்
வழியிலேற்படும் துன்பங்களுக்காக அஞ்சுகிறேன்;இ |
யாங்கு
செய்வாம் என் இடும்பை நோய்க்கு என | என்ன செய்யலாம் என்
துன்பந்தரும் காமநோய்க்கு என்று |
ஆங்கு யான்
கூறிய அனைத்திற்கு பிறிது செத்து | அங்கு நான் கூறிய
அதற்கு, வேறொன்றை நினைத்து |
ஓங்கு மலை
நாடன் உயிர்த்தோன் மன்ற | உயர்ந்த மலைநாட்டுத்
தலைவன் பெருமூச்சுவிட்டான்; |
ஐதே காமம் யானே | மிகவும் நுட்பமானது
காமநோய், நான் |
கழி
முதுக்குறைமையும் பழியும் என்றிசினே | (அச்செயல்)மிக்க
அறிவுடைமையும், பழியும் ஆவது என்று கூறினேன். |
| |
# கொற்றன் | # கொற்றன் |
# 218 பாலை | # 218 பாலை |
விடர் முகை
அடுக்கத்து விறல் கெழு சூலிக்கு | பிளவுகளையும்,
குகைகளையும் உள்ள மலையின் சரிவிலுள்ள வலிமை பொருந்திய சூலையுடையவளுக்கு |
கடனும் பூணாம்
கை நூல் யாவாம் | பலிக்கடன் நேர்தலையும்
செய்யோம்; காப்புநூலும் கட்டிக்கொள்ளோம்; |
புள்ளும் ஓராம்
விரிச்சியும் நில்லாம் | பறவை நிமித்தமும்
பாரோம்; விரிச்சிகேட்கவும் நிற்கமாட்டோம்; |
உள்ளலும்
உள்ளாம் அன்றே தோழி | இவற்றை
நினைத்துப்பார்க்கவும்மாட்டோம்; தோழி! |
உயிர்க்குயிர்
அன்னர் ஆகலின் தம் இன்று | உயிர்க்கு உயிர்
போன்றவர் ஆதலால், தம்மை இன்றி |
இமைப்பு வரை
அமையா நம்_வயின் | இமைப்பொழுதும்
பிரிந்திருக்காத நம்மை |
மறந்து ஆண்டு
அமைதல் வல்லியோர் மாட்டே | மறந்து அங்கு
இருப்பதற்கு ஆற்றலுள்ளோருக்காக – |
| |
# வெள்ளூர்
கிழார் மகனார் வெண்பூதியார் | # வெள்ளூர் கிழார்
மகனார் வெண்பூதியார் |
# 219 நெய்தல் | # 219 நெய்தல் |
பயப்பு என்
மேனியதுவே நயப்பு அவர் | பசலைநோய் என் மேனியில்
இருக்கிறது; விருப்பமோ |
நார் இல்
நெஞ்சத்து ஆரிடையதுவே | தலைவருடைய அன்பில்லாத
நெஞ்சமெனும் அடையமுடியாத இடத்தில் உள்ளது. |
செறிவும் சேண்
இகந்தன்றே அறிவே | என் பெண்மை அடக்கமோ
என்னைவிட்டு நெடுந்தொலைவு சென்றுவிட்டது; என் அறிவும் |
ஆங்கண் செல்கம்
எழுக என ஈங்கே | தலைவர் இருக்குமிடம்
செல்வோம், எழுக என்று, இங்கு |
வல்லா கூறி
இருக்கும் அள் இலை | நடக்காததைச்
சொல்லிக்கொண்டு என்னுடன் இருக்கும்; முள்ளையுடைய இலை பொருந்திய |
தடவு நிலை தாழை
சேர்ப்பற்கு | முடங்கிய நிலையையுடைய
தாழைகளையுடைய நெய்தல் தலைவருக்கு |
இடம்-மன் தோழி
எ நீரிரோ எனினே | இதுதான் நேரம், தோழி!
எப்படி இருக்கிறீர் என்று கேட்க- |
| |
# ஒக்கூர்
மாசாத்தியார் | # ஒக்கூர்
மாசாத்தியார் |
# 220 முல்லை | # 220 முல்லை |
பழ மழை கலித்த
புது புன வரகின் | முன்பு பெய்த மழையால்
தழைத்த புதிய நிலத்து வரகின் |
இரலை மேய்ந்த
குறை தலை பாவை | ஆண்மான் மேய்ந்ததால்
குறைந்த தலையையுடைய பாவையாகிய |
இருவி சேர்
மருங்கில் பூத்த முல்லை | கதிர் அரிந்த தாள்
சேர்ந்த பக்கத்தில் பூத்த முல்லைக்கொடியின் |
வெருகு
சிரித்து அன்ன பசு வீ மென் பிணி | காட்டுப்பூனை
சிரித்ததைப் போன்ற பசிய பூவின் மெல்லிய பிணிப்பையுடைய |
குறு முகை
அவிழ்ந்த நறு மலர் புறவின் | குறிய அரும்புகள்
மலர்ந்து நின்ற மணமுள்ள மலர்களையுடைய முல்லைநிலத்தில் |
வண்டு சூழ்
மாலையும் வாரார் | வண்டுகள்
சுற்றித்திரியும் மாலையிலும் வாரார்; |
கண்டிசின் தோழி
பொருள் பிரிந்தோரே | கண்டாயா தோழி!
