| |
# பரூஉ மோவாய்
பதுமன் | # பரூஉ மோவாய் பதுமன் |
# 101 குறிஞ்சி | # 101 குறிஞ்சி |
விரி திரை
பெரும் கடல் வளைஇய உலகமும் | விரிந்த அலைகளையுடைய
பெரிய கடலால் சூழப்பட்ட இந்த உலகமும், |
அரிது பெறு
சிறப்பின் புத்தேள் நாடும் | மிகவும் அரிதில்
பெறக்கூடிய சிறப்புமிக்க தேவருலகமும், |
இரண்டும்
தூக்கின் சீர் சாலாவே | இரண்டையும்
சீர்தூக்கிப் பார்த்தால் இதற்கு ஒப்பாகமாட்டா – |
பூ போல் உண்கண்
பொன் போல் மேனி | பூப்போன்ற மைதீட்டிய
கண்களும், பொன்னைப் போன்ற மேனியும், |
மாண் வரி
அல்குல் குறு_மகள் | சிறப்பு மிக்க
வரிகளைக் கொண்ட அல்குலும் உடைய தலைவியின் |
தோள்
மாறுபடூஉம் வைகலொடு எமக்கே | தோள்கள்
(தழுவுதலால்)மாறுபடும் நாளொடு எமக்கு- |
| |
# ஔவையார் | # ஔவையார் |
# 102 நெய்தல் | # 102 நெய்தல் |
உள்ளின் உள்ளம்
வேமே உள்ளாது | (பிரிந்து சென்ற
தலைவரை) நினைத்தால் உள்ளம் வேகின்றது. நினைக்காமல் |
இருப்பின் எம்
அளவைத்து அன்றே வருத்தி | இருந்தால் அது என்னால்
முடிவது அன்று; என்னை வருத்தி |
வான் தோய்வு
அற்றே காமம் | வானத்தைத் தொடும்
அளவிலானது காமம், |
சான்றோர்
அல்லர் யாம் மரீஇயோரே | சான்றோர் அல்லர் நான்
தழுவியவர். |
| |
# வாயிலான்
தேவன் | # வாயிலான் தேவன் |
# 103 நெய்தல் | # 103 நெய்தல் |
கடும் புனல்
தொடுத்த நடுங்கு அஞர் அள்ளல் | விரைந்து ஓடும்
வெள்ளம் குவித்துவைத்த நடுங்கவைக்கும் துன்பத்தைச் செய்யும் சேற்றில் |
கவிர் இதழ்
அன்ன தூவி செ வாய் | முள்முருங்கைப் பூவின்
இதழ் போன்ற இறகுகளையும் சிவந்த வாயினையும் கொண்டு |
இரை தேர்
நாரைக்கு எவ்வம் ஆக | இரைதேடும் நாரைக்குத்
துன்பம் உண்டாக, |
தூஉம் துவலை
துயர் கூர் வாடையும் | தூவும்
மழைத்துளிகளையுடைய துயரந்தரும் வாடைக்காற்றுக் காலத்திலும் |
வாரார் போல்வர்
நம் காதலர் | வரமாட்டார் போலும் நம்
காதலர், |
வாழேன் போல்வல்
தோழி யானே | வாழமாட்டேன் போலும்
தோழி! நானே! |
| |
# காவன்முல்லை
பூதனார் | # காவன்முல்லை பூதனார் |
# 104 பாலை | # 104 பாலை |
அம்ம வாழி தோழி
காதலர் | தோழியே கேள்! காதல்
கொண்ட தலைவர் |
நூல் அறு
முத்தின் தண் சிதர் உறைப்ப | நூலினின்றும் அறுபட்ட
முத்துக்களைப் போல குளிர்ந்த துளிகள் உதிர, |
தாளி தண் பவர்
நாள் ஆ மேயும் | தாளிப் புல்லின்
குளிர்ந்த படர்கொடியைக் காலையில் பசுக்கள் மேயும் |
பனி படு நாளே
பிரிந்தனர் | பனி விழும் நாளில்
பிரிந்துசென்றார்; |
பிரியும்
நாளும் பல ஆகுபவே | பிரிந்து சென்ற
நாள்களும் பல ஆகின்றன. |
| |
# நக்கீரர் | # நக்கீரர் |
# 105 குறிஞ்சி | # 105 குறிஞ்சி |
புனவன் துடவை
பொன் போல் சிறுதினை | குறவனுடைய தோட்டத்தில்
விளைந்த பொன் போன்ற சிறுதினையின் |
கடி உண்
கடவுட்கு இட்ட செழும் குரல் | பூசையுணவை உண்ணும்
கடவுளுக்குப் படைத்த செழுமையான கதிரினை |
அறியாது உண்ட
மஞ்ஞை ஆடு_மகள் | அறியாது உண்ட மயில்,
ஆடுபவள் |
வெறி_உறு
வனப்பின் வெய்து_உற்று நடுங்கும் | வெறியாடும் அழகைப் போல
துன்புற்று நடுங்கும் |
சூர் மலை நாடன்
கேண்மை | தெய்வங்கள் வாழும்
மலைநாட்டையுடையவனின் நட்பு |
நீர் மலி
கண்ணொடு நினைப்பு ஆகின்றே | நீர்நிறைந்த கண்களுடன்
நினைவாகிப்போனது. |
| |
# கபிலர் | # கபிலர் |
# 106 குறிஞ்சி | # 106 குறிஞ்சி |
புல் வீழ்
இற்றி கல் இவர் வெள் வேர் | புல்லிய விழுதைக்கொண்ட
இற்றிமரத்தின் பாறையில் படர்ந்து வீழும் வெள்ளையான வேர்கள் |
வரை இழி
அருவியின் தோன்றும் நாடன் | மலையிலிருந்து விழும்
அருவியினைப் போல் தோன்றும் நாட்டைச் சேர்ந்த தலைவனின் |
தீது இல்
நெஞ்சத்து கிளவி நம்_வயின் | தீதில்லாத நெஞ்சத்தின்
சொற்கள் நம்மிடம் |
வந்தன்று வாழி
தோழி நாமும் | வந்தது வாழ்க தோழியே!
நாமும் |
நெய் பெய்
தீயின் எதிர்கொண்டு | நெய் ஊற்றிய
தீயைப்போல் அதனை எதிர்கொண்டு |
தான் மணந்து
அனையம் என விடுகம் தூதே | அவன் தன்னை
மணந்தகாலத்து இருந்த நிலையிலுள்ளோம் என்று தூது விடுவோம். |
| |
# மதுரை
கண்ணனார் | # மதுரை கண்ணனார் |
# 107 மருதம் | # 107 மருதம் |
குவி இணர்
தோன்றி ஒண் பூ அன்ன | குவிந்த கொத்தான
செங்காந்தளின் ஒளிவிடும் பூவைப் போல |
தொகு செம்
நெற்றி கணம்_கொள் சேவல் | தொகுப்பான சிவந்த
கொண்டையையுடைய கூட்டத்தோடு திரியும் சேவலே! |
நள்ளிருள்
யாமத்து இல் எலி பார்க்கும் | நள்ளிருளான
நடுச்சாமத்தில் வீட்டில் இருக்கும் எலியைப் பார்க்கும் |
பிள்ளை
வெருகிற்கு அல்கு_இரை ஆகி | குட்டிப் பூனைக்கு
வைத்துண்ணும் உணவாகி |
கடு
நவைப்படீஇயரோ நீயே நெடு நீர் | மிக்க
துன்பப்படுவாயாக! நீயே! நீண்ட நீர்ப்பரப்பினால் கிடைக்கும் |
யாணர் ஊரனொடு
வதிந்த | புதுவருவாயுடைய ஊரைச்
சேர்ந்தவனோடு தங்கிய |
ஏம இன் துயில்
எடுப்பியோயே | இன்பத்தைத் தரும்
தூக்கத்தினின்றும் எழுப்பிவிட்டாயே! |
| |
# வாயிலான்
தேவன் | # வாயிலான் தேவன் |
# 108 முல்லை | # 108 முல்லை |
மழை விளையாடும்
குன்று சேர் சிறுகுடி | மேகங்கள் விளையாடும்
குன்றினை அடுத்த சிறுகுடியில் |
கறவை
கன்று_வயின் படர புறவில் | பசுமாடுகள் தம் கன்றை
எண்ணித் திரும்ப, முல்லைநிலத்தில் |
பாசிலை முல்லை
ஆசு இல் வான் பூ | பசிய இலைகளைக் கொண்ட
முல்லையின் குற்றமற்ற வெள்ளைப் பூக்கள் |
செம் வான்
செவ்வி கொண்டன்று | செக்கர் வானத்தின்
தன்மையைக் கொண்டன, |
உய்யேன்
போல்வல் தோழி யானே | உயிர்வாழமாட்டேன்
போலும் தோழியே நான். |
| |
# நம்பி
குட்டுவன் | # நம்பி குட்டுவன் |
# 109 நெய்தல் | # 109 நெய்தல் |
முள் கால்
இறவின் முடங்கு புற பெரும் கிளை | முள் போன்ற கால்களைக்
கொண்ட இறா மீனின் வளைந்த முதுகையுடைய பெரிய கூட்டத்தை |
புணரி இகு திரை
தரூஉம் துறைவன் | கடலில் தாழ்ந்த அலைகள்
அடித்தொதுக்கும் துறையைச் சேர்ந்த தலைவன் |
புணரிய இருந்த
ஞான்றும் | சந்திக்க உடன் இருந்த
பொழுதிலும் |
இன்னது-மன்னோ
நன் நுதல் கவினே | இவ்வாறு
பொலிவிழந்துவிட்டதே உனது நல்ல நெற்றியின் அழகு. |
| |
#
கிள்ளிமங்கலம்கிழார் | # கிள்ளிமங்கலம்கிழார் |
# 110 முல்லை | # 110 முல்லை |
வாரார் ஆயினும்
வரினும் அவர் நமக்கு | வராமற்போனாலும்,
வந்தாலும் , இனி அவர் நமக்கு |
யார் ஆகியரோ
தோழி நீர | யாராவார் தோழி!
நீரிலுள்ள |
நீல பைம் போது
உளரி புதல | நீலக்குவளையின் இளம்
மொட்டைத் தடவிக்கொடுத்து, புதரிலுள்ள |
பீலி ஒண் பொறி
கருவிளை ஆட்டி | மயில்தோகையின் ஒளிரும்
கண்ணினையுடைய கருவிளம்பூவை ஆட்டி |
நுண் முள்
ஈங்கை செ அரும்பு ஊழ்த்த | நுண்ணிய முள்ளையுடைய
ஈங்கையின் சிவந்த அரும்புகள் மலர்ந்த |
வண்ண துய்ம்
மலர் உதிர தண்ணென்று | பலநிற வண்ணமுள்ள
பஞ்சுபோன்ற மலர் உதிர, குளிர்ச்சியுடன் |
இன்னாது
எறிதரும் வாடையொடு | துன்பந்தந்து வீசும்
வாடைக்காற்றில் |
என்
ஆயினள்-கொல் என்னாதோரே | என்ன ஆனாளோ என்று
நினைக்காதவர். |
| |
# தீன்மதிநாகன் | # தீன்மதிநாகன் |
# 111 குறிஞ்சி | # 111 குறிஞ்சி |
மென் தோள்
நெகிழ்த்த செல்லல் வேலன் | எனது மென்மையான்
தோள்களை மெலியச்செய்த வருத்தத்தை, பூசாரி |
வென்றி
நெடுவேள் என்னும் அன்னையும் | வெற்றியுடைய முருகனால்
வந்தது என்று சொல்வான்; என் தாயும் |
அது என உணரும்
ஆயின் ஆயிடை | அப்படியே என்று
நினைப்பாளாயின், அப்பொழுது, |
கூடை இரும்
பிடி கை கரந்து அன்ன | குட்டையான கரிய
பெண்யானை தன் துதிக்கையை மறைத்து நிற்பதைப் போல் |
கேழ் இரும்
துறுகல் கெழு மலை நாடன் | நிறத்தால் கருமையான
பாறாங்கல் இருக்கும் மலைநாட்டான் |
வல்லே வருக
தோழி நம் | சீக்கிரமே வருக! தோழி!