பொருள்தேட நம்மைப் பிரிந்துசென்றோர் – |
| |
# உறையூர்
முதுகொற்றன் | # உறையூர் முதுகொற்றன் |
# 221 முல்லை | # 221 முல்லை |
அவரோ வாரார்
முல்லையும் பூத்தன | தலைவரோ வரவில்லை;
முல்லையும் பூத்தன; |
பறி உடை கையர்
மறி இனத்து ஒழிய | பறியோலையைக் கையிலுடைய
இடையர்கள் குட்டிகளையுடைய மந்தையிடத்துத் தங்கி, |
பாலொடு வந்து
கூழொடு பெயரும் | பாலைக் கொண்டுவந்து
கொடுத்துவிட்டு, உணவோடு திரும்பிச்செல்லும் |
ஆடு உடை
இடை_மகன் சென்னி | ஆடுகளையுடைய இடையனது
தலையுச்சியில் |
சூடிய எல்லாம்
சிறு பசு முகையே | சூடியிருப்பன எல்லாம்
சிறிய பசிய மொட்டுக்களே! |
| |
# சிறைக்குடி
ஆந்தையார் | # சிறைக்குடி
ஆந்தையார் |
# 222 குறிஞ்சி | # 222 குறிஞ்சி |
தலை புணை
கொளினே தலை புணை கொள்ளும் | (தோழியானவள்)தெப்பத்தின்
தலைப்பைப் பிடித்தால், தானும் அத் தலைப்பைப் பிடிப்பாள்; |
கடை புணை
கொளினே கடை புணை கொள்ளும் | தெப்பத்தின்
கடைப்பகுதியைப் பிடித்தால் தானும் அக் கடைப்பகுதியைப் பிடிப்பாள்; |
புணை கைவிட்டு
புனலோடு ஒழுகின் | தெப்பதைக் கைவிட்டு
நீரோடு சென்றால், |
ஆண்டும்
வருகுவள் போலும் மாண்ட | அங்கும் செல்வாள்
போலவே இருந்தாள்; சிறப்புவாய்ந்த |
மாரி
பித்திகத்து நீர் வார் கொழு முகை | மழைக்காலத்துப்
பிச்சியின் நீரொழுகும் கொழுத்த அரும்பின் |
செ வெரிந்
உறழும் கொழும் கடை மழை கண் | சிவந்த முதுகைப் போன்ற
செழித்த கடையையும் குளிர்ச்சியையும் உடைய கண்களைக் கொண்ட |
துளி தலை தலைஇய
தளிர் அன்னோளே | மழைத்துளி தன்னிடத்தே
பெய்யப்பெற்ற மாந்தளிரைப் போன்றவள் – |
| |
# மதுரை
கடையத்தார் மகன் வெண்ணாகன் | # மதுரை கடையத்தார்
மகன் வெண்ணாகன் |
# 223 குறிஞ்சி | # 223 குறிஞ்சி |
பேர் ஊர் கொண்ட
ஆர் கலி விழவில் | நமது பெரிய ஊரினர்
கொண்ட ஆரவாரம் மிக்க திருவிழாவுக்குப் |
செல்வாம்
செல்வாம் என்றி அன்று இவண் | போவோம், போவோம்
என்கிறாய்; முன்பு இங்கே |
நல்லோர் நல்ல
பலவால் தில்ல | நல்லோர்கள் கூறிய பல
நல்லசொற்கள் இருந்தன; |
தழலும்
தட்டையும் முறியும் தந்து இவை | கிளிகளை விரட்டும்
தழலும், தட்டையும் ஆகிவற்றோடே தழையும் தந்து இவை |
ஒத்தன நினக்கு
என பொய்த்தன கூறி | உனக்குப் பொருந்துவன
என்று பொய்யானவற்றைக் கூறி |
அன்னை ஓம்பிய
ஆய் நலம் | அன்னை பாதுகாத்த
ஆய்வதற்குரிய பெண்மை நலத்தை |
என் ஐ கொண்டான்
யாம் இன்னமால் இனியே | தலைவன்
கவர்ந்துகொண்டான், நாம் இப்படியானோம் இப்பொழுது. |
| |
# கூவன்
மைந்தன் | # கூவன் மைந்தன் |
# 224 பாலை | # 224 பாலை |
கவலை யாத்த அவல
நீள் இடை | பிரிந்துசெல்லும்
வழிகளில் யாமரங்களைக் கொண்ட அவலத்தைக் கொண்ட நீண்ட வெளியில் |
சென்றோர்
கொடுமை எற்றி துஞ்சா | சென்ற தலைவனின்
கொடுமையை எண்ணித் தூங்காத |
நோயினும் நோய்
ஆகின்றே கூவல் | வருத்தத்தினும்,
மிகுந்த வருத்தமாகிறது; கிணற்றில் விழுந்த |
குரால் ஆன் படு
துயர் இராவில் கண்ட | கபிலைநிறப் பசு
படுகின்ற துயரத்தை இரவில் கண்ட |
உயர்திணை ஊமன்
போல | ஊமை மகனைப் போல |
துயர்
பொறுக்கல்லேன் தோழி நோய்க்கே | துயரத்தைப்
பொறுக்கமுடியவில்லை, தோழியின் வருத்தத்தைக் கண்டு – |
| |
# கபிலர் | # கபிலர் |
# 225 குறிஞ்சி | # 225 குறிஞ்சி |
கன்று தன் பய
முலை மாந்த முன்றில் | கன்றானது, பாலுள்ள தன்
மடியைக் குடிக்க, முற்றத்தில் |
தினை பிடி
உண்ணும் பெரும் கல் நாட | காயவைத்த தினையைப்
பெண்யானை உண்ணும் பெரும் பாறைகளைக் கொண்ட நாட்டினனே! |
கெட்ட இடத்து
உவந்த உதவி கட்டில் | தனக்குக் கேடுவந்தபோது
தான் பெற்ற உதவியை, அரசுக்கட்டிலின் |