நம் |
இல்லோர் பெரு
நகை காணிய சிறிதே | வீட்டிலுள்ளோர்
செய்யும் நகைப்பிடமான காரியத்தைக் கொஞ்சம் கண்டுகளிக்க. |
| |
# ஆலத்தூர்
கிழார் | # ஆலத்தூர் கிழார் |
# 112 குறிஞ்சி | # 112 குறிஞ்சி |
கௌவை அஞ்சின்
காமம் எய்க்கும் | ஊராரின்
பழிமொழிகளுக்கு அஞ்சினால் விருப்பம் மெலிவடையும்; |
எள் அற விடினே
உள்ளது நாணே | எள்ளுதல்
அற்றுப்போகும்படி விருப்பதை விட்டுவிட்டால் என்னிடம் இருப்பது நாணம் மட்டுமே; |
பெரும் களிறு
வாங்க முரிந்து நிலம் படாஅ | பெரிய களிறு வளைக்க
வளைந்து நிலத்தில் படாத |
நார் உடை
ஒசியல் அற்றே | பட்டையை உடைய ஒடிந்த
கிளையைப் போன்றது |
கண்டிசின் தோழி
அவர் உண்ட என் நலனே | காண்பாயாக! தோழி! அவர்
நுகர்ந்த என் பெண்மை நலன். |
| |
# மாதீர்த்தன் | # மாதீர்த்தன் |
# 113 மருதம் | # 113 மருதம் |
ஊர்க்கும்
அணித்தே பொய்கை பொய்கைக்கு | ஊருக்கு அருகில்
உள்ளது பொய்கை; அந்தப் பொய்கைக்குத் |
சேய்த்தும்
அன்றே சிறு கான்யாறே | தூரமானதும் அன்று
சிறிய காட்டாறு; |
இரை தேர்
வெண்_குருகு அல்லது யாவதும் | இரையைத் தேடும்
வெள்ளைக் கொக்கு அன்றி, வேறு யாரும் |
துன்னல்
போகின்றால் பொழிலே யாம் எம் | நெருங்கி வருதல் இல்லை
அங்குள்ள சோலைக்கு; நாம் எமது |
கூழைக்கு
எருமணம் கொணர்கம் சேறும் | கூந்தலுக்கான
எருமண்ணைக் கொண்டுவரச் செல்வோம்; |
ஆண்டும்
வருகுவள் பெரும் பேதையே | அங்கும் வருவாள் பெரிய
பேதையாகிய தலைவி. |
| |
# பொன்னாகன் | # பொன்னாகன் |
# 114 நெய்தல் | # 114 நெய்தல் |
நெய்தல்
பரப்பில் பாவை கிடப்பி | நெய்தல் மணற்பரப்பில்
எனது பாவையைக் கிடத்திவிட்டு |
நின் குறி
வந்தனென் இயல் தேர் கொண்க | உனது குறிப்பிட்ட
இடத்துக்கு வந்தேன், நன்கு செய்த தேரையுடைய தலைவனே! |
செல்கம் செல
வியங்கொண்மோ அல்கலும் | அங்குப் போகின்றேன்;
செல்ல நீ விடுப்பாயாக; இரவு வருவதால் |
ஆரல் அருந்த
வயிற்ற | ஆரல் மீனைத் தின்று
நிறைந்த வயிற்றையுடைய |
நாரை
மிதிக்கும் என் மகள் நுதலே | நாரை மிதித்துவிடும்
என் பாவையின் நெற்றியை. |
| |
# கபிலர் | # கபிலர் |
# 115 குறிஞ்சி | # 115 குறிஞ்சி |
பெரு நன்று
ஆற்றின் பேணாரும் உளரோ | பெரிய நன்மையை ஒருவர்
செய்தால் அவரைப் போற்றாதவர் இல்லை. |
ஒரு நன்று
உடையள் ஆயினும் புரி மாண்டு | சிறிய நன்மையைச்
செய்தவளே ஆயினும், விருப்பம் மிகுந்து |
புலவி தீர
அளி-மதி இலை கவர்பு | ஊடல் தீரும்படி
அருளுவாயாக! இலைகளைக் கவர்ந்துண்டு |
ஆடு அமை ஒழுகிய
தண் நறும் சாரல் | ஆடுகின்ற மூங்கில்கள்
நீண்டு வளர்ந்த குளிர்ந்த மணமுள்ள மலைச் சரிவில் |
மென் நடை மரையா
துஞ்சும் | மெல்லிய நடையையுடைய
மரையான்கள் துயிலும் |
நன் மலை நாட
நின் அலது இலளே | நல்ல மலைநாடுத்
தலைவனே! நீயின்றி இவளுக்கு வேறு யாரும் இல்லை. |
| |
# இளங்கீரன் | # இளங்கீரன் |
# 116 குறிஞ்சி | # 116 குறிஞ்சி |
யான் நயந்து
உறைவோள் தேம் பாய் கூந்தல் | நான் விரும்பி என்னுள்
உறைவோளின் வண்டுகள் மொய்க்கும் கூந்தல் |
வளம் கெழு
சோழர் உறந்தை பெரும் துறை | வளம் பொருந்திய
சோழரின் உறந்தையின் பெரிய நீர்த்துறையில் |
நுண் மணல் அறல்
வார்ந்து அன்ன | நுண்ணிய கருமணல்
நெளிநெளியாய் நீளமாய்ப் படிந்தாற்போல |
நன் நெறியவ்வே
நறும் தண்ணியவே | நல்ல நெறிப்பை உடையன,
நறியவும் குளிர்ந்தனவுமாம். |
| |
# குன்றியனார் | # குன்றியனார் |
# 117 நெய்தல் | # 117 நெய்தல் |
மாரி ஆம்பல்
அன்ன கொக்கின் | மழைக்காலத்து ஆம்பல்
பூவைப்போன்ற கொக்கின் |
பார்வல் அஞ்சிய
பருவரல் ஈர் ஞெண்டு | பார்வைக்கு அஞ்சிய
துன்பத்தையுடைய ஈரமான நண்டு |
கண்டல் வேர்
அளை செலீஇயர் அண்டர் | தாழையின்
வேர்களுக்குள் உள்ள தனது வளைக்குள் செல்வதற்காக, இடையர்களின் |
கயிறு அரி
எருத்தின் கதழும் துறைவன் | கயிற்றினை அறுத்துச்
செல்லும் எருதைப் போல விரையும் கடற்கரைத் தலைவன் |
வாராது
அமையினும் அமைக | வாராதிருப்பினும்
இருக்க; |
சிறியவும் உள
ஈண்டு விலைஞர் கை வளையே | சிறியனவும் உண்டு,
இங்கு விற்போரின் கைவளைகள். |
| |
# நன்னாகையார் | # நன்னாகையார் |
# 118 நெய்தல் | # 118 நெய்தல் |
புள்ளும்
மாவும் புலம்பொடு வதிய | பறவைகளும்,
விலங்குகளும் தனிமையில் தங்க |
நள்ளென வந்த
நார் இல் மாலை | நள்ளென்று வந்த
அன்பில்லாத மாலைக் காலத்தில் |
பலர் புகு
வாயில் அடைப்ப கடவுநர் | பலரும் புகுவதற்குரிய
வாசலை அடைக்க எண்ணி, வினாவுவோர் |
வருவீர் உளீரோ
எனவும் | உள்ளே வருவோர்
இருக்கிறீர்களா என்று கேட்கவும் |
வாரார் தோழி
நம் காதலோரே | வாரார் ஆயினர் நம்
காதலர். |
| |
# சத்திநாதனார் | # சத்திநாதனார் |
# 119 குறிஞ்சி | # 119 குறிஞ்சி |
சிறு வெள்
அரவின் அம் வரி குருளை | வெண்மையான பாம்பின்,
அழகிய வரிகளைக் கொண்ட சிறிய குட்டி |
கான யானை
அணங்கி ஆஅங்கு | காட்டு யானையை
நிலைகுலையவைப்பது போல |
இளையன் முளை
வாள் எயிற்றள் | இளையவள், முளை போன்ற
ஒளிமிக்க பற்களையுடையவள் |
வளை உடை கையள்
எம் அணங்கியோளே | வளையுடைக் கையினள்
என்னை நிலைகுலையவைத்தவள். |
| |
# பரணர் | # பரணர் |
# 120 குறிஞ்சி | # 120 குறிஞ்சி |
இல்லோன் இன்பம்
காமுற்று ஆஅங்கு | பொருள் இல்லாதவன்
இன்பத்தை விரும்பினாற் போல |
அரிது
வேட்டனையால் நெஞ்சே காதலி | பெறுவதற்கு அரியதை
விரும்பினாய் நெஞ்சே! காதலி |
நல்லள் ஆகுதல்
அறிந்து ஆங்கு | நல்லவள் என்பதனை
அறிந்ததைப் போல் |
அரியள் ஆகுதல்
அறியாதோயே | அரியவள் என்பதனை
அறியாமற்போய்விட்டாயே! |
| |
# கபிலர் | # கபிலர் |
# 121 குறிஞ்சி | # 121 குறிஞ்சி |
மெய்யே வாழி
தோழி சாரல் | உண்மையே தோழி
வாழ்வாயாக!, மலைப்பக்கத்தில் |
மை பட்டு அன்ன
மா முக முசு கலை | மையை ஊற்றியதைப் போன்ற
கரிய முகத்தைக்கொண்ட ஆண்குரங்கு |
ஆற்ற பாயா
தப்பல் ஏற்ற | தாங்கக் கூடிய
கிளையில் தாவாத தவறு, அதனை ஏற்றுக்கொண்டு முறிந்த |
கோட்டொடு போகி
ஆங்கு நாடன் | கிளைக்கு
ஆகினாற்போன்று, தலைவன் |
தான் குறி வாயா
தப்பற்கு | தான் குறியிடத்துக்கு
வாராமற் செய்த தவறுக்குத் |
தாம் பசந்தன
என் தட மென் தோளே | தாம் பசலைபாய்ந்தன
எனது பரந்த மெல்லிய தோள்களே! |
| |
# ஓரம்போகியார் | # ஓரம்போகியார் |
# 122 நெய்தல் | # 122 நெய்தல் |
பைம் கால்
கொக்கின் புன் புறத்து அன்ன | இளமையான கொக்கின்
புல்லிய முதுகினைப் போன்று |
குண்டு நீர்
ஆம்பலும் கூம்பின இனியே | பள்ளத்து நீரில் உள்ள
ஆம்பலும் கூம்பின; இப்பொழுது |
வந்தன்று
வாழியோ மாலை | வந்தது; வாழ்க இந்த
மாலைக்காலம்; |
ஒரு தான் அன்றே
கங்குலும் உடைத்தே | தான் ஒன்று மட்டும்
அன்று; அடுத்து வரும் இரவையும் உடையது அது! |
| |
# ஐயூர் முடவன் | # ஐயூர் முடவன் |
# 123 நெய்தல் | # 123 நெய்தல் |
இருள் திணிந்து
அன்ன ஈர்ம் தண் கொழு நிழல் | இருள் செறிந்தாற்
போன்ற ஈரமும் குளிர்ச்சியுமுடைய திரட்சியான நிழலையுடைய, |
நிலவு குவித்து
அன்ன வெண் மணல் ஒரு சிறை | நிலவொளியைக் குவித்து
வைத்தாற்போன்ற வெள்ளையான மணலின் ஒரு பக்கத்திலிருக்கும், |
கரும் கோட்டு
புன்னை பூ பொழில் புலம்ப | கரிய கிளைகளையுடைய
புன்னை மரங்களுடைய பூஞ்சோலை தனித்துக்கிடக்க |
இன்னும் வாரார்
வரூஉம் | தலைவர் இன்னும்
வரவில்லை, வருகின்றன |
பன் மீன்
வேட்டத்து என் ஐயர் திமிலே | நிறைய மீன்களை
வேட்டையாடிக்கொண்டு என் தமையன்மாருடைய படகுகள். |
| |
# பாலை பாடிய
பெருங்கடுக்கோ | # பாலை பாடிய
பெருங்கடுக்கோ |
# 124 பாலை | # 124 பாலை |
உமணர் சேர்ந்து
கழிந்த மருங்கின் அகன் தலை | உப்பு வணிகர்கள்
தங்கிச் சென்ற பக்கத்தையும், அகன்ற இடமுள்ள |
ஊர் பாழ்த்து
அன்ன ஓமை அம் பெரும் காடு | ஊர்
பாழ்பட்டுப்போனதைப் போன்ற ஓமை மரங்களையும் கொண்ட பெரிய பாலைநிலம் |
இன்னா என்றிர்
ஆயின் | இன்னாது என்று
கூறுகிறீர், எனினும் |
இனியவோ பெரும
தமியோர்க்கு மனையே | இனியவோ தலைவனே!
தனியாய் இருப்போர்க்கு இந்த வீடு? |
| |
# அம்மூவன் | # அம்மூவன் |
# 125 நெய்தல் | # 125 நெய்தல் |
இலங்கு வளை
நெகிழ சாஅய் யானே | ஒளிவிடும் வளைகள்
நெகிழ்ந்துபோக மெலிந்துபோய், நானே |
உளெனே வாழி
தோழி சாரல் | இருக்கின்றேன்! வாழ்க
தோழி! மலைப்பக்கத்து |
தழை அணி
அல்குல் மகளிருள்ளும் | தழையை அணிந்த
அல்குலையுடைய மகளிர்களுக்குள் |
விழவு மேம்பட்ட
என் நலனே பழ விறல் | திருவிழாவைப் போல்
சிறந்த என் பெண்மை நலன், பழைய ஆற்றலாகிய |
பறை வலம்
தப்பிய பைதல் நாரை | சிறகுகளின் வலிமையை
இழந்த வருத்தமுடைய நாரை |
திரை தோய்
வாங்கு சினை இருக்கும் | அலைகளைத்
தொட்டுக்கொண்டிருக்கும் வளைந்த கிளையில் இருக்கும் |
தண்ணம்
துறைவனொடு கண்மாறின்றே | குளிர்ந்த அழகிய
துறையையுடையவனோடு இடம் மாறிப் போனது. |
| |
# ஒக்கூர்
மாசாத்தியார் | # ஒக்கூர்
மாசாத்தியார் |
# 126 முல்லை | # 126 முல்லை |
இளமை பாரார்
வளம் நசைஇ சென்றோர் | இளமையைப் பார்க்காமல்,
பொருளை விரும்பிச் சென்றவராகிய தலைவர் |
இவணும் வாரார்
எவணரோ என | இங்கும் வந்திலர்,
எங்கிருக்கிறாரோ என – |
பெயல்
புறந்தந்த பூ கொடி முல்லை | மழையால்
வாழ்விக்கப்பட்ட பூங்கொடியையுடைய முல்லையின் |
தொகு முகை
இலங்கு எயிறு ஆக | கொத்தான மொட்டுகளை
ஒளிறும் பற்களாகக் கொண்டு |
நகுமே தோழி
நறும் தண் காரே | சிரிக்கிறதே தோழி!