வீறு பெற்று
மறந்த மன்னன் போல | சிறப்பைப் பெற்றபின்
மறந்துபோன மன்னனைப் போல |
நன்றி மறந்து
அமையாய் ஆயின் மென் சீர் | யாம் செய்த நன்றியை
மறந்து பிரியாமலிருந்தால், மெல்லிய சிறப்பையுடைய |
கலி மயில்
கலாவத்து அன்ன இவள் | ஆரவாரிக்கும் மயிலின்
தோகையைப் போன்ற இவளின் |
ஒலி மென்
கூந்தல் உரியவால் நினக்கே | தழைத்த மென்மையான
கூந்தல் உரியவாகும் உனக்கு – |
| |
# மதுரை
எழுத்தாளன் சேந்தம் பூதன் | # மதுரை எழுத்தாளன்
சேந்தம் பூதன் |
# 226 நெய்தல் | # 226 நெய்தல் |
பூவொடு
புரையும் கண்ணும் வேய் என | பூவினை ஒத்திருந்தன
கண்கள்; மூங்கிலோ என |
விறல் வனப்பு
எய்திய தோளும் பிறை என | ஈடில்லா அழகை
எய்தியிருந்தன தோள்கள்; இளம்பிறை என்னும்படி |
மதி
மயக்கு_உறூஉம் நுதலும் நன்றும் | அறிவினை மயக்கியது
நெற்றி; மிகவும் |
நல்ல-மன் வாழி
தோழி அல்கலும் | நல்லவையாக இருந்தன –
வாழ்க தோழியே!, நாள்தோறும் |
தயங்கு திரை
பொருத தாழை வெண் பூ | மோதிச்செல்லும் அலைகள்
தாக்கிய தாழையின் வெண்மையான பூ |
குருகு என
மலரும் பெரும் துறை | கொக்கினைப் போல்
மலரும் பெரிய நீர்த்துறையையுடைய |
விரிநீர்
சேர்ப்பனொடு நகாஅ ஊங்கே | அகன்ற நீர்ப்பரப்பின்
தலைவனோடு நாம் நகைத்து மகிழாததற்கு முன்பு – |
| |
# ஓத ஞானி | # ஓத ஞானி |
# 227 நெய்தல் | # 227 நெய்தல் |
பூண் வனைந்து
அன்ன பொலம் சூட்டு நேமி | புதிய பூணைப்
பதித்ததைப் போன்ற பொன் விளிம்பினையுடைய சக்கரங்களின் |
வாள் முகம்
துமிப்ப வள் இதழ் குறைந்த | வாளைப் போன்ற முகம்
துண்டாக்கியதால் கொழுத்த இதழ்கள் குறைப்பட்டு |
கூழை நெய்தலும்
உடைத்து இவண் | மூளியாகிப்போன நெய்தலை
உடையது, இங்கே |
தேரோன் போகிய
கானலானே | தேரில்வந்தவன் சென்ற
கடற்கரையில் – |
| |
# செய்தி
வள்ளுவன் பெருஞ்சாத்தன் | # செய்தி வள்ளுவன்
பெருஞ்சாத்தன் |
# 228 நெய்தல் | # 228 நெய்தல் |
வீழ் தாழ் தாழை
ஊழ்_உறு கொழு முகை | விழுதுகள் தொங்கும்
தாழையின் மலரும்நிலையிலுள்ள செழுமையான மொட்டு |
குருகு உளர்
இறகின் விரிபு தோடு அவிழும் | கொக்குகள் தம் சிறகைக்
கோதும்போது விரியும் இறகுகள் போன்று மடல் அவிழும் |
கானல் நண்ணிய
சிறுகுடி முன்றில் | கடற்கரையை ஒட்டிய
சிறுகுடியின் முற்றத்தில் |
திரை வந்து
பெயரும் என்ப நம் துறந்து | அலைகள் வந்து மோதிச்
செல்லும் என்பார்கள்; நம்மைப் பிரிந்து |
நெடும் சேண்
நாட்டார் ஆயினும் | மிகவும் தொலைவிலுள்ள
நாட்டில் இருந்தாலும் |
நெஞ்சிற்கு
அணியரோ தண் கடல் நாட்டே | நம் நெஞ்சிற்கு
மிகவும் அருகில் உள்ளவரின் குளிர்ந்த கடலையுடைய இந்த இடத்தில் – |
| |
# மோதாசனார் | # மோதாசனார் |
# 229 பாலை | # 229 பாலை |
இவன் இவள்
ஐம்பால் பற்றவும் இவள் இவன் | இவன் இவளின் பின்னிய
கூந்தலைப் பற்றி இழுக்கவும், இவள் இவனது |
புன் தலை ஓரி
வாங்குநள் பரியவும் | சீவப்படாத தலையின்
மயிரைப் பற்றி வளைத்துவிட்டு ஓடவும், |
காதல்
செவிலியர் தவிர்ப்பவும் தவிராது | அன்புமிக்க
செவிலித்தாயர் விலக்கிவிடவும் விலகாது |
ஏது இல் சிறு
செரு உறுப-மன்னோ | காரணமின்றி சிறிய
சண்டையினைச் செய்வர்; |
நல்லை மன்று
அம்ம பாலே மெல் இயல் | நல்லது
செய்திருக்கின்றாய் ஊழ்வினையே! மென்மையான இயல்புகொண்ட |
துணை மலர்
பிணையல் அன்ன இவர் | இரட்டை மலர்மாலைகள்
போன்று, இவர்களின் |
மணம் மகிழ்
இயற்கை காட்டியோயே | மணம்புரிந்து
மகிழ்ச்சியுடன் இருக்கும் நிலையைக் காட்டியதால் – |
| |
# அறிவுடை
நம்பி | # அறிவுடை நம்பி |
# 230 நெய்தல் | # 230 நெய்தல் |
அம்ம வாழி தோழி
கொண்கன் | கேட்பாயாக தோழியே!
வாழ்க! நம் தலைவன் |
தான் அது
துணிகுவன் அல்லன் யான் என் | தானே அப்படிச் செய்யத்
துணிபவன் அல்லன்: நான் என் |
பேதைமையால்
பெருந்தகை கெழுமி | அறிவின்மையால் அந்தப்
பெருந்தகையைப் பொருந்தி |
நோ_தக செய்தது
ஒன்று உடையேன்-கொல்லோ | அவன் வருந்தும்படி
ஒன்று செய்துவிட்டேன் என நினைக்கிறேன்; |
வய சுறா வழங்கு
நீர் அத்தம் | வலிமையுள்ள
சுறாமீன்கள் திரிகின்ற நீரையுடைய வழியாக |
தவ சில்
நாளினன் வரவு அறியானே | மிகச் சில நாட்களாக
வருவதை அறியாமற்போய்விட்டான். |
| |
# பாலை பாடிய
பெருங்கடுங்கோ | # பாலை பாடிய
பெருங்கடுங்கோ |
# 231 மருதம் | # 231 மருதம் |
ஓர் ஊர்
வாழினும் சேரி வாரார் | ஒரே ஊரில் இருந்தாலும்
நம் தெருப்பக்கம் வாரார்; |
சேரி வரினும்
ஆர முயங்கார் | அப்படியே நம்
தெருப்பக்கம் வந்தாலும் நம்மை ஆரத்தழுவுவாரில்லை; |
ஏதிலாளர் சுடலை
போல | யாரோ ஒருவருடைய
சுடுகாட்டைக் கண்டு செல்வார் போல |
காணா
கழிப-மன்னே நாண் அட்டு | கண்டும் காணாததுபோலச்
செல்கிறார். எனது நாணத்தைக் கொன்று |
நல் அறிவு
இழந்த காமம் | நல்லறிவை இழந்த என்
காமம், |
வில் உமிழ்
கணையின் சென்று சேண் படவே | வில்லினின்றும்
வெளிப்பட்ட அம்பினைப்போல் சென்று நெடுந்தொலைவு விழுந்தது. |
| |
# ஊண்பித்தை | # ஊண்பித்தை |
# 232 பாலை | # 232 பாலை |
உள்ளார்-கொல்லோ
தோழி உள்ளியும் | நம்மை நினைத்தாரோ?
தோழி! நினைத்தும் |
வாய் புணர்வு
இன்மையின் வாரார்-கொல்லோ | வாய்த்தல்
கூடிவராததால் வராமலிருக்கிறாரோ? |
மரல் புகா
அருந்திய மா எருத்து இரலை | மரல்கொடியை உணவாக
அருந்திய பெரிய கழுத்தைக் கொண்ட இரலை மான் |
உரல் கால் யானை
ஒடித்து உண்டு எஞ்சிய | உரலைப் போன்ற காலைக்
கொண்ட யானை ஒடித்து உண்டு எஞ்சிய |
யாஅ வரி நிழல்
துஞ்சும் | யாமரத்தின் வரிவரியான
நிழலில் துயிலும் |
மா இரும் சோலை
மலை இறந்தோரே | பெரிய இருண்ட
சோலைகளையுடைய மலைகளைக் கடந்து சென்றவர் – |
| |
# பேயன் | # பேயன் |
# 233 முல்லை | # 233 முல்லை |
கவலை கெண்டிய
அகல் வாய் சிறு குழி | கவலைக் கிழங்கைத்
தோண்டிய அகன்ற வாயையுள்ள சிறிய குழி, |
கொன்றை ஒள் வீ
தாஅய் செல்வர் | கொன்றையின் ஒளிரும்
பூக்கள் பரவியதால், செல்வரின் |
பொன் பெய் பேழை
மூய் திறந்து அன்ன | பொன்னை
இட்டுவைக்கும் பேழையின் மூடியைத்
திறந்துவைத்ததைப் போன்று |
கார் எதிர்
புறவினதுவே உயர்ந்தோர்க்கு | கார்காலத்தை
எதிர்கொள்ளும் முல்லைநிலத்தில் உள்ளது – பெரியவர்களுக்கு |
நீரொடு சொரிந்த
மிச்சில் யாவர்க்கும் | நீருடன் சொரிந்து
மிஞ்சிய பொருளையும், எல்லாருக்கும் |
வரை கோள் அறியா
சொன்றி | வரையறுத்துக்கொள்ளுதலை
அறியாத சோற்றினையும் உடைய |
நிரை கோல்
குறும்_தொடி தந்தை ஊரே | வரிசைப்பட்ட திரண்ட
குறிய வளையலையுடையவளின் தந்தையின் ஊர் – |
| |
# மிளைப்பெரும்
கந்தன் | # மிளைப்பெரும் கந்தன் |
# 234 முல்லை | # 234 முல்லை |
சுடர் செல்
வானம் சேப்ப படர் கூர்ந்து | ஞாயிறு சென்றுமறைந்த
வானம் சிவந்து கிடக்கத் துன்பமுற்று |
எல் அறு
பொழுதின் முல்லை மலரும் | பகற்பொழுது
அற்றுப்போகும் பொழுதினை முல்லை மலரும் |