மணமுள்ள குளிர்ந்த கார்ப்பருவம். |
| |
# ஓரம்போகியார் | # ஓரம்போகியார் |
# 127 மருதம் | # 127 மருதம் |
குருகு கொள
குளித்த கெண்டை அயலது | கொக்கு கொத்த,
தப்பிப்போய் மூழ்கிய கெண்டை, அருகிலிருக்கும் |
உரு கெழு தாமரை
வான் முகை வெரூஉம் | நிறமுள்ள தாமரையின்
வெள்ளையான மொட்டைக்கண்டு வெருளும் |
கழனி அம்
படப்பை காஞ்சி ஊர | வயல்வெளிகளையும்
தோட்டங்களையும் கொண்ட காஞ்சி நகரத்துத் தலைவனே! |
ஒரு நின் பாணன்
பொய்யன் ஆக | உன்னுடைய பாணன் ஒருவன்
பொய்யன் ஆக, |
உள்ள பாணர்
எல்லாம் | ஊரில் உள்ள பாணர்
எல்லாம் |
கள்வர் போல்வர்
நீ அகன்றிசினோர்க்கே | பொய்யரைப் போன்று
தோன்றுவர் நீ அகன்றதால் தனித்திருக்கும் மகளிருக்கு. |
| |
# பரணர் | # பரணர் |
# 128 நெய்தல் | # 128 நெய்தல் |
குண கடல்
திரையது பறை தபு நாரை | கிழக்குக் கடலின்
அலைகளின் அருகிலிருக்கும் சிறகுகள் மெலிந்த நாரை |
திண் தேர்
பொறையன் தொண்டி முன்துறை | திண்ணிய தேரினைக்
கொண்ட சேரனின் தொண்டியின் துறைக்கு முன் உள்ள |
அயிரை ஆர்
இரைக்கு அணவந்து ஆங்கு | அயிரைக் கூட்டத்தை
எண்ணி அண்ணாந்து பார்த்தாற்போல |
சேயள் அரியோள்
படர்தி | தொலைவிலுள்ளவள்,
பெறுவதற்கு அரியவள் ஆகிய தலைவியை எண்ணிப்பார்க்கிறாய், |
நோயை நெஞ்சே
நோய் பாலோயே | நோயுடையவனாகிவிட்டாய்
நெஞ்சே! இந்த நோய்க்குக் காரணமாகிய ஊழ்வினையின்பாற்பட்டாய்! |
| |
#
கோப்பெருஞ்சோழன் | # கோப்பெருஞ்சோழன் |
# 129 குறிஞ்சி | # 129 குறிஞ்சி |
எலுவ சிறாஅர்
ஏமுறு நண்ப | என் தோழனே! இளைஞர்கள்
இன்புறுவதற்குக் காரணமாகிய நண்பனே! |
புலவர் தோழ
கேளாய் அத்தை | அறிவுடையார்க்குத்
தோழனே! கேட்பாயாக! |
மா கடல் நடுவண்
எண் நாள் பக்கத்து | கரிய கடலின் நடுவில்
எட்டாம் நாளுக்குரிய |
பசு வெண்
திங்கள் தோன்றி ஆங்கு | இளமையான வெள்ளிய
திங்கள் தோன்றியதைப் போல் |
கதுப்பு அயல்
விளங்கும் சிறு நுதல் | கூந்தல் பக்கத்தில்
விளங்கும் சிறிய நெற்றி |
புது கோள்
யானையின் பிணித்து அற்றால் எம்மே | புதிதாகப்
பிடிக்கப்பட்ட யானையைப் போல் என்னைப் பிணித்துவிட்டது. |
| |
#
வெள்ளிவீதியார் | # வெள்ளிவீதியார் |
# 130 பாலை | # 130 பாலை |
நிலம் தொட்டு
புகாஅர் வானம் ஏறார் | நிலத்தைத் தோண்டி
அதனுள் புகமாட்டார்; வானத்தில் ஏறமாட்டார்; |
விலங்கு இரு
முந்நீர் காலின் செல்லார் | குறுக்கிடும் பெரிய
கடலில் காலால் நடந்து செல்லார்; |
நாட்டின்_நாட்டின்
ஊரின்_ஊரின் | நாடுகள்தோறும்,
ஊர்கள்தோறும் |
குடிமுறை_குடிமுறை
தேரின் | குடிமுறைகள்தோறும்
தேடிப்பார்த்தால் |
கெடுநரும் உளரோ
நம் காதலோரே | காணாமற்போவாரோ நம்
காதலர். |
| |
# ஓரேருழவனார் | # ஓரேருழவனார் |
# 131 பாலை | # 131 பாலை |
ஆடு அமை
புரையும் வனப்பின் பணை தோள் | ஆடுகின்ற மூங்கிலைப்
போன்ற அழகினையுடைய பெரிய தோள்களையும், |
பேர் அமர்
கண்ணி இருந்த ஊரே | பெரிதும்
விரும்பப்படும் கண்ணையும் உடையவள் இருந்த ஊர் |
நெடும் சேண்
ஆரிடையதுவே நெஞ்சே | நெடுந்தூரத்தில்
அடைதற்கரிய இடத்தில் உள்ளது; எனது நெஞ்சு |
ஈரம் பட்ட
செவ்வி பைம் புனத்து | ஈரமான தன்மையையுடைய
உழுவதற்கேற்ற நிலத்தில் |
ஓர் ஏர் உழவன்
போல | ஒற்றை ஏர் உழவனைப் போல |
பெரு விதுப்பு
உற்றன்றால் நோகோ யானே | பெரிதும்
பரபரப்புக்கொள்கிறது; வருந்துகிறேன் நான். |
| |
# சிறைக்குடி
ஆந்தையார் | # சிறைக்குடி
ஆந்தையார் |
# 132 குறிஞ்சி | # 132 குறிஞ்சி |
கவவு
கடும்-குரையள் காமர் வனப்பினள் | தழுவுவதில்
விரைவுடையவள்; விருப்பம்தரும் அழகினள்; |
குவவு மென்
முலையள் கொடி கூந்தலளே | குவிந்த மெல்லிய
முலையினள்; நீளமான கூந்தலையுடையவள்; |
யாங்கு மறந்து
அமைகோ யானே ஞாங்கர் | எப்படி மறந்திருப்பேன்
நான்? அருகில் நிற்கும் |
கடும் சுரை நல்
ஆன் நடுங்கு தலை குழவி | நிறையச் சுரக்கும்
நல்ல பசுவின் நடுங்குகின்ற தலையைக் கொண்ட கன்று |
தாய் காண்
விருப்பின் அன்ன | தாயைக் காணும்
விருப்பதைக் கொண்டது போல |
சாஅய்
நோக்கினள் மாஅயோளே | மெலிந்த
பார்வையையுடையவள் மாமைநிறங்கொண்ட என் காதலி! |
| |
# உறையூர்
முதுகண்ணன் சாத்தன் | # உறையூர் முதுகண்ணன்
சாத்தன் |
# 133 குறிஞ்சி | # 133 குறிஞ்சி |
புனவன் துடவை
பொன் போல் சிறுதினை | புனத்தையுடைய குறவனின்
தோட்டத்துப் பொன் போன்ற சிறுதினையைக் |
கிளி குறைத்து