மாலை என்மனார்
மயங்கியோரே | மாலைப்பொழுது என்று
சொல்வர் அறிமயங்கியோர்; |
குடுமி கோழி
நெடு நகர் இயம்பும் | கொண்டையையுடைய சேவல்
நெடிய நகரில் கூவிஅறிவிக்கும் |
பெரும் புலர்
விடியலும் மாலை | பெரியதாகப் புலரும்
விடியற்காலமும் மாலைநேரமே; |
பகலும் மாலை
துணை இலோர்க்கே | பகலெல்லாம் மாலைநேரமே,
துணை இல்லாதவர்களுக்கு – |
| |
# மாயேண்டன் | # மாயேண்டன் |
# 235 பாலை | # 235 பாலை |
ஓம்பு-மதி
வாழியோ வாடை பாம்பின் | தலைவியை வருத்தாமல்
காப்பாயாக! வாழ்க நீ வாடையே! பாம்பின் |
தூங்கு தோல்
கடுக்கும் தூ வெள் அருவி | தொங்குகின்ற சட்டையைப்
போன்றிருக்கும் தூய வெள்ளிய அருவி ஓடும் |
கல் உயர்
நண்ணியதுவே நெல்லி | மலையின் உச்சிக்கு
அருகிலுள்ளது – நெல்லிக்காயை |
மரை_இனம் ஆரும்
முன்றில் | மரைக் கூட்டங்கள்
உண்ணும் முற்றத்தையுடைய |
புல் வேய்
குரம்பை நல்லோள் ஊரே | புல் வேய்ந்த
குடிசைகளையுடைய நல்லவளின் ஊர் – |
| |
#
நரிவெரூஉத்தலையார் | # நரிவெரூஉத்தலையார் |
# 236 நெய்தல் | # 236 நெய்தல் |
விட்டு என
விடுக்கும் நாள் வருக அது நீ | எம்மை விட்டுவிட்டுப்
பிரியும் நாள் வருக! அதனை நீ |
நேர்ந்தனை
ஆயின் தந்தனை சென்மோ | மிகவும் வேண்டிப்
பெற்றிருந்தால், தந்துவிட்டுச் செல் – |
குன்றத்து அன்ன
குவவு மணல் அடைகரை | மலையைப் போல
குவித்திருக்கும் அடைத்தகரைமீது |
நின்ற புன்னை
நிலம் தோய் படு சினை | நின்றிருக்கும்
புன்னையின் நிலத்தைத்தோய்ந்த தாழ்ந்த கிளையில் |
வம்ப நாரை
சேக்கும் | புதிய நாரை தங்கும் |
தண் கடல்
சேர்ப்ப நீ உண்ட என் நலனே | குளிர்ந்த
கடற்பகுதியையுடைய தலைவனே! நீ நுகர்ந்த
எனது பெண்மைநலனை – |
| |
# அள்ளூர்
நன்முல்லை | # அள்ளூர் நன்முல்லை |
# 237 பாலை | # 237 பாலை |
அஞ்சுவது
அறியாது அமர் துணை தழீஇய | அச்சம் என்பதை
அறியாது, தான் விரும்பும் தலைவியைத் தழுவுவதற்காக, |
நெஞ்சு நம்
பிரிந்தன்று ஆயினும் எஞ்சிய | நெஞ்சு நம்மைவிட்டுப்
பிரிந்துசென்றது; ஆனாலும், எஞ்சி நின்ற |
கை பிணி
நெகிழின் அஃது எவனோ நன்றும் | கைகளால்
கட்டிக்கொள்ளுதல் நெகிழ்ந்தால் அதனால் என்ன பயன்? மிகவும் |
சேய அம்ம
இருவாம் இடையே | தொலைவானது
இருவருக்குக்கும் இடையேயுள்ள தூரம், |
மா கடல்
திரையின் முழங்கி வலன் ஏர்பு | பெரிய கடல் அலையைப்
போன்று முழங்கி, வலப்பக்கமாய் எழுந்து, |
கோள் புலி
வழங்கும் சோலை | கொலைசெய்யும் புலி
திரியும் சோலை |
எனைத்து என்று
எண்ணுகோ முயக்கு இடை மலைவே | எத்தனை என்று
எண்ணுவேன், தலைவியை முயங்குவதற்கு இடையிலே உள்ள அந்தத் தடைகள்- |
| |
# குன்றியன் | # குன்றியன் |
# 238 மருதம் | # 238 மருதம் |
பாசவல் இடித்த
கரும் காழ் உலக்கை | பச்சை அவலை இடித்த
கரிய வைரம்பாய்ந்த உலக்கைகளை |
ஆய் கதிர்
நெல்லின் வரம்பு அணை துயிற்றி | ஆராய்கின்ற கழனியின்
வரப்பில் சாய்த்துக் கிடத்தி |
ஒண் தொடி
மகளிர் வண்டல் அயரும் | ஒளிரும் வளையலை அணிந்த
மகளிர் மணலில் விளையாடும் |
தொண்டி அன்ன
என் நலம் தந்து | தொண்டியைப் போன்ற என்
பெண்மைநலத்தைத் தந்துவிட்டு |
கொண்டனை சென்மோ
மகிழ்ந நின் சூளே | எடுத்துக்கொண்டு