உண்ட கூழை இருவி | கிளி முறித்து
உண்டதால் ஏற்பட்ட குட்டையான இருவியாகிய தாள், |
பெரும் பெயல்
உண்மையின் இலை ஒலித்து ஆங்கு என் | பெரிய மழை பெய்ததால்
இலைவிட்டுத் தழைத்ததைப் போல் |
உரம் செத்தும்
உளெனே தோழி என் | எனது வலிமை முழுதும்
அழிந்தபின்னரும் இருக்கிறேனே தோழி! என் |
நலம் புதிது
உண்ட புலம்பினானே | பெண்மை நலத்தைப்
புதிதான நிலையில் நுகர்ந்த தனிமை வருத்தத்தோடு- |
| |
# கோவேங்கை
பெருங்கதவன் | # கோவேங்கை
பெருங்கதவன் |
# 134 குறிஞ்சி | # 134 குறிஞ்சி |
அம்ம வாழி தோழி
நம்மொடு | கேட்பாயாக வாழி
தோழி! நம்மைவிட்டுப் |
பிரிவு இன்று
ஆயின் நன்று-மன் தில்ல | பிரிதல் இல்லையென்றால்
அது நல்லது நிச்சயமாக – |
குறும் பொறை
தடைஇய நெடும் தாள் வேங்கை | குட்டையான பாறைகளிடையே
தழைத்து வளர்ந்த நீண்ட அடிமரத்தையுடைய வேங்கைமரத்தின் |
பூ உடை அலங்கு
சினை புலம்ப தாக்கி | பூக்களுடையவாய் ஆடும்
கிளைகளை வருத்தித் தாக்கி |
கல் பொருது
இரங்கும் கதழ் வீழ் அருவி | பெரும்பாறைகளை மோதி
ஒலிக்கும் விரைந்து விழும் அருவி |
நிலம் கொள்
பாம்பின் இழிதரும் | மரத்திலிருந்து
நிலத்தை நோக்கி விரையும் பாம்பைப் போல இறங்கும் |
விலங்கு மலை
நாடனொடு கலந்த நட்பே | குறுக்கிட்டுக்
கிடக்கும் மலைகளையுடைய நாட்டுத் தலைவனுடன் கலந்த நட்பு. |
| |
# பாலை பாடிய
பெருங்கடுங்கோ | # பாலை பாடிய
பெருங்கடுங்கோ |
# 135 பாலை | # 135 பாலை |
வினையே
ஆடவர்க்கு உயிரே வாள் நுதல் | தொழில்தான் ஆடவர்க்கு
உயிர்; ஒளிபொருந்திய நெற்றியையுடைய |
மனை உறை
மகளிர்க்கு ஆடவர் உயிர் என | வீட்டில் வாழும்
மகளிர்க்கு ஆடவரே உயிராவார் என்று |
நமக்கு
உரைத்தோரும் தாமே | நமக்கு உரைத்தவரும்
அத் தலைவரே! |
அழாஅல் தோழி
அழுங்குவர் செலவே | அழவேண்டாம் தோழி!
பயணத்தை மேற்கொள்ளமாட்டார். |
| |
#
மிளைப்பெரும்கந்தன் | # மிளைப்பெரும்கந்தன் |
# 136 குறிஞ்சி | # 136 குறிஞ்சி |
காமம் காமம்
என்ப காமம் | காமம் காமம் என்று
உலகினர் அதைக் கண்டு அஞ்சுகின்றனர்; அந்தக் காமம் |
அணங்கும்
பிணியும் அன்றே நுணங்கி | வருத்தமும் நோயும்
அன்று; நுண்ணிதாகி |
கடுத்தலும்
தணிதலும் இன்றே யானை | மிகுவதும் குறைவதும்
அன்று; யானை |
குளகு மென்று
ஆள் மதம் போல | தழையுணவை மிகுதியாக
உண்டு அதனால்கொண்ட மதத்தைப் போல |
பாணியும்
உடைத்து அது காணுநர் பெறினே | அது வெளிப்படும்
தன்மையும் உடையது காணக்கூடியவரைப் பெற்றால். |
| |
# பாலை பாடிய
பெருங்கடுங்கோ | # பாலை பாடிய
பெருங்கடுங்கோ |
# 137 பாலை | # 137 பாலை |
மெல் இயல்
அரிவை நின் நல் அகம் புலம்ப | மென்மையான இயல்புடைய
நங்கையே! உன் நல்ல நெஞ்சு வருந்தும்படி |
நின் துறந்து
அமைகுவென் ஆயின் என் துறந்து | உன்னைத் துறந்து
அமைந்திருப்பேனாயின், என்னை நீங்கி |
இரவலர் வாரா
வைகல் | இரப்போர் வராத நாட்கள் |
பல ஆகுக யான்
செலவு_உறு தகவே | பலவாகுக, எனது
பயணத்தின் தகுதியில்- |
| |
# கொல்லன்
அழிசி | # கொல்லன் அழிசி |
# 138 குறிஞ்சி | # 138 குறிஞ்சி |
கொன் ஊர்
துஞ்சினும் யாம் துஞ்சலமே | பெரிய ஊரிலுள்ளார்
தூங்கினாலும் நாம் தூங்கமாட்டோம்; |
எம் இல் அயலது
ஏழில் உம்பர் | எமது வீட்டுக்கு
வெளியேயுள்ள ஏழில்மலையின் உச்சியில் |
மயில் அடி இலைய
மா குரல் நொச்சி | மயிலின் அடியைப் போன்ற
இலையையுடைய கரிய பூங்கொத்துக்களையுடைய நொச்சியின் |
அணி மிகு மென்
கொம்பு ஊழ்த்த | அழகுமிக்க மெல்லிய
கிளைகளில் மலர்ந்த |
மணி மருள்
பூவின் பாடு நனி கேட்டே | நீல மணி போன்ற பூக்கள்
உதிர்வதால் உண்டாகும் ஓசையை மிகவும் கேட்டு – |
| |
# ஒக்கூர்
மாசாத்தியார் | # ஒக்கூர்
மாசாத்தியார் |
# 139 மருதம் | # 139 மருதம் |
மனை உறை கோழி
குறும் கால் பேடை | வீட்டில் வாழும்
கோழியின் குட்டைக் கால்களையுடைய பேடை, |
வேலி வெருகு
இனம் மாலை உற்று என | வேலியில்,
காட்டுப்பூனைகள் மாலையில் வந்து இருக்க, |
புகும் இடன்
அறியாது தொகுபு உடன் குழீஇய | ஒளிந்துகொள்ளும் இடம்
அறியாது ஒன்றுகூடிச் சேர்ந்துகொள்ளும் பொருட்டு |
பைதல் பிள்ளை
கிளை பயிர்ந்து ஆஅங்கு | வருந்தும் குஞ்சுகளைக்
அழைத்துக் கூவினாற் போன்று |
இன்னாது
இசைக்கும் அம்பலொடு | செவிக்கு இன்னாதாகத்
தூற்றப்படும் பழிச்சொல்லோடே |
வாரல் வாழியர்
ஐய எம் தெருவே | வராமலிருப்பாயாக!