செல்க, தலைவனே! உனது சூளுரையை – |
| |
# ஆசிரியன்
பெருங்கண்ணன் | # ஆசிரியன்
பெருங்கண்ணன் |
# 239 குறிஞ்சி | # 239 குறிஞ்சி |
தொடி
நெகிழ்ந்தனவே தோள் சாயினவே | வளையல்கள் கழன்றி
வீழ்ந்தன, தோள்கள் மெலிந்துபோய்விட்டன, |
விடும் நாண்
உண்டோ தோழி விடர் முகை | இனி விட்டுவிடுவதற்கான
நாணமும் என்னிடம் உண்டோ? தோழி! பிளவுகளையும் குகைகளையும் கொண்ட |
சிலம்பு உடன்
கமழும் அலங்கு குலை காந்தள் | மலை முழுதும் மணக்கும்
அசைகின்ற குலைகளையுடைய காந்தளின்கண் |
நறும் தாது
ஊதும் குறும் சிறை தும்பி | மணமுள்ள பூந்தாதினை
ஊதும் குறிய சிறகுகளைக் கொண்ட தும்பி |
பாம்பு உமிழ்
மணியின் தோன்றும் | பாம்பு உமிழ்ந்த
மணியைப் போன்று தோன்றும், |
முந்தூழ் வேலிய
மலை கிழவோற்கே | மூங்கில் வேலியை உடைய
மலைகளையுடைய நம் தலைவனுக்காக – |
| |
# கொல்லின்
அழிசி | # கொல்லின் அழிசி |
# 240 முல்லை | # 240 முல்லை |
பனி புதல்
இவர்ந்த பைம் கொடி அவரை | குளிர்ந்த புதரில்
படர்ந்த பச்சைக் கொடியையுடைய அவரையின் |
கிளி வாய்
ஒப்பின் ஒளி விடு பன் மலர் | கிளி வாயைப் போன்று
ஒளிவிடும் பலவாகிய மலர்கள் |
வெருக்கு பல்
உருவின் முல்லையொடு கஞலி | காட்டுப்பூனையின் பல்
போன்ற தோற்றமுடைய முல்லைப்பூவுடன் கலக்கும்படியாக |
வாடை வந்ததன்
தலையும் நோய் பொர | வாடைக்காற்று வந்ததன்
மேலும், காமநோய் என்னை வருத்தும்படி |
கண்டிசின் வாழி
தோழி தெண் திரை | காண்பாயாக! வாழ்க
தோழியே! தெளிந்த அலைகளையுடைய |
கடல் ஆழ்
கலத்தின் தோன்றி | கடலில் மூழ்குகின்ற
மரக்கலம் போலக் காணப்பட்டு |
மாலை மறையும்
அவர் மணி நெடும் குன்றே | மாலைப் பொழுதில்
மறையும், அவரின் மணிகளையுடைய நெடும் குன்றம் – |
| |
# கபிலர் | # கபிலர் |
# 241 குறிஞ்சி | # 241 குறிஞ்சி |
யாம் எம் காமம்
தாங்கவும் தாம் தம் | நாம் நமக்குற்ற
காமநோயைத் தாங்கிக்கொண்டிருக்கவும், தாம் தமது |
கெழுதகைமையின்
அழுதன தோழி | நட்புரிமையினால் அழுதன
தோழி! |
கன்று
ஆற்றுப்படுத்த புன் தலை சிறாஅர் | கன்றுகளை நடத்திச்
செல்லும் புல்லிய தலையையுடைய சிறுவர்கள் |
மன்ற வேங்கை
மலர் பதம் நோக்கி | ஊர்மன்றத்திலுள்ள
வேங்கைமரத்தின் மலர்ந்த நிலை நோக்கி |
ஏறாது இட்ட ஏம
பூசல் | மரத்தில் ஏறாமல்
எழுப்பிய இன்ப ஆரவாரம் |
விண் தோய்
விடர்_அகத்து இயம்பும் | விண்ணைத்
தோய்ந்திருக்கும் மலையின் பிளவுகளில் ஒலிக்கும் |
குன்ற நாடன்
கண்ட எம் கண்ணே | குன்றுகளையுடைய
நாட்டினனைக் கண்ட எமது கண்களே- |
| |
# குழற்றத்தன் | # குழற்றத்தன் |
# 242 முல்லை | # 242 முல்லை |
கான கோழி கவர்
குரல் சேவல் | காட்டுக்கோழியின்
கவர்த்த குரலையுடைய சேவல் |
ஒண் பொறி
எருத்தில் தண் சிதர் உறைப்ப | ஒளிரும் தன் பிடரியில்
குளிர்ந்த நீர்த்துளிகள் விழும்படி |
புதல் நீர்
வாரும் பூ நாறு புறவில் | புதரில் நீர் ஒழுகும்
பூக்கள் மணக்கும் முல்லைநிலத்துச் |
சீறூரோளே
மடந்தை வேறு ஊர் | சிறிய ஊரிலுள்ளாள்
தலைவி; வேறு ஊருக்கு |
வேந்து விடு
தொழிலொடு செலினும் | வேந்தனால் ஏவப்பட்ட
தொழிலை முன்னிட்டு ச் சென்றாலும் |
சேந்து வரல்