வாழியர் எம் தலைவ! எம் தெருப்பக்கம்- |
| |
# அள்ளூர்
நன்முல்லை | # அள்ளூர் நன்முல்லை |
# 140 பாலை | # 140 பாலை |
வேதின வெரிநின்
ஓதி முது போத்து | பன்னரிவாளைப் போன்ற
முதுகையுடைய முதிய ஆண் ஓந்தியானது |
ஆறு செல்
மாக்கள் புள் கொள பொருந்தும் | வழிச்செல்வோருக்கு நல்
நிமித்தமாக ஒலியெழுப்பத் தங்கியிருக்கும் |
சுரனே சென்றனர்
காதலர் உரன் அழிந்து | பாலைநிலத்தில்
சென்றனர் காதலர்; என் வலிமை அழிந்து |
ஈங்கு யான்
அழுங்கிய எவ்வம் | இங்கு நான் தாங்கிய
துன்பத்தை |
யாங்கு
அறிந்தன்று இ அழுங்கல் ஊரே | எப்படி அறியும் இந்த
இரக்கமுள்ள ஊர். |
| |
# மதுரை
பெருங்கொல்லனார் | # மதுரை
பெருங்கொல்லனார் |
# 141 குறிஞ்சி | # 141 குறிஞ்சி |
வளை வாய் சிறு
கிளி விளை தினை கடீஇயர் | வளைந்த வாயையுடைய
சிறிய கிளிகள் விளைந்த தினையின்மேல் வீழாதபடி விரட்டச் |
செல்க என்றோளே
அன்னை என நீ | செல்வாய் என்றாள்
அன்னை என்று நீ |
சொல்லின் எவனோ
தோழி கொல்லை | சொன்னால் என்ன தோழி!
தினைக்கொல்லையிலுள்ள |
நெடும் கை வன்
மான் கடும் பகை உழந்த | நீண்ட கையையுடைய
யானையின் கடிய பகையினால் வருந்திய |
குறும் கை
இரும் புலி கொலை வல் ஏற்றை | குறிய கைகளையுடைய,
கொல்லுதலில் வல்ல ஆண் புலியை |
பைம் கண்
செந்நாய் படு பதம் பார்க்கும் | பசிய கண்களையுடைய
செந்நாய் உண்பதற்குரிய தருணத்தைப் பார்த்திருக்கும் |
ஆர் இருள்
நடுநாள் வருதி | இருள் நிறைந்த
நள்ளிரவில் வருகின்றாய், |
சாரல் நாட
வாரலோ எனவே | மலைச்சாரலைச்
சேர்ந்தவனே! இவ்வாறு வரவேண்டாம் என்று- |
| |
# கபிலர் | # கபிலர் |
# 142 குறிஞ்சி | # 142 குறிஞ்சி |
சுனை பூ குற்று
தொடலை தைஇ | சுனையில் மலர்ந்த
பூக்களைப் பறித்து மாலையாகத் தொடுத்து |
புன கிளி
கடியும் பூ கண் பேதை | தினைப்புனத்துக்
கிளிகளை விரட்டும் பூப்போன்ற கண்ணையுடைய பேதை |
தான்
அறிந்தன்றோ இலளே பானாள் | தான் அறிந்தனளோ
இல்லையோ? பாதியிரவில் |
பள்ளி யானையின்
உயிர்த்து என் | படுக்கப்போகும்
யானையைப்போல் பெருமூச்சுவிட்டு என் |
உள்ளம்
பின்னும் தன் உழையதுவே | உள்ளம் பின்னரும்
அந்தத் தலைவியினிடத்தே இருக்கிறது என்பதை. |
| |
# மதுரை
கணக்காயன் மகன் நக்கீரன் | # மதுரை கணக்காயன்
மகன் நக்கீரன் |
# 143 குறிஞ்சி | # 143 குறிஞ்சி |
அழியல் ஆய்_இழை
அன்பு பெரிது உடையன் | வருந்தாதே! ஆய்ந்த
அணிகலன்களையுடையாய்! அன்பினைப் பெரிதும் உடையவன்; |
பழியும்
அஞ்சும் பய மலை நாடன் | பழியையும் அஞ்சுவான்
அந்தப் பயன்தரும் மலைநாட்டுத் தலைவன்! |
நில்லாமையே
நிலையிற்று ஆகலின் | நிலையாமை ஒன்றே
நிலையானதாகலின் |
நல் இசை வேட்ட
நயன் உடை நெஞ்சின் | நல்ல புகழை விரும்பிய
நன்மையுடைய நெஞ்சில் |
கடப்பாட்டாளன்
உடை பொருள் போல | கடமையுணர்ச்சி
மிக்கவனிடம் உடைமையான பொருள் போல |
தங்குதற்கு
உரியது அன்று நின் | நிலைத்து நிற்றற்கு
உரியது அன்று, உன் |
அம் கலுழ் மேனி
பாஅய பசப்பே | அழகு ஒழுகும் மேனியில்
பரவிய பசலைநோய். |
| |
# மதுரை
ஆசிரியன் கோடம்கொற்றன் | # மதுரை ஆசிரியன்
கோடம்கொற்றன் |
# 144 பாலை | # 144 பாலை |
கழிய காவி
குற்றும் கடல | கழியிலுள்ள கருங்குவளை
மலரைப் பறித்தும், கடலிலுள்ள |
வெண் தலை புணரி
ஆடியும் நன்றே | வெள்ளிய தலையைக் கொண்ட
அலைகடலில் விளையாடியும், நன்றாக |
பிரிவு இல்
ஆயம் உரியது ஒன்று அயர | தன்னைவிட்டுப் பிரியாத
தோழிகள் தத்தமக்கு உரிய ஒரு விளையாட்டை விளையாட |
இ வழி படுதலும்
ஒல்லாள் அ வழி | இப்படியாக இங்கு
சேர்ந்திருப்பதற்கு உடன்படாள்; இதற்கு மாறுபாடான வழியில் |
பரல்
பாழ்படுப்ப சென்றனள் மாதோ | பரல் கற்கள் பாதத்தைப்
பாழ்படுத்தச் சென்றுவிட்டாள்- |
செல் மழை
தவழும் சென்னி | விரைந்து செல்லும்
மேகங்கள் தவழும் உச்சியையுடைய |
விண் உயர்
பிறங்கல் விலங்கு மலை நாட்டே | விண்வரை உயர்ந்த
பெருங்கற்கள் குறுக்கிட்டுக்கிடக்கும் மலைநாட்டு வழியே. |