அறியாது செம்மல் தேரே | அங்குத் தங்கிவருவதை
அறியாது தலைவனின் தேர். |
| |
# நம்பி
குட்டுவன் | # நம்பி குட்டுவன் |
# 243 நெய்தல் | # 243 நெய்தல் |
மான் அடி அன்ன
கவட்டு இலை அடும்பின் | மானின் அடியைப் போன்ற
பிளவுபட்ட இலைகளையுடைய அடப்பங்கொடியின் |
தார் மணி அன்ன
ஒண் பூ கொழுதி | மாலையில் உள்ள மணியைப்
போன்ற ஒளிரும் பூவைப் பறித்துக் கிழித்து, |
ஒண் தொடி
மகளிர் வண்டல் அயரும் | ஒளிரும் வளையணிந்த
மகளிர் மணலில் விளையாடும் |
புள் இமிழ்
பெரும் கடல் சேர்ப்பனை | பறவைகள் ஒலிக்கும்
பெரிய கடலின் கரைக்குத் தலைவனை |
உள்ளேன் தோழி
படீஇயர் என் கண்ணே | இனி நினைக்கமாட்டேன்
தோழி! படுத்துத் தூங்கட்டும் என் கண்கள். |
| |
# கண்ணனார் | # கண்ணனார் |
# 244 குறிஞ்சி | # 244 குறிஞ்சி |
பல்லோர்
துஞ்சும் நள்ளென் யாமத்து | பலரும் தூங்கும்
நள்ளென்னும் நடு இரவில் |
உரவு களிறு
போல் வந்து இரவு கதவு முயறல் | வலிமையுடைய ஆண்யானை
போல வந்து இரவில் கதவைத் திறக்க முயன்றதை |
கேளேம் அல்லேம்
கேட்டனெம் பெரும | நான் கேட்காமல் இல்லை,
கேட்டேன், தலைவனே! |
ஓரி முருங்க
பீலி சாய | தலைக்கொண்டை
சிதையும்படியும், தோகை மெலியும்படியும், |
நன் மயில்
வலைப்பட்டு ஆங்கு யாம் | நல்ல மயில் வலையில்
அகப்பட்டதைப் போல், நாம் |
உயங்கு-தொறும்
முயங்கும் அறன் இல் யாயே | வருந்திப்
புரளும்தோறும் தழுவிக்கொள்கிறாள் அறப்பண்பு இல்லாத எம் அன்னை. |
| |
# மாலை மாறன் | # மாலை மாறன் |
# 245 நெய்தல் | # 245 நெய்தல் |
கடல் அம் கானல்
ஆயம் ஆய்ந்த என் | கடல் பக்கத்திலுள்ள
அழகிய சோலையில் தோழியர் ஆராய்ந்து பாராட்டிய என் |
நலம்
இழந்ததனினும் நனி இன்னாதே | பெண்மை நலத்தை
இழந்ததைக் காட்டிலும் மிகவும் துன்பம் தருவது, |
வாள் போல் வாய
கொழு மடல் தாழை | வாள் போன்ற
விளிம்பையுடைய கொழுத்த மடலையுடைய தாழை |
மாலை வேல்
நாட்டு வேலி ஆகும் | வளைவாக வேலை
நட்டத்தைப் போல் வேலியாக அமையும் |
மெல்லம்புலம்பன்
கொடுமை | நெய்தல் நிலத்துத்
தலைவனின் கொடுஞ்செயல் |
பல்லோர் அறிய
பரந்து வெளிப்படினே | பலரும் அறியும்படி
பரவி வெளிப்படுமாயின் – |
| |
# கபிலர் | # கபிலர் |
# 246 நெய்தல் | # 246 நெய்தல் |
பெரும் கடல்
கரையது சிறு_வெண்_காக்கை | பெரிய கடற்கரையில்
உள்ளன சிறிய வெண்ணிற நீர்க்காகங்கள், |
களிற்று செவி
அன்ன பாசடை மயக்கி | யானையின் காதைப் போன்ற
பச்சை இலைகளைக் கலக்கி, |
பனி கழி
துழவும் பானாள் தனித்து ஓர் | குளிர்ந்த கழிநீரைத்
துழாவி மீன்தேடும் நள்ளிரவில், தனியே ஒரு |
தேர் வந்து
பெயர்ந்தது என்ப அதற்கொண்டு | தேர் வந்து சென்றது
என்று யாரோ சொல்ல, அதுமுதல் |
ஓரும்
அலைக்கும் அன்னை பிறரும் | என்னையே கூர்ந்து
கவனிக்கிறாள் அன்னை, அலைக்கழிக்கவும் செய்கிறாள், வேறு பல |
பின்னு விடு
கதுப்பின் மின் இழை மகளிர் | பின்னலிட்ட
கூந்தலையும், மின்னுகின்ற அணிகலன்களையும் உடைய மகளிர் |
இளையரும்
மடவரும் உளரே | இளையவர்களும்,
மடப்பமுடையோரும் இருக்கின்றனரே! |
அலையா தாயரொடு
நற்பாலோரே | இப்படி அலைக்கழிக்காத
அன்னையரோடு! அவர்கள் புண்ணியம் செய்தவர்கள்! |