| |
# கொல்லன்
அழிசி | # கொல்லன் அழிசி |
# 145 குறிஞ்சி | # 145 குறிஞ்சி |
உறை பதி அன்று
இ துறை கெழு சிறுகுடி | தங்குதற்குரிய ஊர்
அன்று, இந்தத் துறையை ஒட்டிய சிற்றூர், |
கானல் அம்
சேர்ப்பன் கொடுமை எற்றி | கடற்கரைச் சோலையையுடைய
தலைவனது கொடுமையை எண்ணி |
ஆனா துயரமொடு
வருந்தி பானாள் | அடங்காத் துயரமொடு
வருந்தி, நள்ளிரவில் |
துஞ்சாது
உறைநரொடு உசாவா | துயிலாமல் இருப்போரை
ஏனென்று கேட்காமல் |
துயில் கண்
மாக்களொடு நெட்டு இரா உடைத்தே | துயிலுகின்ற
கண்களையுடைய மக்களோடு, நீண்ட இரவையும் உடையது. |
| |
#
வெள்ளிவீதியார் | # வெள்ளிவீதியார் |
# 146 குறிஞ்சி | # 146 குறிஞ்சி |
அம்ம வாழி தோழி
நம் ஊர் | கேட்பாயாக, வாழ்க
தோழியே! நம் ஊரில் |
பிரிந்தோர்
புணர்ப்போர் இருந்தனர்-கொல்லோ | பிரிந்தோரைச்
சேர்த்துவைப்போர் இருக்கின்றார்களே! |
தண்டு உடை
கையர் வெண் தலை சிதவலர் | தண்டினைப் பிடித்த
கையினரும், நரைத்த தலையில் துகில்முடித்திருப்போரும், |
நன்று நன்று
என்னும் மாக்களொடு | நன்று நன்று என்று
சொல்வதற்கெல்லாம் ஒத்திசைக்கும் மக்களோடு |
இன்று பெரிது
என்னும் ஆங்கணது அவையே | இன்று நல்லநாள் என்று
கூறும் அங்குள்ள நம்மவர் அவை. |
| |
#
கோப்பெருஞ்சோழன் | # கோப்பெருஞ்சோழன் |
# 147 பாலை | # 147 பாலை |
வேனில் பாதிரி
கூன் மலர் அன்ன | வேனில்காலத்துப்
பாதிரியின் வளைந்த மலரைப் போன்று |
மயிர் ஏர்பு
ஒழுகிய அம் கலுழ் மாமை | மயிர் எழுந்து படர்ந்த
அழகு ஒழுகும் மாநிறமும் |
நுண் பூண்
மடந்தையை தந்தோய் போல | நுண்ணிய
வேலைப்பாடமைந்த அணிகலன்களையும் கொண்ட மடந்தையைத் தந்தவனைப் போல |
இன் துயில்
எடுப்புதி கனவே | இனிய துயிலினின்றும்
எழுப்புகின்றாய், கனவே! |
எள்ளார் அம்ம
துணை பிரிந்தோரே | உன்னை இகழமாட்டார்,
தம் துணையைப் பிரிந்தோர். |
| |
#
இளங்கீரந்தையார் | # இளங்கீரந்தையார் |
# 148 முல்லை | # 148 முல்லை |
செல்வ சிறாஅர்
சீறடி பொலிந்த | செல்வர்களின்
சிறுவர்களின் சிறிய கால்களில் அழகுற விளங்கிய |
தவளை வாஅய
பொலம் செய் கிண்கிணி | தவளையின் வாயைப் போன்ற
பொன்னால் செய்த சதங்கையின் |
காசின் அன்ன
போது ஈன் கொன்றை | காசைப் போன்ற
அரும்புகளை ஈன்ற கொன்றை |
குருந்தொடு
அலம்வரும் பெரும் தண் காலையும் | குருந்த மரத்தோடு
சேர்ந்து ஆடும் மிகுந்த குளிர்ச்சியையுடைய பருவத்தையும் |
கார் அன்று
என்றி ஆயின் | கார்ப்பருவம் அல்ல
என்று சொல்வாயாயின் |
கனவோ மற்று இது
வினவுவல் யானே | காண்பது கனவோ? நான்
கேட்கிறேன். |
| |
#
வெள்ளிவீதியார் | # வெள்ளிவீதியார் |
# 149 பாலை | # 149 பாலை |
அளிதோ தானே
நாணே நம்மொடு | இரங்கத் தக்கது நாணம்!
நம்முடனே |
நனி நீடு
உழந்தன்று-மன்னே இனியே | மிகவும் நீண்டகாலம்
வருந்திநிற்கிறது; இனிமேல் |
வான் பூ
கரும்பின் ஓங்கு மணல் சிறு சிறை | வெள்ளைப் பூவைக்கொண்ட
கரும்பினையுடைய உயர்ந்த மணலாகிய சிறு கரை |
தீம் புனல்
நெரிதர வீந்து உக்கு ஆஅங்கு | இனிய நீர் பெருகி
நெருக்க கரைந்து விழுந்ததைப் போல் |
தாங்கும் அளவை
தாங்கி | தாங்கும் அளவு தாங்கி |
காமம் நெரிதர
கை நில்லாதே | காமம் மிகுந்து
நெருக்கும்போது நில்லாதுபோய்விடும். |
| |
# மாடலூர்
கிழார் | # மாடலூர் கிழார் |
# 150 குறிஞ்சி | # 150 குறிஞ்சி |
சேணோன் மாட்டிய
நறும் புகை ஞெகிழி | மரத்தின்
உச்சிப்பரணில் இருப்போன் ஏற்றிய மணமுள்ள புகையை எழுப்பும் கொள்ளியானது |
வான மீனின்
வயின்_வயின் இமைக்கும் | வானத்து மீன்களைப்
போல் ஆங்காங்கே மின்னும் |
ஓங்கு மலை
நாடன் சாந்து புலர் அகலம் | உயர்ந்த மலைநாட்டைச்
சேர்ந்தவனின் சந்தனம் பூசிப் புலர்ந்த மார்பினை |
உள்ளின் உள்
நோய் மல்கும் | நினைத்தால் உள்ளத்தில்
காமநோய் பெருகும்; |
புல்லின்
மாய்வது எவன்-கொல் அன்னாய் | அந்த மார்பைத்
தழுவினால் அது இல்லாமற்போது எப்படி தோழியே? |
| |