| |
# சேந்தம்பூதன் | # சேந்தம்பூதன் |
# 247 குறிஞ்சி | # 247 குறிஞ்சி |
எழில் மிக
உடையது ஈங்கு அணிப்படூஉம் | அழகு மிக உடையது;
இங்கு நமக்கு அண்மையதாகும்; |
திறவோர்
செய்_வினை அறவது ஆகும் | திறமையுடையோர்
செய்யும் காரியம் அறத்தொடு பொருந்தியது ஆகும்; |
கிளை உடை
மாந்தர்க்கு புணையும்-மார் இ என | சுற்றத்தையுடைய
மக்களுக்குப் பற்றுக்கோடும் இது என |
ஆங்கு
அறிந்திசினே தோழி வேங்கை | அப்படி நான்
அறிந்துள்ளேன்; வேங்கை மரத்தின் |
வீயா மென் சினை
வீ உக யானை | கெடாத மெல்லிய
கிளையிலுள்ள மலர்கள் உதிரும்படி, யானை |
ஆர் துயில்
இயம்பும் நாடன் | அரிய தன் தூக்கத்தில்
மூச்சுவிடும் நாட்டைச் சேர்ந்தவன் |
மார்பு உரித்து
ஆகிய மறு இல் நட்பே | மார்பை நமக்கு
உரித்தாகப் பெற்ற குற்றமற்ற நட்பு – |
| |
# உலோச்சன் | # உலோச்சன் |
# 248 நெய்தல் | # 248 நெய்தல் |
அது வரல்
அன்மையோ அரிதே அவன் மார்பு | திருமணத்துக்குரிய
நாள் வராமற்போவது அரிது; அவனது மார்பினைப் |
உறுக என்ற நாளே
குறுகி | பெறுக என்ற நாளே
அண்மையில் இருக்கிறது; |
ஈங்கு ஆகின்றே
தோழி கானல் | இங்கு இவ்வாறு
நிகழ்கின்றது, தோழியே! கடற்கரைச் சோலையின் |
ஆடு அரை புதைய
கோடை இட்ட | அசைகின்ற அடிப்பக்கம்
புதைந்துபோகும்படி மேல்காற்று கொண்டுவந்து இட்ட |
அடும்பு இவர்
மணல் கோடு ஊர நெடும் பனை | அடப்பங்கொடி படர்ந்த
மணற் குவியல்கள் பரவ, உயர்ந்த பனைமரம் |
குறிய ஆகும்
துறைவனை | குட்டையாகிப் போகும்
கடல் துறையையுடைய தலைவனைப் |
பெரிய கூறி
யாய் அறிந்தனளே | புகழ்ந்துகூறி அன்னை
அவனைப் புரிந்துகொண்டாள் – |
| |
# கபிலர் | # கபிலர் |
# 249 குறிஞ்சி | # 249 குறிஞ்சி |
இன மயில்
அகவும் மரம் பயில் கானத்து | திரளான மயில்கள்
கூவித்திரியும் மரங்கள் நெருங்கிய காட்டில் |
நரை முக ஊகம்
பார்ப்பொடு பனிப்ப | வெள்ளிய முகத்தையுடைய
கருங்குரங்குகள் குட்டிகளோடு குளிரால் நடுங்க, |
படு மழை
பொழிந்த சாரல் அவர் நாட்டு | ஒலிக்கின்ற மழை
பொழிந்த மலைச்சரிவையுடைய அவரின் நாட்டுக் |
குன்றம்
நோக்கினென் தோழி | குன்றத்தை நோக்கினேன்,
தோழி! |
பண்டை அற்றோ
கண்டிசின் நுதலே | (பசப்பூர்ந்த என்
நெற்றி) முன்பு இருந்ததைப் போல் ஆனதோ, உற்றுப்பார் என் நெற்றியை. |
| |
# நாமலார் மகன்
இளங்கண்ணன் | # நாமலார் மகன்
இளங்கண்ணன் |
# 250 பாலை | # 250 பாலை |
பரல் அவல் படு
நீர் மாந்தி துணையோடு | பருக்கைக் கற்களையுடைய
பள்ளத்தில் இருக்கும் நீரைக் குடித்து, தன் பெண்மானுடன் |
இரலை நன் மான்
நெறி முதல் உகளும் | இரலையாகிய நல்ல மான்
வழியின் தொடக்கத்தில் துள்ளிவிளையாடும் |
மாலை வாரா அளவை
கால் இயல் | மாலைக் காலம்
வருவதற்கு முன்னரேயே காற்றின் இயல்பைக் கொண்ட |
கடு மா
கடவு-மதி பாக நெடு நீர் | விரையும் குதிரைகளை
ஓட்டுவாயாக, பாகனே! நீண்ட தன்மையுள்ள, |
பொரு கயல்
முரணிய உண்கண் | ஒன்றற்கொன்று
எதிர்த்துநிற்கும் கயல்களைப் போன்றிருக்கும் மையுண்ட கண்களையும் |
தெரி தீம்
கிளவி தெருமரல் உயவே | தெரிந்தெடுத்த இனிய
சொற்களையுமுடைய தலைவி வருந்துவதனின்றும் தப்பிக்க – |
| |